'நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்... இங்கு நிக்காது சின்னப் பெண்ணின் ஆட்டம்' என்று நம்ம 'மதுர மரிக்கொழுந்து வாசம்' மீண்டும் மாறிப் போனது
Printable View
இசையரசியின் குரலில் இது வானொலியில் ஒலிபரப்பிய போது கேட்டது. இப்போது மீண்டும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
செல்வங்கள் ஓடி வந்தது...
டாக்டரம்மா படத்திலிருந்து மீண்டும்...
http://www.inbaminge.com/t/d/Doctoramma/
கிருஷ்ணாஜி விரும்பிய புதிய மனிதன் திரைப்படப் பாடல்..
நான் சொல்ல வந்தேன் கல்யாண சேதி..
ஜானகி ஸ்ரீராமனின் காதல் நாயகி அல்லவோ... இந்த வரிகளால் தான் இந்தப் பாடல் ஹிட்டாயிற்று...
உபயம்... வழக்கம் போல் சிலோன் ரேடியோதான்...
http://www.inbaminge.com/t/p/Puthiya%20Manithan/
http://cdn.7static.com/static/img/sl...473098_500.jpg
'நமக்குள் ஏன் அன்பே அன்பே வாட்டம்... இங்கு நிக்காது சின்னப் பெண்ணின் ஆட்டம்'
http://ie.7digital.com/artist/ilaiya...ure-soundtrack
சங்கர் கணேஷின் இசைப் புலமைக்கும் திறமைக்கும் உதாரணாய் விளங்கும் படங்களில் ஒன்று சொர்க்கத்தில் திருமணம்...
அதுவும் இந்தப் பாடல் பாடகர் திலகமும் இசையரசியும் போட்டி போட்டுக் கலக்கும் பாடல்...
நான் பாடினால் மயக்கம் வரும் என் பாடல் இனிமை தரும்.. இசையரசிக்கு பொருத்தமான வரிகள் அல்லவோ..
http://www.inbaminge.com/t/s/Sorgathil%20Thirumanam/
உடனே பாடகர் திலகம் விட்டு விடுவாரா என்ன.. அல்லது இந்த வரிகள் அவருக்கு மட்டும் பொருந்தாதா என்ன...
'நான் சொல்ல வந்தேன் நலமான செய்தி
வைகாசி மாதம் கல்யாணத் தேதி
ஜா...னகி (பாலா இழுவை அருமை) ஸ்ரீராமனின்
காதல் நாயகி அல்லவோ'
ஐயோ! பட்டை கிளப்பும் பாடல்.
எம். பி. ஸ்ரீநிவாசன் இசையமைத்த பாடல்கள் என்றாலே தனிச் சிறப்பு உண்டு. ஒன்று கூட சோடை போனதில்லை. குறிப்பாக தாகம் படத்தில் இந்தப் பாடல் சென்னை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது. எம்.பி.எஸ்.வானொலிக் கலைஞர் என்பதாலோ என்னவோ சிலோன் ரேடியோவை நம் வானொலி நிலையம் முந்திக் கொண்டது. முத்துராமன் குரலும் இடையே ஒலிக்கும் இப்பாடல் மிகச் சிறப்பாக இருக்கும் காரணம் அதில் அவ்வப்போது இடம் பெறும் கோரஸ் குரல்கள். வீணையிசை நாதஸ்வரம் எல்லாம் சேர்ந்து நம்மை பரவசமூட்டும்.
நீண்ட நாட்களுக்குப் பின் தாகம் திரைப்படத்திலிருந்து வானம் நமது தந்தை பாடலைக் கேட்போமா..
http://www.inbaminge.com/t/t/Thaagam/
நான் சொல்ல வந்தேன் ... வாசு சார் நீங்கள் முந்திக் கொண்டீர்கள் ...
பால் நிலவு நேரம் பார்க்க வில்லை யாரும்...
இந்தப் பாட்டைக் கேட்போமா...
http://www.inbaminge.com/t/a/Anbu%20Roja/
அன்பு ரோஜா படத்திலிருந்து இரவு வேளைக்கு சரியான பாடல்..
'மனித இனத்தில் பிறப்பதற்கு?'
http://www.inbaminge.com/t/t/Thaagam/folder.jpg
முத்துராமன் கேள்விக் குரல்
இசையரசி பட்டையைக் கிளப்பும் பாடல்...
நீ இல்லாமல் நானில்லை.. நீரில்லாமல் மீனில்லை..
