https://www.youtube.com/watch?v=TWKKyBfW1Rc
Printable View
மக்கள் திலகத்தின் படங்கள் இன்று . 15.6.2014
இரவு 7 மணிக்கு - கண்ணன் என் காதலன் - சன் லைப் டிவி
இரவு 7.30க்கு வேட்டைக்காரன் - முரசு டிவி
என்றும், என்றென்றும் ஒளி வீசும் மக்கள் திலகம் புகழ், பெருமை, மேன்மையை போற்றும் அன்பு மிக்க பாச உள்ளங்களுக்கு நன்றியும், வாழ்த்தும் நவில்வதில் மகிழ்ச்சி... தொடரட்டும் இந்த சிகர பணி ........
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=SeYhzQFccnY#t=16
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=rYgtGMdPbhE
SUPER COSMIC POWER
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளிவந்த செய்தி.
-------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/25hlj13.jpg
ஒரே நாளில் மூன்று மக்கள் திலகத்தின் படங்களை தொலைக்காட்சிகளில் பார்த்த இனிமையான அனுபவம் .
நீதிக்கு தலை வணங்கு
பிற்பகலில் வசந்த் தொலைக்காட்சியில் நீதிக்கு தலை வணங்கு படம் முழுவதும் பார்த்ததில் முழு திருப்தி . மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .பல இடங்களில் அவருடைய அரசியல் நெடி வசனங்கள் நெத்தியடி . சோகமான
காட்சிகளில் பிரமாதமாக தன்னுடைய இய்லபான நடிப்பை வெளிகாட்டியுள்ளார் .
எத்தனை மனிதர்கள் உலகத்திலே - அருமையான தத்ரூபமான நடிப்பு .
இந்த பச்சை கிளிக்கு ... இனிமையான தாலாட்டு பாடல்
கனவுகளே காதல் - மக்கள் திலகத்தின் இளமையான தோற்றம் - சுறுசுறுப்பான நடனம் மனதை மயக்கி விட்டது .
ராமதாசை புரட்டி போடும் சண்டை காட்சி புதுமை .அனுபவித்து படம் பார்த்த இனிய நாள் .
கண்ணன் என் காதலன்
படம் முழுவதும் இசைக்கு முதலிடம் தந்த படம் . மெல்லிசை மன்னரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . எல்லா பாடல்களும் பாடல் காட்சிகளும் மக்கள் திலகம் - ஜெயா - வாணிஸ்ரீ நடிப்பு பிரமாதம் .
இசைக்கருவிகளை மக்கள் திலகம் மீட்டும் காட்சிகளில் அவருடைய நடிப்பு அழகோ அழகு .படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு காட்சி கூட சலிப்பு இல்லாமல் இறுதி வரை விறுவிறுப்பாக படம் இருந்தது .உண்மையில கண்ணன் என் காதலன் - என்றென்றும் ரசிகர்களுக்கு காதலன் .
வேட்டைக்காரன்
1964ல் தமிழ் திரை உலக வரலாற்றில் பிரமாண்டமாக பேசப்பட்ட முதல் கௌ பாய் தமிழ் படம் .
திரை உலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்திய படம் .
வசூலில் வரலாறு கண்ட படம் .-
திரை உலகில் மக்கள் திலகத்தின் ஆளுமை மற்ற தயாரிப்பளர்களை சிந்திக்க வைத்து , பல திருப்பங்களை உருவாக்கிய படம் .
இப்படி பல சிறப்புக்களை கொண்ட வேட்டைக்காரன் படத்தை பார்த்த பின்
மேற்கண்ட அத்தனை சாதனைகளும் எவ்வளவு உண்மை என்பது புரிந்தது . வேட்டைக்காரன் - ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் - தன்னை எதிர்த்தவர்களை வேட்டையாடிவிட்டான் .
நேற்றைய மூன்று வித்தியாசமான மக்கள் திலகத்தின் படங்கள் பார்த்தது - மனதிற்கு முழு திருப்தி .
மக்கள்திலகம் எம்ஜிஆர் ''37'''
மக்கள் திலகம் திரை உலகை விட்டு 37 ஆண்டுகள் முடிந்து விட்டன .
37 ஆண்டுகள் தொடர்ந்து அவருடைய படங்கள் - திரை உலகை ஆண்டு கொண்டு வருகிறது .
அரசியலில் தற்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ''37'' தொகுதிகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின்
இயக்கத்திற்கு மக்கள் பரிசாக தந்து உள்ளார்கள் .
மக்கள் திலகம் பதவி அமர்ந்து தற்போது ''37'' ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய ''37'' வயதில் 1954ல் வசூல் சக்கரவர்த்தி என்று புகழ் பெற்றார் .
1936ல் சதிலீலாவதில் நடிக்க தொடங்கினார் .
''37'' வருடங்கள் கடின உழைப்பின் பலனாக 1973ல் அரசியல் வெற்றி தலைவராக உலகமெங்கும் புகழ் பெற்ற
தலைவராக உயர்ந்தார் .
