:ty: Saradha madam
vazhampOla ungal nadai :clap:
especially anandhi's accident in Red font :clap:
Printable View
:ty: Saradha madam
vazhampOla ungal nadai :clap:
especially anandhi's accident in Red font :clap:
நன்றி ஆர்த்தி.....
ஆதி, திருவேங்கடம், தேவராஜ் பாண்டியன் அடங்கிய சதிகாரக் கூட்டம், வேவு பார்க்கப்போன கிரியின் வரவை எதிர்பார்த்திருக்கிறது. இதனிடையே திருவேங்கடம் (வழக்கம்போல) கண்டதை உளறி இருவரிடமும் வாங்கிக்கட்டிக்கொள்ள, அந்நேரம் அங்கு வரும் கிரி, மருத்துவமனை நடப்புகளைச் சொல்கிறான். ஆனந்தி உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதையும், இன்ஸ்பெக்டரிடம் தோழர் 'இது இவர்களின் சதிதான்' என்று தெரிவித்ததையும் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்த, கவலையடைந்திருக்கும் ஆதிக்கு தே.பா. தெம்பூட்டும் விதமாகப் பேசுகிறார். ஆனந்தி பிழைத்து எழுந்துவிட்டால், தங்களுக்கு ஆபத்து என ஆதி புலம்ப... அவர்கள் கலைகின்றனர். (இந்த கொலைச்சதியில் மேனகாவின் பங்கு இல்லையென்பது தெரிகிறது. ஆனால் ஆனந்தி, தோழர், அபி ஆகியோர் மத்தியில் 'இது மேனகாவின் ஏற்பாடுதான்' என்ற ரீதியில் வதந்திகளைப் பரப்பிவிட்டனர்).
மருத்துவமனையில் கற்பகத்தின் அழுகை எல்லைமீறிப்போய் நம்மை ரொம்பவே சோதிக்கிறது. (நமக்குதான் தெரியுமே, இந்த அம்மா ஒண்ணுமில்லாததுக்கே ரொம்ப அழுவாங்க. இப்போ கேட்கணுமா?). ஆனந்திக்கு ஆபரேஷன் செய்ய ரத்தம் தேவைப்பட, அப்போதுதான் அபி ஆர்த்தியையும் மனோவையும் தேடுகிறாள். அவர்கள ஏதோ கடமைக்கு பார்க்க வந்தோம் என்று எப்பவோ இடத்தைக்காலி செய்து விட்டனர். தோழர் பாலகிருஷ்ணனும், மற்ற தோழர்களும் ஆர்வமாக ரத்தம் கொடுக்க முன்வந்ததைப் பார்த்து கற்பகம் முதல் முறையாக அவர்களைப்பார்த்து நெகிழ்ந்து போகிறாள். இதனிடையே அபியை தோழர் தனியே அழைத்து 'இதெல்லாம் மேனகாவின் சதி' என்று சொல்லி வைக்கிறார். அபி மனதில் ஆனந்திக்கும் மேனகாவுக்கும் இடையே நடந்த முந்தைய மோதல் சம்பவங்கள் நினைவில் வந்து போகின்றன. விடிய விடிய ஆபரேஷன் நடக்கிறது. அபியும் அம்மாவும் ராஜேந்திரனும் தோழர்களும், கிருஷ்ணனும் கூட மருத்துவமனையிலேயே அம்ர்ந்திருக்கின்றனர். அதிகாலை ஆபரேஷன் முடிந்து, ஆனந்தி அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தலைமை மருத்துவர் தெரிவிக்க எல்லோர் மனதிலும் நிம்மதி. முகத்தில் சிறிது சந்தோஷம். தோழர் தன் சக தோழர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பிவைக்கிறார்.
