சக்தி,
அந்த தொடரின் பெயர் 'ஆனந்தி' அல்ல, 'ஆனந்தம்'.
அதுவும் இன்னும் முடியவில்லை (என்று நினைக்கிறேன், காரணம் அந்த நேரம் முக்கியமான நேரமாதலால் (அதாவது சாப்பாட்டு நேரம்) பார்ப்பதில்லை).
Printable View
சக்தி,
அந்த தொடரின் பெயர் 'ஆனந்தி' அல்ல, 'ஆனந்தம்'.
அதுவும் இன்னும் முடியவில்லை (என்று நினைக்கிறேன், காரணம் அந்த நேரம் முக்கியமான நேரமாதலால் (அதாவது சாப்பாட்டு நேரம்) பார்ப்பதில்லை).
oh ok thanks saradha :)
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
just kidding
தலைச் சுற்றுக்கு மருந்து தரமாட்டீங்களா
என்ன ..
Quote:
Originally Posted by Shakthiprabha
anadham -- :bangcomp:
கோலங்கள் - ஆனந்தி கொலை செய்யப் படப் போகின்றாள் :huh:
தன்னுடைய ப்ராஜக்டுக்காக தான் வாங்க இருந்த இடத்தை தனக்கு கிடைக்கவிடாமல் நிலத்தின் சொந்தக்கராரை மிரட்டியதாக மேனகா மீது அபி குற்றம் சாட்ட, அவளோ தான் அபியை தனக்கு நிகரான ஒரு எதிரியாகவே நினைக்கவில்லை என்று கூறி அபியை மேலும் கோபப்படுத்துகிறாள். மேனகாவின் செல்வாக்கும், பிஸினஸும் அமெரிக்காவிலும், லண்டனிலும் சரிந்து வருவதாகவும், அதனாலேயே அவள் இந்தியாவுக்கு தொழில் செய்வதாக பேர்பண்ணிக்கொண்டு ஓடி வந்துவிட்டதாகவும் கூறும் அபி, இனிமேலும் தன்னுடைய வழியில் குறுக்கிடவேண்டாம் என்றும், அதன் விளைவுகளை மேனகா எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்து விட்டு வெளியேறுகிறாள்.Quote:
Originally Posted by aanaa
உண்மையில் அபிக்கு இடம் கிடைக்காமல் செய்ய இடத்தின் சொந்தக்காரரை மிரட்டியது அபி அல்ல. ஆதித்யாதான். அதை அவனே கிரியிடம் த்னியாக சொல்கிறான். ஆணாதிக்க நோக்கம் கொண்ட ஆதியின் இலக்கு, மேனகா, அபினயா இருவரையுமே ஒழித்துக் கட்டுவதுதான் என்றும், அபியைக்கொல்ல அமெரிக்காவில் ஆளை ஏற்பாடு செய்ததும் மேனகா அல்ல, தான்தான் என்றும் கிரியிடம் சொல்கிறான்.
தேவராஜ பாண்டியனின் கடந்தகால அட்டூழியங்களைப்பற்றிய விவரங்களை சேகரித்திருக்கும் ஆனந்தி, அதை தன் உதவியாளரிடம் படித்துக்காட்ட, அவளது பத்திரிகை அலுவலகத்தின் இன்னொரு ஊழியர் அவற்றைகேட்டு முகம் மாற்றம் அடைகிறான். பின்னர் எழுந்து வெளியே போகிறான். அவன் எதிரிகளின் கையாள் என்று நமக்கு தெரிகிறது.
நெடுஞ்சாலையில் ஒரு உயர் போலீஸ் அதிகாரியை வரச்சொல்லி சந்திக்கும் தேவராஜ பாண்டியனிடம் அந்த் அதிகாரி, ஆனந்தி தன்னுடைய பத்திரிகையில் தேவராஜ பாண்டியனைப்பற்றியும், அவனுக்கு உடந்தையாக இருந்த தன்னைப்பற்றியும் எழுத இருப்பதைச்சொல்லி, அவளை அதை வெளியிடாமல் இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சொல்ல தேவராஜ பான்டியனின் முகம் கொடூரமாக மாறுகிறது.
(ஆனந்திக்கு வர இருக்கிறது ஆப்பு. அந்நேரம் அவளைக்காப்பாற்ற தோழர், அல்லது தொல்காப்பியன் வரக்கூடும். ஒருவேளை தொல்ஸ் வந்து காப்பாற்றும் பட்சத்தில் அவன்மேலுள்ள தப்பான எண்ணம் மாறக்கூடும். அல்லது 'ஆனா' சொன்னதுபோல, ஆனந்தி, இந்த தொடரைவிட்டே மறையக்கூடும். கற்பனைக்குதிரைக்கு கடிவாளம் ஏது..?. ஆனால், ஆனந்தி கொல்லப்பட்டால், கதையில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்படும் என்பது உண்மை).
