கிருஷ்ணாஜி சார்,
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட நட்சத்திர
இரவில் கலந்து கொள்ள வந்த நடிகர் திலகம்,நெல்லை பூர்ணகலா
திரையரங்கில் நடைபெற்று வந்த உத்தமன் திரைப்பட மாலைக்காட்சிக்கு
வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அன்பு கோபு
Printable View
கிருஷ்ணாஜி சார்,
பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட நட்சத்திர
இரவில் கலந்து கொள்ள வந்த நடிகர் திலகம்,நெல்லை பூர்ணகலா
திரையரங்கில் நடைபெற்று வந்த உத்தமன் திரைப்பட மாலைக்காட்சிக்கு
வந்திருந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அன்பு கோபு
ராஜேஷ் சார்,
அதே போல 'டீச்சரம்மா' திரைப்படத்தில் சுசீலா பாடும் சுகமான பாடல். சிறுவயது முதற்கொண்டே என் நெஞ்சில் நிறைந்த ஒரு பாடல்.
டி.ஆர்.பாப்பாவின் இசையில் 'இசைக்குயில்' பாடுவது.
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
மலர் தூவி மஞ்சம் வைத்து மணம் வீசும் நாடு
மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு.
சங்கம் கண்ட பாண்டிய நாட்டு மங்கை கூந்தல் போலே
பச்சை புல்லின் மேல் வந்து பனி என்னும் பாவை
இச்சை கொண்ட தாய் போலே முத்தம் சிந்தினாளே
சலசலக்கும் அருவியிலே
சங்கீதம் சங்கீதம்
தாய் விரித்த மடியினிலே
தழுவிச் செல்லும் சந்தோஷம்
'சந்தோஷம்... சந்தோஷம்... சந்தோஷம்'
என்று மூன்று முறை அவர் பாடும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. குரல் அமுதத்திலும் அமுதம்.
இரவில் கேட்க நிறைவான மன சாந்தி
http://www.youtube.com/watch?feature...&v=KCdFi_bKgxk
டீச்சரம்மாவின் மற்ற பாடல்கள் இந்த பாடலை கொஞ்சம் இருட்டடித்துவிட்டது இருந்தாலும் நீங்கள் தேடி தேடி தருவது மனதுக்கு என்னே இன்பம்..
நன்றி வாசு ஜி. ஆம் இந்த பாடல் அற்புதம், குரல் அற்புதம் எல்லாமே அற்புதம்
ரமலான் பெருநாள் சிறப்புப் பாடல்
ஆதி கடவுள் ஒன்றேதான்
இதில் உயர்வு தாழ்வு கிடையாது.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fG42xgPoRqg
வானுக்குத் தந்தை எவனோ
மண்ணுக்கு மூலம் எவனோ
யாவுக்கும் அவனே எல்லை
அவனுக்கும் தந்தை இல்லை
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்
அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்
http://www.youtube.com/watch?v=DsdH9WR0Ub0&feature=player_detailpage
இன்றைய ஸ்பெஷல் (41)
அனைவருக்கும் ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
பொதுவாக பாவ மன்னிப்பு, சிரித்து வாழ வேண்டும், கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன, முகம்மது பின் துக்ளக், அணையா விளக்கு படங்களில் இருந்துதான் ரம்ஜான் பண்டிகைக்குப் பாடல்கள் எடுப்போம்.
http://i1087.photobucket.com/albums/.../naayakame.jpg
ஆனால் இன்று வேறு ஒரு படத்திலிருந்து முற்றிலும் நாம் மறந்த பாடலை பார்த்து, கேட்டு நபியின் ஆசி பெறுவோம்.
இன்றைய ஸ்பெஷலில் நபி நாயகத்தின் அருள் வேண்டும் அற்புதப் பாட்டு
இந்து முஸ்லீம் ஒற்றுமையை வேண்டும் கண்ணியமான பாட்டு
மெய் சிலிர்க்க வைக்கும் மறக்கவொண்ணா பாட்டு.
