3http://i1065.photobucket.com/albums/...psccyyrug8.jpg
Printable View
https://upload.wikimedia.org/wikiped...a_Krishnan.JPG
இயக்குநர் திலகம் கே.எஸ்.ஜி. மறைவு.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட திரு கே.எஸ்.ஜி. எ கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று இரவு 7.30 மணிக்கு இயற்கை எய்தி விட்டார்.
தினமலர் நாளிதழின் இணையப்பக்கத்திலிருந்து..http://cinema.dinamalar.com/tamil-ne...asses-away.htm
சம்பிரதாயத்திற்காக அல்லாமல், உண்மையிலேயே தமிழ்த்திரையுலகிற்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என பல்துறை வித்தகராயிருந்து கே.எஸ்.ஜி. அவர்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் இடையே இருந்த புரிந்துணர்வு, பீீம்சிங்-நடிகர் திலகம் நட்பிற்கும் புரிந்துணர்விற்கும் சற்றும் குறையாயததல்ல.
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்கள் பலவற்றைத் தந்துள்ளார் கே.எஸ்.ஜி.
அவரது மறைவிற்கு நமது உளமார்ந்த அஞ்சலியை செலுத்திக்கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது மறைவினால் ஏற்பட்டதுயரத்தைத் தாங்கும் வலிவை அவரது குடும்பத்தாருக்கு அளிக்க வேண்டியும் இறைவனை வேண்டிக்கொள்வோம்.
திரு கே.எஸ்.ஜி. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருடைய இயக்கத்தில் / எழுத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களிலிருந்து சில பாடல்கள்.
உத்தம புத்திரன் படத்தில் கே.எஸ்.ஜி. எழுதிய உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே பாடல்..
https://www.youtube.com/watch?v=-luAPt44VL0
கே.எஸ்.ஜி.யின் பேனாவுக்கு உயிர் கொடுத்தவை நடிகர் திலகத்தின் நடிப்பில் வந்த படங்கள். அதிலும் குறிப்பாக படிக்காத மேதை தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தைப்பிடித்ததற்கு நடிகர் திலகத்தின், அந்த வசன உச்சரிப்பு. வெறும் அடுக்கு மொழி வசனங்களே டாமினேட் செய்த காலத்தில் தன் இயல்பான பிரயோகத்தினால் பேச்சு வழக்கு வசனங்களிலும் தன் நடிப்பின் மூலம் ஜீவன் அளித்தவர் நடிகர் திலகம். அந்த வகையில் முடியாது என்ற ஒரு வார்த்தைக்கு எத்தனை விதமான பரிமாணங்களைத் தர முடியும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் காட்டி இப்படத்திற்கு இமாலய அந்தஸ்தைத் தேடித் தந்தவர் நடிகர் திலகம். கே.எஸ்.ஜி. அவர்களும் நடிகர் திலகமும் இணைந்த படங்கள் ரசிகர்களுக்கு தெவிட்டாத விருந்தாய் அமைந்தன.
படிக்காத மேதை படத்தில் ரங்கனை வீட்டை விட்டுப்போ என முதலாளி அனுப்பும் அந்த புகழ் பெற்ற காட்சி இதோ நம் பார்வைக்கு.
https://www.youtube.com/watch?v=gC-Tm6xu0nI
http://i1028.photobucket.com/albums/...psrgz1gudl.jpg
எழுதினாலும், இயக்கினாலும்..
எளிமை என்கிற எல்லோருக்கும் பிரியமான
விஷயத்தை எப்போதும்
தன்னுடனே வைத்திருந்தவர்
அமரர் அய்யா கே.எஸ்.ஜி
அவர்கள்.
"கை கொடுத்த தெய்வத்தை"யும், "பேசும்
தெய்வத்தையும்" தேடித் தேடித்
தரிசித்துக் கொண்டிருந்த
எங்கள் தலைமுறையினருக்கு
"படிக்காத பண்ணையாரைப்"
பரிசளித்த பெருமகனார்.
ராகவேந்திரா சார் குறிப்பிட்டதைப் போல
நம் நடிகர் திலகத்திற்கும்,
அய்யா கே.எஸ்.ஜி அவர்களுக்குமான கனிந்த
நட்பை, அவர்களிருவரும் இணைந்த படங்கள் நமக்குத்
தந்த பரவசங்களே சொல்லும்.
அய்யா கே.எஸ்.ஜி அவர்களை
இழந்து துன்புறும் அத்தனை
உள்ளங்களிலும் இந்த துன்பம்
தாங்குகிற சக்தி படரட்டும்.
தூயவர்களாம் நம் நடிகர் திலகம்- அய்யா கே.எஸ்.ஜி
நட்பு, சொர்க்கத்திலும் தொடரட்டும்.
சவாலே சமாளி முழுப்பதிவு
சவாலே சமாளி முழுப்பதிவு:
ராஜவேலு:
எங்க தலை குனிய வச்சுட்டு நீ எப்பவும் நெஞ்சை நிமித்திட்டு நடப்பியே இப்ப ஏன் குனிஞ்ச தலை நிமிரவே இல்லையே ஏன்?
மாணிக்கம்:
உம் முகத்தை பாக்கவே கண் கூசுது.
ராஜவேலு:கூசத்தாண்டா செய்யும்?எம் முகத்தை மட்டுமல்லஇந்த ஊர் முகத்த பார்க்கவே உனக்கு கண் கூசத்தான் செய்யும். நல்லவனா இருந்தா இந்நேரம் அவமானம் தாங்காம நாக்க புடிங்கிக்கிட்டு செத்துருக்கனும்..
மாணிக்கம்:இதுல என்னடா அவமானம்?இதோ இடுப்புல இருக்கிற கதிர் அரிவாளைஎடுக்கக் கூட சக்தி இல்லாம ஒரு கையாலவயித்தைப் புடிச்சுக்கிட்டு இன்னொரு கையால மானத்தையும் மறைச்சுகிட்டு நின்னுகிட்டுஇருக்கே உன் முன்னாலே பட்டினிக்கூட்டம்,அவங்க வயித்துக்கு சேர வேண்டிய கஞ்சியை உன் சட்டையில் போட்டுகிட்டு விரைச்சுகிட்டு நிக்கிறியே இதுக்கு*
நீ தாண்டா அவமானப்படனும்.உன்னை எல்லாம் இன்னும் விட்டு வச்சுருக்கம்பாரு அதுக்கு நான் மட்டும் இந்த நாடே வெட்கப்படணும்.
