Dear senthilvel sir,
congrats for your 2500 valuable and rare posts,hope you will post your 25,000th post also with the same enthusiasm
Printable View
Dear senthilvel sir,
congrats for your 2500 valuable and rare posts,hope you will post your 25,000th post also with the same enthusiasm
Dear all.there is always a confusion among people (even in our people) regarding the birthday celebrations and the number of the birthday.
To have clarity if we refer the dictionary for ANNIVERSARY and BIRTHDAY,its given
Anniversary : the day on which an event took place in the previous year.
Birthday : the anniversary of the person"s birth.
To be simple, for a person born on 01.01.2000,01.01.2016 will be his 16th birthday.(2016-2000=16).I think this is just an effort to make our selves to be clear.
Last October 2nd,for Gandhiji"s birth anniversary,the central government was given one number and the state govt was giving another in newspapers.
Peoplwe generally confuse with independence and Republic days which is different from our bitrthdays.Because we 15.08.1947 itself will be first Independence and 26.01.1950 itself first republic day.
thank You all.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...8c&oe=574A2783
From Bommai 1969 issue
Courtesy. Facebook
http://i1065.photobucket.com/albums/...pshh8c2foj.jpg
2500 முத்தான பதிவுகளை வழங்கி நடிகர்திலகத்தின் புகழ் பாடிக்கொண்டிருக்கும் திரு. செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
செந்தில்வேல்,
பல நாட்களுக்கு முன்பே இதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரம் அமையவில்லை. உங்களின் அன்றைய தின பத்திரிக்கை பதிவுகள் அனைவரையும் போல் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. எனது மகிழ்ச்சிக்கு வேறு ஒரு காரணமும் இருந்தது நான் எழுதி வரும் அந்த நாள் ஞாபகம் தொடரில் குறிப்பிட்ட மூன்று விஷயங்களுக்கு நீங்கள் ஆதாரத்தை பதிவு செய்திருந்தீர்கள்.
1 1972 அக்டோபரில் கோவையில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா ராமாநாயுடு குழுவினரால் படமாக்கப்பட்டதை குறிப்பிட்டு அது வசந்த மாளிகை ஓடிக் கொண்டிருந்த அரங்குகளில் காண்பிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன் அது காண்பிக்கப்பட்டது என்பதற்கு பத்திரிக்கை விளம்பரங்களை பதிவிட்டதற்கு முதல் நன்றி.
2. அதே 1972 அக்டோபரில் 14-ந் தேதியன்று தவப்புதல்வன் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் 50-வது நாளை நிறைவு செய்தது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அந்த 50-வது நாள் விளம்பரத்தை பதிவு செய்ததற்கு இரண்டாவது நன்றி.
3. மதுரையில் 1961-ல் சிந்தாமணி அரங்கில் பாசமலர் வெளியான போது தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்தது பற்றி சொல்லியிருந்தேன். அதை பற்றிய நோட்டிஸ்-ஐயும் பதிவு செய்ததற்கு மனமார்ந்த நன்றி.
உங்கள் சேவை தொடரட்டும்!
அன்புடன்
ஆதவன் ரவி,
நான் முன்பு ஒரு முறை சொன்னது நினைவிருக்கும் என நினைக்கிறேன். என்ன சொல்லி உங்களை பாராட்டுவது என்று தெரியவில்லை.என்று. இப்போதும் உங்களின் இரு மலர்கள் மற்றும் தாவணிக் கனவுகள் பற்றிய விவரணைகளை படித்தபோது அதுவே மீண்டும் மனதில் தோன்றியது.
இங்கே நமது திரி நண்பர்கள் அனைவருக்கும் ஏன் இந்த திரியுடன் தொடர்ந்து பயணிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் இரு மலர்கள் படத்திற்கு நான் ஒரு ஆயுட்கால ரசிகன் என்று. அப்படி ஒரு படத்தை பற்றிய உங்கள் விவரிப்பு என் மனதை எங்கோ கொண்டு போய் விட்டது. ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் அணுகிய விதம், நடிகர் திலகத்தின் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை நீங்கள் பதிவு செய்த விதம், அவரை பற்றி மட்டுமல்லாமல் படத்தின் பங்களிப்பாளர்கள் அனைவரையும் பற்றி நீங்கள் எழுதிய விஷயங்கள் படம் பார்த்த அனைவருக்கும் ஒரு புதிய வெளிச்சத்தையும் இதுவரை பார்க்காதவர்களுக்கு இதை இத்தனை நாள் தவற விட்டு விட்டோமே என்ற ஏக்கத்தையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த படத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தால் மீண்டும் அது ஒரு நீண்ட கட்டுரையாக போய் விடும் என்பதனால் நிறுத்திக் கொள்கிறேன். சென்னையில் விரைவில் இந்த படத்தை வெளியிட அதன் விநியோகஸ்தர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் சென்னைக்கு வாருங்கள். நமது வாசுவும் வருவார். நாம் அனைவரும் சேர்ந்து பார்க்கலாம்.
இரு மலர்கள் பற்றியாவது பலருக்கும் தெரியும். ஆனால் இரண்டாவதாக நீங்கள் தாவணிக் கனவுகள் பற்றி எழுதியது பலருக்கும் ஆச்சரியம். எனக்கும் சேர்த்துதான்.
அதைப் பற்றிய உங்கள் பதிவுகளை படிக்க படிக்க ஆச்சரியம் கூடியது. காரணம் அந்த படத்தின் தூணாக நடிகர் திலகம் விளங்கியிருப்பார். ஆனால் அந்த performance அதற்கு உரிய அங்கீகாரத்தை பெறவில்லை. அதாவது முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் பேசப்பட்டது போல் இது சிலாகிக்கப்படவில்லை. அதை உணர்த்தும் வண்ணம் உங்கள் பதிவுகள் அமைந்திருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்.
இந்த படத்தை எடுத்துக் கொண்டு அலசியதற்கு உங்களுக்கு ஸ்பெஷல் நன்றி! திருவிளையாடல் பற்றி சிறப்பு பதிவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! தொடருங்கள்
அன்புடன்
அந்த நாள் ஞாபகம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்
கடந்த பதிவின் இறுதி பகுதி
பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்த நாளன்று நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது
மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக் வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.
நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.
வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.
[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].
சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.
எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது
உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.
நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.
ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்
இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.