அம்மா, மருத்துவமனைக்குப் பக்கத்திலிருக்கும் கோயிலுக்குப்போய் வருவதாகச் சொல்லி ராஜேந்திரனையும் உடன் அழைத்துப்போக, தோழரையும் கிருஷ்ணனனையும் மருத்துவமனையில் இருக்கச்சொல்லிவிட்டு (வழக்கமாக இம்மாதிரி நேரங்களில் உடனிருந்து ஓடியாடும் ஒருவர் மிஸ்ஸிங்.. அது தொல்காப்பியன். ஆனால் இப்போது கேமராவுக்குப்பின்னால் அவர்தானே நின்றிருப்பார்..!) அபி மேனகாவைப்பார்க்க விரைகிறாள்.
அவள் என்ன சொல்லப்போகிறாள்... 'அபி உனக்கென்ன பைத்தியமா?. இந்த விபத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?' என்று (ஆனந்தியைக்கொலை செய்யா விட்டாலும்) தமிழைக்கொலை செய்யப்போகிறாள்... பார்ப்போம்.
aamaam... paarpOm :D
in kOlangal, we can predict most of the dialogs...
Thiruselvam kavanipaaraa? :roll:
Thats true :lol: .Quote:
Originally Posted by Arthi
இரண்டு நாட்களாக என்னுடைய சிஸ்டத்தில் நெட்வ்ர்க் வேலை செய்யவில்லை. அதனால், தொலைக்காட்சியில் பார்த்ததை உடனுக்குடன் இங்கு போஸ்ட் பண்ன முடியவில்லை.... Better late than never... (எனக்கும் பழமொழியெல்லாம் தெரியுமாக்கும்).
மேனகாவை சந்திக்கபோன இடத்தில், நாம் எதிர்பார்த்ததுபோலவே மேனகா வசனம் பேச துவங்க, அவளைப்பேச விடாமல் அபி, அவள்மீது குற்றங்களை சுமத்தி எச்சரிக்கிறாள். மேனகா அஞ்சுவதாக இல்லை. தான் நினைத்தால் ஆனந்தியை ஒரு மூட்டைப்பூசியைபோல நசுக்கி எறிந்துவிடுவேன். ஆனால் தன் அதை விரும்பவில்லை என்று கூறுவதுடன், இப்போது கூட தான் நினைத்தால் அபி இந்த இடத்தை விட்டு நகரமுடியாமல் செய்யமுடியும் என்று பதிலுக்கு சவால் விட, கோபத்தின் எல்லைக்குப்போன அபி, 'இதோ பார் மேனகா, நீ இந்த அபியின் சாந்தமான முகத்தைத்தான் பார்த்திருக்கே, இன்னொருபக்கத்தைப்பார்த்தால் உன்னால் சமாளிக்க முடியாது' என்று ('படையம்மா'வாக மாறி) சவால் விட்டுப்போகிறாள். மேனகாவுக்கே தெரியாமல் ஆதி செய்த சதியால் இப்போது இரண்டு 'பிஸினஸ் உமன்களும்' நேருக்கு நேர் மல்லுக்கு நிற்கத்துவங்கி விட்டனர். (இடையில் கொஞ்ச காலம் தொய்ந்து போயிருந்த ஆதி, இப்போதுதான் மீண்டும் எம்.என்.நம்பியாரின் வாரிசாகியிருக்கிறான்)
பாஸ்கரின் ஆடிட்டர், அவனுக்கும் அவன் மனைவி சங்கீதாவுக்கும் இடையே உள்ள சுமுகமான உறவைப்பற்றி விசாரிக்கிறார். காரணம், எப்பவோ அவள் அப்பாவுடைய தாத்தா தொன்னூற்று ஒன்பது வருடம் குத்தகைக்கு விட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலம் இப்போது குத்தகை முடிந்து விட்டது என்றும், மற்றவர்கள் அபகரிக்கும் முன் கோர்ர்ட்டில் கேஸ் போட்டு பெற்றுவிடலாம் என்றும் அதற்கு சங்கீதாவின் ஒப்புதல் வேண்டும் என்றும் சொல்ல, 'பணப்பேய்' பாஸ்கரின் மனம் கணக்குப் போடத்துவங்குகிறது.
