http://www.tamilmp3songslyrics.com/s...o-My-Dear/2376
Printable View
உமக்கு பிடிக்கவில்லை என்றால்
உம்முடைய பதில் உமக்கே
கோபால்
உமக்கு கல்கத்தா ஆசான் தான் சரி .உமது ஆணவத்தை அடக்க அவரால் மட்டுமே முடியும் .
நாகரீகம் தேவை .பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கு . அநாகரீகமாக எழதி உன் தரத்தை
கெடுத்து கொள்ளாதே . இதுவே கடைசியாக இருக்கட்டும் .
அவர்கள் 1977
பாலச்சந்தரின் முக்கோண காதல் கதை அல்லது நான்கு கோண காதல் கதை ( வெரி rare outline )
முக்கோண காதல் கதையின் பிதாமகர் ஸ்ரீதர் படம் என்றால்
ஒரு பெண் அவள் வாழ்கையில் குறுக்கிடும் இரு ஆண்கள்
(கல்யாண பரிசு,நெஞ்சில் ஒரு ஆலயம்)
அல்லது
ஒரு ஆண் அவன் வாழ்கையில் குறிக்கிடும் இரு பெண்கள்
(அவளுக்கு என்று ஒரு மனம் (முத்துராமநை எதில் சேர்கிறது ) ,
இளமை ஊஞ்சல் ஆடுகிறது (இங்கு ரஜினி additional ))
என்று தான் இருக்கும் .
எனக்கு தெரிந்து ஒரு பெண்னின் வாழ்கையில் குறிக்கிடும்
3 ஆண்கள் என்ற வகையில் எடுக்கப்பட்ட ஒரு உணர்ச்சி மயமான முதல் காதல் காவியம் "அவர்கள்" என்றால் அது மிகையாகாது
இவ்வளுவுக்கும் இந்த படத்தில் பாலச்சந்தரின் வழக்கமான நகைச்சுவை கூட இருக்காது . (கமலின் சில வசனங்கள்
நகைச்சுவை ஆக இருந்தும் ) இந்த படத்தில் யாரவது நகைச்சுவை நடிகர்கள் என்று யாரவது உண்டா என்று நினைவில் இல்லை
ஆரம்பம் முதல் இறுதி வரை சீரியஸ்
ஆனால் பாலச்சந்தரின் புத்திசாலித்தனமான கதை சொல்லும் பாங்கை பாடல்கள் மற்றும் இசை மூலமாக கொண்டு சென்று இருப்பார்
சுஜாதா,
கமல் வித் வென்ட்ரிலொகுஇச பொம்மை (சதன்) இரு மலர்களில் நம்ம NT அறிமுகபடிதியது .பார்தீங்கள சிவாஜி இல்லாமல் தமிழ் சினிமா இல்லை ) ,
ரஜினி,
ரவிக்குமார்,
ரஜினியின் அம்மா லீலாவதி
இவ்வளுவு தான் மெயின் characters
குமரி பத்மினி,குட்டி பத்மினி ஒன்னு இரண்டு சீன் நினவு ,சுஜாதாவின் அபபா (கோகுல்நாதா அல்லது ramanamoorthyaa என்று நினவு இல்லை )
அதிலும் குட்டி பத்மினியின் "கல்யாணம் என்றால் நிறைய பேர் கூட பண்ணிக்கணும் கிரிக்கெட்க்கு கவாஸ்கர் நடிப்புக்கு சிவாஜி ..." famous வசனம் எப்போதும் நினைவில் உண்டு
அனு (சுஜாதா) சென்னையில் இருக்கும் போது பரணி(ரவிக்குமார்) யை லவ் செய்வர் . தீடீர் என்று அவர் தந்தைக்கு மும்பைக்கு மாறுதல் வருவதால் இவரும் சென்று விடுவார். அங்கிருந்து பரணிக்கு ஏகப்பட்ட கடிதங்கள் எழுதுவார் ஆனால் எதற்கும் பதில் வராது. இந்த நிலையில் அவர் தந்தையின் அலுவலக உடன் பணியாளர் ராமநாதனை (ரஜினி) திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் .