சங்கர் கணேஷின் சூப்பர் பின்னணி இசையில் கேட்கத் தெவிட்டாத பாடல்..
இதுவும் அன்பு ரோஜா படத்திலிருந்து தான்
http://www.inbaminge.com/t/a/Anbu%20Roja/
ஜமுனா குண்டா இருந்தாலும் அழகு... அதேபோல் சத்யபாமா பாத்திரத்தை அவரைத்தவிர யார் செய்தாலும் ஹும் ஹூம்
இதோ .. கிருஷ்ணதுலாபாரம் என்ற படத்தில் பெண்டியாலாவின் இசையில் இசையரசியின் கம்பீரமான பாடல்
ஜமுனாவின் அற்புதமான நடிப்பு..
மிரஜால கலடா .. என்னை விட்டு எங்கேடா போவாய் கண்ணா என கர்வத்தோடு பாடுவதாக அமைந்த பாடல் .. இதெல்லாம் தெலுங்கு பொக்கிஷங்கள்
https://www.youtube.com/watch?v=8FhCidIeXlc
https://www.youtube.com/watch?v=smseJ5meuio
வாசு சார் .. ஓ செலி பாடல் அற்புதம்... ஆஹா ஓஹோ
அதே போல் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் பாடலான ஓ சாதி ரே வின் தெலுங்கு வடிவம்
https://www.youtube.com/watch?v=oprCDCVky64
பொங்கும் பூம்புனல்
நன்றாக வாழ வேண்டும்.. தமிழர் ஒன்றாக வாழ வேண்டும்... 60 ஆண்டுகளுக்கு முன் கே.என். தண்டாயுத பாணி பிள்ளை இசையமைத்து இதே நாளில் வெளியான நடிகர் திலகத்தின் உன்னத நடிப்பில் புதிய பரிமாணமாக வில்லன் வேடத்திலும் கொடி கட்டிப் பறந்த துளி விஷம் படத்தில் இடம் பெற்ற இப்பாடலின் வரிகள் பாடலாசிரியரின் கனவை பிரதிபலித்தது. இன்றும் இது கனவாகவே இருக்கிறது.. இப்பாடல் வரிகள் நனவாக வேண்டும் என்ப்தே நம் அனைவரின் விருப்பமாகும்.
http://www.youtube.com/watch?v=EZW9GegPiNY
பொங்கும் பூம்புனல்
அம்மா. இப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் கிட்டத் தட்ட தினமும் சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பாகும்.
இது ரகசியம்... இதை யாரோடும் சொல்லக் கூடாது நீ... இதை நான் சொல்ல வில்லை.. இந்தப் பாடலின் பல்லவி..
http://www.youtube.com/watch?v=3Fd2ARd5Au0
குரல்கள் - டி.ஏ. மோதி, ஞானம்மா டேவிட்.
பொங்கும் பூம்புனல்
தாய் உள்ளம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் பூச்செண்டு நீ, பொன் வண்டு நான்.
ஹா..ஹா... ஹா...
டி.ஏ.மோதியும் ஜெயலக்ஷ்மியும் பாடும் இப்பாடல் நிச்சயம் நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும்.
http://www.youtube.com/watch?v=wDJ8ZBeviBc
பொங்கும் பூம்புனல்
இசை மேதை ஜி.ராமநாதன் அவர்கள் வேற்று மொழி மெட்டினைப் பயன்படுத்த விரும்பாதவர். ஆனால் இந்தப் பாடலை இந்த மெட்டில் தான் வேண்டும் என படத்தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்கள் கூறி வற்புறுத்தி இடம் பெறச் செய்ததாக அந்த காலத்தில் பேச்சு உண்டு. ஆனால் இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானதென்னமோ உண்மை. கல்யாணிக்குக் கல்யாணம் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த மாநிலத்தைப் பாராய் மகனே பாடல் இசையரசிக்கும் பி.பி.எஸ்சுக்கும் நிலையான புகழைத் தந்த பாடல்களில் ஒன்று.
http://www.youtube.com/watch?v=5D5LBMaKjgM
பாடல் வரிகள் பட்டுக்கோட்டையார்
பொங்கும் பூம்புனல்
http://www.youtube.com/watch?v=V87vGSbKRGk
பொங்கும் பூம்புனலாய் என்றும் புதியதாக ஆங்கிலத்தில் FRESHNESS என்போமே அது போல் திகழும் பாடல். நடிகர் திலகத்தின் ஸ்டைலான தோற்றத்தில் மயக்க வைக்கும் இப்பாடல் பாடகர் திலகத்துடன் யூ.ஆர். ஜீவரத்னம் அவர்கள் பாடிய மறக்க வொண்ணா பாடல்.