அப்போதே விஸ்வநாதன் ராமமூர்த்தியின் விஸ்வரூப பாட்டு
தஞ்சை ராமையாதாஸ் அவர்களின் மத நல்லிணக்கப் பாட்டு
எஸ்.சி.கிருஷ்ணன் (படத்தில் என்.சி கிருஷ்ணன் என்று தவறாக டைட்டிலில் போடுவார்கள்) அவர்கள் தம் இளங்குரலில் நாகூர் ஹனிபா,கோரஸ் கூட்டணியுடன் இணைந்து உச்சஸ்தாயில் ஒலிக்கும் உன்னதப் பாட்டு
என் இனிய முஸ்லீம் சகோதரர்களுக்கு நான் ரமலான் வாழ்த்துக்களுடன் அளிக்கும் வித்தியாசமான பாட்டு.
http://upload.wikimedia.org/wikipedi...lebagavali.jpg
ஆர்.ஆர்.பிச்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி' படத்தின் அற்புத பாட்டு.
நம் நாடி நரம்புகளெல்லாம் புகுந்து இனம் புரியா உணர்வைத் தோற்றுவிக்கும் என்றும் தோற்காத பாட்டு.
http://i1087.photobucket.com/albums/...31355007/2.jpg
ஜெயமே பெறவே
ஜகமே புகழவே
நாயகமே! நபி நாயகமே!
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
நாடாளும் மன்னர் நீடூடி வாழ
நலமே அருள் நபி நாயகமே
நாடாளும் மன்னர் நீடூடி வாழ
நலமே அருள் நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
இணையில்லாத எங்கள் பாதுஷா
பிறந்த இன்ப நாளிலே நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
இந்து முஸ்லீம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே!
நாயகமே! நபி நாயகமே!
நலமே அருள் நபி நாயகமே
அறியாமை இருள் நீங்கி இன்ப ஒளி
அடைய வேண்டும் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
அன்பின் இதயமே காணிக்கை செய்தோம்
அருள்தாரும் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
நலமே அருள் நபி நாயகமே
நாயகமே! நபி நாயகமே!
நாயகமே! நபி நாயகமே!
அல்லாஹூ அக்பர் அல்லாஹ்
https://www.youtube.com/watch?v=1QK9...ba963zgpVXCWhV
கூடுதல் தகவல்களுக்கு நன்றி கோபு சார்
இந்த நட்சத்ர இரவு மேலும் பல நமது நெல்லை தகவல்கள் உங்கள் மூலமாக தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன்.
பூர்ணகல உத்தமன் மறக்கமுடியாத அனுபவம் .
படம் 51வது நாள் இறுதி நாள் என நினைவு
அன்று இரவு காட்சி 'தேவன் வந்தாண்டி ஒரு தீபம் கொண்டாடிகாதல் கொண்டானடி ' பாடல் ரசிகர்கள் once மோர் கேட்டு திரை அரங்கு operator
அதை மீண்டும் ஒளி பரப்பி lovely experience
பொங்கும் பூம்புனல்
மிக அபூர்வமாக ஒரு பாடல்
தண்ணீர் தண்ணீர் திரைப்படத்திலிருந்து மானத்திலே மீனிருக்க.. என்ற பாடல்..
இப்படத்தில் மேகம் கருக்குதடி பாடல் மிகவும் பிரபலம். அதே போல் மற்ற பாடல்கலிலும் மெல்லிசை மன்னரின் புலமையும் திறமையும் நிறைந்திருக்கும்.
இப்பாடல் மறக்க முடியாத பாடலாகும்.
http://www.youtube.com/watch?v=NLBrluuwU2Q
டீச்சரம்மாவின் கண்ணிய பாடகியின் இனிய பாடலை நினைவு கூர்ந்ததற்கு நன்றி வாசு சார்
அதே போல் நீ ஒரு மகாராணி 'பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும்'
எனக்கு மிகவும் பிடித்த சுசீலாவின் பாடல்களில் ஒன்று .சங்கர் கணேஷ் அவர்களின் ஒரு நல்ல இசைஅமைப்பு கோர்வை உள்ள பாடல் விடுதலை படத்தில் சந்திரபோஸ் இசை அமைப்பில் வந்த 'ராஜாவே ராஜா நீ தானே ராஜா' பாடல் கொஞ்சம் இந்த 'பல்லாண்டு காலம் நீ வாழ வேண்டும் ' பாடலை ஒத்து இருக்கும் என்ற நினைவு
நினைவு கூர்ந்த ராஜேஷ் அவர்களக்கும் வாசு சார் அவர்களுக்கும் நன்றி
தண்ணீர் தண்ணீர் மிக அருமையான பாடலை நினைவு படுத்தி உள்ளீர்கள்
அருந்ததி விடுகதை போட்டு ஒரு பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
அது இந்த படமா அல்லது அச்சமில்லை அச்சமில்லை யா ?
