அற்புதம் யுகேஷ் சார்
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Printable View
வேலூர் records
அன்றைய கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகள்
http://i60.tinypic.com/t9jjic.jpg
http://i62.tinypic.com/ofstjm.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
சென்னை பாட்சாவில் (மினர்வா ), நாளை முதல் (29/08/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
"நான் ஏன் பிறந்தேன் " தினசரி 3 காட்சிகள் வெள்ளி திரைக்கு வருகிறது.
http://i57.tinypic.com/34rhm35.jpg
மறுவெளியீட்டில் மீண்டும் "குடியிருந்த கோயில் "
------------------------------------------------------------------------------------
செப்டம்பர் மாத வெளியீடு.
பெரிய திரைஅரங்கில் வெளியாக தயாராகிறது.
http://i57.tinypic.com/2dr8aqe.jpg
கடவுளுக்கு வழிபாடு செய்யும் பொழுது
http://i1170.photobucket.com/albums/...ps5eac1310.jpg
http://i1170.photobucket.com/albums/...psb7a0245f.jpg
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் விஞ்ஞானி முருகன் மற்றும் அவரது தம்பி ராஜு என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் புரட்ச்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். தான் கண்டுபிடித்த அனுகுண்டு பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜப்பானில் உள்ள புத்தபிட்ச்சுவிடம் கொடுத்து வைத்திருப்பார். புத்த பிட்சுவிடம் இதை யாரிடமும் கொடுக்கக்கூடாது நானோ எனது தம்பி ராஜுவோ வந்து கேட்டால் மட்டுமே கொடுக்கவேண்டும் என்று சொல்லுவார். அந்த புத்தபிட்சுவின் வீடு பிரம்மாண்டமாக இருக்கும். சின்னதும் பெரியதுமாக ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகள் இருக்கும். அமைதி தவழும் முகத்துடன் புத்தபிட்சு இருப்பார் .
சிறிது காலம் சென்றவுடன் நம்பியார் புத்த பிட்ச்சுவிடம் சென்று நான்தான் சாமி விஞ்ஞானி முருகனின் தம்பி ராஜு, என்னிடம் அண்ணன் கொடுத்த ஆராய்ச்சி குறிப்புகளை தாருங்கள் என்பார் . உடனே பிட்சுவும் உங்கள் அண்ணனிடம் ஆராய்ச்சி குறிப்பு இருக்கும் இடம் பற்றி ஒரு குறீயீடு வார்த்தைகள் சொல்லி இருக்கின்றேன் , அதை சொல்லிவிட்டு அந்த ஆராய்ச்சி குறிப்புகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பார், குறியீடு வார்த்தைகள் தெரியாத நம்பியார் அந்த பிட்ச்சுவை அடித்து மயக்கம் போட வைத்துவிட்டு பிட்சு அமர்ந்திருந்த இடத்தில் தான் ஒரு பிட்சு போல் அமர்ந்துகொள்ளுவார். .
சிறிது நேரத்தில் தம்பி (ராஜு) எம்ஜிஆர் வந்து நம்பியாரை பிட்சு என்று நினைத்து வணங்கி சாமி நான்தான் விஞ்ஞானி முருகனின் தம்பி என்றவுடன் நம்பியார் என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்ப்பார் . தன்னுடைய அண்ணன் தங்களிடம் தந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை என்னிடம் தாருங்கள் என்று கேட்ப்பார், உடனே நம்பியாரும் உங்கள் அண்ணனிடம் ஆராய்ச்சி குறிப்பு இருக்கும் இடம் பற்றி ஒரு குறீயீடு வார்த்தைகள் சொல்லி இருக்கின்றேன் , அதை சொல்லிவிட்டு அந்த ஆராய்ச்சி குறிப்புகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்பார். உடனே எம்ஜிஆரும் அந்த குறியீடு வார்த்தைகள் எனக்குத் தெரியும் சாமி என்று சொல்லிவிட்டு “தொசிக்கா” , “கிமாக்கோ” , “மிக்காயு” , “ஹிமோனா” என்று குறியீடு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு “தொசிக்கா” என்பது பெரிய புத்தருக்கு இடது மூலை, “கிமாக்கோ” என்பது அந்த மூலையிலிருந்து தரையில் பதிக்கப்பட்டு இருக்கும் ஐந்தாவது கல் , “மிக்காயு” என்பது வலது புறம் நான்காவது கல் , “ஹிமோனோ” அந்த கல்லுக்கு அடியில்தான் ஆராய்ச்சிக் குறிப்பு இருக்கின்றது என்று சொல்லிவிட்டு அந்தக் கல்லைப் பெயர்த்து எடுத்துவிட்டு ஆராய்ச்சிக் குறிப்பை கையில் எடுப்பார் . அந்த நேரத்தில் பாய்ந்து வரும் நம்பியாரை அடித்து வீழ்த்திவிட்டு , புத்த பிட்சுவையும் காப்பாற்றிவிட்டு வெற்றியுடன் திரும்புவார்
SWEET MEMORIES OF USV
http://i1170.photobucket.com/albums/...ps88a8bad9.jpg
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் !
