ராஜேஷ்ஜி
p m.:)
Printable View
ராஜேஷ்ஜி
p m.:)
இதோ இதன் தெலுங்கு வடிவம் - இசையரசியின் குரலில்
http://www.youtube.com/watch?v=UPzz4_7Z6q8
சாரதி சார்
வருக வருக..
அட்டகாசமான பாடலுடன் தங்களுடைய பங்களிப்பை இத்திரியில் துவங்கியுள்ளீர்கள்..
தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பை அனைவரையும் போல நானும் விரும்புகிறேன்.
அன்புடன்
தேனிசை தென்றலின் முத்துக்கள் - 9
80'களின் இறுதிகளில் பல புதிய குரல்கள் அறிமுகாயின . அதில் எனக்கு மிகவும் பிடித்த பெண் குரல் (சுஜாதவிற்கு அப்புறம் சுனந்தா).
ஆம் இளையராஜாவின் பெருமைக்குரிய அறிமுகமானார் . ஆம் எனக்கு மிகவும் பிடித்த “காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்” பாடலின் மூலம் அறிமுகமான சுனந்தா நல்ல குரல்வளம், அழகாக பாடக்கூடியவர்.. அதன் பிறகு ஒரு 5 ஆண்டுகள் நிறைய பாடினார். அப்படி அவர் பாடிய ஒரு பாடல் அதுவும் தேனிசைத்தென்றல் தேவாவின் இசையில் இடம்பெற்ற பாடலே இன்றைய முத்து .
http://3.bp.blogspot.com/_7sFnp21KUj...00/sunanda.jpg
ஹிந்துவில் சுனந்தா பற்றிய கட்டுரை.
http://www.thehindu.com/todays-paper...cle3203817.ece
சரி பாடலுக்கு வருகிறேன்.
அப்பொழுது அறிமுகமாகியிருந்த பிரஷாந்த் மற்றும் கண்ணழகி மோகினி இருவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்திருப்பார் அந்த தயாரிப்பாளர்
இருவரையும் ஜோடி சேர்த்தார் “உனக்காக பிறந்தேன் “ என்ற படத்திற்கு.
http://i1135.photobucket.com/albums/...ofIMG_9812.jpg
இது கிட்டத்தட்ட புன்னகை மன்னன் சாயல் .ஆம் இந்திய இலங்கை காதல்.. இதில் இலங்கையிலிருந்து ஓடி வரும் பெண்ணாக மோகினி அவரைக்காப்பாற்றுபவராக பிரஷாந்த்..
இதற்கு தேவா அருமையான பாடலகளை தந்திருந்தார்.
மூன்று பாடல்கள் மிகவும் அருமையான பாடல்கள்
அதிலும் இந்த பாடல் அபாரம்... பிரஷாந்திடம் மோகினி அவருக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் , காதலி இருக்கிறாரா என்று கேட்க
அதற்கு பிரஷாந்த் பதில் சொல்வதாக பாடல்
வாலி ஐயாவின் அருமையான வரிகள், பாலாவும் சுனந்தாவும் அழகாக பாடும் பாடல்
எல்லோரும் கேட்டு மகிழ வேண்டிய பாடல்
இதோ
பெண் வேணும் ஒரு பெண் வேணும் பசும் பொன்னு நிறத்துல பெண் வேணும்
திரை: உனக்காக பிறந்தேன்
இசை: தேவா
வரிகள் வாலி
குரல்: எஸ்.பி.பாலா, சுனந்தா
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்தொரு மாலை தொடுத்திட*
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும் பெண் வேணும்...
அழகிய கண்ணா உன்னிடத்தில் பழகிய பெண்ணா
இதுவரை இல்லை கற்பனையில் எழுந்தது முல்லை
அந்த வாசமலர் அவள் எப்படியோ
உன்னை வாரியணைத்திடும் பூங்கொடியோ
புது வண்ணப்புதையலில் பூத்திருக்கும்
விழி வெச்ச இடமெங்கும் பொன்னிருக்கும்
யாரது அந்த தேவதை ஊரெது நீயும் சொல்லிடு
அந்த சாமிதான் சொல்லனும் தேவியை காட்டனும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
அபிநய கண்கள் அவள் ஒரு அதிசய திங்கள்
மதுரகப்பூவில் அவளது நவரச கோவில்
உன் கற்பனை அற்புதம் இன்னும் சொல்லு
ஒரு காதல் கவிதையை பாடித் தள்ளு
புது சொர்க்கத்தை இன்பத்தை நீ ரசிக்க
உன் பக்கத்தில் வெக்கத்தில் பூவிருக்கு
யாரது அந்த தேவதை ஊரெது நீயும் சொல்லிடு
அந்த நேரம் பிறந்திடும் ஆவல் தெரிந்திடும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
பசும் பொன்னு நெறத்துல ஒரு பெண் வேணும்
பெண் வேணும் ஒரு பெண் வேணும்
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
சொல்லவா சொல்லவா சுகம் அல்லவா
அந்த மானும் கிடைத்தொரு மாலை தொடுத்திட*
இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல் இது.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
http://www.4shared.com/mp3/OnIZqhJNc...nakkaga_p.html
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
ராஜேஷ் ஜி..வாவ் என்னா பாட்டுங்க அது.. எனக்கு ரொம்ப ப் பிடித்த பாட்டு பெண்வேண்டும் ஒரு பெண்வேண்டும்.. எப்படி மறந்தேன்.. மிக்க நன்றி நினைவூட்டலுக்கும் பாடலுக்கும்..