(தொடரும்)
அன்புடன்
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...63&oe=56FD3873
நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
'இரு மலர்கள்' ஏராளமானோருக்கும், எனக்கும்
பிடித்த இனிப்பு மிட்டாய்.
எத்தனை முறையானாலும்
தெவிட்டாத அதன் சுவை,
அந்தச் சுவையால் நான் அடைந்த திருப்தி, நிம்மதி,
இத்தனை சுவையானது
என் நாவில் இருக்கிற பெருமிதம் எல்லாவற்றையும்
எழுதித் தீர்த்தேன்.
முழுசாய் முடித்த பிறகு ஒரு
பயம் என்னைக் கவ்விக் கொண்டது.
"இரு மலர்கள்" என்கிற இந்த
இனிப்புக்கு என்னைப் போல்
எத்தனை விரும்பிகள்?
இனிப்பை வியந்த என் எழுத்து
அத்தனை விரும்பிகளுக்கும்
ஏற்புடையதாயிருக்குமா?
ஏற்கனவே இதே இனிப்பை
ஆழ்ந்து, அனுபவித்து ருசித்த
அவர்களுக்கெல்லாம் எனது
சப்புக் கொட்டல் எரிச்சலைத்
தந்திருக்குமோ?
நிறைய பயங்கள்.
முதன் முதலாய் இந்த பயம்
உடைத்து வாழ்த்திய வாசு சாருக்கு நன்றி சொல்லிப் பேசிய போது கூட, இந்த பயம்
குறித்துச் சொன்னேன்.
மிக நீண்ட இடைவெளிக்குப்
பிறகு திரிக்கு வந்த மாத்திரத்தில், கொஞ்ச நஞ்ச
பயத்தையும் காணாமலடித்து,
என்னை உளமார
வாழ்த்தி மிகவும் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.
----------------
சற்று முன்தான் "எதிரொலி"
பார்த்து முடித்தேன்... முரசு
தொலைக்காட்சியில்.
மிகுந்த வேதனையோடு நம்
நடிகர் திலகம் பேசுவதாய்
இதில் ஒரு வசனம் வைத்திருக்கிறார்... இயக்குனர் சிகரம் அமரர் கே.பி.
" இந்த உலகம் பொல்லாததுன்னு எனக்குத்
தெரியும்.ஆனா இவ்வளவு பொல்லாததுன்னு தெரியாது."
"தாவணிக் கனவுகள்" கேப்டன்
பாத்திரத்தைக் கொண்டாடத்
தெரியாத இந்த உலகம் கூட பொல்லாததுதான்.
---------------
மிகச் சரியான புரிதலோடு,
மிகச் சரியான வார்த்தைகளால்
பாராட்டப்படுகிற போது
கிடைக்கிற சந்தோஷம்,
அடுத்ததை எழுதக் கிளம்பும்
பேனாவில் மையாய் நிரம்புகிறது.
--------------------
மிக்க நன்றி...முரளி சார்.
முரளி,
மிக வருத்தம்,இந்த கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. எப்படி பட்ட பதிவுகள்? என்னை இங்கு இழுத்து வந்த பதிவுகள். இப்போது நீ போடும் பதிவுகள், முரளி என்ற பெயரில் வருவது உனக்கு அவமானம்,எனக்கும் அவமானம். ஏனோதானோ. ஒரு எங்கே நிம்மதி,ஒரு தேவனே என்னை, அட்டகாசமான அரசியல் பதிவுகள்,சுவையான விமர்சன பதிவுகள் தந்த முரளி எங்கே ?
திறந்து வைத்த கோலி சோடா போன்ற இன்றைய சுவையற்ற பதிவுகள் எங்கே? இது போதும் என்கிற கூட்டம் இருக்கும் போது ,மெனக்கெடுவானேன் என்ற எண்ணம் உனக்கு. எழுத்து என்று வரும் போது நானும் எனது சகோதர சகோதரிகளும் கூட மோதுவோம் ,தரமில்லாவிட்டால். உன்னையும் விட போவதில்லை. உன் பெயரை காப்பாற்றி கொள்.
ஆதவன் ரவி,
உங்கள் அளவு, முரளி அளவு எனக்கு இரு மலர்கள் உவப்பில்லை என்றாலும், சிவாஜி,ரோஜாரமணி இருவரும் அற்புதமான , ஆழமான நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிகொணர்ந்த காட்சிகள்,பாடல்கள் மிக பிடிக்கும்.
நீங்கள் தோய்ந்து எழுதும் முறை அற்புதம். மிக ரசித்தேன். எனது பழைய எண்ணங்களை ஒதுக்கி, இரு மலர்கள்,நெஞ்சிருக்கும் வரை மறு ஆய்வு செய்யும் எண்ணம் உண்டு.
தாவணி கனவுகளை, துணை,முதல் மரியாதை,தேவர் மகன் ரேஞ்சில் சொல்வோர் மூளை பரிசோதனைக்கு உட்படுவது நலம்.
செந்தில் வேல்,
திரியை சுவையாக்குவதில் ,நீங்களும் ,ஆதவன் ரவியும் முக்கிய பங்களிக்கிறீர்கள்.
உங்கள் ஆவணங்கள் அத்தனை அருமை.
Congrats Mr Senthilvel for reaching another milestone.
நன்றி.. கோபால் சார்.
மீண்டும்,மீண்டும் என்னை
வாழ்த்துவதற்கு மட்டுமல்ல..
என் காலத்தில் தாங்கள் எழுதப்
போகும் இரு மலர்கள்,
நெஞ்சிருக்கும் வரை ஆய்வுகளுக்காகவும்.
வேறு யாரும் நடித்திருந்தால்
வந்து போயிருக்கக் கூடிய
பாத்திரம்.. தாவணிக் கனவுகள்
பாத்திரம். வாழ்ந்து போயிருக்கிறார் நடிகர் திலகம்.