ஆனந்தி கண்விழித்து விட்டாள். அம்மா, அபி, ராஜேந்திரன், ஆர்த்தி ஆகியோர் பார்த்துக் கொண்டிருக்கும்போது கார்த்திக் வருகிறான். அவனைத்தனியே அழைத்துச்செல்லும் அபி, ஆனந்தியின் இந்த நிலைக்குக் காரணம், கார்த்திக்கின் பாஸ் மேனகாதான் என்று கூற, கார்த்திக் கோபத்துடன் அங்கிருந்து செல்கிறான்.
மேனகாவின் வீடு கம் ஆஃபீஸ். கோபமாக வரும் கார்த்திக், முன்னர் அபி சொன்ன குற்றச்சாட்டையே மிண்டும் சொல்கிறான். ஆனந்தி எல்லோரைப்பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதுவதால் அவளுக்கு எதிரிகள் அதிகம் என்றும் அவர்களில் யாரோ ஒருவர் இதை செய்திருக்கக் கூடும் என்றும் மேனகா கூற ஆதியும் அதை ஆமோதிக்கிறான். தன்னுடைய இந்த மறுவாழ்வுக்கே காரணம் ஆனந்திதான் என்றும், அவளை அழிக்க நினைப்பவர்களிடம் இனியும் வேலை செய்ய விரும்பவில்லையென்றும் தன் வேலையை ராஜினாமா செய்வதாகவும் சொல்ல, தங்கள் கம்பெனி ரகசியங்களை முற்றிலுமாக தெரிந்த ஒருவனை தாங்கள் வெளியே விட முடியாதென்று மேனகா மறுக்கிறாள். கம்பெனி ரகசியங்களை வெளியிடும் அளவுக்கு தான் கீழிறங்க மாட்டேன் என்று கார்த்திக் சத்தியம் செய்ய, அவனிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு பொறுப்புகளில் இருந்து விடுவிக்கிறாள்.
வின்சென்ட் தன் வீட்டிலிருந்து வெளியே போகும் நேரம், விவேக்கும், அவனது பாஸும் சித்ரா வீட்டுக்கு வருகின்றனர். ஆனால் அவர்கள் வின்சென்ட்டைப்பார்க்கவில்லை. சித்ராவிடம் பேசும் பாஸ், தொல்காப்பியனிடம் அவள் தொடர்ந்து பழகி, அவனது நடவடிக்கைகளையும், யாரெல்லாம் அவனைத் தொடர்கிறார்கள் என்பதையும் அறிந்து சொல்லுமாறு கூறுகிறார்.
மனைவி சங்கீதாவைச் சந்திக்கும் பாஸ்கர், தன்னுடைய பிஸினெஸ் டென்ஷனால் அவளிடம் சற்று முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக கூறி, அதற்காக வருந்துவதாகவும் தன்னை மன்னிக்கும்படியும் கேட்கிறான். (அவளைக்கொண்டு காரியம் ஆகணுமே). ஆனால் அவன் தன் மனைவிடம் கெஞ்சுவதற்கும் மன்னிப்புக் கேட்பதற்கும் காரணம் அறியாத அலமேலு, பாஸ்கரைக் கண்டிக்க, அவளை தன் மனைவி எதிரிலேயே கோபமாகப் பேசி விரட்டுகிறான். சங்கீதாவின் மனம் மாறுவதுபோல தெரிகிறது. (அவள் மனம் மாறினால் அவளைப்போல முட்டாள் இல்லையென்று சொல்லலாம்).
