Wish you all a happy new year - 2013
Wish you all a happy new year - 2013
Wish you all NT Fans a very happy and prosperous new year 2013!!!
Wishing All The Hubbers A Very Happy And Prosperous New Year 2013!
Let this New Year bring all health, wealth and glory to everyone.
Like 2012, let 2013 also see the glorious spectacle of NT films hogging the limelight and being right there at the top!
Regards
NT FANS AND ADMIRERS AND ALL FELLOW HUBBERS
WE have enjoyed the year 2012 like the year 1972.
BOX OFFICE SUCCESS of digitalised KARNAN has given us all more
STRENGTH AND IMMENSE PLEASURE MENTALLY AND PHYSICALLY in all the centres. hope the trend continues expect 2013 alsogive us more such happenings. LET US ALL UNITE AND MAKE EVERY STONE UNTURNED TO GREATER HEIGHTS. WE have no personal or personality clashes some small difference of opinions here and there like in all families exist sometimes which are nothing but PASSING CLOUDS and it wiibe eliminted in the course of time.
so let us all united and make this thiri a VERY GREAT SUCCESS.
once again with NEW YEAR GREETINS ALL OUR HUBBERS.
அனைத்து நண்பர்களுக்கும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலும் நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசிப் பறந்து இனி வரும் காலம் நமதே என பறை சாற்றப் போகிறது. அதற்காக உழைக்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் முன்கூட்டியே பாராட்டுக்கள்.
முரளி சாரையும் பம்மலாரையும் ஆதிராம் பாராட்டியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமே. இதில் அனைவரும் உடன் படுவதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதனை அவர் உளமார சொல்லியிருந்தாரென்றால் மற்ற கருத்துக்கள் அங்கே இடம் பெற்றிருந்திருக்காது.
யாரைப்பற்றி சொன்னாலும் சொல்லா விட்டாலும் பம்மலாரும் வாசுவும் ஆற்றியுள்ள மகத்தான பணியினை நாம் ஒவ்வொருவரும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். சாதனைகளின் சக்கரவர்த்தி என்ற தலைப்பை ஆணித்தரமாகக் கூறும் வண்ணம் பம்மலார் தன்னிடமிருந்த ஆவணங்கள் மூலம் நடிகர் திலகத்தின் பெருமையை நிலைநாட்டினார் என்றால் நெய்வேலி வாசுதேவன் சார் ஆற்றியுள்ள பணி மற்றொரு பக்கம் மகத்தானது. எண்ணிலடங்கா இரவுகள் உறக்கத்தினை துறந்து காணொளிகள், நிழற்படங்கள் என நடிகர் திலகத்தின் பரிணாமங்களை உலகறியச் செய்தார். நடிகர் திலகத்தின் நாயகியர் தொடர் இத்திரிக்கு ஒரு மகுடமாக திகழ்ந்தது. அபூர்வமான பல தகவல்களுக்கு பொக்கிஷமாக விளங்கின அவருடைய பதிவுகள். அதே போல் பலரும் பார்த்திராத ஸ்கூல் மாஸ்டர் கன்னடம், மனோகரா தெலுங்கு, பக்த ராமதாஸு, தர்த்தி போன்ற நடிகர் திலகத்தின் இதர மொழிப்படங்களிலிருந்து காணொளிகள், சிவாஜிக்கும் சண்டைக் காட்சிக்கும் ரொம்ப தூரம் என்று கேலி பேசியவர்களின் வாயை அடைத்து நடிகர் திலகத்தின் ஸ்டன்ட் காட்சிகளுக்கென்றே தனிப் பதிவுத் தொடர் தந்தது அதுவும் அந்தக் காட்சிகளை தனியாகப் பிரித்து அதனை காணொளியாக்கி, இணையத்தில் தரவேற்றி நமக்காக இங்கே தர அவர் மேற்கொண்ட உழைப்பும் சக்தியும் நம் யாராலும் திருப்பித் தரமுடியாத பங்களிப்பு, அதே போல் பம்மலாரும் வெறும் சாதனை ஆவணங்கள் மட்டுமின்றி [அவர் 2009லேயே இங்கே வந்து விட்டார், 2011ல் தான் விளம்பர ஆவணங்கள் தரத் துவங்கினார், அதற்கு முன்னர் அவர் அளித்துள்ள பங்களிப்பினை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும், நடிகர் திலகத்தைப் பற்றிய அவருடைய கேள்வி பதில் தொகுப்பு ஒரு உதாரணம், பல்வேறு நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த நடிகர் திலகத்தைப் பற்றிய பல அபூர்வ தகவல்கள் வேறு எங்கும் கிடைக்காதவை] இது போன்று பல பதிவுகள் இந்த இருவரும் இந்த மய்யத்தில் நடிகர் திலகத்தின் திரிக்கு எவ்வளவு பெரிய தூண்களாக விளங்கினர் என்பதற்கு சான்று. இங்கு நாம் அனைவருமே ஒருவரை ஒருவர் பாராட்டி பதிவுகளால் நடிகர் திலகத்தின் புகழைப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவ்வப்போது யாராவது இங்கே இது போன்ற பதிவுகளால் மன வருத்தத்தை உண்டாக்க முற்படுவது, மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இது போன்ற தொரு மன வருத்தம் சில மாதங்களுக்கு முன் வந்த சில பதிவுகளால் ஏற்பட்டு அதனுடைய காயம் ஆறு முன் மீண்டும் அதே போன்ற தொரு காயம் உண்டாகும் சூழ்நிலை வருவதை நம்மால் ஏற்க முடியவில்லை.
வரும் ஆண்டில் நடிகர் திலகத்தின் படங்கள் பெறக் கூடிய வெற்றி, அதற்கான நம்முடைய உழைப்பு அதனை நாம் நிறைவேற்ற எந்த அளவிற்கு முனைப்புடன் ஈடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் நம்மிடையே ஏற்படக் கூடிய புரிந்துணர்வு தான் நிர்ணயிக்கும்.
அந்த அடிப்படையில் நாம் வரும் ஆண்டை எதிர்நோக்குவோம்.
Wish you all NT fans a very happy new year 2013!:-D
Dear friends,
A humble new year treat for u.
Nadigar Thilagam calendar in 3D. Pls view with 3d glasses.
http://i1146.photobucket.com/albums/...l2013EFW3d.jpg
http://i1146.photobucket.com/albums/...l2013F3dfw.jpg
[]அனைவருக்கும் உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !]