என்ன தவம் செய்தேனோ தலைவா உனது ரசிகனாக பிறந்து வாழ்ந்து மறைந்திட, இன்னுமோர் ஜென்மம் உண்டோ உனது பக்தனாய் காலம் கடக்க...!!
http://i1170.photobucket.com/albums/...psf0e51972.jpg
எங்கோ பிறந்தார், நமக்காக வந்தார், தமிழகத்தை மட்டுமா ஆண்டார்? இல்லை உலக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தன்னிகரற்ற தலைவர் நம் மனதையும் அல்லவா இந்த நிமிடம் வரை ஆண்டு வருகிறார்! இதய தெய்வம் எம்.ஜி.ஆர்!! ஆம் இன்றும் மறையாது வாழ்கிறார் கோடான கோடி அன்பு நெஞ்சங்களில்
http://i1170.photobucket.com/albums/...psc701da92.jpg
Specialty of MGR As An Actor And Politician
As an actor MGR attracted mass of people by acting only in positive roles. Always he preferred to appear as a service minded and revolutionary hero in most of his acted films. He never exposed himself as a smoker or drunkard on screens. Also he used to avoid antihero subjects. In his every movie he wanted to tell a message to the people. He had his own acting style and acted as an affectionate son of parents, sincere and cute lover of heroine, courageous hero fighting for justice and gurdian for the poor people and children. For these reasons he owned a great mass of Tamilians as his fans and followers.
When he was in power in the year 1977, he served as far as possible for the welfare of poor people in the society. He loved and respected old poor people and implemented many schemes to help them. The other great thing which he was archived by him during his ruling period was 'Nutrition Scheme' in which many lacs of young school children were benefited. He is also interested on encouraging talented people in different fields including cinema, music, circus and sports. Fifth World Tamil Conference was successfully conducted in the year 1981 at Madurai city of Tamil Nadu when he had been in power.
MGR, In fact this is the word which has been most familiar for many generations of people in Tamil Nadu, India. He was such a great celebrity who won the hearts of milloins and millions of all age group of people in the state of Tamil Nadu. MGR, the full name is Maruthur Gopalan Ramachandran, was a talented film actor and politician and attained great popularity both in political and cine field.
The overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers.
The overwhelming trade response for the digitally restored version of MGR’s Aayirathil Oruvan has overjoyed its makers.
Coming 49 years after its original release, the superhit film starring MGR, Jayalalithaa and Nambiar will open on nearly 120 screens across the State. While multiplexes like SPI cinemas and old cinema-houses like AVM and Albert had asked for the movie in Chennai, other theatres like Devi Paradise jumped into the fray and asked for a print on Wednesday, said G Chokkalingam of Divya Films, the firm that bought the original film and restored it digitally.
And astonishingly, despite indie films like Adiyum Andhamum and Kadhal Solla Aasai releasing on Friday, the advance reservation in uptown multiplexes like Escape have been mind-blowing. “Some of the shows are nearly full all the way up to Wednesday, which almost never happens these days,” confirmed a theatre official.
S Venkataraman, proprietor of movie distribution company Vijayalakshmi Films, which released 80 MGR movies in its heydays, said the screening of MGR films in the run up to elections would definitely impact on voters. "The dialogues, theme and songs of MGR movies still connect with viewers. One movie show will have the impact of 10 public meetings," said Venkataraman.
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருந்தபோது, அவரை சத்யராஜ் சந்தித்தார். அப்போது, "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடியுங்கள்'' என்று எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்தார்.
சினிமாவில் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜிக்கு, கொஞ்சநாள் குடும்பத்துடன் ஓய்வெடுக்கலாமே என்று தோன்றியது.
அவரது சகோதரிகளில் ஒருவரான ரூபா, தனது கணவர் சேனாதிபதியுடன் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் இருந்தார். இதனால், ஒரு மாதம் நடிப்புக்கு `லீவு' கொடுத்துவிட்டு, குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பறந்தார், சத்யராஜ்.
இந்த அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் சத்யராஜ் மிகவும் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தது.
அந்த அனுபவம் பற்றி, சத்யராஜ் கூறியதாவது:-
"தங்கை வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போக முடிவு செய்து புறப்பட்ட நாளில் என் நண்பர் டைரக்டர் மணிவண்ணன், "தினத்தந்தி''யில் என்னை வாழ்த்தி முழுப்பக்க விளம்பரம் கொடுத்துவிட்டார். இது, என் மீதான அவரது அதிகபட்ச அன்பு என்றாலும், இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. "என் நண்பன் சத்யராஜின் அமெரிக்கப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்'' என்ற அந்த ஒருபக்க வாழ்த்துதான் எனக்கும், எம்.ஜி.ஆர். சாருக்குமான நட்புக்கான அடித்தளம் அமைக்கப்போகிறது என்பது, அப்போது எனக்குத் தெரியாது.
அப்போதுநாங்கள் சென்னை வாலஸ் கார்டனில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம்.