எனக்கு அடிகடி இந்த குழப்பம் ஏற்படும் மன்னிக்கவும்
டியர் கிருஷ்ணாஜி,
'புதிரு போட வந்தேனே பொட்டப்புள்ளே' என்ற அந்தப்பாட்டு அச்சமில்லை அச்சமில்லை படத்தில் வி.எஸ்.நரசிம்மன் இசையில் வந்தது.
மகா போர் பாட்டு.
கள்ளக்குரல் பாடகி எஸ்.ஜானகி ஓவராக அலட்டிக்கொண்ட காலகட்டத்தில் வந்த பாடல். கேட்கும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படும்....
டியர் கோபு சார்,
நடிகர்திலகம் பூர்ணகலா தியேட்டருக்கு வந்திருக்கலாம். ஆனால் அது 'உத்தமன்' படத்துக்குத்தானா?. ஏனென்றால், உத்தமன் வெளியானது 1976 மே மாதம். எம்,ஜி,ஆர். முதல்வரானது அதற்கு ஒரு வருடம் கழித்து. விழா நடந்தது அவர் முதல்வராகி சில மாதங்கள் கழித்து. கிருஷ்ணாஜி சொன்னதுபோல 1977-78 காலகட்டத்தில்.
டியர் வாசு சார்,
நீயும் நானும் படத்தில் ஈஸ்வரி பாடியிருந்த 'ஊஞ்சல் கட்டி ஆடட்டுமா உருவைக்கொஞ்சம் மாற்றட்டுமா' பாடல் அட்டகாசமான ஒன்று. அபூர்வங்களை தேடித்தேடி கொண்டுவந்து கொட்டுகிறீர்கள்.
சிலருக்கு மறந்திருக்கும் பாடல், பலருக்கு தெரியாதிருக்கும் பாடல். மக்கள் மத்தியில் பிரபலமாகாத காரணம் மீடியாக்கள் மட்டுமல்ல. பாடிய பாடகியும்தான். பின்னே?. இதையெல்லாம் பிரபலப்படுத்த வேண்டும் என்று ரசிகரான உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தில் ஒரு சதவீதம்கூட பாடியவருக்கு இல்லையே.
அப்படி இருந்திருந்தால், கையில் மைக் கிடைக்கும்போதெல்லாம் "காதோடுதான் நான் பாடுவேன்" மட்டுமே பாடிக்கொண்டிருக்க தோணுமா?...
கார்த்திக் சார்
மிக்க நன்றி
எனக்கு எப்போதும் தண்ணீர் தண்ணீர் படத்திற்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்திற்கும் ஒரு குழப்பம் உண்டு
இரண்டுமே எங்கள் நெல்லையை அடிப்படையாக கொண்ட கதை
அதனால் தான் இந்த கேள்வி எழுந்தது .
மீண்டும் ஒரு முறை நன்றி
கார்த்திக் சார்
உங்களை போன்றே எனக்கும் இந்த சந்தேகம் தோன்றியது திரு கோபு அவர்களின் பதில் கண்டு . இருந்தாலும் வருஷத்தை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை . ஆனால் அந்த நட்சத்ர இரவுக்கு மக்கள் திலகம் வந்த நினைவு உண்டு .
என்னிடம் ஆவணம் எதுவும் இல்லை இதை உறுதி செய்வதற்கு
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷல் தொடரில் 'ரமலான் சிறப்புப் பாடலாக' நீங்கள் அளித்த 'நாயகமே நபி நாயகமே நலமே அருள் நபி நாயகமே' பாடல் அருமையான ரமலான் பிரியாணி. சுவைத்து மகிழ்ந்தோம். இப்பாடல் நமது மீடியாக்களால் ரமலான், பக்ரீத், மிலாடி நபி, மொகரம் கொண்டாட்டங்களின்போது தேடிஎடுத்து ஒளிபரப்பப்படும்.
