https://youtu.be/rhD3bFyrULg
Printable View
வினோத்.
நான் சமீபத்திலே நமது திரியில் உருப்பினராக சேர்ந்தால் கூட 3 வருசமாக திரியை பார்த்து வருகிறேன். மலர் மாலை- 2 விளம்பரத்தை இதுவரை பல முறை நீங்கள் விரைவில் வருகிறது என்று போட்டதால்தான் சலிப்பாகி, புத்தக வெளியீட்டு தேதி நிச்சயம் ஆனாவிட்டு போடுங்கள் என்றேன்.
அதற்கு போய் கோவிக்கிறீர்கள். எனக்கு உங்களை யாரென்றே தெரியாது. உங்களுக்கும் என்னை தெரியாது. ஆனால், என் உள்நோக்கம் புரிகிறது என்று சொல்றீர்கள். என் உள்நோக்கம் என்ன? சொல்லுங்கள் தெரிஞ்சுக்கறேன்.
என் தரத்தை உயர்த்தாது என்று கூறுகிறீர்கள். யாராவது புரட்சித் தலைவரை தாக்கினால், எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதரி என்னால் இருக்க முடியாது. அப்படி பேசாமல் இருந்தால்தான் தரம் என்றால் எனக்கு அது வேண்டாம்.
இன்று கூட மாற்றுத் திரியில் ஒரு அறிவிலி, மக்கள் தலைவர் பொன்மனத் தலைவன் நடித்து வெற்றி பெற்ற என் தங்கை படம் ஓடவில்லை என்று தமிழக அரசியல் வார பத்திரிகையில் வெளியானதை போட்டிருக்கிறார்கள். என் தங்கை படம் பெரிய வெற்றி பெற்ற படம். அந்த தொடரில் அந்த அறிவிலி ‘வீரா’ படத்தில் எம்ஜிஆர் தலைகாட்டினார் என்றும் சொல்லியுள்ளது. வீரா படம் ரஜினி காந்த் நடித்த படம். வீரா என்ற படத்தில் தலைவர் நடிக்கவே இல்லை. இந்த புளுகுணிகளுக்கு பதில் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது.
99வது பிறந்த நாள் காணும் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.
செய்திகுறிப்பு:புதுடெல்லி தமிழ்ச்சங்கத்தில் மக்கள்திலகத்தின் பிறந்தநாள்விழா
இன்று (17-01-2016 - ஞாயிற்றுக்கிழமை) காலை பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுடெல்லி தமிழ்ச்சங்கத்தில்
பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவரின் நிலைத்த புகழுக்குக் காரணம் அவரின் திரைப்பட காதல் பாடல்களா? சமுதாயப் பாடல்களா? என்ற தலைப்பில் கலைமாமணி, பேராசிரியர், முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் சிறப்பு இயல், இசை பட்டிமன்றம் நடைபெற்றது. பேராசிரியை, டாக்டர் எஸ். மனோன்மணி காதல் பாடல்களே என்ற தலைப்பிலும், கவிஞர் என். மலர்விழி சமுதாயப் பாடல்களே என்ற தலைப்பிலும் பேசினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு என். கண்ணன், இணைச் செயலாளர்கள் திருமதி சத்யா அசோகன், திரு பி. குருமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் திருமதி சீதாலட்சுமி ராமச்சந்திரன், திரு கே.எஸ். முரளி, திரு ஜி. பாலுச்சாமி, காத்திருப்பு உறுப்பினர் திரு பா. குமார், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன் மற்றும் குர்கான் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சக்தி பெருமாள் ஆகியோர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்கள்.
http://i65.tinypic.com/29n9vki.jpg
படம்-தகவல் உதவி:மேஜர்தாசன்
மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் தெய்வத்திரு ராஜ்குமார் அவர்களின் மறைவு உலகெங்கும் உள்ள எம். ஜி. ஆர். பக்தர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரைப்போல் ஒரு செயல் வீரனை பார்ப்பது அரிது. அவரின் 16வது நாள் நினைவு தினம் வரும் 21ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதனையொட்டி பிரசுரிக்கப்பட்ட "உத்திரகிரியை" பத்திரிகை.
திரியின் பதிவாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கவனத்துக்கு :
http://i67.tinypic.com/wjcu1t.jpg