A song from film Thaai.
http://www.youtube.com/watch?v=f5L1JrDz4lo
Printable View
A song from film Thaai.
http://www.youtube.com/watch?v=f5L1JrDz4lo
நேற்று என் மகன் (9 வயது) பள்ளியிலிருந்து(சிங்கையில்) வந்த பின்னர் நடந்த உரையாடல்..
"அப்பா .. எங்க தமிழ் வகுப்புல இன்னிக்கு மூவி போட்டாங்க ..என்ன மூவி தெரியுமா ?"
"என்ன மூவிப்பா "
"கர்ணன்"
"வாவ் ..முழுப்படமுமா "
"கொஞ்சம் கொஞ்சமா போடுவாங்க .. இன்னிக்கு கிளைமாக்ஸ் ..இன்னிக்கும் நான் அழுதுட்டேன் .தியேட்டர்ல அழுத மாதிரி " (சிரிக்கிறான்)
"ஹா ஹா .. ஏன் கர்ணன் படம் போட்டாங்க ?"
"அதுல தான் அந்த தமிழ் வசனம் மெஜஸ்டிக்கா .. சிவாஜி கணேசன் பேசுறது .. நாங்க கத்துக்கணுமில்ல"
"அதானே "
"அப்பா ..ஏன் கடைசியில (உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் டியூனை சொல்லி) பாட்டுக்கப்புறம் கர்ணன் Blood -ஐ எடுத்து அந்த வயசானவன் கிட்ட கொடுக்குறார்"
அதற்கு நான் நீண்ட விளக்கம் கொடுக்க .. மகாபாரதம் பற்றி சிறிது நேரம் கேள்வி - பதில் விளக்கம் நீடிக்கிறது.
One more song from film Thaai
http://www.youtube.com/watch?v=c3H56RHybQM
நீங்கள் ஆர்வம் கொண்டு விஷயங்களை துருவி வாங்கியிருந்தாலும் அதில் உண்மைகள் அல்லவா இருக்க வேண்டும். உங்களுக்கு பொய்யான தகவல்கள் அளிக்கும் அந்த சிலர் மக்கள் திலகத்திடம் எந்தவித ஆதாயமும் கிடைக்காதாதல் தங்களிடம் அவரைபற்றிய எதிர் மறையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்றே கருத முடியும்.
அன்புள்ள ஜோ அவர்களே
பதிவின் ஆரம்பத்தில் சாந்தாராம் அவர்களுக்கும் , மற்றொன்றில் வீயார் அவர்களுக்கும் நன்றி சொல்லி உள்ளேன்.
மேலும் பல செய்திகளில் இருந்து நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டும் தனியே பிரித்து நான் இங்கு தந்துள்ளேன்.
எனவே சுட்டியை அப்படியே கொடுக்க வில்லை. தங்கள் கருத்துக்கு நன்றி.
வழிதோன்றல்கள் , துதி பாடிகள் தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதாயம் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே நேர் மறையான கருத்துக்களை சொல்லும் உலகினில் நான் உள்ளோம்...
அப்படி என்றால் நேர் மறையான கருத்துகள் சொல்பவர்கள் ஏதாவது ஆதாயம் கிடைக்கும் என்று எண்ணியே போலியாக நடிக்கிறார்கள். தற்போது சமூகத்தில் நிகழும் நிறைய நிகழ்வுகளில் அதை நாம் கண் கூடாக பார்க்கலாம்.
இப்படி எந்த சுயநல ஆதாயமும் எதிர் பாராமல் இருக்கும் ரசிகர் கூட்டம் ஒன்று உண்டு என்றால் அது நடிகர் திலகத்துக்கு மட்டும் தான்..ஆண்டுகள் பல கடந்தாலும் இன்னமும் நம்மை நடிப்பால் வசம் செய்த அந்த ஒப்பில்லா நடிகனுக்கு விசுவாசிகள் உலகெங்கும் வியாபித்திருப்பது ஆச்சரியம் இல்லையே...
கோபால்,
நான்தான் உங்களிடம் சொன்னேனே, எந்த வாக்குவாதமும் வேண்டாமென்று? நண்பர் RKS அவர்களிடமும் அதைதான் எப்போதும் சொல்கிறேன். காரணம் அதனால் எந்தப் பலனுமில்லை.
நண்பர் கலைவேந்தன் நமது ஹப்பில் உறுப்பினராக நுழைந்ததே ஒரு நோக்கத்தோடுதான். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் assignment என்பது அனைத்து பதிவுகளிலும் சிவாஜியை அல்லது அவர் ரசிகர்களை தாக்குவது அல்லது கிண்டல் செய்வது. மேலும் சிவாஜியை யாரேனும் [கலை, அரசியல் எந்த தளத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம்] பாராட்டினால் பாராட்டியவர் முன்னொரு காலத்தில் அல்லது பிற்காலத்தில் எம்ஜிஆர் ரசிகராக இருந்தார் என்று நிறுவுவது. இதனால் என்ன லாபம் என்று கேட்க கூடாது.