ராஜவேலு:இதுக்கு அப்புறமும் உன் திமிறு அடங்கலே பாரு
மாணிக்கம்:இது அடங்கற திமிரு இல்லே அடக்கற திமிறு.
அய்யாக்கண்ணு:ஏண்டா செஞ்சே? எதுக்கு செஞ்சே?
மாணிக்கம்:நான் ஏன் செஞ்சேன்? எதுக்கு செஞ்சேன்னு அவங்கவங்க
மனசுக்குத் தெரியும்.
ராஜவேலு:எங்க மனசுக்கு தெரிஞ்சா பத்தாதுடா?இங்க கூடி இருக்கிற கூட்டத்துக்குநல்லா கேட்கிற மாதிரி சத்தம் போட்டு சொல்லு.
மாணிக்கம்:சொல்றண்டா. சொல்றேன்.
வயலை எரிச்ச பந்தத்தை அணைச்சு வச்சுறுக்கேன்.அத மறுபடியும் கொளுத்தி எடுத்துட்டு வந்துஎன்னை உயிரோடு கொளுத்திடுவேன்னு சொன்ன அத்தனை பயலுகளையும் எரிச்சு சாம்பலாக்கிட்டு அந்த சாம்பல் மேட்டுல நின்னுகிட்டு சத்தம் போட்டு சொல்றண்டா. சத்தம் போட்டு சொல்றேன்.
மாணிக்கம்:சின்ன வயசுல இருந்து என் பையனை நான் தொட்டதே இல்லேன்னுபெருமையா பேசிக்குவீங்களே!உங்க ஆத்திரம் தீரும் வரை அடிங்க. அடிங்க.ஏன்னா என்னை பழி வாங்கணும்ங்கிற வெறி அவங்கள விட உங்களுக்குத்தானே அதிகம்.வாங்க உங்க எஐமான விசுவாசத்த காட்ட நல்ல. சந்தர்ப்பம்.அடிங்க. நல்லா அடிங்க
மாணிக்கத்தின் வார்த்தைகளால் தாக்கப்பட்டு அய்யாக்கண்ணு தடுமாற ,
அதற்குப்பினநடக்கும் சில நிகழ்வுகள் உண்மையைச்சொல்லி சுபமாக்குகிறது.

மேலே சொன்ன காட்சிதான் க்ளைமாக்ஸ் என்றிருந்தாலும்
படத்திலே வரும் பல காட்சிகள் அதைவிட பிரமாதமாக அமைந்திருக்கும்.
நடிகர்திலகம் வரும் முதல்காட்சி வசனங்களேஏகஅமர்க்கள
மாயிருக்கும்.வேட்டி*
சட்டை யில்ரெண்டு மாட்டையும் பிடித்துக்கொண்டு அவர் அறிமுகமாகும் காட்சி அருமையிலும் அருமை.இந்த ஒரு போட்டோ சொல்லுமே அதன் அழகை.

அடக்கமா கேட்டா மரியாதையா பதில் வரும்.இகழ்ச்சியா கேட்டா
அதுக்கேத்தமாதிரி பதில். மேல கைய வைச்சா பதிலுக்கு பதில்.எல்லாருக்கும் வேலைக்கேத்த கூலி கிடைக்கணும்.ஏழையோ,
பணக்காரனோ மனுஷனுக்குண்டான மதிப்பு குடுக்கணும். இதுதான் மாணிக்கம் கேரக்டர்.
அதிரடி அறிமுகம்:
வயலில் வேற்று ஆட்களை வைத்து*
வேலை வாங்க நம்பியார் முன்னே வர
"வயலில் காலை வைத்தால் காலை ஒடைச்சுருவேன்"னு சத்தம் மட்டும் வரும்.யார்ராராதுன்னு எல்லோரும் பார்க்க, நெற்கதிர்களின் பின்னே இருந்து வந்து நடிகர்திலகம் காட்சி தரும் காட்சி கண் கொள்ளா காட்சி.
முதலில் தொழிலாளர்களுக்கு பரிஞ்சு*
பணிவாய் விவாதம் செய்ய அதற்கு நம்பியார் "உங்கப்பன் கொடுப்பான்"
மரியாதை குறைவாய் பேச ஆரம்பிக்க,சட்டென்று பணிவு மறைந்து பதில் மரியாதைக்கு தாவி,
பதிலுக்கு பதில் வசனங்களலால்*
அந்த அறிமுக காட்சி முழுவதும் கலகலப்பாக செல்லும்.கதிர் அறுப்பது.,கதிர் அடிப்பது என்று அவர் டக் டக்குன்னு இயல்பாக வயலில் இறங்கி வேலை செய்யும் நடிப்பு அசல் கிராமத்து விவசாயியை விட அழகு+எதார்த்தம்.
நடிகர்திலகம் வரும் அடுத்த காட்சி:
காந்திமதி, நடிகர்திலகம் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் காட்சி.எவ்வளவு இயல்பாக இருக்கும்.
விஜயகுமாரி எங்கே என்று விசாரிக்க ,
முத்துராமனை பார்க்க சென்றிருப்பதாக காந்திமதி சொல்ல நொடியில் சடாரென்று கோபப்படுவதும்,விஜயகுமாரி வந்தபின்பு விசாரிக்கையில் ஆத்திரப் படுவதும் பின்*
ஆதங்கப்படுவதுமாய் மாறி மாறி உணர்ச்சி வசப்படுவதுமாயும்,தடங்கலின்றி பெய்யும் மழையாய் வசனங்கள்
பொழிந்து மழை நின்றது போல் சற்று ஆசுவாசப்பட மீண்டும் வி எஸ் ராகவன் வர அதே மழை தொடர, என்று காட்சிகள் ஜிவ்வென்று சுறுசுறுப்பாய் செல்லும்.பெரிய ஆக்ஷன் படங்களில் கூட சில சமயங்களில் நடிகர்திலகத்தின் குடும்பபடங்களில் வரும் இது போன்ற விறுவிறுப்பு சுவாராஸ்யங்களை
காண முடியாது.
