TODAY 4.00PM WATCH RAJDIGITAL PLUS
http://i60.tinypic.com/906iz8.jpg
http://i61.tinypic.com/2j3my5j.jpg http://i58.tinypic.com/9tg751.jpg http://i62.tinypic.com/f3t8nd.jpg
Printable View
TODAY 4.00PM WATCH RAJDIGITAL PLUS
http://i60.tinypic.com/906iz8.jpg
http://i61.tinypic.com/2j3my5j.jpg http://i58.tinypic.com/9tg751.jpg http://i62.tinypic.com/f3t8nd.jpg
http://i160.photobucket.com/albums/t...psbssksmoc.jpg
Yanaiyadi School, Kumbakonam, where Thalaivar studied demolished and construction is going on Looks like Residential Apartments...... Unfortunately, had WE known we could have..........
Thanks to Muktha Ravi, FB.
What is the point in saying this now....... Very Sad.:(:(:(. My mind set is the same like NT in this following scene, unfortunately I am not fortuned to do that as well:
https://www.youtube.com/watch?v=7pyumCjqep0
திரு முரளி ஸ்ரீனிவாசன்
ஒரே நபர் பல பெயரில் உங்கள் திரியிலும் , மற்ற திரிகளிலும் வருவதை ஒப்பு கொண்ட உங்களின்
உயர்ந்த உள்ளத்திற்கு நன்றி . என் பதிவை பார்த்த உடன் ஒருவர் ஒருவராக வருவது மூலம்
உண்மை புலப்படுகிறது . ஒரு மாட ரேட்டராகிய உங்களுக்கே எல்லாம் தெரிந்தும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ? வசந்த மாளிகையில் உங்கள் அபிமான நடிகரே ''நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறி யுள்ளாரே ? எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் மீது உங்களுக்கு உள்ள வெறுப்பை நீங்கள் மறைமுகமாக காட்டும் விதமும் , உங்கள நிலைக்கு ஆதரவு தரும் சிலரின் பதிவுகளை ஊக்கப்படுத்தும் உங்களின் மன நிலை எங்களுக்கு தெரியாதா ? !!
இன்று பிற்பகல் மக்கள் திலகத்தின் நல்லநேரம் , தொடர்ந்து மாலை 4 மணிக்கு உலகம் சுற்றும் வாலிபன் மற்றும்
இரவு 7 மணிக்கு தேடி வந்த மாப்பிள்ளை படங்கள் ஒளி பரப்பாகிறது .
தேடி வந்த மாப்பிள்ளை படம் இந்த வாரம் 29. 8..2015 அன்று 41வது ஆண்டு தினம் துவக்கம் என்பது குறிப்பிடதக்கது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நாடக மேடையில் ஏற்பட்ட விபத்தில் கால் ஒடிந்து சிகிச்சை பெற்று வந்ததால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது . இருப்பினும் அந்த ஆண்டில் இறுதி தினத்தில்
31.12.1959 அன்று தாய் மகளுக்கு கட்டிய தாலி படம் திரைக்கு வந்தது .மக்கள் திலகம் அவர்கள் நின்று போன
படங்களை முடித்து கொடுப்பதில் தீவிர கவனம் செலுத்தினார் . பூர்ண குணமடைந்த பின்னர் மக்கள் திலகம்
படபிடிப்பில் கலந்து கொண்டார் .
பாக்தாத் திருடன்
ராஜாதேசிங்கு
மன்னாதி மன்னன்
அரசிளங்குமரி
திருடாதே
போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார் .அதே நேரத்தில் சபாஷ் மாப்பிளே , நல்லவன் வாழ்வான் , தாய் சொல்லை தட்டாதே போன்ற சமூக படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் .
1961ல் வெளிவந்த திருடாதே ,தாய் சொல்லை தட்டாதே இரண்டு சமூக படங்கள் தமிழ் திரை உலக வரலாற்றில் மாபெரும் சாதனை படங்களாகவும் , திருப்பு முனை படங்களாகவும் மக்களால் பாராட்டை பெற்றது . ஏராளமான
மக்கள் திலகம் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான எம்ஜிஆர் மன்றங்கள் உருவான நேரம் . மக்கள் திலகத்தின் திரை உலக செல்வாக்கு உயர்ந்து கொண்டே சென்றது .அரசியலிலும் அவரது தீவிர பங்கு இருந்தது .திரை உலகிலும் , அரசியலிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஓர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்த காலம் .அது ஒரு பொற்காலம் .
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் திரை எழில் வேந்தன்
எம்.ஜி.ஆர். வழங்கும் "தேடி வந்த மாப்பிள்ளை " ஒளிபரப்பாகிறது.
http://i57.tinypic.com/2r3whn5.jpg
Dear Suharaam sir
Even now am saying that it is only your wild imagination that Karthick and Trichy Basker is same person.
Mr. Basker from Trichy hails from Dindigul.
The IP address route of Mr. Karthik and Mr. Trichy Basker is totally different and roots to different part of the country.
