-
தாயாகி வந்து
தமிழாக நின்றவனே - என்
உயிராகி வந்து
உணர்வாகி உள்ளவனே
நானாகி வந்து
நினைவாகி பதிந்தவனே
தனியாக நின்ற என்
துணையாக வந்தவனே
நெருப்பான என்னை
நிலவாகத் தணித்தவனே
நெறியாக வாழ
அறிவாகி நின்றவனே
கனவான என்னை
நனவாக்கித் தந்தவனே
கல்லான மனத்தை
கனியாக்கி மகிழ்ந்தவனே
கருவாகி வந்து
கவியாக மலர்ந்தவனே
இரவாகி வந்து
இரண்டறக் கலந்தவனே
கண்ணாகி நின்று
கனிவைத் தந்தவனே - என்
கலையாக நின்று
பெருமை தந்திடாயோ
தமிழ்க் கவியாகி வந்து என்
பெயர் தன்னை சொல்லிடாயோ
-
நிஜமா
இது நிஜமா
இங்கே இருப்பது
நிஜமா
எம்மவன் இங்கே
நிஜமா
நிழலாய் வருவான்
நிதமும் தருவான்
மழலை மொழியான்
மனத்தின் இனியான்
நிஜமா
இது நிஜமா
கவிதை மொழியான்
காதல் சொல்வான்
காவியம் மலர
வீரமும் கொள்வான்
நிஜமா
இது நிஜமா
ரோஜா நிறத்தான்
ராகம் சொல்வான்
மோனத் தவத்தில்
மேகத் துயிலான்
நிழலாய்
வருவான்
நினைவில் நிற்பான்
விழிக்கும் போதில்
விண்ணில் மறைவான்
இது நிஜமா
இங்கே இருப்பது
நிஜமா
எம்மவன் இங்கே
நிஜமா
தலைவா நிஜமா
எம்மவன் இங்கே
நிஜமா
-
ஈழமதை வெற்றி கொண்டவனே - தமிழ்
ஈழமதில் கொடி நாட்டிட உதவிட்டவனே
வேழமதில் நாயகனாய் வலம் வந்தவனே
- சிங்களத்தின்
வேர் ஒடுக்க தமிழருக்கு கை கொடுத்தவனே
பாழும் வெறி அரக்கர்தனை அழித்திடவே
தமிழ் நாடுடை மது விலக்கு தந்தவனே
வாழும் தமிழ் உள்ளளவும் உன் தன்
வரலாற்றை பேசிடுமோ இவ் உலகம்
இமயத்தில் தமிழ் கொடி பறந்திடவோ
உலகத் தமிழ் நாடு கண்டவனே
இணையத்தில் தமிழ் பரவிடவோ
தமிழ் எழுத்து மாற்றி அமைத்தவனே
சமயமதில் சைவனாகி நின்றவனே
சமத்துவத்தில் மன்னனாகி திகழ்ந்தவனே
விமர்சனங்கள் உன்னை நெருங்கி விட அஞ்சும்
வீரத் தமிழ் நாயகனாய் வலம் வந்தவனே
-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
வாழ்க்கை என்னும் புத்தகத்தை
வரலாறாய் மாற்றியவன்
கொள்கை தீபம் ஏற்றி
கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்
-
Quote:
Originally Posted by
ravichandrran
சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
சீறி வருவான் புயலாக
-
Quote:
Originally Posted by
Sathya VP
பத்துத் திங்கள் தமிழகத்தை
பலரும் மெச்சும் வண்ணமதில்
முத்தாக ஆண்டவனாம்
முத்தமிழாய் நாளும் நின்றவனாம்
-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
தொலை நோக்கு இல்லையென்று
தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
விலை போகா எங்கள் மன்னவனும்
வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்
-
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
உங்களின் மின்னல் வேக 7000 பதிவுகள் - அனைத்தும் அருமை . கண்களுக்கு விருந்து ,
அன்பு வாழ்த்துக்கள் .
-
இனிய நண்பர் திரு ஜெய் சங்கர் சார்
மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு - உங்களது விமர்சனம் மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் ஸ்டைல் பற்றிய காட்சிகள் விவரித்த விதம் நெஞ்சை அள்ளியது .
-
இனிய நண்பர் திரு பாஸ்கர் சார்
உங்கள் கவிதை நடையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் -
வீறு நடை போடுகிறார் .
தொடர்ந்து கவிதைகள் புனையவும் . நன்றி