ஒரு மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் கதவைத் திறந்ததுமே கண்ணில் பட்டது ஒரு தந்தி. பிரித்த மாத்திரத்தில் அது என் அமெரிக்க பயணத்தை வாழ்த்தி அனுப்பப்பட்ட தந்தி என்பதும், அதை எனக்கு அனுப்பியது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். என்பதும் தெரிந்தது!
அதிர்ந்து போனேன். தந்தி வந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்தில், அந்த தந்தி எங்கள் வீட்டுக்குள் போடப்பட்டிருக்கிறது. ஒரு மாதம் கழித்து அப்படியொரு தந்தி வந்திருப்பது தெரிந்ததும் மகிழ்ச்சியையும் தாண்டி அதிர்ச்சியே எனக்குள் ஏற்பட்டது.
பின்னே! என்னை வாழ்த்தி தந்தி அனுப்பியிருப்பது மதிப்பிற்குரிய முதல்வர். ஒரு மாதம் வரை அதற்கு பதில் நன்றிகூட சொல்லாமல் இருததால், தவறாக நினைத்துக் கொள்ளமாட்டாரா?
உடனே அவரை சந்தித்து, வாழ்த்துக்கு நன்றி சொல்வதுதான் பண்பாடு. ஆனால் அவர் அழைப்பில்லாமல் எப்படிப் போவது? அப்படிப் போனாலும் அவரை சந்தித்துப் பேசமுடியுமா?
இப்படியான குழப்பம் என்னை ஆட்கொண்டபோது, டைரக்டர் பாரதிராஜாவிடம் யோசனை கேட்டேன். அவரோ, "யாரிடமும் முன்கூட்டியே அனுமதி பெறத் தேவையில்லை. நேராக தோட்டம் (எம்.ஜி.ஆரின் ராமாவரம் இருப்பிடம்) போங்க! போய், வாழ்த்துக்கு நன்றி சொல்லிட்டு வந்துடுங்க'' என்றார்.
அவர் சொன்னது நல்ல யோசனையாகப்பட்டது. மறுநாளே மனைவியுடன் தோட்டத்துக்கு கிளம்பினேன். காலை 8 மணிக்கு தோட்டத்தை நெருங்கும்போது இன்னொரு சந்தேகம். `ஒருவேளை கேட்டில் நிற்கும் காவலாளி தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி விட்டால்?'
நான் சராசரி மனிதன் என்றால் பரவாயில்லை. என்னோடு அந்த விஷயம் முடிந்து விடும். நான் இப்போது நடிகன். பார்க்கிற எல்லோருக்குமே என்னைத் தெரியும். ஒருவேளை அப்படி திருப்பி அனுப்பிவிட்டால், "எம்.ஜி.ஆரை பார்க்கப்போன நடிகர் சத்யராஜ் திருப்பி அனுப்பப்பட்டார்'' என்றல்லவா செய்தி வரும்!
ஆனால் அப்படியெல்லாம் எந்தத் தடையும் இருக்கவில்லை. கேட்டில் என் வருகைக்கு வரவேற்புதான் இருந்தது. அங்கிருந்தவர்கள் எங்களை வரவேற்பு அறைக்கு அழைத்துப்போய் உட்கார வைத்தார்கள். தோட்டத்தில் நிறைய குழந்தைகளை எம்.ஜி.ஆர். படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அந்தக் குழந்தைகள் என்னைப் பார்த்ததும் உற்சாகமாய் ஓடிவந்து `ஆட்டோகிராப்' வாங்கினார்கள்.
கொஞ்ச நேரத்தில் நாங்கள் வந்திருந்த தகவல் எம்.ஜி.ஆர். சாருக்கு சொல்லப்பட்டு, எங்களை இன்னொரு வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அங்கிருந்த ஒருவர் எங்களை நெருங்கி வந்து, "என்ன சாப்பிடறீங்க?'' என்று கேட்டார்.''
நான், "வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்றேன். "இந்த இடத்துக்கு வந்து அப்படியெல்லாம் சொல்லக்கூடாது'' என்றார், அவர்.
எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு போகிறவர்களுக்கு முதலில் வயிறார சாப்பாடு. அதன்பிறகுதான் அவருடன் சந்திப்பு என்பதாக நானும் ஏற்கனவே அறிந்திருந்தேன். என்றாலும் காலை டிபன் முடித்துவிட்டுப் போனபிறகு, உடனே மறுபடி டிபன் சாப்பிட முடியுமா? எனவே `டீ` கொடுங்க போதும்'' என்றேன்.
`டீ' வந்த கொஞ்ச நேரத்தில் ஜானகி அம்மாளுடன் எம்.ஜி.ஆர். சார் நாங்கள் இருந்த அறைக்கே வந்துவிட்டார். இருவருக்கும் கையோடு கொண்டு போயிருந்த மாலைகளை அணிவித்து ஆசி பெற்றுக்கொண்டோம்.
எங்களைப் பார்த்ததுமே எம்.ஜி.ஆர். சார் கேட்ட முதல் கேள்வி, "ஏன் குழந்தைகளை அழைத்து வரவில்லை?'' என்பதுதான்! நான் விழிக்க, என் மனைவியை பார்த்த எம்.ஜி.ஆர், "உங்க வீட்டுக்காரருக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்காது. நீங்கதாம்மா குழந்தைகளையும் அழைச்சிட்டு வந்திருக்கணும்'' என்றார்.