சாரதா, திருவேங்கடத்திடம், ஆனந்தியைக்கொல்ல நடந்த முயற்சியில் அவரது பங்கும் இருக்கிறது என்று குற்றம் சாட்ட, அவர் மறுக்கிறார். தன் அண்ணன் மகளை தானே கொல்ல நினைப்பேனா என்று சொல்லும் அவர், ஆனால் ஆனந்தி போன்ற திமிரான பெண்களுக்கு இந்த தண்டனை தேவைதான் என்கிறார். தன்னைக்கேட்காமல் ஆனந்திப்பார்க்க சாரதா போனதற்கு கண்டிக்கிறார்.
ஆனந்தியுடன் மருத்துவமனையில் இருக்கும் கார்த்திக், அவளுக்கு காலை உணவு ஊட்டிக்கொண்டிருக்க, அப்போது அங்கே நுழையும் அபியும் அம்மாவும் அதைப்பார்த்து சந்தோஷத்துடன் வெளியே வருகின்றனர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அறைக்கு வெளியே வரும் கார்த்திக் அவர்களைப்பார்த்து, தான் ஆனந்தியைக்கவனித்துக்கொள்வதாகவும், அபியை அலுவலகம் செல்லும்படியும், அம்மாவை வீட்டுக்குப்போய் ஓய்வெடுக்கும்படியும் கூறி அனுப்பி வைக்கிறான்.
மேனகாவின் இருப்பிடத்துக்கு தன் நண்பரொருவருடன் திடீரென்று வருகிறார் மேனகாவின் அப்பா ராஜவர்மன் (இதற்கு முன் இவரைக்காட்டவில்லையென்று நினைவு. போட்டோவில் மட்டும் காண்பித்திருக்கிறார்கள்). மேனகாவுக்கு நேர்ந்த கொலைமுயற்சிகளைப்பற்றி ரொம்பவும் கவலையாகக்கேட்கிறார். உடன் வந்த நண்பர், மேனகாவுக்கு நேர்ந்த, நேரப்போகும் ஆபத்துகள் விலக ஒரு ஓமப்பூஜை செய்யவெண்டும் என்கிறார். மேனகாவுக்கு இதில் நாட்டமில்லாவிட்டாலும் தந்தையின் வற்புறுத்தலுக்காக சம்மதிக்கிறாள்.
சங்கீதாவை ஏமாற்ற, தன் அறையில் தானே தனக்குள் பேசிக்கொள்வதுபோல பாஸ்கர் சங்கீதாவைப்பற்றி ரொம்ப உய்ர்வாகப் பேச, கதவுக்கு வெளியே நின்று சங்கீதா அனைத்தையும் கேட்கிறாள். அவள் மனம் சலனமடைவது போல தோன்றுகிறது (பாஸ்கரின் பிளான் அதுதானே).
பிராமணர் வேடத்தில் வின்சென்ட் தங்கியிருக்கும் இடத்துக்கு வரும் ஒரு ஐயர், மேனகா வீட்டு ஓமப்பூஜைக்கு ஒரு ஐயர் குறைவதாகவும் அதனால் அவரை அழைக்க வந்ததாகவும் கூற, நெற்றியில் பட்டை போட்டிருக்கும் வின்சென்ட்டும் சம்மதிக்கிறார். அதுவரை அவரை ஐயங்கார் என்று நினைத்திருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு அதிர்ச்சி, கூடவே சந்தேகம். மேனகாவைக்கொல்ல நல்ல வாய்ப்பு வந்ததென்று வின்சென்ட்டுக்கு மகிழ்ச்சி.
