-
இந்தவாரம் மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த தேடிவந்தமாப்பிள்ளை கம்பம் .கூடலூர் வேல்முருகன் ஆயிரத்தில்ஒருவன் திருச்சி பேலஸ் கருர்.லட்சுமி ராம் சேலம் அலங்கார் மற்றும் குமாரபாளையம் ஆத்தூர் உட்பட ஆறு திரையரங்குகளில் ரகசியபோலிஸ் 115.திண்டுக்கல் என்.வீ.ஜு.பி புதுமைப்பித்தன் கோவை அனுப்பாளையம் மணிஸ் திரையரங்கில் எங்கவீட்டுப்பிள்ளை திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் தகவல்கள் தெரிவித்த நெல்லை ராஜா திருப்பூர்.சரவணன் மதுரை ஸ்ரீனிவாசன் திரு சுந்தரம் அனைவருக்கும் மதுரைமாநாகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் மதுரை.எஸ் குமார் எம்ஜிஆர் மன்றம்......... Thanks...
-
மணியக்காரர் என்ற ஒரு கிராம நிர்வாக அதிகாரி பதவி தமிழகத்தில் பிரிட்டிஷ் காலம் தொடங்கி திமுக ஆட்சி வரைக்கும் இருந்தது.
மணியக்காரர் பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கே வரும் வாரிசுரிமை பதவி.
100% உயர் சாதியினர்/ ஆண்ட சாதியினர் என சொல்லப்பட்டவர்கள் மட்டுமே வகித்துவந்த பதவி அது. அதற்கு அரசும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது.
பட்டியலின, பழக்குடியின மக்களில் யாரும் மணியக்காரர் பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
அந்த ஒரு சூழலில் அனைத்து சமூகத்தினரும் மணியக்காரராக வேண்டும். குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு மட்டுமேயான பதவியாக இது இருக்கக்கூடாது என நினைத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
பரம்பரை மணியக்காரர் முறையை அவசர சட்டம் மூலம் ரத்து செய்துவிட்டு அனைத்து சாதியினரும் கிராம நிர்வாக அலுவலராகலாம் (VAO) என சட்டம் கொண்டு வந்தார்.
பல நூறு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரும் VAO ஆனார்கள்.
இதெல்லாம் பல அதிமுகவினரும் மறந்துபோன சாதனைகள்.
இதெல்லாம் எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை என யாரும் பேசிக் கேட்டதில்லை. ஒரு முதலமைச்சராக இதெல்லாம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய கடமை இது. அதைத்தான் செய்தார்.
எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் மூலம் அனைத்து சாதியினரும் VAO ஆனார்கள். தற்போது தமிழகத்தில் மொத்தம் 12,606 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்.
கீழ் மட்ட சமூக கட்டமைப்பில் எழுந்த முக்கியமான புரட்சிகளில் இதுவும் ஒன்று.
இந்த புரட்சி நடக்காவிட்டால் இன்னும் பல கிராமங்களில் குறிப்பிட்ட சில சான்றிதழ்கள் வாங்க ஆண்டைகள் வீட்டு வாசலில்தான் நாம் காத்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் இன்னொன்றையும் செய்தார். அது தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளை ரத்து செய்து ஆண்டைகளின் அட்டூழியத்தை அழித்தார்.
திமுக ஆட்சி முடியும்வரை ரேஷன் கடைகள் தனியாரிடம்தான் இருந்தன. ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் ஆண்டைகள்தான் அந்த தனியார் . அவர்களை அவ்வூரில் எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லாததால் ரேஷன் விநியோகத்தில் கொள்ளை நடந்தது.
அந்த அவலத்தை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். அப்போதே அனைத்து சாதிகளையும் சேர்ந்த 22,000 பேருக்கு ரேஷன் கடையில் அரசு வேலை கிடைத்தது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து புரட்சி செய்தார்
அந்த புரட்சியின் மூலம் ரேஷன் கடைகள் அனைவருக்கும் பொதுவானதாக மாறியது.
அதனால்தான் அவர் மக்களால் #புரட்சித்தலைவர் என அழைக்கப்பட்டார் அழைக்கப்படுக்கிறார்... Thanks.........
-
எம்.ஜி.ஆர் சங்கீத கொடை
- R.P.ராஜநாயஹம்
முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னை வந்து சந்திக்கும்படி பாலமுரளி கிருஷ்ணாவிற்கு தகவல் சொல்கிறார்.
தமிழக முதல்வரை பாலமுரளி கிருஷ்ணா சந்திக்கிறார்.
எம்.ஜி.ஆர் அளித்த பணி ஒன்று. ’தியாகப்ரும்மத்தின் கீர்த்தனைகளை தமிழில் மொழிபெயர்த்து இசைத்து பாடவேண்டும்.’