உதாரணமாக உ.சு.வா புத்தர் கோவில் சண்டைக் காட்சி பற்றிய பதிவில் சம்மந்தமில்லாமல் திருச்சி சிவா பற்றி குறிப்பு வரும். திருச்சியில் எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தார், எம்ஜிஆர் மாதிரி இறுக்கமாக ஜிப்பா அணிவார், வலது கையில் வாட்ச் கட்டுவார் என்றெல்லாம் இருக்கும்.. நல்ல வேளை இவரும் எம்ஜிஆர் மாதிரி வலது கையில்தான் சாப்பிடுவார் என்று சொல்லாமல் விட்டாரே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியதுதான். காரணம் என்ன தெரியுமா நீயா நானா நிகழ்ச்சியில் சிவா, நடிகர் திலகத்தைப் பாராட்டி பேசி விட்டார். அதை சிலாகித்து ஜோ போன்றவர்கள் நடிகர் திலகம் திரியில் எழுதியும் விட்டார்கள். எப்படி விட முடியும்?
அது போன்றே சம்மந்தமில்லாமல் பல்லாண்டு வாழ்க பற்றிய பதிவில் சிவாஜி [என்று பெயர் சொல்லாமல்] சாதி பெயரை சொல்லிக் கூப்பிடுவார் என்று எழுதுவார். அதே பதிவில் நீதிக்கு தலை வணங்கு படத்தில் வரும் காட்சி பற்றி குறிப்பிடுவார், தியாகம் படத்தை மறைமுகமாக தாக்குகிறாராம். எஸ்எஸ்ஆர் அவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற உண்மையை பதிவு செய்தால் பிடிக்காது. எம்ஜிஆர்தான் மேலவை உறுப்பினரான (எம்எல்சி) முதல் நடிகர் என்பார். சிவாஜி மீது காழ்புணர்ச்சி இல்லை என்பார். ஆனால் சிவாஜியை ஒரு x y z நடிகர்களோடு சேர்த்துதான் நல்ல நடிகர் என்பார். ராஜ ராஜ சோழன் சென்னை ராம் தியேட்டரில் வெளியாகி 28 நாட்கள்தான் ஓடியது என்பார். அது அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பதை நாம் ஆணித்தரமாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்தாலும் தவறான தகவலை தந்து விட்டேன் என்று ஒப்புக் கொள்ளும் அடிப்படை கண்ணியம் கூட இருக்காது. ஆனால் நமக்கு கண்ணியம் பற்றி கிளாஸ் எடுப்பார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். So, அவர்கள் agenda-வில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இதை தவிர அவர்களுக்கு external pressure வேறு. நினைவிருக்கும் என நம்புகிறேன். காதல் வாகனம் படத்திற்கு 5/10 மார்க் போட்டு விட்டு வினோத் பட்ட பாடு!
இது தவிர வேறொரு வித technique-ம் கடைப்பிடிக்கப்படும். குறிப்பிட்ட படம் இவர்கள் குறிப்பிடும் அத்தனை நாட்கள் ஓடவில்லை என்பது அவர்களுக்கே தெரியும். ஆனாலும் அதை தொடர்ந்து எழுதுவார்கள். அலிபாபா சென்னை சித்ரா, பிரபாத் சரஸ்வதி அரங்குகளில் [மதுரை வீரன் அதே அரங்குகளில் வெளியாகி விட்டதால்] 100 நாட்கள் ஓடவில்லை. ஆனாலும் 100 நாட்கள் என்றே எழுதுவார்கள் இதை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். அது போன்றே மதுரையில் நம் நாடு 21 வாரம் என்றே எழுதுவார்கள். உண்மையில் ஓடிய நாட்கள் 133. அப்படியென்றால் 19 வாரம். இதை பற்றி வேறொரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒன்றை சுட்டிக் காட்டினார். எப்போதும் 21 வாரம் என்றே குறிப்பிடுவார்கள். 147 நாட்கள் என்று எழுத மாட்டார்கள் என்றார். காரணம் நாட்களை சொன்னால் யாரவது கேள்வி கேட்டு விடுவார்கள். ஆகவேதான் வாரம் என்று குறிப்பிடுவார்கள் என்றார். ஓடியிருந்தால் சரி ஆனால் அத்தனை நாட்கள் ஓடவில்லையே என்று நான் கேட்க அத்தனை நாட்கள் ஓடவில்லை என்பது நம்மைப் போன்ற சிலருக்கு மட்டும்தானே தெரியும். என்றார் நண்பர். ஏன் இப்படி என்ற கேள்விக்கு நண்பர் காரணம் சொன்னார். சிவந்த மண் சென்னை குளோப் தியேட்டரில் அதிகபட்சமாக 145 நாட்கள் ஓடியது. அதைவிட இது அதிகம் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நுண்ணரசியல்தான் என்றார். அவர் மேலும் சொன்னார். இதற்கு மேலும் உங்களைப் போன்ற மதுரைக்காரர்கள் அழுத்திக் கேட்டால் அதே மதுரை மீனாட்சியில் ஒளி விளக்கு 147 நாட்கள் ஓடியது [21 வாரம்] அதனால் வந்த confusion என்று சொல்லி விடுவார்கள் என்றார்.