லட்சுமி கல்யாணம் கொழும்பு...ஜெஸிமா ..ஓடிய நாட்கள்...81Quote:
2nd January 2011, 01:14 AM#1006
Murali Srinivas
Moderator Seasoned Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Mar 2006Posts: 1,979
லட்சுமி கல்யாணம் - Part III
ஏ.எல்.ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை படத்தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே. ஒரு படத்தை எப்படி திட்டமிட்டு தயாரிப்பது, அதை குறிப்பிட்ட காலத்தில் எப்படி வெளியிடுவது போன்றவை அவருக்கு கை வராத கலை. ஜெமினி, சிவகுமார் ஆகியோரை வைத்து ஏ.பி.என் இயக்கத்தில் கந்த லீலா என்ற பெயரில் படம் தயாரித்தார். அது இடையில் வைத்து நின்று போனது. அந்நேரம் வெளியான திருவிளையாடல் படத்தின் இமாலய வெற்றியை பார்த்த விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தை இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று பிரஷர் கொடுத்தனர். ஏ.எல்.எஸ் மற்றும் ஏ.பி.என். இருவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் வீரபாகு ரோலை ஏற்றதும் படம் கந்தன் கருணை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதும் நமக்கு தெரிந்ததே. அது 1967 ஜனவரியில் வெளியானது. அப்போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் லட்சுமி கல்யாணம். பிசியான ஆர்டிஸ்ட்களை வைத்து படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவர்களின் கால்ஷீட் கிளாஷ் ஆக வழக்கம் போல் வெளியிட தாமதமானது.
கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன். சிவாஜி வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தங்கையை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சொல்லும் இடத்திலும், நம்பியாரை வெட்டுவதற்காக அரிவாளுடன் கிளம்பும் சிவாஜியை நிர்மலா தடுக்கும் காட்சியிலும் மட்டும் இடம் பெறும் தூய தமிழ் வசன பாணியை தவிர்த்து விட்டால் வசனங்கள் இயல்பான தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். கிழவங்கதானே இப்போதெல்லாம் லவ் பண்றாங்க போன்ற சில கிண்டல் வசனங்களும் உண்டு.
ஒளிப்பதிவு இயக்கம் GOr நாதன். ஒளிப்பதிவு ஓகே. ஆனால இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தில் குறை என்று சொன்னால் படத்தின் மையப் பகுதியான மேஜர் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார் ஏன் அவரை போலீஸ் தேடுகிறது, அவர் யாரை எதற்காக கொலை செய்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் ஏற்பட்ட பிழையா இல்லை கால்ஷீட் பிரச்சனைகளினால் எடுக்க முடியாமல் போய் விட்டதா என்று தெரியவில்லை. அது போல நம்பியாரின் ஆட்களுடன் நடிகர் திலகம் போடும் சிலம்பு சண்டை காட்சியையும் இன்னும் சற்று நன்றாக எடுத்திருக்கலாம்.
கவியரசரின் சொந்தப் படம் எனும் போது மெல்லிசை மன்னர் விட்டு விடுவாரா?
1. போட்டாளே! போட்டாளே! உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே! - சோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வரும் பாடல். சிவாஜி, சோ மற்றும் நிர்மலாவிற்கு முறையே டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் மற்றும் ஈஸ்வரி பாடியிருப்பார்கள். கேரக்டரின் தன்மையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு உள்வாங்குவார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் ஒரு ஷாட் உதாரணம். நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்து விடுகிறது. இதை நடிகர் திலகமும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்ய, இதை கவனித்து விடும் நடிகர் திலகம் இயல்பாக இருவருக்கு இடையில் நுழைந்து ஒரு அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையை தான் பற்றி பாலாஜியை ஒரு லுக் விட்டுக் கொண்டே ஸ்டெப் போட்டு போவார். இதை எந்த இயக்குனரும் அவருக்கு சொல்லித் தராத நுணுக்கம். இதே பாடலின் இன்னொரு சரணத்தில் முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் என்ற வரியை கவனித்து கேளுங்கள், சிவாஜிதானே பாடியிருப்பார். டி.எம்.எஸ். என்று தவறுதலாக போட்டு விட்டார்களோ! படம் வெளி வருவதற்கு முன் இறுதி சரணத்தில் வரும்
கண்ணா உன் ஆட்சியிலே
கல்யாண சீசன் வரும்
என்ற வரியை பற்றி அது கண்ணாவா இல்லை அண்ணாவா என்று ரசிகர்கள் இடையில் ஒரு விவாதம் இருந்தது. காரணம் படம் வெளியாகும் போது அண்ணாவின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த நேரம்.
2. ராமன் எத்தனை ராமனடி - படத்தின் மிகப் பிரபலமான பாடல்- சுசீலாவின் தேன் குரலில்.
பாலாஜி பெண் பார்க்க வரும்போது நிர்மலா சிதார் வாசித்துக் கொண்டே பாடுவதாக அமைந்திருக்கும் கண்ணதாசன் ராமன்களை வைத்து விளையாடியிருப்பார். பாடலின் நடுவில் திரையில் ஒரு பகுதியில் [வேறு சில நடிகர்களை வைத்து எடுத்த] ராமாயணக் காட்சிகள் இடம் பெறும். நிர்மலாவின் நடனமும் உண்டு. பாடல் முடிந்தது கூட தெரியாமல் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள். அது பாடல் கேட்பவர்களுக்கும் பொருந்தும் என சொல்லலாம்.
3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.
நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே
பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!
[மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]
இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.
4. பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - மீண்டும் சுசீலாவின் தேன் குரல்.
இரண்டாவது முறையும் திருமணம் தடைபட, சௌகார் கையாகலாத கோவத்தில் நிர்மலாவை ராசியற்றவள் என்ற அர்த்தத்தில் திட்டி விட, கண்ணனிடம் சென்று நிர்மலா நியாயம் கேட்கும் பாடல். கண்ணதாசனின் பேனாவிற்கு சரியான தீனி.
5. வெட்டவெளி பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.எஸ்.
நடிகர் திலகம் விரக்தியில் பாடும் பாடல். இங்கேயும் சமுதாய சாடல்கள் இருக்கும். கோவிலின் முன்னால் நின்று நடிகர் திலகம் பாடுவதாக வரும் வரிகள் பளீரென்று இருக்கும்.
தெய்வம் ஆளவில்லையென்றால்
பேய்கள் ஆட்சி செய்யும்ம்மா!
