https://image.tmdb.org/t/p/original/...5bwaqwQZqe.jpg
THEVAR MAGAN - NOW ON MURASU TV...
DON'T MISS
Printable View
https://image.tmdb.org/t/p/original/...5bwaqwQZqe.jpg
THEVAR MAGAN - NOW ON MURASU TV...
DON'T MISS
We celebrate this week as Fathers' week!
Godfathers guiding Kamalhaasan!Quote:
Kamalhasan joins the ranks and files of Sivaji/Gemini Ganesans in exemplifying the characterization of a father fond of his children and caring for their future, at the cost of hiding the hurdles and hassles a father has to encounter in real life till he puts his wards on the right platform of life after graduation!!
Like Sivaji and Gemini, who have groomed Kamal as his screen Godfathers, kamal too never had an image circle in enacting elderly roles even at his young age!
https://www.youtube.com/watch?v=h8kfABvuJBk
https://www.youtube.com/watch?v=19qmDM1q4Ys
Kamalhaasan flying on his own wings in fatherhood roles!!
https://www.youtube.com/watch?v=FE6sAr5DuJw
என்னை மிக மிக கவர்ந்த P _R என்ற அதிசய இளைஞனின் அற்புத பதிவு. எனக்கு இந்தியாவின் ஒரே உலக அதிசயம் எழுதும் inspiration கொடுத்த சிறந்த பதிவு.(மார்ச் 2008 பாகம்-4 இல் வெளியானது)
தேவர் மகன்- 1992
மேதை என்ற சொல்லை நாம் தண்ணியைப் போல செலவிடுகிறோம். பட்டங்களும் ஸ்துதிகளும் நிறைந்த நம் தமிழ் சினிமாவால் கோடம்பாக்கத்தில் ஒரே மேதை நெரிசல். துதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் பிழைத்தோம். வெறும் துதிகளை வைத்து மதிப்பீடுகளை உருவாக்க முனையும்போது படுதோல்வி தான். சக்ரவர்த்தியின் புத்தாடைகள் ஜொலிப்பதைக் காணும் ஆரவாரம் தான்.
இச்சூழலில் உண்மையான மேதமைக்கு மதிப்பு குறைந்து போவது இயற்கை. அவ்வாறு ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழும் சூழல். இத்தகைய சூழலில் பிரமிக்கவைக்கும் திறமையாளன் நிகழ்த்துவது என்னவென்றால் அவன் மீது ஏற்படுத்தும் மதிப்பு மட்டுமல்ல, அவன் துறை மீதே ஏற்படுத்தும் ஒரு மதிப்பு நம்பிக்கை. கிட்டத்தட்ட உண்மை மீதே நம்பிக்கை வரவழைப்பதைப் போல.
இத்தகைய ஒரு அதிசய நடிப்பு தான் சிவாஜி கணேசன் 'தேவர் மகன்' படத்தில் நிகழ்த்தியது. ஓடாய் தேய்ந்து போய் ராஜ் டிஜிடல் ப்ளஸ்ஸில் மட்டுமே காண்பிக்கப்படும் தமிழ் படங்களைக்கூட பரவலாகப் பார்த்தவன் என்ற முறையில் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்கிறேன்: "நான் பார்த்ததிலேயே சிறந்த நடிப்பு" என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும்.
இது என் விருப்பத்தில் மிகையான வெளிப்பாடு மட்டும் அல்ல.
இது ஒரு 'அப்ஜெக்டிவ்' (இதற்கு தமிழ் என்ன ?) உண்மை என்று பின்வரும் பதிவுகளில் நிருவ முயல்வேன்.
நடிப்பு என்பது என்ன ?
ஐரிஷ் எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட் கலையின் தன்மையைப் பற்றிய தனது குறுங்கட்டுரையில் சொல்கிறார்:
'உணர்ச்சி' என்பதை பொறுத்தவரை நடிகனின் வித்தையே , கலைகளுக்கு முன்மாதிரி: From the point of view of feeling, the actor's craft is the type (of all art).
இது வைல்டின் குறும்பு. ஏன் ? நடிகனின் வித்தையின் மகிமையே அவன் நிகழ்த்திக்காட்டும் உணர்ச்சிகள் எல்லாமே பொய் என்பது தானே. இங்குதான் 20ம் நூற்றாண்டின் நடிப்பியல் வரலாற்றில் முக்கியமான இரு வாதங்கள் இதைச் சுற்றியே இருக்கின்றன.
ஒன்று: பாத்திரத்தோடு முழுவதுமாக இணைவது. இதை ரஷ்ய நிபுணர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறை (மெதட் ஆக்டிங்) என்று சொல்வார்கள். பாத்திரத்தின் உந்துதல்கள், மனநிலை, பேசும் முறை எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பாத்திரமாகவே மாறிவிடுவது - தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அர்த்தம் நீங்க அடித்துத் துவைக்கப்பட்ட ஒரு சொல்லாடல் இது
இதற்குமேல் இங்கு நிகழ்வது நடிப்பு என்று கூறுவதே கடினம். கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் அப்பாத்திரம் எவ்வாறு பேசும், பிரதி-வினைக்கும் (ரியாக்டுக்கு மோசமான மொழிபெயர்ப்பு - மேலான சொல் இருந்தால் கூறவும்) என்பதை அவ்வாறு வாழ்வது தான் நிகழ்கிறது.
இதிலிருந்து பிரிந்த கிளை நடிப்பியல்களின் (உம். லீ ஸ்ட்ராஸ்பெர்க் என்ற நிபுணரின் முறைகள்) மாணவர்கள்/விர்ப்பன்னர்கள் அமெரிக்காவின் தலைசிறந்த நடிகர்களான பிராண்டோ, டி நீரோ, ஹாஃப்மன் யாவரும்.
இன்னொரு முறை: பாத்திரத்திற்கு வெளியே நின்றுகொண்டு அதை ஆழ்ந்து கவனித்து நடிப்பது. இதில் நடிப்பது என்பது மிகுந்த பிரக்ஞையுடன் நிகழ்வது. சொடக்கிட்ட நொடியில் நிஜ உலகுத்துக்கும் நடிப்புலகத்துக்கும் பாய முடிய வேண்டும். வேறு பெயர்கள் இல்லாதலால் இதற்கும் வைல்ட் பெயரையே வைத்துக்கொள்ளலாம் ("என் மேதமையை என் வாழ்க்கையில் செலவிடுகிறேன், என் படைப்புகளில் என் திறமையை மட்டுமே பயன்படுத்துகிறேன்"...I reserve my genius for my life, I only use my talents in my works )
இது பெரும்பாலும் லாரென்ஸ் ஒலிவியெ போன்ற பிரட்டிஷ் நடிகர்கள் கையாண்ட உத்தி. இரு சாராரும் சந்தித்துக் கொள்வதைப் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் உண்டு.
காட்டாக: மாரதான் மான் என்ற அமெரிக்கப் படம். ஒலிவியேவும் (வைல்ட் பள்ளி) டஸ்டின் ஹாஃப்மனும் (ஸ்ட்ராஸ்பெர்க் பள்ளி) இணைந்து நடிக்கும் ஒரு காட்சி. அதில், மூன்று நாட்களாக தனியறையில் அடைக்கப்பட்ட ஹாஃபமனைக் காண வில்லன் ஒலிவியெ வருகிறார்.
அக்காட்சிக்குத் தன்னை தயார் செய்து கொள்வதற்காக ஹாஃப்மன் மூன்று நாட்கள் உண்ணாமல் இளைத்து கண்ணின் கீழ் கருவளையங்கள் வந்து சோர்ந்து கிடந்தாராம். படப்பிடிப்புக்கு வந்த ஒலிவியெ ஹாஃமனைப் பார்த்தார். அவர் உடல்நலத்தைப் பற்றி இயக்குனர் ஜான் ஷ்லெசிங்கரிடம் விசாரித்தபோது, ஹாஃப்மனின் "உடல்வருத்த முயற்சிகளைப்" பற்றி அவர் (சற்று பெருமையாக) சொல்லியிருக்கிறார். ஒலிவியெவின் பதில் " ஓ...அந்த தம்பி "நடிப்பு" என்பதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா ?" (Hasn't the young boy heard of acting)
கலைஞன் கலைக்காக செய்யும் முயற்சிகளை ஒதுக்கிவிட்டு, படைப்பை மட்டுமே ரசிக்க முடிந்துவிட்டால் (ஊடகங்களின் செய்திப்பொழிவால் இது கடினமாகிக்க்கொண்டே வருகிறது), மாமேதமையின் அடையாளம் வைல்ட் பள்ளியிலேயே என்று தோன்றுகிறது. பல வகை நடிப்புக்குச் சொந்தக்காரர்களாக, ஒரே சமயத்தில் ஒரே சூழ்நிலைக்கு நினைத்த மாத்திரத்தில் பலவகை பாணிகளை நிகழ்த்திக்காட்டவல்லவர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.
எனக்கு புரிந்தவரை சிவாஜி இவ்வகை தான். ஆழமான கவனிப்பும், அபாரமான உள்வாங்குதலும், அதிசயமான திறமையும் இணைந்த ஒரு நடிப்பே பெரிய தேவரை உருவாக்கியது.
தேவர் மகன் கமல்ஹாசன் எழுதிய காட்ஃபாதர்.
நியூயார்க்கின் இத்தாலிய மாஃபியா குடும்பங்களில் ஒன்றான கொர்லியோன் குடும்பத்தின் தலைவன் விடோ கொர்ர்லியோன்.
தன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சான்டினோ , ஃப்ரெடோ என்ற தனது இரு மகன்களையும்விட தன் இளைய மகனான மைக்கேல் மீதே அவருக்கு நம்பிக்கை, பிரேமை. ஆனால் மைக்கேலோ எதிர் தரப்பு அடையாளங்களைத் தேடுகிறான். ராணுவத்தில் சேர்கிறேன், ப்ரோடஸ்டன்ட் பெண்ணைக் காதலிக்கிறான் (இத்தாலிய-அமெரிக்கர்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளையும், கத்தோலிக்க மதத்தையும் பெரிதும் மதிப்பவர்கள்), குடும்பத் தொழிலிலிருந்து எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ செல்ல முயல்கிறான். சூழ்நிலைகளின் மாற்றங்கள் எவ்வாறு அவனை தன் இயல்பான அடையாளங்களிடம் கொண்டு போய் சேர்த்துவிடுகின்றன என்பதுதான் கதை. காட்ஃபாதர் என்ற பட்டம் மைக்கேலை(யும்) குறிக்கக்கூடும் சாத்தியங்களைப் படம் வளர வளர வலுப்படுத்துகிறது.
தேவர் மகன், இந்த எலும்புக்கூட்டை எடுத்துக்கொண்டு வரையப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகக் கச்சிதமாக ஏழுதப்பட்ட திரைக்கதைகளில் தேவர் மகன் முன்னணி வகிக்கிறது. நம் அடையாளங்களை நாம் மறுக்க முடியுமா ? கல்வி, அன்னிய (உயர் ?) கலாசார பரிச்சயத்தால் நம் சூழலிலிருந்து விடுவித்து கொள்ள முடியுமா ? இல்லை நம் கலாசார அடையாளங்களை, அவற்றின் அழுக்குகளோடு ஏற்றுக்கொண்டு உள்ளிருந்து மட்டுமே மாற்ற முயல முடியுமா ? கடைசியில், மிக முக்கியமாக: நமது அடையாளங்கள் நமது இயல்புகளில் பிரிக்கமுடியாதவாறு பிணைந்திருக்கின்றனவா ? (தேவர் மகன் தேவரா ?) இத்தகைய கேள்விகளை அழகாக எழுப்பும் படம். இந்தியச் சூழலில் இவை எல்லாம் மிக முக்கியமான சமூகக் கேள்விகள். காட்ஃபாதருக்கு இப்படி ஒரு (இந்திய) சமகோடு யோசித்ததே சாதனை தான்.
சூழ்நிலைகள் ஒப்பிடத்தக்கவை என்றாலும் விடோ கொர்லியோனும் பெரிய தேவரும் முற்றிலும் வேறுபட்ட மனிதர்கள். நியாய தர்மம் பற்றியா விவாதங்கள், கடமை/பொறுப்பு ஆகியவற்றை பற்றிய உரையாடல் எல்லாம் டான் விடொ செய்ய மாட்டார். மைக்கேலிடம்: " உன்னைத் தானே நம்பணும்..வேற யாரு இருக்கா நம்புறதுக்கு ?" என்ற உருக்கமான கேள்வியை கேட்க மாட்டார்.தேவர் மகனில் அந்த மையக் காட்சி தான் பெரிய தேவரின் முழு சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இருந்தாலும்...அகர வரிசையில் வருவோம்.
படத்துவக்கத்தில் மகன் சக்தியை பற்றிய எதிர்பார்ப்பு, ஆனால் இளைக்காத தற்பெருமை ("எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி"). மகனைக் கண்டதும் அவர் காட்டும் பெருமிதம். அதன் பின் சக்தி காரை நோக்குவதால் 'அங்கு என்ன இருக்கிறது' என்ற ஆர்வப்பார்வை. பானுவைப் பார்த்ததும் வரும் இயல்பான தயக்கம் (கிட்டத்தட்ட வெறுப்பு). இதுவரை அந்தக் காட்சியில் வசனம் இல்லை என்பதே பார்ப்பவர்கள் உணர வாய்ப்பில்லை. "ஆரு இவுக ?" என்ற கேள்வியின் தொனியும் "வாங்க" என்பதில் உள்ள வரவேற்பின்மையுமே கதைகள் சொல்லும். நடிகனின் குரல் செய்ய வேண்டியவற்றை இதற்கு இணையாக சுறுக்கமாக காட்ட இயலாது.
பானுவைப் பற்றிய ஆவலை, மிடுக்கு குறையாமல் கேட்பது அடுத்த காட்சி.
"சீராலா""என்ன.......ளா ?" என்பதில் அந்த எள்ளலின் ஆரம்பம்.
வட்டார வழக்கையும், பேச்சு வழக்கங்களையும் பரிபூரணமாக உள்வாங்கிக்கொண்டு பேசப்பட்டது: "ங்கொண்ணேன் ஸ்டேஷ்னுக்கு வந்தாரா ?"
தனது ஃப்ரெடோ குடிகாரனாக இருப்பதைப் பற்றிய வருத்தத்தை இக்காட்சியிலேயே பதிவு செய்கிறார். சிரிப்பில் !
இதைப் பற்றிய கோபம் இரண்டு இடங்களில் வருகிறது, ஒரு இடத்தில் கிண்டலாக, ஒரு இடத்தில் உக்கிரமாக :
"ச்சாப்டர ஓட்டலா ....அட போடா....அம்மூர்ல எவன்டா ஓட்டல்ட ச்சப்டுவியான்.....ங்கொண்ணென் மாதிரி எவனாச்சும் இருந்தா அவன் ச்சப்டுவியான்"
"என்ன ஐயா, கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள வேலியை போட்டுப்புட்டாய்ங்க"
"நீங்க ஏன் கண்ணை மூடுறீய ? திறந்துகிட்டே இருக்கணும்......நாம தான் கண்ணை திறந்திட்டிருக்க நேரம் ரொம்ப குறைச்சல் ஆச்சே"
இதுபோன்ற கலைஞர்களுக்காக நாம் கண்னை திறந்திருக்கும் நேரம் குறைச்சல் தான்
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முக்கியமான பாத்திரங்க்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்திவிடவேண்டும் என்பது ஒரு திரைக்கதை நியதி. நாவலாசிரியரைப்போல "அவர் கொஞ்சம் பழமைவாதி, ஆனால் பாசக்காரர், சர்காஸ்டிக்,..." என்று ஒரே வரியில் சொல்லிவிட்டு விரல் சொடக்கிக்கொண்டுவிடும் வசதி திரையெழுத்தாளனுக்கு இல்லை. காட்சிகளில் நீட்டிக் காட்டவேண்டும். சம்பவங்களை உருவாக்க வேண்டும். அப்படியும் அவை உதாரணங்களாகவே இருக்கும். ஒரே காட்சியில் அதிக பரிமாணங்களைக் காட்டுவது கஷ்டம்.அவற்றைத் தெளிவாக பார்வையாளனைக் குழப்பாமல் கொண்டுபோய் சேர்ப்பதும் எளிதல்ல.
'போற்றிப் பாடடி' பாடலில் காட்சித்தொகுப்புகளில் பல அழகான இடங்கள். வசனங்கள் எல்லாம் யாருக்குத் தேவை என்பது போல. மனநிறைவுடன் திருமணம் நடத்தி வைப்பது, தான் கடந்து போகும்போது எழுந்துகொள்ளும் சாப்பிட்டுக்கொண்டிருப்பவார்களை கையசைத்து அமரச் சொல்வது, கம்பீரமாக உட்கார்ந்து துதிப்பாடலைக் கேட்பது இவையெல்லாம் சிவாஜி தூக்கத்தில் கூட செய்வார்.
படிக்கக் கொடுத்துவிட்டு குறுக்கே பேசிக்கொண்டிருக்கும் மகனை "படிக்க விடு" என்று சைகை செய்வார். சந்தோஷமாக துணி வழங்கிக்கொண்டிருப்பரை பானு படம்பிடிக்க "என்ன இது" என்பதைப்போல் பானுவையும் "வேண்டாம் என்று சொல்" என்று சக்தியையும் சொல்வார். அதன் பிறகு முகத்தில் ஒரு இறுக்கம் குடிகொள்ளும். இவையெல்லாம் 2-3 நொடிகளில், வசனமில்லாமல். பாடல் முடிந்ததும் இந்த மனிதரை நமக்கு பல நாட்களாக தெரிந்தது போன்ற பிரமையை எழுத்தாளரும் நடிகரும் சேர்ந்து உருவாக்கிவிடுகிறார்கள்.