பணக்கார குடும்பம் 100-வது நாள் விளம்பரத்தில் கோவை சேலம் நகரங்களில் ஷிப்டிங் அரங்குகளில் ஓடியதையும் சேர்த்து கொடுத்திருப்பார்கள். அதை வைத்து 7 அரங்குகள் என்பார்கள். ஏன் தெரியுமா 1964-ல் நமது கை கொடுத்த தெய்வமும் நவராத்திரியும் 6 அரங்குகளில் 100 நாட்கள் ஓடின. அதை விட அதிகம் என்று நிறுவ இப்படி பதிவு வரும். விளம்பரத்தை பார்க்கும்போது இது ரிலீஸ் தியேட்டர் இது ஷிப்டிங் தியேட்டர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதுவும் 50 வருடங்களுக்கு முந்தைய விளம்பரத்தை பார்க்கும்போது? இப்படி ஒவ்வொரு பதிவின் பின்னாலும் உள்ள நுண்ணரசியலை சொல்லிக் கொண்டே போனால் அதற்கே பல பக்கங்கள் ஒதுக்க வேண்டி வரும்.
இதை இப்போது இத்தனை விளக்கமாக சொல்லக் காரணம் இனிமேலாவது நீங்களும் சரி நண்பர் RKS அவர்களும் சரி இதைப் பற்றியெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் செய்யாமல் விட்டு விடுங்கள் என்று சொல்லத்தான். நீங்கள் இந்த திரியில் தொடரும்வரை நடிகர் திலகம் பற்றி மட்டுமே பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
செல்வகுமார் சார்,
உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. இப்போது பதிவிட்டது போல் காலையிலும் நீங்களே பதிவிட்டிருக்கலாம். யுகேஷ் பாபுவின் பெயரில் வந்த பதிவு உங்களுடையது என்பது படிக்கும் போதே புரிகிறது. இளைய சகோதரர் யுகேஷ் எப்படி பதிவிடுவார் நீங்கள் எப்படி பதிவிடுவீர்கள் என்பது ரெகுலராக இரு திரிகளையும் படிப்பவர்களுக்கு தெரியும். சரி பரவாயில்லை.
நண்பர் கோபால் எழுப்பிய கேள்விகள் அவற்றுக்கு உங்கள் பதில்கள் இவற்றுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். 1970-ல் வெளிநாடுகளில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு அதற்காக செலவழிக்கப்பட்ட அந்நிய செலாவணி குறித்து அமலாக்ப் பிரிவு [enforecement wing] ஒரு விசாரணை நடத்தியதும் அதை அடிப்படையாக வைத்து எப்படி எம்ஜிஆர் அவர்கள் திமுகவிலிருந்து வெளியேற வைக்கப்பட்டார் என்பது பற்றியும் raw அல்லது IB பிரிவில் தலைவராக இருந்தவர் [அவர் பெயர் நினைவில் இல்லை] 1988- 89 காலகட்டத்தில் விகடன் குழுமத்திலிருந்து வெளி வந்துக்கொண்டிருந்த ஜூனியர் போஸ்ட் இதழில் தன அனுபவங்களை தொடராக எழுதும் வேளையில் குறிப்பிட்டிருக்கிறார். நீங்களும் படித்திருக்க கூடும். ஆனால் ஒப்புக் கொள்ள உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆகவே கோபால் சொன்ன விஷயங்கள் hearsay மட்டுமல்ல, பத்திரிக்கையில் வெளிவந்ததும் கூட.
நீங்கள் அதை பொய் செய்தி என்று சொன்னதனால் இதை குறிப்பிட நேர்ந்தது. மேலும் எம்ஜிஆர் அவர்களின் திரியில் கோபாலின் பதிவிற்கு நீங்கள் பதிலுரைக்கும்போது எச்சரிக்கிறேன் போன்ற வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தியிருப்பது சரிதானா? வருங்கால சமுதாயத்திற்கு பாடம் சொல்லி தரும் ஆசிரியராக பணிபுரியும் உங்களைப் போன்றவர்கள் இது போன்ற மிரட்டல் தொனி வார்த்தைகளை பயன்படுத்துவது வருத்தத்துக்குரியது. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
அன்புடன்
நம் நாடு திரைப்படத்தின் வெளியீட்டு நாளான 7-ம் தேதி, மக்கள் திலகம் திரியில் அப்படம் பற்றிய ஆவணங்களை (இன்னும் இரண்டு படங்களுக்கும் சேர்த்து) பதித்திருந்தனர். அனைத்தும் நன்றாக இருந்தன.
அதில் வேலூர் நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் வேலூர் & திருச்சி ரசிகர்மன்ற நோட்டீஸ்கள் இரண்டை பதிவிட்டிருந்தார். முன் ஜாக்கிரதையாக 'பார்வைக்கு மட்டும் விவாதத்துக்கு அல்ல' என்றும் தலைப்பிட்டிருந்தார்.
