http://i1065.photobucket.com/albums/...psqv7suafe.jpg
Printable View
http://www.mediafire.com/listen/3c0r...HANTPRAYER.MP3
ரங்கோன் ராதா திரைப்படத்தில் தலைவர் மந்திரம் உச்சரித்து பூஜை செய்யும் காட்சி ... ஆடியோவாக
http://g.ahan.in/tamil/Vasantha%20Ma...gai%20(15).jpg
இது இறந்து போன ராணிக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல. உயிரோடு இருக்கும் என் காதலிக்காக கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதியல்ல சன்னிதி.
இந்த வரிகள் காதல் வேதமாய் அந்த காலத்தில் ஒவ்வொரு இளைஞன் மனதிலும் ஒலித்தது இன்றும் பசுமையாய் நினைவில் உள்ளது. வானொலியில் இந்த வரிகள் விவித்பாரதியில் இரவு 8.30 மணிக்கு தினமும் ஒலிக்கும் போது இதற்காகவே மற்ற வேலைகளை விட்டு விட்டு ரேடியோ அருகில் காத்திருந்ததெல்லாம் நினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகள்.
எண்ணற்ற இளைஞர்கள் மனதில் இன்றும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய காதல் வசனம் வசந்த மாளிகை படத்தில் இந்தக் காட்சியில் இடம் பெற்ற வசனமாகும். என்றும் சிரஞ்சீவியாக காதலர்கள் மனதில் நிலைத்திருக்கும் இந்த வசனம், அவர்களைத் தாண்டி அனைத்து மக்களிடமும் நெஞ்சில் நிலைத்து விட்டதே இதனுடைய பெருமைக்கு சான்று.
பாலமுருகனின் பேனாவில் காதல் மையை நிரப்பி எழுதினாரோ என ஒரு பத்திரிகை அந்தக் காலத்தில் எழுதியது. அது உண்மைதானோ என இன்றும் தோன்றுகிறது.
இதோ நாம் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழ ..
ஒலி வடிவில்...
http://www.mediafire.com/download/t3...JIDIALOGUE.MP3
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
----------------
காதல் பாடி ஓய்ந்த அமைதியில், அகன்ற மலைப்
பிரதேச வெளியில், பொட்டிட்டு,
மலர் சார்த்தி கடவுளாக
வணங்கப்படும் ஒரு கல்லின்
முன் கண்மூடி, மனமுருகி
ஏதோ வேண்டி நிற்கிறாள்...
உமா.
அவள் பின்னாலேயே ஒடி வந்த
சுந்தர், அவள் நிற்கும் நிலை
கண்டு வியக்கிறான். கண்மூடி
நிற்கும் அவளின் காதின் அருகில் விரல்களால் சொடுக்கிட்டுச் சத்தமெழுப்பி
அவளது வேண்டுதல் கலைத்துக் கேட்கிறான்..
"கல்லுக்கு முன்னாடி நின்னு
என்ன பண்ணிக்கிட்டிருக்கே?"
"அப்படியெல்லாம் சொல்லாதீங்க.. கண்ணைத் திறந்து பாத்து இதைக் கல்லுன்னு சொன்னா கல்லுதான். கண்ணை மூடிக்கிட்டு இதைக் கடவுள்னு
நினைச்சா கடவுள்தான்."
-என்கிறாள் உமா.
அவள் பேசுவதை வியக்கும்
சுந்தர் "பெரிய பக்தை ஆயிட்டே
போலிருக்கே?" என்று கேலி
செய்கிறான்.
"வெட்டவெளியாயிருந்த உள்ளத்தை நீங்கதான் கோவிலாக்கினீங்க. அந்தக்
கோவில்ல உங்களை கடவுளா நினைச்சு எப்ப பூஜை செய்ய ஆரம்பிச்சேனோ..
அன்னிக்கே நான் உங்க பக்தையாயிட்டேன்."
-என்று உமா சொல்கிறாள்.
தொடர்ந்து வரும் வசனங்களும், காட்சிமைப்பும்,
இயக்கமும், இசையமைப்பும்,
நாட்டியப் பேரொளி துவக்கி
வைக்க நடிகர் திலகம் முடித்து
வைக்கும் அந்தக் காட்சிக்கான
நடிப்பின் பூரணத்துவமும்
நம் நெஞ்சோடு வாழ்பவை.
இன்னொன்று...
காதல் தரும் பேரின்பத்தைக்
கூட தாங்கிக் கொள்ள முடியாமல் பரிதவிக்கிற
ஒரு பெண்ணின் மனோநிலை
"இரு மலர்கள்" படத்திற்குப்
பிறகு வேறெந்தப் படத்திலும்
சொல்லப்படவில்லை என்றே
நினைக்கிறேன்.
"வேறெந்த நினைப்புமில்லாம
உங்க மனசில நான் மட்டுமே நிறைஞ்சிருக்கிற இந்த ஒரு
கணம் போதும்." -என்று அன்பு
தாங்காமல் கதறித் துடிக்கிற
உமாவிற்கு, உமாவாகவே
மாறி வசனம் எழுதியுள்ள
அய்யா திரு.ஆரூர்தாஸ்
போற்றுதலுக்குரியவர்.
