-
நடிகர்திலகத்தின் மாய வலையில் பக்தர்கள். நான்காம் முறையாக நான் ntf இல். பார்த்தால் பசி தீரும், ஆலயமணி ,பார் மகளே பார்....இருவர் உள்ளம். சில புது முகங்கள். நல்ல அரட்டை. ராகவேந்திரா சாரிடம் செல்லமான ஒரண்டை. பம்மலார்,முரளியிடம் ஜாலி கலாய்ப்பு.
நல்ல மாலை. நன்றி நண்பர்களே.
-
இது வாசுவின் அருமையான கவிதாஞ்சலி - இப்படிப்பட்ட ஒருவர் இந்த திரியில் இல்லாதது சிலைய அகற்ற சொல்வதற்கு ஒப்பான கொடுமை !!!
இதோ! என்னுள்ளும் விழுந்த க(விதை)
விலையில்லா நடிப்பால்
கலையுள்ளங்களில் நிறைந்தவனே!
நீ இல்லாத திரையுலகம்
அலையில்லாக் கடல் போல் களையிழந்து கிடக்கிறது
நிலையில்லாத இவ்வுலகில் நீங்காத புகழ் பெற்றவனே! உன்
சிலையில்லாத மெரினா சிறகில்லாத சிட்டாகிவிடுமே
மனமில்லா மனிதர்களின் மனிதாபிமானமற்ற மனத்தால்
தலையில்லா தருக்கர்களின் தன்னிச்சை செயல்களால்
நிலவில்லா வானமாகி விடக் கூடாது நித்ய சென்னை
அளவில்லா கனவுகளை சுமந்து ஆசையுடன் எழுதுகின்றேன்
களங்கமில்லா கண்ணியச் சிலை கடற்கரையிலேயே இருக்கட்டும்.
மீறினால்
காலமெல்லாம் களங்கம் கண்ணியத் தமிழ் நாட்டிற்கே!
:thumbsup:
-
டியர் ரவி சார்,
சிலை - திரி comparison மற்றும் தங்கள் கவிதைகள் அருமை. நன்றி.
-
கோபால் - இருவர் உள்ளத்தை இங்கு வெளிபடுதினதர்க்கு மிகவும் நன்றி- இந்த திரியும் அப்படிதான் - எழுதுபவர்கள் எண்ணங்கள் பலவிதம் - ஒவ்வன்றும் ஒருவிதம் - எல்லாமே NTஒருவருக்காகவே - இதில் மட்டம் , தாழ்வு, உயர்வு என்ற பிரிவுகளுக்கு இடமேயில்லை - பாராட்டுவோம் எல்லோரையும் - இதுதான் நான் தனிப்பட்ட முறையில் உங்கள் எல்லோருமிடமிருந்தும் கற்றுகொண்ட பாடம் -
நம்மில் ஒத்துமை ஒன்றுதான் நம் எதிரிகளை வீழ்த்தும் பிரமாஸ்திரம் - உங்கள் நல்ல பதிவுகளுக்காக ஏங்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
-
இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாக பாவித்து பதிவிடுகிறார்கள் என்பது புரியவில்லை. இப்போது ஒருவரை ஒருவர் பாராட்டாமல் இருப்பதாலா அனைவரும் மௌனம் காக்கின்றனர்?. மறைந்த பின்னும் நடிகர்திலகத்துக்கு அதிகார வர்க்கத்தால் இழைக்கப்படும் அவமதிப்பை எண்ணி இப்போதுதான் அனைவரும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த திரி புறக்கணிப்பு.
இலங்கையில் துயரப் படுபவர்களுக்காக இங்கிருப்போர் உண்ணாவிரதம் மேற்கொள்வதில்லையா?. எங்கோ நடக்கும் பிரச்சினைக்காக இங்கிருப்போர் கடையடைப்பு செய்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லையா?. அப்படிப்பட்ட வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த திரி அமைதி. "நடிகர்திலகத்தின் சிலை அவமதிப்பு விவகாரத்தில் நாங்கள் சந்தோஷமாக இல்லை. அதனால் அமைதி காக்கிறோம்" என்ற உணர்வின் வெளிப்பாடு.
சகோதரர் சந்திரசேகர் போன்ற களப்பணியாளர்கள் செயல்பாடுகள் மூலம் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் வேளையில், அப்படி இயலாதவர்கள் இப்படி புறக்கணிப்பின் மூலம் துயரத்தை, மனதின் வலியை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு "பதிவுகளைப் பாராட்டவில்லை" என்பது போன்ற வேறு வர்ணம் பூசாதீர்கள்.
-
-
Quote:
Originally Posted by
Gopal,S.
இருவர் உள்ளம்- 1963
டியர் கோபார் சார்,
வியட்நாமிலிருந்து சென்னை வந்தும், தங்கள் பணியை சென்னையிலும் தொடர்வதற்கு நன்றி.
