http://i1039.photobucket.com/albums/...psu9frx5zs.jpg
Printable View
http://www.sivajiganesan.in/Images/1911_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1911_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1911_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1911_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2211_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2211_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2211_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2211_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2911_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2911_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2911_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2911_4.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/110116_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
https://youtu.be/sdngHnetKMU
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
1.1.2016 அன்று மதுரை ரமேஷ்பாபு அவர்களின் தந்தையார் அவர்கள் காலமானர். தகவல் அறிந்த அன்னை இல்லத்தின் புகழ் காக்கும் இனளயதிலகம் பிரபு அவர்கள் 2.1.2016 அன்று கைபேசியில் தொடர்பு கொண்டு ரமேஷ்பாபு அவர்களிடம் துக்கம் விசாரித்ததோடு ஆறுதலும் சொல்லியுள்ளார்.
ஒரு ரசிகரின் சோகத்தில் பங்கெடுத்து அவருக்கு ஆறுதல் கூறும் பண்பு இளையதிலகத்திற்கே சொந்தமானது.
இளையதிலகம் பிரபு அவர்களுக்கு சிவாஜிகணேசன்.இன் தனது நன்றியைக் காணிக்கையாக்குகிறது.
http://www.sivajiganesan.in/Images/0201_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
நண்பர் ரமேஷ் பாபு அவர்களின் தந்தையார் மறைவு செய்தி மிகவும் துயரூட்டுகிறது. இந்தப் பெருந்துயரைத் தாங்கும் மன வலிமையை இறைவன் அவருக்குத் தர வேண்டும் எனவும் அன்னாருடைய ஆன்மா சாந்தியடையவேண்டும் எனவும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
சிவாஜி-வாணிஸ்ரீ- The Ultimate Pair in Tamil Screen .
நடிகர்திலகத்தின் காதல் காட்சிகள் , Duets என்று எல்லாவற்றையும் அலசி விட்டேன்.
1952 முதல் 1960 வரை அவர் பலதரப்பட்ட கதைகள் , படங்கள், பாத்திரங்கள், நடிப்பு முறைகள் என்று அவர் focus சென்று விட்டதால் ,இந்த கால கட்டத்தில் பத்மினியோடு அவர் நடித்த ராஜாராணி,புதையல்,உத்தம புத்திரன்,தெய்வ பிறவி காதல் காட்சிகள் சிறந்தவையாகின்றன. ஆனால் இந்த கால கட்டத்தில் romance ,intimacy ,chemistry (தெய்வ பிறவியில் ஒரு காட்சியில் கழுத்தில் சொறிந்து கொள்ளும் சிவாஜியின் குறிப்பறிந்து பத்மினி சொறிந்தே விடுவார்.) இருக்குமே அன்றி erotism அன்றைய காலகட்டங்களில் யார் படத்திலும் இல்லை.ஜமுனா, மாலினி,வைஜயந்தி, சாவித்திரி ,கிரிஜா போன்றோருடன் ஒன்றிரண்டு காதல் காட்சிகள்,காதல் பாடல்கள் மிக நன்றாக இருக்கும்.
1961-1965- அவர் உடல் அமைப்பு ஒத்து வராததால் காதல் காட்சிகள் மிக அபூர்வம். அப்படி வந்தவை தேவிகா,சரோஜாதேவி, ஜமுனா சம்பத்த பட்ட நிச்சய தாம்பூலம், பலே பாண்டியா, இருவர் உள்ளம்,கல்யாணியின் கணவன்,அன்னை இல்லம்,ஆண்டவன் கட்டளை,புதிய பறவை,நவராத்திரி,சாந்தி,நீலவானம் படங்களில் இடம் பெற்றவை.
அதற்கு அடுத்த காலகட்டமான இளைத்து இளமை மீண்ட திராவிட மன்மதனின் இளமை திருவிழா காலமான 1966-1974. இந்த கால கட்டத்தில் அவரின் குறிப்படும் இளம் ஜோடிகளாக (அப்போதும் அவர் எங்கே பத்மினியையும்,சரோஜாதேவியையும் விட்டார்?)கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா,வாணிஸ்ரீ, பாரதி,காஞ்சனா,உஷா நந்தினி,மஞ்சுளா போன்றோரை குறிப்பிடலாம். உங்களுக்கே தெரியும் பாரதி,காஞ்சனா ஆகியோர் one movie wonders .கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா நடித்த பெரும்பாலானவை performance oriented not romance centric . ஆனாலும் கே.ஆர்.வியின் செல்வம்,ஊட்டி வரை உறவு, ஜெயலலிதாவின் கலாட்டா கல்யாணம், தெய்வ மகன், எங்க மாமா ,சுமதி என் சுந்தரி , ராஜா போன்ற படங்களில் romance பாடல்கள்,காட்சிகள் நன்கு வந்திரூக்கும். உஷாவின் பொன்னூஞ்சல் படத்தை பாடல்கள், காதல் காட்சிகளுக்காக பல முறை பார்த்திருக்கிறேன். அந்த காலகட்டத்தில் மஞ்சுளாவுடன் இரண்டே படங்கள் எங்கள் தங்க ராஜா,என் மகன் என்ற இரண்டு. எங்கள் தங்க ராஜாவின் கல்யாண ஆசை, இரவுக்கும் cute duets என்ற அளவில் சரி.