If you are a technical person am sure, you will understand the significance of the IP address trace route. If you are not, then i request you to check with your friends whoever is in the networking domain.
One Person can create two names and login from two different systems BUT the IP address will not route as North and South Pole Direction.
So, if someone had brainwashed you that Mr. Karthik and Mr. Trichy Basker are one and the same, do not BLINDLY believe it Sir.
Try to systematically, understand the possibility and feasibility of the same in all possible ways. Further, am not BLINDLY supporting Mr. Murali Srinivas. BUT remember one thing, HE NEVER HAS ANY PERSONAL EQUATION WITH MAKKAL THILAGAM ! WHENEVER, ANY WRONG DATA / INFORMATION IS PROJECTED HERE, HE HAD DEFENDED IT WITH PROOFS THAT THE INFORMATION IS WRONG..! EVEN I HAVE DONE THAT & STILL DOING. THEY ARE TO BE CONSIDERED ONLY AS HEALTHY DEBATE..THAT IS ALL..!
BUT, unfortunately, Friends Like you, immediately think that we are against Makkal Thilagam personally.
What have we got to say anything wrong in deliberate against Makkal Thilagam, that too personally ? Has MT done anything wrong personally to any of us for us to involve in individual attack ? Certainly not. Please throw such imagination to dust sir !
You have your belief and We believe what we say interms of comparison of STATISTICAL information.! That's all !
Both the Thilagam's popularity or their greatness is not going to come down by any of yours (or) our statements !
Trust, you would find out yourself the truth through technical check of Mr. Karthik's IP route where it traces to and Mr. Basker Trichy's IP route and then come out with your views RATHER than believing rumours !
Regards
RKS
Dear Sailesh Sir
Good Evening !
This is one of the important LANDMARK that unfortunately the commercial guys are exploiting. So many theatre too have been commercially exploited and Multiplex / commercial complexes / Flats are swallowing the significant monuments.
So, unfortunate !
Thanks for your excellent comparison on the feeling of any human being attached to their own asset that was held for so many years...
I still remember this scene when i watched this in Theatre...The CLAPS & WHISTLE lasted for more than 15 seconds for this single scene !
Thanks for a realistic comparison !
Regards
RKS
எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .
நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .
காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .
இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்
http://www.mayyam.com/talk/showthrea...M-MGR-(Part-2)
கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.
சக்தி குறைந்தவர்களிடம் வீரத்தைத் காட்டுவது சரியல்ல! வீரத்திற்கும் அது அழகல்ல.
- புரட்சித்தலைவர்
மனிதர்கள் அத்தனை பெரும் நடிகர்களே. குழந்தையாக, குமாரனாக, இளைஞ்சனாக பின்னர் தந்தையாக, தாத்தாவாக, வயோதிகக் கிழவனாக, இறுதியில் பிரதமாக மனிதன் இத்தனை படிகளிலும் நடிக்கிறான். நாம் அனைவரும் ஒரு இனத்தவர்தான். இப்படி இருக்கும் பொழுது அவர் தான் சிறந்த நடிகர் இவர் சிறந்த நடிகர் இல்லை என்று கூக்குரலிடும் ரகளை செய்யும் பலருக்குக் துன்பமளிபதும் அநாகரிகமான செயலாகும்.
கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.
MSG FROM MR.HARIDAS - Coimbatore
எதிரிகளுக்கு புரட்சித்தலைவரின் நெத்தியடி வசனம்
https://www.youtube.com/watch?v=YeKppU998UM
"எங்களது ஒப்பட்ற்ற தலைவரை யாருடனும் ஒப்பிட்டு பேசமாட்டோம்" என்ற கொள்கையுடன் செயல்பட்டால் எங்கும் எந்த பிரச்னையும் இல்லை.
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு
எம்.ஜி.ஆர். முத்து
கலைஞர்களை ரசித்த மக்கள் திலகம்
மக்கள் திலகம் அவர்கள் ஒரு முக்கிய நண்பரிடம் சொன்ன விஷயம் எனக்கு டி.ஆர். மகாலிங்கம் அவர்களை பிடிக்கும். அவருடைய கர்நாடக இசையிலிருந்து சினிமா படங்கள் வரை நல்ல உயர்ந்த குரல் வளம் உடையவர். ஒருவர் சொந்த குரலில் பாடுவார். அந்த காலத்தில் சுதி, சுரம், என்று சொல்வார்கள். சுருக்கமாக கட்டை என்றும் இதற்கு ஒரு சொல் உண்டு. இதில் தமிழ்நாட்டிலேயே அந்த காலத்தில் மகாலிங்கம் அவர்கள் 8 கட்டை சுரத்தில் பாடிய ஓரே ஆள் இவர்தான். இம்மாதிரி நான் இன்னும் எவ்வளவோ பெயர்களைப் பற்றி சொல்லுவேன். இப்போ நேரம் இல்லை. இன்னொரு நாளைக்கு பேசலாம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் முடித்துகொண்டார்.