இருவர் உள்ளம் - விமர்சனம் நம் அனைவரின் உள்ளதையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
-
டியர் ஆதிராம் சார் - வணக்கம் - உங்களுடன் பேசியதில்லை - உரையாடினது இல்லை - உங்கள் இந்த பதிவு மூலம் - உங்களுடன் ஒரு ஆரோக்கியமான உரையாடல் செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததிற்கு மிகவும் நன்றி - முதலில் பதிவிட வேண்டாம் , அது அனாவசியமான பிரச்சனைக்கு வித்திடும் என்று நினைத்தேன் - பிறகு உங்களக்கு தெரியாததில்லை - இருப்பினும் சில விளக்கங்களை தரலாமே என்று யோசித்தேன் - அதன் முடிவுதான் இந்த சின்ன பதிவு - உங்களக்கு தமிழ் வரவில்லை என்று பதிவு செய்திருந்தீர்கள் - சில நாட்களுக்குள் மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள் .
உங்கள் முதல் வினா :
இல்லாத ஒன்றை ஏன் இருப்பதாக பாவித்து பதிவிடுகிறார்கள் என்பது புரியவில்லை.
முதலில் என் பதிவுக்கும் இந்த சிலை விவகாரத்திற்கும் சம்பதம் இல்லை - எவ்வளவு நாட்கள் நாம் திரியை புறங்கனிக்க போகிறோம் ? - ஒரு வாதத்திற்கு என்று வைத்துக்கொள்வோம்- தீர்ப்பு இன்னும் 6 மாதங்கள் இழுத்துசெல்கின்றது என்று வைத்துக்கொள்வோம் - இந்த திரியை மூடி விட போகிறோமா ? இல்லை நம் புறங்கனிப்பை தொடரவேண்டுமா ? இல்லை வேறு இடத்தில , அவர் புகழை பாடாமல் இருக்க போகிறோமா ? இல்லையே !! என் கேள்வி இதுதான் - தீர்ப்பு நல்லபடியாகவே வரும் .நம் எல்லோர் பிராத்தனைகளும் வீண் போகாது . KC சாரின் முயற்சியும் தோல்வி அடையாது . திரியை புறங்கனிப்பது கோர்ட்டில் நம் வாதத்திற்கு உதவியாக இருந்தால் , கண்டிப்பாக நீங்கள் சொல்லவதில் சத்தியம் இருக்கின்றது. தீர்ப்பு வரும் முன் ஏன் இந்த திரி சோர்த்து இருக்கவேண்டும் ? - ஒரு பக்கத்தை நிரப்ப , ஒரு மாதம் ஆகின்றதே !!! -
சற்றே உங்களக்கு நேரம் கிடைத்தால் , பழைய பதிவுகளை பாருங்கள் - ஆரோக்கியமான பதிவுகள் - அருமையான உழைப்புகள் , NT யின் வாரா வாரம் டிவி யில் படங்களின் அறிவிப்பு , பிறந்த நாள் வாழ்த்துக்கள் , NT பற்றிய புதிய நடையில் சிறந்த அலசல்கள் - ஜெட் வேகத்தில் பறந்தோம் - பல புதியவர்கள் வந்து பங்களித்தனர் -அன்றும் பிரச்சன்னைகள் இருந்தன . இன்று , சிலை விவகாரம் என்று சொல்லி , நம்மை நாமே தண்டித்துகொண்டு இருக்கிறோம்
Quote :
இலங்கையில் துயரப் படுபவர்களுக்காக இங்கிருப்போர் உண்ணாவிரதம் மேற்கொள்வதில்லையா?. எங்கோ நடக்கும் பிரச்சினைக்காக இங்கிருப்போர் கடையடைப்பு செய்து எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லையா?. அப்படிப்பட்ட வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த திரி அமைதி. "நடிகர்திலகத்தின் சிலை அவமதிப்பு விவகாரத்தில் நாங்கள் சந்தோஷமாக இல்லை. அதனால் அமைதி காக்கிறோம்" என்ற உணர்வின் வெளிப்பாடு.
Unquote :
இதற்க்கு பதில் சொல்லிவிட்டேன் - எவ்வளவு நாட்கள் இந்த திரி அமைதியாக இருக்க வேண்டும் ? - இப்பொழுது சற்றே மாறுதலாக , கோபால் இருவர் உள்ளம் மீண்டும் பதிவு செய்தார் - திரியின் அமைதி போய்விட்டது என்றே சொல்லலாமா ? திரியின் சோக கானத்தை சற்றே மாற்றியதற்காக அவரை பாராட்டுவதில் தவறரில்லையே
Quote:
சகோதரர் சந்திரசேகர் போன்ற களப்பணியாளர்கள் செயல்பாடுகள் மூலம் தங்கள் எதிர்ப்பைக்காட்டும் வேளையில், அப்படி இயலாதவர்கள் இப்படி புறக்கணிப்பின் மூலம் துயரத்தை, மனதின் வலியை வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு "பதிவுகளைப் பாராட்டவில்லை" என்பது போன்ற வேறு வர்ணம் பூசாதீர்கள்.
