-
வாசு,
எழுந்தது முதலே இன்று நல்ல சகுனம். காலையில் நடிகர்திலகத்தின் திருவிளையாடல் அவதாரத்தை தரிசித்து கண் முழித்தேன்.
கண்ணதாசன்,எம்.எஸ்.விஸ்வநாதன் அவதரித்த திருநாள். நண்பர் மகேந்தரனுடன் 30 நிமிட அரட்டை ,இங்கே வந்து பார்த்தால் உன் என்னதான் முடிவு. கண் மூடி திறக்கும் நேரம் தங்கள் சலங்கை கட்டி.
ஒரு பெரிய வியாபாரம் முப்பது நாட்களாக இழுத்தது முடிவுக்கு வந்து பேரு மகிழ்ச்சி.உத்தம புத்திரன்.
-
ஏன்? (1970)
ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
ஏன்? இத்தனை ஏன்?
ஏன்? என்று பார்ப்போம்.
http://i.ytimg.com/vi/tlqQoHrJRWQ/maxresdefault.jpg
ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்தான் 'ஏன்?' அதுதான் இவ்வளவு பீடிகை. கொஞ்சம் அபூர்வமும் கூட.
குமுதம் இதழில் கிருஷ்ணா அவர்கள் எழுதிய 'மதுக்கிண்ணம்' என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
சரி! என்ன கதை? கொஞ்சம் சுருக்கமாகவே (!) பார்த்து விடலாம்.
ஏ.வி.எம்.ராஜன், லஷ்மி, மாஸ்டர் ஆதிநாராயணன் மூவரும் வீரராகவனின் பிள்ளைகள். வீரராகவன் ஒரு எஸ்டேட்டில் பணிபுரிகிறார். பிள்ளை ராஜனோ மதுரையில் தன் அத்தை வீட்டில் தங்கி பட்டப் படிப்பு படிக்கிறார். அத்தை சி.கே சரஸ்வதி ஒரு பணப் பேய். வீரராகவன் ராஜனுக்கு அனுப்பும் பணத்தையெல்லாம் அவர் எடுத்துக் கொள்கிறார். அவருடைய நல்ல மகன் நாகேஷ். அப்புறம் ராஜனின் படிப்பு ஏன்? என்னாயிற்று? என்று கேட்பீர்கள். வருகிறேன்.
லஷ்மி கவிதை எழுதும் ரவிச்சந்திரனைக் காதலிக்கிறார். ரவி லஷ்மி இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம்.
தங்கையின் கல்யாணத்திற்கு ராஜன் புறப்பட்டு வருகிறார். சோதனை ஆரம்பமாகிறது. கல்யாணத்தன்று வீரராகவன் எதிர்பாராமல் வழுக்கி விழுந்து பிணமாகிறார். மணவீடு பிண வீடாகிறது. ரவியின் அம்மா அபசகுனமாக அதைக் கருதி கல்யாணத்தை நிறுத்துகிறார் மகன் ரவியின் வேண்டுகோளையும் மீறி.
அனாதைகளான மூவரும் அத்தை சரஸ்வதி வீட்டுக்கே வருகிறார்கள். வீரராகவன் இறந்ததும் அவருக்குண்டான எஸ்டேட் இறப்புப் பணத்தையும் சரஸ்வதி பிடுங்கிக் கொள்கிறார். லஷ்மியின் தம்பி சரஸ்வதியினால் துன்புறுத்தப்பட்டு காய்ச்சல் வந்து போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போகிறான்.
பணத்துக்கு வழியில்லாததால் ராஜன் சூதாட்டம் ஆடி சம்பாதிக்கிறார். லஷ்மிக்கு இது தெரியவர அவரைக் கண்டிக்கிறார். அத்தை தன் படிப்புக்கு வந்த பணத்தையெல்லாம் சுருட்டிக் கொண்டதால் தன்னால் படிப்பைத் தொடர இயலவில்லை என்று ராஜன் கூறுகிறார்.
பட்டணத்தில் தம்பிக்கு வைத்தியம் பார்க்க லஷ்மியும், ராஜனும் மதுரையை விட்டு புறப்படுகிறார்கள்.
https://i.ytimg.com/vi/ye0lcLc5nP4/hqdefault.jpg
பட்டணத்தில் ராஜனின் நண்பன் எம்.ஆர்.ஆர்.வாசு இவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து உதவுகிறார். ஆனால் இவர் ஒரு கேடி. லஷ்மியின் மீது காதல் கொண்டு அவருக்கு ஈவ் டீசிங் டார்ச்சர் கொடுக்கிறார்.
அந்தக் காலனியில் இருக்கும் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனைக் காதலிக்கிறார்.
சி.கே சரஸ்வதி இறந்து போன தன் கணவரின் உறவினர் வி.எஸ்.ராகவன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருப்பதாகவும், அவர் பெரிய பணக்காரர் என்றும், அவருடைய ஒரே மகளை தன் மகன் நாகேஷ் திருமணம் செய்து கொண்டால் சொத்துக்கள் முழுதும் தனக்கே சேரும் என்றும் முடிவு செய்து நாகேஷை பட்டணத்துக்கு வற்புறுத்தி அழைத்துச் செல்கிறார்.
