http://s24.postimg.org/rbrqv31o5/FB_...ed_Picture.jpg
Printable View
எந்த அறிவிலி கூறியது ? மக்கள் திலகத்தின் "என் தங்கை " காவியம் ஓட வில்லை என்று .! தற்போது "சன் லைப்" தொலைக்காட்சியி ல் ஒளிபரப்பாகி வரும் நம் பொன்மனசெம்மலின் "நாளை நமதே" பொற்காவீயத்தின் இடையில் ' வால் போஸ்டர் ' என்று தகவல் தெரிவிக்கும் slideல் " என் தங்கை " இலங்கையில் வெள்ளி விழாவை கடந்து 360 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதாரம் எங்கே ஆதாரம் எங்கே என்று பிதற்றுபவர்கள் இனியாவது அடங்கி ஒடுங்குவர் என்று நம்புகிறோம்.
யாராவது புரட்சித் தலைவரை தாக்கினால், எரும மாட்டு மேல மழை பெஞ்சா மாதரி என்னால் இருக்க முடியாது. அப்படி பேசாமல் இருந்தால்தான் தரம் என்றால் எனக்கு அது வேண்டாம். - WELL SAID SIR. I STRONGLY AGREE WITH YOUR NICE STATEMENT.
http://s21.postimg.org/pmfur62xz/IMG...117_WA0226.jpg
Royal theatre - Coimbatore
Photo fwd by Mr.Samuvel - Sathy.
நீங்காத நினைவலைகளில் இருந்து
திரு k பாலாஜி அவர்கள்
எனக்கு மறக்க முடியாத நாள் என்றால்...
ஒரு நாள் சேலத்தில் இருந்து காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தோம் என்னுடைய உதவியாளர்களுடன் கார் திடீரென நின்று விட்டது நல்ல மாலை நேரம் சுமார் 6 மணி இருக்கும் தண்ணீர் இல்லாமல் ரேடியட்டர் சூடாகி நின்று போனது நடு ரோட்டில் நிக்கிறோம் அருகில் வீடுகள் இல்லை
கொஞ்ச தூரத்தில் ஒரு குடிசை தென்பட்டது அங்கு சென்று தண்ணீர் கேப்போம் என்று போனேன் அங்கு 70 வயது மதிக்க தக்க ஒரு பாட்டி மட்டும் இருந்தார் அவரிடம் தண்ணீர் கேட்டவுடன் டம்ளரில் கொடுத்தார் இல்லை காருக்கு என்று சொல்லி ஒரு குடம் தண்ணீர் வாங்கி ஊத்தி விட்டு குடம் திருப்பி கொடுக்கும் போது 50 ரூபாய் கொடுத்தேன் மூதாட்டீ மறுத்தார் வம்பாக கொடுத்தேன்
அப்போ நீங்கள் யார் என்று வினாவினார் நான் பாலாஜி என்றேன் பாட்டிக்கு கண்ணும் சரியாக தெரியவில்லை மீண்டும் புரியாதது போல் விழித்தார் உடனே நான் சினிமாவில் நடிக்கும் நடிகன் என்றேன்
உடனே அந்த. பாட்டி நீதான் எம்ஜிஆராப்பா என்று எழுந்து என் கைகளை பற்றிக் கொண்டு ஒன்ன பெத்தவ நல்ல புண்ணியவதிப்பா நீ நல்லா இருக்கனும் என்று வாழ்த்தினார்
எனக்கு வாயே வராமல் கண்களில் நீர் மல்க விடை பெற்றேன்
இதை அண்ணனிடம் சந்திக்கும் போது எடுத்து சொன்னேன் உடனே அந்த 50 ரூபாயை எடுத்து கொடுத்து விட்டார் மறுத்தேன் விட வில்லை நீ பாட்டிக்கு கொடுத்தது என் பணம் தான் என்று கூறி வம்பாக கொடுத்தார்.
அவர்தான் தர்மத்தின் தலைவன் எம்ஜிஆர்
http://i1170.photobucket.com/albums/...pscrlbyy08.jpg
வாழும் போது மன்னன்
கோவில் கொண்ட பின் இறைவன்
எங்கள் மக்கள் திலகம் எம் ஜி ஆர்
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
சரி.. எம்.ஜி.ஆர். செய்த அந்தக் குற்றம்தான் என்ன..?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!
[ இன்று எம்ஜிஆரின் 99-வது பிறந்த நாள்..! ]
courtesy net
பண்பின் சிகரமே
பாசத்தின் உறைவிடமே
உழபை்பாளர்களின்
நேசக் கரமே
நேர்மையின் இருப்பிடமே
கருணயைின் பிறப்பிடமே
காக்கும் கரமே
துணிவின் துணையே
உண்மையின்
உழைப்பே
சிந்தனைச் சிற்பியே
வயிற்றுக்கு சாேறிட்ட வள்ளலே
ஏழைகளின் ஔிவிளக்கே
இராமாவரத் தாேட்டத்தின் ராேஜாவே
எங்கள் இதயத்தில்
வாழ்ந்து காெண்டிருக்கும் வள்ளலே
உம்மை வணங்குகின்றாேம்
- குமார் ராஜேந்திரன்
கலியுக கடவுள் அவதரித்த நாள்,,,,,
ஒருவர்
மதத்தின் பெயரால் தலைவராகலாம்
ஜாதியின் பெயரால் தலைவராகலாம்
மொழியின் பெயரால் தலைவராகலாம்
வாரிசு பெயரால் தலைவராகலாம்
ஏன் பணத்தைக் கொண்டும் சிலபேர் தலைவரான வரலாறு உண்டு ஆனால்
நீயோ மக்களை கொண்டு தலைவரான தன்னிகரற்ற ஒரே தலைவன்...