இங்கேதான் நம் வாணி வருகிறார். இணைகிறார்.இசைகிறார்.பிணைகிறார், பின்னுகிறார்,என் தூக்கத்தை கெடுத்த அத்தனை பட காட்சிகளின் ஜோடி.
1968- 1974 -உயர்ந்த மனிதன்,நிறை குடம், வசந்த மாளிகை, சிவகாமியின் செல்வன்,வாணி ராணி .
பின்னால் 1975-1979- ரோஜாவின் ராஜா, இளைய தலைமுறை ,நல்லதொரு குடும்பம்.(பாவ பூமியை மறப்போம்,மன்னிப்போம்) என்று அப்பப்பா!!!
என்னை ஏன் இந்த ஜோடி இத்தனை ஆட்கொண்டது?
1)Best physical compatibility in features (மூக்கு ),உடலமைப்பு,நிறம்,உயரம் என்று பிரம்மா சிவாஜிக்காக தயார் பண்ணிய pair .
2) நடிப்பிலும் ,ஓரளவு குறை சொல்ல முடியாமல் ஈடு கொடுத்தவர்.
3) நடித்த அத்தனையிலும் romance,erotism முன்னிலை படுத்த பட்டு, ultimate romantic sivaji classic வசந்த மாளிகை ஜோடி.
4)பாடல்கள் (வெள்ளி கிண்ணந்தான்,கண்ணொரு பக்கம்,மயக்கமென்ன ,இனியவளே,மேளதாளம்,எத்தனை அழகு,அலங்காரம்,ரோஜாவின் ராஜா, சிந்து நதிக்கரை )மட்டுமின்றி ,காட்சிகள் உயர்ந்த மனிதன் மர காட்சி,நிறைகுடம் வர்ணனை காட்சி,வசந்த மாளிகை plum காட்சி, வாணி ராணி உருளல், ரோஜாவின் ராஜா தியேட்டர் காட்சி, இளைய தலைமுறை பத்து நிமிட முத்த காட்சி, நல்லொதொரு குடும்பம் படுக்கை காட்சி என காட்சிகளுக்கும் குறைவே வைக்காத காதல்.
5) வாணிஸ்ரீ ,நடிகர்திலகத்திடம் தன்னை ஒப்படைத்து மெய் மறப்பார்.
6)அவர் அடுத்து என்ன பண்ணுவார் என அறிந்து தயாராய் reaction காட்டுவார். நல்லதொரு குடும்பத்தில் உதடு துடிப்பும், சிவகாமியின் செல்வனின் காது கடியும், உதாரணங்கள் .
7)நடிகர்திலகமும் 100% involvement ,interest எடுத்து காதல் காட்சிகளில் நடித்தவை வாணிஸ்ரீ சம்பத்த பட்ட படங்களிலேயே. (மன்னிக்க வேண்டுகிறேன்,மடி மீது, நெஞ்சத்திலே,பத்து பதினாறு முத்தம் முத்தம் -OK ,ஆனால் வாணியுடன் special )
8)இருவருமே காமெராவை மறந்து ஒருவருக்கொருவர் வாழ்வது போல ரசிகர்களின் (அனைத்து வயதினரும்)உணர் நிலை.
9)நடிகர்திலகத்தின் மிக சிறந்த இளமை நாட்களில் அமைந்த மிக சிறந்த ஜோடி.
10)வாணிஸ்ரீ ,சிவாஜியின் best admirer ,ரசிகை என்பதால் அவருடன் நடிப்பதை பெருமையாக உணர்ந்து அவருக்கு அனைத்திலும் ஈடு கொடுத்தவர்(சிவாஜிக்கும் ,வாணிஸ்ரீயின் grace &elegant poise,dressing sense பிடிக்கும்.).
