Thank you for the update, Saradha mam.
Printable View
Thank you for the update, Saradha mam.
Thank you for the update, Saradha mam. :clap: :clap: :clap: :ty:
நன்றி கீதா... (உண்மையிலேயே உங்க பெயர் அதுதானா என்று தெரியவில்லை. ஆனால் சுருக்கெழுத்துக்களை வைத்துப்பார்க்கும்போது அதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். இத்தனை நாள் உங்க போஸ்ட் படித்தும் இன்னும் உங்கள் பெயர் தெரிந்துகொள்ளாதது தவறுதான், ஸாரி).
ஊகும்... எவ்வளவு நினைத்து, நினைத்து பார்த்தும் கடந்த கால வாழ்க்கையில் தனக்கு தமிழ்நாட்டில் எதிரிகள் யார் என்பதை மேனகாவால் ஊகிக்கவே முடியவில்லை. இதனை தன் வளர்ப்புத்தந்தை ராஜவர்மனிடம் கூற, அவரோ மனதைப்போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், நேரம் காலம் வரும்போது தானே விவரங்கள் தெரியவரும் என்று கூறுகிறார். மேனகா அவரிடம், தன்னை ஏற்கெனவே தொல்காப்பியன் என்பவர் சந்தித்து தன்னை அவருடைய தங்கை என்று சொன்னதாகக்கூற, அவரோ வசதியானவர்களிடம் சொந்தம் கொண்டாட சிலர் பொய்களைச்சொல்லிக்கொண்டு வரக்கூடும் என்று மறுக்கிறார். அப்படி ஒரு அண்ணன் இருந்ததாக தன் தந்தை தன்னிடம் சொல்லவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் தொல்காப்பியனைப்பார்த்தால் பணத்துக்காக அப்படி பொய் சொல்பவராகத் தெரியவில்லை என்றும், அவர் மூன்று முறை தன் உயிரைக் காப்பாறியதாகவும் மேனகா சொல்கிறாள்.
வழக்கம்போல இறுக்கமான முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருக்கும் சங்கீதாவிடம் பாஸ்கர் வந்து தன் 'நல்லவன்' நாடகத்தைத் தொடர்கிறான். தான் முன்னாளில் அவளிடம் கோப்பப்பட்டதற்கு ரொம்பவே வருந்துவதாகவும், தன்மேல் அவள் வைத்திருக்கும் தப்பான அபிப்பிராயமே தன்னுடைய நல்ல விஷயங்களை அவளிடம் இருந்து மறைக்கின்றன என்றும் சொல்வதோடு, அவளை மேலும் தன் வலையில் வீழ்த்தும் விதமாக அவனே அவளுக்கு சாப்பாடு கொண்டுவந்து ஊட்டுகிறான். அவள் மனம் ரொம்பவே அவன்பால் சலனமடையத் தொடங்கிவிட்டது. வெளியே நின்று இந்த கூத்துகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் அலமேலு (மகனின் கபட நாடம் தெரியாததால்) மகனின் மனமாற்றம் கண்டு வயிறு எரிகிறாள். (மகனின் நாடகம் தெரிந்தால், நடிப்பில் அவனையும் மிஞ்சும் விதமாக தன் மருமகள் மேல் கரிசனத்தைக்கொட்டிவிட மாட்டாளா).
மாடியிலிருந்து படியிறங்கி வரும் சித்ரா தன் வீட்டு ஓனர் மீண்டும் கீழ் போர்ஷனுக்கு 'டு லெட்' போர்டு மாட்டிக்கொண்டிருப்பதைக் கண்டு காரனம் விசாரிக்க, அவர் இதற்கு முன் குடியிருந்த ஐயர் (ஆகிய வின்சென்ட்) காலி செய்துவிட்டுப்போய் விட்டதாகச் சொல்வதோடு அவனுடைய முரண்பாடான செயல்பாடுகளைப் பற்றியும் சொல்கிறார். (தன்னை அழைத்துப்போன ஐயர்மூலமாக தன் இருப்பிடம் தெரிந்து தன்னை மேனகா பிடித்துவிடக்கூடும் என்று வின்சென்ட் ஓடி விட்டான்). அப்போது அங்கே வரும் சித்ராவின் பாஸ், தொல்காப்பியனின் சிறுவர் ஜெயில் வாழ்க்கை பற்றி விசாரிக்க அவளும் விவேக்கும் திருவனந்தபுரம் போகவேண்டியிருக்கும் என்று சொல்கிறார்.