நீ ஆயிரத்தில் ஒருவன், இல்லை இல்லை,
நீ லட்சத்திலும் ஒருவன், இல்லை இல்லை,
நீ கோடியில் ஒருவன்..
எங்கோ பிறந்து எங்கேங்கோ பிறந்த எங்களை அதிமுக என்ற கட்சியின் பெயரால் ஒன்றாக்கி உங்கள் பிறந்த நாளை ஒரு சாதராண தொண்டனாக கொண்டாட என்ன தவம் செய்தமோ...
இன்றைக்கு எனது சிறு வயது கனவு நாயகன், என் முதல் குரு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது 99 வது பிறந்த நாள்.
அவரது 99ம் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது முதல் குருவான எம்.ஜி.ஆரை தூரத்தில் இருந்து பார்க்கத்தான் பல முறை முடிந்தது. அவரை முதல்வராக்கிய அருப்புக்கோட்டை தொகுதிதான் எனது ஊர். அவரது கருத்துக்கள், பாடல்கள், படங்கள் என்னை எனது சிறு வயது வாழ்க்கையை செதுக்கியது.
எனது 14 ம் வயதில் 1980ல் SLV3 ராக்கெட்டை வடிவமைத்து, வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்த ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் எனது இரண்டாம் கனவு நாயகன், என்னை அறிவியலில் வளர்த்தெடுத்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.
நான் 10ம் வகுப்பு படிக்கும் போது, டாக்டர் அப்துல் கலாம் போல் நாமும் விஞ்ஞானியாக வேண்டும் என்று நினைத்தேன். அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறைவன், 15 வருடங்கள் கழித்து எனது கனவை நனவாக்கி அவரிடம் 20 ஆண்டுகள் பணியாற்ற அருள் புரிந்தான்.
இன்றைக்கு எம்.ஜி.ஆரின் 99ம் பிறந்த நாளில், எம்.ஜி.ஆரின் 95ம் பிறந்த நாள் விழா எனக்கு நினைவு வருகிறது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இதயக்கனி விஜயன் மற்றும் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளி நிர்வாகியும், எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்ட திருமதி லதா ராஜேந்திரன் அவர்களது அழைப்பிற்கு, எனது வேண்டுகோளுக்கு இணைங்க எனது முதல் கனவு நாயகனான எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்திற்கு, "டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் மேல் நிலைப் பள்ளியின் 23வது ஆண்டு விழா" மற்றும் "எம்.ஜி.ஆர் 95-வது பிறந்த நாள் விழா"வில் கலந்து கொண்டு 11 ஆகஸ்டு 2012ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர்., ராமாவரம் தோட்டத்தில், எனது குரு, எனது இரண்டாவது கனவு நாயகன் இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை, எனது வரவேற்பு உரையுடன்.
https://www.youtube.com/watch?v=C3hvm6JUlJE
-----------------------------
11 ஆகஸ்டு 2012 அன்று நடந்த "டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் மேல் நிலைப் பள்ளியின் 23வது ஆண்டு விழா" மற்றும் "எம்.ஜி.ஆர் 95-வது பிறந்த நாள் விழா"வில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆற்றிய உரை,
அன்பு நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தமிழக மக்களின் உள்ளங்களில் குடியிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்தில், அவரது விருப்பப் படி பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோருக்கான பள்ளிக்கு வந்து உங்களை எல்லாம் சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியின் 23வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர் 95 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். 23 ம் ஆண்டு கண்ட பள்ளி விழா என்றால் என்ன. இந்த பள்ளி பூமியில் உள்ளது. பூமி சுரியனை சுற்ற ஒரு வருடம் ஆகும். எனவே இந்த பள்ளி 23 முறை சுரியனை சுற்றி விட்டது என்று அர்த்தம். கடந்த 23 வருடங்களில், இது வரை 3000 பேச்சு மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு கல்வி கொடுத்து, நம்பிக்கை கொடுத்து, அவர்களுக்கு மேல் படிப்பு கொடுத்து அவர்களது வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்திருக்கிறது. எனவே 23 வது ஆண்டு விழா கொண்டாடும் இப்பள்ளிக்கு எனது வாழ்த்துக்கள். இன்றைக்கு உங்கள் மத்தியில் நான் வெற்றி அடைந்தே தீருவேன் என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன்.
கொடு, கொடு, கொடுத்துக்கொண்டே இரு
நண்பர்களே, எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஏழையாய் வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, கலை உலகில் இருந்து கொண்டு, தன் சுய உழைப்பால் கிடைத்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் நடித்த படத்தின் பாடல்களின் மூலம், கதைகளின் மூலம், வசனங்களின் மூலம், நல்ல விஷயங்களையே பேசி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இருந்தாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நேர்மையின் சித்தாந்தத்தை எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம், நடித்து, அப்படியே வாழ்ந்து, பார் வியக்கும் வண்ணம் பத்தாண்டுகாலம் மக்களாட்சி கொடுத்தார். அவர் கொடுத்து, கொடுத்து வாழ்ந்த விதம் நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு.. அப்படி கொடுத்தவரது பள்ளியில் வந்து உங்களை சந்தித்து உரையாட கிடைத்த வாய்ப்புக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கு திரளாக கூடியிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், எம்.ஜி.ஆரது நண்பர்களுக்கும், இந்த பள்ளியை சிறப்பாக நிர்வகிக்கும் அவர்தம் குடும்பத்தார்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் மற்றும் எம்.ஜி.ஆரின் உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
---------------------------------
ஒவ்வொரு வருடமும் சென்னையில் இருந்தால், எம்.ஜி.ஆர் வீட்டுக்கு செல்வேன். இந்த வருடம் இன்றைக்கு காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வெ. பொன்ராஜ்
17 ஜனவரி 2016.