புரிந்துகொள்ளப்படுவது ஒரு சொகுசு (It is a luxury to be understood) என்று அமெரிக்க கவிஞர் எமர்ஸன் சொல்கிறார்.நமக்கு பிரியமானவர்கள் நம்மை புரிந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு ஆதாரமான எதிர்பார்ப்பு. அவர்களிடம் தன்னை 'நிரூபித்து'க் கொள்ள வேண்டிய நிலைமை, சொல்லிப் புரியவைக்கப்படவேண்டிய நிலைமையே வருத்தமனாது. பெரிய தேவர் தன் மகனால் கூட புரிந்துகொள்ளப்படவில்லை என்ற வருத்தத்தைத் தெளிவாக்கும் காட்சி அந்த உணவருந்தும் காட்சி.
பானுவின் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை பெரிய தேவர் பதிவுசெய்வதாக காட்சி ஆரம்பிக்கும்.
ஐயயே.... உங்களைப் பொம்பளையாவே நினைக்கலீங்களே......இந்த வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளியாத்தான் நினைக்கிறேன்.
அரைச் சிரிப்புடன் சொல்லும் அழுத்தமான வார்த்தைகள்.
தன் மகன் இவ்வூரில் (இவ்வுருக்கு) எதுவும் செய்வதாக இல்லை, செய்ய முனையும் வியாபாரம் எல்லாம் வெளியூரில் என்பதே அதிர்ச்சியாக இறங்குகிறது. ஆனால் ஆச்சர்யமாக வெளிப்படுகிறது:
"நீ எப்பிடி செய்வே ?"
"....பானுவோட அப்பா ஹொடேலியர்....அவருக்கு இதெல்லாம் நல்லாவே தெரியும்.."
"ஓ...அவருக்கு எல்லாம் தெரியுமோ.....இந்தப் பொண்ணு இங்க உன் கூட வந்திருக்கிறதும் தெரியுமோ ?"
இந்த கடைசி வரியில் சிவாஜி காட்டும் விஷமமும், கிண்டலும், அதிருப்தியும் விவரணைக்கு உட்பட்டவை அல்ல.
தான் தேர்ந்தெடுத்த பெண்ணை தந்தையின் கண்களில் உயர்த்த சக்தி அவர்கள் குடும்பத்தைப் பற்றி பேசுவான். இதில் தான் அவன் தன் தந்தையை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லை என்று புலப்படும். ஜாதி, செல்வ அந்தஸ்து போன்ற விஷயங்களுக்காகவே பானுவை அவர் நிராகிரப்பதாக நினைக்கிறான்.
"...பெரிய பணக்காரங்க...அங்க ராஜூன்னு சொல்வாங்க....நம்ம தேவர்-க்கு இணையான கேஸ்ட் தான் யா"
பணத்தைப் பற்றி கமல் சொன்னதும், சிவாஜி புருவத்தை உயர்த்தி "அடேங்கப்பா" என்பதுபோல பாசாங்கு செய்வார்.
ஜாதி பற்றி கேட்டதும் முகத்தை சுளிப்பார்.இதை கமல் பேசும்போது படக்கட்டத்தில் (frame) முன்னால் இருக்கும் சிவாஜி ஃபோகஸில் இருக்க மாட்டார். ஆனால் அவர் முகபாவனைகள் தெளிவாகப் புரியும்படி இருக்கும்.
தன் ஆரம்பகால படம் ஒன்றில் புகை மலிந்த நிழலுருவிலேயே (silhoutte) பாவனைகள் தெரியும்படி நடித்தவரல்லவா !
----To be continued.
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி
என் குழந்தைகளிடத்தில் எனக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர்களுக்கு நான் அதிகமாக செல்லம் கொடுப்பதைத் தான் பார்க்கிறீர்களே....செவிசாய்க்க வேண்டிய நேரத்தில் அவர்கள் பேசுகிறார்கள். (I have a sentimental weakness for my children, and I spoil them as you can see; they talk when they should listen. )
இது காட்ஃபாதரில் பெரியவர், விடோ கொர்லியோன், பேசும் மிக அழகான வசனம். தவறு செய்த மகன் சான்டினோவை வெளியாட்கள் முன்னிலையில் கடிந்து கொள்ளும் இடத்தில் வரும் வசனம். அம்மனிதரின் கோபம் அவர் ஸ்டைலை இழக்கச் செய்யவில்லை. வெளி மனிதர்கள் சென்றபின் "உன் மூளை பழுதாகிவிட்டதா ?" என்றே திட்டுவார். ஆனாலும் மிதமாகவே.
பெரிய தேவர் அப்படி அல்ல. பெரிய தேவருக்கு சக்தி வந்ததிலிருந்தே ஏமாற்றம் தான். தெலுங்குப் பெண்தோழி, நகரத்துக்கு புலம்பெயர்ந்துவிட அவன் திட்டம் என்று. ஆனால் ஊரில் சக்தியால் பிரச்சனை கிளம்புகிறபோது கோபம்-ஏமாற்றத்துடன் சேர்ந்துகொள்கிறது.
அழைக்கப்பட்ட சக்தி அவருக்கு முன் நிற்காமல் பக்கவாட்டில் நின்று, அப்பாவிக்கு பின் நிற்கும். கணக்குப்பிள்ளையிடம் "எதற்காக அழைத்திருக்கிறார்" என்று சைகையில் கேட்டுக்கொண்டிருப்பான். பெரிய தேவர் ஒரு சாய்வு நாற்காலியில் சாயாமல் அமர்ந்திருப்பார். கைபனியனுக்குமேல் துண்டு போர்த்தி. "முன்னால் வா" என்று வலது கையால் சைகை செய்வார், எதன் மீதும் குறிப்பாக பார்வையை செலுத்தாமல்.
அவர் ஏன் கூப்பிட்டார் ? கோபமாக இருக்கிறா ? ஏன் ? இதுவரை நடந்தவற்றில் ஏதாவது அவரை கோபப்படுத்தியதா ? இவை சக்தி மனதில் மட்டும் இருக்கும் கேள்விகள் அல்ல. பார்வையாளர்கள் மனத்திலும். இந்த காட்சியில் ஓரிரு காமிரா கோணங்கள் இதை உணர்த்தும் வகையில் சக்தியின் நோக்கில் இருக்கும் (point of view shots)
அதனால் பெரிய தேவர் மீதே முழுக்கவனமும். இங்கு அவர் கதைமாந்தர் மட்டுமல்ல கிட்டத்தட்ட கதைசொல்லி.
"ஏன் போனீய ?" என்று கேட்கும்போது பார்வை நேராக யாருமில்லாத இடத்தில் பாயும்.
"கோவில் கும்பிடத்தானேய்யா" என்று பொறுப்பில்லத பதில் வந்த மாத்திரத்தில் ("ஐயோ" என்பதுபோல வாயை தட்டிக் கொள்ளும் கணக்குப்பிள்ளை) பெரிய தேவர் முதல் முறையாக மகனைப் பார்த்து "தர்க்கம் பண்றீய ?" என்பார்.
பானுவை காரணம் சொல்ல முயன்று, அது தவறை விட மோசமான காரணம் என்று சக்தி உணர்வதற்குள்
"பானு....பானு கோவில் பாக்கணும்னா பூட்டை உடைக்கணுமா ?" என்று கேட்டுவிட்டு மகனை கூர்மையாகப் பார்ப்பார். அவன் கூறும் பதிலை அளந்துகொண்டு. ஒரு தலைவனுக்கான பொறுப்பின் சுவடே இல்லாமல் அவன் இசக்கியை பழி சொல்ல.....
"ஓஹோ அப்பொ உங்க தலைமையில இசக்கி பூட்டை உடைச்சிறுக்கார். அப்பிடித்தானே ?" என்ற கேள்வியில் கடுங்கோபத்திலும் அவரிடமிருந்து பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கும் கிண்டல். சுட்டெரிக்கும் பார்வையில் தெளிவாகத் தெரியும் ஏமாற்றம். கண்ணில் நீர் கோர்த்துக்கொண்டதுபோலக் கூட இருக்கும்.
சக்தி:"என் தப்புத்தேன் யா"
கவனிக்கப்படவேண்டிய வசனம், பின்னர் ஒரு முறை படத்தில் வரும். அப்போது தான் சக்தி அதை மனமுணர்ந்து சொல்வான். அப்போது தான் அவன் தலைவன் ஆனது - சொக்காய் மாற்றிக்கொண்ட போது அல்ல.
இம்முறை இது இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சொல்லப்படும் வாய்வார்த்தை. அதை நன்கு உணர்ந்த பெரிய தேவர்:
"அப்பா ...ஒத்துக்கிட்டாகப்பா....உங்க தப்பில்லையா...என் தப்பு..
.....எலேய் அந்தப் பயகள எந்த வம்பு தும்புக்கும் போகாம இருக்கச் சொல்லு.........பஞ்சாயத்தில வேணா நான் மன்னிப்பு கேட்டுக்கிர்றேன்...என்ன பண்ண முடியும்"
முதல் பாதியில் உத்தரவு பிறப்பிக்கும் தலைவனின் தொனி. இரண்டாவது பாதியில், வரவிருக்கும் அவமானத்தை இப்போதே அநுபவிப்பதுபோல கூனிக்குறுகும் தொனியும் உடல்மொழியும் (''என்ன செய்ய முடியும்' என்பது கையே பேசிவிடும்).
"எசக்கி மன்னிப்பு கேட்கட்டும் ? எங்கே எசக்கி ?" என்று , நமக்குத் தெரிந்த அளவே தெரிந்த சக்தி கேட்க,
"எலே....ஒண்ணும் தெரியாம திர்ரவென் !" என்று வெடிப்பார்.
பானுவின் வருகையால் ஒரு பொய்யான இடைப்பட்ட அமைதி நிலவும். சக்தி கணக்குப்பிள்ளை பூசினாற்போல சொல்லும் அறிவுரையை எதிர்த்து வாதிட "அவுக சொல்றாஹல்ல ?.....கேட்டா கௌரவம் குறைஞ்சிரும் உங்களுக்கு..." என்றுவிட்டு...."போங்க" என்பார்.
பானு வந்த நொடி அமைதிக்குப் பிறகும் அவள் குரல் சன்னமாகவே ஒலிக்கும். மறுமுறை சொல்லும்படி ஆகும். இம்முறை காலில் விழும்போதும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால் இது முற்றிலும் வேறு மாதிரி தொனிக்கும் நிராகரிப்பு.
உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு ஆதங்கத்தையும், கடுஞ்சினத்தையும், நெஞ்சறுக்கும் ஏமாற்றத்தையும் உணர்வடிவத்தில் (palpable) ஒரு நடிப்பு நான் பார்த்ததில்லை.
பெரிய தேவர் ஒரே ஒரு முறை தான் மூக்குக்கண்ணாடி அணிந்து காணப்படுகிறார். 'போற்றிப் பாடடி' பாடலில். அவ்ர் இறந்தபின் அந்த கண்ணாடி காண்பிக்கப்படும். சக்தி உடைமாற்றிக்கொண்டு வரும் இடைவேளிக் காட்சியில். பெரியாருடன் பெரிய தேவர் இருக்கும் புகைப்படத்திற்கு முன் ஒரு பகவத் கீதை (!). அதன் மேல் அவர் கண்ணாடி. ஒரே படக்கட்டதுள் அவர் பார்வையைப் பற்றி சொல்கிறார்கள்.
வெத வெதச்சதும் பழம் ச்சாப்டரணும்னு நெனைக்க முடியுமோ....இன்னிக்கு நான் வெதைக்கிறேன்.....நாளைக்கு நீ சாப்டுவ....அப்புறம் உன் மயென் ச்சப்டுவியான்....அப்புறம் அவன் மயென் ச்சப்டுவியான்.....இதெல்லாம் இருந்து பார்க்க நான் இருக்கமாட்டேய்ன்....ஆனா வெத நான் போட்டது....இதெல்லாம் என்ன பெருமையா..ஹான் ? கடமை.....ஒவ்வொருத்தன் கடமை.
கீதையை மிக மேலோட்டமாக (என்னைப்போல!) படித்தவர்களுக்குக் கூட மேற்சொன்ன வார்த்தைகளின் மூலம் கீதையில் உயர்த்திச் சொல்லப்படும் 'பலனை எதிர்பாராத கடமையாற்றல்' என்று புலப்படும். இதை சமூக சிந்தனையுடன் எளிமையாக சொல்ல முடிந்ததுதான் பெரியாரின் தாக்கமோ என்றெல்லாம் யோசிக்கவைத்த அந்த ஒரு படக்கட்டம் எழுத்தாளர்-இயக்குனருக்கு வெற்றி.
உபதேசம் சினிமாவின் மொழிக்கு அப்பார்ப்பட்டது. ஆனால் உபதேசக் காட்சிகள் தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றான. உணர்ச்சியும், அறிவும் ஒன்றுபட இயங்கும் காட்சி பெரிய தேவரும் -சக்தியும் மழைக்கு இடையில் பேசும் காட்சி.
பிராண்டோ வசனத்தை முணுமுணுப்பவர் என்று சொன்னபோது, 'நிஜத்தில் யாரும் முழு சொற்றொடர்களை, ஒரே தொனியிலோ, அதன் பொருளுக்கு ஏற்ற ஏற்ற-இறக்கத்துடன் பேசுவதில்லை' என்றாராம். மேடையில் தான் முழங்கவேண்டிய நிர்பந்தங்கள். சினிமா முணுமுணுப்பையும் உணர வல்லது.
கோவில் கும்புடத்தான்னு பேசுநீயளே...இப்பொ இந்த ஊரோட நிலைமை உங்களுக்குப் புரிஞ்சதா ?
இதைச் சொல்லும் போது அந்த நாற்காலியில் புரண்டு படுப்பார் பெரியதேவர். அந்த அசைவிற்குத் தோதாக வசன உச்சரிப்பின் தொனி மாறும். இதை நேரொலியில் பதிவுசெய்திருந்தார்கள் என்றால் (live-recording) இது மிக நுணுக்கமான கவனிப்பின் வெளிப்பாடு எனலாம். ஒருவேளை இது பின்னணியில் தனியாக பேசப்பட்டது (dubbing) என்றால் பிரமிப்பு ஏற்படுகிறது.
சக்தி ஊரை விட்டுப் போகிறேன் என்றதும் சாய்வில் இருந்து உடனே முன்னால் வருவார். அதிர்ச்சியை மறைக்க ஒரு பொய்ச்சிரிப்பு. பொறுப்பு என்பது தான் இல்லை, பொறுப்பிற்கு அடித்தளமாக இருக்கும் வீரம் இருக்கிறதா என்பதை கிளரும் வகையில், சக்தியை கோழை என்பார். வீரத்தின் அடிக்கோல்கள் பிழையாக இருக்கிறதாக, வெளிநாட்டில் படித்த சக்தி சற்று காட்டமாகவே சொல்வான்.
"...இந்த காட்டுமிராண்டிப்பய கூட்டத்துல் ங்கொப்பனும் ஒருத்தந்தேய்ங்கறத மறந்துறாத" என்று சொல்வார் நெற்றியைத் தடவியபடி.
படத்தின் சாரமான வசனம் அதன்பிறகு தான்: "அப்படிப்பார்த்தா நானும் ஒருத்தந்தான்யா......ஆனா அத நெனச்சுப் பெருமப்பட முடியல". இதைத் தொடர்ந்தே உபதேசம் துவங்குகிறது. மரணத்தை வழக்கமாக வயசாளிகள் போல அல்லாமல், மிக யதார்த்தமாக எதிர்நோக்குவார் (போ....செத்துப்போ.....எல்லா பயபுள்ளையும் ஒரு நாளைக்கு போக வேண்டியது தேன்). கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டோமோ என்பதுபோல அடுத்த வரி சிறுபிள்ளையுடன் பேசுவதுபோன்ற எளிமையோடும், கனிவான தொனியிலும் வ்வரும் (வாழறது முக்கியந்தான்....இல்லைங்கல...).
கனிவும், பகுத்தறியும் பேச்சும் சக்தியின் முரட்டுத்தனமான முன்தீர்மானத்துடன் மோதி மோதி தோற்பதைக் கண்டு சட்டையை கொத்தாக பிடித்து முறைக்கும் நிலை வரும். அது அத்துமீறலா, இதுவரை மரியாதையுடன் நடத்தியதால் அப்படித் தோன்றுகிறதா என்ற குழப்பமும்-கோபமும் கலந்த பிரமாதமான பாவனை கமல் முகத்தில்.
அத்துமீறல்,உரிமை என்பது இவ்வுறவில் வயது சார்ந்தது என்பது ஒரு வலி கலந்த உண்மை. அந்தக் கணத்தில் அதை உணர்ந்துவிட்டதால் : "தாடியும், மீசையும் வச்சுகிட்டு...ஐயாவை நெஞ்சுநிமித்தி பேசுற வயசுல்ல" என்று காட்சியில் முதல்முறை தளர்வார் பெரிய தேவர்.
உணர்ச்சி கூட சக்தியிடம் தோற்க கணக்குப்பிள்ளையை பொறுமையில்லாமல் கத்திக் கூப்பிடுவார்: "ஏய்...யார்ராவென்....எங்க கணக்குப்புள்ள"
"டிக்கெட்ட ஒரு பத்து நாள் சென்டு எடுக்கட்டுங்களா ?"சக்தி, "ஏனய்யா இக்கட்டில் மாட்டி விடுகிறீர்" என்று சமிக்ஞை செய்வதை பார்த்துவிடும் பெரிய தேவர் "ஏம்ப்பு பத்து நாள் இருக்க மாட்டீயளா ?" என்று இருக்கமாக கேட்டுவிட்டு, தானே பதிலாக கையசைத்து கணக்குப்பிள்ளையை அனுப்புவார்.
அனுப்பிவிட்டு சக்தியை அருகில் அழைத்து தன் மகனை அருகில் வைத்துப் பார்க்க விழைவதை நெகிழ்வாகச் சொல்வார். வெளியாள் முன்னிலையில் உக்ரமாக மகனை திட்ட மறுக்கும் டான் விடோ போல அல்லாமல், கணக்குப்பிள்ளையிடமிருந்து தேவர் மறைக்க நினைப்பது தன் மென்மையைத் தான்.
