Nadigarthilagam only actor who didn't act in public(out of shooting hours) He is a real person in personal and public
Printable View
Nadigarthilagam only actor who didn't act in public(out of shooting hours) He is a real person in personal and public
என் தம்பி
நான் மிகவும் ரசித்த நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை பொழுது போக்கு சித்திரங்களில் ஒன்று
படத்தின் டைட்டில் போடும் போதே கதை தொடங்கி விடும் . கதை என்று பார்த்தல் படத்தின் டிக்கெட் பின்னாடி எழுத கூடிய கதை தான் ஆனால் விறுவிறுப்பு டாப் கிளாஸ் .
ஒரு குடும்பத்தில் அண்ணன் , தம்பி இருவருக்கும் நடக்கும் கதை தான் , good Vs Evil . நடிகர் திலகம் குட், பாலாஜி -evil (வில்லன்)
இந்த படத்தை பார்க்காதவர்கள் முதல் பாதியை மிகவும் கவனமாக பாருங்கள் ஏனெனில் இதன் தாக்கம் இரண்டாம் பாதியில் தெரியும்
இந்த படத்தில் நடிகர் திலகம் மிகவும் ஒல்லியாக , கவர்ச்சியாக இருப்பர் , அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் இருந்தே நம்மை வசீகரித்து விடுகிறார் அழகான வேஷ்டி சட்டையில் . அவர் ஆபீஸ் ல் இருக்கும் பொழுது அவர் அணிந்து இருக்கும் கோட் -சூட் டாப், அதுவே அவர் comeback டைம் ல் அவர் அணிந்து இருக்கும் கோல்ட் கலர் கோட் சூட் வித் bow ஒரு வித ராயல் லுக் யை கொடுக்கும்
(வாசு சார் யின் தொடருக்கு இந்த படம் ஒரு நல்ல தினி என்று நினைக்கிறன் )
தவறு செய்யும் தம்பியை கண்டிக்க காத்து இருக்கும் சமயத்தில் ஒரு புத்தகம் படித்து கொண்டு இருப்பார், பாலாஜி வரும் சமயம் ஒரு பார்வை அழுத்தமாக அவரை நோக்கி, பாக்கும் பாங்கு, நம்ம ஆளுக்கு மட்டுமே உரித்தான ஒன்று அதுவும் அந்த காட்சியில் அவர் அணிந்து இருக்கும் வெள்ளை பைஜாமா குர்தாவும் , வெள்ளை ஷூ வும் அந்த கரண்ட் லூக்யை grandeur ஆக்கும் .
இந்த படத்தில் அவர் ஆடையை பற்றி சொல்லி கொண்டே போகலாம்
மேலே குறிப்பிட அந்த காட்சியில் அவர் போட்டோ , மற்றும் சாட்டையை சுழறும் காட்சியில் அவர் அணிந்து இருந்த கோட் , கத்தி சண்டையில் அவர் அணிந்து இருக்கும் embroidery செய்த சட்டை உடன் கத்தி யை கீழே நோக்கி இருக்கும் ஸ்டில் இன்றும் famous ( இந்த ஸ்டில் யை பார்த்து நான் இதை உத்தமபுத்திரன் என்று நினைத்த காலம் உண்டு ) கத்தி சண்டையில் பிச்சு உதறி இருப்பார் , கிட்ட தட்ட 6 நிமிடம் ஓடும் காட்சி இது .
பணக்காரன் கிருஷ்ணா ஒரு விதம் என்றால் கூத்து கலைஞர் கண்ணப்பா அப்பவிதனத்தின் உச்சம் . நாகேஷ் உடன் அவர் உரையாடும் காட்சி , அந்த ரோல் ல் கழுத்தை அவர் அசைக்கும் விதம் , பட் , புட் சொல்லும் விதம் அனைத்தும் நம்மை சிரிக்க வைக்கிறது .
நடிகர் பாலாஜி நம்மவரை வைத்து தயாரித்த சித்திரங்களில் இது முதல் படம் என்று நினைக்கிறன்
இந்த படத்தை தொலைகாட்சியில் பார்க்கும் வாய்ப்பு என்று வரை கிடைக்க வில்லை
பாலாஜியை வெற்றி பட தயாரிப்பாளர் என்ற முத்திரை உடன் வலம் வர செய்த படம்
திருநாவுகரசர் அல்லது அப்பர் - ஒரு குறிப்பு
மண் வளமும் நீர்வளமும் நிறைந்த செழிப்பான, தென்பெண்ணை நதி தீரம் கொண்ட மத்திய தமிழகத்தில் (நடு நாடு ) உள்ள திருமுனைப்பாடி என்ற சாம்ராஜ்யத்தில் திருவாமூரில் வேளாள குல தம்பதியராம் புகழனார்-மாதினியார் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய தமக்கை திலகவதியார். திருநாவுக்கரசர் சிறு பிராய பெயர் மருள்நீகியார் என்பதாகும்
இவரது இளமை காலத்தில் சமண சமயத்தின் தீவிர பக்தராக இருந்தார். சூலை நோய்ப்பட்டு பின்னர் இவர் திலகவதியார் வேண்டுதலால் மீண்டும் சைவ ஞானியானார் திருநாவுகரசர்.
