-
தமிழ் பல்கலை கழகம் அமைக்கஂதமிழ் அறிஞர்களை அழைத்தஂமுதல்வர் எம் ஜி ஆர் எவ்வளவு இடம் வேண்டும் என்று கேட்க அறிஞர்கள் நூறு ஏக்கர் நிலம் எனகூறியபோது எம் ஜி ஆர் இன்னும் அதிக அளவில் கேளுங்க எனகூறஂஇருநூறு எனகூற எம் ஜி ஆர் சிரித்து கொண்டு ஆயிரத்து இருநூறு ஏக்கரில் உலகில் பெரியஂதமிழ் பல்கலைக்கழகம் அமைப்போம் எனஂகூறி சிறந்தஂதமிழ் பல்கலைகழகம் எம் ஜி ஆர் அமைத்தார்
எப் எம் 106.4.ல் எம் ஜி ஆர் நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சியில் புலவர் புலமை பித்தன் இன்று காலை கூறியது
நூற்றாண்டு விழா உலகம் வியக்க வேண்டும்
-
17.01.2016..மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்தநாள்.....1
“தா”வென்று ஒருவன் வந்து கேட்கும் முன்
"இந்தா” என்று எடுத்துக் கொடுத்த வள்ளலே!
நான் ஏழு வள்ளல்களையும் கண்டதில்லை!
ஆனால் எட்டாம் வள்ளலே உன்னில்
அந்த எழுவரையும் காண்கிறேன்!!!
-
ஓர் அரசியல்வாதிக்குப் புகழ் எப்படி
இருக்க வேண்டும்? "
" அவரிடம் பிரதிபலன் அடையாதவர்கள்கூட
அவர் நினைவாக வாழ வேண்டும். ஜனவரி 17-ம்
தேதி சென்னையின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து ஒரு ரோஜாப்பூ, இரண்டு வாழைப் பழம், மூன்று பத்திக்குச்சியைக் கொளுத்தி வைத்திருந்த காட்சி, உங்களது கேள்வியைப் படிக்கும்போது நினைவுக்கு வருகிறது! "
- கழுகார் பதில்கள் .
-
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
ஆனால் தம்பி எம்ஜியார் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்ஜியார் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்."
( சென்னை அவ்வை இல்லத்திற்கு 30 - 1- 1961 அன்று மக்கள் திலகம் எம்ஜியார் ரூபாய் 30,000 நிதி வழங்கிய விழாவில் அண்ணா .)
# mgr 100
-
-
-
-
-
-