"உங்களைத் தானே நம்பணும்....வேற யாரு இருக்கா இங்க நம்புறதுக்கு" என்கிறபோது முழுமையாக உடைந்து போன ஒரு பெரிய மனிதனை அவன் உள்பயங்களும் மனதை உருக்குவதைப் போல தெரியும்.
என் ஞாபகத்தில் இந்தக் காட்சியில் பாத்திரக் கோண படக்கட்டங்கள் மிகக் குறைவு, அல்லது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. குழுவாகப் பாடும் 'ஆ' காரத்தை ஒரு இசைக்கருவி போல் பயன்படுத்தும் மேல்நாட்டு இசை உத்தியை இளையராஜா இந்தப் படத்தில் சில இடங்களில் கையாண்டிருப்பார். இந்தக் காட்சியில் குழு வயலின்களும், கம்பீரமாக ஒலிக்கும் அடிக்கட்டை பேஸ் வாத்தியங்களும் மிகச்சரியான இடங்களில் ஒலித்து (உம். ஊரை விட்டு வெளியே வர பெரிய தேவர் மறுக்கும்போது) காட்சியை மெருகேற்றும்.
இதற்கு மேல், கிட்டத்தட்ட, பெரிய தேவரை புரிந்துகொள்ளுவதற்கு புதுத் தகவல்கள் படத்தில் இல்லை எனலாம். பாசம், கோபம், (மிகையான) மான/அவமான மதிப்பீடுகள், தலைமை குணங்கள் என்று எல்லாமே இக்காட்சியில் அடக்கம். இதற்குப் பிறகு நடப்பதெல்லாம் நமக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவருக்கு நடப்பவை. கதையின் போக்குக்கும், பார்வையாளர்கள் பெரியவரின் உள்பயங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் இந்தத் தன்னிலை-விளக்கக் காட்சி மிக முக்கியமானது.
பல உணர்ச்சி நிலைகளும், நிலைத்தடுமாற்றங்களும் காண்பிக்கப்படும் மிகக் கடினமானக் காட்சி. நன்கு எழுதப்பட்டிருந்தாலும் வெகு சுலபமாக நம் சினிமாவின் வழக்கமான உணர்ச்சிச் சுழலில் சிக்கி ஒரு சாதாரண மிகையுணர்ச்சி/உபதேசக் காட்சியாக மாறிய்யிருக்கும்.மிக இயல்பாக வெளிவந்து மக்களை கவர்ந்திழுத்தற்கு பெருங்காரணம் சிவாஜியின் அசாத்தியத் திறமை தான்.
---To be continued.
தேவர் மகன்- 1992 -தொடர்ச்சி
இசக்கிக்கு நடந்ததற்குப் பழி வாங்கும் விதமாக எதிரிகளின் குடிசைகளுக்கு தீ இடப்படுகிறது. தீயின் கனல் கதையில் தகித்துக்கொண்டிருக்கையில் மழை வருகிறது. மருத்துவமனையில் இசக்கியை காணப்போகும்போதே மழை தான். கண்மாய் வெடிவைத்துத் தகர்க்கப்படும் வரை மழை ஓயாமல் பெய்கிறது. மழையின் ஈரம் காயாத ஒரு இடத்தில் தான் கோவில் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் அதிகாரி வரும் காட்சி.
ஊர் பிரச்சனைகளை பேச மகனை ஊக்குவிக்கிறார், அதிகாரிகளின் பொறுப்பின்மையை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டுகிறார் (பஞ்சாயத்தில் மன்னிப்புக் கேட்கவேண்டிய நிலை வரவில்லை அல்லவா), வீட்டுக்கு வர அழைப்பு விடுக்கிறார் ("காப்பிகீப்பி "). நல்லது செய்து முடித்த தலைவன். அதற்கு அடுத்து அவர் தோன்றும் காட்சியிலும் ஒரு தலைவன். தன் மக்களுக்கு நடந்த கொடுமையைக் கண்டு அதிர்ச்சியும், சோகமும் கவிய பார்க்கிறார். சொற்கள் இல்லை.
கொடுஞ்செயல் செய்தவனைப் பிடித்துக் கொடுத்த மகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கினான். (அதற்குக் காரணம் பொறுப்பின் சுவடுகளே இல்லாத மூத்த மகன்). சுற்றி, அவதியிலிருந்து சற்று ஆசுவாசம் பெரும் ஊர்மக்கள். மகனருகே சென்று அவனை தொடும்போது முகத்தில் ஒரு பெருமிதம். இவ்வளவு மோசமான சம்பவம் நடந்த ஒரு நாளில், பெருமிதம் போன்ற நல்லுணர்ச்சிகளுக்கு இடம் உண்டா ? முரண் தான். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?
மகன் சாப்பிடவில்லை.
பசிக்கலையா ?
பிடிக்கலை
ஒரு கண நேரம் அந்த பெருமிதம் மறைந்து அவ்ர் முகத்தில் ஒரு தொய்வு ஏற்படும். 'அவசரப்பட்டு பெருமிதம் கொண்டுவிட்டோமா ? மகன் இந்தக் (காட்டுமிராண்டிப்பய) வாழ்க்கைச்சுழலை இன்னும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிற்றதே' என்று.
ஒரு தாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டி, ஒரு குழந்தையைப் பறிகொடுத்த அவள், தன் இரண்டாவது குழந்தைக்காக சாப்பிடுவதை சொல்வார். "மத்தவங்களுக்கு உதவி செய்யணும்னா முதல்ல நாம் திராணியோட இருக்கணும்" (திராணியோடு என்பதை சொல்லும் போது மீசை முறுக்கு சரி செய்து கொள்ளப்படும்!). அவர் சொல்வதுக்கும் மேலே புரிந்துகொண்டதுபோல சக்தி கணக்குப்பிள்ளையைக் கூப்பிடுவான்.
ஒரு குழந்தை இழந்துவிட்ட, இரண்டாம் குழந்தைக்கு வாழ்வையும் , எல்லாவற்றைய்யும் தருவதற்காகவே போராடும் அவளைக் கண்டதும், ஒருவேளை சக்திக்கு தன் தந்தையின் நிலையும் கிட்டத்தட்ட அப்படித்தானே என்று தோன்றியிருக்காலாம். இது தான் தோன்றியது என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்ல திரைக்கதைகளில் இந்த அனுமானங்களுக்கு இடம் உண்டு. தேவரின் பேச்சுக்குப் பதிலாக சக்தி உதிர்க்கும் அர்த்தம் பொதிந்த சிரிப்பைக் கண்டால் எனக்குத் தோன்றியது இதுதான்.
பயணச்சீட்டை தள்ளிப்போட வேண்டும் என்று சக்தி பூசினாற்போல சொல்ல, இப்போது விட்டுவிட்டால் கிடைப்பது கஷ்டம் என்று கணக்குப்பிள்ளை சொல்வார். "கூடி வரும் நேரத்தில் கெடுக்காதே" என்பது போல தேவர் சமிக்ஞை செய்வதில் ஒரு வித்தியாசமான முக்கோணம் முடிவடைக்கிறது. சக்தி-கணக்கு-பெரியவர் மூன்று பேருக்கும் உள்ள தனித்தனி நெருக்கங்களை காண்பிக்கப்படுகின்றன.
முதல் விசாரணையில் "எதற்கு அழைக்கப்பட்டோம்" என்று ஐயாவுக்குத் தெரியாமல் கணக்குப்பிள்ளையைக் கேட்பான். அடுத்து ஒரு காட்சியில், கணக்குப்பிள்ளையிடம் இருந்து தன் மென்மையான இயல்பை மறைப்பார் பெரியவர். இம்முறை தன் பாசத்தின் தீவிரத்தை கணக்குப்பிள்ளையிடம் மட்டும் காண்பிப்பார்.
இணைகோடாக: விடொ கொர்லியோனுக்கு வலது கையாக (consigliori) இருப்பது டாம் ஹேகன். அநேக சமயங்களில் தன் மகன்களைவிட இந்த வளர்ப்பு மகன் டாம்'ஐ டான் விடோ நம்புவார்.
சக்தி, தந்தையின் செய்கையைப் பார்த்துவிட்டு வெளிப்படையாக, அந்த பயணச்சீட்டை 'கேன்சல்' செய்யச் செல்வான். "சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்" என்று தாழ்திறந்து பாசம் வெடிட்த்தோடும். புல்லாங்குழல் கரு-இசையை அழகாக ஒலிக்க, சக்தியின் கையைப் பற்றி தன் நெஞ்சருகே வைத்துக் கொள்வார். பெருமிதம் மட்டுமே தெரிந்த முக்கத்தில் முத்ன்முதலாக ஒரு நிறைவு தெரியும். சாந்தமான பெருமூச்சே தேவையானவற்றைப் பேசிவிடும்.
நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.
நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.
"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"
இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.
"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"
"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.
"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.
"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.
பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.
"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.
ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.
ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"
இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).
தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே
பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.
தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".
கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.
ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.
பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....
என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.
கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.
"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.
வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.
ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.
இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.
ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.
அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.
(முற்றும்)
Delete
மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிக்காவியம் பாவமன்னிப்பு 22.01.2016 வெள்ளி முதல் கோவை ராயலில், மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே வரவேற்க தயாராகுங்கள்.....
http://www.sivajiganesan.in/Images/190116_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
அன்பு இதயங்களே இது அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வந்த பக்தர்கள் கூட்டமல்ல, கலையுலகின் அழகன் மக்கள்தலைவர் சிவாஜியைக் காண வந்த ( மதுரை சென்ட்ரல் தியேட்டரில் பாவமன்னிப்பு படத்திற்கு) ரசிகர்கள் கூட்டம்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...26&oe=574829DF
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_5.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_6.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_7.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_8.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2112_9.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2112_10.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2112_11.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/2112_12.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
கண்களில் ரத்தத்தைக் கசிய விட்ட சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்து தலைவரிடத்தில் ஐக்கியமான அமைந்தகரை ரவி அவர்கள் நமது மக்கள்தலைவருக்கு காட்டிய தீப ஆராதனை.
மண்ணில் நிழலுக்குக் காட்டியது போதும் என்று, விண்ணில் நிஜத்திற்கு தீப ஆராதனைக் காட்டச் சென்று விட்டாயா? இதயமே!
https://youtu.be/Uz8IMFDUmxY
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வரும் 29.01.2016 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போட வருகிறது, மக்கள்தலைவரின் தங்கைக்காக.
http://www.sivajiganesan.in/Images/190116_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
My deepfelt condolences to comrade ravi's family who left us at this young age
may his soul rest in peace,
Thanks to Pammalar for his meticulous compilation.
சிவாஜி 83
1. சிவாஜி என்கிற வி.சி.கணேசன் பிறந்த தேதி : 1.10.1928, திங்கட்கிழமை. இந்த தேதியில் விழுப்புரத்தில் மாலை 4:30 மணியளவில் ராஜாமணி அம்மாள் - சின்னையா மன்றாயர் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.
2. தன்னுடைய ஏழாவது அகவையில், திருச்சி சங்கிலியாண்டபுரத்தில், தனது வீட்டுக்கு அருகாமையில் நடைபெற்ற "கம்பளத்தார் கூத்து" நாடகத்தில், ஒரு நாள் வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடித்ததற்காக, சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தையின் கடுங்கோபத்திற்கு ஆளாகி கன்னத்தில் அறையும் வாங்கினார்.
3. இவர் சேர்ந்த முதல் நாடகக் கம்பெனி, யதார்த்தம் பொன்னுசாமியின் 'மதுரை ஸ்ரீ பால கான சபா'. இவரது முதல் நாடக வேடம், 1935-ல், திண்டுக்கல்லில் "இராமாயண" நாடகத்தில் பாலஸ்திரீபார்ட்டாக, 'இளம்பருவ கன்னிமாட சீதை' வேடம்.
4. நாடகமேடையில், இவர் ஏற்று நடித்த முதல் ராஜபார்ட் ரோல் "மனோகரா" நாடகத்தின் 'மனோகரன்'. கொல்லங்கோட்டில் நடைபெற்ற இந்நாடகத்தில், விசிகணேசனின் 'மனோகரன்' நடிப்பைக் கண்டு மயங்கிய கொல்லங்கோடு மஹாராஜா, இவருக்கு 'வெள்ளித் தட்டு' ஒன்றை பரிசாக அளித்தார். சில தினங்களுக்குப் பின், அந்த வெள்ளித் தட்டை விற்றுப் பணமாக்கி, 4 நாட்களுக்கு, தன் பசி மட்டுமல்லாது தனது சக நாடக நடிகர்களின் பசியையும் போக்கினார் விசிஜி.
5. 1945-ன் இறுதியில், தந்தை பெரியாரின் தலைமையில், சென்னையில் நடைபெற்ற ஏழாவது சுயமரியாதை மாநாட்டில், அண்ணாவின் "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்" நாடகம் மேடையேற்றப்பட்டது. மாவீரன் சத்ரபதி சிவாஜியாகவே, கணேசன் உருமாறி, வீரமுழக்கம் செய்தார். நாடகம் முடிந்ததும் பெரியார், கணேசனின் நடிப்பை வியந்து பாராட்டி, "இன்று முதல் நீ வெறும் கணேசனல்ல, சிவாஜி கணேசன்" என்று பட்டம் சூட்டினார். இந்த நாடகத்தை, பார்வையாளர்களில் ஒருவராக, எம்.ஜி.ஆரும் பார்த்து ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. 1946 முதல் சற்றேறக்குறைய 4 வருடங்களுக்கு, சக்தி கிருஷ்ணசாமியின் 'சக்தி நாடக சபா'வில், பல நாடகங்களில் பல தரப்பட்ட வேடங்களில் வெளுத்து வாங்கினார் சிவாஜி. அவற்றில் அவருக்கு தலையாய புகழ் கொடுத்த வேடம், 'நூர்ஜஹான்' நாடகத்தில், அவர் ஏற்று நடித்த அழகுக்கிளி 'நூர்ஜஹான்' வேடம். அந்த நாடகத்தையும், அதில் அவரது அந்த ஸ்திரீபார்ட் வேட நடிப்பையும் பார்த்து பாராட்டாத பிரபலங்களே இல்லை.
7. சிவாஜி, சக்தி நாடக சபாவில் இருந்த போது, ஏ.பி.நாகராஜனும் அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரே நாடகத்தில், ஏபிஎன்
ராஜபார்ட்டாகவும், அவரது ஜோடி ஸ்திரீபார்ட்டாக சிவாஜியும் நடித்திருக்கிறார்கள்.
8. "பராசக்தி" படத்தில் நடிக்கும் போது சிவாஜிக்கு மாத சம்பளம் தான். சற்றேறக்குறைய இரண்டு வருடங்கள் தயாரிக்கப்பட்ட அப்படத்தின் கதாநாயகனான சிவாஜிக்கு மாதந்தோறும் 250 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.
9. "பராசக்தி" படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, "பணம்", "பூஙகோதை" படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" வெளியான மறுதினமே "திரும்பிப் பார்" திரைப்படத்திலும், "மனோகரா"விலும் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார். அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள். இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.
11. 1953 பொங்கல் திருநாளிலிருந்த்து, தான் அமரராவதற்கு முன் வந்த 2001 பொங்கல் திருநாள் வரை, ஒவ்வொரு பொங்கலன்றும், வேலூருக்குச் சென்று, தன்னை வாழ வைத்த தெய்வம் பெருமாள் அவர்களுக்கு மரியாதை செய்து, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் புத்தாடைகள் வழங்குவதை ஒரு வழக்கமாகக் (கடமையாகக்) கொண்டிருந்தார். பெருமாள் தம்பதியரை வணங்கி ஆசி பெறுவார். 1979-ல் பெருமாள் அமரரான பின்னரும் கூட, ஒவ்வொரு பொஙகலன்றும் வேலூருக்கு சென்று, அவரது மனைவியை வணங்கி ஆசி பெற்று புத்தாடைகளை அளித்து வந்தார். சிவாஜியின் மறைவுக்குப் பின்னரும், அவரது குடும்பத்தினர், ஒவ்வொரு பொங்கலுக்கும் வேலூர் சென்று, பெருமாள் அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செய்து புத்தாடைகளை வழங்கி வருகின்றனர்.
12. சென்னை மாநகரில், முதன்முதலில் 5 திரையரங்குகளில் [சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி, லட்சுமி] வெளியான படம் "மனோகரா(1954)". அதே போன்று சிங்காரச் சென்னையில், 6 திரையரங்குகளில் [அசோக், சன், ஸ்ரீமுருகன், நூர்ஜஹான், கபாலி, பிரைட்டன்] வெளியான முதல் படம் "நானே ராஜா(1956)".
13. 1955-ன் தொடக்கத்தில் திருப்பதிக்கு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து அவர் அருளால் சிறந்ததொரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொண்ட சிவாஜி தீவிர பிள்ளையார், ஐயப்ப பக்தர். பல ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று பயபக்தியுடன் ஹரிஹரஸுதனை தரிசித்து வணங்கியிருக்கிறார். மாரியம்மனிடமும் சிவாஜிக்கு அளவற்ற பக்தி உண்டு.
14. 1957 முதல் 1961 வரை, "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை இந்தியாவெங்கும், சற்றேறக்குறைய 112 முறை நடத்தி, அதன் மூலம் வசூலான தொகையில், நாடகச் செலவு, தனது சிவாஜி நாடக மன்ற உறுப்பினர் சம்பளம் போக, கிட்டத்தட்ட ரூ.32,00,000/-த்தை (ரூபாய் முப்பத்து இரண்டு லட்சங்களை), பல்வேறு ஆக்கப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கினார். குறிப்பாக, தென்னகமெங்கும், பல பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் இந்நாடகம் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடைகளால் தான் உருவானது.
