http://i62.tinypic.com/v4xt0p.jpg
Printable View
அன்பு நண்பர் ராகவேந்தர் அவர்களுக்கு என் சார்பிலும் மக்கள்திலகம் எம்ஜியார் திரியின் பக்தர்களின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
http://i60.tinypic.com/vhrcle.jpg
http://i60.tinypic.com/2roqi6t.jpg
DEAR FRIENDS,
HAPPY TO MEET ALL OF YOU AFTER A LONG GAP IN THIS THREAD !
MANY MORE HAPPY RETURNS OF THE DAY RAGHAVENDRA SIR !!
CONGRATS FOR THE NTFANS PROGRAMME WITH STUPENDOUS SUCCESS OF RELEASE OF BOOK ON NADIGAR THILAGAM's CHARITY GESTURES & SCREENING OF AVAR DHAAN MANIDHAR !!!!
VERY VERY HAPPY THAT NEYVELIYAAR IS BACK IN ACTION WITH HIS ACTION SERIES....!
CONGRATS TO GOPAL SIR's SON ACHIEVEMENT !!
CONGRATULATION TO KOVAI SENTHIL SIR for his NEW SHOWROOM @ COIMBATORE !!!
At this Juncture, am happy to share to all of you the following :
FROM 30th MAY 2015, TRICHY GAIETY SCREENS - DAILY 4 SHOWS - NADIGAR THILAGAM's DOUBLE ACTION DHAMAKKA " ENNAI POL ORUVAN"
http://i501.photobucket.com/albums/e...psvvtorep7.jpg
ENDRUM UNGAL ANAIVARIN
RKS
Dear Raghavender Sir,
Wish you many more happy returns of the day (adhukkum Thalaivar pattu dhaen!)
Also, hearty congratulations of great feat of Nadigarthilagam.com
Regards,
R. Parthasarathy
காவிரியை கமண்டலத்தில் அடக்கிய குறுமுனி அகத்தியர் போலே, நற்பண்புகளையும் உயர் குணங்களையும் தன்னுள் அடக்கியிருக்கும் பண்பாளப் பெருந்தகை திரு.ராகவேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
குழந்தை வளர்ப்பில் நடிகர்திலகம் ...அம்மையப்பராக !!
Quote:
குழந்தை வளர்ப்பில் வல்லவர்கள் பொதுவாக பெண்டிரே !
ஆனால் தாயற்ற குழந்தைகளுக்கு ?...தாயும் தந்தையுமாகி குழந்தைகளை நடிகர்திலகம் பேணும் அழகைக் காண்போமே!
அழும் குழந்தையும் ஆட்கொள்ளப் படுமே.... பூவாய் மலர்ந்து புன்னகைக்குமே நடிப்புத் தந்தையின் வாஞ்சையான பிணைப்பிலே !
https://www.youtube.com/watch?v=OlE0EAbVZcY
பெற்றவர் யாராயினும் உற்றவன் நானே !
பாடல் காட்சியில் சிறுசிறு சுறுசுறு விறுவிறு குறுகுறு நடன அசைவுகளில் நடிகர்திலகத்தின் ஆளுமை!!
https://www.youtube.com/watch?v=C4I9JefCoRU
செல்வத்துள் செல்வம் மழலை செல்வமே !
இப்பாடல் காட்சியில் க்ளோசப் முகபாவங்கள் நூறு சதம் பொருத்தமான பாடலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப உதட்டசைவுகள் உடல்மொழி.....சிலிர்ப்பே!
https://www.youtube.com/watch?v=jcfAofXtCVM
அந்த இறைவன் ....அவனும் அன்னை இல்லாதவன்! அவனிடத்தில் நானிருப்பேன் குழந்தைகளே உங்களை மகிழ்விக்க!
https://www.youtube.com/watch?v=jtOxjwwp-h0
பிறந்தநாள் வாழ்த்துக்களில் தங்கள் அன்பைப் பொழிந்த அன்பு உள்ளங்கள்,
நெய்வேலி வாசுதேவன், பெங்களூர் பாலகிருஷ்ணன் சுந்தரபாண்டியன், சித்தூர் வாசுதேவன், சந்திரசேகர், முத்தையன் அம்மு, ரவிகிரண் சூர்யா,
பார்த்தசாரதி, கலைவேந்தன், வரதகுமார் சுந்தரம், ரவிச்சந்திரன், எம்ஜிஆர் ரூப் கண்ணன், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறையருளால் தாங்கள் அனைவரும் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்.
Guest Role of Inanimate Objects in NT movies!