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார் !
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார் ;
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார் !
ஜூலை 22, 1954 வெளியானது மலைக்கள்ளன் ! அந்தகாலத்தில் எட்டணாவிற்கு என்னேனவெல்லாம் வாங்கலாம் தெரியுமா? எனக்கு நினைவு தெரிந்து 1960 இல் ஒரு ரூபாய்க்கு அருமையான தங்கசம்பா அரிசி ஒரு பட்டினம் படி வாங்கி இருக்கேன் ! அதாவது இன்றைய ரெண்டு கிலோவுக்கு சமம் ! ஒரு லிட்டர் பால் விலை முப்பது பைசாதான் ! 1960 இல் தான் நயா பைசா (புதிய காசு !) நடைமுறைக்கு வந்தது ! ரெண்டு இட்லி ஓரணா ! (ஆறு பைசா) ஒரு மசால் தோசை (நாலணா) அப்போ காங்ரஸ் ஆட்சி ! கொஞ்சம் கொஞ்சமாய் விலைவாசி ஏறி 1965 ஜனவரி 26 குடியரசு தினத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்து அடுத்த ஐந்தே மாதங்களில் 620 பேர்கள் கொல்லப்பட்டபின் அரசு பின்வாங்கியது, மொழி திணிப்பு சட்டம் வாபஸ் ஆனது ! ஆனால் விலைவாசியோ திடீரென்று கடுமையாய் ஏறி 1966 ஆம் ஆண்டு நாற்பது பைசா ஒரு கிலோ அரிசியானது ஒரு ரூபாய்க்கு விலை ஏறியதால் அன்றைய தினம் மதுரையில் தி மு கவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்துகொண்டு அனைத்து அரிசி கடைகளிருந்து அரிசியை இலவசமாக ஜனங்களுக்கு விநியோகம் செய்தார்கள் ! அடுத்த ஆண்டு தேர்தல் ! ஆட்சி மாறியது ! ஆம் அசைக்கவே முடியாது என்று இருந்த காங்கிரஸ் கட்சியை தமிழகம் உள்பட எட்டு மாநிலங்களில் மக்கள் விரட்டி அடித்தார்கள் ! காங்கிரஸ் வீழ்ந்தது ! எம் ஆர் ராதாவால் சுடப்பட்டு குண்டடிபட்ட எம்ஜியாரின் போஸ்டர் பார்த்தே தமிழ்நாடே வெற்றியை தந்தது என்றால் அது மிகை அல்ல !
Sweet memories of old age fan sharing golden days of 1950-1970
நம் புன்னகை வேந்தன் திராவிட இயக்க தலைவர் திரு அண்ணாவுடன்
http://i1170.photobucket.com/albums/...psc15c9652.jpg
வள்ளல் வேந்தரின் ஞாபக சக்திக்கு இந்த ஒரு நிகழ்வு ஒரு உதாரணம் . இன்னும் எத்தனையோ
இந்த நிகழ்வினை பார்க்கும் பொழுது நமக்கு நினைவுக்கு வரும் பாடல் வரிகள்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
யானைக்கவுனியில் எம்.ஜி.ஆர். குடியிருந்த
நேரத்தில், காலையில், முருகன் டாக்கீஸ்
உரிமையாளர் பரமசிவ முதலியாருடன்
வாக்கிங் போவது வழக்கம். அப்படி செல்லும்
வழியில் ஒரு பாட்டியம்மாள்
புட்டு சுட்டு வியாபாரம் செய்வார்.