இன்னும் அது பேசப்பட்டிருக்கலாம் என்கிற
ஆதங்கம் அப்போதிருந்தே
எனக்கிருக்கிறது.
http://tamil.filmibeat.com/heroes/ta...=article-tweet … #sivajiganesan via @FilmibeatTa
எனக்கும் ஒரு ஆதங்கம் உண்டு. 76க்கு பிறகு, பழைய சிவாஜியின் சாயலையோ, அந்த உலகிலேயே உயர்ந்து நின்ற திறனையோ ,துளி கூட அப்போது வந்த படங்களில் காணாத போது ,வாழ்க்கை,துணை,முதல் மரியாதை,தேவர் மகன் ஆறுதல் தந்தன. அவரது நடிப்பு என்று பார்த்தால் பந்தம்,தீர்ப்பு,ஹிட்லர் உமாநாத்,கருடா சௌக்யமா,நெஞ்சங்கள்,தாம்பத்யம், கீழ்வானம் சிவக்கும்,பரீட்சைக்கு நேரமாச்சு,வெள்ளைரோஜா,திருப்பம் ,தாய்க்கு ஒரு தாலாட்டு ,விடுதலை ஆகிய படங்களில் கூட ஒன்றிரண்டு காட்சிகளில் உலக தரம் வெளிப்படும். ஆனால் படம் நெடுக ,புளித்து போன அலுப்பான வெளிப்படை காட்சிகள்,cliche நடிப்பே அலுக்க வைக்கும்.
பாக்ய ராஜின் யதார்த்த ,இலகுவான பாணி படமாக்கத்தில் சிவாஜி துருத்துவார். ரொம்ப contrived ,cliched and strained ஆக மூடுக்கு பொருந்தாது. ஓட்ட வைத்தது போல இருக்கும். இது சிவாஜி,இயக்குனர் எல்லாருமே கவனித்து சரி செய்திருக்கலாம். ஆனால் சிம்மத்தை வைத்து குரங்காட்டி வித்தை காட்டி கொண்டிருந்த தமிழ் பட உலகில் ,சில்லறைக்காக உலக நடிகன் வளைந்தது நமக்கு நஷ்டமே.
நடிகர் திலகம் இனத்தை சேர்ந்த அனைவர்க்கும் வணக்கம் .
திரிக்கு பங்களித்து பல நாட்கள் ஆகின்றன . மன்னிக்கவும்
ஆனால் என் மதிப்புக்குரிய திரு கோபால் இங்கு புத்துணர்ச்சியுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இதை நான் அவரின் ரசிகன் என்ற முறையில் சொல்கிறேன் .
கோபால் ...என்றவுடன் உண்மையான நடிகர் திலகம் பக்தர்களுக்கு உடனே நினைவுக்கு வர வேண்டிய மிக சிறந்த கதா பாத்திரம் ...புதிய பறவை கோபால் ..
உலக தரம் வாய்ந்த இக்காவியம் ஒரு தங்க சுரங்கம் போன்றது. எல்லாம் பொன் பொன் தான் !
நம் திலகத்தின் உடல் மொழி ( body language ) மிகவும் போற்றுதலுக்கு உரியது ..
விரைவில் அடியேன் பகுதி பகுதியாக அவரின் உடல் மொழி மற்றும் படத்தின் சிறப்பு அம்சங்களை எழுத உள்ளேன் ...
தயவு செய்து பொறுமை காக்கவும் நண்பர்களே
பொங்கல் வாழ்த்துக்கள் ...
Irene ,
Most welcome . My take on Pudiya paravai. Eagerly awaiting your contribution on Body Language.
எழுதியவர்களே ரசிப்பார்கள் என்றாலும் (எழுதுவதே இந்த திருப்தி அடையத்தான்) ,எனக்கே பிடித்த ,என்னுடைய முதல் ஐந்து படங்களுக்குள் இருக்கும் படங்களின் என்னுடைய write -up .உங்கள் பார்வைக்கு மீண்டும்.
What is the Chekhov Technique?
For Chekhov, actors are not here to imitate life but to interpret it, to bring out its hidden meaning to the audience. For this, they must be able to act with ease, bring form and beauty to their creative expressions, and see the big picture so they can convey it in their performance.
Sensitivity of the Body
The actor's body must be trained to be receptive so it can convey creative impulses to the audiences. Through psychological exercises, the actor's body can be developed from the inside. The actor must learn to radiate the inner life of its characters and to create an imaginary center within his body that will allow him to connect to the various energies of many different characters.
Rich Psychology
The actor must penetrate the psychology of its characters. He can train by observing others and figuring out why they act or feel a certain way. Unlike method actors, Michael Chekhov firmly believed that drawing from real feelings from one's life kills inspiration and should be avoided. Creative feelings on the stage come from the actor's ability for compassion.
Creative Imagination
Our creative imagination constantly draws pictures in our mind. We can learn to collaborate with these images by asking questions from them and sometimes ordering them to show us what we are looking for. For example, you can ask your character, "show me how you would approach this part of the scene" and keep asking questions until the answer you get stirs you up emotionally and helps you start to enter the inner life of the character. Once you have a very clear inner vision, you can start incorporating it by copying one aspect of your vision at a time.
Similarly, the actor can use his imagination to create an imaginary body for his character. This allows the actor to really feel like another person and to start exploring his character's reality, movement and speech from the inside.
Atmosphere, quality and sensations
The atmosphere - whether it is happy, sad, calm, hectic, nervous, etc. - has a tremendous impact on the way we act. An actor can create an atmosphere, imagine it "in the air" and submit to it. He can imagine at outer atmosphere for a scene and an inner atmosphere for his character, contrasting them. These atmospheres will permeate his body and psychology when he acts.
Similarly, he can choose to give a quality to his movements. For example, if he chooses to move calmly, the physical sensation that results from his movements will attract similar emotions without any effort at all. This could be called working "from the outside in", except in this acting technique, the actor doesn't fake anything, he just lets atmospheres and sensations inspire his performance.
The Psychological Gesture
Just like we can access our emotions through atmospheres and sensations, we can access the will to pursue objectives through a gesture that encompasses all the needs and wants of the character. The actors starts with his first guess of what the character's main desire may be and from there, develops a gesture with his hand and arm that encompasses this desire. He gradually expands this gesture to the entire body, changing it until he feels satisfied as an artist. The psychological gesture should be strong but not tense, simple but definite, and archetypal in nature.
நான் எந்த பள்ளியை தொட்டாலும், நடிகர் திலகத்துக்குதான் எவ்வளவு பொருந்துகிறது? எந்த படத்தை தொட்டாலும், எல்லா பள்ளிகளிலும் உள்ள salient features என்பது அவரறியாமல் அவர் ரத்தத்திலேயே ஊறிய திறன், எல்லா பாத்திரங்களிலும் அவர் மிக மிக நுண்மையான உளவியல் விஷயங்களை புகுத்தி ,அந்த பாத்திரத்தின், mood ,tone ,body language ,hand -eye coordination , subtle changes in tempo and body position என்று தன் உள் வாங்கிய கதாபாத்திரத்தின் தன்மையை , பார்வையாளர்களுக்கு உணர்வு பூர்வமாக மட்டுமின்றி, அறிவு பூர்வமாகவும் பதிய வைத்தார்.