தொல்காப்பியன் வீட்டுக்கு வரும் சித்ரா, அவன் சதா பிரட்டைத்தின்று கொண்டிருப்பதைக் குறைகூறி, அன்று தான் சமைப்பதாகக் கூறி, சில பொருட்கள வாங்கி வர தொல்ஸை வெளியே அனுப்புகிறாள். அவன் சென்றதும், அவனுடைடைய பழைய டிரங்க் பெட்டியை சோதனையிட்டு, அதில் இருந்து ஒரு சர்டிபிகேட்டை எடுத்துப்பார்க்க அவளுக்கு அதிர்ச்சி. அது தொல்ஸ், சிறுவர்களுக்கான ஜெயிலில் இருந்ததற்கான சான்றிதழ். அவனறியாமல் எடுத்து தன் பையில் வைத்துக்கொள்கிறாள். திரும்பி வரும் தொல்ஸ், சாப்பிட்டுவிட்டு அவளோடு பேசிக்கொண்டு இருக்கும்போது, அறையின் உள்ளே டிரங்க் பெட்டி விழும் சத்தம் கேட்டு ஓடிப்போய் சிதறிக்கிடக்கும் பொருட்களை சேகரித்து பெட்டியில் வைக்கும்போது ஏதோ ஒன்றைக்காணாமல் தேட, அது தான் எடுத்து ஒளித்து வைத்திருக்கும் சான்றிதழதான் என்றறியும் சித்ரா, அவனுக்கு தெரியாமல் கீழேபோட்டுவிட்டு, அவனிடம் காண்பிக்க தொல்ஸுக்கு அப்போதுதான் நிம்மதி. (ஆக ஃபிளாஷ்பேக் ரொம்ப இருக்கும்போல தெரிகிறது).
பாஸ்கர்தான் தன் தந்தையைக்கொலை செய்தான் என்று தன்னிடம் சொன்ன அறிவழகனைப்பார்க்க அவன் வீட்டுக்குப்போக, வீடு பூட்டியிருக்கிறது, வீட்டு ஓனரிடம் விசாரிக்க, அவரோ அவன் சுத்த ஃபிராடு, ஏமாற்றுக்காரன் என்று வசைமாரி பொழிகிறார். குழம்பி நிற்கும் அவளை மேலும் குழப்ப, பாஸ்கரின் குவாரி ஆள் ஒருத்தன் வந்து அறிவழகனைப்பற்றி மேலும் மோசமாகவும், பாஸ்கரை ரொம நல்லவனாகவும் உயர்த்திப்பேச அவள் மனம் மாறுகிறது. (இதெல்லாம் பாஸ்கரின் செட்டப் என்று சொல்லியா தெரிய வேண்டும்?).
மேனகா வீட்டுக்கு ஓமப்பூஜைக்குப் போன ஐயர்களை செக்யூரிட்டிகள் செக் பண்ண அவர்கள் ஆட்சேபம் தெரிவித்து, தங்களை செக்பண்ணுவதாயிருந்தால் தாங்கள் திரும்பிப்போய்விடுவோம் எனவும் கூற, சோதனையில்லாமல் அவர்கள் என்ட்ரி ஆகின்றனர். மாடியில் பூஜை நடக்கும் இடத்துக்கு வின்சென்ட் செல்கின்றான். இப்போது எப்படி, எந்தரூபத்தில் தொல்ஸ் வந்து மேனகாவைக் காப்பாற்றப்போகிறான் என்று பார்ப்போம்..
புதனன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு சீரியல்களுக்கு விடுமுறை. சன் டி.வி.யில் அந்நேரத்தில் அடுத்தடுத்து 'நான் அவனில்லை', 'தாமிரபரணி' என இரண்டு திரைப்படங்கள் காண்பித்தனர். பெண்களுக்கு சங்கடம் (பல சீரியல்களில் அந்தரத்தில் நின்ற கதாநாயகிகள் என்ன ஆனார்களோ என்று). ஆனால் ஆண்களுக்கு கொண்டாட்டம் (காரணம் அடுத்தடுத்து திரைப்படங்கள்). எனக்கு சீரியல்களைவிட திரைப்படங்கள் மீது நாட்டம் அதிகமாதலால், அன்று ஒருநாள் மட்டும் ஆண்கள் பக்கம் சேர்ந்துகொண்டேன். சரி, 'கோலங்களில்' நேற்று என்ன நடந்தது...?