என்ற வரிகளின் போது 42 வருடங்களுக்கு முன்பு கேட்ட கைதட்டல் இன்றும் காதில் ஒலிக்கிறது.[ஆனால் தமிழகத்தின் நிலைதான் மாறவில்லை]
6. தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா- டி.எம்.எஸ்-சீர்காழியார்.
கல்யாண மாப்பிள்ளையாக வி. கோபாலகிருஷ்ணனை வைத்து ஊர்வலம் வரும்போது நம்பியாரையும், சி.கே.சரஸ்வதியையும் கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகமும் வி.கே.ஆரும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப் பாட அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
இப்போது பட ரிலீசிற்கு வருவோம். முதலில் சொன்னது போல படம் எப்போதெல்லாம் combination கால்ஷீட் கிடைத்ததோ அப்போதெல்லாம் எடுத்த படம். ஆகவே இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத சூழல் [ஒழுங்காய் எடுத்த படம் மட்டும் பார்த்து ரிலீஸ் பண்ணினார்களா என்ற கேள்வி எழுவது காதில் விழுகிறது]. 1968 தீபாவளிக்கு [அக்டோபர் 21] வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் எங்க ஊர் ராஜா ஏற்கனவே தீபாவளிக்கு கமிட் ஆகியிருந்தது. ஏ.விஎம் வேறு உயர்ந்த மனிதன் நவம்பர் 29 ரிலீஸ் என்று அறிவித்து விட்டார்கள்.இனியும் காத்திருந்தால் பொங்கல் ஆகி விடும். அப்போதும் படங்கள் ரிலீசிற்கு இருக்கின்றன. சரி பரவாயில்லை என்று துணிந்து நவம்பர் 15 அன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இங்கேதான் கவனிக்க வேண்டும்.
1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் சிந்தாமணியில் வெற்றிகரமாக 132 நாட்கள் ஓடிய பிறகு வெள்ளைக்கண்ணு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு சக்கைப் போடு போட்டது. இவை எல்லாம் போதாதென்று உயர்ந்த மனிதன் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் போது அடுத்த வெளியீடாக 1969 ஜனவரி 1 அன்று அன்பளிப்பு வெளியாகிறது.
லட்சுமி கல்யாணம் கமர்ஷியல் படம் இல்லை. பொழுது போக்கு படம் இல்லை. கலர் இல்லை. கருப்பு வெள்ளை படம். டூயட் இல்லை. ஏன், ஜோடியே இல்லை. சராசரி ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி, போட்டிக்கு நின்ற நடிகர் திலகத்தின் படங்களையும் சமாளித்து இந்த படம் பெற்ற வெற்றி இருக்கிறதே, அது சாதனை. அதுதான் சாதனை.
தில்லானா -132 நாட்கள்
எங்க ஊர் ராஜா - 85 நாட்கள்
உயர்ந்த மனிதன் - 105 நாட்கள்
லட்சுமி கல்யாணம் - 60 நாட்கள்.
ஆம் மதுரை ஸ்ரீதேவியிலும், கோவையிலும் 60 நாட்கள். இந்தப்படமே எதிர்பாராமல் வெளியானதால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் பொங்கலுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதுரையில் பொங்கலுக்கு வேறு படத்திற்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.
ஆறு மாதங்களுக்கு ஒரு படம் வெளியிட்டு ஒட்டப்பட்டவை அல்ல சிவாஜி படங்கள். இது போன்ற எதிர்மறையான சூழலிலும் தனது படங்களே தனது படங்களுக்கு போட்டியாக வரும் நேரத்திலும் வெற்றிகளை அடைந்தவர் நடிகர் திலகம்.
சிவாஜி ரசிகர்கள் எப்போதும் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி சொல்வோம். 80 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் நடிப்புக் கலையிலும் சரி, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளிலும் சரி வரலாறு படைத்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் ஒருவரே.
இந்தப்படத்தைப் பற்றி நடிகர் திலகமே தனது ஒரு வரி விமர்சனத்தில் "இவ்வளவு பெரிய ரசிப்பை நானே எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார் என்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் புரிந்துக் கொள்ளலாம்.
அன்புடன்
This is a film close to Raakesh and this is being written to make him visit here often rather than the occasional peep ins. Thanks to Radhakrishnan and Senthil also for bringing this movie for discussion. And Thanks to Swami for providing accurate data.
நடிகர் திலகம் பாகம்..7 ..பக்கம்..101
To All NT FANS,
with warm regads,
A.Balakrishnan
Wish you a Happy & Prosperious New year to fellow hubbers and millions of
NT's Fans
NEW YEAR GREETINGS TO ALL HUBBERS. It is very much truethat absence of pammalar and vasu felt by all of us very badly. COLOURFUL PHOTOS AND NEWS COLLECTIONS MISSING FOR SOMETIME PROVES THEIR WORTH CERTAINLY. Murali sir LAKSHMI KALYANAM REVIEW simple and nice like the picture.
UPcorse fellow hubbers gives their collections here and there which certainly deseves
lot of appreciatons.
Hi All:-D
Since my brother Sasi invaded my territory in the ‘NT Hub’ and temporarily nicked my I.D in order to join the ‘NT Cult’, I stayed away from his over enthusiasm and knew it was only for the time being. But I have been reading all the comments and articles by followers since May2012. Now my bro ‘kind of’ appointed me as his heir to the ‘NT worshiping cult’, I am here to introduce myself officially in the New Year. I’m hesitating however, as there aren’t any female NT fans in sight. But I’m determined to bring some feminine touch to the thread! There was an extra ordinary female follower called Saradha whose writings I admire very much. I have to say, I’m nowhere near her or the NT experts currently in this hub, but I am here to do my part to get this thread going. I’m Vanaja and I have a serious illness called, ‘obsessive, compulsive NT syndrome’ which has been growing uncontrollably since I joined this hub in May2012:mrgreen:. Every time I read a piece on a NT movie, I would get ‘brain’ seizures which wouldn’t stop until I take remedy for that; watching the movie itself! For that I would happily blame you all. I consider you, kindred spirits, my brothers and come on! lets get this cooking!!
Dear Friends,
Wish you all a very happy and prosperous New Year.