அதே நபர் சில நாட்கள் கழித்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மீண்டும் சந்திக்கிறார். வந்தவர் எம்.ஜி.ஆர். அவர்களை சார் என்று தான் அழைப்பார். வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறேன் என்று நினைக்காதீர்கள் எனக்காக அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும் என்று சொல்லி கொண்டே சார் உங்கள் வாழ்க்கையில் நாடகம், சினிமா, அரசியல் இப்படி மூன்று துறைகளிலும், இடையில் ஏற்பட்ட சிரமங்களையும் சமாளித்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களுடைய கொள்கை முயற்சியின் படி எல்லாவற்றிலும் நீங்களே முதல்வராக வெற்றி கொண்டு இருக்கிறீர்கள். இன்று உள்ள அரசியலைப் பற்றிபேசுவதை விட சினிமாவைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை விவரம் கேட்கிறேன். அதாவது இன்றைய தமிழ் சினிமா உலகத்தில் மக்கள் திலகம், நடிகர் திலகம் இந்த இருவரும் தான் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கும், தங்களுக்கும் போட்டி பொறமை எப்போதாவது ஏற்பட்டது உண்டா? உடனே மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பதில் ஒரு அட்டகாசமான சிரிப்பை சிரித்து கொண்டு சார் என் உடன் பிறந்த அண்ணன் சக்கரபாணி அவர்கள் எப்படியோ, அதே போல்தான் சிவாஜியும் தொழிலில் ஒருவருக்கு ஒருவர் அக்கறை கொள்வது தான் முக்கியம் அதற்கு பெயர் போட்டி அல்ல.
சகோதரர் திரு. ஜோ அவர்கள் அறிவது :
தங்களின் அர்த்தமுள்ள பதிவு விரும்பத்தக்கது. மக்கள் திலகம் திரியின் ஆரம்ப கால பாகங்களை நடத்தி சென்றதற்கு, எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர்கள் சார்பில் முதலில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்,
நடிகர் திலகம் திரியினில் சில பிற்போக்குவாதிகள், நாங்கள் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சமீப காலமாய் , விமர்சிப்பதை பார்த்த பின்பு தான் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரின் புகழ் பாடி விட்டு போகட்டுமே ! ஏன் எங்கள் புரட்சித்தலைவரை வம்புக்கிழுக்க வேண்டும் ? எங்கள் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களை விமர்சித்துதான் நடிகர் திலகம் புகழ் பாட வேண்டுமா ? அவர்கள் அவ்வாறு செய்வதினால் தான் பதிலுக்கு நாங்களும், எங்கள் தரப்பில் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகிறோம்.
எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிர பங்காற்றிய காரணத்தால்தான், தி. மு. க. வை பிடிக்காத பலர், காங்கிரஸ் கட்சியினர் உட்பட, அவருக்கு வேண்டப்படாதவர்கள் ஆனார்கள். அந்த காழ்ப்புணர்ச்சியில் இன்னும் சிலர், பொற்கால ஆட்சி தந்த எங்கள் பொன்மனசெம்மலை விமர்சனம் செய்கின்றனர்.
எங்களை பொருத்தவரை திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை ஒரு போட்டியாளராக என்றுமே கருதியதில்லை. ஏன், சிவாஜி கணேசன் அவர்களே தனது அன்புக்குரிய அண்ணன் எம். ஜி. ஆர். அவர்களை ஒரு போட்டியாளராக கருதியிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். இல்லையென்றால், தனது அன்னையின் சிலையை திறப்பதற்கு தகுதியானவர் என்று எங்கள் கொள்கைத்தங்கம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்கள் தான் என்று நினைத்து அதை செயல்படுத்தியிருப்பாரா அல்லது, தஞ்சையில் தான் தனக்கு சொந்தமான திரையரங்குகளை அண்ணன் எம். ஜி. ஆர். தான் திறக்க வேண்டும் என்று அவரின் தேதிக்காக காத்து கொண்டிருந்திருந்து அந்த எண்ணத்தை ஈடேற்றியிருப்பாரா ?
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு, அவர் அன்புடன் போற்றிய மக்கள் திலகத்தை விமர்சிப்பதன் மூலம்,. தங்களின் போலித்தனத்தை வெளிப்படுத்தி கொண்டு, முகவரியை தொலைத்து கொண்டிருக்கிருக்கும், விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த ஒரு சில பிற்போக்கு வாதிகளை நினைத்தால் அனுதாபம் தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
இவர்களுக்கு உண்மையிலேயே அவர் மீது அபிமானம் இருக்குமேயானால், மக்கள் திலகத்தை விமர்சிப்பதன் மூலம், அவர்களும் நம் அபிமான நடிகரை சீண்டுவார்களே என்று எண்ணியதுண்டா ? இந்த ஒரு சிலரால் தான் திரியின் மாண்பு காக்கப்படமால் போகிறது.