15. "ராணி லலிதாங்கி" திரைப்படம் வெளிவந்த சமயம், படத்தைப் பார்த்து விட்ட கழகத் தோழர் ஒருவர், அதில் சிவாஜியின் நடிப்பையும், நாட்டியத்தையும் கழகத் தலைவர் அண்ணாவிடம் வானளாவப் புகழ, அன்று இரவுக்காட்சியே யாரும் அறியாவண்ணம், மாறுவேடம் பூண்டு, முண்டாசு எல்லாம் கட்டிக் கொண்டு படத்தை பார்த்து விட்டு வந்தார் அண்ணா.
16. "சம்பூர்ண ராமாயணம்" திரைப்படத்தை கண்டு களித்த மூதறிஞர் ராஜாஜி "சிவாஜியின் நடிப்பில் பரதனைக் கண்டேன்" என்று வியந்து பாராட்டினார். "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்தை பார்த்து ரசித்த வ.உ.சி.யின் புதல்வர் சுப்ரமண்யம் "நடிகர் திலகத்தின் ரூபத்தில் எனது தந்தையாரை தரிசித்தேன்" என உருக்கத்துடன் புகழ்ந்துரைத்தார். இந்த இரு பாராட்டுக்களைத் தான், தனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையோடு கூறி, இன்புறுவார் சிவாஜி.
17. மத்திய அரசு கொண்டு வந்த, பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்கு, 1959-ம் ஆண்டு, தமிழக முதல்வர் காமராஜர் முன்னிலையில், பாரதப் பிரதமர் நேருவிடம் ரூ.1,00,000 /- தொகையை வாரி வழங்கிய முதல் இந்திய நடிகர் வள்ளல் சிவாஜி.
18. நடிகர் திலகத்தின் முதல் கறுப்பு-வெள்ளைப் படமும் (பராசக்தி) வெள்ளிவிழாக் கண்டுள்ளது. அவரது முதல் வண்ணப்படமும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளது. உலக சினிமா சரித்திரத்திலேயே - ஒரு கதாநாயக நடிகருக்கு - இது ஒரு அபூர்வமான சாதனை.
19. இந்தியத் திரையுலகக் கலைஞர்களில், அதிக அளவில் உலக விருதுகளை வென்ற மாபெரும் சாதனையாளர். 1960-ல் எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்காக ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என கௌரவிக்கப்பட்டு வெள்ளிப்பருந்து சிலையையும் பரிசாகப் பெற்றார். 1995-ல், பிரான்ஸ் நாடு இவருக்கு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான செவாலியே விருது வழங்கி கௌரவித்தது.
20. 1960-ல் தமிழகம் கடும்புயல், பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது, முதல்வர் காமராஜர் அவர்களின் மேற்பார்வையில், சிவாஜி அவர்கள் தனி மனிதனாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.
21. 1961-ல் தனது 'அன்னை இல்ல'த்தில், ஒரு பிள்ளையார் கோவிலை உருவாக்கினார் இந்த கலைப்பிள்ளையார். 2010-ல் பொன்விழா தொடக்கத்தைக் காணும் இப்பிள்ளையார் கோவிலின் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன்னர் அவரது அருந்தவப்புதல்வர்களால் மங்களகரமாக நடத்தப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்த வழியாக போவோர், வருவோர் எல்லாம் இந்த விநாயகரை வழிபட்டு வாழ்வில் மேன்மை பெற்றுள்ளனர்.
22. சிங்காரச் சென்னையில், முதன்முதலாக, ரூபாய் பத்து லட்சத்திற்கும் மேல் மொத்த வசூலை அளித்த திரைப்படம் "பாவமன்னிப்பு". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு ஏசி டீலக்ஸ் திரையரங்கில் வெள்ளிவிழா கண்ட முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [திரையரங்கம் : சென்னை - சாந்தி]
23. 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் கலைத்தூதுவராக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகளுக்கும் விஜயம் செய்து பற்பல பாராட்டுக்களையும், கௌரவங்களையும் பெற்றார். அமெரிக்க பயணத்தின் போது, நியூயார்க் மாநிலத்தில் உள்ள எழில் கொஞ்சும் நகரமான நயாகரா நகரின், ஒரு நாள் கௌரவ மேயராக, தங்கச்சாவி கொடுத்து கௌரவிக்கப்பட்டார். பிரதமர் நேருவிற்குப் பிறகு, இந்த கௌரவத்தை பெற்ற ஒரே இந்தியர் சிவாஜி.
24. 1962-ல் சீனப் படையெடுப்பின் போது ரூ.40,000/-, 1965-ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது ரூ.1,15,000/- மற்றும் 600 பவுன் தங்கம், 1999-ல் கார்கில் போரின் போது ரூ.1,00,000/-, யுத்த நிதியாக தாய்நாட்டிற்கு வழங்கியுள்ளார்.
25. 1964-ல் பம்பாயில் சத்ரபதி சிவாஜி சிலை, 1968-ல் சென்னையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை, 1972-ல் ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை ஆகியவற்றை தன் சொந்த செலவில் நிறுவினார்.
26. 1965-ல், இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தின் போது, போரில் காயமுற்ற நமது ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, சிவாஜி அவர்கள், தமிழகத்தின் பல முன்னணிக் கலைஞர்களை போர்முனைக்கே அழைத்துச் சென்று, பல கலைநிகழ்ச்சிகள் நடத்தி, வீரர்களை மகிழ்வித்தார்.
27. 1965-ன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் உறுப்பினரானார். அதிலிருந்து 1988 ஜனவரி வரை, கிட்டத்தட்ட 23 வருடங்கள், காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தனது உடல், பொருள், ஆவி ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.
28. 1966-ல் பத்மஸ்ரீ, 1982-ல் ராஜ்யசபை எம்.பி., 1984-ல் பத்மபூஷன், 1997-ல் தாதா சாகேப் பால்கே விருது என தாய்த்திருநாடும் தன் தலைமகனை கௌரவித்திருக்கிறது.
29. 1971ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில், 47 சென்ட் நிலம் வாங்கி, அதில் கட்டபொம்மன் சிலையை நிறுவினார். தமிழகமெங்கும் பல ஊர்களில், பெருந்தலைவர் காமராஜர் சிலைகளை, தன் சொந்த செலவில் நிறுவியிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு சிலை அமைத்தார். பல இடங்களில் அம்பேத்கர் சிலைகள் அமைய தாராளமாக நிதியுதவி செய்தார்.
30. சிவாஜியின் தாத்தா சின்னசாமி காளிங்கராயர் (அம்மாவின் அப்பா), அக்காலத்திலேயே, குழந்தைகளுக்கு தமிழ்ப்பற்றும், இறையுணர்வும் வரவேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தில் தனது சொந்த செலவில் விழுப்புரத்தில் தேவாரப் பாடசாலை நடத்தி வந்தார். அந்தத் தேவாரப் பள்ளியில் மாணவராகப் பயின்றவர் தான், பிற்காலத்தில் தமிழிசைக்கு அருந்தொண்டு புரிந்த தமிழிசை மாமேதை இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர்.
31. விருந்தோம்பலில் சிறந்தது அன்னை இல்லம். அன்னை இல்லத்தில் சாப்பிடாதவர்களே இல்லை. சாதாரண ரசிகர்கள் முதல் உலகப் பிரபலங்கள் வரை அனைவரும் கமலா அம்மாள் கையால் உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். அதே போன்று, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு, சிவாஜிக்கு வரும் மதிய உணவும் அங்குள்ள அனைவரும் (குறைந்த பட்சம் 10 பேராவது) சாப்பிடும் அளவுக்கு ருசியாக நிறைய செய்து அனுப்பி வைப்பார் கமலா அம்மாள்.
32. "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் 'யாரடி நீ மோகினி' பாடல் காட்சியில் நடிக்கும் போது 102 டிகிரி ஜுரத்துடன் நடித்தார். "பாலும் பழமும்" படத்தில் கண்பார்வை இழந்தவராக படுக்கையில் படுத்துக் கொண்டு அவர் நடித்த காட்சிகளின் போதும் அவருக்கு High Fever. அதே போன்று "கலாட்டா கல்யாணம்" திரைப்படத்தில் வரும் 'அப்பப்பா நான் அப்பனல்லடா' பாடல் காட்சி படமாக்கப்பட்ட போதும் காய்ச்சலுடன் நடித்தார். "இரு துருவம்" படத்தின் வெளிப்புறக் காட்சிகள் ஷூட்டிங்கின் போதும் கூட கடும் காய்ச்சலுடன் நடித்துக் கொடுத்தார். தன்னால் படத்திற்கு,
படப்பிடிப்பிற்கு எந்தவிதத்திலும் பங்கம் வந்துவிடக் கூடாது என்கின்ற உயர்ந்த கொள்கை கொண்டவர்.
33. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக "உத்தமபுத்திரன்" திரைப்படத்தில் தான் படமாக்கத்தில் Zoom Lens
உபயோகப்படுத்தப்பட்டது. 'உன்னழகை கன்னியர்கள்' பாடலுக்கு இந்த யுக்தி கையாளப்பட்டது. "உனக்காக நான்" திரைப்படத்தில், நடிகர் திலகம் தனது கண்களுக்கு சிறப்பு லென்ஸ் அணிந்து கொண்டு நடித்தார்.
34. "திருவருட்செல்வர்" திரைப்படத்தில் அவர் வாழ்ந்து காட்டிய "அப்பர்" வேடத்திற்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration), காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
35. இயக்குநர் ஸ்ரீதருக்கு கை விரல் நகங்களைக் கடிக்கும் பழக்கம் உண்டு. அவரது அந்த மேனரிஸத்தை, நடிகர் திலகம், தான் நடித்த "தெய்வமகன்" விஜய் கதாபாத்திரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார். அவரது மிக நெருங்கிய நண்பர் தொழிலதிபர் டிவிஎஸ் கிருஷ்ணாவின் மேனரிஸங்களை "கௌரவ"த்தின் பாரிஸ்டர் ரோலில் பார்க்கலாம். இன்னொரு நெருங்கிய நண்பரான இண்டியா சிமெண்ட்ஸ் நாராயணசுவாமியின் மேனரிஸங்கள் பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் [வியட்நாம் வீடு] பாத்திரத்தில் இருக்கும்.
36. உலகப் பெரும் சினிமா நிறுவனமான 20th Century Fox நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளக்க உரையுடன் வியாபார ரீதியாக வெளியிட உரிமை பெற்ற முதல் தமிழ்ப் படம் "தில்லானா மோகனாம்பாள்".
37. சிங்கப்பூர் நாடு கண்டுபிடிக்கப்பட்ட 150வது ஆண்டு விழாவில் திரையிடுவதற்காக, சிங்கப்பூர் அரசால் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுககப்பட்டு, சிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில், சிறப்புக் காட்சியாக காட்டப்பட்ட திரைப்படம் "தங்கச்சுரங்கம்".
38. ஹிந்தி நடிகர் ராஜேந்திரகுமார், சிவாஜியைப் பார்க்கும் போதெல்லாம், "நீங்கள் ஒரு ஹிந்திப் படத்திலாவது அவசியம் நடிக்க வேண்டும். உங்களது தமிழ்ப் படங்களைப் பார்த்தே உங்களுக்கு இந்தியாவெங்கும் எவ்வளவு ரசிகர்கள் தெரியுமா! உங்கள் ஹிந்திப் படம் வெளியாகும் நாளில் பம்பாயில் பூகம்பமே ஏற்படும்." என்றார். சில வருடங்கள் கழித்து, தர்த்தி திரைப்படத்தில், சிவாஜி நடித்தார். தர்த்தி வெளியான தினத்தன்று [6.2.1970], பம்பாயில் நிஜமாகவே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
39. முதல் வெளியீட்டில், வாழ்வியல் திலகத்தின் "வசந்த மாளிகை" திரைப்படத்தினுடைய முடிவு, தமிழகத்தில் சுபமாகவும், கேரளத்தில் சோகமாகவும் காண்பிக்கப்பட்டு, இரு மாநிலங்களிலுமே பெரும் வெற்றி. "பராசக்தி"க்குப் பிறகு, தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இந்தியாவிலும், இலங்கையிலும் என இரு நாடுகளில் வெள்ளி விழா கொண்டாடிய படம் "வசந்த மாளிகை". [இந்தியா - 200 நாள், இலங்கை - 287 நாள்]
40. இந்திய அரசினால், நெகடிவ் உரிமை வாங்கப்பட்டு, இந்திய முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம், தேசிய திலகத்தின் "பாரத விலாஸ்".
41. "கௌரவம்" திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்காக, ராஜேஷ் கன்னாவிடம் போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த பின் ராஜேஷ் கன்னாவின் வாக்குமூலம்: "கண்ணன் ரோலை வேண்டுமானால் நான் முயன்று பார்க்கலாம். ஆனால் அந்த பாரிஸ்டர் ரோலை நான் மட்டுமல்ல, பாலிவுட்டிலே கூட யாரும் நடிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், ஹாலிவுட்டிலே கூட சிவாஜி போல் நடிக்க அங்குள்ள எவராலும் முடியாது. இந்தப் படத்தை தயவு செய்து எந்த மொழியிலும் ரீமேக் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் விஷப்பரீட்சையாகி விடும்."
42. தமிழ் சினிமா சரித்திரத்தில், எண்ணிலடங்கா சாதனைகளின் கருவூலம் "திரிசூலம்". தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, முதன்முதலில், பத்து திரையரங்குகளில் [தமிழகத்தில் 8 திரையரங்குகள், இலங்கையில் 2 திரையரங்குகள்] வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் படம் "திரிசூலம்".
43. பாரதியாரின் கவிதைகள் என்றால் இவருக்கு உயிர். பாரதி பாடல்களில் 'பாரத சமுதாயம் வாழ்கவே', 'நெஞ்சு பொறுக்குதில்லையே' All time favourites. கண்ணதாசனின் 'மலர்ந்தும் மலராத', வாலியின் 'அழகு தெய்வம் மெல்ல மெல்ல' ஆகிய பாடல்களையும் அடிக்கடி முணுமுணுப்பார். வைரமுத்துவின் பாடல்களும் பிடிக்கும்.
44. பாரதிதாசனார் ஒரு சிவாஜி வெறியர். தனது குயில் பத்திரிகையில் நடிகர் திலகத்தைப் பற்றி பல தருணங்களில் வானளாவ புகழ்ந்து கவிதைகளும், செய்தி கட்டுரைகளும் வரைந்திருக்கிறார்.1962-ல் அவரது படைப்பான 'பாண்டியன் பரிசை', அதே பெயரில் நடிகர் திலகத்தை கதாநாயகனாகக் கொண்டு படமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. படத் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஆனால், அதற்குப் பிறகு, பற்பல காரணங்களினால், படப்பிடிப்பு நடைபெறாததால், படம் வளரவில்லை.
45. கர்மவீரர் காமராஜர், கலைக்குரிசிலின் சில திரைப்படங்களை, பிரத்யேக சிறப்புக் காட்சியாக கண்டு களித்து, நடிகர் திலகத்தை பாராட்டியுள்ளார். அப்படி அவர் பார்த்து பாராட்டிய திரைப்படங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், நவராத்திரி, ராஜபார்ட் ரங்கதுரை, சினிமா பைத்தியம் [வீர வாஞ்சிநாதனாக சிவாஜி நடித்த காட்சிகள் மட்டும்].
46. சிவாஜி ஆங்கிலப் படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பார். சென்னை காஸினோ திரையரங்கில் இரவுக்காட்சியாக ஆங்கிலப்படம் கண்டு களிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஹிந்திப் படங்களில் அவரை மிகவும் கவர்ந்தவை, "ஜனக் ஜனக் பாயில் பாஜே" மற்றும் "ஷோலே". எம்.ஜி.ஆர் படங்களில் "ஆயிரத்தில் ஒருவன்", "நாடோடி மன்னன்", "அடிமைப் பெண்" ஆகிய படங்கள் ரொம்பப் பிடிக்கும்.
47. சில தமிழக விஐபிக்களுக்கு மிகவும் பிடித்த சிவாஜி படங்கள்:
எம்.ஜி.ஆருக்கு பிடித்த சிவாஜி படம் "ஆலயமணி"; கலைஞருக்கு பிடித்த தனது நண்பரின் படம் "தில்லானா மோகனாம்பாள்"; மூப்பனாருக்கு பிடித்த நடிகர் திலகத்தின் திரைப்படம் "முதல் மரியாதை"; மு.க.அழகிரியின் மனதைக் கவர்ந்த திரைப்படம் "இருவர் உள்ளம்"; பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கு பிடித்த படம் "பாசமலர்".
48. பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சனுக்கு மிகவும் பிடித்த நடிகர் நமது நடிகர் திலகம். சிவாஜியை எங்கு எப்பொழுது பார்த்தாலும் அவரது காலில் விழுந்து வணங்குவார் அமிதாப். இன்னொரு பாலிவுட் பிரபலமான அமீர்கான் நடிகர் திலகத்தின் "கர்ணன்" திரைக்காவியத்தைப் பார்த்து விட்டு அப்படியே ஆடி அசந்து மிரண்டு போய் விட்டாராம்.
49. தங்களது தந்தையார் நடித்த திரைப்படக் கதாபாத்திரங்களில், மூத்த மகன் தளபதி ராம்குமாருக்கு பிடித்த ரோல் 'பாரிஸ்டர் ரஜினிகாந்த்' [கௌரவம்]. இளைய மகன் இளைய திலகம் பிரபுவுக்கு பிடித்த வேடம் 'அப்பர்' [திருவருட்செல்வர்].
50. 1990களில், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் உடல் நலம் குன்றியிருந்த சமயம், அவரைக் காண, மனைவி கமலாவுடன் சிவாஜி, எம்.எஸ். அவர்களின் இல்லத்திற்குச் சென்றார். எம்.எஸ்., அவரது கணவர் சதாசிவம் ஆகியோரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார் சிவாஜி. கிளம்புவதற்கு முன், சிவாஜி சதாசிவத்தை நோக்கி, "எம்.எஸ். அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர் பூரண உடல் நலம் பெற வேண்டும். அவரது குரல் இந்த தேசத்திற்கே சொந்தம்" என்றார். அதற்கு சதாசிவம் சிவாஜியிடம்,"உங்களுக்கும் உடம்பு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். எங்களால் வந்து உங்களை பார்க்க முடியவில்லை. தவறாக எண்ண வேண்டாம். எம்.எஸ்.ஸின் குரல் மட்டும் தான் இந்த தேசத்திற்கு சொந்தம். ஆனால், உங்கள் உடம்பே இந்த நாட்டிற்கு சொந்தம். ஆகையால், உங்கள் உடம்பையும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மேன்மக்கள் என்றென்றும் மேன்மக்களே!
