[QUOTE=madhu;1157994]அச்சச்சோ ,சும்மா information தான் மது. ரவி-ஜோதி பாட்டை எவ்வளவு போட்டு,எவ்வளவு முறை பார்த்தாலும் சுகமே. திருப்பி போடுங்கள்.
Printable View
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலில் அடுத்தவீட்டுப் பெண் படத்தின் பாடல் நல்ல தேர்வு. அந்தநாள் முதல் இந்தநாள் வரை தமிழ்ப்படங்களுக்கு ஒரு சென்ட்டிமென்ட் உண்டு. அது நகைச்சுவை படங்கள் என்றாலே பாடல்களும் சூப்பராக அமைந்துவிடும். அடுத்தவீட்டுப்பெண்ணும் அதில் சேர்த்தி.
வனிதாமணியே, மாலையில் மலர்ச்சோலையில், கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே என்று பி.பி.எஸ் கலக்கியிருப்பார். அதுபோல ஒன்றுதான் இந்த சைக்கிள் பாடல். நல்ல செலக்ஷன், வழக்கம்போல தங்களின் நல்ல விரிவுரை.
மகளிரின் சைக்கிள் பாடல் என்றதும் நண்பர் வினோத் தர்மம் தலைகாக்கும் படத்தின் 'அழகான வாழை மரத்தோட்டம்' பாடலுடன் வருவார் என்று நினைத்தேன். (ஐயோ நானே எடுத்துக்கொடுத்து விட்டேனோ)......
கோபால்ஜி...
மறுபடி ரவி-ஜோதி பாட்டு இதோ
http://youtu.be/Wk9Rzk5p3qU
மூன்றெழுத்தில் ஜெயலலிதா ஆட ஈஸ்வரி பாட... எங்கே.. எங்கே.. கே.. கே.. கே...
( Hope இந்தப் பாட்டாச்சும் ஏற்கனவே போட்டதாக இல்லாமல் இருக்குமா ? ??
உடனடி தேவை.. ஒரு INDEX )
http://youtu.be/eXHG7ltwMvk
போட்டாச்சா..... போடலையா.... போட்டாச்சுன்னுதான் நினைக்கிறேன்... இல்லையில்லை போடலைன்னுதான் தோணுது... போட்டமாதிரியும் இருக்கு... போடாதமாதிரியும் இருக்கு... நிஜமாகவே போடலையா... இல்லே, போட்டதை நாமதான் மறந்திட்டோமா... போட்டதுதான் போடாதமாதிரி தோணுதா... அல்லது போடாமலே போட்டமாதிரி நினைவுக்கு வருதா... போட்டதும் போடாததும் தெரியலையே....
இனி ராகவேந்தர் விருப்பம்.
இந்த பாடலின் அமைப்பு முற்றிலும் fusion என்று சொல்ல முடியாது.பெரும்பாலும் ஹிந்துஸ்தானி துவிஜாந்தி
(ஸ ரி 2,க 3ம1ப த 2ஸ --ஸ நி 2த 2ப ம 1க 3ம 1ரி 2க 2ரி 2ஸ )ஹரி காம்போதியின் ஜன்யம்.ராக மாலிகையாய்(எவ்வாறு நாணுவேன்) காபி. (சங்கருக்கு பிடித்தது துவிஜாந்தி-முகுந்தா முகுந்தா). இதில் உபயோகமான வாத்தியங்கள் சாரங்கி,வீணை,bassline ,ஹார்மோனியம்,தபேலா.
melody flow வில் ஹிந்துஸ்தானி பாணியே. ஆனாலும் subtle touches in interlude ,,bassline ,chords களின் தொடர்ந்த உபயோகம்,time signature ,pausing percussion இவை கொண்டு contemporary feel ஏற்படுத்தியுள்ளார்கள்.