ராஜன் திருடனாகிறார். ஒருசமயம் தம்பியின் வைத்தியத்திற்காக பணமில்லாமல் சிரமப்பட்டு லஷ்மி தன் வீட்டில் உள்ள வெள்ளித்தட்டை அடகு வைத்து பணம் கொண்டு வரும்போது அது ராஜனாலேயே திருடப் படுகிறது. இது தெரிந்து கொண்ட லஷ்மி கடுமையாக அண்ணனைச் சாடுகிறார். ராஜன் மனவருத்தத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இதற்கிடையில் ரவிச்சந்திரன் லஷ்மியின் நினைவால் வேறு திருமணம் செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்.
நிர்மலாவை ராஜன் அடிக்கடி கள்ளத்தனமாக சந்திக்கிறார். இது தெரிந்த லஷ்மி நிர்மலாவிடம் ராஜனை மறந்து விடச் சொல்கிறார். நிர்மலா மறுக்கிறார். காலனிக்கே இவர்களது கள்ளக் காதல் தெரிகிறது.
வீட்டுக்கார அம்மா சுந்தரிபாய் லஷ்மி நலன் கருதி அவரை பணக்காரப் பெரியவர் ராகவனை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார். அப்படியே தம்பியின் வைத்திய செலவுகளையும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார். குடும்ப கஷ்டத்தின் சூழ்நிலையின் காரணமாக லஷ்மி தன்னைத் தியாகம் செய்ய முடிவெடுத்து ராகவனுக்குக் கழுத்தை நீட்டத் தயாராகிறார்.
ராஜன் போலிசாரால் பிடிபடுகிறார். அவரை ஜாமீனில் எடுக்க எம்.ஆர்.ஆர்.வாசு வக்கீல் (!) ரவிச்சந்திரன் உதவியை நாடுகிறார். அப்போது ரவி லஷ்மியை சந்திக்க நேரிடுகிறது. லஷ்மிக்காக இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதை ரவி லஷ்மியிடம் கூறுகிறார். தான் தாயின் சம்மதத்தை பெற்று விட்டதாகவும், லஷ்மியை திருமணம் செய்து கொள்ளத் தயாராய் இருப்பதையும் கூற, லஷ்மி தான் ராகவனுக்கு வாழ்க்கைப் படப் போவதை கூறி விட்டு தன்னை மறந்து விடுமாறும் கூறிச் சென்று விடுகிறார்.
ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளிவரும் ராஜன் லஷ்மி ராகவனைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷயம் தெரிந்து அவரைப் போய் தடுக்கப் பார்க்க, லஷ்மி குடுப்பம் தழைக்க நான் எடுத்த இம்முடிவை மாற்ற இயலாது என்று கூறி விடுகிறார்.
மனம் நொந்த அண்ணன் ராஜன் ஒருபுறம். காதலி வயதானவனுக்கு மனைவியாகப் போகிறாளே என்ற கவலையில் காதலன் ரவி ஒரு புறம்.
வைத்திய சாலையில் இருக்கும் தம்பிக்கு நடப்பதெல்லாம் தெரியவர, லஷ்மி ராகவனுக்கு மனைவியாகப் போகும் நேரம் தம்பியைக் காணவில்லை என்ற செய்தி வருகிறது. தம்பி அக்காளின் திருமணத்தைத் தடுக்க வைத்திய சாலையில் இருந்து தப்பித்து வருகிறான். லஷ்மி பதறிப் போய் ராகவனிடம் 'தம்பியைப் பார்த்து விட்டு வருகிறேன்' என்று சொல்ல, ராகவன் மறுக்க, அப்போது ராகவன் மார்பை ஒரு துப்பாக்கிக் குண்டு துளைக்கிறது. ராகவன் மரணம் அடைகிறார்.
கொலை செய்தது யார்? ஏன்?
காலனிக்காரர்கள் தன்னை அடித்து விட்டார்கள் என்று அவர்கள் மீது ஆத்திரம் கொண்டு வாசு காலனிக்கே வெடிகுண்டு வைத்துவிட, தம்பியும், அவன் நாயும் அதைக் கண்டுபிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, அந்த நேரத்தில் அங்கு வரும் ராஜன் அதைத் தூக்கித் தூர எறிய முற்பட, வெடிகுண்டு அப்போது வெடித்து குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்கிறார் ராஜன்.
https://i.ytimg.com/vi/vJvABrx-4IY/hqdefault.jpg
போலீஸ் ராகவனைக் கொலை செய்தது யார்? என்று விசாரணை செய்கிறது. ரவி 'லஷ்மிக்கு இப்படி ஒரு வயதான கணவனா?' என்று மனம் நொந்து தான்தான் ராகவனை சுட்டதாக சொல்கிறார். பழியைத் தானே ஏற்கிறார்.