Part 1 : Staircase Steps!
நடிகர்திலகத்தின் பாதப் பதிவில் மெய்மறந்த படிக்கட்டுகள்
நடிப்புப் புரட்சியின் சாட்சிகள் !
https://www.youtube.com/watch?v=JK3XMj44Vv8Quote:
திரைக்கு வெளியேயிருந்து நடிகமன்னரின் நடிப்பாற்றலில் சொக்கும் போது நமது உணர்வு உந்துதல்களை அலப்பரையாக வெளிப்படுத்தி மகிழ்கிறோம்
ஆனால் திரைக்குள்ளேயிருந்து அவர் பொற்பாதங்களைத் தாங்கி அவர் நடிப்பின் கணம் சுமக்கும் படிக்கட்டுகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல் மெய்மறந்து போகின்றனவோ ?!
ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்வின் உருவகமே நாம் தினந்தோறும் ஏறி இறங்கும் படிக்கட்டுகள்
அந்தப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி தனது காந்த ஈர்ப்பான உடல்மொழி முகபாவங்கள் மூலம் நம்மை எப்படிக் கட்டிப் போடுகிறார் நடிகர்திலகம் !!
https://www.youtube.com/watch?v=kzqpT0JK6-g
https://www.youtube.com/watch?v=wGmxDapfl6M
ம் ம் ம் .....கொடுத்து வைத்த படிக்கட்டுகள்....நடிப்பிமயத்தின் பாதம் தாங்கிட!!Quote:
உயர்ந்த மனிதனில் வாணிஸ்ரீ மறைவுக்குப் பின் சௌகார் ஜானகியை மணமுடிக்க ராமதாஸ் வற்புறுத்தும் போது சோகத்துயரை மறைத்துக்கொண்டு தளர்ந்த
நடையுடன் அவர் மாடிப்படிகளில் ஏறும் காட்சி இன்னும் மனத்திரையை விட்டு அகலவில்லை
அவ்வாறே தெய்வமகனில் அப்பா சிவாஜி வயதான பின் பண்டரிபாயை நோக்கி மாடிப்படிகளில் நளினமாக ஒருவிதமான குதூகலம் பொங்க படிப்படியாக இறங்கி வரும் காட்சியும் ....
செந்தில் சார்,
அருமை. விதவிதமான கான்செப்ட்களில் கடவுள். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.
http://i.ytimg.com/vi/utaMgFouiF4/hqdefault.jpghttps://i.ytimg.com/vi/ZC_id4YWEYQ/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/0IneKq_c9Pw/hqdefault.jpg
'தேவகி எங்கே?' என்று கண் இமைப்பதற்குள் மாடி ஏறி, அங்கு அவளைத் தேடி காணாமல், பின் 'சரசர' வென புயலை விட வேகமாக இறங்க வைக்கும் படிக்கட்டுகள். (இவருடைய வேகம் தாளாமல்தான் படிக்கட்டுகள் வளைந்து விட்டனவோ!)
பல வருடங்களுக்குப் பிறகு பிரிந்த தன் மனைவியைப் பார்க்கப் போகும் சந்தோஷத்தில் 'சுமதி! காஷ்மீருக்கு வர்றியா?' என்று உள்ளத்தில் ஆனந்தப் பொங்கலிட்டு படிக்கட்டுகளின் மீது ஏறி இறங்கிக் குதூகலிக்கும் குழந்தை மனநிலை சந்தோஷ 'திரிசூல' ஓட்டம்.
போலி வேடமிட்டிருக்கும் மகனை உண்மை விளங்காமல் சொந்த மகனென்று தெரிந்து, (ஜெய்கணேஷின் இரு கைகளையும் பிடித்து, பாசத்தை பதுக்கி, பலமுடன் ஆட்டி, தட்டிப் பார்த்து பரவசம் காண்பார். பின் அதே போலத் தன் கையைத் தடவிப் பார்த்தும்.) அவன் போன பின்பு 'என் வாரிசு உயிரோடு' என்ற உற்சாகத்தில் படிக்கட்டுகளில் ஏறும் வயதான தந்தையின் வாலிப ஓட்டம்.