தூரத்திலிருந்து வரும்போதே வாசம்
மூக்கைத் துளைக்கும். ஒரு நாள் அந்த
அம்மாளிடம் புட்டு வாங்குவதற்காக சென்ற
எம்.ஜி.ஆர், அவர் விலையை கூறியவுடன்
"மறுநாள் வாங்கி கொள்வதாக"
கூறி நகர்ந்திருக்கிறார்.
"ஏன் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்
என்று கேட்ட பாட்டியிடம்,
"தனக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும்
சேர்த்து வாங்க வேண்டும் என்றும்
அந்தளவுக்கு தன்னிடம் காசு இல்லை"
என்றும் பதில் அளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
""பரவாயில்லே!
நாளைக்கு வரும்போது காசு குடு''
என்று புட்டை பொட்டலம் கட்டிக் கொடுத்த
பாட்டியிடம், "நாளைக்கு நான்
காசு கொண்டு வராம உன்ன
ஏமாத்திட்டா என்ன பண்ணுவே''
என்று கேட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
"காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது,
வரலேன்னா உங்க மூணு பேரு பசியைத்
தீர்த்த புண்ணியம் வருது. தருமக் கணக்குல
சேர்ந்துடும்''
என்று பாட்டியின் பதில்
எம்.ஜி.ஆர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
சொன்னபடி மறுநாள் காசைக்
கொடுத்துவிட்டார். பாட்டியம்மாவும் சில
நாட்கள் கழித்து இடம் மாறி சென்றுவிட்டார்.
பல வருடங்கள் கழித்து, தான் முதலமைச்சர்
ஆன பின் அந்தப் பாட்டியம்மா பற்றி விசாரித்த
எம்.ஜி.ஆர் அவர் வீடு தேடிச்
சென்று பொருளுதவியும் செய்திருக்கிறார்
வண்ணத்தில் இந்த புகைப்படம் .
அழகு என்ற சொல்லுக்கு இலக்கணம் நீ தான் தலைவா
http://i1170.photobucket.com/albums/...psb5d7a172.jpg
ஒவ்வொரு பக்தனின் இன்றைய ஏக்கம்
தலைவா இன்னும் ஒரு முறை மண்ணில் நீ பிறந்து வந்தால் தெருவுக்கு ஒரு கோயில் குறைந்து
சாதிக்கு ஒரு தலைவன் இல்லாமல் இந்த தரணிக்கு ஒரு தலைவனாக மக்கள் உன்னை ஏற்று கொள்வார்கள்
கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு
அந்த நாள் வந்திடுமா ?
கடைசியாக ஒரு விண்ணப்பம் கடவுளுக்கு
கடவுளே எங்கள் கடவுளை திரும்ப ஒரு முறை படைத்து விடு
http://i1170.photobucket.com/albums/...ps62b8717e.jpg
MAKKAL THILAGAM M.G.R - NATURAL BEAUTY
http://i59.tinypic.com/qq8ztf.png
MAKKAL THILAGAM LOOKING VERY SHOCK ......
http://i58.tinypic.com/mc8d9j.png
FACING ALWAYS ..... BUT NEVER FAILED.IN REEL AND REAL.
http://i58.tinypic.com/2qsylu0.png
அன்று முரோசொலி மாறனுக்கு பாராளுமன்ற தேர்தல் deposit தொகை rs .10000/- கட்டி உதவினார் எங்கள் பரங்கிமலை பாரி இன்று மாறன் குடும்பம் ஆசியா பணக்காரர் பட்டியலில் ஐந்தாவது இடம் ஊழலில் முதலில் இடம் .
அன்று எங்கள் தங்கத்தால் நாங்கள் கரை ஏற்றபட்டோம் என்று கூறியவர்கள் இன்று பரம்பரை பணக்காரர்கள் போல் பவனி வரும் காட்சிக்கு மக்களே சாட்சி .