இப்படத்தை (குலேபகாவலி) படத்தை நான் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அம்மாபட்டினம் என்ற ஊரில் ஒரு நண்பனின் திருமணத்துக்கு சென்றிருந்தோம். மறுநாள் காலை திருமணம், முதல்நாள் மாலையே சென்றுவிட்டோம் (சென்னையிலிருந்து ரயில் வசதி அப்படி) . இரவு பொழுதை கழிக்க என்ன செய்வது என்று யோசித்தபோது, நண்பனின் கஸின் ஒருவர், பக்கத்தில் 'மணமேல்குடி' என்ற ஊரில் டூரிங்க் டாக்கீஸில் படம் பார்க்க அழைத்துச்சென்றார். அந்தப்படம்தான் 'குலேபகாவலி'. நாங்கள் பார்த்தபோது படம் வெளியாகி எப்படியும் 25 வருடம் ஆகியிருக்கலாம்.
ஆகா..., இந்த திரியின்மூலம் எவ்வளவு மலரும் நினைவுகள்...
நான் நடிகர் திலகத்தை தனிமையில் சந்தித்தது நெல்லையில் 9 தடவை
1.1971 தேர்தல் கூட்டத்திற்கு நடிகர் திலகம் அவர்கள் நெல்லைக்கு வந்தபோது நடிகர் திலகத்தை வரவேற்று பின் நடிகர் திலகத்திற்கு யானை மாலை போட்ட நிகழ்ச்சி (இதன் போது சில மன கசப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்தது இப்போது அது எல்லாம் வேண்டாம் )
2.1971-72 கால கட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பிறகு நெல்லை ஜங்ஷன் இல் உள்ள ஹிந்து ஹை ஸ்கூல் மைதானத்தில் காங்கிரஸ் சிவாஜி மன்ற மாநாடு நிகழ்ச்சி என்று நினவு - 2 ரூபாய் அனுமதி சீட்டு என் தாயாருடன் சந்தித்தேன்
3.மன்னவன் வந்தானடி - மணிமுத்தார் அணை/மாஞ்சோலை யில் 'காதல் ராஜ்யம் எனது ' பாடல் காட்சியின் படபிடிப்பின் போது 2 தினங்கள் அவர் உடன் தங்கி இருந்தோம்
4.தங்கபதக்கம் 100 வது நாள் விழா நெல்லை சென்ட்ரல் திரை அரங்கு மாலை காட்சிக்கு நடிகர் திலகம் அவர்கள் வந்து அவர்களை நாங்கள் எல்லாம் பூ தூவி வரவேற்றோம் . திரு நவநீதன் என்பவர் நெல்லை மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் ஆக இருந்தார் .