முதல் படத்திலிருந்தே தமிழர்களின் ஒரே ஒப்பற்ற முன்னோடி ,கதை போக்கிற்கு இசைவாக பல positive energy உள்ள பாடல்களை பாத்திரங்களின் தன்மையை ஒட்டி ,பிரசார வாடை இல்லாமல் கொடுத்துள்ளார். சும்மா சில உதாரணங்கள்.....(samples )
தேச ஞானம் கல்வி , கா கா கா ,நாணயம் மனுஷனுக்கு அவசியம்,மணப்பாறை மாடு கட்டி,நான் பெற்ற செல்வம், இந்த திண்ணை பேச்சு வீரரிடம், வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே, உள்ளதை சொல்வேன், எல்லோரும் கொண்டாடுவோம்,வந்த நாள் முதல்,எங்களுக்கும் காலம் வரும், சமாதானமே தேவை, ஓஹோஹோ மனிதர்களே ,ஆண்டவன் படைச்சான், கவலைகள் கிடக்கட்டும், பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ,வாழ நினைத்தால் வாழலாம்,யாரை எங்கே வைப்பது என்றே,புத்தன் வந்த திசையிலே போர்,கையிருக்குது காலிருக்குது முத்தையா, உலகம் இதிலே அடங்குது ,அறிவுக்கு விருந்தாகும் ,ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,ஒளி மயமான எதிர்காலம்,கேள்வி பிறந்தது அன்று, போட்டது முளைச்சுதடி கண்ணம்மா,ஆறு மனமே ஆறு,ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்,ஒண்ணாயிருக்க கத்துக்கணும் ,வாழ்ந்து பார்க்க வேண்டும்,பார்த்தா பசுமரம், கல்லாய் வந்தவன் கடவுளம்மா, கல்வியா செல்வமா,தெய்வம் இருப்பது எங்கே,நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு,இனியது இனியது உலகம்,நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு, ஒரு நாள் நினைத்த காரியம், நான் தன்னம் தனிக்காட்டு ராஜா,ஏரு பெரிசா இந்த ஊரு பெரிசா,ஆனைக்கொரு காலம் வந்தா,இதோ எந்தன் தெய்வம்,அம்பிகையே ஈஸ்வரியே,சுதந்திர பூமியில் பலவகை,நீங்கள் அத்தனை பேரும்,நான் நாட்டை திருத்த போறேன்,நல்லவர் குரலுக்கு,நாளை என்ன நாளை,உலகம் வெறும் இருட்டு,தங்கங்களே நாளை தலைவர்களே,இரண்டு கைகள் நன்கானால்,என்னை யாருன்னு நெனச்சே.
போதுமா, இன்னும் வேணுமா, நம் தலைவர் சொல்லாததா, செய்யாததா?
Courtesy :facebook
பதிவு
சுஜாதா , “தமிழ் சினிமாவின் அபத்தங்கள்” பற்றி எழுதிய ஒரு விஷயம் , தற்செயலாக கண்ணில் பட்டது....
அந்த சுவாரஸ்யம் ...இதோ சுஜாதாவின் வார்த்தைகளில் ...
# “ 'ராஜராஜசோழன்' ...சிவாஜி நடிக்கும் தமிழ்ப்படத்தில் எத்தனையோ செலவழித்து மெட்ராசில் தஞ்சைக் கோயிலையும் , நந்தியையும் செட் அமைத்துப் பிடித்திருக்கிறார்களாம். இதைவிட .......த்தனமான காரியம் இருக்க முடியாது...”
# “இதைவிட ........த்தனமான காரியம்” என்று “பீப்” போல ஒரு இடைவெளி விட்டிருக்கிறாரே ...
அந்த இடத்தில் என்ன எழுத நினைத்திருப்பார் சுஜாதா..?
சரி... அதை விடுங்கள்...
தொடர்ந்து சுஜாதா எழுதுகிறார் , இப்படி :
“மேனாட்டில் சரித்திரப்படம் எடுப்பவர்கள் ஆயிரம் மைல் கடந்து சரித்திரம் நடந்த இடத்துக்குச் சென்று பிடிப்பார்கள்....இருநூறு மைலில் இருக்கும் தஞ்சாவூர்... அங்கே செல்லவில்லை.... அதற்குக் காரணம் தஞ்சைக் கோயிலில் இன்று இருக்கும் எலெக்ட்ரிக் கம்பங்களும், கம்பிகளும் நியான் விளக்குகளும் என்று சொல்லப்படுகிறது.... செட் அமைக்கச் செலவிட்ட பணத்தில் பத்தில் ஒரு பங்கு செலவழித்து அந்த உறுத்தும் விளக்குகளையும், கம்பங்களையும் அகற்றிவிட்டு படம் எடுத்துவிட்டு மறுபடி அவற்றை அமைத்திருக்கலாம்.”
# இந்த இடத்தில்தான் சுஜாதாவின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை...
பக்தர்கள் வராத பாழடைந்த கோவில் என்றால் சுஜாதா சொல்வது போல படம் எடுக்கலாம்...
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் , உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் எலெக்ட்ரிக் கம்பங்களையும் , கம்பிகளையும் , நியான் விளக்குகளையும் எப்படி அகற்றுவது..? எத்தனை நாள் அகற்றுவது..?
அப்படியே அகற்றி படப்பிடிப்பு நடத்தினாலும் , அத்தனை நாள் அங்கு வரும் பக்தர்களும் , சுற்றுலாப் பயணிகளும் திண்டாடிப் போய் விட மாட்டார்களா..?
எப்படி இதை எழுதினார் சுஜாதா..?
# இதை சுஜாதாவின் குற்றமாக நான் கருதவில்லை ..!
அவரைக் குறை கூறும் அளவுக்கு அருகதையும் எனக்கு இல்லை..!
# ஆனாலும் நடைமுறை சாத்தியம் இல்லாத இந்த விஷயத்தை சுஜாதா எழுதி இருக்க மாட்டார் என நம்பி , இணையத்தை துணைக்கு அழைத்து தேடிக் கொண்டிருக்கிறேன்...!
என்ன பதில் கிடைக்கப் போகிறது என எனக்கே தெரியவில்லை..!
கருத்துக்ககள்:
" நாயகன்" திரைப்பட இறுதி காட்சியில் .இன்ஸ்பெக்டரின்
இன்னொசன்ட் மகன் வேலுநாயக்கரை கொலை செய்ய
அப்பாவின் பெட்டியை திறப்பான்..