அவர் உளவியல் பாணியில் அமைந்த உத்தம புத்திரன், புதிய பறவை போன்ற படங்களை விரிவாக அலசுவோம். தயவு செய்து நடிகர்திலகத்துக்காக ஒரு முறை மேற்கண்ட ஆங்கில original chekhov விளக்கங்களை படித்து விட்டு என்னை தொடர்ந்தால் ,உங்களுக்கும் எனக்கும் வேலை சுலபம்.
புதிய பறவை- 1964
தமிழ் நாட்டின் எந்த தமிழறிந்த குடிமகனை கேட்டாலும், அவர்கள் எவர் ரசிகர்களாக இருந்தாலும் ,மறக்க முடியாத படங்களில் ஒன்றாக குறிப்பிடும் படம் புதிய பறவை.புதுமையான கதையமைப்பு, அற்புதமான நடிப்பு, மறக்க முடியாத பாடல்கள்,கேமரா, இயக்கம்,richness ,sophistication in making & great production value கொண்ட ahead of times வகை படம்.என்னிடம் யார் கேட்டாலும் எனக்கு பிடித்ததாக நான் சொல்லும் மூவர் கோபால்,விஜய். (நான்,என் மகன் என்பது ஒரு புறம்)மற்றும் விக்ரமன்.
அந்த படத்தை ரசித்த நிறைய பேர் கோபால் பாத்திரத்தை முழுதும் புரிந்து கொண்டார்களா என்பது சந்தேகமே. chekhov school நடிப்பில் என்னை கவர்ந்த Anthony Hopkins(laurence olivier சிஷ்யன்) ,Jack Nicholson ,Oleg yankovskiy இவர்கள் எல்லோரையும் தாண்டி சென்றவர் நமது நடிகர்திலகம். அவர்கள் எல்லோரையும் காலத்தாலும் முந்தியவர். கோபால் பாத்திரம் முழுக்க முழுக்க மனோதத்துவ பின்னணி கொண்ட மிக சிக்கலான பாத்திரம்.
கோபால் ஒரு வெளிநாட்டில் வாழும், பணக்கார conservative &cozy என்ற சொல்ல படும் ஒரு அம்மா பிள்ளை. அம்மாவின் மீது obsessive fixation கொண்டவன்.அம்மாவை அகாலமாக இழந்து இலக்கின்றி அலையும் போது impulsive ஆக ஒரு தவறான பெண்ணை தன் அம்மாவின் இழப்பிற்கு ஈடு செய்வாள் என்ற நம்பிக்கையில் தேர்ந்தெடுத்து, குடும்பத்தின் அமைதியே குலையும் அளவு கொண்டு சென்று, தன்னை உயிருக்குயிராய் நேசிக்கும் தந்தையையும் இழந்தவன். ஆனாலும் ,தானாக ஓடி போகும் சீர்கெட்ட மனைவியையும் கெஞ்சி திரும்ப அழைக்கும் பூஞ்சை மனம் கொண்ட கோழை.(குடும்ப கெளரவம் என்ற பெயரில்).மனைவி தானடித்த ஓரடியில் இறந்து விட , சட்டத்தில் இருந்து தப்பிக்க rail track இல் உடலை போட்டு, தற் கொலை என்று நம்ப வைத்து, குற்ற உணர்ச்சியுடன், சிறிது விடுபட்ட உணர்வுடன் ஊர் திரும்புபவன்.
தொடரும் தனிமை நிறைந்த boredom என்று சொல்ல படும் வாழ்க்கையில், neurotic -emotional distress என்று சொல்ல படும் வகையில்(தூக்கம் இழந்து தவிப்பவன்),tremor என்ற hysterical conversion மனநோயால் அவதியுருபவன்.இந்த வாழ்க்கையின் தவிப்பில்,லதா என்ற தேவதையால் சிறிது ஆசுவாசம் அடைந்து அவளை மணக்க இருக்கும் தருணம், பழைய மனைவி என்று சொல்லி அவள் உருவத்தில் உள்ள ஒருத்தி வாழ்க்கையில் புயலென நுழைய தொடரும் grief &misfortune அவன் அமைதியை மேலும் குலைத்து, depression நோக்கி தள்ளி விடுகிறது.ஆனாலும் வந்தவளை விரட்டி, லதாவை அடையலாம் என்ற நம்பிக்கை, அது குலையும் தருணம் ஏற்படும் ஏமாற்றம் கலந்த அதிர்ச்சி என்று hope &despair என்று வாழ்வு மாறி மாறி ஊசலாட, spurt of violence ,hallucination தலை தூக்க, இனி தப்பிக்க வழியில்லை என்ற stalemate நிலையில், தன்னை மறந்து உண்மையை back to the wall resolution ஆக ஒப்பு கொண்டு, குற்றத்திற்காக பிடி படுகிறான்.
எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.
இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .
இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.
இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action . பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி, வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .
மற்ற தொழிலாளர்களுடன் சாதாரணமாக நடந்து கொள்ளும் கோபால், ராஜு தாத்தாவிடம் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் முறையிலேயே , கோபாலின் fixation tendencies establish ஆக தொடங்கும். பிறகு தோட்டத்தை தனியாக பார்வையிடுவது, தனியாக picnic சூழ்நிலையில் படித்து கொண்டிருப்பது என்று தனிமை ,boredom சொல்ல பட்டு விடும். தூங்காமல் முழித்திருக்கும் இரவில் வரும் லதாவுடன், இதமான உரையாடலில் தன் ஏக்கம் கலந்த தனிமை, தூக்கமில்லா இரவுகளை குறிப்பிடும் அந்த husky ஆன குரல், ஏக்கமும் சோர்வும் சோர்வும் தோய்ந்த விழிகள், லதாவிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வெளியிட முடியாமல், குறியீடாக பாட்டு என்று ஒற்றை வார்த்தையில், தன் அமைதிக்கு லதாவால் துணை நிற்க முடியும் என்று உணர்த்தும் கண்ணியமான இதம்.அந்த உன்னை ஒன்று கேட்பேன் இரவு காட்சி தமிழ் பட உலகின் அழகுணர்ச்சிக்கு ஒரு மைல் கல் காட்சி.