அவற்றில் வேலூர் ரசிக நண்பர்கள் வெளியிட்டிருந்த நோட்டீஸில் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டிருந்தனர். நம்நாடு படத்துக்கு முன்வந்த அடிமைப்பெண் சாதனைகளைக் குறிப்பிடும் வண்ணம் இரண்டு விஷயங்களை சொல்லியிருந்தனர். அவை
'சென்னையில் நான்கு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய ஒரே வண்ணப்படம்'
'தூத்துக்குடியில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம்'
என்பவையே.
ஆனால் அவ்விரண்டு சாதனைகளையும் அதிக நாட்கள் அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
அடிமைப்பெண்ணின் பின்னாடியே வந்த 'சிவந்த மண்' இவ்விரண்டு சாதனைகளையுமே முறியடித்தது.
(இந்தப்பதிவும் சும்மா தகவலுக்குத்தான், விவாதத்துக்கு அல்ல)
இந்த பாட்டு ஒன்றே போதும் ஆயிரம் கேள்விகளுக்கு விடை கூற.
http://youtu.be/-oD7J1WRwVU
தயவு செய்து எல்லோரையும் ஒரே தராசில் எடை போட வேண்டாம். தமிழ் நாட்டில் அனைவரும் ஒருவர் புண்ணியத்தில் மட்டும் வாழவில்லை. நானோ ,என் உறவினர்களோ, போதும் ,போதும் சொல்லும் அளவு பொருள் ,நியாயமான வழிகளிலே, எங்கள் படிப்பு,அறிவு,திறமையினால் கிடைத்தே வந்தது.
இதையே வேறு விதமாகவும் சொல்லலாமே. ஆதாயம் கிடைத்தவர்கள் மட்டுமே, மிகையாக புகழ்ந்து பயன் பெற்றார்கள் என்று.
நடிக்கும் போது கைதட்டல் வாங்கலாம்.நடையின் போது கைதட்டல் வாங்கலாம். ஒரு போஸ் கொடுத்து கைதட்டல் வாங்கும் ஒரே நடிகன் உலகத்திலே உன்று என்றால் அது கலை கடவுள் நடிகர் திலகம் மட்டும் தான். உதாரணம் புதிய பறவை படத்தில் வரும் சிட்டு குருவி முத்தம் என்ற பாட்டில் ஒரு புல் சூட் கோட் போட்டு கொண்டு
அமர்க்களமாக சிறு குன்றின் மேல் நிற்கும் அந்த
அற்புதமான போஸே தான்.
எந்த கல்நெஞ்சத்தையும் தன்னுடைய நடிப்பால்
கரையவித்த ஒரே உலக நடிகன் நடிகர் திலகம்
மட்டும் தான். உதாரணம் படிக்காத மேதை படத்தில் வரும் அந்த உணர்ச்சிமிகு காட்சியான
கண்ணாம்பாvai விதவை கோலத்தில் பார்க்கும் அந்த கட்சி ஒன்றே போதும் நடிகர் திலகத்தை நாம் ஏன் கலை கடவுள் என்று கூறுகிறோம். இந்த காட்சியை பார்க்கும் அனைவரையும் அழ
வைக்கும் ஒரே உலக நடிகன் நடிகர்திலகம் மட்டும் தான்.
என் உள்ளம் கவர்ந்த கண்ணன்
-------------------------------------------------
இந்த பெயரில் எனக்கு தெரிந்த படத்தில் இருந்து எனக்கு பிடித்த கன்னணனை பற்றி சில
வரிகள் கூற விருப்ப படுகின்றேன்.
தெய்வமகன் கண்ணன்
-------------------------------------
நடிப்பில் நம்மை ஆட்கொண்ட அற்புத கண்ணன்.
கௌரவம் கண்ணன்
---------------------------------
பாரிஸ்terin விஸ்வருபம் முன்பு அடக்கி வாசித்த கண்ணன்.
எனக்கு பிடித்த அழகிய என் தம்பி கண்ணன்
---------------------------------------------------------------------
முதல் காட்சியில் இருந்து தொடங்கி முடிவு வரை தன் அற்புத நடிப்பில், அழகிய வடிவத்தில்
நிஜமாகவே பிரம்ம்ஹா நண்பர் கோபால் கூறுவது போல் ஒரு திராவிட மன்மதன் ஆக
படைத்து சில நாட்கள் அல்லது வருடங்கள் எடுத்து நடிகர் திலகத்தை படைத்தது விட்டார்.
அதுவும் எந்த படத்தில் எல்லா காட்சிகளிலும்
தூள் கிளப்பி விட்டார் நம் நடிகர் திலகம்.
ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கும் ஸ்டைல் போஸே என்ன அந்த வாள் போஸ் enna ஆகா இவரல்லவோ பிறவி நடிகன் மற்றவரெல்லாம் ?
பேபி ரோஜாரமனியிடம் காட்டும் பாசமாகட்டும்
தம்பி விஸ்வதிடம் கட்டும் அதட்டல் கலந்த
நடிப்பாகட்டும் தம்பியிடம் தோற்பது போல் நடித்து பின்பு பாடம் புகட்டும் போதும் ஒரே அதகளம் தான்.
நாகேஷிடம் தெரிய வேண்டிய விஷயங்களை தெரிந்து கொண்டு பின் அந்த வீட்டில் அடி வைக்கும் நடிகர் திலகத்தின் போஸே காண கண் கோடி வேண்டும்.