குழந்தைகளையும் நேசிக்கும் அவர் அன்பு புரிந்தது. பேச வார்த்தை வராமல் நின்றோம். அவரே, "அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா குழந்தைகளையும் அழைச்சிட்டு வரணும். சரியா?'' என்று எங்கள் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்து அவர் கேட்ட கேள்வி இன்னும் பாசப்பிணைப்பானது.
"ஏன் இத்தனை நாளா வரலை?'' என்பதே அவர் கேள்வி.
"அண்ணே! எப்படி திடீர்னு வர்றது? ஒருவேளை நான் வந்து கேட்டைத்தாண்டி உள்ளே விடமாட்டேன்னுட்டாங்கன்னா தமிழ்நாடு முழுக்க தெரிஞ்சிடுமே'' என்றேன்.
நான் இப்படிச் சொன்னதை எம்.ஜி.ஆர். சார் ரொம்பவே ரசித்தார். என் தோளில் தட்டி சிரித்தார். பிறகு அவரே, "அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க'' என்றார்.
பிறகு என் குடும்பம் பற்றியெல்லாம் ஆர்வமாக விசாரித்தார். வாஷிங்டனில் இருக்கும் தமிழர்கள் எனக்கு கொடுத்த சிறப்பான வரவேற்பு பற்றி அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
"தொடர்ந்து படப்பிடிப்பு படப்பிடிப்புன்னு இருந்ததுக்கு ஒரு மாத ஓய்வு பயனுள்ளதாக இருந்திருக்குமே'' என்றார், ஜானகி அம்மாள்.
உடனே எம்.ஜி.ஆர், "எங்கே ஓய்வெடுக்கிறது! அமெரிக்காவிலும் தமிழ்ச்சங்கம் வரவேற்பு அது இதுன்னு போய் வந்ததுல ஓய்வு எப்படி எடுக்க முடியும்?'' என்று என் சார்பில் ஜானகி அம்மாளுக்கு பதில் கூறினார்.
தொடர்ந்து என் படங்களையெல்லாம் பார்த்ததாகவும், சிறப்பாக நடிக்கிறேன் என்றும் சொன்னபோது சந்தோஷத்தில் இறக்கையில்லாமல் பறந்தேன்.
திடீரென்று, "சத்யராஜ்! நீங்க எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படத்தில் நடிக்கிறீங்களா?'' என்று கேட்டார், எம்.ஜி.ஆர்.
"நீங்க இப்படி கேட்டிருக்க கூடாதுண்ணே! உத்தரவே போட்டிருக்கணும். அப்படி உங்க எம்.ஜி.ஆர். பிக்சர்சில் நடிக்கிற வாய்ப்பு அமைந்தால் அது என் பாக்கியம்'' என்றேன்.
இப்போது ஜானகி அம்மாள், "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலமா நாலைந்து படம் எடுத்திருக்கிறோம்'' என்றார்கள்.
நான் உடனே, "3 படம்தான் எடுத்திருக்கீங்க. 1958-ல் "நாடோடி மன்னன்'', 1969-ல் "அடிமைப்பெண்'', 1973-ல் "உலகம் சுற்றும் வாலிபன்'' என 3 படம்தான் எடுத்திருக்கீங்க'' என்றேன்.
நான் இப்படி புள்ளி விவரங்களுடன் சொன்னது எம்.ஜி.ஆர் சாரை ஆச்சரியப்படுத்தி விட்டது. "சரி! எங்க கம்பெனிக்கு எப்ப நடிக்கிறே?'' என்று கேட்டார்.
"நாளையில் இருந்தே ஷூட்டிங் வைத்தாலும் நான் ரெடி'' என்றேன்.
உடனே எம்.ஜி.ஆர். சார் என் வார்த்தையை பிடித்துக்கொண்டார். "அப்ப, இப்போது உன்னை வெச்சு படம் எடுக்கிறவங்க கதி? அவங்க படத்தை முடிச்சிட்டு அப்புறமா நடி'' என்றார்.
தயாரிப்பாளர்களை `முதலாளி ஸ்தானத்தில்' வைத்து மரியாதை செய்யும் அவரது வார்த்தைகளில் தயாரிப்பாளர்கள் மீது எத்தனை கரிசனம் என்று எண்ணி வியந்தேன்.
"கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் நீங்களே டைரக்ட் பண்ணணும்'' என்றேன்.
பதிலுக்கு அவர், "எனக்கும் விருப்பம்தான். ஆனால் `சி.எம்' ஆயிட்டேனே!'' என்றார். பிறகு அவரே, "படத்துக்கு நல்ல டைரக்டராக போட்டு விடுவோம். நான் எடிட்டிங் சமயத்தில் வந்து விடுகிறேன்'' என்றார். சினிமாவை அப்போதும் அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.