கருத்து வேறுபாடுகளை களைந்து நல்லிணக்கம் கொள்வதில் நாட்டம் கொள்ள விரும்பும் பல அன்பர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் திலகம் திரியின் ஆரம்ப கால பாகங்களை நடத்தி சென்றதற்கு, மீண்டும் எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் !
பின் குறிப்பு : எனக்கு விவரம் தெரிந்த காலத்தில், மக்கள் திலகம் சில ஆண்டுகள் திரைத்துறையில் நீடித்த காரணத்தால் தான், அவரது மலைக்க வைத்த திரையுலக சாதனைகளை எண்ணி வியக்க நேர்ந்தது. அவரின் ப(பா)டங்களால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகனானேன்.
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
89046
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
அருமை நண்பர்களே,
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் ... ... ... இது நான் மட்டும் எழுதும் தொடரல்ல. எம்.ஜி.ஆர் பற்றிய எனது எண்ணங்களை நம் திரியின் நண்பர்களுடனான பகிர்வு. சில நுணுக்கமான சிந்தனைகளை அசைபோட அனைவரையும் அழைக்கிறேன்.
இந்தத் தொடரை நாம் அனைவரும் சேர்ந்து தான் நடத்தப் போகிறோம். வரலாற்று அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படாமலே போயிருக்கின்றன. அவற்றை அலசி ஆராயும் ஒரு சிறு முயற்சியே இது. இந்தக் கட்டுரைத் தொடருக்கு நம் நண்பர்கள் பலரும் இத்திரியில் பதிவேற்றிய நம் இதய தெய்வத்தின் புகைப்படங்களை தொடர்புடைய இடங்களில் பொருத்திட யாரும் தடை சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவற்றைப் பொருத்தமாகப் பதிவிட இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
எம்.ஜி.ஆர்.
அன்னிய மொழி எழுத்துக்கள் தான். ஆனால் அந்த எழுத்துக்கள் அடையாளம் காட்டும் மனிதரோ சிறுதும் அன்னியமின்றி நம் அத்தனை பேரின் இதயங்களிலும் உறவாக ஒட்டிக் கொண்டிருக்கும் நம் நாயகர். கலைத்துறையில் முடிசூடா மன்னர். அரசியல் துறையிலும் தன் வாழ்நாள் முடியுமட்டும் அசைக்க முடியாத முதல்வர். அது மட்டுமல்ல இன்று வரை , அதாவது, தனது நடிப்புலக வாழ்வைத் துறந்து 38 ஆண்டுகள், புவி வாழ்வை விட்டு 28 ஆண்டுகள் கடந்த பின்னும் திரையுலகம், அரசியல் இரண்டிலும் அவர் ஓர் அசைக்க முடியாத சக்தி. இன்னமும் அவர் பெயரைச் சொல்லித்தான் சினிமாவிலும், அரசியலிலும் கைத்தட்டலும் ஓட்டுகளும் வாங்க வேண்டிய நிலை. சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் வயோதிகர்கள் வரை எம்.ஜி.ஆர் என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்ச்சி அடையும் அளவுக்கு அவர்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகத்தின் மகத்துவத்தை வரும் காலச் சந்ததிக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்தத் தொடர்.
மக்கள் திலகம்
புரட்சி நடிகர்
மன்னாதி மன்னன்
நடிகர் பேரரசர்
பொன்மனச் செம்மல்
இதய தெய்வம்
புரட்சித் தலைவர்
வறுமைக்கு வைத்தியம் செய்த டாக்டர்
இப்படி எத்தனை எத்தனையோ பட்டங்கள் . ஆனால் அவையாவும் அதிர்ஷ்டதேவதை அள்ளித் தந்த வெகுமதியல்ல. எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரமான உழைப்பவரே உயர்ந்தவர்கள் என்னும் மூலமந்திரத்தின் முதிர்ந்த விளைவு. அவரது வாழ்வு ஒரு பரமபத விளையாட்டை போன்றது. விழுவது போலத் தெரியும். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றி வீரராக மீண்டும் எழுந்து வருவார். தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் , செயல் திறனுக்கும் அவரது வாழ்வு ஒரு பாடம். அவர் மேல் வீசி எறியப்பட்ட அம்புகள் யாவும் முனைமளுங்கிப் போனன. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகும் அவர் மேல் அம்புகள் வீச ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வாழ்ந்த போதே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பொய்யான பல குற்றச்சாட்டுகள் , கேலி விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் வைக்கப்பட்டன. அலட்சியம் ஒன்றையே அவற்றுக்கு பதிலாக அளித்தார் நம் எம்.ஜி.ஆர். ஏராளமான மக்களுக்கு அவர் தெய்வம். அவரைச் சந்தித்த / சிந்தித்த அத்துணை மனிதர்களிடத்திலும் ஏதாவது ஒரு செய்தியை , நெகிழ்வை விட்டுச் சென்றிருக்கிறார் அந்தக் கோமகன்.