51. நடிகர் திலகம், காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையை விரும்பிக் கேட்பார். 1962-ல், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று உலகப்பயணம் செய்த போது, காருக்குறிச்சியாரின் இசைத்தட்டுகளை மறக்காமல் எடுத்துச் சென்றார்.
52. ஹாலிவுட் படங்களின் இசையமைப்பு, BGM, Sound Effects இவையெல்லாம் நடிகர் திலகத்துக்கு நிரம்பப் பிடிக்கும். "மியூசிக்கிலேயே மிரட்டுறாங்க பாரு" என்று புகழ்ந்துரைப்பார். ஹிந்தியில், லதா மங்கேஷ்கரின் குரலுக்கு அதி திவீர ரசிகர். சிவாஜியின் மனைவி கமலா, ஆஷா போன்ஸ்லேவின் விசிறி. [லதா, ஆஷா இருவருமே சிவாஜி பக்தைகள்!]. தென்னகத்தில் சுசீலா, ஜானகி, ஈஸ்வரி, வாணி ஜெயராம் எல்லோர் குரலும் பிடிக்கும். கே.பி.சுந்தராம்பாளின் கணீர்க்குரல் இவர் மனம் கவர்ந்த ஒன்று. 'திருவிளையாடல்' திரைப்படத்தில் வரும் 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடலின் பரம விசிறி. இப்பாடலை 'சர்பத் பாட்டு' என்று தான் செல்லமாக அழைப்பாராம்.
53. ஜி.ராமநாதன் அவர்களின் இசையமைப்பைப் பற்றி புகழ்ந்து கூறுவார். "உங்கள் இசை எப்பொழுதுமே நன்றாகத் தானிருக்கும்" என்று அவரிடமே பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது இசையையும் சிலாகித்துக் கூறுவார். "என் படங்களை விட அண்ணன் (எம்.ஜி.ஆர்.) படங்களுக்குத் தான் நீ தூக்கலாக இசையமைத்துக் கொடுக்கிறாய்! உன்னை கவனித்துக் கொள்கிறேன்' என செல்லமாக, உரிமையுடன் எம்.எஸ்.வியிடம் கடிந்து கொள்வதும் உண்டு. இளையராஜா இசையமைத்த பாடல்களில் சிவாஜிக்கு மிகவும் பிடித்தவை "செந்தூரப்பூவே" [பதினாறு வயதினிலே] மற்றும் "மாஞ்சோலைக்கிளிதானோ" [கிழக்கே போகும் ரயில்].
54. "தூக்கு தூக்கி"யில் டி.எம்.எஸ். பாடி பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு, அவர் தனக்குப் பாடுவதற்கு பச்சைக் கொடி காட்டினார் சிவாஜி. "பெரிய பாகவதர் போல பாடியிருக்கிறீர்கள். உங்களுடைய அருமையான, வளமான குரல் எனக்கு பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து நீங்களே எனக்கு பின்னணி பாடுங்கள்" எனக் கூறிப் பாராட்டினார். பின்னொரு சமயத்தில், "உங்கள் குரலும் என் குரலும் ஒன்று போலத் தான் இருக்கிறது. நான் நடிப்பில் கொடுக்கும் பாவத்தை நீங்கள் பாட்டில் கொடுக்கிறீர்கள். ஆகையால் பாடலின் போது வரும் வசனங்களை அந்தந்த பாவங்களைக் கொடுத்து நீங்களே பேசுங்கள்." என்றார். டி.எம்.எஸ் இதைப் பலரிடம் சொல்லி பெருமைப்படுவாராம்.
55. "பொட்டு வைத்த முகமோ" பாடலை முதன்முதலாக எஸ்.பி.பி. தனக்கு பின்னணி பாடிய போது, 'நீ உன் குரலிலேயே பாடு, நான் அட்ஜெஸ்ட் பண்ணி நடித்துக் கொள்கிறேன்' எனப் பெருந்தன்மையோடு கூறினார் சிவாஜி. எஸ்.பி.பி., ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோரின் பாடல்கள் பிடிக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், காலை வேளைகளில், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பக்திப் பாடல் ஆல்பங்களை கேட்டு பரவசப்படுவார். தனக்கு முதன்முதலில் பின்னணி பாடிய சிதம்பரம் ஜெயராமனின் குரல் ரொம்பப் பிடிக்கும்.
56. வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வரும் நேயர் விருப்ப திரைப்படப் பாடல்கள் நிகழ்ச்சியில், அன்று முதல் இன்று வரை, அதிக நேயர்கள் விரும்பிக் கேட்ட / கேட்கின்ற பாடலாக இருப்பது "பாசமலர்" திரைக்காவியத்தின் 'மலர்ந்தும் மலராத' பாடல்.
57. சிவாஜி அவர்கள், எம்.ஜி.ஆரை 'அண்ணன்' என்றும். எஸ்,எஸ்.ஆரை 'ராஜூ' என்றும், ஜெமினியை 'மாப்ளே' என்றும், ஸ்ரீகாந்தை 'வெங்கடா' என்றும், பீம்சிங்கை 'பீம்பாய்' என்றும், பந்துலுவை 'பிஆர்பி(BRB)' என்றும், முக்தா சீனிவாசனை 'சீனு' என்றும், பத்மினியை 'பப்பி' என்றும், சாவித்திரியை 'தங்கச்சி / சிஸ்டர்' என்றும், சௌகார் ஜானகியை 'பார்ட்னர்' என்றும், சரோஜாதேவியை 'சரோ' என்றும், அஞ்சலிதேவியை 'பாஸ்(Boss)' என்றும், ஜெயலலிதாவை 'அம்மு' என்றும், வெண்ணிற ஆடை நிர்மலாவை 'ஸ்வீட் கேர்ள்(Sweet Girl)' என்றும் அன்பாகவும், செல்லமாகவும் அழைப்பார்.
58. கலைஞர் கருணாநிதி எழுதும் திரைப்பட வசனங்கள் மிகவும் சிறப்பானவை என மனதாரப் பாராட்டும் சிவாஜி, தனக்கு அவர் எழுதிய திரைப்பட வசனங்களில் தனக்கு மிகவும் பிடித்தது "திரும்பிப் பார்" படத்தின் வசனங்கள் என்றும் கூறியிருக்கிறார். கலைஞரை சிவாஜி "மூனாகனா" என்று தான் அழைப்பார். அவர் இவரை "கணேசு" என்பார்.
59. எந்த மேக்கப்மேன் சிவாஜிக்கு மேக்கப் போட்டு விட்டாலும், புருவத்தை மட்டும் தானே தான் எழுதிக் கொள்வார். "திருவருட்செல்வர்" அப்பர், "தெய்வமகன்" கண்ணன், சங்கர், "நவராத்திரி" குஷ்டரோகி இன்னும் இது போன்ற பல கதாபாத்திரங்களின் மேக்கப்பிற்காக, பல மணி நேரங்கள் உடலை வருத்திக் கொண்டதுண்டு.
60. படப்பிடிப்பின் போது, எந்தவொரு காஸ்ட்யூமை தான் அணிந்து கொண்டு நடித்தாலும், அந்த உடை கசங்காமல், அழுக்காகாமல் இருப்பதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார்.
61. தன்னுடன் நடிக்கும் நடிக, நடிகையர் நன்றாக நடிக்கும் போது மனம் திறந்து பாராட்டுவார். பல சமயங்களில் கூட நடிப்பவர்களுக்கு, காட்சிக்கு ஏற்றாற் போல், நடிப்பு சொல்லிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி நடிக்கச் செய்வார். பானுமதி, சாவித்திரி, சௌகார் ஜானகி, மனோரமா ஆகியோருடன் நடிப்பது பற்றி இப்படிக் கூறுவார். "இவங்க கூட நடிக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா, கவனமா இருக்கணும். நாம கொஞ்சம் அசந்தா போதும், இவங்க performanceஸால நம்மளையே தூக்கி சாப்பிட்டுடுவாங்க."
62. ஷுட்டிங் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும் காலை ஆறு மணிக்கு எழுந்து விடுவார். காலை ஆறு மணிக்கு மேல் அவர் உறங்கியதாக சரித்திரமே இல்லை. 1990களில் தாடி வைப்பதற்கு முன் வரை, தினமும் ஷேவ் செய்வார். சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் போதும், சூரக்கோட்டைக்கு விடுமுறையாகச் செல்லும் போதும் மட்டும் தான் ஷேவ் செய்யாத சிவாஜியைப் பார்க்க முடியும். தினமும் இரு வேளை குளிப்பார். எந்த சீசனாக இருந்தாலும் குளியல் பச்சைத் தண்ணீரில் தான்.
63. குளிர்ந்த மோர், காபி, அதிலும் பிளாக் காபி (Black Coffee) ஆகியவை இவர் விரும்பி அருந்துகின்ற பானங்கள். வேர்க்கடலை உருண்டைகளை விரும்பிச் சாப்பிடுவார். காலைச் சிற்றுண்டியாக விரும்பிச் சாப்பிடும் பலகாராங்கள் - இட்லி, பொங்கல், உப்புமா (ஏதேனும் ஒன்று). மதிய உணவில் கண்டிப்பாக அசைவம் இருக்க வேண்டும். டின்னரில் சில சமயங்களில் அசைவம் இடம்பெறும். மூன்று வேளைகளிலுமே அளவோடு தான் சாப்பிடுவார்.
64. ஸ்டேட் எக்ஸ்பிரஸ் 555 - இவர் புகைக்கும் சிகரெட். தம்பி ஷண்முகத்தின் மறைவுக்குப் பிறகு, மனைவி கமலாவின் அன்பு வேண்டுகோளை ஏற்று, கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாக தன்னிடம் இருந்த புகை பிடிக்கும் பழக்கத்தை, ஒரே நாளில் கைவிட்டார். அதற்குப்பின், ஒரு நாள், ஒரு வேளை, ஒரு தடவை கூட சிகரெட் பிடித்ததில்லை. What a Will Power!
65. தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்தித்தாள்களை வாசிப்பார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செய்திகளுக்கே முதலிடம் கொடுப்பார்.
66. சிவாஜி விமானப் பயணத்தின் போது மட்டும் அதிகம் பேச மாட்டார். பல சமயங்களில், விமானத்தில் ஏறி அமர்ந்த உடனேயே, கண்களை மூடிக் கொண்டு உறங்கி விடுவார்.
67. காரில் பயணம் செய்யும் போது சினிமா, அரசியல், பொதுவான விஷயங்கள் என நிறைய பேசுவார். மிக நீண்ட தூர கார் பயணத்தின் போது, நிறைய பாடல்கள் கேட்பார். அதில் "கப்பலோட்டிய தமிழன்" படப் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.
68. சிவாஜிக்கு தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சரளமாகப் பேசத் தெரியும். அந்தந்த மொழிக்காரர்களிடம் அவரவர்களது மொழியிலேயே பேசி அசத்துவார்.
69. சிவாஜி எந்த இடத்திற்கு சென்றாலும் சுற்றுப்புறத்தை கூர்மையாக கவனிப்பார். வீட்டிலோ, வெளியிலோ எந்த இடத்திலும் அமர்வதற்கு முன் தான் உட்காரப் போகும் இருக்கை, தலை மேல் சுழலும் மின்விசிறி என ஒரு பார்வை பார்த்து விட்டுத் தான் உட்காருவார்.
70. ரஷ்யா தவிர, கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார். ஒவ்வொரு நாட்டின் மக்கள் அணியும் விதவிதமான தொப்பிகளை சேகரித்து 'அன்னை இல்ல'த்தில் பத்திரமாக பொக்கிஷம் போல் வைத்திருந்தார்.
71. எந்த ஊர், எந்த மாநிலம், எந்த நாடு சென்றாலும் அந்தப் பகுதியினுடைய சிறப்பம்சங்கள், அங்குள்ள மக்கள், அவர்கள் செய்யும் தொழில், அந்தப் பிரதேசத்தினுடைய சிறப்பு உணவு வகைகள் என்கின்ற தகவல்களை அளித்து உடன் வருவோரை அசத்துவார். புவியியல் அறிவில் புலி இவர்.
72. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும், தஞ்சைப் பெரிய கோயிலுக்கும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும், சிவாஜி அவர்கள், யானையை காணிக்கையாகத் தந்துள்ளார். நாகை மாவட்டம் அன்னை வேளாங்கன்னி ஆலயத்திற்கு, ஆலயமணியை தன் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தார்.
73. 1982-ல், தமிழக அரசு கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு, இளைய திலகம் பிரபு, தன் சார்பில் ரூ.25,000/-மும், நடிகர் திலகத்தின் சார்பில் ரூ.1,00,000/-மும், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் வழங்கினார்.
74. 1986-ல் பெல்ஜியம் பல்கலைக்கழகமும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் அவரது கலைச்சேவைக்காக, 'டாக்டர்' பட்டம் வழங்கி சிறப்பித்தது.
75. தமிழ்த் திரையுலகில், எம்.கே.டி. பாகவதருக்குப் பின், கறுப்பு-வெள்ளையில், ஐந்து வெள்ளிவிழாப் படங்களை [பராசக்தி, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பட்டிக்காடா பட்டணமா] கொடுத்த ஒரே நடிகர் சிவாஜி. ஒரே காலண்டர் வருடத்தில்(1961), கறுப்பு-வெள்ளையில், இரு வெள்ளிவிழாப் படங்களை [பாவமன்னிப்பு, பாசமலர்] கொடுத்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி. தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, கறுப்பு-வெள்ளைப் படங்களில், முதல் வெளியீட்டிலேயே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வசூல் அளித்த ஒரே படம் "பட்டிக்காடா பட்டணமா".
76. 2593 இருக்கைகளைக் கொண்ட ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில், 'மூன்று' 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும், 'ஒன்பது' 50 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும் கொடுத்துள்ள ஒரே உலக நடிகர் நடிகர் திலகம். [ஆக மொத்தம், மதுரை தங்கத்தில் 'பன்னிரண்டு' 50 நாட்களைக் கடந்த படங்கள்]
77. நமது இந்தியத் திருநாட்டின் மகத்தான தினங்களான சுதந்திர தினத்தன்று 7 சிவாஜி படங்களும், குடியரசு தினத்தன்று 13 சிவாஜி படங்களும் வெளியாகியுள்ளன.
78. 'பண்டிகை தின ஹீரோ' என்றாலும் அது சிவாஜி தான். பொங்கல் வெளியீடுகளாக 23 திரைப்படங்களும், தமிழ்ப் புத்தாண்டு வெளியீடுகளாக 26 திரைப்படங்களும், தீபாவளி வெளியீடுகளாக 42 திரைப்படங்களும் கொடுத்துள்ளார்.
79. கிரிக்கெட், கால்பந்து இரண்டு விளையாட்டுக்களும் மிகவும் பிடித்தமானவை. கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் தீவிர ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயங்களில் நேரில் சென்று கண்டு, களித்து, ரசித்து மகிழ்வார். Indoor விளையாட்டுக்களில் மிகவும் பிடித்தது கேரம். டென்னிஸ் மேதை ராமநாதன் கிருஷ்ணனுக்கு, அவரது டென்னிஸ் ஆர்வத்தை கண்டு வியந்து, ஊக்கத் தொகை அளித்து உயர்த்தியுள்ளார்.
80. சென்னை தியாகராய நகரில் உள்ள நல்லியில் தான் தனது வீட்டிற்கு, வீட்டு விசேஷங்களுக்கு தேவையான பெரும்பாலான ஜவுளிகளை வாங்குவார். "நான் சம்பாதிப்பதில் ஒரு பெரிய பகுதியை உன் கடைக்குத் தான் கொடுக்கிறேன்" என நல்லி குப்புசாமியிடம் ஜோக்காகவும் கூறுவார்.
81. நடிகர் திலகம் தனது ரசிகர்களை "பிள்ளைகள்" என்று தான் கூறுவார். ரசிகர், ரசிகர் மன்ற கடிதங்களையெல்லாம் தம்பி ஷண்முகம் தான் கவனித்துக் கொள்வார். சில சுவாரஸ்யமான, வித்தியாசமான, முக்கியமான கடிதங்களை மட்டும் அண்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்வார்.
82. ஒரு நடிகருக்கு, இரு அரசுகள், சிலை அமைத்த பெருமை, நடிகர் திலகத்துக்கே. புதுவை அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி, 11.2.2006 அன்று புதுச்சேரியில், சிவாஜிக்கு சிலை அமைத்தார். தமிழக அரசு சார்பில், முதல்வர் கலைஞர், 21.7.2006 அன்று சென்னையில், தன் ஆருயிர் நண்பனுக்கு சிலை அமைத்தார்.
83. நடிகர் திலகத்தின் மறைவுக்குப் பிறகு, ஆண்டுதோறும் அவரது நினைவு மற்றும் பிறந்த தினங்களில், சிவாஜி - பிரபு சாரிட்டீஸ் ட்ரஸ்ட் சார்பில், நடைபெறும் சிவாஜி நிகழ்ச்சிகள், விழாக்களில், திரையுலக முன்னோடிகளுக்கும், திரையுலக சாதனையாளர்களுக்கும் சிவாஜி விருதுகள் வழங்கப்படுகின்றன. அமரத்துவம் அடைந்த முன்னோடிகள், சாதனையாளர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப்படுகின்றன
நடிகர்திலகத்தோடு ஜோடியாக (நேரடி) நடித்த கதாநாயகிகள் 59 பேர்.ஜோடியாக நடித்த படங்கள் எண்ணிக்கையில்.