ஆனால் வெடிகுண்டில் காயமாகி கிடக்கும் ராஜன் உண்மை முடிச்சுகளை அவழ்த்து, போலீஸிடம் வாக்குமூலம் தருகிறார். தங்கைக்கு இப்படிப்பட்ட வாழ்வு அமைய வேண்டாம் என்று ராகவனைத் தான் சுட்டுக் கொன்ற உண்மையையும் கூறுகிறார். ரவி, லஷ்மி கைகளை இணைத்து வைத்து தன் உயிரை விடுகிறார்.
'வெண்ணிற ஆடை' நிர்மலா ராஜனை இழந்து வெண்ணிற ஆடை உடுத்தித்தானே ஆக வேண்டும்?:)
அப்பாடா! போதுமடா சாமி! தலை சுற்றுகிறது. :(
இந்தக் கதையை நீங்கள் முழுவதும் படித்தால் உங்களைப் போல பொறுமைசாலி பூமியிலே யாருமே இல்லை என்று அர்த்தம்.
மொத்தமாக சேர்ந்து எல்லோரும் நம் உயிரை எடுத்து விட்டார்கள்.:banghead:
ஒரே ஒரு நபரைத் தவிர.
அவர்தான் டி.ஆர்.பாப்பா.
'ஏன்? நிறுத்திவிட்டாய்?' என்று கேட்கிறீர்கள்.
ஏன்? என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.:)
-
-
நம் நெஞ்சையெல்லாம் கொள்ளை கொண்ட அற்புதப் பாடல்...
விவரமாக விஸ்தாரமாக எழுதப் போவதில்லை.. வாசு சாரின் எழுத்தில் இதைப் பற்றிப் படியுங்கள்.
https://www.youtube.com/watch?v=SD1WGCUcVgU
-
உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மற்றோர் பாடல் ஏன் படத்திலிருந்து...
கண்ணன் எனக்கொரு பிள்ளை.. சூலமங்கலம் ராஜலகஷ்மியின் குரலில்...
https://www.youtube.com/watch?v=XM9aIhxNCDU
-
வாசு சார்
நைட் ஷிஃப்ட் முடிஞ்சு காலைலே வந்திருப்பீங்க...
ஹப்பிற்கு வந்தவுடனே உங்களுக்கு ஒரு ப்ளெஸண்ட் சர்ப்ரைஸ்...
அன்னை சொன்ன சொல் படத்தின் ஸ்டில்... இணையத்திலேயே முதன் முறையாக... அதுவும் உங்களுக்காக...
அங்கே ஒருத்தர் சுனாமி ஊர்லேந்து பறந்து வரப்போறார் பாருங்க...
http://i1146.photobucket.com/albums/...psqelep89m.jpg
-
-
-
naan - classic movie
ravichandran and jayalalitha in sizzling romantic number
vandhaal ennodu inge va thendrale, ni marandhaal naan varavo
https://www.youtube.com/watch?v=cuwlDiX6nno
-
இன்றைய trend இல் ரவிச்சந்திரன் இருந்தால்?பெருமூச்சு விடுவதை தவிர வேறு வழியில்லை. அந்த அழகு,ஸ்டைல் ,ஆக்ஷன் நடனம் அவரை முதல் நிலை சூப்பர் ஸ்டார் ஆக்கி இருக்கும். அவரின் அகந்தை குணம் ரசிக்க பட்டிருக்கும்.
அன்றைய தமிழ் ரசிகர்களுக்கு நீதி போதனை ,கண்ணீர் இவை தேவை பட்டதால் ,ஹிந்தி ரசிகர்கள் போல sweet nothings genre படங்கள் ரசிக்க கற்று கொள்ளவில்லை.
ரவிச்சந்திரன் பண்ணியிருந்தால் அன்பே வா,நில் கவனி காதலி,எங்க மாமா ,பட்டணத்தில் பூதம்,வல்லவன் ஒருவன் போன்ற படங்கள் பொலிவு பெற்று ,காதலிக்க நேரமில்லை அளவு அமர காவியங்களாக நின்றிருக்கும்.
எங்க மாமா படம் பிரம்மச்சாரி படம் போல பொழுது போக்காக இருந்திருக்கும். அழுது வடிந்திருக்காது. அன்பே வாவில் இளமை துளிர்த்திருக்கும்.
வல்லவன் ஒருவன் வண்ணத்தில் மின்னியிருக்கும்.(பின்னே வண்ண நாயகனின் படமாயிருக்குமே)ரவி-பாரதி ஜோடியில் ஆஹா, வேறே range .
ரவிசந்திரனை ரசிக்க தமிழ் ரசிகர்கள் கற்று கொள்ளவில்லை. கல்லூரி மாணவர்களும் ,மாணவிகளும் கிழடு போல அம்மா அப்பாக்களின் நிழலில் படம் பார்த்து கொண்டிருந்ததால் , இவருக்கு உரிய அங்கீகாரம் கிட்டவில்லை.
ஐம்பது வருடங்கள் முன்னாலே பிறந்து விட்டாயே?