Regards,
R. Parthasarathy
அன்பு சகோதரி வனஜா,
[மிகவும் இளையவரென்றால் மகளெனக் கொள்கிறேன்]. தங்களுக்கு முதற்கண் அனைவர் சார்பிலும் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் கூடிய வரவேற்பினை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். தங்களுடைய பதிவின் மூலம் மாற்றுப் பாலினம் மத்தியில் நடிகர் திலகம் என்ற பார்வை நம்மிடைய ஒரு புதிய பரிணாமத்தில் அவர் படங்களைப் பற்றிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வழி கிடைக்கிறது. அதற்கு முதலில் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
தங்களைப் போன்ற மகளிரை இவ்வாறு தான் எண்ணுவதற்கு நடிகர் திலகம் கற்றுத் தந்துள்ளார்.
http://youtu.be/R9zT_GGGL7M
இங்கு நம்முடைய ஹப்பில் உள்ள ஒவ்வொருவரையும் பாசமலர் ராஜசேகரனாக எண்ணிக் கொள்ளுங்கள். நாங்கள் தங்களை பாசமலர் சாவித்திரியாக நேசிக்கிறோம்.
அன்புடன்
ராகவேந்திரன்
இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தான்! அன்பு அண்ணா ராகவேந்தர்! உங்கள் அன்புக்கு நன்றி. எப்போதும் புதியவர்களை வரவேற்பதில் நீங்கள் முன் நிற்பீர்கள் என்பதை நான் ஏற்கனவே சசி மூலம் பார்த்திருக்கிறேன். யார் நடிகர் திலகத்தின் அதி தீவிர பக்தர் என்பதில் நான் எப்போதும் சசியுடன் வாதம் செய்வேன் (விளையாட்டாகத்தான்!). என்னைப்பொருத்த வரையில் சிவாஜி என்னமாதிரியாக நடித்தாலும் இரசிக்க கூடியவள். பெண்கள் இத்திரியில் பெரிதாக பங்கு கொள்ளாததற்கு காரணம் நேரம் கிடைக்காமை தான். அவர்கள் வீட்டு பொறுப்பை பார்த்துக்கொள்வதால் இதற்கெல்லாம் நேரமில்லை. வாழ்க்கையில் எனக்குள்ள ஒரே குறை நடிகர் திலகம் சிவாஜியை நேரே சந்திக்க முடியவில்லை என்பதே. ( சந்திக்க விரும்பிய பிறர்:- பாரதியார், கல்கி, ராஜராஜ சோழன், கட்டபொம்மன்!- இவர்களில் ராஜராஜ சோழனையும் கட்டபொம்மனையும் நான் அடிக்கடி (சிவாஜி மூலம்)பார்ப்பேன்!!) நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிய நாட்கள் மற்றும் பின்னணி செய்திகள் எனக்கு தெரியாவிடினும் அவரின் படங்களில் நான் இரசித்தவற்றை தவறாமல் எழுதுவேன். நான் அடுத்த தடவை சென்னைக்கு வரும்போது, சிவாஜி ரசிகர் மன்றம் சார்பாக நீங்கள் திரையிடும் படத்தைப் பிற இரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறேன். அந்த நல்ல நாள் இந்த வருடத்திலும் வரலாம். அப்போது உங்களுடன் தொடர்பு கொள்வேன்.
1995 ஆம் வருடத்தில் எங்கள் குடும்பம் (அப்போது எமது பெற்றோர் உயிருடன் இருந்தனர்) தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது. ஒரு நாள் நாங்கள் ஒரு van ல் சென்னையை சுற்றி வந்தபோது , 'செவாலியே சிவாஜி கணேசன் சாலை' யால் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது. சாரதி சிவாஜி வீட்டினை சுட்டிக்காட்ட உற்சாகமடைந்த நான், உடனே எனது 'camcorder' ஐ எடுத்து படமெடுக்கத் தொடங்கி விட்டேன். அதைப்பார்த்த எனது மாமி, (அவர் அப்போது சென்னையில் வசித்தார்) அப்போதுள்ள அரசியல் நிலைமையை சொல்லி வேண்டாம் என்று தடுத்துவிட்டார். சிவாஜி பேத்திக்கும் முதல்வர் வளர்ப்பு மகனுக்கும் அப்போது தான் திருமணம் நடந்திருந்தது. அன்று நான் எடுத்த காணொளியில் தெரிவதெல்லாம் 'அன்னை இல்ல'த்தின் உச்சியில் தெரியும் அந்த புத்தகம் படிக்கும் சிறுவன் சிலை தான்! அதற்கு நான் 're -recording' செய்த பாட்டு: பசும்பொன் படத்தில் வரும் 'தென்னாட்டு சிங்கமே'! இப்போது நான் அந்த காணொளியைப் பார்க்க தயங்குவேன், காரணம், அதில் இருந்த எனது பெற்றோரும் இன்றில்லை; நடிகர் திலகமும் இன்றில்லை
happy new year 2013
with cine god shivaji blessings
happy new year 2013
Welcome Mr Balaa after a long gap and also Warm welcome to
Mr Sashidhar sister.
Wish you a Happy new year vasu sir
2013 is a Nadigar thilagam Shivaji's year,because Vasanthamaligai,Pasamalar,Veerabandiya kattabomman will be released in this year,so we are going to celebrate this year fully.
ENJOY!
As the year 2012 belongs to "Karnan" the coming years also will be that our one and only NT.
Creating records of sorts even after his death. No can match or nearar to his records.
சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்!
தூரத்தில் நின்றபடி சிவாஜி என்ற சிங்கத்திற்கு இறைச்சித்துண்டைக் காட்டிவிட்டு பின்னர் அதைத் தந்திரமாகக் கூண்டில் அடைத்து அதற்கு (கமலஹாசன் சொல்வது போல) தயிர் சாதம் கொடுத்து பட்டினி போட்ட, 80 களில் முளைத்த சில இயக்குனர்கள் (பாரதிராஜா போன்ற ஒரு சிலர் தவிர) மீது எனக்கு கோபமான கோபம்.
200 இற்கும் மேல்பட்ட படங்கள் இருக்க, 80 களில் வந்த ஒரு சில சிவாஜி படங்களைப் பார்த்துவிட்டு அந்த நடிப்புச் சக்கரவர்த்தியின் நடிப்பை நேற்று முளைத்த காளான்களும் சுள்ளான்களும் விமர்சனம் செய்யுமளவிற்கு அவர்கள் கொண்டுவந்து விட்டதால் எனக்கு எரிச்சலோ எரிச்சல்.
