A RARE PHOTO
http://i1234.photobucket.com/albums/...ps70dad396.jpg
Printable View
அந்தக் கால நினைவுகள் -
சென்னையில் தூர்தர்ஷன் மட்டும் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்த காலம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் " ஒளியும் ஒலியும் " என்ற பெயரில் தமிழ் சினிமா பாடல்களை ஒளிபரப்புவார்கள். எல்லோர் வீட்டிலும் டி.வீ.கிடையாது என்பதால் யார் வீட்டில் டீ.வி. உள்ளதோ அவர்கள் வீட்டில் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் மக்கள் கூடியிருப்பார்கள். பெரும்பாலும் பழைய பாடல்களையும் சில நேரங்களில் அப்பொழுது வெளியான படங்களின் பாடல்களையும் ஒளிபரப்புவார்கள். ஒரு வெள்ளிக்கிழமயன்று அதிசயமாக இன்னும் வெளிவராத ஒரு படத்தின் பாடலை முதன்முறையாக ஒளிபரப்பினார்கள்.
அந்தப் படம் - பாடல் - பாடலில் நடித்த நடிகர் ?
அந்த சிறப்பு நம் நடிகர்ததிலகம் படத்தைத் தவிர வேறு யாருக்கு இருக்கமுடியும் ? ஆம் அந்தப் படம் - தியாகம் - பாடல் -
நல்லவர்க்கெல்லாம் - பழைய - மூத்த சிவாஜி ரசிகர்களுக்கு இது ஜாபமிருக்கும் என்று நினைக்கிறேன். அன்று படம் வெளிவருவதற்கு முன்பே டீ.வி.யில் பார்த்த எங்கள் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.
செய்திகள் / 13 Dec, 2013 /
சிவாஜி சிலை வழக்கை விசாரிக்க நீதிபதி மறுப்பு;வேறு அமர்வுக்கு மாற்றம்!
சென்னை: சிவாஜி சிலையை அகற்றக்கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்ததால், அவ்வழக்கு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள சிவாஜியை சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அச்சிலையை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அகர்வால் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என தஞ்சையைச் சேர்ந்த தமிழ்ப்பித்தன், சிவாஜி பாபு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி அகர்வால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த அவர், ஏற்கனவே, சிவாஜி சிலை தொடர்பாக 2 பொதுநல வழக்குகளை விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, இந்த வழக்கை என்னால் விசாரிக்க முடியாது'' என மறுப்பு தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி அகர்வால் அனுப்பி வைத்து, வழக்கின் விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
என் நினைவு சரி என்றால் இந்த போட்டோ தலைவர் கட்சி ஆரம்பிக்கும் முன்னர் ரசிகர்கள் முன்பு பேசிய போது எடுத்தது ,சரியா திரு. Kc சார்.
The news of Sivaji Ganesan’s statue causing accidents, dragged me to post my views here. When I last visited Chennai few years ago, I observed chaos and craziness among drivers who have no respect for highway rules, if there are such things exist. Without the use of side mirrors or indicators, I wondered how one can reach home alive! Honking the horns alone does, I suppose. Almost every main road has a statue of some dead politician erected in the middle and the road users somehow drive around them and Sivaji statue is no exception. Having thought that, it is nothing but sheer politics, which is not a surprise. What disgusts me is the insensitiveness of some bloggers who unnecessarily associating the great actor’s personal life in to the issue. No matter what political views he had, he is an acting legend and there must respect for his talent itself. Why everything should be viewed on politics, is a mystery to me.
திரு சந்திரசேகர் சார்,உங்கள் முயற்சி வீண்போகாது ,கண்டிப்பாக வெற்றி நமதே
இந்த ஜெ.வுக்கு சொந்தப் புத்தியும் இல்லை; சொல்புத்தியைக் கேட்பதாகவும் தெரியவில்லை.
1) பி.ஆர் அன்ட் சன்ஸ்-இன் கடிகாரக் கூண்டை அங்கிருந்து அகற்றி விட்டால் இன்னும் கூடுதலாகப் போக்குவரத்துக்குப் பயன்படும்.
2) சிவாஜி சிலையை அகற்றுவது - தமிழ்க் கலைஞர்களின் /கலையின் மீதான எச்சில் துப்பும் மூடத்தனம்.
3) சோபன் பாபுவின் சிலை சாலையை ஆக்கிரமிக்கவில்லையா - மேத்தா நகரில் - இன்னும் கடும் சாலை நெருக்கடி உள்ள இடத்தில்?
சிவாஜி காங்கிரசில் இருந்து - 1988 வாக்கில் - இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் - ராஜீவை எதிர்த்து "என் தமிழ் என் மக்கள்' என்று கொலைகார காங்கிரசை விட்டு வெளிவந்த பச்சைத் தமிழன். அவர் பெருமை குலையச் செய்வது தமிழருக்கு அழகல்ல.