'தெய்வ மகனி'ல் பண்டரிபாய் மூத்தவனை கோவிலில் மகனென்று புரியாமல் பார்த்து, இனம் புரியா தாய்மை உணர்ச்சி கொண்டு, அடி வயிறு கலங்கி, உடல் தள்ளாடி வீடு வருகையில் தகப்பன் மாடியில் கோட்டின் கீழ் பட்டனைப் போட்டவாறே கீழே வரும் மனைவிக்கு 'என்ன ஆனதோ தெரியவில்லையே' என்று விறுவிறுவென படிக்கட்டுகளில் கம்பீரமாக இறங்கும் தோரணையை மரித்தாலும் மறக்க இயலாது. (மாடிப்பட்டு இறங்கியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பண்டரிபாயை நோக்கி நடை வேகத்தைக் கூட்டுவார்)
'இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்குக் குயில் இல்லை'
என்று மகளைப் பிரிந்த தகப்பனின் சோகம். படிக்கட்டுகளின் வலதும் இடதுமாக ஓடி கைப்பிடியைப் பிடித்து சாய்ந்து புலம்பும் துயரம்.
மகன் தனக்கெதிராக வாதாடப் போகிறான் என்று அதிர்ந்து, சரக்கு அடித்து விட்டு, கீழே உள்ள செல்லம்மாவை நோக்கி படிக்கட்டுகளில், பக்கவாட்டுகளில் (சைடில்) தள்ளாடி பாடியபடியே, ஆனால் நிமிர்ந்து வீரம் காட்டி வரும் திமிர்த்தனம் கொண்ட கௌரவ பாரிஸ்டர்.
அதே போல கேஸ் பாதகமாகி விட்டது என்று உணர்ந்து தீர்ப்பும் அவ்வளவுதான் என்பதை படிக்கட்டுகளில் பைப் பிடித்தபடி காட்டி, விரக்தியாக அமர்ந்திருக்கும் அம்சம். அப்போதும் திமிர் போகாது. மடிசார் அணிந்திருக்கும் பண்டரிபாயிடம் ("என்னடி இது? டிபிகல் அம்மாமி மாதிரி! என்ன வேஷம்?) நக்கல். (ஆனால் வலுவிழந்ததால் வழக்கமான வலு இருக்காது.) உட்கார்ந்திருக்கும் போஸ் உலக டாலர்களை அள்ளிக் கொடுத்தாலும் அதற்கெல்லாம் ஈடாகாது.
ம்ம்...எவ்வளவோ இருக்கிறது இந்த நடமாடும் (படிக்கட்டுகளில் மட்டுமல்ல... நம் உள்ளக் கட்டிலிலும்தான்) அதிசயத்தைப் பற்றி எழுத. நேரம்தான் இல்லை செந்தில்.
In Nallathoru Kudumbam also where he meets his wife after 25 years at that time when he climbs down from the
steps with a joy in his face as well as with his unique style which is unmatchable.
In Nallathoru Kudumbam also where he meets his wife after 25 years at that time when he climbs down from the
steps with a joy in his face as well as with his unique style which is unmatchable.
வெள்ளை ரோஜவில் இந்த
அட்டகாசமான காட்சி தொடக்கமும்
அதன்பின் ஆரம்பிக்கும்
ஆரவாரமான சண்டைக்காட்சியும் முடிவில்
சாந்தமான முகபாவங்களில் நடிகர்திலகமும்
அற்புதம்
http://i1065.photobucket.com/albums/...psheklosta.jpg
http://i1065.photobucket.com/albums/...psfdnndaxj.jpg
http://i1065.photobucket.com/albums/...pstjom0duj.jpg
http://i1065.photobucket.com/albums/...pszic7qeif.jpg
http://i1065.photobucket.com/albums/...psxadcnqxv.jpg
http://i1065.photobucket.com/albums/...psmvpwttsx.jpg
Dear raghavendra sir,
many many happy returns of the day,may god and nt bless you
Dear vasu sir,
going in full form,kalakkungal
.Quote:
செந்தில் சார்,
அருமை. விதவிதமான கான்செப்ட்களில் கடவுள். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு
by Vasudevan Sir
இதுதான் உங்கள் ஸ்டைலில் அமையும் ஒப்பிட முடியாத முத்திரைப் பதிவு வாசுதேவன் சார் !
எனக்குத் தெரிந்தது ஒரு சின்ன கான்செப்ட் அதை சுற்றி ஒரு தூக்கணாங்குருவிக்கூடு சில பொருத்தமான பதிவுரைகள் மற்றும் வீடியோக்கள் அவ்வளவே !
உங்களது விவரிப்புத் திறன் எனக்கு வர யுகங்கள் போதாது நண்பரே !! ஹேண்ட்ஸ் அப்....நான் சரண்டர்!!