பத்மினி-32 , கே.ஆர்.விஜயா-32,ஜெயலலிதா-18,
சரோஜாதேவி-17,சுஜாதா-16,தேவிகா-12,ஸ்ரீப்ரியா-11,சௌகார்-11,சாவித்திரி-11,வாணிஸ்ரீ-9, மஞ்சுளா-9,பண்டரி பாய்-8,பானுமதி-7,லக்ஷ்மி-7,ஜமுனா-7,எம்.என்.ராஜம்-6,உஷா நந்தினி-5,வடிவுக்கரசி -4,ஸ்ரீவித்யா-3,வைஜயந்தி மாலா-3,ஜி.வரலக்ஷ்மி-3,பாரதி-2,விஜயகுமாரி-2,அம்பிகா-2,ராதா-2,ஸ்ரீதேவி-2,ஸ்ரீரஞ்சனி-2,கிருஷ்ணகுமாரி-2,வசந்தா-2,சாரதா-2,அஞ்சலிதேவி-2,மைனாவதி-2,லலிதா-2,ராஜசுலோச்சனா-2,லதா-1,காஞ்சனா-1,மாலினி-1,வெண்ணிற ஆடை நிர்மலா-1,மணிமாலா-1,விஜயஸ்ரீ-1,விஜய நிர்மலா-1,பத்மப்ரியா-1,எஸ்.வரலக்ஷ்மி-1,மாலினி பொன்சேகா-1,சிலோன் கீதா-1,ரீனா-1,ராதிகா-1,ஜெயசுதா-1,குசலகுமாரி-1,பிரமிளா-1,மாதுரி தேவி-1,சரிதா-1,ராஜஸ்ரீ-1,கமலா-1,ருக்மிணி-1,சந்தியா-1,மனோரமா-1,சுமித்ரா-1,ஜெயபாரதி-1.
நடிகர்திலகம்
மொத்தம் 49 இசையமைப்பாளர்களோடு பணியாற்றியுள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்-95,கே.வீ.மகாதேவன்-38,விஸ்வநாதன்-ராமமூர்த்தி-24,இளையராஜா-23,ஜி.ராமநாதன்-18,சங்கர் கணேஷ்-9,டி.ஜி.லிங்கப்பா-6,எஸ்.வீ.வெங்கட்ராமன்-5,கங்கை அமரன்-5,எஸ்.எம்.சுப்பையா நாயுடு-4,டி.ஆர்.பாப்பா-4,சுதர்சன்-3,சந்திர போஸ்-3,சக்கரவர்த்தி-3,சி.என்.பாண்டுரங்கன்-2,எஸ்.தக்ஷிண மூர்த்தி-2,டி.சலபதிராவ்-2,எஸ்.ராஜேஸ்வர் ராவ்-2,குன்னக்குடி -2,மனோஜ் கியான்-2,வித்யா சாகர்-2,தேவா-2,ஆதிநாராயண ராவ்-1,எம்.ஜி.நாய்டு-1,தண்டாயுத பாணி-1,என்.எஸ்.பாலகிருஷ்ணன்-1,கண்டசாலா-1,கிருஷ்ண மூர்த்தி-1,ராம்நாத்-1,பீ.என்.ஆர்-1,கோவிந்த ராஜுலு-1,ஏ.எம்.ராஜா-1,டி.கே.ராமமூர்த்தி-1,ஜி.தேவராஜன்-1,புகழேந்தி-1,கோவர்தனம்-1,வீ.குமார்-1,சங்கர்-ஜெய்கிஷன்-1,கே.ராகவன்-1,எம்.ஏ.ரவீந்தர்-1,தேவேந்திரன்-1,எம்.ரங்கா ராவ்-1,டி.ராஜேந்தர்-1,ஜே.வீ.ராகவலு-1,
அம்சலேகா-1,ஸ்ரீராஜா-1,கீதப்ரியன்-1, ஏ.ஆர்.ரகுமான்-1.
.
நடிகர்திலகம் 96 இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார்.((கௌரவ வேடங்கள் நீங்கலாக)
ஏ.சி.திருலோகச்சந்தர்-20,ஏ.பீம்சிங்-18,பீ.மாதவன்-15,சி.வீ.ராஜேந்திரன்-14,கே.விஜயன்-14,டீ.யோகானந்த்-13,ஏ.பீ.நாகராஜன்-12,வீ.ஸ்ரீனிவாசன்-8,பீ.ஆர்.பந்துலு-7,கிருஷ்ணன்-பஞ்சு-7,ஸ்ரீதர்-7,கே.சங்கர்-7,ஆர்.கிருஷ்ணமூர்த்தி-7,எல்.வீ.பிரசாத்-6,ராமண்ணா-6,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்-5,கே.எஸ்.பிரகாஷ் ராவ்-5,கே.சோமு -5,தாதாமிராசி-3,ப.நீலகண்டன்-3,சி.எச்.நாராயண மூர்த்தி-3,வீ.பீ.ராஜேந்திர பிரசாத்-3,ஏ.காசிலிங்கம்-3,எஸ்.பீ.முத்துராமன்-3,கார்த்திக் ரகுநாத்-3,மேஜர் -3,ஏ.எஸ்.ஏ.சாமி-2,வேம்பு-2,ஆர்.எம்.கிருஷ்ண சாமி-2,வீ.எஸ்.ராகவன்-2,பீ.எஸ்.ரங்கா-2,பீ.புல்லையா-2,டி.பிரகாஷ் ராவ்-2,டி.ஆர்.ரகுநாத்-2,எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாய்டு-2,வீ.சுந்தரம்-2,அமிர்தம்-2,ஏ.ஜகந்நாதன்-2,பாரதி ராஜா-2,ராஜசேகர்-2,,என்.எஸ்.கே-1,டி.ஆர்.சுந்தரம்-1,எம்.நடேசன்-1,எஸ்.டீ.சுந்தரம்-1,ஜி.ஆர்.ராவ்-1,எஸ்.பாலச்சந்தர்-1,எஸ்.ஏ.முருகேஷ்-1,சுந்தர் ராவ் நட்கர்னி-1,ஜே.சிங்கா-1,ஏ.சுப்பா ராவ்-1,ராமகிருஷ்ணா-1,பீ.ஸ்ரீதர் ராவ்-1,கே.ஜே.மகாதேவன்-1,எஸ்.எஸ்.வாசன்-1,எஸ்.எஸ்.பாலன்-1,ஆர்.எஸ்.மணி-1,ஏ.சுப்பா ராவ்-1,ஏ.டி.கிருஷ்ணசாமி-1,பீ.ஆர்.சந்திரன்-1,ஜி.ஆர்.நாதன்-1,டி.என்.பாலு-1,கே.பாலச்சந்தர்-1,எஸ்.ராமநாதன்-1,சாவித்திரி-1,மல்லியம் ராஜகோபால்-1,சாணக்கியா-1,எஸ்.ஏ.கண்ணன்-1,ஏ.வின்சென்ட்-1,அப்பச்சன்-1,எம்.ஏ.திருமுகம்-1,கே.பாப்பையா-1,துரை-1,விஜய நிர்மலா-1,ராஜகணபதி-1,எஸ்.எஸ்.கே-1,கிருஷ்ணா-1,கே.பாக்யராஜ்-1,பாரதி வாசு-1,ஏ.எஸ்.பிரகாசம்-1,பாலச்சந்திர மேனன்-1,மனோஜ் குமார்-1,தாசரி நாராயண ராவ்-1,கே.ராகவேந்திர ராவ்-1,மணிவண்ணன்-1,சந்தான பாரதி-1,சி.குக நாதன்-1,பரதன்-1,மனோபாலா-1,பிரதாப் போதன்-1,எஸ்.ஏ.சந்திர சேகர்-1,ஆர்.வீ.உதயகுமார்-1,ஹாசன்-1,பிரசாந்த் குமார்-1,கே.எஸ்.ரவிக்குமார்-1,ஏ.வெங்கடேஷ்-1.ராம்சந்தர்-1.கஸ்தூரி ராஜா-1.
100 Days Films List
Film Name /
Place Name(s)
(1952-1960)
Parasakthi Chennai(2), Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Colombu, Yazh Nagar
Thirimbipar Selam
Manohara Madurai, Trichy, Selam, Kovai, Bangaluru, Kolombu
Kalyanam Panniyum Brahmachari Chennai, Trichy, Selam
Ethir Parathathu Chennai, Trichy
Kaveri Vellor
Mangaiyar Thilagam Chennai(3), Trichy, Selam
Pennin Perumai Chennai(3), Trichy, Selam
Amaradeepam Chennai, Trichy
Vanangamudi Chennai(2), Trichy
Uthamaputhiran Chennai(2), Madurai, Mysore
Pathibakthi Chennai, Madurai, Trichy, Kovai
Sampoorna Ramayanam Madurai, Trichy, Selam
Sabash Meena Chennai, Selam
Veerapandiya Kattabomman Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Dindukal, Nagarkovil, Vellor, Tirunelveli, Kerala, Colombu,Yazh Nagar
Maragadham Chennai
Bagapirivinai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Tirunelveli, Colombu
Irumbuthirai Kovai
Deivapiravi Chennai(3), Trichy, Selam, Kovai
Padikkatha Methai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Vidi Velli Chennai(2), Madurai
(1961-1970)
Pava Mannippu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli,kanchipuram,Ramanadhapuram, Bangalore, Kerala, Colombu
Pasamalar Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Nagarkovil, Tirunelveli, Erode, Bangaluru, Mysore, Colombu
Sri Valli Colombu
Marutha Naatu Veeran Kerala
Palum Pazhamum Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Dindukal, Bangalore, Colombu
Paarthal Pasi Theerum Madurai, Selam
Padithal Mattum Pothuma Chennai, Madurai, Trichy, Selam
Alayamani Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Colombu
Iruvar Ullam Chennai, Madurai, Colombu
Annai Illam Chennai
Karnan Chennai(3), Madurai
Patchai Vilakku Chennai(4), Madurai, Trichy, Kovai,
Kaikodutha Deivam Chennai(4), Madurai, Trichy, Kovai
Pudhiya Paravai Chennai
Navarathri Chennai(4), Madurai, Trichy
Santhi Chennai
Thiruvilaiyadal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Tirunelveli, Nagarkovil, Kumbakonam, Karur
Motar Sundaram Pillai Madurai, Trichy
Saraswathi Sabadham Chennai(3), Madurai, Trichy, Selam
Kanthan Karunai Chennai(2), Madurai, Trichy
Iru Malargal Chennai, Trichy, Selam
Ooty Varai Uravu Chennai, Madurai, Trichy, Kovai
Galatta Kalyanam Chennai(2)
Thillana Mohanambal Chennai(3), Madurai, Trichy, Kovai, Colombu
Uyarntha Manithan Chennai
Deivamagan Chennai(3), Madurai, Trichy
Thirudan Colombu
Sivantha Mann Chennai(4), Madurai, Trichy, Selam, Kovai, Thuthukudi
Dharti(Hindi) Delhi(4), Bombay(3), Kolkatta
Viyetnam Veedu Chennai(3), Trichy, Selam, Kovai
Raman Ethanai Ramanadi Madurai, Colombu
Engirundho Vandhal Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sorkkam Chennai, Madurai, Trichy, Selam, Tirunelveli
(1971-1980)
Kulama Gunama Chennai, Madurai, Trichy, Selam
Savale Samali Chennai(3), Madurai, Trichy, Selam, Kumbakonam, Colombu, Yazh Nagar
Babu Chennai(3), Trichy, Colombu, Yazh Nagar
Raja Chennai(2), Madurai, Trichy, Colombu
Gnana Oli Chennai
Pattikkada Pattanama Chennai(3), Madurai, Trichy, Selam, Tirunelveli, Colombu, Yazh Nagar
Thavapudhalvan Chennai
Vasantha Maligai Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Erode,Mayavaram, Colombu, Yazh Nagar
Needhi Chennai
Bharadha Vilas Chennai(3), Madurai, Trichy, Selam
Engal Thanga Raja Chennai(3), Madurai, Trichy, Selam, Nagarkovil, Thirunelveli, Colombu, Yazh Nagar
Kouravam Chennai(3), Madurai, Selam
Vani Rani Madurai
Thangapadakkam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Bangaluru(2), Colombu, Yazh Nagar
En Magan Madurai
Avanthan Manithan Chennai(3), Madurai, Trichy, Selam, Yazh Nagar
Mannavan Vanthanadi Chennai(3)
Uthaman Madurai, Colombu, Yazh Nagar, Mattu Nagar
Deepam Chennai(3), Madurai, Colombu, Yazh Nagar
Annan Oru Koyil Chennai(3), Madurai, Trichy, Selam,kovai,Thanjavore,Kumbakonam.
Andhaman Kathali Chennai(3), Madurai, Selam, Kovai, Colombu, Yazh Nagar
Thiyagam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelvelli
General Chakaravarthi Chennai, Yazh Nagar
Thatcholi Ambu(Malayalam) Kerala
Pilot Premnath Chennai, Colombu(2), Yazh Nagar
Thirisoolam Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Vellor, Tanjore, Kumbakonam, Tirunelveli, Erode, Mayavaram, Thirupur, Pollachi, Nagarkovil, Thiruvannamalai, Pondy, Colombu, Yazh Nagar
Naan Vazhzvaippen Chennai
Pattakkatthi Bairavan Colombu, Yazh Nagar
Rishimoolam Chennai(3)
Viswaroopam Chennai
(1981-1990)
Satthiya Sundaram Chennai, Selam
Kalthoon Chennai(2), Madurai, Selam, Kovai
Keezhvanam Sivakkum Chennai(2), Madurai
Va Kanna Va Chennai(3)
Theerppu Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai, Tirunelveli
Neevuru Kappina Neppu(Telugu) Andhra
Bejavaada Boppuli(Telugu) Andhra
Needhipadhi Chennai(3), Madurai, Trichy, Selam, Kovai
Sandhippu Chennai(3), Madurai, Trichy
Miruthanga Chakravarthy Chennai
Vellai Roja Chennai(6), Madurai, Trichy, Selam, Kovai, Pondy, Thiruvottriur
Thiruppam Chennai
Vazhkkai Chennai(3)
Dhavanik kanavugal Chennai
Bandham Chennai
Mudhal Mariyadhai Chennai, Madurai, Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Pondy, Tirunelveli
Padikkadhavan Chennai(5), Madurai, Kovai
Sadhanai Chennai(2)
Marumagal Chennai(2)
Viswanatha Nayakudu (Telugu) Andhra
Agni Puthrudu (Telugu) Andhra
Jallkikattu Chennai(2)
Pudhiya Vanam Chennai
(1991-1999)
Devar Magan Chennai(5), Madurai(2), Trichy, Selam, Kovai, Tanjore, Erode, Vellor, Tirunelveli, Nagarkovil, Bombay
Oru Yathramozhi(Malayalam) Kerala
Once More Chennai(2)
Padaiyappa
நன்றி - லிஸ்டில் 100 நாட்களுக்கும் மேல் ஓடிய படங்களில் சில இடம் பெற வில்லை - ஓடியிய திரை அரங்குகளும் அதிகம் -
1. லிஸ்டில் சேர்க்க மறந்த படங்கள்
திருவருட்செல்வர் (சென்னை )
விளையாட்டுபிள்ளை (மதுரை )
என்தம்பி
சங்கலி
தியாகி ( ஸ்ரீலங்கா)
பரீட்சைக்கு நேரமாச்சு (சென்னை)
பெஜவாடா பொப்பிலி (ஆந்திரா )
விடுதலை (சென்னை)
ராஜா பார்ட் ரங்கதுரை ( சென்னை)
ராஜராஜ சோழன் (சென்னை)
சத்யம் ( யாழ் வின்சர் -ஸ்ரீலங்கா)
சந்திர குப்த சாணக்கியா ( ஆந்திரா )
மிக மிக விரும்பி சுவைத்த சிவாஜி பட காதல் பாடல் காட்சிகள் .
மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா
நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்
Pammalar,
What happened to Nadigarthilagam Pugazh Malai with all his Still from his Movies? We have been hearing since 2012 but not yet released.(Don't worry Murali,I am leaving our contribution Part).I feel little disappointed with Pammalar sluggish indifference.
http://i1146.photobucket.com/albums/...psaea4ae92.jpg
ஒரு குளிர்சாதன(ஏ.சி.)டீலக்ஸ் திரையரங்கில்(சாந்தி) வெள்ளி விழாக் கண்ட முதல் திரைப்படம் பாவமன்னிப்பு. 1961-ம் ஆண்டின் ஈடு, இணையற்ற வசூல் சாதனைப் படமான பாவமன்னிப்பு, சாந்தியில் 177 நாட்கள் ஓடி இமாலய வெற்றி கண்டது. பாவமன்னிப்பு தொடங்கி சாந்தியில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் திரைக்காவியங்களும் நிகழ்த்திய சாதனைகளை தொடர்ந்து வரும் பட்டியலில் காணலாம்.