விடைபெறும் நேரம் வந்தபோது கன்னத்தில் முத்தமிட்டு என்னை வாழ்த்தினார். அடுத்த தடவை குழந்தைகளோடுதான் வரணும் என்று அன்புக் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு எம்.ஜி.ஆர். சாரின் அந்த அன்பே கண்ணுக்குள் நின்றது. என் மனைவி என்னிடம், எம்.ஜி.ஆர். சார் கொடுத்த முத்தத்தை நினைவுபடுத்தி, "10 நாள் நீங்கள் உடம்புக்கு மட்டும்தான் குளிப்பீங்க. முத்தம் கிடைச்ச சந்தோஷத்துல முகம் கழுவப் போறதில்லை'' என்று கிண்டல் செய்தார்.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
"வேதம் புதிது'' படத்தில் பாலுத்தேவராக நடித்த என் நடிப்புக்கு `பிலிம்பேர்' பத்திரிகை உள்பட 6 பத்திரிகைகள் விருது கொடுத்து சிறப்பித்தன.
மத்திய அரசின் விருது கமிட்டியில் அப்போது ஜுரியாக இருந்தவர்களில் நடிகை லட்சுமியும் ஒருவர். இந்தப்படத்தில் என் நடிப்புக்கு விருது கொடுப்பதற்கான பரிசீலனையில், சின்ன விஷயத்துக்காக `விருது' வாய்ப்பு தவறி விட்டதாக லட்சுமி என்னிடம் சொன்னார். அதாவது என் கேரக்டருக்கு `விக்' பயன்படுத்தியிருந்தது விருதுக்கு தடையாக அமைந்திருந்ததை தெரிந்து கொண்டேன். ஆனாலும் ரசிகர்களின் பாராட்டை எனக்கு கிடைத்த பெரிய விருதாக ஏற்றுக்கொண்டு மகிழ்ந்தேன்.
ஜெயலலிதா மேடம் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒரு தடவை அவர்களை சந்தித்து பேசினேன். அப்போது நான் பல படங்களில் நடித்திருந்தாலும் `பாலுத்தேவர்' கேரக்டர் பற்றியே அதிகம் பாராட்டிப் பேசினார்கள்.
படத்தில் ஒரு காட்சியில் நானே ஆடிப்போய்விட்டேன். என் வளர்ப்பு மகனாக வரும் சிறுவனை நான் தோளில் தூக்கி வைத்தபடி கதை சொல்லிக்கொண்டே வருவேன். ஆற்றைக்கடக்கும்போது அந்த சிறுவன் என்னிடம், "உங்க பெயர் என்ன?'' என்று கேட்க, "நான் பாலுத்தேவர்'' என்பேன். "பாலு உங்கள் பெயர். தேவர் என்பது நீங்கள் படிச்சு வாங்கின பட்டமா?'' என்று அந்த சிறுவன் கேட்பான்.
இந்தக் காட்சியை, தனக்கே உரிய ஆற்றலில் மிகத் திறமையாக இயக்கினார், பாரதிராஜா. இந்தக் கேள்வியால் அந்தச் சிறுவன் என்னை கன்னத்தில் அறைவதாக உணர்வேன். `ஜாதிய சமூகத்தை தாண்டியது மனித நேயம்' என்பதை சொல்லாமல் சொல்கிற அந்தக் காட்சி, என் நடிப்பிலும் மறக்க முடியாத காட்சியாகி விட்டது.
படம் தயாரான பிறகு வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக ஒரு தகவல் உலாவந்து படத்துக்கு பிரச்சினையாக அமைந்தது. இதுபற்றி முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டபோது அவர் படத்தை பார்க்க விரும்பினார். ஏவி.எம். தியேட்டரில் படம் பார்த்தபோது என்னையும் அவர் அருகே அமர வைத்துக்கொண்டார். முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்தவர், "இந்தப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் இல்லையே!'' என்றார். என் நடிப்பையும் பாராட்டினார்.
முதல்-அமைச்சர் பாராட்டிய பிறகு, படத்தின் வெளியீட்டுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ரசிகர்கள் உணர்ச்சி மயமாய் ரசித்ததோடு, படத்தையும் வெற்றி பெறச்செய்தார்கள்.
"வேதம் புதிது'' பாலுத்தேவர் கேரக்டர் என்னை ரசிகர்களிடம் பெரிய அளவில் வெளிப்படுத்தியதால்தான் இன்றைக்கு "பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' போன்ற படங்களிலும் நடிப்பில் என்னை நிலைநிறுத்த முடிந்தது.''
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
இனிய நண்பர் திரு யுகேஷ்
இது வரை பார்க்காத மக்கள் திலகத்தின் படம் . மிகவும் அருமை .ஆரத்தி எடுக்கும் பெண்களிடம் மக்கள் திலகம் புன்னகையுடன் ஏற்று கொள்ளும் அழகான ஸ்டில் .