1952 இலிருந்து 1999 வரையில் எல்லாத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அந்த அட்சய பாத்திரத்திடமிருந்து தத்தமக்குத் தேவையான பங்கை எடுத்து வந்திருக்கின்றனர். 80 களில் வந்தவர்கள், தாமும் அந்த சிங்கத்துடன் சம்பந்தப்பட்டதாக சரித்திரம் புகழவேண்டும் என்ற ஆசையில் அதன் பெயரில் குளிர் காய விரும்பினார்களேயொழிய, அச் சிங்கத்துக்கான உரிய தீனியை கொடுக்கவில்லை. அவர்கள் எல்லோருக்கும் சிவாஜி அழவேண்டும், காதல் செய்யவேண்டும், உணர்ச்சி வசப்படவேண்டும். இடையிடையே சண்டை போடவும் வேண்டும். மற்றைய நடிகர்கள் செய்வதையே சிவாஜியும் செய்யவேண்டும் என எதிர்பார்த்தனர். சிவாஜிக்கிருந்த தனித்திறமையை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் வெளிக்கொணரப் பெரும்பாலானோர் முயலவில்லை.
80 களில் நடிகர் திலகத்திற்கு அளிக்கப்பட்ட பல கதாபாத்திரங்கள் ஆழமாகச் சித்திரிக்கப்படவில்லை. 'டூயட்' இல்லாமல் வந்த தில்லானா மோகனாம்பாள் வெற்றிகரமாக ஓடவில்லையா? கௌரவத்தில் பார்த்த 'overly confident' ஆன ஒரு barrister ஐப் போல வேறொரு கோணத்தில், மனோவியல் ரீதியாக ஒரு கதாபத்திரத்தைச் சிருஷ்டித்திருக்கலாமே. ஆனந்த கண்ணீரிலும் சிம்ம சொப்பனத்திலும் சிவாஜியின் கதாபாத்திரங்களை மேலோட்டமாக வெறுமே கர்ஜிக்க விட்டிருந்தார்கள். மனைவி, மக்கள் என்றொரு கூட்டத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்க விரும்பினார்கள் தயாரிப்பாளர்கள். இதெல்லாவற்றையும் தான் சிவாஜி ஏற்கனவே செய்துவிட்டாரே. இதெல்லாம் முடிந்துபோன விடயம் என்றாலும் ஒரு சிவாஜி ரசிகைக்குரிய ஆதங்கம் தான்.
சிவாஜிக்கென்று வருடக்கணக்காக ஒரு கதையை சிறப்பாக எழுதி, அதை இன்னும் சிறப்பாக எம்முன் பாரதிராஜா படைக்கவில்லையா? அவரது ஆர்வம் ஏன் பிற இயக்குனர்களுக்கு வரவில்லை? துரையின் 'துணை'யில் நாம் பார்த்தது தசரத ராமனைத்தான், நடிகர் திலகத்தையல்ல. அழாமல், அதிகமாக உணர்ச்சி வசப்படாமல் அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தது அச்சிங்கம்.
அறுபதுகளின் இறுதியில் சிவாஜியில் திரை வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை உருவாக்கினார் பாலாஜி. அத்திருப்பம் வியாபார ரீதியில் பலருக்குப் பயனளித்ததுடன் சிவாஜி நடிப்பின் இன்னொரு கோணத்தையும் ரசிகர்களுக்குக் காட்டியது. வசந்தமாளிகை, ராஜா போன்ற போழுதுபோக்குப் படங்கள் எம்மை மகிழ்வித்தன. காவல் தெய்வத்தில் சிங்கம் 'சிங்கிள்' ஆக வந்தாலும் தாக்கு வழங்கப்பட்ட 'முறையான' தீனியை ருசித்து கர்ஜித்துவிட்டுச் சென்றது. தெய்வமகனில் அச்சிங்கத்தின் மூன்று பரிணாமங்களுக்கும் தீனி கிடைத்தது.
ஆனால் 80களில் வந்த இயக்குனர்கள் (அவர்களில் 70 களில் வெற்றிப்படங்களைக்கொடுத்த இயக்குனர்களும் அடங்குவர்) தேவையில்லாமல் நடிகர் திலகத்துக்கு இரட்டை வேடம் மூன்று வேடம் என்று கொடுத்து அச்சிங்கத்தைக் கூண்டில் அடத்துவிட்டிருந்தார்கள்.
ஆனால் பட்டினியாய்க்கிடந்தாலும் கூட அச்சிங்கம் தன் பணியைச் செவ்வனே செய்துவிட்டிருந்தது. அவர்கள் கேட்டதற்கு மேலேயே கொடுத்தது. யாரையும் நட்டப்படுத்த விரும்பவில்லை. அரசியலில் இருந்தவர்கள் தனது பிரபல்யம் என்ற சூரிய ஒளியில் குளிர் காய அனுமதித்ததைப்போல, தனது திறமை என்ற தென்றலில் தயாரிப்பாளர்களைத் தாலாட்டியது அச்சிங்கம்.
இந்த வகையில் நாம் போற்றிப் பூஜிக்கவேண்டியவர்கள், அச் சிங்கத்துக்கு ஓரளவாவது நல்ல தீனி போட்ட தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் தான். அவர்கள் படைப்பில் வந்த நல்ல சிவாஜி படங்களை, பெரிதாகப் பேசப்படாமலிருக்கும் படங்களைத் தொலைக்காட்சியில் திரையிடுவதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அவற்றைப் பிரபலப்படுத்தவேண்டும். நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லை தில்லானா மோகனாம்பாளுடனும் கௌரவத்துடனும் நின்று விடவில்லை. 300 படங்களில் எமது ரசிப்புக்கேற்ற வகையில் எத்தனையெத்தனை பாத்திரப்படைப்புகள்! அவற்றையெல்லாம் இன்றைய பார்வையாளரிடம் கொண்டு செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தற்போதைய ஊடகங்களைப் பயன்படுத்தவேண்டும். திறனாய்வாளர்கள் அந்த படங்களில் சிவாஜியின் நடிப்பு பரிணாமங்களைக் குறிப்பிட்டு அவற்றின் மேல் பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணவேண்டும்.
Wish you and your family a very Happy New Year 2013
Vanaja Madam,
Your detailed analysis of our Singam is a nice one. NT has given equial number of
hits even after 1980.
[u]நடிகர் திலகத்தின் முழுமையான வாழ்க்கை
பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கை தனிப்பட்ட, தொழில் ரீதியான மற்றும் பொது வாழ்க்கை என்ற மூன்று கோணங்களில் பரிணமிக்கிறது. பெரும்பாலான மனிதர்கள் தமது தனிப்பட்ட, தொழில் வாழ்க்கைகளில் தத்தமக்கேற்ற எல்லைகளில் காரியங்களைச் செய்துவிட்டோ அல்லது சிறிதாகச் சாதித்துவிட்டோ போய்ச்சேர்ந்து விடுகிறார்கள். வாழ்க்கையின் இந்த எல்லாக் கோணங்களிலும் வெற்றி கண்டவர்கள் மிகச்சிலரே.