தந்தைக்கும் மகனுக்கும்*
அபிப்பிராய பேதம் ஏற்பட்டு இருவரும் நான் சாப்பிடமாட்டேன் என்று வீட்டின் வெளி யில் திண்ணையில் வந்து எதிரும் புதிருமாக அமர்ந்து கொள்கின்றனர்.காந்திமதியும் ,விஜயகுமாரியும் சமாதானப்படுத்த அவர்களுக்காக இருவரும்*
"சரி வந்து தொலைக்கிறேன் "
என்று இருவரும் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
இந்தக்காட்சியை பார்த்தோமானால்*
நடிகர்திலகத்திடம் இருந்து எந்தவித கதாநாயகத்தன்மை(ஹீரோயிசம்)
வெளிப்படாமல் ஒரு கிராமத்து இளைஞனின் தன்மானத்தையும்
குடும்பபாசமும் ,தந்தையின் அறியாமையை எதிர்த்தாலும் அதே சமயம் அவருடைய ஸ்தானத்திற்கு மதிப்பு அளிக்கும் கண்ணியம் கொண்டவராகவும்சின்ன சின்ன ஊசிமுனை உணர்ச்சிகளைக்கூட படு இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
சரி வந்து தொலைக்கிறேன் என்று இருவரும் வீராப்பாக குடிசைக்குள் நுழையும் சமயம்*
வேகமாக வேட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லப்போகும்*
நடிகர்திலகம் ராகவனும் அதே போல் வர,அவர் முன்னே செல்லட்டும் என்பதற்காக தந்தைக்கு தரும் மரியாதையாக சற்று பின்வாங்கி உடலை சாய்த்து ஒரு வித உடல் பம்மலில் தன் நடிப்பை இயல்பாக எப்படி அழகாக வெளிப்படுத்துகிறார்.
(ராகவன்:துரை கொஞ்சம் எந்திரிங்க
நடிகர்திலகம்:ஏண்டா எந்த அளவுக்கு குடிச்சிருக்கேன்னு பார்க்கிறதுக்கா?
(ராகவன் மாலையை எடுத்து சிவாஜியின் கழுத்தில் போட்டுவிட்டு)
ராகவன்:இன்னைக்கு உங்களுக்கு பொறந்தநாள்.
நடிகர்திலகம்:ராமையா நான் பொறந்திருக்கிறது ஏன்னு யாருக்கும் தெரியாது?.ஏன் எனக்கே தெரியாது?ஆனா நீ பொறந்திருக்கிறது மட்டும் எனக்காகத்தான்.
சவாலே சமாளியைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் மனத்திரையில் இந்தக்காட்சி வந்து இடிக்கிறது.என்ன செய்ய?*
பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும் என்பது போல் திறமைமிக்க கலைஞர்களாக இருந்தாலும் சிறந்த கலைஞனோடு
சேரும்போதுதானே அவர்களின்
பங்களிப்பு பளீரிடுகிறது.இங்கேதான் நிற்கிறார் வி.எஸ். ராகவன்.பூவோடு சேர்ந்த நார்.
இரண்டு படத்திலுமே அதே வேலைக்கார வேடம்.காஸ்டியூம்ஸ் கூட
அதே போலத்தான்.ஆனால் இரண்டிலும் என்ன ஒரு மாறுபாடான நடிப்பு.ஒன்றில் நடிகர்திலகம் எது செய்தாலும் விட்டுக்கொடுக்கும் கேரக்டர்.ஒன்றில் எது சொன்னாலும் எதிர்ப்பை காட்டும் கேரக்டர்.
உணர்ச்சி மிக்க காட்சிகள்.
ரசனையை உயர்த்தும் நடிப்புகள்.
எல்லாம் நடிகர்திலகத்தால் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த நற்பலன்கள்.புகழ்.சிறப்பு.
இந்த வரிகள் ராகவனை மட்டும் வைத்தல்ல., பெரும்பான்மையான கலைஞர்களின் அனுபவங்களையும் வைத்துதான்.)
ஒன்று
தங்களுடைய பெரிய வீட்டின் அருகிலேயே இருக்கும் மாணிக்கத்தின் குடிசை தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதுவது.
இரண்டு
மாணிக்கத்தின் பேச்சு செயல்
இரண்டும் தங்களை அவமதிப்பதாக கருதுவது.
இந்த இரண்டுக்கும் தீர்வு காண சின்னப்பண்ணை சிங்காரத்திடம் யோசனை கேட்க,அய்யாக்கண்ணு பட்ட கடனுக்காக மாணிக்கத்தை பண்ணையில் வேலை செய்ய வைத்து*
முரட்டுக்காளைக்கு மூக்கணாங்கயிறு*
கட்டலாம் என்று சின்னப்பண்ணை யோசனை கூற அதன்படியே அய்யாக்கண்ணுவை வலியுறுத்த.,அய்யாக்கண்ணுவும் வேறு வழி தெரியாமல் மாணிக்கத்தை பண்ணைவேலைக்கு வருமாறு கூறுகிறார்.
வேலைக்கு செல்லும் காட்சி:
முதலாளி என்ற திமிரில் நம்பியார்
'என்னடா மாணிக்கம்'
என்று ஒருமையில் கேட்பார்.பதிலுக்கு நடிகர்திலகம் 'என்னடா ராஜவேலு' என கேட்க,
பதிலடியால் திகைக்கும் நம்பியார்
கிண்டலும் மரியாதையும் கலந்து
"மகாராஜ ராஜ ராஜ ஸ்ரீமாணிக்காம் அவர்கள் தங்களுடைய வேலையை கவனிக்க செல்லுங்கள்"
என்று கூற
"ஆகட்டுங்க"
என்று உடனே அதே சுதியில் பதில்சொல்வது செம ரகளை.