மனசுக்குள்ற ஒரு சின்ன விரதம் எடுத்திருந்தேன்.. அதை உங்கள் போஸ்ட்டிங்க் உடைத்து விட்டது :) (வேறென்ன வேறு இழையில் ஆரம்பித்த தொடர்களை எழுதிவிட்டுத் தான் இங்கு வரவேண்டுமென)
வாசு ஜி
இதோ ஒரு கன்னட பாடல்
நவஜீவனா திரையில் ராஜன் நாகேந்திராவின் இசையில் இசையரசி கலக்கும் பாடல்
https://www.youtube.com/watch?v=Wf4iRtxo4hE
தமிழில் ஆட்டம் என்றால் என்னவாம்.. டான்ஸ்.. ஆடுதல்.. நடனம் எனச் சொல்லலாம்..ஆட்டமா தேரோட்டமா பாட்டும் கூடவே ரம்யா க்ருஷ்ணனும் நினைவுக்கு வந்தாலும் வருவார்கள்!
அதுவே சுசீலாம்மவின் ஒரு பாடல் மானாட்டம் வண்ண மயிலாட்டம் பூவாட்டம் வண்டு தேனாட்டம் தானாடும் மங்கை சதிராட்டம்கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்.. என்ற பாட்டில் வருகிற ஆட்டம்- மான் மயில் பூ தேன் நதி எல்லாவற்றிலும் போல என்பது போலப் பொருள் (ஹையா என்னா ஒரு இன்வென்ஷன்!) இதுவும் கண்ணதாசன்..இன்னொரு பாட்டும் நினைவுக்கு வந்த்து..அதுவும் கண்ண தாசன்
கொஞ்சம் வில்லங்கமான கதைகளைக் கொண்டபடங்கள் அப்போது மலையாளத்தில் வந்துகொண்டிருந்த காலகட்டம்..சில ஏ சென் ட்டரில் ப்ரமாதமாக ஓடின..ஆவ நாழியோ ஆ நிமிஷமோ இந்தப் பட்த்தின் பெயர் என நினைக்கிறேன்..பூர்ணிமா ஜெயராமும் உண்டு என்பது போல் நினைவு..ஆனால் இதன் மலையாள வெர்ஷன்பார்க்கவில்லை..தமிழில் கே.பாலச்சந்தர் எடுத்தார்..
எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய பாட்டு இது சரத் சுஜாதா சரிதா.. நடித்த படம்..எம்.எஸ்.விஸ்வனாதன் இசை..
நண்பனுடன்லொங்கிடி லொங்கிடி என சைக்கிளில் சுற்றி எந்தப் படமும்கிடைக்காமல் ஒரு தீபாவளி நாளில் மார்னிங் ஷோ மினிப்ரியாவில் பத்து மணிக்காட்சிக்கு பத்தரைக்குப் போய் பாதியில் இருந்து பார்த்த படம்.. உடன் இந்தப் பாடல் வந்த்து என நினைக்கிறேன்..
**
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
**
படத்தோட கதை..ம்ஹூம் சொல்ல மாட்டேன்.. பாலச்சந்தர் டச் கொஞ்சம் நன்றாக இருக்கும் என நினைவு..
இன்னொரு பாட்டு.. நானா பாடுவது நானா – வாணி ஜெயராம் மும் நன்றாக இருக்கும்..
அனைத்து நண்பர்களுக்கும் மன்ங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
http://www.youtube.com/watch?v=XA0_hc5GxPc
karthik,
Pl.Come . I want to finish the serial on M.S.V and be away from Dec.
இன்றைய ஸ்பெஷல் (100)
http://4.bp.blogspot.com/-yKjEItOYO-.../s1600/100.gif
http://photos1.blogger.com/blogger2/...133_ba_051.gif
இன்றோடு 'இன்றைய ஸ்பெஷல்' தனது 100 ஆவது பாடலைத் தொடுகிறது. 100 ஆவது பாடல் என்பதால் மிக ஸ்பெஷலாகவும் ஆகிறது.