பாலமுரளி சிரமேற்கொள்கிறார்.
தியாகராஜ கீர்த்தனைகளை தமிழில் மொழி பெயர்த்து பாடல்களை இசைப்படுத்துகிறார்.
கீர்த்தனைகளை மொழிபெயர்த்தவர் அவருடைய துணைவி அபயம் அவர்கள் தான்.
ஆறே மாதத்தில் எள் என்றால் எண்ணையாக தயாராகி விட்டார் பாலமுரளி கிருஷ்ணா.
எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நினைத்திருக்கிறார். பார்க்க பல முறை முயன்றார்.
முதல்வரை சந்திக்க இவரே முயற்சித்தும் பார்த்திருக்கிறார்.
அவ்வளவு சுலபமா அது?
எம்ஜிஆர் மறந்து விட்டார் போலிருக்கிறது. ராஜாங்க தலைமைக்கு எத்தனையோ சுமை.
சரிதான் என்று பாலமுரளி பிரமைகளை உதிர்த்து வேறு காரியங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். வெளி நாட்டு சங்கீத கச்சேரியே போதாதா?
இரண்டு வருடம் ஓடி விட்டது.
எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு.
”நான் உங்களிடம் சொன்ன வேலையை மறந்து விட்டீர்களா? இரண்டு வருடம் ஆகி விட்டது.”
பாலமுரளிக்கு எப்படியிருந்திருக்கும்?
When Caesar says “Do it”, it is performed.
பதற்றத்துடன் “அந்த பணியை நான் ஒன்றரை வருடம் முன்னரே முடித்து விட்டேன்.”
”அப்புறம் என்ன? என்னிடம் வந்து ஏன் சொல்லவில்லை?”
“ உங்களை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவே இல்லை”
வழி மறித்து தடுக்கிற நந்திகளுக்கு எம்.ஜி.ஆர் என்ற மஹாபுருஷர் விலக்கல்லவே. அவரும் அறியாததல்ல.
மிக சிறப்பான விழாவிற்கு எம்.ஜி.ஆர் ஆணையிடுகிறார்.
தியாகப்ரும்ம கீர்த்தனைகளை தமிழில் பால முரளி பாடி அரங்கேற்றுகிறார்.
எம்.ஜி.ஆர் உதவியாளரை அழைத்து சொல்கிறார். “பாலமுரளியிடம் பிரசாதத்தை கொடுங்கள்”
பிரசாத பை பெரிதாய் பாலமுரளி கையில்.
பாலமுரளி வீட்டிற்கு வந்து பார்க்கிறார்.
கத்தை கத்தையாய் பணக்கட்டு.
கட்டிலில் தான் அதையெல்லாம் எடுத்து வைக்கிறார்.
பத்து லட்சம் என்பது அன்று மிக மிகப்பெரிய தொகை.
அதோடு பாலமுரளி கிருஷ்ணா அதுவரை பார்த்தேயிராத பெருந்தொகை.
பால முரளி விம்மி,விம்மி அழுகிறார்.
தேம்பி அழுகிறார்.
https://www.facebook.com/photo.php?f...type=3&theater
…......
................................... Thanks.........
-
இந்த வாரம் (21/02/20) வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்
திரை காவியங்கள் பட்டியல் நண்பர்களின் பார்வைக்கு.
----------------------------------------
தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்று 1968 ல் பல அரங்குகளில் 100நாள் நிறைவு செய்த
ரகசிய போலீஸ் 115 பலமுறை வெளியீட்டில் வெற்றி கண்டபின் மீண்டும் டிஜிட்டல் வடிவில் முற்றிலும் புதிய தொழில்நுட்பத் தில் தயாராகி சேலம் ,திருச்சி மாவட்டங்களில் புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் வசூல் சாதனையுடன் கீழ்கண்ட அரங்குகளில் தினசரி 4காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது.
சேலம் - அலங்கா ர்,
ஆத்தூர் - என்.எஸ்.
குமாரபாளையம்_கே. ஓ.என்.