பண்ணையில் மரத்தை வெட்டி சாய்ப்பார் .நம்பியார் வந்து 'ஒரு மரம் வெட்ட இவ்வளவு நேரமா?'என்று கேட்க அதற்கு நடிகர்திலகம் கொடுக்கும் ரீயாக்ஷன் அபாரம்.ஒன்றும் பேச மாட்டார்.அப்படியே நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்து பார்வையால் ஒரு வீசு வீசுவார்.என்ன ஒரு ஸ்டைலப்பா !*
மரம் வெட்டும்போது
நடிகர்திலகமும் ராகவனும் தேக்கி வைத்த அன்பை மாறி மாறி பாசமழையாய் பொழிவது நல்ல நெகிழ்ச்சியான காட்சி.
சீன் பை சீன் உயிரோட்டமாய் செல்லும்.
ஊரிலிருந்து வரும் ஜெயலலிதாவை வண்டியில் கூட்டி வரும் காட்சி.
ஜெயலலிதா வண்டியில் முன்பக்கம் தள்ளி உட்காரச்சொல்லிவிட்டு
வண்டி முன்பாரம் ஜாஸ்தி என்றும்
பின்பக்கம் தள்ளி உட்காரச் சொல்லிவிட்டு பின்பாரம் ஜாஸ்தி என கூறுவதும் வேடிக்கையான சீன்.
பெட்டி சேற்றில் விழ அதற்காக நடிகர்திலகத்தை கேவலப்படுத்தும் சொற்களலால் வசைபாட பெண்னென்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் கோபம் தலைதூக்க கோபத்தை அந்த சாட்டைவாரை ஒடித்து வீசுவதிலே காட்டுவார்.தன்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த நடிப்பு.
அடுத்த காட்சியில்...
தந்தை ராகவனுடன் கிணற்றருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் தன்னுடைய துணிகளை துவைத்து போடுமாறு ஜெயா துணிகளை நடிகர்திலத்தின் முகத்தில் விட்டெறிய...
சில நிமிடங்களுக்கு முன்புதான்
' நீ நல்லவங்ககிட்டத்தான் நேருக்கு மாறா நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட கூட மரியாதையா நடக்கத்தெரியாதா ' ராகவன் நடிகர்திலகத்தை பார்த்து கேட்பார்.
அதற்கு நடிகர்திலகம் 'மரியாதை ரெண்டு பக்கமும் இருக்க வேண்டாமா'
என்று முடிப்பதற்குள்ளாகவே ஜெயா வந்து மூஞ்சியில் துணிகளை வீசுவார்.
நடிகர்திலகம் அமைதியா திரும்பி ராகவனைப் பார்க்க ,
என்னடா இது நம்ம பையன தப்புன்னு கண்டிக்கப்போனா இது அதுக்கு மேல*
தப்பா இருக்கேங்கிற மனநிலையில் முகத்தை திருப்பிக்குவார் ராகவன்.
ஒரு பொம்பள இப்படி சொல்லிட்டாளேங்கற ஆத்திரம் ஒரு பக்கம்.,பணக்கார திமிரை ஏத்துக்காத தன்மான குணமும் உசுப்பஅப்பா இருக்கிறத ஒரு நிமிஷம் யோசிக்கிற மனசு பின் அடக்கமாட்டாம கேப்பாரைய்யா ஒரு கேள்வி.
' நீ என் பொண்டாட்டியாஉன் சேலை துவைச்சு போட'ன்னு சொல்வது
சரியான ஆத்திர வெடி.அதைக் கேட்டு ஜெயா அவமானத்தில் ஓவென்று கதறி சிணுங்கஅதையே பாவனையில் ஜெயா போல் நடிகர்திலகமும் செய்து காட்டுவது வேடிக்கை.
உழவர் கூட்டம் அனுபவிப்பதில்லை அறுவடையின் பலனை.ஆனாலும் விவசாய பூமி அவர்களுக்கு தெய்வம் போலே.அதனால்தான் செருப்பணிந்து நடப்பதில்லை வயலில்.பலனை அனுபவிக்கும் பணக்கார வர்க்கமோ அந்த பழக்கத்திற்கு நேர்எதிர். ஏற்கெனவே படித்த திமிறும் பணக்கார திமிறும் சகுந்தலாவுக்கும் அதிகம்.
மாணிக்கமும் நடவுப் பெண்களும் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வரப்பில்செருப்பணிந்து நடந்து வரும் சகுந்தலா மாணிக்கத்திடம் ஒதுங்கி நிற்குமாறு கூற மாணிக்கம் மறுக்க வீம்பு கொண்ட சகுந்தலா வயல் சேற்றில் நடந்து காலெல்லாம் சேறாக சென்று சேர்வதோ மாணிக்கத்தின் வீட்டிற்கு.
சகுந்தலாவைப் பார்த்த மாணிக்கத்தின் தங்கையும் அம்மாவும்
குடிக்க மோர் தர, அருவெறுப்புடன் குடிகேகத் தயங்கி அவர்கள் பாரா வண்ணம் மோரை வீட்டிற்கு வெளியில் வீசி விடுகிறாள்.அப்போது அது யாருக்கும் தெரியாது.
மாணிக்கத்தைத் தவிர.மாணிக்கத்திற்கு மட்டும் எப்படி தெரியும்?வீசி எறியப்பட்ட மோர் வந்தடைந்த இடம்
"மாணிக்கத்தின் முகம்".
வெளியில் வரும் சகுந்தலாவிற்கு சிறிது அதிர்ச்சி.இவங்களுக்கெல்லாம் தண்ணீரே தரக்கூடாது என்று கதையின் நாயகனாகிய மாணிக்கம் சொல்ல அதற்கு மாணிக்கத்தின் தாய் 'அப்படியெல்லாம் சொல்லாதப்பா
நான் கொடுத்த மோரை முகம் சுளிக்காம குடிச்சதப்பா'
என்று சொல்ல,
திரும்பி நிற்கும் மாணிக்கமாக நடித்த நடிகர்திலகம் திரும்பி நிற்க ஆச்சர்யத்துடன' என்னடா இது' அம்மாவாக நடித்த காந்திமதி கேட்க "பால் வடியற முகம்,பால் வடியற முகம்னு சொல்லுவியேஇது மோர் வடியற முகம் "ன்னு நடிகர்திலகம் சொல்வது பொருத்தமான டைமிங் காமெடி .