அந்த வகையில் ஒரு முழுமையான வாழ்க்கையை, அதையும் பிறர் போற்றத்தக்க வகையில் மிகத்திறமையாக வாழ்ந்து காட்டியவர் தான் எமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
நடிகர் திலகத்தின் வாழ்க்கையை நாம் நான்கு பரிணாமங்களாக பிரிக்கலாம்:
1-தனிப்பட்ட வாழ்க்கை
2-தொழில்/கலை வாழ்க்கை
3- பொது வாழ்க்கை
4-அரசியல் வாழ்க்கை
இந்த நான்கிலுமே அவர் வெற்றி பெற்றதுடன் தனது தொழில்/கலை வாழ்க்கையில் இமயத்தையும் எட்டியவர். அவரது துறையில் சம காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் இருந்தவர்களின் வாழ்க்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது தெளிவாகிறது.
தனது குடும்ப வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் என ஒரு பெரும் கூட்டுக் குடும்பமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து, தமிழர் பண்பாட்டின் சின்னமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையை நிரூபித்துக்காட்டினார். தானுண்டு தனது மனைவி பிள்ளைகளுண்டு என வாழ்ந்து விட்டுப்போகும் பலர் மத்தியில், தனது சகோதரர்கள் குடும்பத்தினருக்கும் வாழ வழிகாட்டியவர் நடிகர் திலகம். இந்த வகையில் அவர் ஒரு நிறைவான, போற்றுதற்குரிய குடும்பத்தலைவர்.
நடிகர் திலகத்தின் தொழில்/கலை வாழ்க்கையைப்பற்றிப் பேசத்தேவையில்லை. அதில் அவர் கண்ட உச்சம் உலகறிந்த ஒன்று. தனது ஒப்பற்ற நடிப்பினால் அவர் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த பங்களிப்பினையும் இவரின் கலை வாழ்க்கையினுள் அடக்கலாம்.
காவிய நாயகன் கர்ணனாகவும் கம்பன் மகன் அம்பிகாபதியாகவும் வாழ்ந்து காட்டி தமிழைச் சுத்தமாகவும் கம்பீரமாகவும் உச்சரித்து, அதைப்பெருமைப்படுத்தினார். சரித்திர நாயகர்களான கட்டபொம்மனையும் ராஜராஜசோழனையும் பாமர மக்களிடமும் அறிமுகப்படுத்தினார். புராதன இந்து சமயத்தின் பெருமைகளையும் கலாச்சாரத்தையும் திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற படங்கள் மூலம் சொன்னார்.
பொது வாழ்க்கையில் அவர் எத்தனையோ நல்ல காரியங்களையும் உதவிகளையும் சத்தம் போடாமல் செய்திருக்கிறார். தான் பெரிதாகப் புகழடையத்தொடங்க முன்பே அவர் அளித்த கொடைகள் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அதை வைத்து அவர் புகழ் பெற முயன்றதுமில்லை.
அரசியல் வாழ்க்கையிலும் அவர் தமது பங்களிப்பை செய்து வெற்றியும் அடைந்திருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்பு உறுப்பினராக ஆனார். தான் போற்றிய தலைவர்களுக்குரிய தொண்டுகளை செய்தார்.
இதைவிட ஒரு மனிதன் வாழ்க்கையில் பெரிதாக எதை அடைந்துவிடமுடியும்? தேசிய விருதுகள் தனக்குக் கிடைக்காததையிட்டு அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளாததில் ஆச்சரியமில்லை. அதைவிடப்பெரிய சாதனைகளையெல்லாம் அவர் தனது வாழ்க்கையில் அடைந்துவிட்டிருந்தார். நடிகர் திலகம் தனது வாழ்க்கையைப் பரிபூரணமாக வாழ்ந்திருந்தார்.
வாழ்க நடிகர் திலகத்தின் புகழ்!
Vanaja Madam,
With your active participation like your brother and also your various inputs on NT,
the thread comes into action again. We can slowly increase the tempo in the
coming days.
sollukindra nabar puththam pudhusu..
sollum vishayam aradhap pazhasu..
'puthiya mondhaiyil pazhaiya kallu'.
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்
உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.
ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்
கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்
ஆதிராம் சார்,
ஒரு சின்ன விண்ணப்பம். திரி என்பது ஆராய்ச்சி கூடமல்ல. பொதுவில் ஒரு விஷயத்தில் நாட்டம் கொண்டவர்கள் கூடி விவாதித்து பரிமாறி கொள்ளும் இடம்.எப்போதும் எல்லா விஷயங்களும் ,எல்லோரிடமிருந்தும் புதுசாக வர முடியாது.ஆனால் எல்லோரும் பரிமாறி கொள்ளும் போது ,ஓரிரண்டு புதுசாக அக படும். அத்தோடு ,புதிது புதியதாய் பார்வையாளர்கள் வருவர். அவர்கள் ,பழைய பாகங்களை முழுதாக படிப்பார் என்றும் சொல்ல முடியாது.அப்போது ,எந்த விஷயமாயினும்,அவர்களுக்கு சுவையானதாகவே இருக்கும். யாரையும் திட்டி, விமரிசித்து, அவர்களை திரியிலிருந்து விரட்ட வேண்டாமே ப்ளீஸ்.
எல்லோர் பங்களிப்பையும் வர வேற்போம். நல்லதை பாராட்டுவோம். மற்றவற்றிற்கு, மௌனியாய் இருத்தல் நலம்.
திரு கோபால் அவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .
நான் நடிகர்திலகம் திரிகள் அனைத்தும் பார்வையாளனாக படித்து அதில் உள்ள பலருடைய பதிவுகளை படித்து மகிழ்ந்தவன் .
திரு முரளி அவர்கள் குறிப்பிட்டது போல பலர் நடிகர் திலகத்தின் சாதனைகளை அவரவர் நடையினில் அருமையாக வழங்கியுள்ளனர் .
திரு ஜோ அவர்கள் கூறியது போல நடிகர் திலகம் தான் முதன்மையானவர் . அவரது புகழ் பாடுவது பதிவாளர்களின் கடமை .