என்னடா ரொம்ப நாளாக கற்பகம் ஜோதிடர், மந்திரவாதி என்று போகவில்லையே என்று பார்த்தேன். நேற்று ஒரு ஜோதிடரிடம் போய்விட்டார். ஆனந்தியின் ஜாதகத்தைக் கொண்டுபோய் காட்ட, அந்த ஜோசியரோ 'ஆனந்தி ரொம்ப தைரியமான பெண்ணென்றும், வீரமான குணமுடையவள் என்றும், எதையும் தைரியமாக செய்வதால் அவளுக்கு எதிரிகள் அதிகம் புறப்படுவார்கள் என்றும்' (நமக்கு தெரிந்த விஷயங்களையே) சொல்கிறார். அம்மாவோ அவளது வழக்கப்படி ஆனந்தியின் கல்யாணம் குழந்தைகள் என்று விசாரிக்க அதற்கு அவர் நேரடியாக எதுவும் சொல்லாமல், வாலாஜாபாத் அருகிலுள்ள எதோ ஒரு கோயிலுக்கு (என்னவோ பெயர் சொன்னார்) போய் பிரார்த்தனை செய்யுமாறு சொல்கிறார். கற்பகமும், அவளது ஒட்டுவால் ராஜேந்திரனும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
மேனகாவின் வீட்டில், ஓமப்பூஜை நடக்கிறது. அப்பாவின் கட்டாயத்தால் வேண்டாவெறுப்பாக மேனகா அங்கு வந்து உட்கார்திருக்கிறாள். (அவள் தரையில் அம்ர்ந்து இப்போதுதான் பார்க்கிறோம், முழங்காலைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது ரொம்ப அழகு). மற்ற ஐயர்கள் மந்திரம் சொல்லும்போது, போலி ஐயர் வின்சென்ட் சும்மா வாசைத்துக்கொண்டும், சில நேரங்களில் சும்மாவும் இருக்கிறான். அவன் முகம் மேனகாவையே நோக்குகிறது. இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து மஞ்சள் பையில் மறைத்து வைத்து, பையுடன் எடுத்து மேனகாவை குறிபார்க்கும் நேரம், தலைமை ஐயர், இவர் வெறுமனே வாயசைத்துக்கொண்டு இருப்பதையும் சிலநேரங்களில் சும்மா இருப்பதையும் கண்டு, சட்டென மந்திரங்களை நிறுத்தி விட்டு விசாரிக்க, இவனோ தன் வீட்டில் ஒரு துக்கம் நேர்ந்திருப்பதால் தன்னால் மந்திரம் சொல்ல முடியவில்லையென்று சொல்ல, மற்ற ஐயர்கள் சேர்ந்து அவரை அங்கிருந்து விரட்டுகின்றனர். மேனகாவின் அப்பா, வின்சென்ட்டுக்கு தட்சனை கொடுத்து அனுப்ப, அவனோ படியிறங்கிப்போகும் வரை மேனகாவையே பார்த்துக்கொண்டு போகிறான். (ஆனால் போகும்போது கையில் மஞ்சள் பை இல்லை). அவன் போனதும், மேனகாவுக்கு அவன் முகம் ஸ்ட்ரைக் ஆகிறது. முன்னொருமுறை பிரஸ்மீட்டில், பத்திரிக்கையாளர் நாராயணன் குட்டியாக வந்தவன் இவனே என்று புலன் தட்ட, செக்யூரிட்டிகளுடன் ஓடிப்போய்ப் பார்க்க, வின்சென்ட் போய் விட்டான். (அவ்வளவு சீக்கிறம் போயிருக்க முடியுமா என்ன?. செக்யூரிட்டிகளைவிட்டு அக்கம்பக்கம் தேடியிருக்கலாமே). பின்னர் மேனகா ஒன்றும் நடக்காததுபோல வந்து பூஜையில் அமர்கிறாள்.