கம்ப ராமாயணத்திலே ஒரு நிகழ்வு. மிதிலை நகரிலே இளவல் இலக்குவன், விசுவாமித்திரர் புடை சூழ ஜானகி தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. நகர மாந்தர்கள் அவரை ஆவலுடன் தரிசிப்பதை கம்பன் அழகாக வர்ணிப்பார் அவரது தோளைக் கண்டவர்களின் கண்கள் தோளை விட்டு அகலாது . அவரது பாதத்தைக் கண்ட கண்கள் அந்தத் பாதார விந்தங்களிலேயே சரணாகதியடைந்து விடும். அவரது நீண்ட நெடிய கரங்களைக் கண்டவர்களும் மற்ற அவயவங்களைக் காணும் எண்ணமற்று அதிலேயே மனம் ஒன்றி மற்றவற்றை மறந்து மதிமயங்கி நிற்பதாக கம்பன் கவி காட்டும். அது போல மக்கள் திலகத்தின் மகத்துவத்தின் ஒரு பகுதியை கண்ணுற்ற மாந்தர் அதிலேயே திளைத்து அதிலேயே ஒன்றி மற்றவற்றை மறந்து திளைக்கும் நிலையை பலரிடமும் காண முடிகிறது. அவரிடம் விரோதம் பாராட்டுவோரும் ஏதாவது ஒரு விதத்தில் அவரைப் பாராட்டுவது என்பது மிகச் சாதாரணமாக இருக்கிறது.
இன்னமும் அவரது பெயரால் புத்தகங்கள், கட்டுரைகள் அவரது புகழ்பாடி வெளிவந்த வண்ணம் உள்ளன. வசைபாடியும் வருகின்றன. அவற்றில் காணப்படக் கூடிய பல முரண்பாடுகளை ஆராய்ந்து புறந்தள்ளுவதும் நமது கடமையாகிறது.அவரது வாழ்வில் அறியப்படாத பல விஷயங்களை அறிந்து கொள்வதும் நமது கடமையாகிறது. இது தொடர்பாக அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவேற்றுவதன் மூலம் பல அரிய செய்திகள் பகிரப்படும்.
1. என் தம்பி எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/hwztdi.jpg
1972ஆம் ஆண்டு ராணி வார இதழில் மக்கள் திலகத்தின் தமையனார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் எழுத இப்படி ஒரு தொடர் வெளிவந்தது. பின்னர் 1984, 1987ஆம் ஆண்டுகளிலும் அது மறுபடியும் பிரசுரமானது. அத்தருணங்களில் அக்கட்டுரையின் முதல் அத்தியாயத்தில் தந்தையின் மடியில் எம்.ஜி.ஆர் என்று குறிப்பிடப்பட்டு ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. பின்னர் 1988ஆம் ஆண்டு அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் ஆனந்த விகடன் இதழுக்கு மறக்க முடியாத புகைப்படங்கள் என சிலவற்றைத் தேர்வு செய்து கொடுக்கும் போது அதே புகைப்படம் எம்.ஜி.ஆர் வழிபடும் புகைப்படங்களில் ஒன்றாக காட்சியளித்தது.(மடியில் குழந்தையுடன் எம்.ஜி.ஆரின் தந்தை, தாய், மகாத்மா காந்தியடிகள் மற்றும் மக்கள் திலகத்தின் துணைவியார் சதானந்தவதி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கியது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது-) தந்தையின் மடியில் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எம்.ஜி.ஆர் வழிபட்டாரா என அப்போது சில விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் அது அவரது சகோதரியின் புகைப்படம் என எம்.ஜி.ஆர் பேரன் வலைத்தளம் மூலம் அறிவிக்கப்பட்டது. நமக்குக் கிடைத்த வரையில் மக்கள் திலகத்தின் முதல் புகைப்படம் எது. அவரது தந்தை மற்றும் தாயாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏதாவது உண்டா ? என் தம்பி எம்.ஜி.ஆர் தொடரில் வெளியிடப்பட்ட புகைப்படம் எம்.ஜி.ஆருடையதா? அல்லது அவரது சகோதரியுடையதா? தவறுதலாக வெளியிடப்பட்டிருந்தால் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் ஏன் அதனை மறுக்கவில்லை. பின்னர் வெளியான மணியன் அவர்களின் காலத்தை வென்றவன் நீ தொடரிலும் அது மக்கள் திலகத்தின் புகைப்படம் என்றே குறிப்பிடப்பட்டது. இது தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.
http://i60.tinypic.com/5pqwyt.jpg
திரு ஜோ
தங்களுடைய கருத்து மிகவும் ஏற்புடையது . நடிகர் திலகம் திரியிலும் உங்கள் கருத்தை பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து .
திரு ஜெய் சங்கர்
தங்களின் புதுமையான முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
நம் மனதில் என்றென்றும் வாழ்வார் .
நண்பர் திரு.ஜோ அவர்களுக்கு,
நியாயமான பேச்சு. இதைத்தான் நானும் விரும்புகிறேன். பலமுறை வலியுறுத்தியும் இருக்கிறேன். தங்களது கருத்து எனக்கு மேலும் நம்பிக்கையூட்டுகிறது.
