-
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=2813
இளையராஜாவுடன் எப்படி நட்பு ஏற்பட்டது? "திருவாசக' சிம்பொனித் திட்டம் எப்படி உருவானது? அதில் ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைதானா?
""ஒரு கோடி ரூபாய் என்பது தவறான தகவல். எழுபத்தியிரண்டு லட்ச ரூபாய் கடனாளி ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த அற்புதமான முயற்சிக்கு முன்னால் கடன் எனக்கு சுமை யாகத் தெரியவில்லை. நான் 2002-ல் சென்னை வந்து "தமிழ் மையம்' தொடங்கிய பிறகு, இளையராஜா அவர்கள் நல்ல தொரு இசை முயற்சி செய்ய விரும்புகிறார் என்ற தகவல் தற்செயலாக எனக்குக் கிடைக்க, உடனே அவரைச் சந்தித்தேன். சிம்பொனியில் "திருவாசகம்' திட்டத்தைத் தொடங்கினோம். என்னை இளையராஜாவிடம் அழைத்துச் சென்றவர்கள், எனது வெளிநாட்டுத் தொடர்புகளை எல்லாம் நன்கு அறிந்தவர்கள். நிதி திரட்டுவது எளிதாக இருக்கும் என்பதனால், என்னை அவரிடம் அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் ஈழத் தமிழ் மக்களோடு எனக்கிருந்த உறவை, இந்த இசைத் திட்டத் தோடு நான் தொடர்பு படுத்த விரும்பவில்லை. எளிதாக இருக்கும் என்று தொடங்கிய அந்தப் பணி, பெரும் சுமையாக மாறிவிட்டது. மொத்தம் ஒன்றரை கோடி ரூபாய் திரட்ட வேண்டிய கட்டாயம். ஆனால் நன்கொடைகள் மூலம் பதினைந்து லட்சம்தான் திரட்ட முடிந்தது. வேறு வழியில்லாமல் கன்னாபின்னாவென்று வட்டிக்கு கடன் வாங்கி அந்தத் திட்டத்தை முடித்தேன். தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பதால் இவற்றை சரி செய்துவிடலாம் என்று நம்பி னேன். இதையெல்லாம் அந்த நேரத்தில் நான் சொல்லவில்லை. ஏனென்றால் அந்தப் படைப்பு ஒரு அற்புதமான படைப்பாக வெளிவந்தது. இன்னொரு காரணம் "திருவாசகம்' ஒரு புனிதமான பக்தி நூல். அதை நான் கறைபடுத்த விரும்பவில்லை.''
"திருவாசக' சிம்பொனிக்கு வரவேற்பு எப்படியிருந்தது? திருவாசக சிம்பொனி சிம்பொ னியே அல்ல; அது தேவாலயங் களில் வாசிக்கப்படும் ஆரட் டோரியா என்ற விமர்சனங் கள் வந்ததே?
""திருவாசகத்துக்குப் பெரு வாரியான மக்களிடமிருந்து வரவேற்பு குவிந்தது. என்னைப் பொறுத்தவரை அதுதான் முக்கியம் என்று கருதுகிறேன். எப்போதுமே ஒரு நல்ல முயற்சி யில் இறங்குகிறபோது அடிப் படைவாதிகளிடமிருந்து விமர் சனம் வரும். ஒரு கத்தோலிக்க பாதிரியார் எதற்காக இவ்வளவு பெரும் பணத்தை, ஒரு இந்து "திருவாசக'த்துக்குக் கொட்ட வேண்டும் என்று கிறிஸ்துவ அடிப்படைவாதிகளிடமிருந்து விமர்சனம் வந்தது. இந்து அடிப் படைவாதிகளுக்கோ சமரச சன்மார்க்கம் என்பது சுட்டுப் போட்டாலும் வராது. ஒரு பகைமை இருந்தால்தான் நாம் பிழைப்பு நடத்த முடியும் என்று அஜண்டா வைத்திருப்பவர்கள். எனவே அவர்களிடமிருந்தும் "இதைச் செய்வதற்கு நீ யார்?' என்கிற ரீதியில் எதிர்ப்புகள் வந்தன. யாரும் எதற்கும் உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து. மேலும் நாம் சரியாக இருக்கும்போது, யார் நம் சட்டையைப் பிடித்துக் கேட்க முடியும் என்ற கர்வம் எப்போதும் எனக்கு உண்டு. எனவே திருவாசக சிம்பொனி, சிம்பொனி அல்ல என்பதையெல்லாம் நான் காதில் போட்டுக் கொள்ளவோ கண்டுகொள்ளவோ இல்லை. காரணம், உலகில் இரண்டு விஷயங்களை மட்டும்தான் வரையறுத்துக் கட்டுப்படுத்த முடியாது. ஒன்று கடவுள்; மற் றொன்று இசை. இசைக்கென்று பல்வேறு வடிவங்கள் இருக் கின்றன. நாங்கள் முயன்றது சிம்பொனி ஆரட்டோரியா என்ற புதிய வடிவம். இதில் சிம்பொனித் தன்மையும் உண்டு; ஆரட்டோரியா தன்மையும் உண்டு. இந்த இணைதல் மிக மேன்மையாக நிகழ்ந்தது. இதில் யாரை ஏமாற்றினோம் அல்லது ஏமாற்ற வேண்டிய தேவைகள் என்ன? இசைக்கு எந்த பங்களிப் பும் செய்யாமல் விளம்பரம் தேட நினைக்கிற கும்பலின் புலம்பல்களை நாம் பொருட் படுத்தத் தேவையில்லை.''
-
-
-
http://www.ilaiyaraaja.in/ilaiyaraaja/home.html
Ilaiyaraaja's new website by Agi music. It is currently under construction. Has a article on Ilaiyaraaja by Sir John Scott. :bluejump:
-
-
Just look at his claim that he only managed to collect 15 lakhs from fund raising....that is less than S$50,000. NRIs from all over the world were raising fund in big way and he now claims that he only got 15 lakhs??? Something is really fishy...
and just look at the tone of using the word "naam", as if he had such a big role in the actual music content itself!!!...full of crab!!!
-
Yeah, I suppose HUB contribution-E might have been greater than 15 Lakhs. Very very fishy.
-
-
The saddest part of all this news is that such a magnificent album is being caught in between. Well now Agi Music are rereleasing them. Lets hope when thalaivar wants to do a instrumental album again he has someone not that cunning to help him.
-
raja_fan, st thomas-thiruvalluvar padam edukkaradhO, thiruvasagam vechu evangelise pandradhO, sattapadi kutram illai. Imathabadiyum blood pressure egirra vishayam illai. t should be fine. But money swindle paNNi irundha, now thats a punishable crime.
Movie paarthu tamizhnaattu makkaL ellaam ThiruvaLLuvar= St Thomas Sishyan-nu nenaippanganu solradhu is insulting to tamizhnattu makkaL. In the end, you will believe what you want to believe. And he who believes Thomas is Valluvar's guru will believe that irrespective of the film.