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
முத்தாய்ப்பாக காமெடிசென்ஸ்,சென்டிமென்ட்,
பலமான வசனங்கள் என ஏதாவது ஒன்றைக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருப்பதுஇந்தப்படத்தின் சிறப்பு. இந்த மாதிரி திரைக்கதைஅமைந்திருப்பதால் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் மேலும் ரசிக்க வைக்கும். காலம் தாண்டியும் நிற்கும்
இங்கே ஒரு பாடல்:
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
சேனை பரிவாரத்துடன் சீமான் போல்
வாழ்ந்தவனும் எவனுமில்லை
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
(கோட் சூட் அணிந்து இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்ப சக்கரம் சுற்றுதடா*
அதில் நான் சக்கரவர்த்தியடா
என்று பாடி போஸ் தந்தாலும்,
வேட்டி, சாதாரண சட்டை அணிந்து,
சேனை பரிவாரங்களுடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனுமில்லே
என்று பாடி போஸ் தந்தாலும்.
அந்தப் போஸ்கள்தான் காலா காலத்துக்கும்.)
தெரிஞ்சுக்கோ (ஆனை)
பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆணையிட்டுச் சொல்லுறேன் நான் அதுலே
உங்க பணத் திமிரை அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும் வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய கூசுகின்ற
கோழைங்கதான் குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து
இந்த வரிகளின் போது தான் கீழ்க்கண்ட படங்கள்
எடுத்திருக்க வேண்டும்

Shooting spot still
ஒசந்திடும் கோபுரமா கோபுரமா கோபுரமா அந்த
கோபுரத்து சாமியெல்லாம் குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
மாணிக்கமும் அவருடைய கூட்டமும் சேர்ந்து பாடும் பாடலால் சகுந்தலா*
கோபமடைந்து செல்கிறாள்.பின்னே நாயை பிடித்துக்கொண்டு வரும் மாணிக்கம் நாயை அழைப்பது போல் சகுந்தலாவை கேலி செய்கிறான்.இது தவறென்றாலும் அது ஒரு சிறிய பழி தீர்த்தல் கணக்கு. முன்பொருமுறை அதே செயல் சகுந்தலாவால் நடத்தப்பட்டு மாணிக்கம் இழிவு படுத்தப்பட்டிருப்பார்.எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் ஆத்திரம் தான் அது.திமிர் பிடித்த அதுவும் ஒரு பெண் எனும் போது அந்தக் கோபம் சந்தர்ப்பம் தேடி அலையும்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமைந்த நிகழ்ச்சிதான் இப்போது நடைபெறுவது.தன்னை நாய் என்னும் அர்த்தத்தில் கிண்டல் செய்தது அவளுக்கு கோபத்தை உண்டாக்கி*
விடுகிறது.அதனால் மாணிக்கத்தை கேவலமாக திட்ட ,அதற்கு மாணிக்கமும் பதிலடி கொடுக்கும்படி ஆகிறது.சகுந்தலாவின் அண்ணன் ராஜவேலுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.பண்ணையாரின்
வீட்டுக்கு செல்லும்மாணிக்கம் ராஜவேலுவால் தாக்கப்படுகிறார்.ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கும் கோபம் எரிமலையாய் வெடிக்க ராஜவேலுவை பொளந்து கட்டுகிறார் மாணிக்கம்.பண்ணையாரும்,
அய்யாக்கண்ணுவும் வந்து சண்டையை விலக்கி விடுகின்றனர்.சண்டையில் மாணிக்கம் வெறித்தாண்டவம் ஆடி விடுகிறார்.
மாணிக்கத்தின் வீடு:
மாணிக்கத்தின் தாய் அந்த சண்டையை நினைத்து வருத்தப்பட சகோதரி காவேரி அண்ணனுக்கு ஆதரவாய் பேசுகிறாள்.
(பாசமலர் படத்தில் ஜெமினிகணேசன் வந்து வேலையை விட்டு நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடிகர்திலகத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,ஜெமினிசொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு துளி கோபமாய் நடிகர்திலகத்தின்*
மனதுக்குள் சென்று அந்தக் கோபம்
கையில் கத்தி வைத்து பென்சிலை சீவி சீவி அந்தக் கோபத்தை ஒவ்வொரு சீவலிலும் வெளிப்படுத்திநடிப்பின் ராஜ முத்திரையை காட்டியது நடிகர்திலகம் உலகறிந்தது.அதே போல் இங்கு
அந்த வாழைத்தார் தண்டைசீவிக்கொண்டே வந்து கடைசியில் வெட்டி போட்டு தன் ஆத்திரத்தைக் காண்பிப்பார் நடிகர்திலகம்.)
ராஜவேலுவும் சகுந்தலாவும் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.
சின்னப்பண்ணைசிங்காரம் நிர்ப்பந்தத்தின் காரணமாக பெரிய பண்ணையார் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரு மனதாக சம்மதிக்கிறார். அவருக்கு போட்டியிட முழு விருப்பம் இல்லை.காரணம் தான் ஜெயிக்கமாட்டோம் என்ற எண்ணமும், ஊர் மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம்.சின்னப்பண்ணை ஊர் மக்களைக் கூட்டி ஆதரவு தருமாறு கேட்கிறார்.பெரும்பான்மையாக ஊர் மக்களும் ஆதரவு தருவதாக இசைகின்றனர்.அதே சமயம் ஊர் மக்கள் எவரும் தனக்கெதிராக எதிர்த்து நிற்கக்கூடாது எனக் கூற மாணிக்கம் தான் எதிர்த்து நிற்பேன் என்க,பெரிய பண்ணை சஞ்சலமடைய சின்னப்பண்ணை மறுபடியும் ஊர்மக்களின் ஆதரவைக்காட்டி பண்ணையாரை போட்டியிட சம்மதிக்கவைக்கிறார்.அப்போது பெரியபண்ணையார் தான்ஜெயித்தால் இந்த ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று மாணிக்கத்திற்கு சவால் விடுகிறார்.மாணிக்கமும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இப்பொழுது ஒரு கேள்வி? மாணிக்கம் ஜெயிச்சா?*
அதை மாணிக்கமே கேட்டு விடுகிறார்.நான் ஜெயிச்சா பதிலுக்கு பண்ணையார் என்ன செய்வார்?பணம் கொடுப்பதாகச் சொல்லப்பட,இது சரியான சவால் போல் இல்லையே என்று மாணிக்கம் சொல்ல,அதற்கு சின்னப்பண்ணை வேறு ஏதோ ஏதோ சொல்லி கடைசியில்'அவர் மகளையா கட்டி வைக்க முடியும்?"என்று குத்தலாக கேட்க,அதையே மாணிக்கமும் சரியான பிடிப்பாக எடுத்துக் கொண்டு.,"இதுதான்யா
சரியான சவாலு"எனச் சொல்ல,
இந்த சவாலை பெரியபண்ணையார் ஏற்க மறுக்க.,சின்னப்பண்ணை ஒரு வழியாய் பெரிய பண்ணையாரை சம்மதிக்க வைத்து விடுகிறார்.இருவருக்குமான சவால் ஒப்பந்தமாக எழுதப்படுகிறது.