ஏதோ 'ஏழைக்கேற்ற எள்ளுருண்டை' மாதிரி நானும் இத்திரிக்கு எனது பங்களிப்பை செய்யலாமென்றால் 'பழைய கள்ளு' என்கிறார் சகோதரர் ஒருவர்! அவர் புதுமையாக ஏதாவது எழுதினால் நான் சந்தோஷமாக வாசித்துவிட்டுப்போகிறேன். நான் ஒரு egoistic, ஆனால் சிவாஜி என்று வரும்போது எதுவும் பெரிதாகப்படாது எனக்கு. பழைய கள்ளைக்குடித்துவிட்டு நண்பர் தடுமாறத்தேவையில்லை. There may be other better things for him to do.
ஊர் கூடித் தேர் இழுக்கலாமென்றார்கள். நானும் நடிகர் திலகம் மீதான ஆர்வத்தில் (ஆர்வக்கோளாறில்லை!) ஏதோ எனது சிற்றறிவுக்கு பட்டவரையில் எழுதிவிட்டுப்போகிறேனே! இராமாயணத்து அணில் மாதிரி. எனது சிவாஜி knowledge எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டது தான். பல Ph.D களுக்கு மத்தியில் நான் வெறும் kindergarten kid ஆகவே இருந்து விடுகிறேன். அதில் எனக்குச் சந்தோஷமே!
நான் இங்கே தொடருவேன்.
ஆதரவுக்கு நன்றி, சகோதரர்கள் கோபால், வாசு, முத்துராமன்.
சிவாஜியியல்
நேரம் : 3 மணி ; மொத்த மதிப்பெண்கள் : 100
பகுதி - அ [மதிப்பெண்கள் : 30 x 1 = 30] (எல்லா வினாக்களுக்கும் விடை தருக)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
1. பராசக்தி படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர்
அ) ஞானசேகரன் ஆ) குணசேகரன் இ) ராஜசேகரன் ஈ) சந்திரசேகரன்
2. வாழ்விலே ஒரு நாள் திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்கு ஜோடியாக நடித்தவர்
அ) பத்மினி ஆ) எஸ். வரலட்சுமி இ) பண்டரிபாய் ஈ) ஜி. வரலட்சுமி
3. "மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்" பாடலை இயற்றியவர்
அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) மருதகாசி ஈ) ஆத்மநாதன்
4. சிம்ம சொப்பனம் படத்தின் இசையமைப்பாளர்
அ) இளையராஜா ஆ) எம்.எஸ்.விஸ்வநாதன் இ) கே.வி.மகாதேவன் ஈ) சங்கர்-கணேஷ்
5. தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிக்கு தலைவர் சிவாஜி முதலில் சூட்டிய பெயர்
அ) தமிழக முன்னணி ஆ) தேசிய முன்னணி இ) தமிழக காங்கிரஸ் ஈ) தமிழ் தேசம்
கோடிட்ட இடங்களை சரியான விடை கொண்டு நிரப்புக:
6. பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்காக, பிரதமர் நேருவிடம் நடிகர் திலகம் ரூ.--------------------- அளித்தார்.
7. சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் உருவான முதல் "ப" வரிசைப் படம் -------------------------------------.
8. -------------------------------------------- திரைப்படம் நாதத்தையும், பரதத்தையும் மையமாகக் கொண்டது.
9. சிவாஜி அவர்கள் மூன்று வேடங்களில் (கதாபாத்திரங்கள்) தோன்றிய முதல் படம் ------------------------------.
10. நடிகர் திலகம் ---------------------------------- கோவிலுக்கு யானை அளித்தார்.
(பல கோவில்களுக்கு யானைகளைக் காணிக்கையாக அளித்துள்ளார். ஏதேனும் ஒரு கோவிலுக்கு வழங்கியதைக் குறிப்பிடவும்.)
சரியான விடையைத் தருக:
11. கணேசன் அவர்கள் பிறந்த ஊர் எது?
12. சிவாஜி கணேசன் அவர்களின் இயற்பெயர் என்ன?
13. சிவாஜி அவர்கள் ஏற்று நடித்த முதல் நாடக வேடம் என்ன?
14. இராமாயண நாடகத்தில் சிவாஜி அவர்கள் நடிக்காத மிக முக்கிய வேடம் ஒன்று உண்டு. அது எந்த வேடம்?
15. கணேசன் அவர்களுக்கு சிவாஜி கணேசன் என்று பட்டம் கொடுத்து அழைத்தது யார்?
16. சிவாஜி கணேசன் அவர்கள் எந்த வருடம் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார்?
17. சக்தி நாடக சபாவில் சிவாஜி அவர்கள் நடித்த ஏதேனும் ஒரு நாடகத்தின் பெயரினைக் கூறுக.
18. பராசக்தி படத்தின் மேக்கப் டெஸ்டிற்காக நடிகர் திலகத்தை புகைப்படங்கள் (ஸ்டில்ஸ்) எடுத்த புகைப்படக் கலைஞர் யார்?
19. இல்லற ஜோதியில் இடம்பெற்ற 'அனார்கலி - சலீம்' ஓரங்க நாடகத்தின் வசனங்களை எழுதியவர் யார்?
20. இரும்புத்திரை எந்த ஊரில், எந்த அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது?
21. மக்களை பெற்ற மகராசியில் எந்த வட்டாரத் தமிழ் பேசப்பட்டது?
22. நடிகர் விஷாலின் சகோதரர் ஒரே ஒரு படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். அந்தப் படத்தின் பெயர்?
23. சிவாஜி அவர்களுக்கு கலைக்குரிசில் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
24. விஸ்வரூபம் 100வது நாள் விழாவில் சிங்கத்தமிழனுக்கு வெற்றிவிழா ஷீல்டை அளித்தவர் யார்?
25. நடிகர் திலகம் இசைக் கருவியை இசைத்த முதல் திரைப்படம் எது?
26. களம் கண்ட கவிஞன் நாடக உரையாடல்களை எழுதியவர் யார்?
27. கல்யாணியின் கணவன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார்?
28. தெய்வமகன் திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?
29. வைரநெஞ்சம் எந்த ஊரில் 50 நாட்களுக்கு மேல் ஒடியது?
30. நடிகர் திலகத்தின் 159வது திரைப்படம் எது?
பகுதி - ஆ [மதிப்பெண்கள் 15 x 2 = 30] (எல்லா வினாக்களுக்கும் விடைகளைத் தருக)
31. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் எந்த ஊரில் அரங்கேற்றப்பட்டது? அரங்கேற்றத்தன்று தலைமை தாங்கியவர் யார்?