இந்த ஒரு காட்சிக்காகve எனக்கு இந்த கண்ணனை பிடிக்கும்.
சில வாக்கு வாதங்களால் தேவையற்ற செய்திகளையும் தேவையற்ற பதிவுகளையும் படிக்க பிடிக்காத விவரங்களையும் படங்களையும் இந்த கண்கள் பார்க்க விரும்பவில்லை. சிவாஜி என்ற அற்புத கலைஞனுக்காக தொடங்கப்பட்ட திரியில் தரம் குறையும் அளவுக்கு
பதிவுகள் வராமல் இருக்க வீண் விவாதம் தவிர்க்கப்பட வேண்டும்.
இல்லையேல் சிவாஜி என்ற உலகப்புகழ் தமிழனின் செய்திகள் மட்டும் வரும் வரை திரியை பார்க்க விரும்பாத என்னைப்போன்ற பல ரசிகர்கள்
I WAS ABOUT TO SAY THAT !!!! YOU STOLE MY WORDS GOPAL SIR !!
இது சர்வ சாதாரணமாக காலம் காலமாக நடப்பது தான் !
என்ன நடிகர் திலகம் அவர்கள் இதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைத்து REACT செய்யாமல் தொடர்ந்து தொழிலில் கவனம் செலுத்தியதால்...அடுத்தவர் எத்தனை நூற்றாண்டு ஆனாலும், இவரை பார்த்து இவரது திரை உலக சாதனையை பார்த்து காலம் காலமாக பொருமுகின்ற அளவிற்கு உச்சத்தில் நின்றார், நிற்கிறார், நிர்ப்பார் .
நமக்கு ஆதாரத்துடன் கிடைக்கும் உண்மை நிகழ்வுகள் பதிவிட்டால் எப்போதுமே ஒரு சிலர் பொய் என்று கூறுவார்கள்...ஆனால் அதே ஒரு சிலர்....ஆதாரமே இல்லாமால் வாயால் அவர்கள் கூறினார்கள் ...இவர்கள் கூறினார்கள் ....உலகம் கூறுகிறது.....அப்படி இப்படி என்று கூறுவதை நாம் "ஹரிச்சந்திரன் கூற்று" போல அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும் !!!
1967 முன்பு வரை தமிழ்நாட்டில்அனைத்து மக்களும் பிச்சை காரர்களாக இருந்ததும் இல்லை.....
1967 உக்கு பிறகு இன்று வரை யாரும் குபேரர்களாகவும் மாறிவிடவில்லை என்பதை ஒரு சிலர் உணரவேண்டும் !
எதுவாகினும், நான் சில விஷயங்களை படித்து பதில் பதிவிடவேண்டும் என்றிருந்தேன்...நீங்களே அதில் ஒன்றை எழுதிவிடீர்கள்...! Thanks !!!
RKS !!
பார்த்ததில் பிடித்தது - 47
முக்தா ஸ்ரீனிவாசன் மற்றும் நடிகர் திலகம் combination ல் வந்த வெற்றி படம் .1978 வருடத்தை வெற்றியுடன் தொடங்கினார் என்றே சொல்லலாம் , இன்னும் சொல்லப்போனால் அண்ணன் ஒரு கோவில் என்ற வெற்றி படத்தை தொடர்ந்து வந்த வெற்றி படம் இது . வழக்கமான முக்தா ஸ்ரீநிவாசன் படம் போல் இல்லாமல் , அதாவது கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு எந்த வித நோயும் இல்லை , மாறாக ஒரு வித்தியாசமான குடும்ப கதையை கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்
தன் காதலிக்கு உடம்பு சரி இல்லாமல் போக , மருத்துவரை அழைக்க போகிறார் பிரபு (சிவாஜி ) அவரை அவமான படுத்தி விடுகிறார் மருத்துவர் , கோபத்தில் மருத்துவரை தாக்க , மருத்துவர் இறந்து விட்டதாக நினைத்து சென்னைக்கு தப்பி ஓடி விடுகிறார்
காலம் சுழல மீண்டும் அந்தமானுக்கு வருகிறார் பிரபு , தன் வளர்ப்பு மகள் ஒரு சிற்பியை காதலிக்க , அந்த சிற்பி அவர் மகன் என்று அறிந்து கொள்ளுகிறார் , சிற்பியும் (அவர் மாமாவும்) தன் தந்தையை கண்டுபிடித்து தண்டனை கொடுத்து விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லுகிறார்
தன் மனைவியும் தேடி கண்டுபிடிக்கிறார் பிரபு , அவரிடம் தன் கணவர் யார் என்று தன் மகனிடம் , தன் அண்ணனிடமும் கூற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் ,மனைவி அதற்கு மறுக்கிறார்
முடிவு என்ன என்பது தான் பரபரப்பான கிளைமாக்ஸ்
இந்த படம் சிவாஜி அவர்களின் மாறுபட்ட நடிப்பை காட்டி உள்ளது என்றே சொல்ல வேண்டும் , படத்தின் flashback காட்சிகளில் இளைஞர் , கதை தற்போது நடக்கும் சுழலில் வயதானவர் , அதே போல் இப்போது தல அஜித் மங்காதாவில் சொல்லுவது போல் money money தான் இவருக்கு பிரதானம்