அலிபாபாவும் 40 திருடர்களும் - கோவை நகர வசூல் மற்றும் அழகான டிசைனில் மக்கள் திலகத்தின் படம் பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லை நினைத்தாலே நமக்கு உற்சாகம் - மகிழ்ச்சி -எல்லையில்லா ஆனந்தம் என்றென்றும் நினைவில் வரும் என்பது அறிந்ததே .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பங்கேற்ற பல
நண்பர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டு அரிய பல தகவல்களை பரி மாற்றம் செய்து குறுகிய காலத்தில் திரியை
சிறப்பாக முன்னேற்றி சென்றது மகிழ்ச்சி .
சமீப காலத்தில் திரியில் தொய்வு உண்டாகியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது . சுறுசுறுப்பு என்றால் அது மக்கள் திலகம் என்று எல்லோரும் அறிவார்கள் . அவருடைய ரசிகர்களாகிய நாம் இப்படி வேகத்தை குறைக்கலாமா ? என்னதான் பணி சுமைகள் இருந்தாலும் மக்கள் திலகம் என்றால் வீறு கொண்டு எல்லோரும் தங்கள் பதிவுகளை இடமுன் வர வேண்டாமா ?
மக்கள் திலகத்தின் சாதனைகள் - அவருடைய படங்கள் பற்றிய விமர்சனங்கள் - என்று பதிவிட பல தகவல்கள் ஏராளம் உண்டு . இனிமேல் நண்பர்கள் தங்களுடைய பதிவுகளை பதிவிடுவார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் .
உங்கள் மவுனம் மக்கள் திலகதிற்கு தேவையா ? சிந்தியுங்கள் நண்பர்களே .
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=kVtn...ature=youtu.be
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரும் 29/06/2014 அன்று ஞாயிறு மாலை 6 மணியளவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியின்
சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/vnnivb.jpg
சென்னை ஆல்பட் திரைஅரங்கு வளாகத்தில் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் திரைப்படம் 100 வது நாள் வெற்றி விழா
நடைபெற இருப்பதை முன்னிட்டு , மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மன்றத்தினர் (எழும்பூர் ) அமைத்துள்ள பேனர்.
http://i62.tinypic.com/2elcl1u.jpg
சென்னை ஆல்பட் திரை அரங்கில் கடந்த வெள்ளியன்று (13/06/2014)
மாலை காட்சியின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்
திரைப்பட பேனர்கள், 90 வது நாள் சுவரொட்டிகள் , 100 வது நாள் வரவேற்பு
பேனர்கள், மற்றும் கவுண்டரில் டிக்கட் வாங்கும் காட்சிகள் , பருவம் எனது
பாடல், ஏன் என்ற கேள்வி ஆகிய பாடல்கள் நிறைந்த காட்சிகளை
headlines today channel தொலைக்காட்சி நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இந்த வீடியோ தொகுப்புகள் வரும் 30/06/2014 அன்று ஒளிபரப்பாகும்
என்று தகவல் வெளியாகி உள்ளது என்பது நமது திரி நண்பர்களின்
கவனத்திற்கு.
ஆர். லோகநாதன்
திரு தெனாலி ராஜனின் மக்கள் திலகம் படங்கள் தொகுப்பு வீடியோ அருமை . ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள்
விழா பற்றிய செய்திகள் வழங்கிய திரு லோகநாதனுக்கு நன்றி .
இனிய நண்பர் திரு ரூப் குமார் தாயார் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வோம் ..
யுகேஷ் பாபுவின் மக்கள் திலகத்தை பற்றிய இணைய தள பதிவுகள் மிகவும் அருமை .
நடிகர் சத்யராஜின் 2 தங்கைகள் திருமணம் கோவையில் நடந்த போது, முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அங்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்.
எம்.ஜி.ஆரை அவரது இல்லத்தில் சத்யராஜ் சந்தித்த பிறகு, அவர் எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகி விட்டார். இந்த சமயத்தில் சத்யராஜின் இரண்டு தங்கைகளுக்கு நடந்த திருமணத்திலும் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதுகுறித்து சத்யராஜ் கூறியதாவது:-
"எனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நிச்சயமானது. "மலைக் கள்ளன்'' "சிவகவி'' போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த பட்சிராஜா ஸ்டூடியோ கோவையில் இருந்தது. பின்னாளில் இந்த ஸ்டூடியோ கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது.
இந்த திருமண மண்டபத்தில்தான் தங்கைகள் திருமணம் நடந்தது. தங்கைகளின் திருமண பத்திரிகையை எம்.ஜி.ஆரிடம் கொடுக்க நான் ராமாவரம் தோட்டத்துக்கு போயிருந்தபோது அவர் கோட்டைக்கு போயிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். நான் ஜானகி அம்மாவிடம் திருமண பத்திரிகையை கொடுத்து, "அம்மா! இது அழைப்பிதழ் அல்ல. கோவையில் திருமணம் நடக்கிறது என்பதை சொல்லும் தகவல் மட்டும்தான். ஒரு சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்துக்காக 600 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. கோவையில் திருமணம் முடிந்ததும், நானே மணமக்களை இங்கே அழைத்து வருகிறேன்'' என்றேன்.