‘கை நீட்டி பேச உனக்கு உரிமை உண்டு. ஆனால், உன் விரல் என் மூக்கை தொடக்கூடாது’ என்று ஒரு முதுமொழி உண்டு. அதுதான் உரிமையின் எல்லை. நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சாதனைகளை சொல்வதை தடுக்கவோ, குறை கூறவோ யாருக்கும் உரிமை கிடையாது. குறுகிய காலத்தில் அவர் அதிக படங்களில் நடித்தார் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.
ஆனால், இந்த எண்ணிக்கையை கடைசிவரை மக்கள் திலகம் எம்ஜிஆரால் வெல்ல முடியவில்லை என்று கூறும்போதுதான், நண்பர்களையும் மனதில் கொண்டு தர்மசங்கடத்துடன் பதிலளிக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் ஏற்படுகிறது. நல்லெண்ணத்துடன் கூடிய தங்களின் ஆலோசனையை நடிகர் திலகம் திரியிலும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
திருவாரூர் அருகே வடபாதிமங்கலம் என்று ஒரு ஊர். அந்த ஊரைச் சேர்ந்தவர் வடபாதிமங்கலத்தார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.எஸ்.தியாகராஜ முதலியார். பெருநிலக்கிழார். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தக்காராக இருந்தவர்.
1940-களின் இறுதியில் அந்தக் கோயிலில் ஒரு பவுராணிகர் உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கோயிலுக்கு வந்து, திராவிட இயக்க கருத்துக்களை வலியுறுத்தும் துண்டறிக்கைகளை பக்தர்களுக்கு விநியோகித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
உபந்யாசகர், ‘கோயிலுக்குள் ஆண்கள் சட்டை இல்லாமல் வரவேண்டும். அப்போதுதான் அவர்களின் உடலில் சில விசேஷ கதிர்கள் பாயும்’ என்று கூறியபோது அந்த இளைஞர் குறுக்கிட்டு, ‘அப்படியானால், பெண்களும் அப்படி வரலாமா?’ என்று அதிரடியாய் கேட்க, உபந்யாசகர் தனது கையில் அணிந்திருந்த தோடாவை திருகி விட்டுக் கொண்டு பதில் சொல்லாமல், மேற்கொண்டு பிரவசனத்தை தொடர்ந்தார்.
‘மாமிச உணவு கூடாது. உயிர் கொலை பாவம். தாவரங்களில் கிடைக்கும் காய்கறி நமது நகங்கள் போன்றது. அவற்றை பறித்து உண்பது அவற்றைக் கொல்வதாகாது...’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘‘கீரையை வேரோடு பறித்து உண்கிறோமே? தாவரங்களுக்கும் உயிர் உண்டே? அது கொலைதானே?’ என்று இளைஞர் மடக்க, அருகே உள்ள வெள்ளிச் சொம்பில் இருந்த பாலை எடுத்து மிடறு விழுங்கினார், உபந்யாசகர்.
நிலைமை மோசமடைவதைப் பார்த்ததும், தக்கார் தியாகராஜ முதலியார் தனது ஆட்கள் மூலம் அந்த இளைஞரையும் அவரது நண்பர்களையும் வெளியே அனுப்பினார். காலச் சக்கரம் சுழன்றது. அந்த சுழற்சியில் தமிழக முதல்வராகி விட்ட அந்த இளைஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
பொறுப்பும் பதவியும் வந்து சேர, தீ விபத்து காரணமாக பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த அதே திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தேரை புதுப்பித்து, ஓடாத தேரை ஓடச் செய்தவர் கலைஞர் கருணாநிதி.
உபந்யாசகரை மடக்கி கேள்விகளால் திணறடித்தார் என்றேனே. அந்த உபந்யாசகர் யார் தெரியுமா? நாளை கூட அவரது பிறந்த தின விழா. புரட்சித் தலைவருக்கு பொன்மனச் செம்மல் என்று பட்டம் வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்தான் அவர்.
2000-ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது, ஒரு காலத்தில் தான் கேள்வி கேட்டு மடக்கிய மடக்கிய வாரியார் சுவாமிகளின் சிலையை காங்கேய நல்லூரில் திறந்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் கூட பக்குவமும் முதிர்ச்சியும் நிறைந்த இந்த அணுகுமுறைதான் நான் விரும்புவது. அதைத்தான் நீங்களும் வலியுறுத்தியுள்ளீர்கள்.
இதை ஏன் சொன்னேன் என்றால், நீங்கள் திமுக ஆதரவாளர், கலைஞரைப் பிடிக்கும் என்று தெரியும். கலைஞரை மட்டுமல்ல, தேங்காய் போட்டு உங்கள் தாயார் சமைக்கும் வெறும் குழம்பும் பிடிக்கும் என்று கடற்புறத்தான் கருத்துக்களில் படித்த நினைவு.