திருமணத்திற்கு பிறகு அனு தன கணவர் ராமநாதனிடம் தன்னுடைய முதல் காதலை பற்றி சொல்லி விடுவார்.அப்போது தான் ராமநாதனின் இன்னொரு முகம் அனுவிற்கு தெரிய வரும். அவர் ஒரு சட்டிஸ்ட்.
அன்றில்ருந்து அவருக்கு துன்பம் ஆரம்பமாகும் . இதற்கு நடுவில் குழந்தையும் பிறந்து கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கி கொண்டு
சென்னைக்கு திரும்பி விடுவார் .அங்கு வந்த பிறகு தான் தெரியும் தான் எழுதிய கடிதங்கள் எதுவும் தன முன்னாள் காதலன் கைகு கிடைக்க வில்லை. இதற்கு நடுவில் சென்னையில் அவரது அலுவலகத்தில் உடன் பணி புரியும் வெள்ளை மனம் கொண்ட ஜானி என்ற ஜனர்தனை சந்திப்பாள். அவரும் அனுவை விரும்புவார் . ஆனால் அவரால் தெரியமாக வெளியே சொல்ல முடியாது. இந்த நேரத்தில் முன்னாள் கணவர் ராமநாதனும் சென்னைக்கு அனு வேலை செய்யும் அலுவலகத்திற்கே அதிகாரியாக வந்து தான் திருந்தி விட்டதாகவும் தன்னை மீண்டும் எற்றுகொள்ளும்படியும் வேண்டுவார்.
அனுவின் மாமியார் (ராமநாதனின் தாயார்) ரும் அனுவின் வீட்டில் வந்து அனுவிற்கு உதவி ஆக (மாமியார் என்று சொல்லாமலே) தங்கி இருப்பார்
செம ட்விஸ்ட்
முடிவை வெள்ளி திரையில் காண்க
மன்னிக்கணும் சார் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் (
உ சு வ அசோகன் மாதிரி ) கதையை சுருக்கமாக சொல்ல முடியவில்லை
இந்த படம் rerelease ஆனதாகவும் நினவு இல்லை
இனி பாடலை பாப்போம்
இந்த பாட்டு பார்தீங்கன்ன சுஜாதாவுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது 3 பேரும் சேர்ந்து ஹெல்ப் பண்ண வருவார்கள்
முன்னாள் காதலன் ரவிக்குமார், முன்னாள் கணவன் ரஜினி
இப்போதைய வடிகால் நண்பன் கமல் .
இதில் யாரை தேர்ந்து எடுப்பது யாருடன் தன வாழ்கையை தொடர்வது
1.அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்த பக்கம்
ஞாயிறுண்டு திங்கள் உண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
முதல் சரணம்
கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்ல கனியும் மென்மை கண்டாள்
கதை எழுதி பழகிவிட்டாள் முடிக்கமட்டும் தெரியவில்லை
(அங்கும்)
இரண்டாவது சரணம்
கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்த தெய்வம் சொந்தம் என்று கூறி
பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதகளை விதி புகுந்தே திருத்துத்ம்மா
(அங்கும் )
சொந்த்ம் ஒன்று பந்தம் ஒன்று வெள்ளையுள்ள கிள்ளை ஒன்று
நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையா பழங்கதையா விடுகதையா
எது இன்று
(அங்கும்)
காட்சி அமைப்பு வெரி சிம்பிள் சார்
ஒரு வீடு கட்டில் சுஜாதா உடம்பு சரி இல்லாமல் படுத்து இருப்பாங்க
அசரீரி பாடல் ஆக ஒலிக்கும்
அனுபவ கவிஞரின் எளிமையான எல்லோருக்கும் புரியும் படியான
தன்னை என்றும் புத்திசாலி என்று காட்டி கொள்ளாத கவிதை நடை
அதை விட அடக்கி வாசிக்கும் மெல்லிசை மன்னர்
பாலாவின் மென்மையான குரல்
மீண்டும் வாராதோ அந்த நாட்கள்
டியர் கோபால் சார்/எஸ்வி சார்
தாழ்மையான வேண்டுகோள்
நாம் எல்லோரும் நண்பர்களே
நமக்குள் எதற்கு பேதம்
திரி சூடு பிடித்துகொண்டு உள்ளது
இந்த நேரத்தில் இந்த சூடு வேண்டாமே ப்ளீஸ்
மன்மத லீலை தேரிழுக்க வடம்பிடிக்கும் வாசு, கோபால், கிருஷ்ணா, வினோத் அனைவருக்கும் நன்றி.