Thanks a lot for the update, I really appreciate it.
25/26: மேனகாவின் பாதுகாவலர் 2Quote:
Originally Posted by aanaa
27 : பொதுமகன்்
2829 : காவல்துறையினர் 2
30. வேலைக்காரன்
31. ஆனந்தி
:notthatway:
:hammer: :bangcomp:
உஷாவின் அழைப்பின்பேரில் அவள் வீட்டுக்கு தொல்காப்பியன் வருகிறான். உஷாவும் அவளது பெற்றோரும் அவனை மிகவும் மதிப்புடனும் மரியாதையுடனும், அதே சமயம் சற்று உரிமையுடனும் வரவேற்று உபசரிக்கின்றனர். ஆர்த்தியின் நயவஞ்சக நாடகத்தை அவர்கள் நம்பவில்லை என்பது ஆறுதலைத்தருகிறது. தொல்ஸ் கஷ்ட்டப்பட்டு உருவாக்கி கட்டிக்காத்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு உஷாவின் அப்பா ரொம்பவும் வருந்துகிறார். (எப்போ எந்த சீனில் பார்த்தாலும், அநியாயக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் கூடிப்பேசுவதைப்பார்த்து நொந்துபோன நமக்கு, நல்லவர்கள் ஒன்றுகூடிப் பேசுவது ஆறுதல் அளிக்கிறது).
பேச்சினூடே உஷா தொலஸைப்பார்த்து, நாம் ஏன் புதிய பிஸினஸ் ஆரம்பிக்கக் கூடாது? என்று கேட்க அதற்கு தொல்ஸ், நடந்தவைகளையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது எந்த ஒரு தொழிலிலும் நாட்டமோ, விருப்பமோ இல்லையென்றும், எதற்காக யாருக்காக இதைச்செய்ய வேண்டும் என்ற விரக்தியே மேலோங்கி வருவதாக சொல்ல, அதை உஷா மறுக்கிறாள். நமக்குள் இருக்கும் திறமைகளை பயன்படுத்தாமல் இருப்பது சரியல்ல என்றும், இருவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த 'கட்டுமான தொழிலை'யே துவக்கலாம் என்றும் சொல்ல, அதற்கு தாமும் சப்போர்ட் செய்வதாக அவள் அப்பாவும் சொல்ல, தொல்ஸ் அரை மனதுடன் சம்மதிக்கிறான்.
தேவராஜ பாண்டியனில் இருப்பிடத்தில் ஆனந்தியைக்கொல்ல சதித்திட்டம் நடக்கிறது. அதற்கு அவர்கள் ஆதியின் ஒப்புதலை எதிர்பார்த்திருக்க, அங்கு வரும் ஆதியும் தே.பா.வும் தனியறையில் ஆலோசிக்கின்றனர். (என்ன பேசினார்கள் என்பது காட்டப்படவில்லை). முடிவில் வெளியே வரும் ஆதி அவள் கதையை முடித்து விடுமாறு கூறி வெளியேறுகிறான். (அக்கா என்று தெரிந்தும் அபியைக்கொல்ல துணிந்தவன், சொந்த தம்பியான அர்ஜுனை பைத்தியமாக்கத் துணிந்தவனிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?). உடனே தே.பா., தன் கையாளிடம் தங்களுடைய 'கொலை எக்ஸ்பெர்ட்'டுக்கு போன் போட்டு அவனை அழைக்கச் சொல்கிறான்.
பஸ் நிறுத்தத்தில் ஆனந்தி அட்டோவுக்கு கைகாட்டி ஏறிச்செல்ல, அதை ஒரு லாரி பின் தொடர்கிறது. ஆட்டோவும் லாரியும் போய்க்கொண்.........டே இருக்கின்றன, இடையில் இரண்டும் நடுவே ஒரு வெள்ளை அம்பாஸிடர் கார் புகுந்து விட, 'ஒட்டுனர்-கம்-மர்டரருக்கு' ஆத்திரம். ஆனந்தி எப்படியும் தப்பி விடுவாள் என்று நாம் எதிர்பார்க்கும் நேரம், அம்பாஸிடர் கார் முந்தி விட, கொலைகாரனுக்கு லைன் கிளியர். ஆனந்தியைக்கொல்வதுதானே நோக்கம், அப்படியிருக்க அப்பாவி ஆட்டோக்காரனையும் சேர்த்து ஏன் கொல்ல வேண்டும் (அப்புறம், 'ஆனா' தயாரிக்கும் 'இறந்தவர்கள் பட்டியல்' நீண்டு விடும்) என்று திருச்செல்வம் (தொல்ஸ்) நினைத்தாரோ என்னவோ, ஆனந்தி ஆட்டோவை விட்டு இறங்கி சாலையோரம் நடந்துபோக, பின்னால் வந்த லாரி அவளை ஒரே தட்டாக தட்டி வீசியெறிந்துவிட்டுபோக, இப்போது ரத்த வெள்ளத்தில் ஆனந்தி (இந்த தொடரில் எல்லோரும் விரும்பக்கூடிய ஒரே பெண் கேரக்டர்).