அரசியல் ரீதியாக அவருடைய செயல்பாடுகளில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் கலைஞரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கடும் உழைப்பு, தோல்வியில் துவளாமை, நகைச்சுவை உணர்வு போன்ற பன்முக ஆற்றல்கள் எனக்கும் பிடிக்கும். இதை பல பதிவுகளில் தெரிவித்தும் இருக்கிறேன்.
அரசியல் ரீதியாக எதிர்நிலையில் உள்ளவன் நான் என்று கூறியிருக்கிறீர்கள். ஏன் பிரித்து பேசுகிறீர்கள்? நீங்கள் திமுகவாக இருந்தாலும் கூட, அய்யா பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் வந்தவர்கள், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாமெல்லாம் ஒரே நிலையில் உள்ளவர்கள்தான்.
இங்கே உள்ள எல்லா நண்பர்களையும் வேண்டுகிறேன்.
அவரவர் அபிமானத்துக்குரியவர்களின் புகழை பாடுவது நமது கடமை, அதில் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நடப்போம்.
பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி திரு.ஜெய்சங்கர் சார். ஏற்கனவே தாங்கள் அறிவித்தபடி, தொடரை ஆரம்பித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். தொடருங்கள். ரசிக்க காத்திருக்கிறோம்.
பேராசிரியர் அவர்களும் ஏற்கனவே அறிவித்தபடி திராவிட இயக்க வரலாற்றை எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு ஞாயிறு தின இனிய காலை வணக்கம்.
மெல்போர்னில் தற்சமயம் காலை 11:30.
இன்று போல் என்றும் வாழ்க.
மெல்போர்னில் குடும்ப நண்பர் ஒருவரது இல்லத்து திருமணத்தில் பங்கேற்க வந்திருக்கிறேன்.
மணமகன் தமிழகத்தை சார்ந்த குடும்பத்தில் பிறந்தவர்.
மணமகள் ஆஸ்திரேலியாவை சார்ந்த ஆங்கில பெண்மணி.
தமிழக முறைப்படி, மணமகள் புடவை மற்றும் பொட்டணிந்து, வேதிகர் மந்திரம் ஓத, நாதஸ்வரம் முழங்க, தாலிகட்டி இப்பொழுதுதான் முடிந்தது.
என்ன ஆச்சர்யம் பாருங்கள்...
தாலி கட்டியதும், நாதஸ்வரத்தில் முதலில் வாசித்த பாடல்,
'ராஜாவின் பார்வை
ராணியின் பக்கம்'
...அன்பே வா
அதை தொடர்ந்து,
'பூமழை தூவி
வசந்தங்கள் வாழ்த்த'
...நினைத்ததை முடிப்பவன்
'திருநிறைச்செல்வி
மங்கையற்கரசி
திருமணம் புரிந்தாள் இனிதாக'
...இதயவீணை.
எனது நண்பர்கள் என்னை தேடி நான் அமர்ந்திருந்த மேஜைக்கு வந்து விட்டனர், தலைவரின் பாடல் என்று தெரிந்ததும்.
முகநூல் நண்பர்களை நினைவு கூர்ந்தேன்.
எனக்கு இருப்பு கொள்ளவில்லை.
உடனே திருமண மண்டபத்திலிருந்து சில நிமிடங்களுக்கு வெளியேறி, முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த பதிவை எழுதினேன்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy venkat rao fb
" அவ்வை இல்லத்திற்கு நன்கொடையாக 30 ஆயிரம் வழங்கிய தம்பி எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். நல்ல பல காரியங்களைச் செய்து அதற்கு உறுதுணையாக இருந்து வருகிற எம்.ஜி.ஆர் அவர்களைப் பாராட்டுகிறேன்.
நான் எம்.ஜி.ஆர். அவர்களைப் பல கோணங்களிலிருந்து பாராட்டியிருக்கிறேன். ஆனால் நானும் நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்களும் சேர்ந்து பாராட்டுவது என்பது இதுதான் முதல் தடவை .
நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை ஊக்குவிக்க, வாழ்த்திய வாழ்த்துரை பிறரைத் தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது .
ஆதரவற்றவர்கள் அனாதைகள் ஆகியோருக்கு இல்லம் ஆற்றி வருகிற தொண்டு மிக நல்ல தொண்டாகும்.
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஏறக்குறைய எல்லா நடிகர்களின் வாழ்வும் இப்படிப் பட்டதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமை சூழ்ந்து மிகச் சிரமப்பட்டுப் பத்து பதினைந்து ஆண்டுகள் நடித்து அதற்குப்பின் அய்ம்பதுஆண்டுகள் உழைத்தால்தான் பல இலட்சங்களைப் பார்க்க முடியும். ‘அப்படியெல்லாம் இருந்தாரே அவரா இவர்? என்று சிலர் பார்த்துக் கேட்கக் கூடிய நிலை பிறக்கும்.
ஆனால்என் தம்பி எம்ஜியார் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது தம்பி எம்ஜியார் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார்.