சங்கர் மகாதேவனின் கார்வை குரல் ,கம்பீரம் கலந்தது.உரத்து high pitch செல்ல கூடியது.(டி.எம் .எஸ் அவர்களுக்கு அடுத்து இந்த குரலே விசேஷம்).அப்படியே இனிமையாய் மெதுவாய் ஓடும் ஆறு போல rendition .அழகாக தாள இடைவெளி,மௌனம்,நீரை நிறுத்தி நிறுத்தி பாய்ச்சுவது போன்ற (bisecting fluid flow )உன்னை காணாமல் என்பதை ஆலாபனை போல அழகு படுத்துவது என்று தன் பாட்டை தானே மெருகேற்றி உள்ளார்.
இதன் ஆரம்ப கொன்னக்கோல் (தா தை), supporting oral reciting கமல் சுத்தமாக செய்திருப்பார். எனக்கென்னவோ நம்மூர் ஜதி போலவே பட்டது.கதக் ஆ என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்.(கதக் feel இல்லை)ஹார்மோனியம் .தொடர்ந்து bassline ,சாரங்கியின் ஒலியோடு தொடங்கும் பாட்டு. மெதுவான ஆலாபனை போன்ற இடங்களில் வீணை,சாரங்கி , மிதமான வேக நடையில் தொடரும் தபலா ,நிசப்தங்கள்,விட்டு விட்டு தொடரும் சங்கதிகள் என்று நிறைய நகாசு.
கமல் ,எனக்கு தெரிந்து சிவாஜிக்கு அடுத்து இவர் ஒருவரே (திருவிளையாடல்) கொன்னக்கோல் வாயசைவை இவ்வளவு அழகாக செய்தவர்.நடனத்தில் கதக் கற்று நளினம் மிளிர இவர் செய்யும் அழகு.
ராகவேந்தர் சொன்ன மாதிரி ,விவரித்தால் மட்டும் போதாது. கண்டும் ரசியுங்கள்.கேட்டும் ரசியுங்கள்.
https://www.youtube.com/watch?v=qqtiFt0F_GU
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர், "யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.
நன்றி: தி.இந்து
என்னை பொறுத்த அளவில் மதங்களே தேவையற்ற ஒன்று. மாற்றங்கள் இன்னும் அபத்தமான கேலி கூத்து.மதம் மாறி இருந்தால் அன்னையின் மரணம் நிற்குமா?எதிர்பார்த்த மன அமைதிதான் கிட்டுமா? அதுவும் சுதந்திரமான இந்திய சூழ்நிலையில் ,தனி வாழ்வில் குறுக்கிடாத மத சூழ்நிலையில், free thinker ஆக இருப்பதை விட்டு....
ஒருவேளை ரகுமான்(திலிப் முதலியார்) போல பெயரை மாற்றினால் ஆஸ்கார் கிடைக்கும் என்ற சபலமோ என்னவோ. அதற்கு பிறவியிலேயே ரகுமான் போல இசை மேதையாகவும் பிறக்க வேண்டும்.
//சீவி முடித்த கூந்தலுக்குள்ளே ஆவி துடிக்குதடி// தாங்க்ஸ் மதுண்ணா இந்தப் பாட் முன்னாடி இங்க போட்டப்ப பார்க்கலை..இப்ப தான்பார்க்கறேன் கேக்கறேன்..முதன் முறையா. தாங்க்ஸ்.. நல்லா இருக்கு..
பி ஓ ஒய் பாய் யும் எனக்குப் பிடிக்கும் நன்றி.. அந்தப்பெண்மகள் யாரோ
சொல்ல மறந்த நன்றி..தாங்க்ஸ் மதுண்ணா நெமிலிகி பாட்டுக்கு..சபிதா பொம்மிடிப்பாட்டி எனும் நடிகை ஆடினார்..நடித்ததுஒரே ஒரு படம்..அந்த ஆழ க்கண்களில் கடல்புறாவே விடலாம்.. பாட்டுஇல்லாமல் ஒரு நடனம்..மினி சூறாவளி தான்..அகிலாண்டேஸ்வரி, அயிகிரி நந்தினி, ஜாதவே ..என நல்ல பாடல்கள்..கே.விஸ்வனாத் இயக்கம்.. எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்..மரு கேலரா ஓ ராகவா..ன்னும் ஒரு பாட்டு..வாவ்..