மாரண்ட ஹல்லி -பொன் முடி,
சோ லை சிகாமணி - வெங்கடேஸ்வரா
எலம் பிள்ளை-நடராஜா
நல்லசமுத்திரம் -அருணாசலம்
ராசிபுரம் - விஜயலட்சுமி
திருச்சி - பேலஸ்,
கரூர் - லட்சுமி ராம்
சென்னை பாலாஜி
உழைக்கும் கரங்கள்
தினசரி 2 காட்சிகள்
( நண்பகல் /மாலை )
மதுரை சென்ட்ரல்
தேடி வந்த மாப்பிள்ளை
தினசரி 4 காட்சிகள்
திண்டுக்கல் என். வீ.ஜி. பி.- புதுமை பித்தன்
தினசரி 4 காட்சிகள்
கூடலூர் (கம்பம் ) வேல்முருகன்
ஆயிரத்தில் ஒருவன்
தினசரி 4 காட்சிகள்
திருப்பூர் அனுப்பர்பாளையம்
மணீஸ் அரங்கு
எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள்
திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் அரங்கில்
இன்று போல் என்றும் வாழ்க
வெள்ளி / சனி/ஞாயிறு
21/22/23/02/20
தினசரி இரவு காட்சி மட்டும்
கோவை கர்நாடிக் (23/02/20)ஞாயிறு முதல் எங்க வீட்டு பிள்ளை
தினசரி 4 காட்சிகள்
(வெள்ளியன்று வெளியான புதிய படத்திற்கு வரவேற்பும்/வசூலும் அறவே இல்லாததால்)......... Thanks to mr.Loganathan Sir...
-
நாளை ஞாயிறு முதல் (23/02/2020) சென்னை திருவொற்றி யூர் எம்.எஸ்.எம்.அரங்கில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.வழங்கும் "நம்நாடு" தினசரி 2 காட்சிகள் (மேட்னி/இரவு) வெள்ளி திரைக்கு வருகிறது... Thanks mr.Loganathan Sir...
-
புதிய படங்களின் வருகையால் மதுரை வெற்றி, அண்ணாமலை அரங்குகளில் ரகசிய போலீஸ் 115 படம் வெளியாவது தள்ளி வைப்பு.
-
நாளை ஞாயிறு முதல் (23/02/20) சென்னை திருவொற்றி யூர் எம்.எஸ்.எம்.அரங்கில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.வழங்கும் "நம்நாடு" தினசரி 2 காட்சிகள் (மேட்னி/இரவு) வெள்ளி திரைக்கு வருகிறது
-
சேலம் சரஸ்வதி அரங்கில் 21/02/20 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் எங்க வீட்டு பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
-
நாங்கள் எந்த நிலையிலும் வணங்கப்படும் தெய்வம் புரட்சி தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு இரண்டு கட்டம்.ஒன்று திரையுலகம்.அதில் தலைவரே வெற்றி கொடி நாட்டி இன்று வரை தொய்வில்லாமல் பறக்க செய்துவிட்டார்.இன்னொன்று கழகம்.அதை ஒவ்வொரு பருவத்திலும் யாராவது ஒருவர் தலைமை தாங்கி பண்பாகவும் சமயோகிதமாகவும் தொண்டர் படையை வழிநடத்திதான் வெற்றி பெறவேண்டும். ஆனால் புரட்சி தலைவியாகிய தாங்கள் எதிரியின் நிழலை பார்த்தாலே நெற்றிக்கண் திறந்து எரித்துவிடுவீர்கள். அந்த அளவிற்கு கழகத்தை ராணுவகட்டு கோப்புடன் பொதுமக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக 30 ஆண்டுகள் புரட்சிதலைவர் உருவாக்கிய கழகத்தை கட்டிக்காத்து இன்று வரை தொய்வில்லாமல் நடைபெறவும் வழிகாட்டிய உங்கள் சேவைக்கு நன்றி செலுத்த 72 வது பிறந்த நாளில்(24.2.2020) கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வணங்குகிறோம். இவன். ஷிவபெருமாள்.......... Thanks.........
-
தற்போது வெற்றி நடை காண்கிறார், திரையுலக வசூல் சக்கரவர்த்தி "எங்க வீட்டு பிள்ளை" கோவை - காவேரி a/c dts., திரையரங்கிலும்...
-
இப்பொழுதும் வெற்றி நடை போடும் ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் திகட்டாத காவியமாம் "ரகசிய போலீஸ் 115" டிஜிட்டல் வடிவம் திருச்சி, கரூர் , சேலம் உட்பட பல செண்டர்களில் அசத்துகிறார், ஆனால் நாளிதழ்களில் எந்த விதமான விளம்பரம் தரவில்லை... மாறாக ஓடாத படங்களை, டிக்கெட் கிழித்து வசூலானதாக கணக்கு காண்பிக்கும் டப்பா படங்களுக்கு வேலை மெனக்கெட்டு விளம்பரம் தரும் ஆத்மாக்களை என்னவென்று சொல்வது?!☺️
-
-
-
-
-
-
-
-
-
கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும்
--------------------------------------------------------------
நன்றி: திரு.சுதாங்கன்
பி.ஆர் . பந்*துலு படம் ஒன்*றிற்கு வாலி பாட்*டெ*ழு*தும் பொழுது, ` நல்ல இலக்*கிய நயத்*தோடு இந்த டூயட் இருக்*க*லாம்’ என்று எம்.ஜி.ஆர்., வாலி*யி*டம் சொன்*னார். அந்த மாதி*ரியே ஒரு பல்*ல*வியை எழுதி விஸ்*வ*நா*த*னி*டம் கொடுத்*தார் வாலி. `அண்ணே, இந்த பல்*லவி சரித்*தி*ரப் படத்*துக்*குத்*தான் நல்லா இருக்*கும். இது சமூ*கப் படம். வேற எழு*திக் கொடுங்க’ என்று விஸ்*வ*நா*தன் வாலி எழு*திய பாடலை அவ*ரி*டமே திருப்பி கொடுத்*து*விட்*டார்.
