ராஜேஷ்ஜி!
மழை விட்டு விட்டு பெய்கிறது. ஆனால் நிரம்ப வலு இல்லை. ஆனால் நம் இசை மழை மட்டும் ஓயாது.:)
'ஸ்வர்ண மஞ்சரி' பாடல் இனிமை.
'பக்த துக்காராம்' நடிகர் திலகம் வீர சத்ரபதி சிவாஜியாக நடித்ததால் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சிறிது நேரமே வந்தாலும் அதம் பறக்கும்.
நாகேஸ்வரராவின் அமைதியான நடிப்பு எவரையும் அடிமையாக்கும் இந்தப் படத்தில். காஞ்சனா நாட்டியப் பாடலும் நன்று. இதே போல வில்லன் நாகபூஷணம் சதியால் நாகேஸ்வரராவை மயக்க காஞ்சனா ஆடும் நடனப் பாடல் (பூஜைக்கு வேளாயரா) ஒன்று உண்டு. ஆனால் நாகு மயங்காமல் 'உன் அழகும், இளமையும் சிறிது நாளைக்கே...நாளையே உன் அழகு குலைந்து உன் நாடி தளர்ந்து முதுமை எய்து விடுவாய் ...என்று அறிவுரை சொல்லி பாடி திருத்துவார். அந்தப் பாடலும் அற்புதமாய் இருக்கும். பாடகர் திலகம் தமிழில் இப்பாடலைப் பாடியிருப்பார். இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள். ஒவ்வொன்றும் மணிமணியாக இருக்கும்.
'மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்' மயில் டான்ஸ் பாடல் 'வருமோ இது போல் ஒருநாள்' ரொம்ப ரசித்தேன்.