திரு சோ அவர்கள் வாத்தியாரை தொட்டு பார்ப்பது திரைக்கு மட்டும் அமைத்த காட்சியல்ல இப்படி கோடி கணக்கான மக்களின் ஆசையும் கூட அந்த விசியத்தில் திரு சோ அவர்கள் ஈரேழு ஜென்மம் புண்ணியம் செய்து இருப்பார் . ஏன் என்றால் என்னை மாதிரி எண்ணிலடங்கா பக்தர்கள் தெய்வத்தை நேரில் பார்த்த அனுபவம் கிடையாது .
மலர்களும் பொன்மனசெம்மலை பார்த்துதான் புன்னகைக்க தொடங்கியது .
aayirathil oruvan 175th day ad in daily thanthi
http://i1170.photobucket.com/albums/...psf495a767.jpg
1974ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' படம் மதுரையில் 200 நாட்கள் - நெல்லைநகரில் வெள்ளி விழா ஓடியது . உரிமைக்குரல் -மக்கள் திலகத்தின் கடைசி வெள்ளி விழா படம் .
மக்கள் திலகம் மறைவிற்கு பின்னர் சென்னை - சரவணா அரங்கில் எம்ஜிஆர் வாரம் தொடர்ந்து 15 வாரங்கள் திரையிடப்பட்டு 105 நாட்கள் ஓடியது .
தூத்துக்குடி - சத்யா அரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து மக்கள் திலகத்தின் பல படங்கள் வெளிவந்துசாதனை புரிந்தது .
http://i58.tinypic.com/wbtjmb.jpg
2014ல் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் மாற்றத்துடன் வெளிவந்து சென்னை நகரில் வெள்ளி விழா காண்பது உண்மையிலே வரலாற்று சாதனை .ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளி விழா வெற்றிக்கு காரணமான அனைத்து எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் -உறுப்பினர்கள் மற்றும் திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் - திரை அரங்கு உரிமையாளர்கள் - பாராட்டுக்குரிவர்கள் .
எம்ஜிஆர் என்றால் சாதனை . சாதனை என்றால் எம்ஜிஆர் . மீண்டும் உறுதியாகியுள்ளது .
THANKS RAMAMOORTHI SIR
http://i61.tinypic.com/vcl0j.jpg
CHENNAI - PARAGON THEATER- MAKKAL THILAGAM MGR FANS WITH MGR MAGAZINE.1970
http://i57.tinypic.com/117bntt.jpg
ஏற்கனவே பல பத்திரிகைகளில் இந்த புகைப்படம் வெளிவந்திருந்தாலும் மீண்டும் இன்றைய தமிழ் ஹிந்து தினசரி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது
http://i58.tinypic.com/s1t307.jpg
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=fhQF...ature=youtu.be
இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர் வி.சி.குகநாதன், எம்ஜிஆரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் , திரைப்படத்தின் இசையை வெளியிட்டுப் பேசினார்.
“நான் பள்ளியில் படித்த காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஒரு முறை அவருடைய படங்களைப் பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். தங்களைப் பார்க்க எனக்கு அனுமதி அளித்து நேரம் தருமாறு கேட்டிருந்தேன்.
அதற்கு அவருடைய உதவியாளர் பதிலளித்தார். நீங்கள் நேரில் வரவேண்டாம், உங்கள் ஊருக்கு அவர் வரும் போது நீங்கள் சந்திக்கலாம் என்றார்.
ஆனால், அவரைச் சந்திக்கும் நாட்கள் எனக்கு உடனே கிடைத்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது, ஒரு விழாவிற்கு அவரை அழைத்து வர சந்தர்ப்பம் கிடைத்தது.
அந்த விழா முடிந்ததும், அவரிடம் எனக்கு நடிக்கும் ஆசை உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா என கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவரை நேரில் பார்த்ததும், அவருடைய அழகுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆசையையே அறவே வெறுத்தேன்.
அவர் படிப்பைத் தவிர வேறு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்ட போது, கதை எழுதுவேன் என்றேன். உடனே, அவருக்கு ஒரு கதை எழுதித் தருமாறு கேட்டார்.
சில நாட்கள் கழித்து, அவரிடம் போய் ஒரு கதை சொன்னேன். ஆனால், அந்த கதை பெண்களை மையப்படுத்திய கதை. எனக்காக நீ கதை எழுத வேண்டுமென்றால் இப்படியா எழுதுவாய் என்றார். நானும் சில நாட்கள் சந்தர்ப்பம் கேட்டு, நான்கு நாட்கள் கழித்து வேறு ஒரு கதையுடன் சென்றேன்.