தன் பாஸையும் விவேக்கையும் கடற்கரைக்கு வரச்சொன்ன சித்ரா, அவர்கள் வந்ததும் தொல்காப்பியன் சிறுவர் ஜெயிலில் இருந்ததற்கான சான்றிதழை தான் பார்க்க நேர்ந்ததையும், அவன் வீட்டில் நடந்தவற்றையும் விவரிக்கிறாள். அதிலிருந்த மலையாள எழுத்துக்களை அவள் படம்போல் வரைந்துகாட்ட, விவேக் அதைப்படித்து அது திருவனந்தபுரம் என்று சொல்ல, அங்குபோய் சிறுவர் ஜெயிலில் போய் விசாரிக்கலாம் என்று பாஸ் சொல்கிறார்.... (ஆக விரைவில் திருவனந்தபுரத்தின் காட்சிகளை கேமரா கவர் பண்ணப்போகிறது. ஏற்கெனவே சிவதாஸிடம் கையெழுத்து வாங்கப்போனபோது கொச்சின் அழகைப்பார்த்தோம். ஆனால் அதில் கொஞ்ச நேரமே வந்து, உயிரை விட்ட 'ருத்ரா' நம மனதில் தங்கி விட்டாள்).
Nice updates... thx saradha mam... :D
Thank you for the update. I really appreciate it. :ty:
இரண்டு எபிசோட்களாக மேனகாவின் ஃப்ளாஷ்பேக்....
போலி ஐயராக வந்துவிட்டுப்போன வின்சென்ட்டைப்பார்த்தது முதல் அவளுக்கு ஒரு எண்ணம். இவன் நிச்சயம் கூலிக்காக கொலைசெய்ய வந்தவனாக இருக்காது. நிச்சயம் இவனுக்கும் தனக்கும் முன்னாளில் ஏதோவொரு விரோதம் இருந்திருக்க வேண்டும். அதற்காகவே தன்னை அவன் ஒழித்துக்கட்ட முழுமூச்சாய் அலைகின்றான் என்ற எண்ணம் அவள் நினைவில் வேரூன்ற, தன் தந்தை ராஜ வர்மனிடம் தன் கடந்த கால வாழ்க்கையைப்பற்றிக் கேட்க, அவரோ மேனகாவை தனக்கு பத்து வயதுப் பெண்ணாக தன் தந்தை மகேந்திரவர்மன் தன்னிடம் அழைத்துவந்து ஒப்படைத்ததில் இருந்துதான் தெரியும் எனக்கூறி அதற்கு முன் அவள் நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவருமாறு கூற, மேனகாவின் சிந்தனை பின்னோக்கிப் பயணிக்கிறது.
வின்சென்ட்டின் தந்தை தாசய்யாவுக்கு தெரியாமல் செல்லாம்மாவை அழைத்துக்கொண்டு (இழுத்துக்கொண்டு) ஊரை விட்டு ஓடிய வெள்ளையன், சுமார் இரண்டு வயது கைக்குழந்தையுடன், தாடியும் மீசையுமாக படகில் இருந்து புதிய ஊரில் வந்திறங்குகிறான். இவன் நிலையைப்பார்த்து படகுக்காரன் காசு வேண்டாம் என்று சொல்ல, அந்த காசுக்கு குழந்தைக்கு பாலும் ரொட்டியும், தனக்கு சாராயமும் வாங்கிக்கொள்கிறான். கடல்தொழில் தெரிந்த அவனுக்கு வலை பின்னும் வேலை கிடைக்கிறது.....
(மீண்டும் மேனகாவின் சிந்தனை புதைந்த முகம் காண்பிக்கப்படுகிறது....)