இதற்குப் பிறகு நான் கல்யாண வேலைகளில் பிசியாகி விட்டேன். சித்தப்பா வகையில் சிவாஜி எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் நிச்சயம் வந்து விடுவார். நாமே வர வேண்டாம் என்று சொன்னதால், எம்.ஜி.ஆர். வரமாட்டார் என்றே எண்ணினேன்.
திருமணத்திற்கு முந்தின நாள், முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது தங்கைகள் திருமணத்துக்காக கோவை வருகிறார் என்ற தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கோவை மாவட்ட கலெக்டர் எனக்கு போன் செய்தார். "ஏன் சார்! சி.எம். வரப்போறார் என்பதை முதலிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாமே'' என்றார்.
நாம் வரவேண்டாம் என்று சொல்லியும் முதல்வர் வருகிறாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை அன்பு இருந்தால் அவராகவே வர முடிவு செய்வார்!
மறுநாள் மதியம் கோவை விமான நிலையத்தில் காத்திருந்தேன். விமானத்தில் இருந்து முதல்வரும் ஜானகி அம்மாளும் இறங்கி வந்தார்கள். நான் பரவசமாய் வணங்கி நின்றபோது, என்னிடம் "எப்படி?'' என்று குதூகலமாகக் கேட்டார், முதல்வர்.
அவர் "எப்படி?'' என்று கேட்பதே தனி அழகு. அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு அந்த "எப்படி'' வார்த்தையின் வல்லமை தெரியும். என்னிடம் சொன்ன "எப்படி''க்கு அர்த்தம், "நீ வரவேண்டாம் என்று சொல்லியும் வந்துவிட்டேன் பார்த்தாயா!'' என்கிற அர்த்தம்.
நேராக சர்க்ïட் அவுசில் தங்கியவர், மறுநாள் காலை 5 மணிக்கு முகூர்த்தம் என்பதால் ஜானகி அம்மாளுடன் 4.45 மணிக்கே வந்து விட்டார்.
எம்.ஜி.ஆர். வரும் அதே நேரத்தில் சிவாஜியும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தார்! இப்போது யாரை வரவேற்பது என்பதில் எனக்கே சிறு தடுமாற்றம். நிலைமையை `சட்'டென்று புரிந்து கொண்ட சிவாஜி, என்னிடம், "டேய்! இது என் வீட்டுக் கல்யாணம். நீ அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கூடப் போ'' என்றார். இந்த ஒரு வார்த்தையில் நான் ரிலாக்ஸ் ஆனேன்.
திருமண மேடையை நெருங்கிய எம்.ஜி.ஆர். என்னிடம், "உங்கம்மா எங்கே?'' என்று கேட்டார். நான் பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் இருந்த அம்மாவிடம் அழைத்துப்போனேன். அம்மாவை பார்த்து "வணக்கம்மா'' என்று கைகூப்பினார். அம்மா எழுந்து பதிலுக்கு கைகூப்ப, ஒட்டுமொத்த கூட்டமும் அம்மாவுடன் சேர்ந்து எழுந்து எம்.ஜி.ஆருக்கு வணக்கம் செய்தார்கள். இந்த வகையில் எம்.ஜி.ஆர். சாரால் என் தாய்க்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது.
திருமணம் நல்லபடியாக முடிந்து முதல்வர் சென்னை புறப்பட இருந்தார். விமான நிலையத்துக்கு சென்று அவரை வழியனுப்பினேன்.
சிவாஜி சாருடன் நான் நடித்த "ஜல்லிக்கட்டு'' பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், "உனக்கு ஏதாவது வேண்டுமா?'' என்று கேட்டார்.
நான், "வேணாங்க! எந்தவித அப்பாயின்மெண்ட்டும் இல்லாம உங்களை வந்து பார்த்துப் போக முடியுதே! இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?'' என்றேன்.
"நான் உனக்கு ஏதாவது பண்ணணுமா?'' என்று மறுபடியும் கேட்டார். இதற்கும் "வேண்டாம்'' என்றேன்.
"எதையாவது இப்ப நீ என்கிட்ட கேளு'' என்றார், உறுதியான குரலில்.
அவர் கொடுக்க நினைப்பதும் நான் தவிர்ப்பதுமாய் ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்போது எதையாவது கேட்டே ஆக வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டு விட்டார்.
எனவே, "நீங்க உடற்பயிற்சி பண்ணுகிற கர்லாக்கட்டை வேண்டும்'' என்றேன்.
நான் இப்படிக் கேட்டதும் தலையில் அடித்து சிரித்தார். உடற்பயிற்சியின் போது அவர் பயன்படுத்தி வந்த கர்லாக் கட்டையை எனக்கு வழங்கினார். இப்போதும் அவர் தந்த கர்லாக் கட்டையைக் கொண்டுதான் பயிற்சி செய்து வருகிறேன்.
1987 டிசம்பர் 5-ந் தேதி "ஜல்லிக்கட்டு'' படத்தின் நூறாவது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. படத்தின் விழாவுக்கு முதலில் வருவதாகச் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்த நிலையில், நிகழ்ச்சி நாளன்று `வரவில்லை' என்பதாக தகவல் அனுப்பி விட்டார். தோட்டத்தில் இருந்து வந்த போன் இந்த தகவலை உறுதி செய்ததும் அதிர்ந்துபோய் விட்டேன்.