லோடு செய்யப் பட்ட.துப்பாக்கி..ஸ்டார் யூனிஃபார்ம் ..எல்லாம் 20 வருடங்களாக அப்படியே இருக்குமாம்.? காவல்துறையில்
திரும்ப வாங்கவே மாட்டார்களாம்.அதை எடுத்துப்
போய் கொலை செய்வாராமாம்.?!?!
ரோஜாவில் ஒரு கிராமத்துப்பெண்
கணவனை மீட்க கா.,ஷ்.மீ.ரி.ல்..
தனியாக போராடுவாளாமாம்..
அப்பா அம்மா பேசினால் நானே
பார்த்துக் கொள்கிறேன் என்பாளாமாம்..! குசலம் விசாரிக கும் .அவள் அப்பா அம்மா..?
சுஜாதா .மணிரத்ணம் இணைந்த
படங களில் அபத்தங்கள் குவிந்து
கிடக்கும்.,!
சினிமா என்பது நிஜம் மாதிரியே ஆன பொய்.! பொய் போல இருக்க கும் நிஜம்..! காம்ப்ரமைஸ் இருக்கத்தான் செய்யும் ..!
அவரின் நைலான் கயிறு முதல் நாவலில் கூட முடிவு அபத்தம் தான்.,!
குறை சொல்வது எளிது..,
வேறென்ன சொல்ல.....
அவர் கருத்துப்படி தஞ்சை பெரிய கோவில்களில் படத்தை எடுக்க முயற்சிகள் எடுத்திருந்து என்றால் முடிக்க குறைந்தபட்ச 7 முதல் 9 ஆண்டுகள் நீடித்திருக்கும் (அவர் குறிப்பிடும் ஆங்கில படங்கள் போல) அப்போதைய காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் கால்சீட் வேல்யூவை பார்க்க வேண்டும், ரசிகர்கள் இடையே அங்கு அவ்வளவு சுலபமாக குறுகிய காலத்தில் படத்தை முடித்திருக்க முடியாத ஒன்று
, But the film didn't fill the cash box. As a fan of Sivaji I felt very bad about it at that time.
கடுமையான மின்வெட்டு,படம் தயாரித்தவரின் விளம்பரம் இது.2 வாரங்கள் 25இலட்சம்.இன்றைய கணக்கில்?
http://i1065.photobucket.com/albums/...ps94kkkah8.jpg
இதயம் பேசுகிறது 29/6/1986 இதழில் ரசிகன் பதில்கள் பகுதியில் கேட்ட ஒரு கேள்வியும் ரசிகனின் பதிலும் :
இ. காங்கிரசில் செல்வாக்கு பெற்றவர் - விஜயத்திமாலாவா , சிவாஜியா ?
விமான நிலைய வரவேற்ப்க்கு பெரிய போஸ்டர் போட்டு கொள்ள தெரியாத - ராஜீவ் காந்தியோடு புன்னகையுடன் போஸ் கொடுத்து கொண்டிருக்க தெரியாத சிவாஜியை போய் வைஜயந்தி மாலாயிடம் ஒப்பிடுகிறே .
2500 வது பதிவு
தங்கமலை ரகசியம்
http://i1065.photobucket.com/albums/...pskhpiwcut.jpg
அழகாபுரி என்றொரு பேரரசு.அதன் அரசன் ஆதித்தன் .அந்த ராஜ்யத்தின் பாத்தியதைக்கு உட்பட்ட ஒரு சிற்றரசு தான மங்களாபுரி.மங்களாபுரியின் இளவரசியின் பெயர் நந்தினி.ஒரு பேரரசை தன் இஷ்டம் போல் ஆள வேண்டும் என்ற பேராசையுடன் வாழ்ந்து வருபவள்தான் இந்த நந்தினி.
பேரரசரான ஆதித்தன் தனக்கு திருமணம் முடிக்க விரும்பி மங்களாபுரிக்கு வருகை புரிகிறார்.
மங்களாபுரி இளவரசி தன் விருப்பம் நிறைவேறப்போகிறது என்று ஆசையுயுடன் ஆடிப்பாடிக்கொண்டிருக்கிறாள்.
அப்பொழுது குறி(ஜோதிடம்) சொல்லும் பெண்ணொருத்தி அந்த இடத்திற்கு வருகிறாள்.அரசகுமாரிக்கு ஜோதிடம் சொல்வதாக கூறுகிறாள்.தான் அரசியாகும் ஆசையில் இருக்கும் நந்தினி குறி சொல்லும் பெண்ணிடம் ஒரு நாடகத்தை நடத்துகிறாள்.அதாவது,தன் தோழி குமுதா என்பவளைஇளவரசி போல் அலங்காரம் செய்து இவள்தான் இளவரசி என்று கூறுகிறாள்.தோழியின் கையை பார்த்து இவளுக்கு அரசியாகும் ஜாதக அமைப்பு இருப்பதாகக்கூற நந்தினியும் தோழிகளும் எள்ளி நகையாடுகின்றனர்.அவர்களின் நகைப்பை பொருட்படுத்தாத குறி சொல்பவள்,தன் வாக்கு தப்பாது அது முற்றிலும் உண்மை என்று கூறி சென்று விடுகிறாள்.