பணத்தினால் எதையும் விலைக்கு வாங்கி விடுகிறார் , தன்னிடம் வேலை பார்க்கும் நபரின் பிரச்னையை தீர்த்து விடுகிறார் , புது ஜோடிக்கு கல்யாணம் செய்து விட்டு , அவருக்கு அறிவுரை கூறும் காட்சி எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
தன்னை அவமான படுத்திய மருத்துவரை பணக்கார பிரபுவாக சந்திக்கும் பொது அவர் முகத்தில் தெரியும் வெறி ,கோபம் நம்மளுக்கும் தொற்றி கொள்ளுகிறது , தவறுக்காக அந்த மருத்துவர் மனிப்பு கேட்ட உடன் மனித்து விடுவது - நிஜ வாழ்வில் சிவாஜி அவர்களின் குணம்
தன் மனைவியை தேடி அலையும் காட்சிகளில் நம்மளையும் அசராடிகிறார். பல வருடங்களாக தன் மனைவியை பிரிந்து , பிறகு அவரை சந்திக்கும் பொது melo dramatic ஆக இல்லாமல் கொஞ்சம் அழுகை , பிறகு பரஸ்பரம் விசாரிப்பு ,பிறகு சிரிப்பு என்று வித்தியாசமாக காட்சி அமைத்து இருக்கிறார்கள் அதில் நம்மவரின் நடிப்பு எதார்த்தம் .
சுஜாதா அந்தமான் தீவின் tribal girl பாத்திரத்தில் நன்றாக இருக்கிறார் , அதை விட வயதான பாத்திரத்தில் மிகவும் பொருந்தி இருக்கிறார் ,
SHE HAS GROWN OLD WITH DIVINE LOOK . அதுவும் காதலர்களாக இருந்த பொது ஏழை வீட்டில் கோழி குழம்பு என்றால் ஒன்னு கோழிக்கு உடம்பு சரி இல்லை என்று அர்த்தம் இல்லை , ஏழைக்கு உடம்பு சரி இல்லை என்று அர்த்தம் . வெகு நாட்களுக்கு பிறகு தன் மனைவி கையால் சாப்பிடும் பாகியம் கிடைத்து தன் முதலாளி விசுவாசம் காரணம் காட்டுவதும் , அதை மனைவி புரிந்து கொள்வதும் கவிதை
தன் மகன் தன் வளர்ப்பு மகளை கல்யாணம் செய்து கொள்ள கேட்கும் சீதனமாக கேட்பது தன் உயிர் என்பதை அறிந்து அவர் காட்டும் புன்முறுவல் priceless , சிவாஜியின் முயற்சிகளை சுஜாதா முறியடிக்கும் காட்சிகள் திரைகதையின் பலம்
தன் மனைவி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பணம் கேட்டு வரும் பொது இவர் குஷியாக பணத்தை தருவதும் , பிறகு பணம் காசு முக்கியம் கிடையாது அன்பு பாசம் தான் முக்கியம் என்று புரியவைக்கும் பொது , பணத்தால் இவர் அபிஷேகம் செய்யும் காட்சியும் , அதை தொடர்ந்து வரும் பாடலும் நான் ரசித்த காட்சிகளில் ஒன்று .
படத்தில் நான் ரசித்த இன்னும் சில விஷயங்கள் கேமரா , வெளிப்புற காட்சிகள் , சிவாஜி அவர்களின் எதார்த்தமான make up , ஸ்டைல் , டிரஸ் , இந்த படத்தில் அவர் உடை அவர் வயதை அழகாக compliment செய்தது என்றே சொல்ல வேண்டும்
சந்திரமோகன் , கவிதா நடிப்பு சுமார் . தேங்காய் ஸ்ரீநிவாசன் , மனோரமாவின் நகைச்சுவை படத்துக்கு வேகத்தடை .
பாடல்கள் என்றும் கேட்கலாம்
படத்தை பற்றி மிகவும் சுமாராக தான் எழுதி உள்ளேன் , காரணம் படத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தேன் , எதை எழுதுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ,அதனால் அனைத்தையும் விவரிக்கிறேன் பேர்வழி என்று மீண்டும் சொர்க்கம் படத்துக்கு எழுதி சொதப்பியது போல் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கை தான்
நமது வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகள் பல...
அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது சில......
சரஸ்வதி பூஜைக்கு
http://www.youtube.com/watch?v=UTBqjfjR7OM
அந்த கால கட்டத்தில் சிவாஜி சுஜாதா நடித்த மூன்று திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அதே போல் சிவகுமார் ஸ்ரீதேவி நடித்த மூன்று படங்கள் தோல்வி அடைந்தது.