"மருள் நீக்கியார்" "திருநாவுகரசர்" என்ற பெயரில் அழைக்கப்பட்ட காரணம்
திருவதிகை வீரட்டானேசுவரர் மருள் நீக்கியார், " கூற்றாயினவாறு விலக்க கிலீர்" எனும் திருப்பதிகத்தை பாடியதும், அதை கேட்டு மகிழ்ந்து உவந்து இன்று முதல் நீங்கள் நாவுக்கே அரசர், அனைவரும் தங்களை திருநாவுகரசர் என்று மரியாதை பொங்க அழைப்பார்கள் என்று புகழ் பெயரை கொடுத்தார்.
மகேந்திர பல்லவ மன்னன் (சமணர்) இவரை - மதம் மாறியதற்காக - பலவித கொடிய தண்டனை கொடுத்தும், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். " நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என வீர முழக்கமிட்ட சிவஞானச்சிங்கமிவர். முடிவில் கொடிய மன்னனே, இவரது இனிய நண்பனானான்.
" மாசில்வீணையும் " ; " சொற்றுணை வேதியன் " முதலான இவரது பலநூறு தேவாரப்பாடல்கள். சாத்திர, தோத்திரக் கனிகளின " பழச்சாறு " ஆகும்.
சைவத்திருத்தலங்கள் தோறும் சென்று, இறையருள் பெற்றுப் பதிகம் பாடிய முதுபெரும் ஞானப்பழமாகத் திகழ்ந்தவர்.
திருநாவுகரசர் அப்பர் என்றழைக்கப்பட்ட காரணம்
இவரை போன்று, அன்னை பார்வதியின் அருள் பாலித்தவர் திருஞான சம்பந்தர். இவர் குழந்தை, நாவுக்கரசர் முதியவர் இருப்பினும், இருவரும் பல திருத்தங்களிலே இணைந்து பதிகம் பாடித் தந்துள்ளனர். திருஞான சம்பந்தர் நாவுக்கரசர் அவர்களை அழைத்ததுதான் " அப்பர் " எனும் திருப்பெயர். அப்பன் என்றால் மரியாதை இல்லை என்பதால் அப்பர் என்றழைத்தார்.
திருக்கயிலையைக் கண்டு தொழ வடநாடு வரை நடந்தார் - ஸ்ரீ திருநாவுக்கரசர்; வயோதிகத்தால் தளர்ந்து இயலாமையால் வாடியது கண்ட சிவனே, இவரை இமயச்சாரலியே உள்ள திருக்குளத்திலே மூழ்கச் சொல்லி திருவையாற்றிலே எழ வைத்து, திருக்கையிலையின் காட்சியை தந்தருளி ஆட்கொண்டார் என்கிறது வரலாறு.
தொடரும் ........
டியர் வாசுதேவன் சார்,
"நிஜ வேட்டைக்காரர்" பதிவு மூலம் என்னுடைய பழைய நினைவுகளையும் கிளறிவிட்டுள்ளீர்கள். நானும் முதன்முதலில் அன்னை இல்லத்தில் நுழைந்தபோது அவர் வீழ்த்திய புலி எங்கே என்று நோட்டமிட்டமிட்டபடியேதான் சென்றேன். அதேபோல் அங்கிருந்த யானைத் தந்தங்கள், தாங்கள் கூறியுள்ள மற்றவையெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன்.
தலைவருடைய அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற பிறகுகூட, பல நாட்கள் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அந்தப் புலியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேன்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்படும். ஆனால் பலரும் இருக்கும் நேரத்தில் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
விடுவேனா?? ஒருநாள், நடிகர்திலகத்திடமே கோரிக்கையை வைத்துவிட்டேன். அவரும் என் ஆசையை நிறைவேற்றிவைத்தார். நடிப்புப் வேங்கையுடன் அவர் வீழ்த்திய வேங்கையும் இருக்க நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம், அந்தப் புகைப்படத்தை எடுத்த நபர் கடைசிவரை எனக்கு அதனைத் தரவேயில்லை.