எனவே தான் ஒரு அமர்க்களமான டீஸிங் பாடலை எடுத்தேன். அதுவும் நடிகர் திலகத்தின் பாடல். 'ராஜா ராணி' என்ற அற்புதமான படத்தின் பாடல்.
http://blog-assets.spuul.com/wp-cont.../Raja-Rani.jpg
படம்: ராஜா ராணி
நடிகர்கள்: நடிகர் திலகம், பத்மினி, எஸ்.எஸ்.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி. ஏ.மதுரம்
கதை, வசனம்: மு.கருணாநிதி
ஒளிப்பதிவு: ஜி.விட்டல் ராவ்.
இசை: 'எனதருமை' டி.ஆர்.பாப்பா
இயக்கம்: ஏ.பீம்சிங்.
http://i1.ytimg.com/vi/vAE6xvRMn34/mqdefault.jpg
இளமை கொப்பளித்து துள்ளும் ஒரு படம். ஜாலி... ஜாலி... ம்... படம் முழுக்க அப்படி ஒரு ஜாலி. அழகு சுந்தரனாய் நடிகர் திலகம். அதே போல அழகுப் பதுமையாய் பத்மினி. இந்தப் படத்தில் இந்த ஜோடியின் இணைவுக்கு ஈடு இணையே இல்லை எனலாம். என்.எஸ்.கிருஷ்ணன், டி. ஏ.மதுரம் காமெடி அருமை. நடிகர் திலகத்தின் இரு ஓரங்க நாடகங்கள். சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ். இரண்டைப் பற்றியும் சொல்ல திரி போதாது. ஒளிப்பதிவு கண்ணைப் பறிக்கும். உடையலங்காரங்கள் பிரமிப்பூட்டும். இன்றைய புது படங்களுக்கு சவால் விடும் இளமைப் படம். எப்போதுமே எவர்க்ரீன் படம்.
பாடல் சிச்சுவேஷன்.
தன்னை மறைமுகமாகக் காதலிக்கும் பத்மினியை செம நையாண்டி, நக்கல் செய்து நடிகர் திலகம் பாடிய பாடல். தனது தந்தையின் ஆணைக்கேற்ப ஏழையான பத்மினி ஆடவரை ஏறெடுத்தும் பாராமல் இருப்பார் நடிகர் திலகமான ராஜாவைக் காணும் வரை. நடிகர் திலகத்திடம் காதல் வலையில் மாட்டிக் கொண்டு பல பொய்கள் சொல்லி தான் பணக்காரப் பெண் என்று சொல்லி அவரிடமிருந்து தப்பிப்பார்.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்தவுடன் நடிகர் திலகம் பத்மினியைக் கேலி செய்து பாடும் பாடல் இது.
என்ன ஒரு கேலி, நையாண்டி, நக்கல்! அதுவும் நடிகர் திலகத்திற்கு இதற்கெல்லாம் சொல்லியா தரணும்? கிளப்பி விடுவார் கிளப்பி. கொள்ளை அழகு. ஸ்லிம்மான உடல். ஒயிட் அண்ட் ஒயிட் பேன்ட் கோட் சூட். அப்படியே அள்ளிக் கொண்டு போவார் அழகில். ஒல்லியாக இருப்பதால் உயரமாக வேறு தெரிவார். ஒவ்வொரு வரிக்கும் அவர் முகம் காட்டும் கேலி, குறும்பு இருக்கிறதே... அப்பா! பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
இந்தப் பாடல் காமெடிப் பாடல் என்பதால் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடும் அதிர்ஷ்டம் எஸ்.சி.கிருஷ்ணன் அவர்களுக்குக் கிடைத்தது. குரல் நடிகர் திலகத்திற்கு அவ்வளவாகப் பொருந்தாவிட்டாலும் நடிகர் திலகம் தன் நடிப்பால் அதை சரிகட்டி விடுவார் வழக்கம் போல்.
http://i.ytimg.com/vi/7TKkjd2wElI/maxresdefault.jpg
'எண்ணற்ற பொய் சொல்லி
என்னையே மாற்றிய என் தங்கமே'
என்னை ஏமாற்றிய தங்கமே
என்னையே மாற்றிய என் தங்கமே
என்று இரு பொருள்பட பிய்த்து உதறுவது பலே!
'அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணே
அநியாயமாய் உண்மை சொல்வதிலே
உனக்கு அவனியிலே நிகர் யாரு கண்ணே'
வரிகளில் முக பாவங்களில் கலக்கி விடுவார். அந்த முகம், உடல் நொடித்துக் காட்டும் நொடிப்பு இருக்கிறதே! பொம்பளை கெட்டாள் போங்கள். 'யம்மாடி! உன்னைப் போல உண்மை சொல்ல ஆளே இல்லை' என்பது போல அப்படி ஒரு குசும்பு. நாடக மேடை அனுபவம் அப்படி கைக்கொடுக்கும்.
அது போல பாடலுக்கு நையாண்டி செய்துகொண்டே ஆடும் ஸ்டெப்ஸ் இருக்கிறதே! சும்மா தூள். கோட்டின் இரு பாக்கெட்டுகளிலும் கைகளை நுழைத்துக் கொண்டு இடுப்பை நொடித்தபடி பத்மினியிடம் வருவதும், அப்படியே ஆடியபடி பின்புறம் செல்வதும் கலக்கல். ஓரக்கண்களால் பத்மினியைப் பார்த்துக் கொண்டே ஆடுவது இன்னும் அழகு. கண்களில் கேலி, குறும்பு கொப்பளிக்கும். அதே போல 'ஆ' என்னும் போது கைகளை ஒரு சுழற்று சுழற்றுவார் சர்வ அலட்சியமாக.
'அட இஸ்பேட் ராணி'
என்று சொல்லிவிட்டு ஒரு ஸ்டெப் போடுவார் பாருங்கள். அது அவரால் மட்டுமே முடிந்த ஒன்று. கால்கள் பின்னியெடுக்கும்.
இனி பாடலின் வரிகள்
http://i.ytimg.com/vi/dQD3Uef3EiE/0.jpg
கண்ணற்ற தகப்பனுக்கு
பெண்ணாகப் பிறந்தவளே
எண்ணற்ற பொய் சொல்லி
என்னை ஏமாற்றிய என் தங்கமே
ஹஹஹஹ
எண்ணற்ற பொய் சொல்லி
என்னையே மாற்றிய என் தங்கமே
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்
வானை நோக்கித் திரையைப் போட்டால்
வட்டநிலாவும் மறைந்து போகுமோ
மியாவ் மியாவ்
வானை நோக்கித் திரையைப் போட்டால்
வட்ட நிலாவும் மறைந்து போகுமோ
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்
கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு
கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு
இந்தக் கட்டிக்கரும்பின் பொய்யும் புரட்டும்
எத்தனை நாளைக்கு
இந்தக் கட்டிக்கரும்பின் பொய்யும் புரட்டும்
எத்தனை நாளைக்கு
ஆ...
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்
(பத்மினி
'நான் ஒன்னும் பொய் சொல்லல...
எல்லாம் உண்மைதான்'
நடிகர் திலகம்
'ஓ அப்படியா! நீ சொன்னதெல்லாம் உண்மைதானா'?!
பத்மினி
'ஆமாம்'
நடிகர் திலகம்
'யம்மா!')
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணே
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணே
அநியாயமாய் உண்மை சொல்வதிலே
உனக்கு அவனியிலே நிகர் யாரு கண்ணே
நிகர் யாரு கண்ணே
ராஜா
ராணி
சீட்டுக்கட்டு ராணி போலே சிக்கி விட்டாய் பெண் மயிலே
சீட்டுக்கட்டு ராணி போலே சிக்கி விட்டாய் பெண் மயிலே
வாட்டமே இல்லாமலே வாழலாம் பூங்குயிலே
வாட்டமே இல்லாமலே வாழலாம் பூங்குயிலே
கிளாவர் ராணி உனக்கு என்ன வேணுமின்னு கேளு
கிளாவர் ராணி உனக்கு என்ன வேணுமின்னு கேளு
ஆர்டின் ராணி போல பாடு டைமண்ட் ராணி போல பாடு
ஆர்டின் ராணி போல பாடு டைமண்ட் ராணி போல பாடு
அட இஸ்பேட் ராணி
ஏனிந்த சோகமோ என் மேல் என்ன கோபமோ
ஏனிந்த சோகமோ என் மேல் என்ன கோபமோ
உண்மை சொன்ன பாவமோ
உன் மனதில் என்ன தாபமோ
உண்மை சொன்ன பாவமோ
உன் மனதில் என்ன தாபமோ
ஹய்
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்
வானை நோக்கித் திரையைப் போட்டால்
வட்ட நிலாவும் மறைந்து போகுமோ
பூனை கண்ணை மூடிக் கொண்டால்
பூலோகம் இருண்டு போகுமோ
மியாவ் மியாவ்
http://www.youtube.com/watch?feature...&v=dQD3Uef3EiE