ஊக்கம் தரும் ஆக்கபூர்வமான பாராட்டுதல்களுக்கு நன்றிகள் !!
https://www.youtube.com/watch?v=54HL4BSefHA
தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் இடம் பெறாத இளமைக்காலம் எங்கே என்ற பாடல்.
இளையராஜாவின் பாடல்களை இணையத்தில் இப்போது டவுண்லோடு செய்ய முடியாதநிலையில் இந்த பாடலை சவுண்டு ரெக்கார்டர் மூலம் பதிவு செய்து பின் படத்தில் வரும்வேறுவீடியோபாடலை யூடீயூப் மூலம் பதிவிறக்ககம் செய்து அதை பிக்சர் கிளிப்புகளாக சேர்த்து பின் ஆடயோவைமிக்ஸ் செய்து அதன்பின் யூடியூப்பில்தரவேற்றம் செய்து ....
இப்போது உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும்
https://youtu.be/HLJeCRmZYnY
நடிகர்திலகம் அசத்திய மேற்கத்திய பாணி நடனக் காட்சிகளின் அணிவகுப்பு!
https://www.youtube.com/watch?v=BGH5slqQG60Quote:
ஒரு அமைதியான மனமகிழ் மன்ற இரவு சூழல் மெல்லிய இசை வருடலில் காதல் ஜோடிகள் தம்பதியர் தங்களை மறந்து மிதமான அணைப்பில் ஒரு கை கோர்த்து மறுகை தோளிலிட்டு நாயகர் நெஞ்சில் நாயகி முகம் புதைத்து முறையான ஸ்டெப்களில் சுழன்றாடும் ஆட்ட நகர்வுகளோடு எண்ணப் பரிமாற்றங்களையும் செய்யும் வகையில் அமைந்தவை மேற்கத்திய பாணி நடனங்கள் தமிழ் திரைப்படங்களிலும் கலாசார வேறுபாடுகளின்றி தவறாமல் இவ்வகை நடனங்களும் மேல்தட்டு மக்களின் பொழுதுபோக்காக புகுத்தப் பட்டு ரசிக்கப்படுகின்றன
நடிகர்திலகம் கண்களை உறுத்தாத கம்பீரமான உடையலங்காரங்களில் நாயகியருடன் ஸ்டைலிஷாக நம்மை மகிழ்வித்த நடனக் காட்சிகள் !!
https://www.youtube.com/watch?v=LJtmL7XusaA
https://www.youtube.com/watch?v=7KqCOT4Qito
https://www.youtube.com/watch?v=XuxO6eafsiY
Bonus from western Bond movie
https://www.youtube.com/watch?v=vgTHZhNqOAc
https://www.youtube.com/watch?v=sefBHwijZng
டியர் செந்தில் (பெங்களூரு),
தங்களின் வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
சிவாஜி செந்தில் சார்
விதவிதமான கண்ணோட்டத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பினை அலசும் தங்கள் பாணி சூப்பர்...மாடிப் படிக்கட்டுகள், மேற்கத்திய நடனம், குழந்தை வளர்ப்பு என்று எத்தனை விதங்களில் அணுக முடியுமோ அத்தனை விதங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பினை ஆய்ந்து வருகிறீர்கள்.
தங்களின் வித்தியாசமான சிந்தனை தொடரட்டும்.. அதன் மூலம் நம் இதய தெய்வத்தின் பல்வேறு பரிமாணங்களில் அவர் எடுத்த அவதாரங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும்.
கோவை செந்தில்
தாய்க்கு ஒரு தாலாட்டு ..
தங்களுடைய காணொளி அருமை. இதைப் போன்று திரையில் இடம் பெறாத நடிகர் திலகத்தின் பாடல்களை மேலும் தாங்கள் தொகுத்து வழங்க வேண்டும் என்பது இங்குள்ள அனைவரின் விருப்பமாகவும் இருக்கும்.
கர்ணன் படத்தில் மகாராஜன் உலகை ஆளலாம் பாடல், ஞாயிறும் திங்களும் பட்டினும் மெல்லிய பெண்ணிது,, இவையெல்லாம் வீடியோக்களின் தொகுப்பாக இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
வாசு சார்
பாலும் பழமும், பார் மகளே பார், என தங்களுடைய பதில் பதிவுகளிலும் கூட தங்களின் அபார உழைப்பு பிரமிப்பூட்டுகிறது. தங்களைப் போல் பதில் பதிவெழுத நானும் பழக வேண்டும்.
பாராட்டுக்கள்.