அதன்பிறகு மீண்டும் ஒருநாள், தலைவர் வீழ்த்திய வேங்கையுடன் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொன்டேன்
நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த இறைவனுக்கும் நன்றி.
1989 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது:
http://i1234.photobucket.com/albums/...ps9ce9ef16.jpg
டியர் செளரி சார்,
நடிகர் திலகத்தால் உலக தமிழர்களுக்கு நினைவூட்டப்பட்ட அறிஞர்கள் பெரியவர்கள் என்று தங்களுடைய வரிசையான பதிவுகள் அருமையாக உள்ளன. தங்களுடைய பணி பாராட்டத்தக்கது. நன்றி.
'திரும்பிப்பார்' ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகர் தொடருக்கு பெரும் வரவேற்பு அளித்து ரசித்துப் பாராட்டிய அன்புள்ளங்கள் கோபால் சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சார், சந்திரசேகரன் சார், சுப்பிரமணியம் ராமஜெயம் சார், ராதா கிருஷ்ணன் சார், அன்பு காட்டுப் பூச்சி சார் சார், பெயர்க்காரணம் அறியலாமோ) சவுரி சார், கைபேசியில் அனைத்துப் பதிவுகளுக்கும் பாராட்டுகள் தெரிவித்த அன்புத்தம்பி செந்தில் மற்றுமுள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
சவுரி சார்,
நன்றி!
தங்களின் 29 நிமிட கருத்து பரிமாற்ற 'நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல்' வீடியோவை இப்போதுதான் கண்டு களித்தேன். இவ்வளவு நாள் நேரமின்மை காரணமாக பார்க்க இயலவில்லை. ஒரே வரியில் சொல்வதென்றால் மிக மிக வித்தியாசமான முயற்சி. ரசித்துப் பார்த்தேன். கையில் உள்ள எளிய சாதனங்களைக் கொண்டு ஒரு திரைப்பட ரேஞ்சுக்கு முயற்சி செய்து நடிப்பிற்கும் மேல் நடிகர் திலகத்தை விலாவாரியாக அலசி ஆராய்ந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் இது போன்ற புதிய முயற்சிகள்.
அதே போல
அனைவராலும் காப்பியடிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் உடை அலங்கார நளினம் (பாகம் - 2) ம் அமர்க்களம். அருமையான அலசல். அவரைக் காப்பியடிக்க முடியாதவர்கள் இருக்கவே முடியாது. இடையிடையே வரும் ஒளிக் காட்சிகள் பின்னணி இசைக் கோர்ப்புகள் அனைத்தும் தங்கள் இருவரின் மேம்பட்ட உழைப்பைக் காட்டுகின்றன. அன்பு நண்பர் ஆனந்துக்கும் நமது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். ஆனந்த் அவர்களை மையத்தில் உறுப்பினராக்குங்கள்.
நடிகர் திலகத்தால் உலக தமிழர்களுக்கு நினைவூட்டப்பட்ட அறிஞர்கள் பெரியவர்கள் வரிசையில் திருவருட்செல்வர் - அப்பர் பற்றி தாங்கள் சிரமப்பட்டு தொகுத்துள்ள விஷயங்கள் அற்புதம். அப்பருக்கும் எங்கள் கடலூருக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. கல்லிலே கட்டி கடலிலிலே போட்டும் அப்பர் அப்பனருளால் மிதந்து வந்து கரையேறிய பெருமையைப் பெற்றது எங்கள் கடலூரில்தான். அதற்கான ஆதாரங்களை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் பெரிய கோவிலில் காணலாம். அப்பரின் அருளாசி பெற்று அவர் ஈஸ்வரன் மேல் பாடிய பதிகங்களால்தான் பாடலீஸ்வரர் கோவில் என்று இன்றும் பெரிய கோவில் பெயர் பெற்று விளங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க பாதிரிமரம் இந்தக் கோவிலில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சி தருவதால் இவ்வூருக்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயர் நிலைத்ததாக பெயர்க் காரணம் கூறுவார்கள்.
எங்கள் கடலூரை தங்கள் ஆன்மீகப் பதவின் மூலம் நான் நினைத்து பெருமைப்பட வைத்ததற்கு தங்களுக்கு என் பக்தி மனம் கமழும் நன்றி!
டியர் சந்திரசேகரன் சார்,
நன்றி!
நடிப்புப் புலியின் கைகளால் வேட்டையாடப்பட்ட வேங்கைப் புலியின் அருகே சமூக நலப் புலியாய் தாங்கள் நிற்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சியடைந்தேன். கண்ணைக் கவரும் அற்புதமான புகைப்படம்.