"தில்லானா"வில் "மறைந்திருந்து" பாடலினூடே
தனித்தனியே புருவங்களை
ஏற்றி, இறக்கி, வளைத்து
வித்தை காட்டிய போது,
பப்பியம்மாவுக்காக ஆனந்தமாய்த் தட்டி ஒலி
எழுப்பிய கரங்கள்..
"இதோ.. இன்பத்தாலே துடிக்குதே..இந்த நரம்பெல்லாம்
அப்படியே அறுந்துடக் கூடாதா?"-என்று பரந்த
வெளியெங்கும் ஒடி,ஒடி
நடிக்கும் போது கும்பிடவே
செய்கின்றன.
காட்சியமைப்பின்படி, இதில்
பத்மினியம்மா ஏற்ற உமா
பாத்திரம்தான் மக்கள் மனதில்
பதியும் வாய்ப்பு அதிகம்.
அதிலும், தனக்கொரு பெரும்
பங்கை தட்டிச் செல்லும்
நம் நடிகர் திலகத்தின்
சாமர்த்தியம் வேறு எவருக்கும்
வராது.
பத்மினியம்மாவை கிண்டல்
செய்வதில் துவங்கும் அவரது
திறமை சாம்ராஜ்யம், பத்மினியம்மா உணர்ச்சிவசப்
பட்டு பேசப் பேச மாறும்
முகபாவங்களில் விரிந்து,
எதைக் கல்லென்றாரோ..
அதைக் கடவுளென்றுணர்ந்து,
அதன் மீதிருந்த குங்குமம்
எடுத்து பத்மினியம்மாவுக்கு
இட்டு, நம்மை யாரும்
பிரிப்பதற்கில்லை என்று
நெஞ்சு நிமிர்த்தும் போது
மேலும் பரவி நிலைக்கிறது.
--------------
சுந்தர் உறங்குகிறான்.
(அதாவது-
நடிகர் திலகம், சுந்தராக
உறங்குவது போல் நடிக்கிறார்.
அல்லது-
நடிப்பு அங்கே உறங்குகிறது.)
மெல்ல எழுந்து, உள்ளங்கை
இரண்டும் விரித்து முகத்துக்கு
நேரே வைத்துக் கொண்டு
"உமா" என்று செல்லமாய்
அழைக்கிறான்..சுந்தர்.
கற்பனையென்றாலும், அழைத்தது அன்பான காதலன்
என்பதால் அவன் உள்ளங்கையில் உடனே
தோன்றுகிறாள்..உமா.
அவளும்,அவனுமாய்க் கைகோர்த்து உல்லாசமாக
நடந்ததாக அவன் கண்ட
கனவை அவனது உள்ளங்கை
உமாவிடம் சொல்லிக்
கொண்டிருக்கையில்..
வீறிட்டு அலறுகிறது.. அலாரம்
வைத்த கடிகாரம். அலறும்
கடிகாரம் காலை ஏழு மணி
என அறிவிக்கிறது.
தொடர்ந்து வீறிடும் கடிகாரத்தை கட்டிலில் இருந்தபடியே சுந்தர் எட்டி
எடுக்க முனையும் போது, அது
தவறி கீழே விழ..
"சாந்தி" என்று கூவுகிறான்.
இரண்டாம் முறையாக "சாந்தி"
என்று கத்தும் போது, சார்த்தப்
பட்ட அறைக்கதவு திறந்து
உள்ளே நுழையும் பெண்
உருவத்தின் பெயர், புன்னகை
அரசி கே.ஆர்.விஜயா.
அந்த "சாந்தி" கதாபாத்திரத்தில்
புன்னகை அரசியைப் பார்க்கிற
போது, ஏதோ காபித்தூள்
இரவல் வாங்க கூச்சத்தோடு
நம் வீட்டுக்கு வரும் பக்கத்து
வீட்டுப் பெண் போல அத்தனை
யதார்த்தம்.
அத்தனை சீக்கிரம் தன்னை
எழுப்பக் காரணம் என்னவென்று விசாரிக்க,
அன்று சுந்தரின் அன்னையின்
தவசமென்று சொல்லப்படுகிறது.
வேகமாய் எழுந்து, குளிப்பதற்காக துண்டு, சோப்பு
இவற்றை எடுக்கப் போக..
ஏற்கனவே குளியலறையில்
அவையனைத்தையும் எடுத்து
வைத்திருப்பதாய் சொல்லும்
கே.ஆர்.விஜயாவை திரும்பிப்
பார்க்கும் நம் நடிகர் திலகத்தின்
ஒரே ஒரு பார்வை போதும்..
பல நூறு வார்த்தைகள் கொண்டு எழுதப்பட வேண்டிய
வசனத்தை ஓசையின்றிப்
பேசி விட.
(...தொடரும்...)