இதைக் கேட்டும் தென்றல் வரவில்லையென்றால்..
.
.
.
.
.
என்ன பண்றது எங்கே வருகிறதோ அங்கே போக வேண்டியது தான் என்கிறீர்களா...
பொங்கும் பூம்புனல் வரிசையில் நீங்கள் அளிக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள் ராகவேந்திரன் சார். அற்புதம். காலை களை கட்டுகிறது.
VASU SIR
http://i57.tinypic.com/k9tn49.jpg
OUR GREATEST OLDEN DAYS LOVER '' RADIO'' IN 1960'S
http://i61.tinypic.com/1zb88si.jpg
இசையமைப்பாளர் சம்பத் செல்வன் பற்றி சில பக்கங்களுக்கு முன் பதிவுகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. அதன் தொடர்ச்சியாக.
சம்பத் செல்வன் என்பது இரண்டு பேர். இருவருமே குலதெய்வம் ராஜகோபால் அவர்களின் புதல்வர்கள். சம்பத் செல்வன் இருவருமே இணைந்து ஓடங்கள் படத்தில் அறிமுகமானார்கள். இதனைத் தொடர்ந்து துளசி படத்திற்கும் அவர்களையே தயாரிப்பாளர் இசையமைக்கப் பணித்தார்.
இன்னொரு படம் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது சம்பத் அ செல்வன் இருவரில் ஒருவர் விபத்தில் காலமாகி விட்டார். இன்னொரு புதல்வர் அந்தப் படங்களை முடித்துக் கொடுத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் அவரிடம் உரையாடிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல்
இன்றைய ஸ்பெஷல் (42)
'துளி விஷம்' (30-07-1954) ஒரு நினைவுப் பாடல்.
http://i1094.photobucket.com/albums/.../GEDC4199a.jpg
'துளி விஷம்' படத்தில் நடிகர் திலகத்தின் அட்டகாச முத்திரைகளோடு நம்மை மயக்கும் பாடல்.
சங்கீதம்- கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை
திரைக்கதை, வசனம், இயக்கம்: ஏ.எஸ்.ஏ.சாமி.
தயாரிப்பு-வி.எல்.நரசு
அரண்மனை நர்த்தகி அங்கயற்கண்ணி என்கிற அங்கா (பி.கே.சரஸ்வதி) தான் காதலித்து அதை மறுத்த சந்திரனைப் (கே.ஆர். ராமசாமி) பழி வாங்க நடிகர் திலகத்தை (கற்பக நாட்டு மன்னன் சூரியகாந்தன்) பயன்படுத்தி அவரைக் காதலிப்பதாக நடிக்கும் போது வரும் அந்த மறக்க முடியாத பாடல்
'என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்'.
அங்கா நாட்டியமாட, ஒவ்வொரு வரிக்கும் நடிகர் திலகம் சேரில் அமர்ந்து கனிகளை உண்டபடி தரும் முகபாவங்களுக்கு கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது. இரு தோள்பட்டைகளையும் முன் பக்கம் வெட்டி, வெட்டி அசைத்து, 'பருவம் நல்ல உருவம்' வரிகளின் போது தலையை ஒருமாதிரி ஆட்டி ரசிக்கும் அழகை எப்படி வர்ணிக்க முடியும்? பாட்டில் வரும் வரிகள் இவர் புகழ் பாடும் போது முகத்தில் காட்டும் அந்த பெருமை கலந்த சிரிப்பு, கிட்டாத கனி கிட்டி விட்டதே என்ற பூரிப்பு, வந்த காரியம் நிறைவேறாமல் போனால் கூட இந்த காரியம் நிறைவேறி விட்டதே என்ற பூரண திருப்தி என்று அமுத விருந்தை அழகாய்ப் படைக்கும் நேர்த்தி.