32. திருவிளையாடலில், புலவராக வரும் சிவபெருமான், தன்னை தருமியிடம் அறிமுகம் செய்து கொள்ளும் அந்த 2 வரி வசனங்களை எழுதுக.
33. நடிகர் திலகத்தின் பிள்ளைச்செல்வங்களின் (வாரிசுகளின்) நற்பெயர்களைக் குறிப்பிடுக.
34. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நடிகர் திலகம் எந்த வருடம் இணைந்தார்? யாரை அவர் தலைவராக ஏற்றுக் கொண்டார்?
35. மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எவை?
36. நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் எது? மக்கள் திலகம் தலைமை தாங்கிய நடிகர் திலகத்தின் 100வது நாள் திரைப்பட விழா எது?
37. பாசமலர் ராஜசேகரன் தனது தங்கையை ஆனந்தனிடம் ஒப்படைக்கும் போது கூறும் வார்த்தைகள் என்ன?
38. நடிகர் திலகத்துக்கு சந்திரபாபு பின்னணி பாடிய படம் எது? அப்பாடலின் முதல் வரி என்ன?
39. நடிகர் திலகத்துடன்
i) கமல் நடித்த முதல் திரைப்படம்
ii) ரஜினி நடித்த முதல் திரைப்படம்
iii) விஜய் நடித்த ஒரே திரைப்படம்
iv) நதியா நடித்த திரைப்படம்
ஆகியவைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
40. நடிகர் திலகத்தின் அண்ணன், தம்பி, தங்கை, தங்கையின் கணவர் ஆகியோரது நற்பெயர்களைக் குறிப்பிடுக.
41. நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளியான தினத்தன்று வெளியான ஏதேனும் 4 மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் பெயர்களைக் கூறுக.
42. கீழ்க்காணும் திரைப்படங்களில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரப் பெயர்களைக் குறிப்பிடுக.
i) படிககாத மேதை ii) பாகப்பிரிவினை iii) எங்க மாமா iv) நிறைகுடம்
43. நடிகர் திலகத்தின் திருமணம் எந்த ஊரில், எந்த தேதியில் நடைபெற்றது?
44. தங்கப்பதக்கம் நாடகம் எத்தனை முறை நடத்தப்பட்டது? தங்கப்பதக்கம் திரைப்படம் வெளியான தேதி என்ன?
45. கீழக்காணும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நடிகர் திலகத்தின் படங்களாகியுள்ளன. படைப்பையும், படத்தையும் குறிப்பிடவும்.
i)அகிலன் ii) கல்கி iii) லக்ஷ்மி iv) ஜெயகாந்தன்
பகுதி - இ (மதிப்பெண்கள் : 6 x 5 = 30)
குறிப்பு:
i) எல்லா வினாக்களுக்கும் விடை தருக.
ii) ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள மாற்று வினாக்களில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளிக்கவும்.
46. பராசக்திக்கு முன் உள்ள சிவாஜி அவர்களின் நாடக உலகத் தகவல்கள் சிலவற்றைத் தொகுத்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)
(அல்லது) நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம்பெற்ற ஓரங்க நாடகங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 10 ஓரங்க நாடகங்கள்)
47. பீம்சிங் இயக்கிய நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 படங்கள்)
(அல்லது) நடிகர் பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 படங்கள்)
48. தங்கப்பதக்கம் எஸ்.பி.சௌத்ரி அவர்களின் அழகு முகத்தை ஓவியமாக வரைக.
(அல்லது) பாவமன்னிப்பு ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகள் சிலவற்றை விவரித்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)
49. திருவிளையாடல் திரைப்படம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகளைக் குறிப்பிடுக.
(ஊர் - அரங்கு என்ற ஃபார்மெட்டில்) (குறைந்த பட்சம் 10 அரங்குகள்) (அல்லது)
வசந்த மாளிகை திரைப்படம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகளைக் குறிப்பிடுக.
(ஊர் - அரங்கு என்ற ஃபார்மெட்டில்) (குறைந்த பட்சம் 10 அரங்குகள்)
50. நடிகர் திலகமும் இளைய திலகமும் இணைந்து நடித்த திரைப்படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 திரைப்படங்கள்)
(அல்லது) ராஜபார்ட் ரங்கதுரையில் நடிகர் திலகத்தின் விதவிதமான கெட்டப்புகளை(வேடங்களை) பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 10 கெட்டப்புகள்)
51. புதிய பறவை திரைப்படத்தின் கதையை விவரித்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)
(அல்லது) என்னைப் போல் ஒருவன் சுந்தரமூர்த்தி, ஞான ஒளி அருண் - சிறு குறிப்பு வரைக.
(ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் குறைந்த பட்சம் 5 வரிகள்)
பகுதி - ஈ (மதிப்பெண்கள் : 10)
52. கீழ்வருவனவற்றைப் பொருத்துக :
1) 21.7.2004 i) நயாகரா நகர மேயராக தங்கச்சாவி
2) செவாலியே விருது ii) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
3) அமெரிக்க அரசு iii) வீரபாண்டிய கட்டபொம்மன்
4) நான் பெற்ற செல்வம் iv) எம்.கே.ராதா சிறப்பு தபால் உறை
5) பைலட் பிரேம்நாத் v) பிரான்ஸ்
6) பத்மினி பிக்சர்ஸ் vi) இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பு
7) எகிப்து - கெய்ரோ vii) கர்ணன்
8) விஸ்வநாதன்-ராமமூர்த்தி viii) சேக்கிழார்
9) திருவருட்செல்வர் ix) ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகராக வெள்ளிப் பருந்து சிலை
10) பொற்கைப் பாண்டியன் x) ஏ.பி.நாகராஜன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
சிவாஜியியல் கேள்வித்தாள் தொகுப்பு : பம்மல் ஆர். சுவாமிநாதன் (பம்மலார்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்,
பம்மலார்.
நானும் இந்த பரீட்சையை எழுதி எனது kindergarten வகுப்பிலிருந்து pass ஆகி விடலாமென்று பார்க்கிறேன். கொஞ்சம் கடினம் தான்.!
Sister VANAJA,
I am not telling that you should not write anything here or you no need to give your contributions.
Only thing I mentioned is, the main point in your post, that is "80s and 90s directors spoiled Shivaji sir's career" has been discussed in every 10 pages of this thread. So, it is nothing but a 'repeatuuuuu'. Is it true or not. Thatswhy I used as 'pazhaiya kallu'.
Paaraattu varumbothu sandhoshap paduvadhu pola, criticism varumbodhum accept panna manasu vendum.