இந்தசமயத்தில்,
மங்களாபுரிக்கு வந்திருக்கும் ஆதித்த மன்னன் யாருக்கும் தெரியாமல் இளவரசியை பார்த்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் அந்த இடத்திற்கு வந்து சேர்கிறார். குறி சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணின் வாக்கை கேட்டும்,கையை காட்டிக் கொண்டிருக்கும் பெண்ணையும் பார்த்துவிட்டுஅவளே இளவரசி,
அவளைப் பார்த்தாகி விட்டது என்ற மகிழ்ச்சியில்அத்துடன் திரும்பி விடுகிறார்.
திருமண நாள்.
நந்தினி தன் பணிப்பெண் குமுதாமற்றும் தோழிகளுடன் மகிழ்ச்சியுடன் நின்றிருக்கிறாள்.
ஆதித்தன் மாலை சூடும் நேரத்தில் தான் உண்மையான இளவரசி நந்தினி என்பதை அறிகிறான்.சற்றே அதிர்ச்சியடைந்தாலும் தன் மனதில் குமுதாவே நிறைந்திருப்பதால் அவளுக்கே மாலையைச் சூட்டுகிறான். இதனால் நந்தினி ஆவேசமடைகிறாள்.குமுதாவைப் பார்த்து"நான் அமர வேண்டிய சிம்மாசனத்திலே உன்னை ஒரு நாளும் உட்கார விட மாட்டேன் "என்று கோபத்துடன் கூறுகிறாள்.
சிறிது காலம் சென்றதும் ஆதித்தனுக்கும் குமுதாவுக்கும் குந்தை பிறக்கிறது.அந்த குழந்தைக்கு விக்கிரமன் என்று பெயர் சூட்டுகின்றனர்.
மன்னன் ஆதித்தன் விக்கிரமனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டவிரும்புகிறார்.அந்த விழாவிற்கு நந்தினியையும் அழைக்குமாறு அரசியான குமுதாகூறுகிறார்.நந்தினியும் விழாவில் கலந்து கொள்வதுடன் அரண்மனையிலேயே தங்கவும் செய்கிறாள்.ஆனால் உள்ளுக்குள் துவேஷம் கொண்டே, பழி வாங்க சந்தர்ப்பம் தேடி காத்துக்கிடக்கிறாள்.இவையெதுவும் தெரியாத குமுதாவும் அவளுடன் நட்புறவுடனும்பாசத்துடனும் பழகி வருகிறாள்.
சமயம் பார்த்து பழி வாங்க காத்துக்கிடக்கும் நந்தினி ஒரு சந்தர்ப்பத்தில் தன் தோழி சுந்தரியின் மூலம் குழந்தை விக்கிரமனை கடத்திச் சென்று காட்டில் விட்டுவிடுகிறார்கள்.
இந்த நேரத்தில் தோழி சுந்தரியின் அண்ணன் மகேந்திரன் நந்தினிக்கு அறிமுகம் ஆகிறான்.அவன் மந்திர தந்திரங்களில் வல்லவன்.நந்தினியும் அவனைக் கொண்டு காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்று சந்தோசமடைகிறாள்.
குழந்தை காணாமல் போனாலும் உயிருடன் இருப்பதாக அரண்மனை ஜோதிடர்கள் மூலம் ஆதித்தனுக்கு கூறுகின்றனர்.
மகேந்திரனின் மாய வித்தைகள் மூலம் சில காரியங்களை அரங்கேற்றிக்கொள்ள நந்தினி தலைப்படுகிறாள்.மகேந்திரனோ தனக்கு நந்தினி மாலையிட்டால் அந்தக் காரியங்களுக்கு உடன்படுவதாகக் கூற நந்தினியும் அவனுக்கு இசைகிறாள்.
நந்தினியின் சதித்திட்டத்தின்படி, குழந்தை விக்கிரமன் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள வேண்டி ஆதித்தன் தன் மனைவியுடன் தனியாக யாருக்கும் தெரியாமல் சாமியார் வேடமிட்ட மகேந்திரனை நாடிச் செல்கிறான்.மாய குளிகையை பாலில் கலந்து கொடுத்து ஆதித்தனையும் குமுதாவையும் குடிக்கச் சொல்லி மகேந்திரன் கூற,இருவரும் அவ்வாறே செய்கின்றனர்.அந்த மாய குளிகைகள் சாப்பிட்ட எவரையும் எந்த உருவத்திற்கும் மாற்றமுடியும்.ஆதித்தனை முத்துமாலையாய் மகேந்திரன் மாற்றி விடுகிறான்.அதன்பின் மறைவிலிருந்து வெளிப்படும் நந்தினியின் சதியை பார்த்து குமுதா அலறுகிறாள்.குமுதாவை பிச்சைக்காரியாய் நந்தினி மாற்றி விடுகிறாள். முத்துமாலையை எடுத்துக்கொண்டு அழுது புலம்பியபடி பிச்சைக்காரி கோலத்தில் குமுதா வெளியேறுகிறாள்.அதன்பின் அதே மருந்தை தான் அருந்தி மகேந்திரன் மன்னன் ஆதித்தனாக தன்னை மாற்றிக் கொள்கிறான்.