'துளி விஷம்' படத்தில் நடிகர் திலகத்தின் அட்டகாச முத்திரைகளோடு நம்மை மயக்கும் பாடல்.
http://i1087.photobucket.com/albums/..._002366736.jpg
அறியாமல்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
வசந்தமும் தென்றலும்
வசந்தமும் தென்றலும் இசைந்தது போல
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
அழகு முகத்தில் குளிர்ந்த நிலவைக் கண்டேனே
பழகும் விதத்தில் பாயின் சுவையைக் கண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்தில் என்றும் நிறைந்திருக்கும் காதல் தெய்வம் நீயே
ஆ ஆ..................அ அஹ்ஹாஹ்ஹா லல்லலல்லலல்லலா
கற்பனையில் கண்ட அற்புதமும் நீயே
கருத்தில் என்றும் நிறைந்திருக்கும் காதல் தெய்வம் நீயே
மலர்க்கணைகள் தூவும் மன்மதனைப் போலே
மலர்க்கணைகள் தூவும் மன்மதனைப் போலே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
பருவம் நல்ல உருவம் கண்டு பரவசம் கொண்டேனே
மேற்கண்ட நான்கு வரிகளில் நடிகர் திலகத்தின் முகவெட்டுகளைக் கவனியுங்கள். (மவனே! ஒருத்தரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது)
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
லல்லல் லலலல்லா லாலலலல்லல்லா
வசந்தமும்
தென்றலும்
வசந்தமும் தென்றலும் இசைந்தது போல
என்னை அறியாமல் பெருகுது இன்பம்தான்
லல்லல் லலலல்லா லாலலலல்லல்லா
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=peD-t2sD6-Q
நடிகர் திலகம் பாகம் 11 திரியில் 'துளிவிஷம்' பற்றிய என்னுடைய விரிவான ஆய்வைப் படிக்க கீழே சொடுக்கவும்.
http://www.mayyam.com/talk/showthrea...art-11/page244
ராகவ் ஜி, எஸ்.வி ஜி, வாசு ஜி அருமை அருமை .. பொங்கும் பூம்புனல் அருமை அருமை
வாசு சார் மிரஜால கலடா பாடலை கேளுங்கள் .. இசையரசி இசை ராஜாங்கமே நடத்துவார்.
--------------------
இளையராஜா ஆரம்ப காலங்களில் மிகவும் பிரமாதமான மெட்டுக்களை நமக்கு தந்தார்
அப்படி ஒரு பாடல் இதோ இசையரசியின் குரலில் சுஜாதாவின் அளவான அற்புத நடிப்பு
https://www.youtube.com/watch?v=q4oeYOBffNM
நான் ரொம்ப ரசிக்கும் பாடல் ராஜேஷ் சார்.
ராஜேஷ் சார்
அந்த சிறுமி நடிகை நித்யாதானே
//இளையராஜா ஆரம்ப காலங்களில் மிகவும் பிரமாதமான மெட்டுக்களை நமக்கு தந்தார்//
ராஜேஷ் சார்,
'சுசீலா என்று சொல்லும் போதிலே
ஸ்வீட் வந்து பாயுது காதினிலே'
இந்தப் பாட்டு நம்மை வாழ்நாள் அடிமையாக்கிவிடும் சார்.
'தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்'
'அவர் எனக்கே சொந்தம்' திரைப்படத்தில் அதே இளையராஜா இசையில். இன்னிசை தேவதையின் இன்பக் குரலில்
என்ன மியூசிக்! என்ன பாடல்! என்ன இனிமை! என்ன குரல்! 'இளமை ஒய்.விஜயா.
அவ்வளவுதான். இன்றைய நாள் அம்பேல்.
http://www.youtube.com/watch?v=QnjozHHROOE&feature=player_detailpage
வாசு ஜி
ஆம் நித்யாவே தான்.. தமிழை விட தெலுங்கில் சம்யுக்தா என்ற பெயரில் தூள் கிளப்பினார்.
தேனில் ஆடும் ரோஜா .. ரோஜா மட்டுமா குரலும் தானே தேனில் ஆடுகிறது . என்ன இனிமை என்ன அருமையான பாடல் ..
சிவா சார்,
அம்சமான, 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' நூறு நாட்கள் ஓடிய விளம்பரத்தைப் பதித்து தூள் கிளப்பி விட்டீர்கள். தங்களுக்கு என் மகிழ்ச்சியான நன்றி இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும்.
வினோத் சார்.
அட்டகாசம் போங்கள். எங்கள் கடலூரின் தியேட்டர் விவரங்கள் பற்றிய ஆவணம் பார்த்ததில் பெருமகிழ்ச்சி. அப்போது பாடலி, முத்தையா, நியூ சினிமா என்று 3 திரை அரங்குகளே இருந்தன. அப்புறம் வந்ததுதான் பாபு, (பின்னால் ரமேஷ் அப்புறம் பாலாஜி) கமலம், வேல்முருகன், கிருஷ்ணாலையா போன்றவை.