மாணிக்கத்தின் முன் நிற்கும் பெரிய சவால் இது.மாணிக்கம் என்ன செய்யப்போகிறார்?
எத்தனையோ தேர்தல் காட்சிகள் தமிழ் சினிமாவில்காட்டப்பட்டிருக்கின்றன.ஆனால் இப்படத்தில் வருவது போல்,தேர்தலுக்கு முன்னும், ,தேர்தலுக்கு பின்னும் வரும் காட்சிகள் போன்று விறுவிறுப்பைத்தரும் காட்சிகள் வேறு எதிலும் இல்லை.கையில் தாலியுடன் ,அதை சுழற்றிக்கொண்டே*
வாக்கு சாவடியை சுற்றி சுற்றிநடிகர்திலகம் அங்குமிங்கும் நடை போடுவது ரகளையான சீன்.
மாணிக்கம் வெற்றி பெற்றதாக வேலையாள் ஓடிவந்து சின்னப்பண்ணையிடம் கூற,அது அவருக்கு அதிர்ச்சியடையாமல் ஆனந்தக்கூத்தாடுகிறார்.மாணிக்கம் ஜெயிக்க வைத்ததே நான்தான் என்று பேச திரைக்குப்பின்னால் சகுனி ஆட்டம் அவர் ஆடியிருப்பது புலனாகிறது.
(சின்னப்பண்ணை சிங்காரமாக நாகேஷ்:
தருமி,வைத்தி,வரிசையில் சின்னப்பண்ணையையும் சேர்க்கலாம்.
டயலாக் டெலிவரியை டைமிங்காக வெளிப்படுத்துவதில் நாகேஷ் கில்லாடி.அது எந்த சீனாக இருந்தாலும்.நாகேஷின் சிறந்த படங்களில் நடிகர்திலகத்துடன் இணைந்த படங்களே அதிகமிருக்கும்.
பத்திரத்தை வைத்து நான்என்ன செய்யப்போகிறேன் என்று டி.கே.பகவதி கேட்க,நாகேஷ் கையை ஓங்கியவாறு"பெரிய பண்ணையாச்சேன்னு பார்க்கிறேன்,இல்லேன்னா பொளேர்னு அறைஞ்சிடுவேன்"ன்னு சொல்லும் சீனிலும்சரி, பகவதியை தேர்தலில் நிற்க வைக்க அவர் முயற்சி செய்யும் காட்சியிலும் சரி நாகேஷின்*
பங்கு பாராட்டுதலுக்குரியது.)
அந்த தேர்தல் வெற்றி ஊர்வலகாட்சி அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கும்.
நடிகர்திலகத்தை தோளில் உட்கார வைத்து தூக்கிக்கொண்டு வரும் வரவேற்புக்காட்சி ஏக அமர்க்களம்.,
ஆட்டம் பாட்டம்,தாரை தப்பட்டை,கரகாட்டம்,புலிவேஷம்
என்று கிராமியகலைகள் எல்லாம் சேர்ந்து கூத்து கட்டும்.பகவதியை கொம்பைக்காட்டி மிரட்டும் ஷாட் பிரமாதம்.
படையப்பா படத்தில் கடைசி காட்சியில் வரிசையாக நிற்கும் மக்கள் கூட்டத்தை காட்டுவார்கள். காமிரா
வளைந்துநெளிந்து சுற்றிக்காட்டும் ஷாட்டாக இடம் பெற்றிருக்கும்.இந்த மாதிரியான காட்சி சவாலே சமாளிபடத்தில் இந்த இடத்தில் இடம்பெற்றிருக்கும். அது போன்ற ஷாட்தான் பில்டப்புடன் படையப்பாவில் காட்டப்படுகிறது..சவாலே சமாளியில் உண்மையாக இருப்பது போல் இருக்கும் .நடிகர்திலகம் மட்டுமல்ல அவரின் திரைப்பட காட்சிகளும் கூட*
மற்ற திரைப்படங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது என்பதையல்லவா இது காட்டுகிறது.


காரில் சகுந்தலாவை வெளியூருக்கே திருப்பி அனுப்பபெரிய பண்ணை முயற்சிக்கிறார்.வெற்றி பவனி வந்து கொண்டிருக்கும் மாணக்கத்தின் தோழர்கள் அதைப் பார்த்துகாரை தடுத்து நிறுத்தி பெரியபண்ணையின்
வீட்டுக்கேதள்ளிக்கொண்டு வந்து விடுகின்றனர்.
அங்கேயே பஞ்சாயத்து நடக்கிறது.
எல்லா பணக்காரக்குடும்பங்களும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நியாயம்தான் பண்ணையாரின் வீட்டிலும் இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஊர் விடுமா?