ஆக, இந்த இல்லத்தைப் பொறுத்தவரை, அவர் எப்போதாவது பணம் தரவேண்டும் என்று சொன்னால் நான், ‘அட்டியில்லை’ என்று சொல்வேன். இந்த இல்லம் செழிக்கப் பாடுபடுவேன் என்று உறுதி தருகிறேன். "
= அறிஞர் அண்ணா . (நம்நாடு - 30.1.61)
courtesy chandran veerasamy fb
புரட்சி தலைவரின் அன்பர்களுக்கு இனிய காலை வணக்கம்.
மெல்போர்னில் தற்சமயம் மதியம் 01:45.
இன்று போல் என்றும் வாழ்க.
......
பி.கு.
இப்பதிவு சற்று நீளமான பதிவாக அமைந்து விட்டது.
பொருத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்.
.....
புரட்சி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்கள், எப்படி சமீபத்தில் தலவரின் பாடல்களுக்கு ரசிகர்களானார்கள்?
எப்படி தலைவரின் சாதனகளையும், பெருமையையும் உணர்ந்தார்கள்?
ஒரு குடும்பத்தில் அதன் குடும்பதலைவரை தவிர மற்றவர்கள் புரட்சி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்கள், ஒரு காலத்தில்.
அந்த குடும்பதலைவரின் துணைவியார், குறிப்பாக எந்த நடிகருடைய ரசிகராக இல்லாவிடினும், புரட்சி தலைவரின் படங்களை விட, நடிகர் திலகத்தின் படங்களை விரும்பி பார்த்தவர்.
முன்பெல்லாம் இவர்களது வாயிலிருந்து வரும் பாடல்கள், நடிகர்கள் கமல், மாதவன், சமீபத்தில் தணுஷ்'ன், 'why this kolaveri' போன்ற பாடல்களாக இருக்கும்.
ஏறத்தாழ ஓராண்டு காலமாக MGR Vizha 2015வை மெல்போர்னில் நடத்த வேண்டி வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
கடந்த மூன்று மாதங்களாக, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட வேலைகள் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அதிலிருந்து அந்த குடும்பத்தினரின் வாயில் வரும் பாடல்கள் அனைத்தும் தலைவரின் பாடல்கள் ஆகி வருகின்றன.
சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற MGR the Legend II நிகழ்ச்சியின் சிறப்புகளை அறிந்த அந்த குடும்பத்தினருக்கு தலைவரின் பாடல்கள் மீது இருந்த விருப்பம் இன்னும் அதிகரிக்க தொடங்கின.
அந்த குடும்பத்தினர் வேறு யாருமல்ல.
எனது குடும்பத்தினரே.
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து களைப்பாக வீடு திரும்பி ஓய்வெடுக்கவிருந்த என்னை, 'தலைவரின் பாடலை YouTubeல் பார்க்கலாமே' என்று கூறி டிவி முன் அமர வைத்து விட்டார்கள்.
அவ்வளவுதான்...
இரவு 8 மணிக்கு தலைவரின் பாடல்களை பார்த்து ரசிக்க தொடங்கிய பின், களைப்பெல்லாம் எங்கோ பறந்து போய்விட்டது.
இரவு 12 மணிக்கு, டிவியை நிறுத்தினோம்.
இந்த மூன்று மணி நேரம், எந்த பாடல்கள் மெல்போர்னில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு பொருத்தமாக இருக்கும், என்று எங்களிடயே ஒரே ஆராய்ச்சிதான்.
அதுமட்டுமல்ல...
'எம்ஜிஆர் என்ன அருமையாக ஸ்டெப் செய்கிறார்'
'இந்த பாடலில் மிகவும் இளைத்திருக்கிறாரே?'
'எத்தனை கருத்துக்கள் இந்த பாடலில்'
...ஒரே புகழ்பாட்டுதான்!!!
இதுதான் நடந்தது!!!
எப்படி தலைவரின் ரசிகர்கள் அல்லாதவராக இருந்தவர்களை, தன்பக்கம் ஈர்த்து கொண்டார் பார்த்தீர்களா?
அதுதான் தலைவரின் சிறப்பு.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy venkat rao fb
தமிழ் சினிமாவின் முதல் மக்கள் நாயகன் , மக்களை வசீகரிக்கும் முகம், அன்றைய சமூகத்தின் நிலையை எடுத்து காட்டுகின்ற பாடல்கள் , முதல்வன் ஆனாலும் சமூகத்தில் இருக்கின்ற கடை நிலை மனிதனையும் மதிக்க தெரிந்தவர் , எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலில் எதிர் கட்சி தலைவர்களை ஏசி பேசாத பண்பாளர் .
இவை அனைத்தும் தான் எம்.ஜி.ஆர் அவர்களை மக்கள் மனதில் உச்சாணி கொம்பில் ஏற்றி அவர் இறக்கும் வரைக்கும் அவரையே முதல்வர் ஆக்கியது என்று சொன்னால் மிகையாகாது .