பார்த்த ஞாபகம் பாடலில், எதோ ஒன்றை தொலைத்து பறி கொடுத்த ஏக்கத்துடன், நிலைத்த சூன்ய பார்வை, அவ்வப்போது பாட்டில் சூழலில் அடையும் பரவசம், இதையெல்லாம் மீறாமல் நம்மை இன்றளவும் கவரும் அந்த sophisticated புகை பிடிக்கும் ஸ்டைல்(நாக்கில் இருந்து சின்ன புகையிலை தூளை விரலால் துடைக்கும் லாவகம்,wine glass ஏந்தும் தோரணை. பாடகி சித்ராவிடம் உடனே காட்டும் impulsive ஈடுபாடு.கல்யாண காட்சி உடனே வரும் போதும் பழகிய உணர்வு தெரியும் அந்த ஒரே பாடல் காட்சியில் .
அந்த ரயில்வே கேட் காத்திருப்பு காட்சியில், tremor என்றவொரு, வலிப்பு -அதிர்ச்சி இடைப்பட்ட நிலையை அவ்வளவு தத்ரூபமாக எந்த நடிகனும் காட்டியதில்லை.
நிச்சய தார்த்தம் அன்று வந்து சேரும் தன் மனைவி போன்ற உருவம் கொண்ட, மனைவியாக சித்தப்பா என்றவொருவனுடன் வந்து நிற்கும் காட்சியில்... முதலில் அதிர்வு என்ற நிலையில் தொடங்கி denial mode க்குள் செல்வார். இருக்காது,இருக்க முடியாது என்று. பிறகு சிறிதே seriousness உணர்ந்து, தன் police நண்பன் துணையுடன் மிரட்ட தலை படுவார். ஆனால் நடக்காது என்றவுடன் புலம்பும் ,குழம்பும் நிலை.(என்ன,என்ன,என்னை கேட்டால் எனக்கு என்ன)death certificate தேடி எடுத்து(அப்படியே போட்டது போட்டபடி விரையும் ஆர்வம் கலந்த வேகம்), அதை ரங்கன் தூளாக்கியதும், போலீஸ் நண்பனுடன் சிறு அதிகார தொனியிலேயே கடைசி பலவீன முயற்சியை அதிகாரமாய் தொடுப்பதும், வழியில்லை என்று அடங்குவதும்-இந்த காட்சி ஒரு roller -coaster ride .
தொடரும் காட்சிகள், இந்திய பட உலகம் இது வர பார்க்க இயலா புதுமை கலந்த marvel ...நடிப்பின் உச்ச பட்ச சாத்தியங்கள்.
அதற்கு பிறகு வரும் பதினோரு காட்சிகள் அதற்கு முன்னும் பின்னும் இந்திய திரையுலகமே கண்டிராத miracle .நான் குறிப்பிட்ட படி emotional roller coaster ride . நடிகர்திலகம் போன்ற நடிகர் ஒருவரால் மட்டுமே முடித்து காட்ட முடிந்த அதிசயம். விறு விறுப்பு,பரபரப்பு, sentiments ,Technical excellence ,புதுமை எதற்கும் பஞ்சம் வைக்கா விட்டாலும் நடிப்பு என்ற விஸ்வரூப தரிசன ஜோதியில் மற்றதெல்லாம் கரைந்து போகும் ,அதியற்புத உன்னதம் தொடும் psychedelic ecstasy பார்வையாளர்களுக்கு.
லதாவையும், அவள் தந்தையையும் ரங்கனின் insult மீறி, வீட்டில் இருக்க வைக்க கெஞ்சி கூத்தாடும் காட்சியில், அவர்களுக்கு நம்பிக்கை விதைக்க பாடு படுகிறார் என்ற அளவில் மட்டுமே (தன் சந்தேக கணங்களை ,அவநம்பிக்கையை மறைத்து. அப்படி மறைப்பதை நொடிக்கு நொடி மாறும் முகபாவங்களில் நமக்குணர்த்தி )நடிப்பார்.அவர்களை convince பண்ண தன் anxiety மறைப்பாரே தவிர, மறையவில்லை என்பதை அந்த இறைஞ்சும் பாணியே உணர்த்தி விடும்.
விரலை சொடுக்கி யோசித்து எனக்கு தெரிஞ்சா உன்னிடம் ஏன் வருகிறேன் என்ற இயலாமை கலந்த ஆயாசம்.dining காட்சியில், சித்ரா அடிக்கும் பால் பேணி sixer இல், முதல் நம்பிக்கை தெறித்தோடும் போது , அடுத்து வேறு வழியின்றி அவர்களை பணம் கொடுத்து விரட்ட முயலும் காட்சி. எல்லா பணத்தையும் நான் எடுத்து கிட்டா நீங்க என்ன பண்ணுவீங்க என்பதற்கு பிச்சை எடுப்பேண்டா ,என்று லதாவுடன் தனக்கிருக்கும் அபார காதலை வெளியிடும் முறை, யாரோட சாவு எனக்கு சந்தோசம் தருதோ அவ இருக்கான்னு சொல்லி ஏண்டா சித்ரவதை செய்யறே என்று கெஞ்சி அதற்கும் இணங்காத போது சீ,போ என்று வீ சும் வெறுப்பில் breaking பாயிண்ட் desperation தெரிய ஆரம்பிக்கும்.
அந்த போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் அப்படியே எல்லாம் மூழ்கி விட்ட விரக்தியில், எல்லா கேள்விகளுக்கும் indifference ஆக ஆமாம் என்று பதிலில் (கண்ணை அழுத்தி தடவி)என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற விரக்தி தெரிய ஆரம்பிக்கும். அவனை போக சொல்லு என்ற அருவருப்பு தெரியும் வெறுப்பின் கொதிப்பில், மனசுக்குள் துப்பாக்கி எடுக்கும் கோபம் புலப்படும்.
அடுத்த கல்லை அவிழ்க்கும் காட்சியில் தனக்கு தெரிந்த லதாவின் காதலையே re -assure செய்து கொள்ளும் விதமாக, பொய் ஆச்சர்யம் காட்டி, தான் breakdown ஆக ஆரம்பித்து விட்டதை மறைத்து லதாவிற்கு நம்பிக்கை ஊட்ட முயலும் பொது, தானே நம்பாததை மற்றவருக்காக சொல்வதை இந்த மேதை உணர்த்தும் குறிப்பு, குரலும்,பாவங்களும், உடல் மொழியும் புரியும் ரசவாதம்.