Unquote:
எந்த பதிவை நாம் மனமார பாராட்டுகிறோம்? உண்மையில் இந்த மரபு நம்மிடையே குறைந்துகொண்டே வருகின்றது - இன்று நல்ல பதிவாளர்களை இந்த திரி இழந்துகொண்டிருகின்றது என்பதுதான் உண்மை- எனக்கு வர்ணம் பூசும் கலை உண்மையிலேயே தெரியாது சார் - மயான அமைதி வேண்டாமே என்று தானே சொல்கிறேன் - எதிர்ப்பை கண்டிப்பாக தெரிவிப்போம் - அதே சமயத்தில் , எழுத விரும்புவர்கள் எழுதட்டும் - அது வேறு , இது வேறு - முன்பும் பிரச்சனைகளை சந்தித்து உள்ளோம் , இபோழுதும் சந்தித்து கொண்டு இருக்கிறோம் - நாளையும் சந்திப்போம் - ஆணால் நம் NT பக்தி என்றுமே நிலையானது - அது நமக்கு எல்லா வெற்றியும் தரக்கூடியது
உங்களை மறுக்கவேண்டும் என்று இந்த பதிவை போடவில்லை - உங்கள் வார்த்தைகளில் வெப்பம் அதிகமாக உள்ளது என்றும் சொல்லவில்லை - பதிவுகளை பாராட்டுகிறோம் / வர்ணம் புசுகிரீர்கள் என்று சொல்லிருபதினால் , பதில் சொல்ல கடமை பட்டவணாகுகிறேன்.
உங்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தற்கு , மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
-
டியர் ரவி சார்,
தங்களின் மனம் திறந்த பதிவுக்கு முதல் நன்றி.
என் தமிழ்ப் பதிவு பற்றி....... 'தமிழில் டைப் செய்வது எப்படியென்று கற்றுக்கொடுங்கள்' என்று ஒரு நண்பரிடம் வேறொரு தளத்தில் கேட்டபோது மிகச்சுலபமாக டைப் செய்யும் முறையை சொல்லித்தந்தார். என்றாலும் சாதாரணமாக நீங்கள் டைப் செய்யும் நேரத்தைப்போல மூன்று மடங்கு நேரம் ஆகிறது. எழுத்து நடையில் முரளிசார், வாசுசார், கார்த்திக்சார், கோபால்சார் இவர்களையே பின்பற்றுகிறேன்.
அடுத்து முக்கிய பிரச்சினை......, நான் யாரையும் இங்கு பதிவிட வேண்டாம் என்று தடுக்கவில்லை. இங்குள்ள முக்கிய பதிவர்களே அவர்களாக ஒரு முடிவுடன் பதிவிடாமல் மவுனம் காத்து வருகின்றனர். ஒரு தவம் போல அதை தொடர்ந்து வருகின்றனர். அதை வரவேற்கிறேன்.
அடுத்து பதிவுகளுக்கு பாராட்டு......., முந்திய பாகங்களை சென்று பார்க்கும்படி சொல்லியிருந்தீர்கள். நீங்களும் பார்ப்பது நல்லது. ஏனென்றால் அவற்றில் ஒவ்வொருவரின் பதிவுகளையும் மற்ற அனைவரும் எவ்வளவு மனம் விட்டு பாராட்டியிருக்கிறார்கள் என்பதை காணலாம். புதிய பதிவர்களின் மூன்று நான்கு வரி பதிவுகளைக்கூட சீனியர் பதிவர்கள் மனம் விட்டு பாராட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். எனவே பதிவர்கள் மவுனம் காப்பதற்கு, 'பதிவுகளைப் பாராட்டாததே காரணம்' என்று தவறாக பொருள்கொள்ள தேவை இல்லை என்ற கருத்தில்தான் சொல்லியிருந்தேன்.
இதன் பின்னரும் தங்களுக்கு திருப்திப்படாவிட்டால் சொல்லுங்கள். என்னுடைய இந்தப் பதிவையும் இதற்கு முந்திய பதிவையும் நீக்கி விடுகிறேன்.
-
சென்ற வருடம் டிசம்பர் மாதம் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றபோது கர்ணன் திரையிடப்பட்டது. சென்ற வருட விழாவைப் பற்றியும் அதில் கர்ணன் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் தி ஹிந்து தமிழ் பதிப்பில் ஒரு இளம் வயது கட்டுரையாளரின் பதிவு
http://tamil.thehindu.com/cinema/cin...cle5455358.ece
இத்தகவலை தெரிவித்த கிருஷ்ணாஜி அவர்களுக்கு நன்றி!
அன்புடன்