அரண்மனைக்கு ஆதித்தன் உருவத்தில் செல்லும் மகேந்திரன்
அரசி மலையிலிருந்து விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடுகிறான்.நந்தினியின் கட்டளைப்படி அவளை அரசியாக்குகிறான்.
காட்டில் விடப்பட்ட குழந்தை விக்கிரமன் யானைக் கூட்டத்தோடு பழகி யானைக்கூட்டத்தின் ஆதரவிலே வளர்ந்து வருகிறார்.
சில காலம் கழித்து...
ஆதித்தன் உருவத்தில் வாழ்ந்து வரும் மகேந்திரன தன் மகள் அமுதாவோடும் பரிவாரங்களுடனும் காட்டிற்கு வருகிறான்.அங்கே காட்டுவாசி போல் வாழ்ந்து வரும் வளர்ந்த பெரியவரான விக்கிரமனை பார்க்கிறாள்.சிறு வயதில் இருந்தே காட்டில் வளர்ந்து விட்டபடியால் விக்கிரமனுக்கு பேசத் தெரியாது.காட்டுவாசி போல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவரை அமுதாவிற்கு பிடித்துப்போக அரண்மனைக்கு அழைத்து வருகிறாள்.அங்கு விக்கிரமனுக்கு கஜேந்திரன் என்று பெயர் வைத்து கல்வி மற்றும் கலைகளை கற்றுத் தருகிறாள்.இயற்கையிலேயே ராஜ வம்சத்தில் பிறந்த விக்கிரமன் முகத்தில் இப்போது ராஜ களை குடி கொள்கிறது.அமுதா விக்கிரமன் மனம் ஒத்துப் போகிறார்கள்.தந்தை ஆத்தனுக்கு (மகேந்திரன்) இது கௌரவப்பிரச்சினை ஆகிறது.விக்கிரமனை சொல்லால் அவமானப்படுத்த விக்கிரமன் காட்டிற்கே சென்று விடுகிறான்.
அரண்மனையிலிருந்து தப்பிஅமுதா காட்டிற்கு சென்றுவிக்கிரமனிடம் சேர்ந்து கொள்கிறாள்.
தான் ஏன் இப்படி காட்டில் வளர்ந்தோம்,தன் தாய் தந்தையர் என்னவாயினர்?என்ற கேள்விகள் விக்கிரமனை உந்தித்தள்ள அதற்கான விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும்என்ற எண்ணத்தில் இருவரும் நாட்டிற்குள் வருகின்றனர்.
இதே வேளையில் தனியாக இருக்கும் குமுதாவிடம் இருந்து கள்வர்கள் அந்த முத்துமாலையை அபகரித்து சென்றுவிடுகின்றனர்.அதனால் அவள் பைத்தியம் போல் முத்துமாலை.,முத்துமாலை என்று அழுது புலம்பியபடியே தெருக்களில் சுற்றித் திரிகிறாள்.இதைப் பார்க்கும் பாக்கியமும்? விக்கிரமனுக்கும் அமுதாவிற்கும் கிடைக்கிறது.அவள் மேல் பரிதாபப்பட்டு அவளிடம் கருணை கொள்கின்றர்.பின் வந்த வேலையின் முதல் கட்டமாய் ஒரு கடைக்குச் சென்று அமுதா ததன் நகைககளை விற்று பணமாக்குகிறாள்.அந்தக் கடையில் அப்போதுதான் சற்று நேரத்திற்கு முன் குமுதாவிடம் திருடிய முத்துமாலையை கள்வர்கள் விற்றுச் சென்றுள்ளனர்.அந்த முத்துமாலையை அங்கே விக்கிரமன் பார்த்து ஆசைப்பட அமுதா அதை வாங்கி அவர் கழுத்தில் கழுத்தில் அணிவிக்கிறாள்.
தெருவில் முத்துமாலையை அணிந்து நடந்து வரும் விக்கிரமனை பார்க்கும் குமுதா அந்த முத்துமாலையை எடுக்க விக்கிரமனை பின் தொடர்கிறாள்.
பின்னர் இரவாகிபட்டபடியால் ஒரு சத்திரத்தில் அவர்கள் இருவரும் தங்குகின்றனர்.சத்திரத்தில் விக்கிரமன் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் குமுதா முத்துமாலையை எடுக்க முயற்சிக்க விழித்துக்கொள்ளும் விக்கிரமன் இருட்டில் அடையாளம் தெரியாமல் கள்வரோ என்று நினைத்து சப்தமிட ,
சத்திரத்து காவலர்களும் ஓடி வர,
அதனால் பயந்து குமுதா மூர்ச்சையாகிறாள்.அவளைப் பார்த்தால் திருட வந்தவள் போல் தெரியவில்லை என்று நினைப்பதுடன்
அவள் மேல் பரிவு கொண்டு உறங்க வைத்து துணைக்கு அமுதாவையும் இருக்க வைக்கிறார்.