லதாவின் அவநம்பிக்கை நிறைந்த சோகத்தால் வெறி கொண்டு, ரங்கனையும் சித்ராவையும் சுட வரும் போது ,மற்றவர்கள் தடுத்தவுடன் விரக்தி, கோபம் கொண்டு, தன்னிச்சையாக பார்த்த ஞாபகம் இசைப்பார் பியானோவில்.இந்த காட்சியில் பாடல் முழுதும் meloncholic serenity with puzzled look உடன்,நிலைகுத்திய விழிகளுடன், முடிவில் சித்ரா அந்த பாடல் எப்படி தெரியும் என்பதற்கு பதில் கூறியவுடன் ஏமாற்றத்துடன் திரும்பும் லதாவை பார்த்து திரும்ப violent ஆகி சித்ரா கழுத்தை பிடித்து வெறி பிடித்து கத்தி கொண்டு தோட்டத்திற்கு செல்லும் இடம்......
அங்கு தோட்டத்தில் லதாவுடன் ,நம்பிக்கை இழந்து அவரை போக சொல்லி விட்டு, அப்படியாவது பழைய நாட்களை அசை போட்டு வாழ்ந்து விட நினைக்கும் கோபால்,பதட்டத்துடன் சிகரெட் பற்ற வைப்பதிலேயே depressed hope less state வெளிப்பட்டு விடும்.போலீஸ் நண்பன் வரும் போது detached silent agony யில் கொடுக்கும் indifferent உடல் மொழி மற்றும் கை அசைவுகள் ....(அவசியமில்லை). நண்பன் கைரேகை எடுக்க சொன்னதும் அவன் குற்றவாளிகள் தப்பி விடும் சாத்யகூற்றை சொன்னதும் போய்தான் தொலயுட்டுமே என்ற அங்கலாய்ப்பு.
சித்ராவை வலையில் சிக்க வைக்க கடுகடுவென்ற பாவனையில் இருந்து போலீஸ் நண்பன் voice over க்கு தக்க படி gradual ஆக forced pleasantness கொண்டு வருவது. ரங்கன் வருவதை பார்த்து லதாவிடம் மனமில்லாமல் கடுமையாய் பேசி அனுப்பி விட்டு ரங்கன் ரேகை இருக்கும் பால் கிண்ணத்தை உடைத்தவுடன், அதை பார்த்து கோபம் நிறைத்த help less ness கையை கொண்டே காட்டுவார்.
இந்த படத்தின் முக்கியமான மூன்று சிறப்புகள் - முதல் முதல் sur realistic முறையில் எடுக்க பட்ட எங்கே நிம்மதி பாடல். படம் முழுதும் voice over என்ற முறையில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி மிகு nerration உடன் perfect ஆக sink ஆகும் அவரின் நடிப்பு.ஆச்சர்ய பட வைக்கும்.கையை பயன் படுத்தி அவர் அதீத மனநிலையை வெளிபடுத்தும் இடங்கள். ஒன்றை ஏற்கெனெவே பார்த்தோம். எங்கே நிம்மதி பாட்டில் எனது கைகள் மீட்டும் போது வரிகளில் புறங் கைகளால் action காட்டி கண்களால் follow thru பண்ணும் போது கைகளே அந்நியமான உணர்வை கொடுப்பார். சித்ரா அவர் அடித்த அடியில் இறந்து விட்டதும் இந்த கைதானே அவளை அடித்தது என்று தண்டிப்பது போல் .....
climax காட்சி இந்திய படங்களில் வந்ததிலேயே சிறந்த காட்சிகளில் ஒன்று.
stylised நடிப்பில், மனோதத்துவ முறையில் உச்சம் தொடுவார். அப்படியே ஒவ்வொரு நொடியும் மனதில் தைக்கும். பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்து சொல்லும் எதுவும் காதில் ஏறாத மனநிலையில் ராஜு வந்ததை கேள்வி பட்டதும் அவர் துன்பமெல்லாம் நீங்கி விட்டதான நினைப்பில் காட்டும் அதீத stress relieved happiness ... இந்த காட்சி முழுவதும் hope -despair ஊசலாட் டமே. ராஜூவை கட்டி தேம்பி விட்டு, ஆட்டி வைக்கிராண்டா என்ற ஆத்திரத்தை கொட்டி ரங்கனை சித்ராவை பரபரப்பாய் வெற்றி களிப்பு விடுதலை உணர்வில் அழைக்கும் தோரணை ,சித்ரா வந்ததும் பேயை பார்த்த மாதிரி பின் வாங்கும் அவசரம்.ராஜு அவளை தங்கை என்றும், ரங்கனை சித்தப்பா என்றும் ஒப்பு கொண்டவுடன்,தன்னையே நம்ப முடியாமல் மீண்டும் கெஞ்சி விட்டு, மச்சத்தையும் பார்த்தவுடன் விரக்தியில் வீழும் இடம்... நண்பன் கைரேகையுடன் வந்ததும்,ஒவ்வொருவரிடமும் களிப்புடன் ரேகை...ரேகை என்று பிரச்சினையே முடிவு பெற்றது போல் கொண்டாட்ட மனநிலை சென்று, ரேகையும் ஒரே மாதிரி என்று சொன்னதும்,நம்பலியா,நீயும் நம்பலியா என்று லதாவிடம் புலம்பி கொண்டே confess பண்ணும் காட்சி.... நான் அசைவே இல்லாமல் லயித்து ஒன்றிய அதிசயம்.
confess பண்ணி முடித்ததும், அந்த train உடலை சிதைத்ததை விவரித்து விட்டு அதிர்ச்சி கலந்த பய உணர்வுடன் அலறி, ஒண்ணு மட்டும் உறுதி என்று சொல்லி விட்டு மூக்கை கைகுட்டையால் சிந்தும் improvisation (humanising the celluloid image ).குழந்தை போல் தன் conclusion சொல்லி விட்டு, பந்தாவாக எழுந்து வந்து எல்லோரிடமும் இல்லை என்ற பதிலை கேட்டு பெற்று ,லதா தன்னை கைது செய்ய சொன்னதும்,நம்பவோ,ஜீரணிக்கவோ முடியாமல் உண்மை உணர்ந்து என்ன அழகான நடிப்பு என்று சித்ராவிடம் சொல்லி(அப்போது கூட லதா நடிக்கவில்லை என்ற நம்பிக்கை)
அதை வைச்சா என்னை வீழ்த்திட்டே, அத்தனையும் நடிப்பா என்று குழந்தையின் ஏமாற்றம் நிறைந்த தேம்பலுடன் கேட்டு, லதா தன்னை உண்மையாய் நேசிப்பதை அறிந்து கொள்ளும் நெகிழ்வு..(தாடையை தடவி)
இப்போது சொல்லுங்கள். இந்த மாதிரி ஒரு அதிசயம் உலகத்தில் உண்டா?கண்டதுண்டா?