(திரைக்காவியம் - வெளியான தேதி - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. பாவமன்னிப்பு - 16.3.1961 - 177 நாட்கள்
2. பாலும் பழமும் - 9.9.1961 - 127 நாட்கள்
3. பார்த்தால் பசி தீரும் - 14.1.1962 - 75 நாட்கள்
4. வளர்பிறை - 30.3.1962 - 35 நாட்கள்
5. பலே பாண்டியா - 26.5.1962 - 49 நாட்கள்
6. செந்தாமரை - 14.9.1962 - 43 நாட்கள்
7. பந்தபாசம் - 27.10.1962 - 55 நாட்கள்
8. சித்தூர் ராணி பத்மினி - 9.2.1963 - 20 நாட்கள்
9. அறிவாளி - 1.3.1963 - 28 நாட்கள்
10. இருவர் உள்ளம் - 29.3.1963 - 105 நாட்கள்
11. பார் மகளே பார் - 12.7.1963 - 64 நாட்கள்
12. இரத்தத்திலகம் - 14.9.1963 - 81 நாட்கள்
13. கர்ணன் - 14.1.1964 - 100 நாட்கள்
14. பழநி - 14.1.1965 - 42 நாட்கள்
15. சாந்தி - 22.4.1965 - 100 நாட்கள்
16. திருவிளையாடல் - 31.7.1965 - 179 நாட்கள்
17. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - 78 நாட்கள்
18. சரஸ்வதி சபதம் - 3.9.1966 - 133 நாட்கள்
19. நெஞ்சிருக்கும் வரை - 2.3.1967 - 71 நாட்கள்
20. திருவருட்செல்வர் - 28.7.1967 - 63 நாட்கள்
21. ஊட்டி வரை உறவு - 1.11.1967 - 107 நாட்கள்
22. திருமால் பெருமை - 16.2.1968 - 56 நாட்கள்
23. கலாட்டா கல்யாணம் - 12.4.1968 - 106 நாட்கள்
24. தில்லானா மோகனாம்பாள் - 27.7.1968 - 132 நாட்கள்
25. அன்பளிப்பு - 1.1.1969 - 30 நாட்கள்
26. தங்கச்சுரங்கம் - 28.3.1969 - 78 நாட்கள்
27. குரு தட்சணை - 14.6.1969 - 41 நாட்கள்
28. தெய்வமகன் - 5.9.1969 - 100 நாட்கள்
29. வியட்நாம் வீடு - 11.4.1970 - 110 நாட்கள்
30. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970 - 75 நாட்கள்
31. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்
32. தங்கைக்காக - 6.2.1971 - 83 நாட்கள்
33. சவாலே சமாளி - 3.7.1971 - 107 நாட்கள்
34. பாபு - 18.10.1971 - 102 நாட்கள்
35. பட்டிக்காடா பட்டணமா - 6.5.1972 - 146 நாட்கள்
36. வசந்த மாளிகை - 29.9.1972 - 176 நாட்கள்
37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்
38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்
39. கௌரவம் - 25.10.1973 - 102 நாட்கள்
40. தங்கப்பதக்கம் - 1.6.1974 - 176 நாட்கள்
41. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 113 நாட்கள்
42. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 114 நாட்கள்
43. பாட்டும் பரதமும் - 6.12.1975 - 69 நாட்கள்
44. உத்தமன் - 26.6.1976 - 70 நாட்கள்
45. தீபம் - 26.1.1977 - 135 நாட்கள்
46. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 114 நாட்கள்
47. தியாகம் - 4.3.1978 - 104 நாட்கள்
48. ஜெனரல் சக்கரவர்த்தி - 25.6.1978 - 105 நாட்கள்
49. திரிசூலம் - 27.1.1979 - 175 நாட்கள்
50. இமயம் - 21.7.1979 - 48 நாட்கள்
51. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 56 நாட்கள்
52. ரிஷிமூலம் - 26.1.1980 - 104 நாட்கள்
53. ரத்தபாசம் - 14.6.1980 - 83 நாட்கள்
54. விஸ்வரூபம் - 6.11.1980 - 102 நாட்கள்
55. சத்திய சுந்தரம் - 21.2.1981 - 105 நாட்கள்
56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்
57. கீழ்வானம் சிவக்கும் - 26.10.1981 - 103 நாட்கள்
58. வா கண்ணா வா - 6.2.1982 - 104 நாட்கள்
59. தீர்ப்பு - 21.5.1982 - 105 நாட்கள்
60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்
61. பரீட்சைக்கு நேரமாச்சு - 14.11.1982 - 73 நாட்கள்
62. நீதிபதி - 26.1.1983 - 141 நாட்கள்
63. சந்திப்பு - 16.6.1983 - 100 நாட்கள்
64. மிருதங்க சக்கரவர்த்தி - 24.9.1983 - 100 நாட்கள்
65. திருப்பம் - 14.1.1984 - 105 நாட்கள்
66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்
67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்
68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்
69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்
70. பந்தம் - 26.1.1985 - 105 நாட்கள்
71. நீதியின் நிழல் - 13.4.1985 - 69 நாட்கள்
72. முதல் மரியாதை - 15.8.1985 - 177 நாட்கள்
73. ஆனந்தக்கண்ணீர் - 7.3.1986 - 63 நாட்கள்
74. வீரபாண்டியன் - 14.4.1987 - 32 நாட்கள்
75. அன்புள்ள அப்பா - 16.5.1987 - 34 நாட்கள்
76. ஜல்லிக்கட்டு - 28.8.1987 - 70 நாட்கள்
77. கிருஷ்ணன் வந்தான் - 28.8.1987 - 49 நாட்கள் (பகல் காட்சியில்)
78. என் தமிழ் என் மக்கள் - 2.9.1988 - 35 நாட்கள்
79. புதிய வானம் - 10.12.1988 - 100 நாட்கள்
80. ஞான பறவை - 11.1.1991 - 21 நாட்கள்
81. பசும்பொன் - 14.4.1995 - 56 நாட்கள்
குறிப்பு:
ஒரு நடிகரின், இரு புதிய திரைப்படங்கள், ஒரே நாளில் ஒரே திரையரங்கில் (அதுவும் மிகப் பெரிய திரையரங்கமான சாந்தி திரையரங்கில்) பகல் காட்சியாகவும், ரெகுலர் காட்சிகளாகவும் வெளியானது எமக்குத் தெரிந்த வரை நமது நடிகர் திலகம் ஒருவருக்கே.
(தேதி : 28.8.1987, திரைப்படங்கள் : கிருஷ்ணன் வந்தான்(பகல் காட்சி), ஜல்லிக்கட்டு(3 காட்சிகள்))
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகளின் புள்ளி விவரங்கள்:
பாவமன்னிப்பு முதல் பசும்பொன் வரை வெளியான புதிய தமிழ்த் திரைக்காவியங்கள் : 81
இதில் வெள்ளி விழா கண்டவை : 6
20 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடியவை : 2
100 நாட்கள் முதல் 139 நாட்கள் வரை ஓடியவை : 33
10 வாரங்கள் முதல் 14 வாரங்கள் வரை ஓடியவை : 12
50 நாட்கள் முதல் 69 நாட்கள் வரை ஓடியவை : 9
43 நாட்கள் முதல் 49 நாட்கள் வரை : 7
6 வாரங்கள் வரை : 12
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
சாந்தி சாதனைகள் நிறைவு.
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனை விளக்கங்கள் விரைவில் ...
அன்புடன்,
பம்மலார்.
என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-
1952- 1960
தேசம் ஞானம் கல்வி(பராசக்தி), ஆணும் பெண்ணும்,சுந்தரி சௌந்தரி,குரங்கிலிருந்து,அபாய அறிவிப்பு,ஏறாத மலைதனிலே,(தூக்கு தூக்கி), விண்ணோடும் முகிலோடும்(புதையல்), சிவதாண்டவம்(ராணி லலிதாங்கி),யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), கனவின் மாயா லோகத்திலே(அன்னையின் ஆணை),காணா இன்பம்(சபாஷ் மீனா), கண்டேனே உன்னை கண்ணாலே(நான் சொல்லும் ரகசியம்),தேரோடும் எங்க சீரான மதுரையிலே(பாக பிரிவினை), கொடுத்து பார் பார் பார்(விடிவெள்ளி).
1961-1970
பறவைகள் பலவிதம்(இருவர் உள்ளம்),வந்தேனே (நவராத்திரி), பார்த்தா பசு மரம்(திருவிளையாடல்),ஓஹோஹோ little flower (நீலவானம்)டே க்கா கொடுக்கதப்பா,பத்து மாதம்(பேசும் தெய்வம்),அய்யய்யா, நான் பொறந்தது தஞ்சாவூரு(என் தம்பி), ஹாப்பி இன்று முதல் (ஊட்டி வரை உறவு),தங்க தேரோடும், போட்டாளே (லட்சுமி கல்யாணம்),ஏழு கடல்(எங்க ஊர் ராஜா), டான்ஸ் நிர்மலாவுடன் (தங்க சுரங்கம்),கோயில் டான்ஸ்(குரு தக்ஷிணை),அன்புள்ள நண்பரே,காதலிக்க கற்று கொள்ளுங்கள்(தெய்வ மகன்),ஆடல் காணலாம்(நிறை குடம்),என்னங்க (எங்க மாமா),சிரிப்பில்(எங்கிருந்தோ வந்தாள் ),பொன்மகள்(சொர்க்கம்).
1971-1980
தேரு பார்க்க(இரு துருவம்),பொட்டு வைத்த, ஒரு தரம் (சுமதி என் சுந்தரி),வரதப்பா(பாபு),கல்யாண பொண்ணு(ராஜா),அம்பிகையே,அடி என்னடி,கேட்டுகோடி (பட்டிக்காடா பட்டணமா), love is fine (தவ புதல்வன்), ஏன் ஏன் ஏன் ,குடிமகனே, ஆதி வாசி மழை டான்ஸ்(வசந்த மாளிகை),மாப்பிள்ளையே(நீதி), சிவதாண்டவம்(பொன் ஊஞ்சல்),மும் மும் மும் முத்தங்கள் (எங்கள் தங்க ராஜா), I will sing for you (மனிதரில் மாணிக்கம்), இனியவளே ,ஆடிக்கு பின்னே (சிவகாமியின் செல்வன்), நான் பார்த்தாலும் பார்த்தேனடி(தாய்),நல்லதொரு குடும்பம்(தங்க பதக்கம்),சோன் பப்பிடி(என் மகன்)கன்னங்கருத்த(Dr .சிவா),சிவகாமி ஆட,உலகம் நாம் ஆடும்,my song is for you (பாட்டும் பரதமும்),ராஜா யுவ ராஜா(தீபம்),கோவில் டான்ஸ்(தியாகம்), வேலாலே, ஆணாட்டம்,மௌனம் கலைகிறது(என்னை போல் ஒருவன்),என் ராஜாத்தி,காதல் ராணி(திரிசூலம்),பூ மொட்டு(யமனுக்கு யமன்),ஆடல் பாடலில்(வெற்றிக்கு ஒருவன்).
1981-1990
குற்றால அருவி(லாரி டிரைவர் ராஜா கண்ணு),ராத்திரி நிலாவில்(சந்திப்பு)
1991-2000
சின்ன சின்ன காதல் (once more ), தேவராட்டம்(என் ஆசை ராசாவே)
படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
பாடியவர்- எஸ்.பீ.பாலசுப்ரமணியம் .
பாடலாசிரியர்- புதுமை பித்தன்
இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.
நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்)
அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????
ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.
பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.
காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.
பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான் அல்லது மாலிஷ்.). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.
எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.
முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.
இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.
ஒரு இள விமானி, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.
எழும் போதே suggestive ஆக தன் அவசர விழைவை வேட்கையை உணர்த்தி கையில் முத்தமிடுவார். , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தொடர்ந்து அலை பாயும் உணர்ச்சிகளை உணர்த்துவார் சிறு சிறு தொடல்களில். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.
பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.
ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,
கார்த்திக் சாரின் வேண்டுகோளை ஏற்று கஜுரஹோ factor குறைத்து என் காதல் தொடர் தொடரும்.
கீழ்கண்ட படங்கள் முக்கியமாக பரிசீலனையில்....
1)பராசக்தி
2)புதையல்
3)ராஜா ராணி
4)தெய்வ பிறவி
5)இரும்பு திரை
6)பாவை விளக்கு
7)கல்யாணியின் கணவன்
8)ஆண்டவன் கட்டளை
9)புதிய பறவை
10)சாந்தி
11)நீலவானம்.
12)கலாட்டா கல்யாணம்.
13)தங்க சுரங்கம்.
14)தெய்வ மகன்.
15)நிறை குடம்.
16)சிவந்த மண்.
17)சுமதி என் சுந்தரி.
18)வசந்த மாளிகை.
19)உத்தமன்
20)ரோஜாவின் ராஜா
21)திரிசூலம்.
22)முதல் மரியாதை
ஏதாவது ஆலோசனை இருந்தாலோ ,விட்டு போயிருந்தாலோ இணைக்கலாம்.
சிவாஜியின் காதல்கள்- 1
பராசக்தி- முதற்காதல்.
புது பெண்ணின் மனசை தொட்டு போன அந்த புத்தம் புது நாயகன்.
முதற்காதல் என்றால் எல்லோருக்குமே புது அனுபவம். ஐம்பதுகளின் இளைஞர்களுக்கு முதற்காதல் பிராணநாதா,பிரபோ என்ற ரேஞ்சில் இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு அத்தான்,மாமா,ஏன்னா ,என்னாங்க அளவிலாவது வாய்த்திருக்கும். ஆனால் அந்த இளைஞனுக்கு வாய்த்தது வா,போ,குணா என்று விளிக்கும் ஒரு பாரதி கனவு கண்ட புதுமை பெண்.பேஷ் பேஷ் அந்த இளைஞனின் முதற்காதலே மிக நன்றாக வாய்த்துள்ளதே? பத்மினியுடன் முதற்படம்.என்ன திகைக்கிறீர்கள்?படம் டைட்டில் கார்டு பண்டரி பாய்(பத்மினி)என்றே காட்டும்.விமலாவுடன் குணாவின் முதற்காதலை பார்க்கு முன் ஜாலியுடன் (கண்ணம்மா) ஜாலியாக பார்த்த முதல் நடனத்தை (சிவாஜியின் முதல் பாடல் காட்சி)பார்த்து விடலாமா?
அந்த பணக்கார ,பர்மா செல்ல பிள்ளை ,தமிழ் நாட்டில் முதல் குரலை ஏளனம் செய்து ,ஹோட்டல் paradise (பர்தேஸ்) நுழையும் அமர்க்களமாய். ஸ்டைல் ஆக அலட்சியம் கலந்த curiosity யுடன் அறையை ஒரு நோட்டம் விட்டு,காப்பி ஆர்டர் செய்து,ரூம் பாயிடம் காசை சுண்டி டிப்ஸ் கொடுக்கும் தோரணை!!என்ன சொல்ல?கீழே வந்து மஜுராவிற்கு டிக்கெட் கேட்க ,அன்றைக்கு டிக்கெட் இல்லாமல் ,மறுநாள்தான் ,பண்ணி விடலாமா என்று கேட்கும் reception ஆளிடம், ஓரிரு நொடி கடுப்பு கலந்து ஏமாற்றம் காட்டி சரி என்பான்.அறைக்கு திரும்பி வந்தால் ,படுக்கையில் ஒரு முன் பின் அறியாத பெண்.பட படப்புடன் வியர்வையை டையால் துடைத்து, பிறகு அந்த பெண் தன் தவறுதான் என்றதும் ,காப்பியை கொடுத்து உபசரித்து,ஒரு ஆர்வம்,தயக்கம்,தடுமாற்றம்,பயம் கலந்த akwardness என்ற எல்லா உணர்வும் காட்டி, நடனத்திற்கு செல்ல அரை மனதாக சம்மதம் கொடுக்கும் அழகு!!பின் அழைப்பது பெண்ணல்லவா?ஒரு பெண்ணின் அருகாமை ,அக்கால இளைஞர்களுக்கு(50 களின்) கொடுக்கும் உணர்வை பார்க்க விழைவோர் ,இக்காட்சியை பார்த்தே ஆக வேண்டும்.நெளிந்து கொண்டு நாட்டியத்தில் முள் மேல் அமர்வது போல ,நடுவில் போய் விடலாமே என்று தயக்கம் கலந்த அரை மனதை, உணர்த்தியும்,பெண்ணின் அருகாமை தரும் சிறு சலனத்தால் பாவம் இளைஞன்...
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புது முகமாம்!!
அதே இளைஞன். கதாநாயகி அறிமுக காட்சியில் பெட்டியை பிடுங்கி வில்லன் ஓட ,கதாநாயகன் அவனுடன் போராடி ,பெட்டியை மீட்டு தந்து,காதலை பெறுவதையே பார்த்த நமக்கு ஒரு அதிர்ச்சி. பெட்டியை ,கதாநாயகியிடம் இருந்து பறித்து ஒடுபவனே நாயகன்தான்.பெட்டியை விட்டு ,சாப்பாட்டை எடுத்து ,காக்கைகளுடன் (முதல் பாடலுடன் பாடல் காட்சி-சிவாஜிக்கு)பகிர்ந்து பாடி, மகிழும் இடம் ,கதாநாயகியின் வீடாகவே இருக்க வேண்டுமா?அவளை கண்டதும் ஒரே ஓட்டம்.
பிறகு பௌர்ணமி நாளில்,ஒரு நதிக்கரையில் அதே பெண். அவள் நல்ல மனமறிந்து, அவள் அழைப்பை ஏற்று வீடு சென்றால்....
காதல் மொழியா பேசினாள் கட்டிளம் கன்னி?குணா என்றும்,வா,போ என்றும் டோஸ்தான்.பிச்சைஎடுக்க வெட்க படவில்லை.பைத்தியமாக நடிக்க வெட்க படவில்லை,திருட வெட்க படவில்லை ஆனால் நீ ஏமாந்ததை சொல்ல வெட்கம், உன்னை ஏமாற்றிய அந்த ஜால காரியை பாராட்டுகிறேன்,அவளால்தான் நீ இந்த உலகத்தை பார்த்தாய் என்றெல்லாம் lecture பாணியில் டோஸ்..ஆனால் கடைசியில் சிறிதே கனிந்து ஒருவரையொருவர் புரிவர்.(அண்ணாவிடம் கற்றவளாம்). பிறகு இரவு தூங்காமல் தங்கையை எண்ணி குணசேகரன் உருக... விமலாவோ குணசேகரனின் காதல் கனவில் உருக...
சிவாஜியின் கதாநாயகி மட்டும் பாடும் முதல் காதல் டூயட்.சுரிதாரில் அமர்க்களமாக முதல் பட கூச்சம் சிறிதும் இன்றி, கனவு காணும் கதாநாயகியின் எண்ண ஓட்ட படியே காதல் செய்வார்.(அந்த பாத்திர நடைமுறை சாயல் அற்று)
இந்த காட்சியில் நடித்தவன் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!