6. தூத்துக்குடியில் ஒரு திருமணத்திற்கு 1976-77 அல்லது 77-78 கால கட்டம் என்று நினைவு . நாம் பிறந்த மண் திரைப்படம் வெளியாகி சரியாக போகாத போது நாங்கள் எல்லாம் அவரை சந்திக்க சிறப்பு பேருந்து ஒன்றை அமைத்து கொண்டு சென்றோம்.அப்போது அவர் கூறியது இன்னும் நினைவில் உண்டு 'சுந்தரத்திடம் (விஎட்னாம் வீடு) சொன்னேன் இந்த படம் இந்த கால கட்டத்திற்கு சரி வராது என்று கேட்கவில்லை'
7.1977 அண்ணா திராவிட முன்னெற்ற கழகம் இந்திரா காங்கிரஸ் கூட்டணீ நெல்லை வாகையடி முக்கு தேர்தல் பிரசார கூட்டம் ' நான் ஒரு இலை அண்ணன் mgr ஒரு இலை '
1978-80 கால கட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் சிவாஜி மன்ற ஊடல் ஆரம்பித்த .சென்னையில் புரசை குமரன் தாக்கப்பட்ட நிகழ்வு எங்களில் சிலருக்கு அச்சத்தை தோற்றுவித்து உடனே ஒதுங்கி விட்டோம்
8 ஆண்டுகள் நடிகர் திலகம் திரைப்படம் மட்டுமே பார்ப்பது கட்சி நிகழ்வுக்கு எல்லாம் செல்லாமல்
8..பின்னர் 1987-88 தமிழக முன்னெற்ற முன்னணி உதயம் ஆன பின் நெல்லை தச்சநல்லூர் என்ற இடத்திலும் பின் நெல்லை டவுன் வாகையடி முக்கு பொது கூட்டத்திலும்
9 . திரு RSK துரை என்று ஒருவர அம்பாசமுத்திரம் தேர்தலில் MLA ஆக போட்டி இட்டார் தமிழக முன்னெற்ற முன்னணி சார்பாக .அவரது திருமணத்திற்கு நடிகர் திலகம் வருகை தந்த போது
10. 1996-97 கால கட்டத்தில் சென்னைக்கு வந்த பிறகு நிறைய தடவை அவர் கலந்து கொண்ட கூட்டம் எதுவானாலும் சென்ற நினைவு . ஆனால் ஒரு பார்வையாளனாக வெகு தொலைவில் நின்று
நடிகர் திலகம் நெல்லை வருகை எனக்குள் தோற்றுவித்த மலரும் நினைவுகள் . இது இந்த திரிக்கு சம்பந்தம் இல்லை என்றால் திரு வாசு சார் அவர்களை நீக்கி விடுமாறு கேட்டு கொள்கிறேன்
இனிய நண்பர் திரு வாசு சார்
இனிய நண்பர் திரு சி .எஸ். குமார் மூலம் சமீபத்தில் 1963 பொங்கல் அன்று வெளியான சினி டைரி கிடைத்தது . சில அருமையான தகவல்கள் இருந்தது . நண்பர்கள் பார்வைக்கு இங்கு பதிவிடுகிறேன் மதுர கீதத்திற்கும் இந்த
பழைய ஆவணத்திற்கும் சம்பந்தம் இல்லை .
கிருஷ்ணா சார் - உங்களூர் தகவல் உண்டு .
கார்த்திக் சார் - உங்கள் அபிமான அண்ணியின் பொங்கல் வாழ்த்தும் உண்டு .
பழைய அரங்குகள் பற்றிய இருக்கைகள் - வசூல் நிலவரமும் உண்டு .
http://i58.tinypic.com/2vxnev9.jpghttp://i58.tinypic.com/juess1.jpg
unreleased movies
http://i61.tinypic.com/302nh1k.jpg
நன்றி வினோத் சார்,
அபூர்வ ஆவணப் பதிவுகளை அளிப்பதில் எப்போதுமே வல்லவர் நீங்கள். இப்போதும் அப்படியே.
அண்ணியின் பொங்கல் வாழ்த்துப்பதிவு சூப்பர். அண்ணியின் படங்கள் அப்போது பெருவெற்றியாகி உச்சத்தில் இருந்த நேரம் அது...
1962 ரிப்போர்ட் பிரமாதம்.நன்றி எஸ்.வீ. 9.9.1961 இல் வெளியாகி 21.12.1961 அன்று நூறு நாள் கண்ட பாலும் பழமும் படமும் ,1962 வருட முடிவில் வெளியாகி ,1963 பிப்ரவரி மாதம் நூறு நாள் கண்ட ஆலயமணியும் விட பட்டது சரி.(1962 இல் நூறு நாள் கண்ட லிஸ்டில்.) பார்த்தால் பசி தீரும் எப்படி விட பட்டது? சென்னையில் மட்டும் நூறு நாள் லிஸ்டா?
எஸ்வி சார்
மிக அற்புதமான அபூர்வமான பதிவு உங்கள் ஆவண பதிவு
நெல்லையில் 5 திரை அரங்குகள் மற்றும் சென்னை திரை அரங்குகள் பற்றி குறிப்பிட்டு உள்ளது மிக்க மகிழ்ச்சி
தொடர வேண்டும் உங்கள் பங்களிப்பு
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
Mr. Vasudevan
I am keenly watching this thread for all of your enjoyable description of every song, most of them are very rare, but excellent in quality.