Artaud acting techniques.
Artaud's thinking placed heavy emphasis on invoking deep routed feelings through acting. He believed the theatre was about action and the element of surprise. His theatre of cruelty approach, of which he is better associated with, takes acting to the subconscious level. Using painful memories and strong feelings to invoke strong emotion. Antonin Artaud thought less of words and more of profound impact. Where as Brecht wanted the audience to go out and change society Artaud wanted them shaken to their soul and to look within and make Changes within themselves.
இந்த முறையில் சராசரியாக நாம் வாழ்க்கையில் காட்டும் முகபாவங்கள், வெளியீட்டு முறைகள் நிராகரிக்க பட்டு , நடிகர்கள் முகத்தை ரப்பர் போல இஷ்டத்துக்கு வளைத்து, கண் மூக்கு வாய் எல்லாவற்றையும் மிக கொடூரமாக உபயோக படுத்தி, வலிதரும் எண்ணங்களை,மிக மிக வலிமையுள்ள நினைவெழுச்சிகள்,மிகை உணர்ச்சிகளை ,நடிப்பை உள்மன போராட்ட நிலைக்கு எடுத்து சென்று , பார்ப்பவரின் ஆத்மாவை உலுக்கி எடுக்க வலியுறுத்தினார். இந்த முறை நடிப்புக்கு இந்தியாவில் ஒரு நடிகரும் தகுதி பெற முடியவே முடியாது ,நம் ஒரே உலக மேதையை தவிர.
நடிகர்திலகம் மட்டுமே மற்றவர்களால் இஷ்டப்படி இயக்கி கொள்ள முடியாத involuntary muscles என்பதையும் அவர் இயக்கி கொள்ளும் திறமை பெற்றிருந்ததால்(ஒரு டாக்டர் குறிப்பிட்டதாய் ஞாபகம்) அவரால் மற்றவர்களை விட அதிகமாக முகபாவங்களை காட்டி (அமெரிக்க நடிப்பு பள்ளி ஒன்றில் இது நிரூபிக்க பட்டது)இந்த வகை நடிப்பிலும் தேர்ந்து விளங்கினார்.
எதற்கு எங்கெங்கோ போவானேன்?புதிய பறவை climax காட்சி ஒன்று போதுமே! அதை chekhov பாணியில் ஆன stylised நடிப்பு என்றுதானே பார்த்தோம்?ஆனால் அதில் முழு காட்சியிலும் Astraud cruelty முறை பயன் படுத்த பட்டு அந்த காட்சி நம் ஆத்மாவில் ஊடுருவி நம் sub -conscious level உணர்விலும் ஊடுருவும் அதிசயத்தை நிகழ்த்தி Focus reach என்ற Acting Miracle நிகழ்ந்தது.
பிரமை பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர்திலகம் சித்ராவின் அண்ணன் pilot ராஜு வந்து விட்டதை படி படியாய் உள்வாங்கி அப்படியே பிரமை நீங்கி ,stress relieve ஆகி, ecstatic உணர்வை நம்பிக்கையின் உச்சத்திற்கே செல்வதை காட்டும் அந்த expression .
அதே மாதிரி confession முடித்து விட்டு train இல் சித்ரா உடல் சிதையும் காட்சியை மனக்கண்ணால் பார்த்து அலறும் போது கொடுக்கும் expression .
Dear Senthilvel Sir,
Congratulations for your Valuable 2500 Posts.
நண்பர் கோபால் ,
ஐயோ ! நீங்கள் புதிய பறவையை பற்றி எழுதியதை நான் பல முறை படித்துள்ளேன் ..
உண்மையை மனம் விட்டு சொல்ல வேண்டும்.
நீங்கள் ஒரு பேராசிரியர் தொழில் செய்ய வேண்டியவர் ..அது மட்டும் அல்ல ... ஒரு தீவிர கை தேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆகா வேண்டியவர் ..
இறைவன் அந்த அளவிற்கு திறமையை தந்துள்ளான் ..
இங்கு உள்ளவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை அன்றும் , இன்றும் ... இனிமேலாவது உங்களை , உங்கள் திறமையை அறிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் நம் திலகத்தை பற்றிய எழுத்துக்கள் அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் ...
எனக்கு ஒரே ஒரு வருத்தம். திலகம் வாழ்ந்த காலத்தில் உங்களை போன்ற ஒரு ரசிகரோடு அளவலாவினால் எவ்வவளவு உற்சாகம் அடைந்திருப்பார் !
சிவாஜி பக்தர்களுக்கு என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
http://i68.tinypic.com/2i8ex1.jpg
முத்தையன்
அபாரம்... பாராட்ட வார்த்தைகளே இல்லை..
ஒவ்வொரு தொகுப்பிலும் குறைந்தது 20 படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்தெடுத்து அதற்கென ஓர் பின்புல நிழற்படத்தைப் பொருத்தி, அவற்றை சரியான நேர்கோட்டில் அமைத்து துல்லியமாக வடிவமைத்துள்ளீர்கள். ஒவ்வொன்றிற்கும் தங்களுடைய பொன்னான நேரமும் உழைப்பும் திறமையும் மிகவும் தேவைப்பட்டிருக்கும். அதிலும் தாங்கள் தொகுத்துள்ளவற்றில் ஒவ்வொன்றிலும் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நிழற்படமும் நெஞ்சை அள்ளுகின்றன. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களுடைய தொகுப்பு ஒவ்வொன்றுக்கும் தேவைப்படும் நேரத்தில் பல பக்கங்களை எழுதி விடலாம். தங்களுடைய உழைப்பிற்கு என் சிரந்தாழ்த்த வணக்கங்கள்.
மீண்டும் ஆரம்பம்....?????
Yes Sir.Never Ending.
நண்பர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்..
அலுவல் வேலைகள் தலைக்கு மேலே இருந்ததால் திரிக்கு பங்களிக்க முடியாமல் போனது...மன்னிக்கவும் ....
முதற்க்கண் அனைவருக்கும் எனது belated புத்தாண்டு வாழ்த்துக்கள். Better late than never என்பதைப்போல !