சுந்தரபாண்டியன் சார்
மருத்துவர் சாந்தாராம் பாலும் பழமும் படத்தைப் பற்றி எழுதியதை மீள்பதிவிட்டு அவருடைய எழுத்தின் சிறப்பை இங்குள்ளோருக்கு எடுத்துரைத்த விதம் அருமை. அவரும் இங்கு வந்து பங்கு கொள்ள வேண்டும் என எல்லோரோடும் நானும் இங்கே விரும்புகிறேன்.
வீயார் சார்.
டாக்டர் சாந்தாராம் அவர்களை சமீபத்தில் நேரில் சந்தித்து அவன் தான் மனிதன் விழாவுக்கும் அழைத்தேன் ... வருவதாக சொன்னார்..
அவரை இங்கு கொண்டு வந்து சேர்க்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறேன்... நன்றி
'அக்னி புத்ருடு' (1987)
https://i1.ytimg.com/vi/h_TWmSyA-f8/hqdefault.jpg
ஏழைகளின் ஏந்தலாக, புரட்சி வீரன் சைதன்யாவாக நடிகர் திலகம் சில நிமிடத் துளிகளே வந்தாலும் புழுதி பறக்கிறது. ஜமீந்தார் (சத்யநாராயணா) ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டிய அரிசியை லாரியில் கடத்துவதை மலை உச்சியில் இருந்து கண்காணித்து, அலட்சியமாகத் துப்பாக்கி பிடித்தபடி, மூட்டைகளைச் சுட்டு அரிசியை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்வதும், ஜமீந்தார் தன் குடும்பத்தையே நிர்மூலமாக்கி அழித்ததும் கொதித்தெழுந்து ('சிவந்தமண்' மலைப்பாறை காட்சி நினைவுக்கு வரும்) ஆவேசம் கொள்வதும் இந்த சிங்கத்திற்கு புதிதா என்ன? ஆனால் நமக்குப் புதிதாகத்தானே தோன்றும்!
http://i1087.photobucket.com/albums/...31355028/3.jpg
வீண் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் தண்டனை பெறும்போது, ஒன்றுமே அறியாத இளைஞன் காளிதாஸ் (நாகார்ஜுனா) அதே ஜமீன்தாரால் சிறையில் வஞ்சகமாக தள்ளப்பட்டு, போலீஸால் சித்ரவதை செய்யப்படும்போது வாஞ்சையாக அவனிடம் பரிவு காட்டி, அவனை ஆசீர்வதித்து, அவன் "யார் நீங்கள்"" என்று கேட்டதும் 'மனுஷன், மனசுள்ள மனுஷன்' என்று பதிலளித்து, "விந்தையாக இருக்கிறது உங்கள் பேச்சு..நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?" என்றவுடன் ஹிடலர், முசோலினியைக் காரணம் காட்டி படிப்புக்கு விளக்கம் கொடுக்கும் இந்த படிக்காத மேதையை பாருங்கள். (தாடியும் மீசையுமாக ஜெயில் கைதி உடையில் இடுப்பில் கைவைத்து நாகார்ஜுனனிடம் உரையாடும் போது காமெராவின் டாப் ஆங்கிளில் அம்சமாக இருப்பார்.
http://i1087.photobucket.com/albums/...31355027/2.jpg
1987-இல் வெளிவந்த பலரும் காணத் தவறிய 'அக்னி புத்ருடு' தெலுங்குப் படத்தில் 'சைதன்யா' வாக சிறையில் நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சி. பின்னணிக் குரல்தான் இடிக்கிறது. சிம்மத்திற்கு எலி குரல் கொடுத்தது போல. ஆனால் நடிப்பு? வயதானாலும் அதே துடிப்பு. அதே ஸ்டைல். மலையில் துப்பாக்கியுடன் நிற்கும் தோரணை. ஒரு காலை மடக்கி ஒரு காலை நேராக வைத்து குறி பார்க்கும் பழகிய பக்குவம். 25வயது இளைஞன் போல. சத்யநாராயணா மீது கோபம் கொண்டு பாய்கையில் கால்களும், கைகளும் காட்டும் அபார ஸ்டைல்.
மன்றத்தில் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறியவுடன் கொக்கரிப்பு சிரிப்பு. நாகர்ஜுனன் மேல் கருணை வைக்க நீதிபதியிடம் கம்பீரக் கோரிக்கை.