The valuable efforts of yours and fellow hubbers Mr. Krishna, Mr. Rajesh, Mr. esvee, Mr. Karthik, Mr. Raghavndiran, Mr. Madhu and Mr. Gopal are very very nice and appreciable.
Your 'today special' songs are very very nice. Now I am learning more and more about old hidden songs.
Thanks to all and continue with same spirit.
stl
கிருஷ்ணா சார்,
நடிகர் திலகத்தை நீங்கள் நெல்லையில் தனிமையில் சந்தித்த விவரங்களை எழுதி என் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள். அருமை.
எனக்கு அதில் நிறைய அனுபவம் உண்டு. சமயம் வாய்க்கும் போது கண்டிப்பாக புகைப்படங்களுடன் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
கிருஷ்ணா சார்,
'புதிரு போட போறாளாம் பொட்டப் புள்ள' ...' அச்சமில்லை அச்சமில்லை' படத்தில் அகல்யா என்ற நடிகை பாடுவதாக வரும். திருநெல்வேலி ஆள் முழிக்கிறாராம். நான் சொல்லல. ஜானகி சொல்றாங்க
ஆனா நான் சொல்றேன்.
அடி என்ன வேண்ணா கேளு
கிருஷ்ணா திருநெல்வேலி ஆளு.
ராகவேந்திரன் சார்,
சபாஷ்! கையைக் கொடுங்கள். மிக அபூர்வமான ஒரு பாடல். நன்றாக நினைவிருக்கிறது தண்ணீர் தண்ணீர் வந்த புதிதில் 'மானத்திலே மீன் இருக்க' பாடலை அப்போதெல்லாம் என் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். பின் காலப்போக்கில் கொஞ்சம் மறந்து விட்டது. இன்று நீங்கள் பதித்திருந்ததைப் பார்த்ததும் என்னையுமறியாமல் பாடலின் வரிகளை முன்கூட்டியே என் வாய்முணுமுணுக்க ஆரம்பித்து விட்டது. நெல்லைச் சீமை மொழிதான் எவ்வளவு இனிமை!
என்ன சொல்லுங்கள் ராகவேந்திரன் சார். நீங்கள் நீங்கள்தான். உங்கள் புண்ணியத்தில் மிக நீண்ட நாட்கள் சென்று இப்பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். அருந்ததியும் டாப்.
வினோத் சார்,
மீண்டும் ஒரு முறை 'ஆவண அரசர்' என்று நிரூபித்து இருக்கிறீர்கள். தமிழக தியேட்டர்கள் விவரங்கள் உள்ள அரிய ஆவணம் ஜோராக இருக்கிறது. 62-இல் வெளியான படங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ஆவணமும் நன்று. நடிகர் திலகம் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்ட செய்தியைப் படிக்கும் போது போது (பல தடவை பல பத்திர்க்கைகளில் படித்திருந்தாலும் கூட) ஒரே நேரத்தில் சந்தோஷமும், துக்கமும் பெருகுவதைத் தடுக்க முடியவில்லை.
தேவிகா அவர்களின் பொங்கல் வாழ்த்தும், அவருடைய புகைப்படமும் ஓஹோ!
அருமையான ஆவணங்களுக்கு நன்றி!
வினோத் சார்,
அற்புத, அரிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள்.. மீண்டும் ஒருமுறை 'ஆவண அரசர்' என்பதை நிரூபணம் செய்துள்ளீர்கள். தேவிகா அவர்களின் பொங்கல் வாழ்த்தும், அவர் புகைப்படமும் சூப்பர்.
நடிகர் திலகத்திற்கு கிடைத்த அமெரிக்க கௌரவம் குறித்த பதிவு பற்றி படிக்கும் போது (பல பத்திரிகைகளில் பல தடவைகள் படித்திருந்தாலும் கூட) ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், துக்கமும் மனதில் ஏற்படுவதை உணரமுடிகிறது.
தமிழக தியேட்டர் விவரங்கள் பற்றிய ஆவண விவரங்கள் ஒரு அரிய பொக்கிஷம்.
நன்றி வினோத் சார்.