தை பிறந்தால் வழி பிறக்கும் ! இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
மாற்று திரி நண்பர்கள் திரு எஸ்வி, திரு பேராசிரியர் செல்வகுமார், திரு ரவிச்சந்திரன் திரு யுகேஷ், திரு அக்பர், திரு ராமமூர்த்தி, திரு ராஜ்குமார், திரு சைலேஷ் ஆகியோருக்கும் எனது belated புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !
கோவை செந்தில்வேல் அவர்களே....என்னவென்று பாராட்டுவது உங்களை ? வார்த்தைகள் இல்லை ! மிக அறிய பொக்கிஷங்களை தாங்கள் இங்கு அனைவருக்கும் பகிர்ந்துள்ளீர்கள். பதிவு சாதனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நண்பர் முதய்யன் , ராகவேந்தர் சார், முரளி ஸ்ரீநிவாஸ் திரு ஆதவன் ரவி மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு காளை சுந்தர்ராஜன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் பதிவுகளுக்கும் மற்ற அனைத்திற்கும் !
நீண்டநாள் கழித்து திரு ஐரீன் அவர்கள் வந்துள்ளார். வருக..! திரு கோபால் அவர்கள் பதிவுகளை பற்றி சொல்லத்தேவையே இல்லை. சாமான்யனால் சாமான்யமாக புரிந்துகொள்ள முடியாத பதிவுகள் ! நமது நடிகர் திலகம் நடிப்பு அவர் நடித்த காலங்களில் எப்படி தரத்தில் உலக நடிப்புகளை விட நான்கு படி மேலாக இருந்ததோ அப்படி ! கண்ணதாசன் வாலி பாடல்கள் போல !
ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது - எனது நண்பர் ஒருவர் மிக மிக பிரபல நடிகர் ஒருவரின் மிக சிறந்த நண்பர். என்னை ஒருநாள் அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அந்த நடிகரின் துணைவியார் அவர்களை எனக்கு நன்கு பரிச்சியம் !
வீட்டின் மாடியில் உடல் பயிற்சி செய்து முடித்து படிவழி கிடு கிடு என வந்தவர் சோபாவில் அமர்ந்தார். என்னை அறிமுகபடுத்தினார் நண்பர். புன்னகையுடன் குசலம் விசாரித்தார். தொலைக்காட்சி remote எடுத்து ஒவ்வொரு channel ஆக அவர் தாவிகொண்டிருந்தபோது ஒரு channel இல் நடிகர் திலகம் அவர்களுடைய ஆலயமணி திரைப்படம் முடியும் தருவாயில் இருந்தது !
சிறிது நேரம் அதை இமை மூடாமல் பார்த்தவர்...தீடீரென்று ...அக்காலத்தில் எதற்கு மிகையாக காட்சியை எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றார் !
இதனை கேட்டவுடன் நான் உடனே...அவரிடம் ...காட்சியா அல்லது மொத்தமுமா எதை குறிப்பிடுகிறீர்கள் என்று வினா எழுப்பினேன்...! என்னை ஒரு கணம் உற்றுபார்த்த அவர் தலையை சிலுப்பி ஒரு சிரிப்பு சிரித்தார். !
நான் விடாமல் அவரிடம்...சார் நீங்கள் கூறியது மறைமுகமாக nt என்றால் ...எனக்கு ஒரு விஷயம் உள்ளது கூறுவதற்கு என்றேன் !
என்ன என்பதுபோல பார்த்தார் !
உடனே நான் நடிகர் திலகம் அவர்களை பற்றி யோசிப்பதற்கு ஒருவர் குறைந்தது 50 படங்களாவது நடித்திருக்கவேண்டும்...!
அவர் நடிப்பை பற்றி பேச குறைந்தது 150 படங்களாக வித்தியாசமான கதைகலத்தில் நடித்திருக்கவேண்டும் ..!
என்னை பொறுத்தவரையில் திரை உலகில் நடிகர் திலகத்திற்கு அடுத்தது என்று பேசப்படும் நடிகர் கூட இன்றளவில் நடிகர் திலகம் நடிப்பை பற்றி ஆராய பேச இன்னும் பக்குவப்படவில்லை எந்தவிதத்திலும் என்றேன் !
மேலும் நீங்கள் முடிந்தால் அவர் இப்போது மணல்வெளியில் நடக்கிறாரே walking stick வைத்து ..அதே போல ....அல்லது ....அதில் ஒரு 10% நடக்க இங்கு முயன்று பாருங்கள் சார்..உங்களால் நிச்சயமாக நடக்க முடியாது என்றேன் ஆணித்தரமாக !
இதை கூறியவுடன் அவரது கன்னம், காது, மூக்கு இவை அனைத்து செக்க செவேல் என்று ஆயிற்று. மனிதர் கோபம் கொண்டுவிட்டார் நான் கூறியதை கேட்டு ...!
ஒரு கணம் என்னை பார்த்தவர், i think you felt bad about my comment .....am sorry about that ! I second your statement ! என்று கூறி ..கிடு கிடுவென மாடிக்கு சென்றுவிட்டார் அவர் மனைவியிடம் see you dear ...என்று உரைத்தவுடன் !
வேதாளம் முருங்கை மரம் எத்தனை முறை ஏறினால் என்ன , ? பிடித்து இழுத்து முதுகில் கிடத்தும் விக்ரமாதித்த்யன் உள்ளவரை !
இதை இங்கு கூறுவதற்கு காரணம் ...அந்த நடிகரை கூட கேள்வி கேட்டவன் நான் ...புரியவைத்தவன் நான் !
விமர்சனம் என்ற பெயரில் ....nadigar thilagam பற்றி யார் இங்கு மறைமுகமாக வஞ்சபுகழ்ச்சியுடன் எப்படி தாக்கி எழுதினாலும், கிண்டலாக எழுதினாலும் எனது கண்களில் இருந்து அவை தப்ப முடியாது !
அதற்க்கு முதல் பதில் பதிவு என்னுடையதாக தான் இருக்கும் என்பதை மிகவும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன் !
நடிகர் திலகத்தை பற்றி எழுதுகிறீர்கள் ...எழுதுங்கள்....!
ஆனால் என்னமோ நீங்கள் தான் அனைத்து நடிப்பையும் கரைத்து குடித்தவர் போல எழுதினால் ..................துள்ளி வருகுது வேல் !
rks
பாராட்டு தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் பல.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.