தீப ஒளிக்கு
http://www.youtube.com/watch?v=0lFpu5z0oPU
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு
http://www.youtube.com/watch?v=CMfbEd5aggI
ரம்ஜான் பண்டிகைக்கு
http://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o
புது வருட பிறப்பிற்கு
http://www.youtube.com/watch?v=VvffL2njuCc
கிருஷ்ணா ஜெயந்திக்கு
http://www.youtube.com/watch?v=3eeBmbd36vA
ஐயப்பன் சீசனுக்கு
http://www.youtube.com/watch?v=Bahd1mbA5SQ
சிவராத்திரிக்கு
http://www.youtube.com/watch?v=_uAE2d0u3Ko
கார்த்திகை தீபத்திற்கு
http://www.youtube.com/watch?v=hLU9wbxtbE8
விடுதலை போராட்டத்திற்கு
http://www.youtube.com/watch?v=GkxRC8ikSc4
தேச ஒற்றுமைகிற்கு போடும் ஒரே பாடல்
http://youtu.be/zKUpbXldBA4
குழந்தை பிறந்தவுடன்
http://www.youtube.com/watch?v=imwsn-J8NuM
குழந்தை வளர்ந்தவுடன் தொட்டில் இடும்போது
http://www.youtube.com/watch?v=HtI2WuwCvyI
குழந்தை வளர்ந்து மானவபருவம் அடையும்போது
http://www.youtube.com/watch?v=YtufCVcIfzI
அடுத்தவர் புகழை கூட...அடுத்தவர் பெருமையை கூட... தனது மட்டுமே என்று சித்தரிப்பவர்களுக்கு ,பறை சாற்றுபவர்களுக்கு ...!
மனித வாழ்கையில் நடக்கும் எந்த ஒரு சம்பவமாக இருக்கட்டும் ....அதற்க்கு ஏற்ற பாடல் வேறு எவரை காட்டிலும் திரைப்படங்களில் அதிகமாக கொண்டு வந்தது கண் முன் நிறுத்தியது நடிகர் திலகம் என்பதை இங்கு பதிவுகளை படிக்க வரும் பார்வையாளர்கள் உணர மேலே நான் குறிப்பிட்ட சில உதாரண பாடல்கள்....இன்னும் பல நூறு ஆயிரம் சம்பவங்களுக்கும் ஏற்ற பாடல் நடிகர் திலகம் தனது திரைப்படங்கள் மூலம் காட்சிகளாக...பாடல்களாக கொண்டு வந்து கண் முன் நிறுத்தியுள்ளார் மற்ற எவரை காட்டிலும் அதிகமாக...!
இந்த பாட்டுக்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று ஓங்கி உரைத்த நண்பர் ரவிகிரன்சுர்யா அவர்களக்கு என் நன்றி.
குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார்.
சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-
"நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.
ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்" படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை 'புக்' செய்தார்கள். புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு 'சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு 'பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள்.
சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு 'நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை. படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜி சாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்பார்.
"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்" என்பேன்.
உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்" என்பேன். அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்" என்பேன்.
இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.
இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது.
அதுமாதிரி, "திருமால் பெருமை" படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை. அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன்.
காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவி விட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்" என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க" என்றார், அம்மாவிடம்.
அம்மா 'எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்" என்றார்.
அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது."
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
தற்போது நடிகர்திலகத்தின் ஆண்டவன் கட்டளை திரைப்படம் ஜெயா மூவீஸ் சேனலில்
ஒளிபரப்பிகொண்டு இருகின்றார்கள். இந்த படத்தை எனது நினைவு தெரிந்த நாள் அன்று சைதை ஜெயராஜ் திரைஅரங்கில் பார்த்த நாள் நினைவிற்க்கு வருகிறது. பின் சென்னை பரகோன், வேளச்சேரி ராஜலக்ஷ்மி மற்றும் பல
திரைஅரங்கு நினைவிற்கு வருகின்றது.
இந்த திரைபடத்தில் பேராசிரியர் ஆக வரும் நடிகர் திலகம் காதல் வயப்பட்டு தனது உடை
சிகை அலங்காரங்களை மாற்றி கல்லூரிக்கு வரும் நடிகர் திலகம் ஒரு அழகிய ராஜா நடை போட்டு வரும் அந்த கட்சி ஒன்றே போதும் உலக பெரு நடிகன் நம் நடிகர் திலகம்.
by Yukesh BabuQuote:
Quote:
திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.
இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.
டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது.
Dear Yukesh Babu
மணம் வீசாத எந்த மலரும் வெறும் அலங்கார மலராகவோ காகித மலராகவோதான் இருக்க முடியும். மல்லிகை எங்கிருந்தாலும் மண(ன)முள்ள மலரே... அது மாற்றார் தோட்டத்தில் மலர்ந்திருந்தாலும்! நடிகர்திலகம் பற்றிய ஆரோக்கியமான தங்களது பதிவு வரவேற்புக்குரியது நண்பரே! நன்றிகள்.
நடிகர்திலகம் என்னும் திமிங்கிலத்தின் முன் மற்றெல்லாம் சிறுகுறுமீன்களே! ஆனாலும் இந்தத்திமிங்கிலம் வித்தியாசமான டால்பின் வகை திமிங்கிலம்.