மன்மத லீலை (3)
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'
பழைய பழமொழியொன்றையே (பழமொழியா சொல்வழக்கா) பாடலின் முதல் வரியாக்கிவிட்டார் கவிஞர். நேயர் விருப்பம் புகழ் மாதவியை (ஹேமா சௌத்ரி) தேடி வீட்டுக்குப்போன பின்புதான் மதுவுக்கு அவளது சோக வாழ்க்கையின் அவலம் தெரிகிறது. எம்.ஏ.படித்த மாதவிக்கு, ஹைஸ்கூலையே பார்த்திராத குடிகாரக்கணவன் வாய்த்திருக்கிறான் என்பது ஒன்று போதாதா அவளை மடக்கி வலையில் போட..?.
ரேடியோவிலேயே நேயர் விருப்பம் கேட்டு மகிழ்ந்து, அது மட்டுமே ஆறுதலாக வாழ்ந்துகொண்டிருக்கும் மாதவி, மதுவிடம் நேரில் நேயர் விருப்பம் கேட்க, மதுவிடமிருந்து வெளிப்படும் பாடல் இது... பாடலின் இடையில் விரும்பிகேட்ட நேயர்கள் பெயர்களை கமல் பட்டியலிடுவது கே.பி.டச். இருந்தாலும் அது அழகான இடையிசைக்கு இடைஞ்சல். அது சரி, கணவன் சரியில்லாத பெண்ணிடம் 'கணவன் அமைவதெல்லாம்' என்றுதானே பாட வேண்டும்?. மதுவுக்கு அருமையான மனைவியிருக்க, பாடல் அவனுடைய சொந்தக்கதை சோகக்கதை என்றும் சொல்ல முடியாது.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று
இந்தக்கட்டத்தில் மனைவி ரேகாவுக்கு போன்செய்து, தான் வர லேட்டாகும் என்று சொல்லிவிட்டு, 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்ற பல்லவியைப் பாடி போனை வைக்க, அது தனக்காக பாடிய வரிகளென ரேகா தப்பாக நினைத்து மகிழ......, கே.பி.சார், கலாட்டா மன்னன்யா நீர்.
அடுத்த சரணத்தைத் துவங்குமுன், குடிகாரக்கனவனை ஒருவர் தூக்கிவந்து போட, மாதவியின் நிலை மதுவுக்கு நிதர்சனமாக தெரிகிறது. அதன் வெளிப்பாடான அடுத்த சரணம்....
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு நாசூக்காக சொல்லிவிட்டார் கவியரசர். காமனை வெல்ல கணவன் துணையில்லாவிட்டாவிட்டால் அவள் நாடுவது இரண்டுவழி. ஒன்று அடுத்தவன் துணையை நாடுவது (ஓடுவது), அல்லது நள்ளிரவில் குடம் குடமாக குளிர்ந்த நீரை தலையில் கொட்டிக்கொள்வது...
