Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக ஆவணங்கள் - அரசியல் ஆவணங்கள் மற்றும் அவரை பற்றிய ஏராளமான தகவல்கள் , வீடியோ காட்சிகள் , அபூர்வ நிழற் படங்கள் , என்று பல்வேறு தொகுப்புகளை காணும் அரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைத்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் மையம் திரியின் நண்பர்கள் . குறிப்பாக 21.4.2007ல் இனிய நண்பர் திரு ஜோ அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 2 ல் அவருடைய பதிவுகளுடன் மற்றும் இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு பம்மலார் மற்றும் பல நண்பர்கள் பதிவுகளை வழங்கி திரிக்கு பெருமை சேர்த்தார்கள் என்பதை நாம் மறக்க முடியாது .
மையம் திரியின் மூலம் நமக்கு பல நட்பு வட்டங்கள் கிடைத்தது ஒரு மாபெரும் பாக்கியம் . மேலும் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர்கள் திரு ரவிச்சந்திரன் , திரு ஜெய்சங்கர் , திரு கலியபெருமாள் . திரு ரூப்குமார் , திரு லோகநாதன் , திரு ராமமூர்த்தி , திரு பேராசிரியர் செல்வகுமார் , திரு கலைவேந்தன் , திரு யுகேஷ் பாபு , திரு முத்தையன் திரு சி .எஸ்.குமார் திரு தெனாலி ராஜன் , திரு சத்யா , திரு சைலேஷ் , திரு சுகராம் திரு எம்ஜிஆர் பாஸ்கரன் , திரு மாசானம் மற்றும் பல நண்பர்களின் அருமையான பங்களிப்பில் கடந்த 23.10.2012 முதல் இன்று வரை மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பல பாகங்களை கடந்து வெற்றி நடை போடுகிறது .
மையம் திரியின் மூலம் கிடைத்த நட்பின் விளைவாக நமக்கு கிடைத்த மற்றுமொரு வெகுமதி ''மலர்மாலை ''.இனிய நண்பர் திரு பம்மலாரின் கை வண்ணத்தில் உருவான நம் மக்கள் திலகத்தின் உலக தரம் வாய்ந்த ஆல்பம்.
உலகமெங்கும் வாழும் மக்கள் திலகத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு புத்தகம் இது . முதல் பதிப்பில் விற்பனையில் சாதனை புரிந்து 1000 புத்தகங்கள் மேல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்பு உள்ளங்களால் வாங்கப்பட்டுள்ளது . விரைவில் திரு பம்மலாரின் அடுத்த படைப்பான மலர் மாலை -2 வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்து கொள்கிறேன் .
திரியில் நமது நண்பர்களின் தொடர் பங்களிப்பின் மூலம் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றி நாம் படிக்கும் போது மக்கள் திலகம் நம்மோடு வாழ்கிறார் என்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது .எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரிக்கும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் உற்சாகம் , ஆனந்தம், - கணக்கிட முடியாது. அப்படி ஒரு இன்ப அதிர்வுகள்.அவருடைய முகத்தை பார்த்தாலே அந்த புன்சிரிப்பு நமக்கு கிடைத்த உற்சாக உணர்வு. மறக்க முடியாது .