அந்த சத்திரம் உஜ்ஜியினி மகாராஜா விக்கிரமாதித்தன் தங்கிய சத்திரம்.விக்கிரமனின் தேஜஸ் அந்த சத்திரத்து தலைவனிடம் மதிப்பை ஏற்படுத்துகிறது.விக்கிரமாதித்தன் தங்கிய அறையை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறான் .நடு இரவில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருக்கும் விக்கிரமனை ஏதோ சத்தம் எழுப்பி விடுகிறது.ஏதோ பேச்சுக்குரல் போல் இருக்கவே எங்கே இருந்து இந்த பேச்சுக்குரல் வருகிறது என்று பார்க்க அவரை அந்தக் காட்சி பெரிதும் ஆச்சரியப்படுத்துகின்றது.அது என்னவெனில்,கட்டிலின் நான்கு கால்களின் முனையிலே இருக்கும் பதுமைகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் காட்சி தான் அது.அதை விட ஆச்சரியம் அந்தப் பதுமைகள் பேசிய தகவல்கள்.விக்கிரமன் எந்த. உண்மைகளை தேடி வந்தாரோ அந்த ரகசியங்களைஅந்த பதுமைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.பைத்தியம் போல் அலைந்து கொண்டிருக்கும் அந்த மூதாட்டி தான் தன் தாயென்றும்,அவர் கழுத்தில் அணிந்திருக்கும் அந்த முத்துமாலைதான் தன் தகப்பனென்றும் கூறுவதுடன் அவற்றிக்கெல்லாம் விமோசனத்தையும்அந்த பதுமைகள் கூறுகின்றன.அந்த ரகசியங்கள்தான் "தங்கமலை ரகசியம்"
என்றும் கூறுகின்றன.வரும் பௌர்ணமிக்குள் விமோசனத்திற்குண்டான வழிமுறைகளை முடிக்க வேண்டும் அப்படி முடிக்க இயலவில்லையென்றால் காலம் காலமாக அவர்கள் அப்படியே இருந்து விட வேண்டியதுதான்
என்றும் பதுமைகள் கூற விக்ரமன்
அதிர்ச்சி அடைகிறார்.
இதற்கிடையில் நந்தினி ஆதித்தனாக நடித்துக்கொண்டிருக்கும் மன்னன் மகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.இவர்களின் சதிகள் மகேந்திரனின் தங்கை சுந்தரியின் மூலம் மந்திரி அறிந்து கொள்கிறார்.சில சாதுர்யமான காரியங்களின் மூலம் மகேந்திரனின் உண்மை உருவத்தை உலகிற்கு காட்டி விடுகிறார்.அவர்களை சிறையில் தள்ளுகிறார்.மகேந்திரன் சிறையில் இருந்து தப்பி விடுகிறான்.
தங்கமலை ரகசியத்தின் படி பச்சைமலை பவளமலை முத்துமலைஆகிய மூன்று மலைகளை கடந்து இறுதியில் தங்கமலையை அடையவேண்டும்.
ஒவ்வொரு மலைக்கும் ஒவ்வொரு உபாயங்களை கையாண்டு ஜெயித்தால் மட்டுமே அடுத்த மலைக்கு செல்ல முடியும்.
முதலில் பச்சைமலை.அங்கு சாந்தம் என்ற உபாயத்தை கையாண்டு அங்கு தோன்றும் அரக்கனை சாந்தமாய் அடிபணியவைத்து அடுத்த மலைக்கான வழியை விக்கிரமன் தெரிந்து கொள்கிறார்.
இரண்டாவது பவளமலை.அங்குதானம் என்ற உபாயம்.அங்கு தோன்றும் தேவகன்னியர் விக்கிரமனின் அழகையும் வயதையும் தானமாக பெற்று அடுத்த மலைக்கு வழி காட்டுகின்றனர்.இந்த உபாயத்தினால் விக்கிரன் வயோதிகத்தை அடைந்து விடுகிறார்.
மூன்றாவது முத்துமலை..இங்கு குமுதா பேதம் என்ற உபாயத்தைக்கொண்டு அடுத்த மலைக்கு வழி கேட்டு அதை விக்கிரமனிடம் கூறுகிறாள்.அந்த மலையின் ரகசியத்தை சொன்னால் சொல்பவர்கள் கல்லாக மாறி விடுவர்.அதன்படி விக்கிரமனிடம் ரகசியத்தை சொன்னதும் அமுதா கல்லாகி விடுகிறாள்.அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாக்கினாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு தாயையும்,தாரத்தையும் தூக்கிக் கொண்டு கடைசி மலைக்கு முதுமை தோற்றத்துடன்விக்கிரமன் செல்கிறார்.