அந்த கதைதான் ‘புதிய பூமி’ திரைப்படமாக வெளிவந்தது. என்னை முதன் முதலாக திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தியது அவர்தான்.
அதன் பின் ஒரு நாள் என்னை சந்திக்க தயாரிப்பாளர் கோவை செழியனை, எம்ஜிஆர் அவர்கள் அனுப்பி வைத்தார். அவர் நேராக வகுப்பறைக்கு வந்து பேராசிரியடம், உங்களைப் பார்க்கத்தான் நான் வந்தேன் என்றார். அவரோ என்னையா என்று கேட்டார். நீங்கள்தானே வி.சி.குகநாதன் என்றார். அவரோ, நானில்லை, குகநாதன் இந்த வகுப்பின் மாணவன் , என்று என்னை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.
கோவை செழியன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு கல்லூரி மாணவரைப் பார்க்க எம்ஜிஆர் நம்மை அனுப்பி இருக்கிறாரே
என்று.அவருக்கு நான் சொன்ன கதைகளில் ஒன்றுதான் பின்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘குமரிக்கோட்டம்’ திரைப்படம்.எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் அதன் பின் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகளை திரைப்படங்களுக்காக எழுதியிருக்கிறேன்.
ஒருவரிடத்தில் உள்ள திறமையை, அத்துடன் நிறுத்திக் கொள்ள வைக்காமல், அவர் மேலும் வளர்வதற்கு வாய்ப்புத் தரும் ஒரே மனிதர் எம்ஜிஆர் அவர்கள்.அவர் ஏற்றி வைத்த விளக்குதான் இன்று வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ” என்றார்.
http://www.youtube.com/watch?v=cXQxVEbSwIM
காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை
இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும்
சென்னையில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..
.49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் என்றால் நிச்சயம் ஹிஸ்டரி தான். படம் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றது. 35mm-ஐ 70mm-ஆ மாற்றும் போது வெகு சில இடங்களில் பல்லிளித்தாலும் அதெல்லாம் குறையே அல்ல. மேலும், படத்தின் பின்னனி இசை முழுவதும் திரும்ப ரீ-ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டலில் கேட்பது இன்னும் இனிமை.
படம் எப்படினு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பழைய படமாச்சே, அதுவும் எம்.ஜி.ஆர். காலத்திய படம். போர் அடிக்கும் என்று இளசுகள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்.
வாத்தியாருக்கே உண்டான ஹீரோயிஸம் இருந்தாலும், அவர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்த பிறகு வந்த படங்களில் உள்ள ஹீரோயிஸத்தை விட, இப்பொழுது விரல் சுத்துற பசங்க பன்ற ஹீரோயிஸத்த விட ரொம்ப குறைவு. சில இடங்களில் பஞ்ச் தான்.
"மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?" என்று நம்பியார் கண்ணை உருட்டி ஆக்ரோஷத்துடன் கேட்க, வாத்தியார் கூலாக சொல்வது, "ஹூம். சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". செம பஞ்ச்.
அந்த கால எம்ஜிஆர் படங்கள் திரையில் வந்தால் எத்தனை குதூகலம் இருக்கும், ரசிகர்களின் ரியாக்*ஷன் எப்படி இருக்கும் என்ற நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ள, ஒன்று அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது அப்பொழுதைய பழைய வீடியோக்கள் ஏதாச்சும் இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை. ஆனால், இப்போது கிடைத்திருப்பது ஒரு விதத்தில் பாக்கியம். அந்த கால ரசிகர்கள் இப்பொழுது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
சுமார் 10 வருடங்களுக்கு முன் என் ஊரில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரையிட்டிருந்தார்கள். சும்மா ஒரு சேஞ்சுக்கு அந்த படம் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். செம கூட்டம். படம் ஆரம்பித்தவுடன் ஒருத்தர் கை நிறைய கற்பூரம் கொண்டு வந்து ஸ்க்ரீன் முன் வைத்து கொழுத்தி விட தியேட்டர்காரங்க அலரிட்டாங்க.