பாயசத்தில் முந்திரிப்பருப்பு போல முக்கியத்துவம். ஆனால் ஒரு சில நிமிடங்களே. கௌரவ ரோல். ஆனால் கம்பீரமானது. தன் ஆத்ம நண்பன் நாகேஸ்வரராவின் அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிப்பிற்காக பங்களித்தது. நிஜமாகவே 'அக்னி'தான் நடிப்பில்.
http://i.ytimg.com/vi/cOgqQn6vfoc/mqdefault.jpg
இதோ அறிமுகக் காட்சி. அன்னபூர்ணா ஸ்டுடியோவே தரவேற்றியிருக்கிறது. பெருமைதானே நமக்கு. கண்டு களியுங்கள்.
https://youtu.be/h_TWmSyA-f8
Guest Role of Inanimate Objects in NT movies!
Part 2 : Mirror Miracles!
நவரச நடிப்பின் உருவ(க)ம் பிரதிபலித்த நிலைக் கண்ணாடிகள் : கண்ணாடி முன்னாடி நடிப்பின் முன்னோடிப் பண்ணாடி!!
வசந்த மாளிகை காவியத்தில் ஹோட்டலில் வாணிஸ்ரீ முன்னிலையில் ராமதாசுடன் போடும் அதிரடி சண்டைக் காட்சியில் பஞ்ச்களுக்கு நடுவே கண்ணாடி முன் அழகு பார்த்து கலைந்த முடியை ஸ்டைலாக ஒதுக்கிவிடும் காட்சி தியேட்டரையே கிடுகிடுக்க வைக்கும் ரசிக அலப்பரைக் காட்சியே !!Quote:
நிலைக்கண்ணாடி நாகரிக மனித வாழ்வியலில் அழகுணர்ச்சிக்கான ஒரு தவிர்க்க முடியாத அங்கமே!
மனித இனத்தவர் மதம் மொழி இனங்களைக் கடந்து ஏதோ ஒரு வகையில் அழகானவர்களே அழகு என்பது தோற்றமும் தோலின் நிறமும் மட்டுமே அலகாகக் கொண்டு கணிக்கப்படுவது பேதமையே!! என்றாலும் குழந்தைகள் முதல் வயோதிகர் வரை 'நாம் அழகாக இரு க்கிறோமா.....?!' என்ற சந்தேகத்தில் (Beauty Conscious) நிலைக்கண்ணாடி முன் நின்று ஒருகணமேனும் அழகு பார்க்காத பெண்டிரோ ஆடவரோ இவ்வுலகில் உளரோ ?
நடிப்பின் முன்னோடியும் கண்ணாடிக்கு முன்னாடி அழகு பார்க்கும் காட்சிகள் ரசனைக்குரியவையே !!!
watch from 17 : 55
https://www.youtube.com/watch?v=m33YNkPGGfw
அழகின்மை காரணமாக குழந்தையிலேயே கைவிடப்பட்ட தெய்வமகன் தனது அருவருப்பான புறமுகத்தின் பிரதிபலிப்பை நிலைக்கண்ணாடியில் நோக்கி 'ச்சே' இதற்காகத்தானா பெற்றோர் என்னை ஒதுக்கிக் கைகழுவினீர்கள்' என்று கழிவிரக்கம் மிக காறி உமிழும் நிலைக்கண்ணாடிக் காட்சியும், மூன்று சிவாஜிகளும் சங்கமிக்கும் உணர்வலைகளின் உச்சகட்டத்தில் தந்தை சிவாஜி தனக்களித்த காசோலையை தம்பிக்கே தந்துவிடுமாறு நிலைக்கண்ணாடி பின்னாடியிருந்து வேண்டும் காட்சியிலும் கண்ணாடியும் நம் கண்களுக்கு ஒரு குணசித்திரமாக காட்சி தருகிறதே!!
நிலைக்கண்ணாடியில் இளையமகனின் கோணங்கித்தனங்களை மனத்துக்குள் ரசித்துக் கொண்டே அப்பா சிவாஜி பண்டரிபாயிடம் கலாய்க்கும் காட்சிகளும் (என்ன...ராஜாவுக்கு ராணி ரோஜா கொடுத்து தாஜா பண்றாங்க?..பையன் காலையிலேயே பணத்துக்கு மணியடிச்சுட்டானா?) ரசிக்கத்தகுந்ததே!!
https://www.youtube.com/watch?v=Sy76CYBBZWk
Raman Eththanai Ramanadi!