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவர் கண்டாலே காதல்
அழகினைப்புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
ஜேசுதாஸின் மாஸ்ட்டர் பீஸ் பாடல்களில் ஒன்று, இப்பாடல். சரி சேட்டனின் வாழ்க்கையில் எப்படி ஒருமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது அவர் சொன்னது. ஒருமுறை அவர் மகளிர் கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்திராக சென்றிருந்தபோது, அவர் டீ குடித்துவிட்டு வைத்த பிளாஸ்டிக் கப்பை ஒரு மாணவி நைசாக லபக்கி, டீக்கறையைக்கூட கழுவாமல் வைத்திருந்தாராம். ஜேசு மீது அவ்வளவு அட்டாச்மெண்ட். சரி அப்புறம் என்ன நடந்தது?. நல்லதுதான் நடந்தது. அந்த மாணவிதான் பிற்பாடு பாடகர் விஜய்ஜேசுதாஸின் அம்மா. நமக்கெல்லாம் மரியாதைக்குரிய அண்ணி. இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிட்டு தாசண்ணா பாடிய வரிகள் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று தொடங்கி நாலு வரிகள்.
தாஸண்ணாவுக்கும் எனக்கும் என்ன அட்டாச்மெண்ட்?. கல்லூரியில் பாட்டுப்போட்டியில் தாஸண்ணாவின் பாடலைப்பாடி முதல் பரிசு பெற்றேன். பாடல் 'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு'. என்னைப்பாராட்டிய விழாத்தலைவர் 'பையன் நல்லா பாடினான்' என்பதோடு நிறுத்தியிருக்கலாம். 'அப்படியே ஜேசுதாஸ் போலவே பாடினான்' என்று சொல்லித்தொலைத்தார். ஜேசுதாஸ் அவர்களுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியாது.
சரி, இந்தப்பாடலின் முடிவு என்ன?. முதலில் மாதவியின் கணவன் மதுவுக்கு அடிமை, இப்போது மாதவியே 'மதுவுக்கு' அடிமை.
மாதவிக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்ல பொக்கேயுடன் வரும் மது சர்ப்ரைஸாக அறையில் ஒளிந்துகொள்ள, அதே அறையில் வந்து மாதவி உடைமாற்ற, மது மாதவியை "முழுசாக" பார்த்துவிட தியேட்டரே அல்லோலகல்லோலம்தான்.
'காமாந்தகா, உன்னை இந்த உயரமான மாடியிலிருந்து கீழே தள்ளினால் என்ன' - ஈஸ்வர ஐயர் குரல்.
யாரை யார் ஒதுங்க சொல்வது? எங்களுடன் பங்கு பெற உங்கள் hidden agenda மூட்டை கட்டி விட்டு வாருங்கள். நாங்கள் இங்கு வந்து யார் பெயரையும் பிரசாரம் செய்யவில்லை. சங்கீதம் பற்றி ,பிடித்த விஷயங்கள் பற்றி எழுதி கொண்டிருக்கிறோம் .நண்பர்கள் வருத்த பட்டார்கள் ,எங்கு வந்தாலும் ஒரே விஷயத்தை எழுத உங்களுக்கே அலுக்கவில்லையா? நாங்கள் நாகரிகம் காக்கிறோம் என்றால் தொடர்ந்து இதையே செய்வீர்களா?வாசு சொல்லி கூட ,நீங்கள் மாறவில்லை என்பது வருத்தமே.யார் எழுதினால் உபயோகம் என்பது நண்பர்களுக்கு தெரியும்.
sorry karthik sir
உங்கள் ப்ளாக் ஐ எதிர்பார்கவில்லை. என் உடையதை லோட செய்து விட்டேன் மன்னிக்க வேண்டுகிறேன்
கார்த்திக் சார்,
அவ வ்லாவிலே ,நாலாவது எலும்புக்கு கீழே பெரிய மச்சம்....
நேக்கு ரொம்ப அவசியம்?//