கடைசி காட்சியில் சுபம் போடும் முன்னால், நான் போகட்டுமா என தயங்கி கேட்கும் நாயகியை ,சோபாவின் கை பிடியில் காப்பி குடித்து கொண்டே தன் எண்ணத்தை உணர்த்தும் அழகு. பிறகு பெரிய நூலால் அவள் தலைப்பை இழுத்து சொந்த குரலில் பெண்ணின் மனதை தொட்டு பாடி கிண்டலிக்கும் இளமை.பார்த்து விட்டு சிறிய நூல் போதுமே என்று சொல்லும் அண்ணியின் முன் நாண சம்மதம்.
இந்த காட்சியிலும் யாரோ கணேசன் என்ற புதுமுகமாம்!!!!
சிவாஜியின் காதல்கள்- 2
அந்த நாளும் வந்திடாதா.......
பராசக்தியிலும்,அந்த நாளிலும் படித்த சிந்திக்கும் பெண்ணை காதலித்து மணந்து நொந்து அந்த நாளில் அவர் பேசும் வசனம் "படித்த பெண்ணை கல்யாணம் செய்தது தவறு என்று புரிந்து கொண்டேன்".(நாம் எல்லோரும் நடைமுறை வாழ்க்கையில் நொந்து கொள்ளும் விஷயம்தான்)
இந்த படத்திலும் sidetrack முதலில் பார்த்து விட்டு, maintrack ற்கு வருவோம்.படத்தில் சிவாஜி ராஜன் என்கிற புதுமை லட்சிய வெறி கொண்ட unethical careerist ஆகவும்,சந்தர்ப்பம் வாய்க்கும் போது அப்படியே மற்ற பெண்ணையும் பதம் பார்க்கும் ஆளாகவும்(காதலித்து கடிமணம் புரிந்தும்)வருவார். அம்புஜம்(சூர்ய லட்சுமியா ,மேனகாவா?),சின்னையா என்கிற (சிவாஜியின் குள்ள குரு சம்பந்தம்) பணக்கார கிழவனின் உறவில் பணத்துக்காக திளைக்கும் நாட்டிய நங்கை. பிக்னிக் வந்துள்ள இடத்தில் ராஜனின் கண்ணில் பட்டு தொலைக்க வேண்டுமா? இட்லியை நன்றாக முக்கி கொண்டிருக்கும் குள்ள கிழவனுக்கு தண்ணி கொண்டு வர செல்லும் அம்புஜத்தை ஹாட் அணிந்து ராஜன் குறும்பு வில்ல சிரிப்புடன் நோட்டமிட்டு ,சின்னையாவிடம் வந்து அமர்ந்து வம்பு வளர்க்கும் ஜாலி வில்லத்தனம் கலந்த குறும்பு அமர்களமாய் இருக்கும்.அம்புஜம் வருவதற்கு முன் அப்புற படுத்த பார்க்கும் சின்னையாவை உட்கார்ந்தே டபாய்ப்பார் . அம்புஜம் வந்ததும் நோட்டமிட்டு கள்ளபார்வையுடன், அம்புஜத்தின் சம்மதமும் கலக்க ,மறைமுகமாக அம்புஜம் தன பூர்விகம்,வாழும் இடம் எல்லாவற்றையும் குறிப்பிட சின்னையா டென்ஷன் ஆவதும், ராஜன் குறும்போடு கணக்கு பண்ணுவதும் படு ஜாலியான யதார்த்தம். பிறகு சின்னையா சின்ன வீட்டிலேயே அம்புஜத்தோடு romance பண்ணும் அழகு.அம்புஜம் கற்பமானதும் சால்ஜாப்பு சொல்லி நாள் கடத்தி உத்தர என்னும் நேர்த்தி.காதல் கடிதங்களை காட்டி மிரட்டும் அம்புஜத்தை துப்பாக்கி முனையில் கடிதங்களை திரும்ப வாங்கி ,அடிக்கும் கமெண்ட்.
உஷாவின் சந்திப்போ பராசக்தி type ,intellectual conflict . அறிவுக்கும்,கல்விக்கும் வந்தனை செய்து,இதில் அரசியல் வேண்டாம் என்று வாதித்து சபையை மயக்கும் உபகார சம்பள அநாதை ராஜனை , சத்யாக்ரக இயக்க சுதந்திர எழுச்சி தலைவர்களின் தியாகத்தை நினைவுறுத்தி ,உறவினர் துன்ப நிலையில் உள்ள போது சிந்தனையா செய்வோம் என்று கேட்டு சபை வளையல் அணிவிக்கும் அளவு பங்க படுத்துவார் உஷா.
ஆனால் அந்த ராஜன் மனதில் புகுந்து விட்டதும்,சில நாட்கள் கழிந்து தொழில் ரீதியாக தந்தையிடம் பேசும் ராஜனை கண்டு ,இருவரும் பழைய பிரச்சினையை கருதாமல் மனமொப்புவதும், முழுக்க முழுக்க அறிவு சார்ந்த காதல்.
கடைசியில் மனைவியிடம் பிடிபட்டு கட்டி வைத்து confront பண்ணும் காட்சி சிவாஜியின் அற்புத நடிப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. சொந்த நாடு அறிவாளிகளுக்கு பாரா முகம் காட்டினால் ,அவர்கள் தங்களுக்கு வசதியான பாதையை தேர்ந்தெடுத்து நியாய படுத்துவது இந்த பட காட்சியில்,வசனத்தில்,நடிப்பில் விகசித்து தெறிக்கும்.சிவாஜி குரூரம்,ஏமாற்றம்,மகிழ்ச்சி,அவசரம்,கடுப்பு,எதி ர்பார ்ப்பு எல்லா உணர்வுகளையும் கொடுக்கும் அழகே அழகு.இவ்வளவுதானா உஷா உன் தேச பக்தி என்று மனைவியை கலாய்ப்பது,வெறுக்க வேண்டியது தோல்வி என்னும் போது ஒரு தீவிர வெறி,அம்புஜம் விஷயத்தை கேட்டு ஏன் அவளையும் ஏமாற்றுகிறாய் என்று மன்றாடும் மனைவியிடம் பிடி கொடுக்காமல்,கூட வந்தால் லேடி அம்பாசடர் ஆகா திரும்பலாம் என்ற கொக்கி,துப்பாக்கி நீட்டும் மனைவியிடம் அன்று கடற்கரையில் சொன்னது நினைவிருக்கிறதா இன்பத்தின் எல்லை என்று,புரண்டு படுக்கும் போதும் முழிப்பாயே என்று மனைவியின் உணர்வை தூண்டி divert பண்ண பார்க்கும் போது சிறிதே உணர்ச்சி காதல் தலை தூக்கும்.
மற்ற படி அறிவு காதல்,ஏமாற்று காதல்,துரோக காதல்,காரிய காதல்தான் இந்த படத்தில்.
அடுத்து,இதையெல்லாம் சரி பண்ணும் இரண்டு உணர்வு காதல்கள்.
சிவாஜியின் காதல்கள்-3
ராஜா ராணி-1956.
இதுவரை நான் பேசியதெல்லாம் intellectual காதல்கள்.இதெல்லாம் காதலில் சேர்த்தியா என்றே உலகம் பேசி கொண்டிருக்கிறது. இப்போது நான் பேச போவது அக்மார்க் உள்ள பூர்வமான காதல்.
அதுவரை தமிழ்திரையே காணாத அதிசயம்.
நிஜமாகவே chemistry கொண்ட அழகான இளைஞன் இளைஞி இணைவு.
நடிப்பு,வயது,அனுசரணை (compatability ) அத்தனையிலும் நூற்றுக்கு நூறு வாங்கி அன்றைய இளைஞர்களின் இதய துடிப்பை எகிற செய்த ஜோடி.
Feelgood என்ற genre ரொமாண்டிக் காமெடி.
அலுப்பு தட்டாத திரைக்கதை ,வசனம்,நல்ல இயக்குனர்.
டீசிங் ,situational காமெடி ,ஜாலியான ஓட்டம் அனைத்தும் கொண்ட அற்புத படம்.
எப்போதாவது கிளைமாக்ஸ் முடிந்த பிறகு ஒரு full டூயட் பாடலை ஒரு ஜோடி பாடி ரசிகர்கள் கலையாமல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்த அதிசயம் கண்டதுண்டா?ராஜா ராணியில் சிவாஜி-பத்மினி என்ற அமர காதலர்கள் நிகழ்த்தி காட்டினர்.
60லும்,70 களிலும் இயக்குனர்கள் திணறிய (கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலச்சந்தர்) விதவா மறுமணத்தை அலட்சியமாய் அலட்டாமல் சாதித்து காட்டியது இந்த 50 களின் படம்.
சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் போன்ற அபூர்வ performance ,இந்த படத்தின் மிக அற்புத காதலை விழுங்கி ஏப்பம் விட்டு நிலைத்து நிற்பது சோகமே.
ராணி என்கிற குருட்டு தகப்பனின் ஏழை பெண் ,சந்தர்ப்ப வசத்தால் ராஜா என்கிற வசதியுள்ள இளைஞனால் பணக்கார பெண்ணாக புரிந்து கொள்ள பட்டு ,அவனிடமே வேலைக்கு சேர்ந்து ,காதல் கனிந்து,உண்மையும் தெரியும் போது,ராணி இளம் வயது விதவை என்ற பேருண்மை திடீரென்று காதலை பெயர்க்க ,பிறகு பரபரப்பான இறுதி காட்சியில் காதலர்கள் சேரும் கதை.
என்னவென்று இந்த படத்தை வர்ணிக்க?இதை பார்க்காதவர்களை சிவாஜி ரசிகன் என்ற லிஸ்ட் டில் நான் சேர்க்கவே மாட்டேன்.(ராகவேந்தர் மட்டும்தான் நிபந்தனை விதிக்க வேண்டுமா?நானும்தான்)இளைமையுடன் கூடிய குறும்பு மின்னி தெறிக்கும் அழகோ அழகு சிவாஜி-பத்மினி.(முத்துலிங்கம் போல நானும் சிறிதே வருந்தினேன் இந்த படம் காணும் போது)
மயக்க மருந்து உட்கொண்டு ராணி தள்ளாடி ராஜாவின் காரில் உட்கார்ந்து கண்ணசர தொடங்கும் இளமை குதூகல திருவிழா. ராஜா வீட்டிற்கு அழைத்து சென்று(தூக்கம் வருதுப்பா என்னும் பத்மினியின் நடிப்பு,பின்னாட்களின் பஞ்ச தந்திரம் தேவயானியை தூக்கி சாப்பிடும்) ,ஏனோதானோ போஸில் போட்டு விட்டு,பத்திரிகையில் வந்த விளம்பர படி பணக்கார பெண்ணாய் (லீலா) இருப்பாளோ என்ற சந்தேகத்தில் ,அவளின் தூங்கும் விதத்தை நேர் செய்து,போர்வையும் போர்த்தும் விதம். மறுநாள் காலை ராணி ஒட்டு கேட்டு லீலாவாகவே தொடர ,அவளை வீட்டில் விட வரும் ராஜாவிடம் இங்கேயல்ல, என்ற டபாய்த்து ,சுலபமாய் நுழைந்து வெளியேறும் வீடாக பார்ப்பது. நுழைந்து பிறகு அமைதியாக வெளியேறி ,பரோபகாரம்-தங்கம்(என்.எஸ்.கே,டி.ஏ.மதுரம்) தம்பதிகள் வீட்டில் குழப்பம் விளைவிக்கும் சமயங்கள். ராஜா, ராணியிடம் சேலை கொடுக்க,துரத்தும் நாய்க்கு பயந்து மாடியேறி ஓடி அமர்க்களம் செய்ய , தங்கத்தையும்,ராஜாவையும் ,பரோபகாரம் சந்தேகிக்க, ராணியையும்,பரோபகாரத்தையும் தங்கம் சந்தேகிக்க ஜாலி நாட்.
வேலைக்கு அமரும் ராணியிடம் சீசீ இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொருட்டா ,அவங்க பொழுது போக்கா வேலை செய்யறாங்க ,சம்பளமெல்லாம் வாங்க மாட்டாங்க என்று ராணி வயிற்றில் புளி கரைக்கும் காட்சி தூள். ராணி பிறகு தான் ஒரு 200 ஐ தொலைத்ததாய் சொல்லி சமாளித்து இருநூறை பெறுவார்.
பாபு என்ற அமச்சூர் நாடக நண்பனிடம் முரண் பட்டு ,தானே நாடகம் அரங்கேற்றும் போது,பாபு பணம் கொடுத்து தூண்டி விடும் கலாட்டாவால் துவங்கும் காதல் அத்தியாயம் நம்மை சொக்க வைக்கும்.
எனக்கு மிக பிடித்த காதல் காட்சிகளில் ஒன்று.கல்லடிக்கு தப்பி ஓடும் லீலாவை துரத்தி கொண்டு, ஓடி,இருவரும் ஒரு வாய்க்காலை கடக்க முயலும் போது நனைந்து விட,நடுக்கத்துடன் ,தன வயிற்றுக்குள் நாடகத்திற்காக சுருட்டும் சேலையை லீலாவிற்கு கொடுத்து திருமணம் என்று சொல்லி தீர்மானம் என்று சமாளித்து லவ் மீட்டர் கையை கொடுத்து மாட்டி கொண்டதாய் டபாய்த்து,மீனை கண்ணுக்கு ஒப்பிட்டு வழிந்து,அய்யய்யோ,அநியாயத்துக்கு ஜாலி இந்த காட்சி.
பாபுவுடன் நேரும் கைகலப்பை விலக்க,வீட்டினுள்ளிருந்து பையன் வேஷத்தில் வரும் ராணியை ,போட்டோ பார்த்து அடையாளம் கண்டு ,கட்டு போடும் போது டபாய்ப்பது படு ஸ்வீட்.
டீசிங் சாங் (எஸ்.சி.கிருஷ்ணன்)லீலா லாலி, பூனை கண்ணை மூடி கொண்டால் செம கலாய்ப்பு.
improvisation என்றால் தெரிந்த கொள்ள விரும்பும் ஆட்கள், சிவாஜி-பத்மினி காதல் காட்சியில் சிவாஜி ஒரு மர மட்டையை பறித்து, frisky ஆக காலால் உதைத்து,மட்டையை கையால் உரித்து கொண்டு ,துரு துறுவென்று பண்ணும் இந்த அதகள காதல் காட்சி!! என்னவென்று வர்ணிக்க?
காதலில் ஒருமித்த பின் transister பரிசு காட்சி என்று மகா சுவாரஸ்யம்.
ஒரு இதமான ஜாலி ரைட் இந்த இதமான நகைச்சுவை கலந்த அர்த்தமுள்ள காதல் படம்.
https://www.youtube.com/watch?v=H7xlhIaJFSQ
Aatuvithaal Yaarovar song :
Parthiban S Arumuganeri wrote 2 months ago
1:19ல் ‘என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு...’
‘அனுபவத்தில்’ என்று
சொல்கையில்
வலது இமையில்
தனித்து தருகிறான் பாருங்கள்
ஒரு மின்னல் வெட்டு...
இதனை
செய்து காட்டிவிட்டு
அவனை
மிகை நடிப்பென்று திட்டு
https://www.youtube.com/watch?v=BAVFuEqqV-k
Ar Raja wrote in Youtube:
பாட்டும் நானே பாடல் காட்சி ஒரு மாஸ்டர் பீஸ்..
ஒரு கட்டத்தில் 5 சிவாஜிகள், அடுத்தடுத்து அமர்ந்திருப்பர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இசைக்கருவி.. ஒருவர் மட்டும் கொன்னக்கோல் என்னும் வாய்த்தாளம்.. முதலில் சிவாஜி 'தனி'யாக வீணை வாசிப்பார்.. அவர் முடிக்கும் தருவாயில் அடுத்து மிருதங்க இசையை வழங்கவிருக்கும் சிவாஜி, தன் வாத்தியத்தை வசதியாக அமைத்துக்கொண்டு தயாராவார் பாருங்கள்.. அடடா..! அடுத்து புல்லாங்குழலாரும் எதோ ஒருவகையில் தயாராவார். இறுதியில் கொன்னக்கோலார் என்னக் கோளாறு பண்ணுவாரென ஆவலோடு காத்திருந்தேன். முன்னவர் முடிக்கும்போது, தன் தொண்டையைத் தடவித் தயார்செய்து ஆரம்பித்தார்..! அப்படியே உடல் சிலிர்த்துவிட்டது..!!
சிவாஜி என்ற நடிகர் ஒருவர்தான்.. ஆனாலும் திரையில் 5 வெவ்வேறு கலைஞர்கள் வீற்றிருக்கிறார்கள் என்று நம்மை உணரவைப்பார்..
இதெல்லாம் பார்த்து ரசித்தால்தான் புரியும்.. சிவாஜி ஒரு மஹாகலைஞர்..!
Mohan Srinivasan wrote in You tube :
It is very unfortunate that Shivaji Ganesan did not get the recognition he truly deserved. Undoubtedly the best actor ever lived.
" 4.44 ---Just watch the Konnakkol portion of him getting ready by adjusting his throat when the flute goes for the first round of kalpana swarams".
He was truly amazing and no one can ever match him.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...34d30e1a3b2088
More details to follow
"பா "வரிசை பாடல்கள்.
தலைவரின் படங்களில் இடம் பெற்றவை மட்டும்.
1.பார் மகளே பார்.
2.பார்த்த ஞாபகம் இல்லையோ
3.பாலும் பழமும் கைககளில் ஏந்தி
4.பாவாடை தாவணியில்
5.பார்த்தா பசுமரம்
6.பால் பொங்கும் பருவம்
7.பாலக்காட்டு பக்கத்திலே
8.பாலிருக்கும் பழமிருக்கும்
9.பாலூட்டி வளர்த்த கிளி
10.பாவை யுவராணி
11.பார்த்துப்போ
12.பாசமலரே அன்பில் விளைந்த
13.பாட்டும் நானே
14.பாட்டொன்று கேட்டேன்.
15.பார்த்தால் பசி தீரும்.