விஜயா வீட்டுக்குள் வந்ததும் தலைகால் புரியாமல் NT கண்ணாடியில் அவசர அழகு பார்க்கும் சீன் அள்ளுகிறது!!
https://www.youtube.com/watch?v=bG3d2LGTsLw
https://www.youtube.com/watch?v=wGmxDapfl6MQuote:
Nine reflections of NT in Navaraaththiri...Mirror scene!!
https://www.youtube.com/watch?v=WoMVfvS8rSoQuote:
bonus from Enter the Dragon! the most famous mirror room fight!!
https://www.youtube.com/watch?v=MMBU5gk9HC4Quote:
But ... both these multiple mirror image scenes were adapted from Charlie Chaplin's Circus (Mirror Maze) long time back...1928 !
Gap filler : Double Damaakka on Deivamagan!
Enjoy the song Kaathalikka katruk kollungal both in tamil (1969) and in telugu dubbed Koteeswarudu (1970), as a monotony breaker!!
https://www.youtube.com/watch?v=AD1Ouc1r0zA
Language change...no barrier to enjoy NT's performance!
https://www.youtube.com/watch?v=95ngjcNuSXg
raghavendra sir for ur birthday treat
அவன் ஒரு சரித்திரம் 008.
வணக்கம். வெகு நாட்களுக்கு பிறகு இந்த தொடரை தொடர்கிறேன்.
தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிந்தையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் பலரை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜிகணேசனே.
காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார். சிவாஜியின் மூலமாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம். அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.
பாத்திரங்களை சித்தரிக்கும் தன்மையிலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது. மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும்.
சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - 'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேற அவரோடு உடன் நடிக்கும் மற்ற பாத்திரங்கலின் பங்கும் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். சிவாஜி கணேசனின் பெருந்தன்மை பிறரை நடிக்கவிட்டு தான் அதற்கு எதிர்மறையாற்றுவது. தானே பிரதானமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒரு போதும் எண்ணியது இல்லை.
இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் , சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே. தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.
சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது அவரது தெளிவான வசன உச்சரிப்பிலும் இருந்தது.
இந்த ஆற்றல் அவருக்கு ஓர் அரசியல் பின்புலத்தோடு வந்தது. அண்ணாதுரை, கருணாநிதி தமிழ்நாட்டின் அரசியல் மேடையையும், அரங்கையும், சினிமாவையும், தமது சொற்பொழிவு முறையாலும், எழுத்து முறையாலும் மாற்றிய காலம் அது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம். சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.
சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்றச் சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.
நாடக மரபின் நாயகராக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் சக்கரவர்த்தியானார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது. சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது கலாச்சாரத்தின் ஒரு உருவமாகவே சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.
அவர் மறைவுதான் அவரின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று. தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அன்றும், இன்றும், என்றும் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு. வாழ்க அவரது புகழ், வளர்க அவர் வளர்த்த கலை.
ஜெய்ஹிந்த்!
(சில குறிப்புகள் வலைத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை)
திருவிளையாடல் 50 ஆண்டுகள் நிறைவு
ஒரு திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது என்பது அந்தத் திரைப்படத்தின் மீதான மதிப்பீட்டைக் கூட்டும்தானே! அப்படி என்றைக்கும் தமிழர்கள் நினைத்துப்பார்க்கிற படம்தான் ‘திருவிளையாடல்’.
1965-ம் ஆண்டில் வெளியான புராணப் படமென்றாலும், அதன் திரைமொழி எல்லா மக்களுக்குமானது. ஏ.பி.நாகராஜனின் நாடக பாணியிலான பல படங்களுக்கு மத்தியில் ‘திருவிளையாடல்’ கடவுள்களை இயல்பான மனிதர்களுக்குண்டான குணாதிசயங்களுடன் திரையில் பதிவுசெய்திருந்தது. கோபம், போட்டி, பொறாமை, வாய்ச் சண்டை இவற்றுக்கெல்லாம் கடவுளர்கள் தூரத்துப் பார்வையாளர்கள் மட்டுமே.
அவர்களின் உலகில் இவற்றுக்கெல்லாம் துளியும் இடமில்லை என்ற மக்களின் நினைப்புக்குத், துணைபோகாமல் கடவுளர்களுக்கு இடையிலும் மனிதர்களுக்கு உண்டான சகலவிதமான குணநலன்களும், குணக்கேடுகளும் உண்டு என்று சொல்லும்விதமாகக் காட்சி நகர்வுகளை ஏ.பி.என். பதிவுசெய்திருந்தார் இந்தப் படத்தில். இந்தப் படம் பெரு வெற்றிபெற்றதற்கு ஏ.பி.நாகராஜனின் நீள அகலமான பார்வைதான் அஸ்திவாரம்!