சிறார்களான சிறு ஜிலேபி மீன்களுக்கும், சுறாக்களான பெரியவர்களுக்கும் கூட நாம் இந்தத்திமிங்கிலத்தையே விழுங்கிவிட்டோம் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி அவர்களையும் தனது தோளில் சுமந்து வளைந்து நெளிந்து 'டைவ்' அடித்து வலம்வந்து மனம் மகிழ வைக்கும் மாயக்கார திமிங்கிலம்!.
திருவிளையாடலின் தருமி வாளைமீன் நாகேஷ் , குருதட்சணையின் வஞ்சிரமீன் பத்மினி, படிக்காத மேதை சுறாமீன் ரங்காராவ், பாவமன்னிப்பு Piranha மீன் ராதா, தூக்குதூக்கியின் பாறைமீன் பாலையா...தெய்வமகன் திருக்கைமீன் நாகையா, காவல் தெய்வம் கட்லா மீன் சுப்பையா ... மனோகராவின் விண்மீன் கண்ணாம்பா, கர்ணனின் தாய்செம்மீன் ராஜம்மா, தில்லானாவின் மின்சார மீன் மனோரமா .. புதிய பறவை கெளுத்திமீன் சவுகார் , பாலும்பழமும் கெண்டைமீன் சரோஜாதேவி, நீலவானம் நெத்திலிமீன் தேவிகா...........பந்தம் படத்தின் குட்டி கடல்குதிரைமீன் ஷாலினி....... பார்த்தால் பசிதீரும் ஆக்டோபஸ் மீன்குடும்பம் ஜெமினி/சாவித்திரி/இரட்டைக் கமல்....வரை அடுக்கிகொண்டே போகலாம்.
நடிப்பின் திமிங்கிலம் நடிகர்திலகமே....ஒப்புக்கொண்டு மகிழ்வான மாற்றங்களையும் முதிர்வானபுரிதல்களையும் திரிகளுக்கு இடையே உருவாக்கிட தூண்டில் போடும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் யுகேஷ்!
முயற்சிகள் தவறலாம் ........முயற்சிக்கத் தவறலாமா !
Illusions made by our Magician of Acting with a Midas touch to make the scene a golden product!
Small fish 'engulfing' the Big fish!? illusion thanks to the magnanimity of the Nadippin Thesaurus (NT)!!
https://www.youtube.com/watch?v=hJx2...2A45C1&index=3
Crouching Tiger and Hidden Dragon?! A hallucination only!!
https://www.youtube.com/watch?v=MOTgW8glTHk
Gripping Octopus 'arresting' the Slipping Dolphin!? Mirage!!
https://www.youtube.com/watch?v=J4QCNQi17a8
நடிப்புத் திமிங்கிலம்(NT) / நடிகர் திலகம் (NT) சுமந்து மகிழ்வித்த சுகமான குட்டிமீன்கள் மற்றும் சுமையான சுறாக்கள் !
PART 1 : இனிமை நிறைந்த குதூகலமான குட்டி ஜிலேபி மீன்கள்
https://www.youtube.com/watch?v=TFu4zYk4Xeg
https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8
Master Shridhar is fish out of water before our Nadippu Thimingilam
https://www.youtube.com/watch?v=iC6RJSe97S8
https://www.youtube.com/watch?v=LvaoBusG1e4
https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
அன்று ஐந்து வயது குட்டிமீன் இன்று 60 வயது நடிப்புச்சுறா! இன்றும் மகிழ்விக்க திமிங்கிலம் இல்லையே!
https://www.youtube.com/watch?v=4ofp0GGu3AA
eன்னை ஆட்கொண்எட நடிகர்திலகம் :
நான் எப்படி அவருக்கு பக்தன் ஆனேன் :
எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல்
சிவாஜி படம் தில்லான மோகனம்பாள். எனது
தாயாருடன் பார்த்து அந்த படத்தில் மோளம்
அடிப்பது போல் நான் அடித்து காட்டினால் எனக்கு எனது மாமா 5 பைசே கொடுப்பார்.
பிறகு திருவல்லிகேணியில் உள்ள பள்ளியில்
சண்டே அன்று மாதம் ஒரு முறை திரைப்படம்
போடுவார்கள். அப்படி நான் பார்த்த திரைப்படங்கள் அனைத்தும் நடிகர் திலகத்தின்
படம் மட்டும் தான். அது மட்டும் அல்ல திரையிடும் படங்கள் அத்தனையும் நடிகர் திலகத்தின் படம் மட்டுமே.
அங்கு நான் பார்த்த படங்கள்:
கலாட்ட கல்யாணம்
பதிபக்தி
உயர்ந்த மனிதன்
பாசமலர்
இன்னும் ஒரு நான்கு அல்லது ஐந்து படங்கள்
இருக்கும். அது போல் நான் பார்த்த முதல்
இரவுக் காட்சி படம் பரகோன் திரைஅரங்கில் நான் பார்த்த ராஜா.
அது போல சாந்தி திரைஅரங்கில் நான் பார்த்த
படங்கள் மிக அதிகம்.
இப்படி யாக நான் நடிகர் திலகத்தின் படங்கள் மேல் ஒரு மோகம் கொண்டு அவரின் பித்தனானேன்.