இப்போது போல் அப்போது செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று. அவர் வரவில்லை என்று சொன்னாலும் அவரை போய் பார்த்து அதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.
ஆனால் அவர் எப்படிப்பட்டவர்? எங்கே நான் போய் அவரை சந்தித்து மனதை மாற்றி விடுவேனோ என்று யோசித்தவர், மறுபடியும் வீட்டுக்கு போனில் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறார். "முதல்வர் வரவில்லை என்பதற்காக, அவரை பார்க்க சத்யராஜ் வரவேண்டாம்'' என்பதுதான் அந்த தகவல்.
ஆனால் வீட்டில் நான் ஏற்கனவே சொல்லி வைத்தபடி, "அவர் அப்பவே உங்களை பார்க்க வர்றதா சொல்லிட்டுப் போயிட்டாரே'' என்று சொல்லி விட்டார்கள்.
நான் தோட்டம் போயிருந்தபோது என் வருகை தெரிவிக்கப்பட்டதும், மாடியில் இருந்த அவரது தனியறைக்கு அழைத்துப் போனார்கள். எம்.ஜி.ஆர். சட்டை, லுங்கியில் 10 நாள் ஷேவ் பண்ணாத முகமாய் தெரிந்தார். அவருடன் 5 அதிகாரிகள் இருந்தார்கள். பக்கத்தில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்ததும் அவருக்கிருந்த வேலைப்பளுவும் தெரிந்தது; அவரது உடல் சோர்வும் புரிந்தது. என்னைப் பார்த்ததும், "இன்னிக்கு மழை வர்ற மாதிரி இருக்குல்ல!'' என்றார்.
நான் என்ன பதில் சொல்வது? விழாவை தவிர்க்கப் பார்க்கிறார் என்பது புரிந்தது. "ஆமாண்ணே'' என்றேன்.
இதற்குள் அவருக்கு பால் வருகிறது. எனக்கும் வருகிறது. சாப்பிடும்போது, "நான் வரலைன்னா வருத்தப்படுவியா?'' என்று கேட்டார்.
"வருத்தமாகத் தான் இருக்கும். ஆனாலும் நாங்களே நடத்திக்கிறோம் அண்ணே!'' என்றேன்.
ஒரு கணம் என்னையே கூர்மையாகப் பார்த்தார். என் ஏமாற்றத்தை முகத்தில் கண்டவர், "உனக்காக வர்றேன்'' என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
சொன்னது போலவே மிகச் சரியாக விழா தொடங்கும் மாலை 6 மணிக்கு காரில் வள்ளுவர் கோட்டத்தில் வந்திறங்கினார். அவரை வரவேற்றபோது, என்னை அருகில் அழைத்தவர் "எப்படி?'' என்றார், உற்சாகமாக அதாவது சொன்னபடி வந்ததற்காக இந்த `எப்படி' என்பது புரிந்து எனக்கும் மகிழ்ச்சி.
இந்த விழாவில் அவருக்கு உற்சாகம் என்றால் அப்படி ஒரு உற்சாகம். சிவாஜியை கட்டிப் பிடித்து முத்தமிட்டார். விருது வாங்க வந்த எம்.என்.நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்றார். "முத்தமா? தர முடியாது. குத்துவேன்'' என்றார், ஜாலியாக.
நம்பியாரோ, "அப்படியென்றால் எனக்கு ஷீல்டு வேண்டாம்'' என்றார்.
இதனால் எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அவரை அழைத்து, ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ஷீல்டை கொடுத்தார்.
நடிகர் திலகம் சிவாஜி பட வெற்றி விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்றார்கள். அதுவே முதலும் கடைசியுமாகி விட்டது. அவர் கலந்து கொண்ட கடைசி சினிமா விழாவும் அதுதான்.
டிசம்பர் 5-ந் தேதி இந்த விழா நடந்தது. அதற்கு 19 நாள் கழித்து, அதாவது டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அவரது பொன்னுடலுக்கு `உப்பு' போடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த `உப்பு' வாய்ப்பு கிடைக்கப் பெற்ற ஒரே நடிகன் நான்தான்.
ஒரு ரசிகனாக அவரை வியந்தவன், நடிகனான போது அவரது நேசத்துக்குரியவனானேன். இப்போதும் என்னுடைய உணர்வுகளில் கலந்து போயிருப்பவர் அவர்''.
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே !
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும் !
ஆசை இல்லா மனிதர் தன்னை
துன்பம் எங்கே நெருங்கும் !
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும் !
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும் !
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை ?
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை ?
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம் !
வானில் நீந்தும் நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும் !
காற்றில் ஏறி பயணம் செய்ய
பாதை அங்கே இருக்கும் !
எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும் !
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும் !
http://i1170.photobucket.com/albums/...ps1aa447e5.jpg