ராஜவேலுவும் வந்து பண்ணையாரை விமர்சிக்க, துக்கம் தாளாமல்பண்ணைக்கு நெஞ்சை அடைக்கபதறும் மனைவி தாலியைக்காட்டி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
"
(இந்தக் காட்சியில்ஊரார் முன்னிலையில் நம்பியார் நடிகர்திலகத்தைஅடிக்க கை ஓங்க,
"உனக்கு ரெண்டு கைதான். எனக்கு பின்னால் பார் எத்தனை கையென்று"
என்று சொல்லும் வசனம் கூட படையப்பாவில் 'இந்த தனி மனுஷனுக்கு பின்னால் பாருங்க.எத்தனை பேர்னு தெரியும் என்று வரும்)
மாணிக்கம் சகுந்தலா திருமணம் கிராம மக்களலால் எளிமையாக நடத்தி வைக்கப்பட்டது.
படிப்பும் பணக்காரத்திமிறும் கொண்ட சகுந்தலா,ஏழ்மை வர்க்கத்தைச் சேர்ந்த மாணிக்கத்தை ஏற்றுக்கொள்வாளா?
மாணிக்கம் சகுந்தலாவின்
திருமணம் முடிந்த அன்றைய நாள் இரவு.
மாணிக்கம் பேசுவது:
முன்பின் தெரியாம நாம ஒருத்தரையொருத்தர் சந்திச்சப்போ,அந்த ஒரு நிமிஷத்திலேயேஎன் மனச உங்கிட்ட பறி கொடுத்திட்டேன்.ஆனா அடுத்த நிமிஷமே உன் பணத்திமிராலே என்னை அவமானப்படுத்திட்டே.உன் திமிரை அடக்கனும்கறதுக்காக ஏழைக்கே உரிய ஆத்திரத்தில்,நானும் சரிக்கு சமமா பதிலுக்கு அவமானப்படுத்திட்டேன்.நாம ரெண்டு பேரும் புருஷன் மனைவி ஆவோமான்னு நினைச்சு பார்த்திருப்போமா?உன் மனசுக்கு புடிச்ச வாழ்க்கை உனக்கு கிடைக்காம இருக்கலாம்.ஆனா கிடைச்ச வாழ்க்கைக்கு தகுந்தாப்போலே உன் மனச மாத்திக்கிறதுதான் உனக்கு நல்லது.இந்தப்புது இடம்,புது உறவு, புது வாழ்க்கை உனக்கு புடிக்காம இருக்கலாம். ஏன் அறுவெறுப்பாக்கூட இருக்கலாம்.என்ன உனக்கு புடிக்கல்லனாக் கூட உன்ன எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.குறிப்பா உன் பிடிவாதகுணம் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு.ஏன் தெரியுமா?
(அவ கிட்ட எனக்கு புடிச்சதே அந்த அகம்பாவம்தான்—
"இது வசந்தமாளிகை"
இதுக்கு விழாத கைதட்டா,விசிலா)
நானும் ஒரு பிடிவாதக்காரன்தான்.நம்ம கல்யாணம் இருக்கே அதுதான்
"டிபிகல் சோசியலிசம்".நம்ம ரெண்டு பேரும் ரெண்டு வர்க்கம்.இந்த ரெண்டு வர்க்கமும் பக்குவப்பட்டு ஒண்ணா சேர்ந்தா அதுதான் உண்மையான சோசியலிசம்.அதுக்குத்தான் தலைவர்கள் எல்லாம் பாடுபடறாங்க.நான் உன்ன வெறுக்கல.உன் ஆணவம்,பகட்டு,பணக்காரதிமிறு இதத்தான் வெறுக்கிறேன்.என்கிட்ட ஏழ்மை,வறுமைசூழ்நிலை இதெல்லாம் இருக்கலாம்.அது நாயம்.ஆனா அதுக்காக என்னை ஏன் வெறுக்கற.?புரியல இல்ல. உனக்கு, என்ன , உங்க வர்க்கத்துக்கே புரியாது. ஏன் எங்கள வெறுக்கறோம்கறதே தெரியாம பாரம்பர்யமா அது உங்க ரத்தத்துலயேவிஷமா ஊறிப்போச்சு.
நான் ஒரு முட்டாள் உன்னை நிக்க வச்சே பேசிட்டு இருக்கறம்பாரு.
நீயும் பேசுவ .ஆனா பேசக்கூடாதுன்னு இருக்கற.இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் பெண்கள் ரொம்ப வெட்கப்படுவாங்கன்னு சொல்வாங்க.நீயும் வெட்கப்படுறே. எப்படின்னா,அய்யோ எனக்கு இப்படி ஒரு நிலமை ஏற்பட்டுப்போச்சேன்னு.
பரவாயில்ல.நீ படிச்ச பொண்ணு. நானும் உன் அளவுக்கு படிச்சவன்தான். எப்படின்னு கேட்கறியா?"ஆயிரம் புஸ்தகத்தை படிச்சவன விடஆயிரம் வயலை உழுதவன் அறிவாளி" ன்னு பெரியவங்க சொல்வாங்க.
(அடடா.என்ன ஒரு வார்த்தை மழை. அவர் பேசறத கேட்க கேட்கத்தான் எத்தனை ஆனந்தம்.)
பேசிக்கொண்டே போய் மனைவி என்ற உரிமையில் சகுந்தலாவை தொடப்போக,

"தொடாதீங்ங்ஙக"
சகுந்தலாவின் ஆவேசக் கத்தத்தலில் மாணிக்கம் அதிர்ச்சியில் நிற்க,
"நீங்க ரோசமுள்ள ஆம்பளயாயிருந்தா என் உரிமையில்லாம என்னைத் தொடக்கூடாது "-
இது சகுந்தலா.
"நான் உன்ன தொட்டு தாலிகட்டின புருஷன்.உன்ன இப்ப நான் என்ன வேணாலும்செய்யலாம்.அதுக்கு எனக்கு உரிமையிருக்கு.என்னைக்கு நீ உண்மையா என்னை கணவனா ஏத்துக்கிறியோ அன்னைக்குத்தான் உன்னை நான் தொடுவேன்.இது என் அம்மா மேல ஆணை"-
இது மாணிக்கம்.
நாகரீகம் மனிதனை உயர வைத்தது.அதே நாகரிகம் மனிதர்களை தாழ்த்தவும் வைக்கிறது.நடந்து போனது சாஸ்திர சடங்கல்ல.அது நிர்ப்பந்தத்தால் நடந்த சம்பிரதாயம்.
...ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.
பசி பொறுக்க மாட்டாமல் இரவில் யாருக்கும் தெரியாமல்பழைய சாதம் உண்ணும்படியான நிலைமை,அதை மாணிக்கம் பார்த்து கிண்டல் செய்வது,துணிகளை துவைத்து போடுமாறு மாணிக்கம் சொல்வது.,இது போன்ற நடத்தல்கள் சகுந்தலாவை அவள் வீட்டிற்கு ஓட வைக்கிறது. அவளின் அம்மா சொல்லும் சொற்கள் சகுந்தலாவை மாணிக்கத்திடமே திருப்பி அனுப்புகிறது.
இஷ்டப்படாத திருமணம் ஒரு பக்கம் நடந்திருந்தாலும்,மாணிக்கம் தன் குடும்பத்திற்கேற்றவாறு சகுந்தலாவை மாற்ற செயல்படுத்தும் சில கட்டுப்பாடுகள் சகுந்தலாவை நோக வைக்கின்றன.அது அவளை வேதனைப்படுத்தி ,இறந்துவிடலாம் என்று கிணற்றில் குதிக்க முயற்சிக்கும் போது,மாணிக்கம் வந்து தடுத்து விடுகிறார்.
என்னை ஏன் சித்ரவதை செய்கிறீர்கள் நான் இறந்து விடுகிறேன் என்று சகுந்தலா கூற,நீ இறந்து விட்டால் பழி என் மீதல்லவா வரும் எனவே கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு நீ நிம்மதியாக இரு என்று கிணற்றின் மேல் நின்று கொள்கிறார்.
பின்பக்கம் இருந்து தள்ள கைகளை கொண்டு வரும் சகுந்தலா தள்ளிவிட எத்தனிக்கையில்,
மனமா?
அது*
மாறுமா?
யோசிக்கிறது மனம்.
சிந்தை தடுமாற பின் வாங்குகிறது கரங்கள்.
சகுந்தலாவின் மனம் தோற்றது.
தமிழ்ப்பண்பாடு வென்றது.
இந்த இடத்தில் மாணிக்கம் கூறும் வார்த்தைகள் கல்லையும் கரைக்கும்.சகுந்தலா என்ன இருந்தாலும் பெண்தானே.சற்றே கரைவது போல் தெரிகிறது.
மாணிக்கத்தின் சொற்கள் சகுந்தலாவிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது அவள் விழிகள் காட்டுகின்றன.
இவ்விடத்தில் சகுந்தலாவை தேடி வரும் காவேரியை ராஜவேலு மானபங்கப்படுத்தி விடுகிறான்.ஆவேசமடைந்த காவேரி*
ராஜவேலுவின் வயலுக்கு "தீ"வைத்து விடுகிறாள்.அதை மாணிக்கம் பார்த்துவிடுகிறார்.காவேரியிடம் காரணம் கேட்க நடந்ததை கூறுகிறாள்.தீ பரவுவதை பார்த்து ஊர் மக்களுடன் அய்யாக்கண்ணுவும் சேர்ந்து வருவதைப்பார்த்ததும் மாணிக்கம் காவேரியின் கைகளில் இருந்து தீப்பந்தத்தை வாங்கி காவேரியை தப்பிக்க வைக்கிறார். தீப்பந்தத்துடன் மாணிக்கம் வருவதைப் பார்த்து ஊர்மக்கள் மாணிக்கம்தான் தீ வைத்தது என்று முடிவு செய்து பண்ணையாரின் வீட்டிற்கு பிடித்துச் செல்கின்றனர்.
அங்கே விசாரணை ஆரம்பிக்கிறது.
(சவாலே சமாளி முதல்பதிவு)ஆரம்பத்தில் குறிப்பிட்ட காட்சி இங்கேதான் அரங்கேற்றமாகிறது.
சாட்டையடியால் ரணமாகி,வலிகளுடன் கட்டிலில் படுத்திருக்கும் மாணிக்கத்தை பார்த்து கண்ணீர் விடுவதோடு,அவருடைய காலிலும் விழுந்து அழுகிறாள்.மாணிக்கத்தை தொட்டு தாய் மேல் இட்ட ஆணையை வாபஸ் வாங்க சொல்லுகிறாள்.
அப்புறம்,"
கேட்டுக்கோடி உறுமிமேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்.
வ ண க் க ம்.
நடிகர்திலகத்தின் நடிப்பை விவரிக்க வேண்டுமென்றால் பிரேம் பை பிரேம் எழுத வேண்டி வரும்.அதற்கு பொருத்தமான வார்த்தைகள் தேடினால் பொழுதும் போதாது.
ஆரம்பகாட்சியில் பணிவுக்கு பணிவு,பதிலுக்கு பதில் அளிக்கும் அந்தபாந்தமான நடிப்பைச் சொல்வதா?
விஜயகுமாரியை கண்டிக்கும் போது கூட, காட்டும் கண்ணியத்தை சொல்வதா?
மரம் வெட்டும் போது ராகவனிடத்தில்*
மறைத்து வைத்த பாசத்தை இயல்பாக வெளிப்படுத்துவதைச் சொல்வதா?
நாகேஷ் ஆடும் சகுனியாட்டத்தில்
பகவதியிடம் சவால் போடும் வித்தையைச் சொல்வதா?
அம்மாவாக வரும் காந்திமதியிடம் அவர் காட்டும் அந்நியோன்யமான அன்பைச் சொல்வதா?
தேர்தல்களத்தில் மஞ்சள் தாலியை கையில் வைத்து மதர்ப்பானநடை காட்டும் அந்த நடிப்பைச் சொல்வதா?
நம்பியாரை பொளந்து கட்டும் சண்டையில் அந்த ஆவேச நடிப்பைச் சொல்வதா?
தொடாதீர்கள் என்று சொல்லும் ஜெயாவிடம் காட்டும் அந்த ஆண்மையின் கம்பீரத்தைச் சொல்வதா?
தற்கொலைக்கு முயற்சிக்கும் ஜெயாவிடம் பேசும் அந்த சொற்பொழிவைச் சொல்வதா?
எதைச் சொல்வது?
எதை விடுவது?