தங்கமலை
இங்கு வந்ததும் கல்லால் ஆன உடம்பும் மனித தலையும் கொண்ட யோகியை பார்க்கிறார்.யோகியின் இந்த நிலைமைக்கு காரணமும் மகேந்திரன்தான்.யோகியை வணங்கும் விக்கிரமனுக்கு வழி காட்டுகிறார் அவர்.அங்கிருக்கும் மந்திரக்கோலை எடுத்துவந்தால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று யோகி சொல்லஅதை எடுக்க செல்லுகிறார் விக்கிரமன்.இந்த நேரத்தில் அங்கு வந்து விடுகிறான் மகேந்திரன்.விக்கிரமனும் மகேந்திரனும் கடும் சண்டைபுரிகின்றனர். இறுதியில் வாய்மையே வெல்லும் என்பதற்கேற்றவாறு விக்கிரமன் அந்த மந்திரக்கோலை தொட்டு சுய உருவம் அடைந்ததுடன் மகேந்திரனையும் வெல்கிறார்.அந்த மந்திரக்கோலை கொண்டு யோகியை மானிட உருவத்திற்கு மாற்ற,யோகி அந்தக்கோலை வாங்கி ,
முத்துமாலையை ஆதித்தனாகவும்,
பிச்சைக்காரி உருவத்தில் இருக்கும் குமுதாவை பழைய தோற்றத்திற்கும்,
கல்லாய் மாறிய அமுதாவை உண்மைத்தோற்றத்திற்கும் மாற்றுகிறார்.பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததில் அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
*****************சு பம்**********************
விக்கிரமன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர்திலகம்.
" நான் அதிகம் பேசாது நடித்த படம்"என்று நடிகர்திலகம் கருத்து தெரிவித்த படம். நடிகர்திலகம் தோன்றும் அந்த ஆரம்ப வன காட்சிகள் டார்ஜான் படத்தை நினைவு படுத்தும்.நடிகர்திலகம் தோன்றும் ஆரம்ப வனக்காட்சிகளை பார்க்கும்போது படம் முழுவதும் அதே டார்ஜான் கதை அமைப்பிலேயே அமைந்திருக்கலாமே என்றுநினைக்கத் தோன்றும்.
படம் ஓடும் நேரம் 3மணி 11விநாடிகள்.நடிகர்திலகத்தின் உருவத்தை நாம் திரையில் பார்க்கும்போது 1மணி 4 விநாடிகள் கடந்திருக்கும்.1மணி 41 விநாடிகள் கடந்தபின்புதான் அவர் பேசும் காட்சியே வரும்.அப்பொழுதும் ஒன்று இரண்டு வார்த்தைகள் தான்.
சரியாக1மணி 50விநாடிகள் 25 நொடிகள் கடந்தபின்புதான் சிங்கத்தின் குரலே ஒலிக்க ஆரம்பிக்கும.ஆனாலும் இந்தப்படத்தில் பேசி நடித்த காட்சிகளைக் காட்டிலும் பேசாமல் நடித்த காட்சிகளில் அவருடைய நடிப்பு மலைக்க வைக்கிறது..காட்டுவாசியாய் அவரின் கோலம் கச்சிதம்.அமுதைப் பொழியும் நிலவே பாடலைத் தொடர்ந்து வரும் சண்டைக்காட்சியில் ராட்சஸத்தனமாய் அவர் நடித்திருக்கும் நடிப்பு பிரமிப்புதான்.அரண்மனையில் சிரித்துக்கொண்டே அவர் செய்யும் ரகளைகள் எல்லாம் அட்டகாசமான நடிப்பு.
காட்டுவாசித் தோற்றத்தில் இருந்து மாறியபின் அவர் முகத்தில் இருக்கும் தேஜஸ் பெரும் சக்கரவர்த்திகளுக்கு கூட இருந்திருக்குமா?என்று யோசிக்கும் வைக்கும் தோற்றம் அவரிடத்திலே காணப்படும்.
முதுமை தோற்றத்திற்கு மாறியபின்பு அந்த தோற்றத்திற்கேற்றவாறு குரலையும் நடையும் வேறுபடுத்தி விடுவார்.நம் கண்களையே நம்மால் நம்ப முடியாத நடிப்பு அது.
பராசக்தி மனோகரா தூக்குத்தூக்கி போன்ற படங்களில் நடித்துஉச்சாணிக்கொம்புக்கு அவர் புகழ் பெற்ற பின்னரும் இது போன்ற படங்களில் துணிந்து நடித்திருப்பது,
நடிப்பு அவருக்கு அடிமை என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றது.
பத்துக்கும் மேலான பாடல்கள் இருந்தாலும் எப்பொழுதும் அழியாத பாடலாய் "அமுதைப் பொழியும் நிலவே" இருக்கும்.
http://i1065.photobucket.com/albums/...psanjcrt1v.jpg
Courtesy You tube.
https://www.youtube.com/watch?v=0zUrf75vtmw
Congrats Senthilvel. Enjoying your dedication.Pl.Keep the spirit up.
2500 பதிவுகளை கடந்த செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..வாழ்க..
My Favourite Muthaiyan,
My advance wishes for your 10,000. Yours is special and liked by all . You are the only worthwhile 10000 Club.
தினத்தந்தி புத்தக மதிப்புரை
http://i1065.photobucket.com/albums/...pslg8xgel1.jpg
நேற்று வசந்த மாளிகை அனைத்து பாடல்களையும் பார்த்துவிட்டு தான் உறங்க போனேன்
காலத்தை கடந்த பாடல்கள். ரொமாண்டிக் பேர்.நம் ஸ்டைல் திலகம் ஆடல்கள் அமர்க்களம்