முத்தையா இட எண்ணிக்கை பார்த்தீகளா
அது முன்னால் மணிலா குடோனாக இருந்தது. இப்போது பாழடைந்து விட்டது. பாடலி குளோஸ்.
மிக்க நன்றி வினோத் சார்.
http://www.inkakinada.com/movie/movi...m/DSCN0975.jpghttp://www.aptalkies.com/modules/gal...5CD-B6732E.jpg
சூப்பர் வாசு சார்
நேற்று இரவே படித்தேன் உடன் பதில் இட முடியவில்லை .
இன்று காலை கொஞ்சம் சொந்த அவசர ஜோலி வேறு ஒன்று இல்லை income டக்ஸ் certificate form 16 problem
income இருக்கோ இல்லையோ income tax உண்டு
அப்படியே அந்த 'சிம்ஹ பெல்லுடு' படத்தில் ஜெயமாலினி நடன பாடல்
'சன்ன ஜாஜுலோ' தமிழ் சிங்க நாதத்தில் 'என்ன போதையோ கன்னி போதையோ ' மீண்டும் இதே இசை கோர்வையில் 'சக்தி என்னடா உன் புத்தி என்னடா ' nadigar thilagam இமயம் திரை படத்தில்
http://www.youtube.com/watch?v=0GxbXUzmFSw
//இன்று காலை கொஞ்சம் சொந்த அவசர ஜோலி வேறு ஒன்று இல்லை income டக்ஸ் certificate form 16 problem//
மத்தியானம் ஷிப்ட் போய் நான் படணும்.
அவர் எனக்கே சொந்தம் படத்தில் என்னுடைய பிடித்தம் "ஒரு வீடு இரு உள்ளம்".அருமையான படம்.
டியர் வாசு சார்,
இன்றைய ஸ்பெஷலாக வர நினைத்து இரவு ஸ்பெஷலாக மாறிவிட்ட 'அத்தான் கடிதம் நல்ல முத்து முத்து' (நினைப்பதற்கு நேரமில்லை) பாடல் பல பழைய நினைவுகளை கிளறிவிட்டது. மாமாவின் பாடல்கள் எப்போதும் ரிதம் செக்ஷனில் சற்று தூக்கலாக நிற்கும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இதுவும் இலங்கை வானொலி ஹிட் என்று ஒவ்வொருமுறையும் சொல்லத்தேவையில்லைஎன்பதால் தவிர்க்கிறேன்.
'இங்கு செய்யப்பட்டிருக்கும் பலகாரங்கள் அசல் நெய்யினால் செய்யப்பட்டவை அல்ல' என்று ஹோட்டல் முன் போர்டு போடுவதைப் போல 'இங்கு பதியப்படும் பாடல்கள் இலங்கை வானொலியால் பிரபலமானவை' என்று நமது திரியிலும் ஒரு போர்டு வைத்து விடலாம்.
இசையரசியின் இந்தப்பாடலைப்போல இன்னொரு அருமையான பாடல், 'மணப்பந்தல்' படத்தில், விஸ்வநாதன் வெளியில் உட்கார்ந்து வெற்றிலை போட்டுக்கொண்டிருக்கும்போது ராமமூர்த்தி மட்டும் ட்யூன் போட்ட (சில நண்பர்களை எதையெல்லாம் சொல்லி மகிழ்விக்க வேண்டியுள்ளது) இசையரசி அருமையாகப்பாடிய
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா
இது ஈ.வி.சரோஜாவுக்காக பாடியது...
இதே படத்தில் சரோஜாதேவிக்காக பாடிய பாட்டு
ஒரே ராகம் ஒரே தாளம் ஒரேகானம் பாடுதம்மா
தவிர பி.பி.எஸ்ஸுடன் இணைந்து சரோஜாதேவி - எஸ்.எஸ்.ஆர். ஜோடிக்காக பாடிய சூப்பர் டூயட்...
பார்த்து பார்த்து நின்றதிலே பார்வையிழந்தேன் - நீ
பாடும் மொழி கேட்டதிலே வார்த்தையிழந்தேன்
இதுபோக அசோகனுக்கு ஒரு தத்துவப்பாடல், அதே பி.பி.எஸ் குரலில்
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
(வீடுவரை உறவு வரும்வரை இதுதான் அசோகனின் ஹிட் ஸாங்).