சங்கீதா முற்றிலும் மாறிவிட்டாள். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போக வேண்டும் என்று பாஸ்கரிடம் சொல்கிறாள். அவனும் உடனே கிளம்ப, அலமேலு தடுத்து சங்கீதா மட்டும் ஆஸ்பத்திரிக்குப்போகட்டும், நீ ஆஃபீஸுக்குப்போ என்று சொல்ல, அவன் இனிமேல் தன் மனைவிக்கும் குழந்தைக்கும் பிறகுதான் தனக்கு தொழில் பற்றிய சிந்தனையெல்லாம் என்று சொல்லி சங்கீதாவை மேலும் பிரைன்வாஷ் செய்யவும், அலமேலுவை திகைக்க வைக்கவும் செய்கிறான்.
(மேனகா தன்னை ஐயர் வேடத்தில் பார்த்துவிட்டதால், விசென்ட்டின் ஐயர் அவதாரமும் முடிந்துவிட்டது என்று நினைக்கத்தோன்றுகிறது. முதலில் வின்சென்ட், பின்னர் பத்திரிக்கையாளர் நாராயணன் குட்டி என்ற மலையாளி வேடம், பின்னர் சாமியார் வேடம், சாமியார் வேடத்தை மீனவர் குப்பத்து சம்பவத்தில் போலீஸார் பார்த்துவிட்டதால் பின்னர் முஸ்லீம் வேடம், அதன்பின்னர் ஐயர் வேடம். இப்போது அதையும் மேனகா பார்த்துவிட்டதால் அடுத்த வேடம் என்னவென்று தெரியவில்லை. நான் முன்னரே சொன்னபடி இவரும் எந்த சந்தடியும் இல்லாமல், இன்னொரு 'தசாவதாரம்' எடுத்துக்கொண்டிருக்கிறார். 'ப்ரியா' படத்தில் வில்லனாகவும், 'மூன்றாம் பிறை'யில் கொல்லுப்பட்டரைக்காரனாகவும் பார்த்த பிறகு இப்போதுதான் அதிகமாகப் பார்க்க முடிகிறது என்று நினைக்கிறேன்).
நன்றி ப்ரியா...... (உங்கள் அனைவரின் ஊக்கத்திற்கும்).
thanks Saradha
I am in Holiday for 5 weeks
Now in Germany
just peeped in
enjoy all
c y all later once back in Ottawa
Dear aanaa...
Have a nice trip and enjoy the holidays.
'கோலங்கள்' சீரியல் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது என்பதற்காக, ஏராளமாக விளம்பரங்களை ஒப்புக்கொண்டு, அந்த விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சமே கொஞ்சமாக சீரியலை ஒளிபரப்புவதற்கு ஒரு முடிவு வந்தாக வேண்டும். சன் டி.வி.க்கு இவ்வளவு பேராசை கூடாது.....
நேற்றைய முதற்பகுதியை திருவேங்கடம் ஆக்ரமித்துக்கொண்டார். தேர்தல் நெருங்கி விட்டது போலும், ஏதோ இறுதிக்கட்ட பேச்சு அது இது என்று பேசிக்கொண்டார்கள். அவரது கைத்தடிகள் அவரை விட கேவலமான ஐடியாக்களைக் கொடுத்தனர். இவர்களது வம்படி வழக்கிலேயே முதற்பகுதி முடிந்தது...
ஆஸ்பத்திரியில் இருக்கும் ஆனந்தியைப்பார்க்க தொல்காப்பியன் வருகிறான். ஐ.சி.யு. வார்டின் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது உள்ளே அபி, கற்பகம், ராஜேந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். உள்ளே நுழையத்தயங்கியபடி வேறு பக்கம் திரும்பி நிற்க, அப்போது வெளியில் வரும் ராஜேந்திரன், ஓசைப்படாமல் உள்ளே போய் அபிக்கு தெரியாமல் கற்பகத்தை மட்டும் வெளியே அழைத்து வருகிறான். வெளியே தொல்காப்பியன் நிற்பதைப்பார்த்து, அவன் வந்த காரணத்தைக்கேட்க, ஆனந்தியைக்காண வந்த விவரத்தைச்சொல்ல அவள் கோபமடைகிறாள். முன்பே தான் வர எண்ணியதாகவும், கூட்டம் அதிகமிருந்தால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் தாமதமாக வந்ததாகவும் சொல்ல, கற்பகமோ, 'உன்னால் நாங்கள் பட்ட அவமானம் எல்லாம் போதாதா, இன்னும் ஏன் வந்து எங்களை இம்சிக்கிறாய்' என்கிற ரீதியில் பொரிந்து தள்ளி அங்கிருந்து அவனைப்போகுமாறு விரட்ட, மன வருத்ததுடன் தொல்ஸ் வெளியேறுகிறான்.
மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறும் நேரம் அங்கு ஆட்டோவில் வந்திறங்கும் உஷா தொல்ஸிடம் விவரம் கேட்க, நடந்ததைக் கூறுகிறான். அதைக்கேட்டு வருத்தமடையும் உஷா, தொல்ஸைப்போகுமாறு அனுப்பிவிட்டு ஐ.சி.யு.வார்டுக்கு செல்கிறாள். (அதென்ன, மற்றவர்களை பார்த்து பேசும் அளவுக்கு தேறியபின்னும், ஆனந்தியை இன்னும் ஐ.சி.யு.வில் வைத்துள்ளனர்?). உஷாவைப்பார்த்த அபிக்கு சிறிது சந்தோஷம் சிறிது ஆச்சர்யம். ஆனால் கற்பகம் அவளிடம் முகம் கொடுத்துப்பேசவில்லை. ஆனந்தியிடம் உடல் நலம் விசாரித்த பின்னர், அபியை தனியே வெளியே அழைத்துச்செல்கிறாள். சந்தேகப்பட்டு கற்பகமும் ராஜேந்திரனும் பின்தொடர்கின்றனர்.
அபியிடம் உஷா, சற்றுமுன் தொல்காப்பியன் ஆனந்தியைப்பார்க்க வந்து, அம்மாவிடம் அவமானப்பட்டு வெளியேறியதைச்சொல்ல அபிக்கு அதிர்ச்சி 'தொல்கப்பியன் வந்தாரா?'. ஆனந்தியப்பார்க்க வந்தவரை அம்மா விரட்டியடித்த விவரத்தை உஷா விலாவரியாகச் சொல்ல, இடையே அம்மா புகுந்து குறுக்கிட்டு உஷாவை அந்த தொல்காப்பியனுக்கு வக்காலத்து வாங்கவேண்டாமென்று கண்டிக்கிறாள். அன்றைக்கு ஆஃபீஸில் நடந்ததை ஆர்த்தி தன்னிடம் சொன்னதாகவும் சொல்கிறாள். (எந்த ஆர்த்தி சொன்னதை...?. தன் வீட்டு பூஜைக்கு அம்மாவை வருந்தி வருந்தி அழைத்து, அங்கே போன அம்மாவை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அப்படி முகத்தில் கரி பூசி அனுப்பிய அந்த ஆர்த்தி சொன்னதை). கற்பகம் ஒரு முட்டாள் கேரக்டர் என்று நான் அடிக்கடி சொல்லி வருவதை அந்த அம்மா மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறாள். சாரதா சொல்வது பொய்யாகிவிடக்கூடாது என்பதில் அந்த அம்மாவுக்கு அவ்வளவு அக்கரை.
ஒருகட்டத்தில் கற்பகம் உஷாவை வாழாவெட்டி என்று சொல்லி அவள் மனதைப் புண்படுத்துகிறாள். தன்னுடைய புருஷன் இத்தனை நாள் எங்கேயிருந்தார், இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாதவள், தன் மகள் அபி ஒரு வாழாவெட்டியாக இருந்து வருவதை உணராதவள், கல்யாண வயது கடந்தபின்னரும் தன் மகள் ஆனந்தி இன்னொரு வகையில் வாழாவெட்டியாக இருப்பதை நினைக்காதவள், தன் மகள் ஆர்த்தி பலகாலம் தன கணவனைப் பிரிந்து வாழாவெட்டியாக இருந்ததை மறந்தவள்..... உஷாவை வாழாவெட்டி என்று சொல்வது அதிசயமல்லவா?.
அபியின் வார்த்தைகளையும் மீறி, கற்பகம் உஷாவை விரட்டியடிக்க அவளும் வேதனையுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறாள்.
Thanks for the update Saradha mam :ty: .
Nice update sarada mam, felt as if saw the serial live. :clap: :ty:
தேர்தல் பிரச்சாரம் முடிந்து, இறுதிக்கட்ட வேலைகள் பற்றி தோழரும், தோழரின் தோழர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரம் முடிந்துவிட்டபோதிலும் தோழர்கள் அசட்டையாக இருந்துவிடக்கூடாது எனவும், தேர்தலில் வெற்றிபெற திருவேங்கடம் கூட்டத்தார் எத்தகைய தில்லுமுல்லுகளிலும் ஈடுபடத்தயங்க மாட்டார்கள் என்றும், தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும் ஜனநாயக நெறிமுறைகள் தோற்றுவிடக்கூடாது எனவும் தோழர் தன் சகாக்களுக்கு அறிவுறுத்துகிறார். அந்நேரம் வாசலில் ஏதோ சத்தம் கேட்டு தோழர் சென்று பார்க்க, ஒரு மூதாட்டி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் கூலி விஷயமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு அருகில் சென்று பார்க்க, அது வேறு யாரும் அல்ல. தோழரின் அம்மாதான். கிராமத்தில் இருந்து மகனைக்காண வந்திருக்கிறார்.