ஆனந்தி இறந்து விட்டாளா?. அல்லது இன்னும் உயிர் இருக்கிறதா?. அங்கு வந்த யாரேனும் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிழைக்க வைப்பார்களா?. அவளும் சில நாள் கோமாவில் இருக்க நேரிடுமா?. தெரிய இரண்டு நாட்களாகும்.
ஆனந்தியைக் கொன்று விட்டால் அது பெரிய கொடுமை. அநியாயக்காரிகளான காஞ்சனா, அலமேலு, கலா, ஆர்த்தி, ரேகா என்று அனைவரும் உயிரோடு இருக்க, நியாயத்துக்காகப் போராடும் ஒரே பெண்ணான ஆனந்தியைக் கொன்று விட்டால், (நாம் முன்னரே சொன்னபடி), கதையில் மிகப்பெரிய தொய்வு ஏற்படும்.
:exactly:Quote:
Originally Posted by saradhaa_sn
சரியாக்ச் சொன்னீர்கள்Quote:
Originally Posted by saradhaa_sn
மீண்டும்
:ty:
ஆனந்தி சாகவில்லை...
இன்றைய எபிசோடின் துவக்கத்திலேயே, ஆம்புலன்ஸ் வேனில் ஆனந்தியைக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில் இறக்குவதைத்தான் காண்பித்தனர். யார் தகவல் சொன்னது போன்ற வள வளாக்கள் இல்லை. கூடவே போலீஸும் வருகிறது. (வழக்கம்போல) ஐ.ஸி.யு.வில் அனுமதித்து சிகிச்சையளிக்கின்றனர்.
பின்னர் காரில் அபியும் கிருஷ்ணனும் வந்திறங்குகின்றனர். ஆஸ்பத்திரியின் உள்ளே சென்று நிலவரம் அறிய முயற்சிக்கின்றனர். 'சீரியஸ் நிலையில் இருக்கிறாள்' என்ற விவரம் மட்டுமே தரப்படுகிறது. ஐ.ஸி.யு. வாசலில் போலீஸ் நின்று குடும்பத்தார் தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. ஆட்டோவில் கற்பகமும் ராஜேந்திரனும் வந்திறங்குகின்றனர். கற்பகம் (வழக்கம்போல) அழுகையும் கண்ணீருமாக, அபி (வழக்கம்போல) 'அழாதேம்மா, ஆனந்திக்கு ஒண்ணும் ஆகாது' என்ற ரெடிமேட் வசனத்தை திரும்ப திரும்ப சொல்கிறாள்.
ஒரு காரில் தோழரும், தோழர்களும் வந்திறங்கி கோஷமிட்டுக்கொண்டே நுழைய போலீஸ் அவர்களைத்தடுத்து, அபியின் வேண்டுகோளின்படி தோழரை மட்டும் அனுமதிக்கின்றனர். தோழர் (வழக்கம்போல) புரட்சி வசனங்களைப்பேசுகிறார். 'இரும்பு பெண்ணான ஆனந்திக்கு ஒண்ணும் ஆகாது' என்கிறார். கற்பகமோ 'இவளுக்கு இதெல்லாம் தேவையா?. ஒழுங்கா கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு குடும்பம் குழந்தைகள்னு இருந்தால் இதெல்லாம் வருமா?' என்று அழுகிறாள். (ஒரு தாயின் மனது அப்படித்தான் நினைக்கும்).
அடுத்த காரில் மனோ வந்திறங்கி, ஆனந்திக்கு நேர்ந்த விபத்தைப்பற்றி விசாரிக்க, அடுத்த காரில் ஆர்த்தியும் ராஜேஷும் வந்திறங்குகின்றனர். போதக்குறைக்கு கிரியும் அங்கு வேவு பார்க்க வந்து, மறைந்து நின்று நடப்பவைகளைக் கவனிக்கிறான்.
போலீஸ், இது தற்செயலாக நடந்த விபத்து என்று கூறி கேஸை மூடி மறைக்க முயற்சி செய்ய, தோழரோ இது மேனகா, ஆதி, தேவராஜ் பாண்டியனின் ஆகியோரின் சதி என்று போலீஸிடம் வாதாடுகிறார்.
நேற்றைய எபிசோட் முழுதும் ஆஸ்பத்திரியில்தான்...