இப்போது மேனகா என்கிற மீனு பத்து வயதுப்பெண்ணாக காண்பிக்கப்படுகிறாள். மகளை படிக்க அனுப்பாமல் வேலைக்கு அனுப்பி அவள் சம்பாதித்து வரும் பணத்தை சாராயம் குடித்தே அழிக்கும் தந்தை. காலை விழித்ததும் அவனுக்கு சாராயம் வேண்டும். கையில் காசில்லாமல் கடனுக்கு சாராயம் வாங்கப்போகும் மீனுவை நான்கு பொறுக்கிகள் பின்தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்ய முயல, அவளை மக்கள் சேவையில் ஈடுபட்டிக்கும் மகேந்திரவர்மன் காப்பாற்றி அவள் வீட்டுக்கு அழைத்து வர, வீட்டில் அவள் அனுபவிக்கும் சித்திரவதைகள் அவருக்கு தெரிய வருகிறது. அவளை பெரிய தொகைக்கு தத்தெடுத்த்க்கொள்வதாக வெள்ளையனிடம் சொல்ல அவன் சம்மதிக்கிறான். (மீனுவுக்கு தெரியாது).
(மீண்டும் மேனகாவின் கண்ணீர் ததும்பிய முகம் க்ளோசப்பில்....)
பெரியவரின் வீட்டுக்குச்சென்று இருபதாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, மீனுவை தத்துக்கொடுக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறான். வரும் வழியில் தனக்கு சாராயமும், மகளுக்கு பூவும், புதிய துணிகளும், பிரியாணிப்பொட்டலமும் வாங்கி வரும் அவன், மறுநாள் மீனு பெரியவரின் வீட்டுக்கு தத்துப்பிள்ளையாகப் போகப்போகும் விஷயத்தைச்சொல்ல, அவள் மறுக்கிறாள். அவன் அடித்தாலும் துன்புறுத்தினாலும் தந்தையைவிட்டுப்போக மாட்டேன் என்று அழுதுகொண்டே தூங்கிப்போகிறாள். மறுநாள் காலையில் குப்புறப்படுத்துக்கிடக்கும் அப்பாவை எழுப்பியும் அவன் எழும்பாமல் இருக்க, புரட்டிப்பார்த்தால், வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறான் வெள்ளையன்.....
(நினைவுகளில் மூழ்கிப்போன மேனகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது....)
பெரியவர் வீடு. பெரியவரின் மகன் இளமையான ராஜ வர்மன். அரண்மனை போன்ற அந்தவீட்டை அதிசயமாகப்பார்க்கும் அவளிடம் இனி அவள் பெயர் மேனகா என்றும், அவளை அமெரிக்கா அழைத்துச்சென்று படிக்க வைத்து பெரிய தொழிலதிபராக ஆக்க இருப்பதாகவும் சொல்ல, அவளுக்கோ தனக்கு தாயும் தந்தையுமாக இருக்கும் கடலை விட்டுப்போக மனமில்லை. அமெரிக்கா சென்றாலும் தன்னை கடற்கரை இருக்கும் ஊரில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று குழந்தைத்தனமாக கூறுகிறாள். (கள்ளம் கபடமில்லாத அந்த அப்பாவிப்பெண்ணை திருச்செல்வம் எங்கு கண்டெடுத்தார் என்று தெரியவில்லை).
(மீனுவையும் அவள் தந்தையையும் மட்டுமே காண்பித்தனர், செல்லம்மா இறந்துவிட்டதாக வசனத்தில் சொல்கின்றனர். ஆனால் அவர்களின் ஆண் வாரிசு (தொல்காப்பியன்) பற்றி எந்த விவரமும் சொல்லப்படவில்லை. அதாவது மேனகா நினைத்துப்பார்க்கும் ஃப்ளாஷ்பேக்கில் வரவில்லை. சின்னச்சின்ன விஷயங்களில் கூட கௌரவம் பார்க்கும் மேனகா, மீனவர் குப்பத்து விழாவில் மட்டும் பங்கேற்க சம்மதித்தது ஏன் என்று மெல்ல விளங்கத் துவங்குகிறது).