அம்மாவை அழைத்துச்சென்று தோழர்களுக்கு அறிமுகப்படுத்தி தேனீர் தந்து உபசரிக்க, அம்மா எல்லோருக்கும் தான் கொண்டு வந்த தின்பண்டங்களை விநியோகிக்க, தோழர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அம்மாவைப்பார்த்ததில் தோழருக்கு ரொம்பவே உணர்ச்சிப்பிரவாகம். தன் தாயின் மேன்மைகளையும், சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட தன்னை அவர் வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்க மேற்கொண்ட சிரமங்களையும், தியாகங்களையும் சொல்லிச் சொல்லி பூரிப்படைகிறார். அம்மாவோ, தன்னுடைய ஒரே ஆசையான மகனின் திருமணம் பற்றிச்சொல்லி, அந்த ஒரே ஆசையையும் மகன் நிறைவேற்றாதது பற்றி மற்றவர்களிடம் குறை கூறுகிறார். அதற்கு தோழர், தன் அம்மா தன்னை இன்னும் இளைஞனாகவே நினைத்துக்கொண்டிருப்பதாகவும், தனக்கு திருமண வயதெல்லாம் கடந்து விட்டது என்றும் சொல்லி சமாதானப்படுத்த, தன் மகனின் தேர்தல் முடியும் வரை அவருடனேயே இருக்கப்போவதாகவும் சொல்கிறார். தோழர் உணர்ச்சிகளின் சங்கமத்தில் நெகிழ்ந்துபோகிறார்.
(நேற்றைய எபிசோட்டில் தாய் மகன் பாசத்தைப்பார்க்கும்போது நமக்கு லேசாக பொறிதட்டுகிறது. இந்த தேர்தல் கலவரத்தில் தோழர் தன் அம்மாவை இழந்துவிடுவாரோ என்ற அச்சம் தோன்றுகிறது).
தொல்காப்பியனைக் காணச்சென்ற உஷா, தொல்ஸ் இல்லாததால் கடற்கரையில் காத்திருக்கிறாள். (சீரியல்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, செலவில்லாத, அதே சமயம் அழகான அவுட்டோர் லொக்கேஷன் கடற்கரை. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இடம்). காத்திருக்கும் நேரத்தில், பழைய சம்பவங்கள் அவள் மனதில் நினைவலைகளாக வருகின்றன. தனக்கும் அபிக்கும் இடையே இருந்த நட்பு, அதன் காரணமாக தான் ஆதியை நிச்சயதார்த்தத்தில் தூக்கியெறிந்து விட்டு வந்தது, அபியின் முயற்சியால் மீண்டும் தன் திருமணம் நடந்தது, ஆதி, தான் செய்த அக்கிரமங்களை தன் தந்தையிடம் சொன்னதை, மறைந்திருந்து கேட்டது, மறுபடியும் ஆதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தது, பாஸ்கரையும், ஆதியையும் புறக்கணித்துவிட்டு மீண்டும் பழைய அபியும் உஷாவுமாக இருக்க கடற்கரையில் உறுதியெடுத்தது எல்லாம் அவள் மனதில் நினைவலைகளாக வந்தன.
(ஃப்ளாஷ்பேக் அப்படீன்னு நம்ம் ரொம்ப சுலபமா சொல்லிடுறோம். ஆனால் ஒவ்வொரு காட்சியும் எந்த எபிசோட்டில் வந்தது என்று தேடியெடுத்து எடிட் செய்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல, அதுவும் ஆயிரத்துக்கு மேல் எபிசோட்கள் ஓடிவிட்ட ஒருதொடரில்).
தொல்காப்பியன் அங்கு வரவும், அவள் நினைவுகள் கலைகின்றன. இருவரும் தற்போதைய விவரம் குறித்துப்பேசத் துவங்குகின்றனர். தாங்கள் இருவரும் சேர்ந்து மீண்டும் 'கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனம் ஒன்றைத்துவங்குவது குறித்து தொல்ஸ் எதுவும் சாதகமாக பதில் சொல்லவில்லையென்று அவள் கூற, அபி இல்லாமல் இன்னொரு நிறுவனத்தை துவங்குவது பற்றி தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என தொல்ஸ் மறுக்கிறான். தான் ஒரு யோசனை சொல்வதாக உஷா சொல்லிவிட்டு ஏதோ நெடுநேரம் சொல்கிறாள். அது நமக்கு மௌன மொழியிலேயே காண்பிக்கப்படுகிறது. அவள் சொல்லி முடித்ததும் அவள் சொன்ன ஏற்பாட்டுக்கு தொல்ஸ் சம்மதிக்கிறான்.
அது என்ன என்று தெரிய வேண்டுமா?... இன்னும் எத்தனை எபிசோட்கள் வர இருக்கின்றன. அப்போது நமக்கு தெரியாமலா போகும்?.