வெற்றி ரகசியம்
பரமசிவன் எப்படியிருப்பார்? அவரது நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் என்றறியாத, அல்லது கற்பனையில் ஒவ்வொருவரும் வடிமைத்து வைத்திருந்த பரமசிவனை சிவாஜி கணேசன் வடிவில் திருவிளையாடலில் பார்த்தவர்களுக்கு அது புது திரை அனுபவமாக அமைந்திருக்கும். மூக்கில் முத்துப் புல்லாக்கு மினுமினுங்க, இடுப்பில் பட்டுக் குஞ்சலம் வைத்த நீண்ட ஜடை தாளம்போட, கிரீடம் ஜொலிக்க வந்த திருவிளையாடல் சாவித்திரியை உயிர்பெற்று வந்த உமையாளாகவே அன்றைய தமிழ் ரசிகன் பார்த்திருப்பான்.
ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை நோக்கிக் குவிகிற ரசிகனின் பார்வைப் புள்ளி, படம் முடியும் வரையில் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இலக்கணம் திருவிளையாடலில் துளியும் இல்லை. அன்றைய நாளில் புகழ்பெற்ற கதாநாயகனாக வலம்வந்த சிவாஜி கணேசன் நடித்திருந்தாலும், உமையாளாக வந்த சாவித்திரி, தருமியாக வந்த நாகேஷ், நக்கீரராக வந்து ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று முழங்கி நேர்மையின் அடையாளமாகத் திகழ்ந்த ஏ.பி.நாகராஜன், கே.வி.மகாதேவனின் தேனிசை, கவியரசரின் பாடல்கள், அவ்வையாராக வந்த கே.பி. சுந்தராம்பாள், செண்பகப் பாண்டியனாக வந்த முத்துராமன், ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ். பாலையா, பாண பத்தராக வந்த டி. ஆர். மகாலிங்கம் இவற்றுடன் ஏ.பி.நாகராஜனின் அருந்தமிழ். கலை இயக்குநர்களின் உழைப்பு எல்லாமும்தான் அப்படத்தின் கதாநாயக அந்தஸ்தைப் பெற்றன. இவை அத்தனையும் 50 ஆண்டுகளுக்கும் பிறகு திருவிளையாடல் திரைப்படத்தை நினைத்துப் பெருமைப்பட வைக்கின்றன.
பி. பி. ஸ்ரீ னிவாஸுடன் எஸ். ஜானகி இணைந்து குழையும் ‘பொதிகை மலை உச்சியிலே’; டி.எம்.எஸ் செங்குரலில் பாடியிருக்கும் ‘பாட்டும் நானே’, ‘பார்த்தால் பசுமரம்’; பாலமுரளிகிருஷ்ணா பாடியிருக்கும் ‘ஒருநாள் போதுமா’; டி.ஆர். மகாலிங்கம் பாடியிருக்கும் ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ ஆகிய பாடல்களுடன்... கே.பி.எஸ். பாடியிருக்கும் ‘பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா’ என்ற பாடல் எல்லாம் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தை இன்றைய மொழியில் ‘அட்ராக்டிவ் பேக்கேஜ்’ என்று சொல்ல வைக்கின்றன.
நாகேஷ் என்னும் நகைச்சுவைக் கலைஞனைத் தமிழ் வீடுகளில் கொண்டுபோய் ஜம்மென்று உட்காரவைத்தது திருவிளையாடல். அந்த ஒற்றை நாடி சரீரத்தை வைத்துக்கொண்டு தனது வியத்தகு உடல்மொழியால் எம்பெருமானை எள்ளி நகையாடி, மல்லுக்கு இழுக்கும் நடிப்பில் சிவாஜி கணேசனின் ஆளுமையை அந்தக் காட்சிகளில் இல்லாது ஆக்கியிருப்பார் நாகேஷ்.
கல்யாணம், காதுகுத்து, திருவிழா, பூப்பு நீராட்டு விழா எல்லா நிகழ்வுகளின்போதும் இசைத்தட்டு வழியாகத் தமிழர்களைத் தருமி சிரிப்பு மகிழ்வித்திருக்கிறது. 50 ஆண்டுகள் மட்டுமில்லை இந்தப் படம் தந்து 100-வது ஆண்டுகளிலும் நினைக்கப்படும்.
போற்றப்படும்.
நன்றி: தி இந்து..22.5.2015
யுகேஷ் பாபு சார்,
தங்களுடைய வாழ்த்திற்கும் சிறப்புப் பதிவுகளுக்கும் என் உளமார்ந்த நன்றி.