சத்யம் போன்ற தியேட்டருக்கெ வராதவர்களே குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். நான் பார்க்கும் போது, முதல் வரிசையில் (100 ரூ டிக்கெட்) ஒரு பாட்டி ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரோட சிரிப்பு பின்னிருக்கையில் இருந்து படம் பார்த்த எனக்கே கேட்டது.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த கால ரசிகர்களின் ரசனை உண்மையில் நம் காலத்தை விட மேம்பட்டது. இந்த கால இளசுகளால் புரிந்து கொள்ள சிரமமா இருக்கும் வசனங்களையெல்லாம், வசனம் வரும் முன்னே கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.
வாத்தியார் படங்களில் வந்த கத்தி சண்டைகள் பெரும்பாலும் நிஜமானவை. இந்த படம் வந்த காலகட்டங்களில் டூப் .வந்தாலும், எங்கும் டூப் இருப்பது போல் தெரியவில்லை, அதற்கான தேவையும் இல்லை.
இதையெல்லாம் விட எனக்குகைன்னொரு தடவை படம் பார்க்க வைத்தது, படத்தில் பாடல்கள். 7 பாடல்கள். அத்தனையும் முத்துக்கள். படம் டைட்டிலில் ஒரு பக்கம் வாலியும் இன்னொரு பக்கம் கண்ணதாசன் படம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.
டிஜிட்டல் வெர்ஷனில் தியேட்டரில் பாடல்களை கேட்கும் போது சுத்தமாக உறுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் பழைய பாடல்களுக்கே உரிய இசை கொஞ்சம்+வார்த்தைகள் தெளிவு.
ஜெ-வின் இன்ட்ரோ பாடல் 'பருவம் எனது பாடல்' முதல் கடைசி பாடலான 'அதோ அந்த பறாவை போல' வரை சூப்பர் சூப்பர் சூப்பர்ஜி.
இரண்டு பாடல்களை குறிப்பிட வேண்டும்.
1. 'உன்னை நான் சந்தித்தேன்' என்று சட்டென்று சுசீலா குரலில் இன்ட்ரோ இசை இல்லாமல் பாடல் வரி ஆரம்பிப்பது நச்.
2. 7 பாடல்களில் எனக்கு கடைசியா சுமாரா பிடித்த பாடல் 'நானமோ' பெரும்பாலும் கேட்க மாட்டேன். ஆனால், இங்கே கேட்கும் போது, முதல் 5 செகன்ட் ஒரு வாத்தியம் வந்து நிறக; 'சடாரென்று' டெம்பொவை ஏத்தும் அடுத்த பத்து செகன்ட், அதுவும் 'தியேட்டரில்' கேட்கும் போது, ரியலி வொன்டர்புல். கேட்டு பாருங்க.
இந்த படம் நிச்சயம் அந்த கால ஜாம்பவான்களின் மெகா கூட்டணி. எம்ஜிஆர்+ஜெ+நம்பியார்+நாகேஷ்+கண்ணதாசன்+வாலி+டிஎமெஸ ்+சுசீலா+விசு ராமு+பந்துலு. வேறென்ன வேண்டும்?
நிச்சயம் மறக்க முடியாத அனுபவம். ட்ரை பன்னி பாருங்க. உங்க 120 ரூ கண்டிப்பா வொர்த். வேறென்ன சொல்ல...?
courtesy- net
HISTRORY RETURNED....
COURTESY - THE HINDU - TODAY
http://i62.tinypic.com/vzwkrn.png
MGR’s 1965 classic Aayirathil Oruvan, directed by B.R. Panthulu and released earlier this year in a digitally-enhanced format, will soon be celebrating its silver jubilee as the film closes in on the 175 day of its theatrical run in a couple of screens in the city.
The silver jubilee celebrations promise to be a bonanza for MGR fans with a gala event to be organised at Kamarajar Arangam on Monday.
Leading actors and filmmakers such as Sarath Kumar, Sathyaraj, P. Vasu and Vikraman, who have declared themselves die-hard fans of Puratchi Thalaivar are slated to attend the event.
G. Chockalingam of Divya Films, who restored the film in a digital format, thanked all the active fan associations of MGR for making the silver jubilee possible.
In keeping with an old tradition of sorts, fans of MGR have ensured that the film has matched and even surpassed the record set by Sivaji Ganesan’s Karnan, which too was digitally restored a few years ago.