வாலி வேறு பாடல் எழுதி, அந்*தப் பாடல் ஒலிப்*ப*தி*வா*யிற்று.
அன்று மாலை வாலிக்கு கே. வி. மகா*தே*வன் கம்*போ*சிங். படம் `அரச கட்*டளை.’ அது சரித்*தி*ரப் படம் என்*ப*தால், காலை*யில் விஸ்*வ*நா*த*னி*டம் காட்*டிய அதே பல்*ல*வியை மகா*தே*வ*னி*டம் கொடுத்து இசை*ய*மைக்க வேண்*டி*னார். ‘அரச கட்*டளை’ படத்தை பார*கன் டாக்*கீ*சில் பார்த்து விட்டு வந்து நள்*ளி*ர*வில் வாலிக்கு போன் செய்*தார் விஸ்*வ*நா*தன்.
`வாலி*யண்ணே, நான் சொன்ன மாதி*ரியே, அந்*தப் பாட்டு சரித்*தி*ரக் கதைக்கு எவ்*வ*ளவு பொருத்*தமா இருந்*தது பாத்*தீங்*களா?’ மாமா ரொம்ப அற்*பு*தமா டியூன் பண்*ணி*யி*ருக்*காரு’ என்று மனந்*தி*றந்து பேசி*னார் விஸ்*வ*நா*தன்.
அது*தான் விஸ்*வ*நா*தன். இன்*னொரு இசை*ய*மைப்*பா*ள*ரா*யி*னும் அவர் தம் பணி அவர் சிந்*தையை கவ*ரு*மா*யின், வாய்*விட்டு ஆர*வா*ர*மா*கப் பாராட்*டு*வார் விஸ்*வ*நா*தன்.காம்*போதி ராகத்*தில் `மெழு*குத்*திரி’ என்ற ஒரு பாடலை பூவை செங்*குட்*டு*வன் எழு*தி*யது. அம*ரர் எம்.பி. ஸ்ரீனி*வா*சன் அற்*பு*த*மாக இசை*ய*மைத்*தி*ருந்*தார். அவர் வீடு தேடிச் சென்று பாராட்*டி*னார் விஸ்*வ*நா*தன்.
`அரச கட்*டளை’ படத்*தில் இடம்*பெற்ற வாலி*யின் பாடல் இது*தான்.
`புத்*தம் புதிய புத்*த*கமே – உனைப்
புரட்*டிப் பார்க்*கும் புல*வன் நான்
பொதிகை வளர்த்த செந்*த*மிழே உனைப்
...
பாட்*டில் வடிக்*கும் கவி*ஞன் நான்’......... Thanks...
-
-
-
குமுதம் வார இதழ் -04/03/20
----------------------------------------------
நடையல்ல நாட்டியமே தான் -- ஆர்.சி.சம்பத்*
--------------------------------------------------------------------------
சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் நான் பணியாற்றியபோது எம்.ஜி.ஆருடன் நட்பு ஏற்பட்டது .* அவரை வைத்து ஒரு சமூக கதையை படமாக்க விரும்பினேன் . பாக்கெட் மார் என்னும் இந்தி படத்தை போட்டுக் காட்டினேன் .* சரி இந்த கதையை யே* எடுக்கலாம் . எனக்கு இது ரொம்ப பிடித்திருக்கிறது என்றார் .* படத்திற்கு " திருடாதே" என்று பெயர் சூட்டினோம் .*
அப்போது நான் எழுதிய தங்கமலை ரகசியம் படத்தினை பி.ஆர். பந்துலு எடுத்துக் கொண்டிருந்தார் .* ஒருநாள் சென்னை கடற்கரையில் தனியாகஉட்கார்ந்து கொண்டிருந்தேன் .* அப்போது அங்கு டைரக்டர் சுப்ரமணியம் புதல்வி* பத்மா சுப்பிரமணியம் வந்தார் .* அவர் கூடவே ஒரு பெண்ணும் வந்தாள் .**
பல விஷயங்களை பற்றி பேசிக் கொண்டு வரும்போது நான் தங்கமலை ரகசியம் படத்திற்கு கதை எழுதி இருப்பதையும் அதில் வேலை செய்து வருவதையும் சொன்னேன் .**
உடனே, பத்மா , இந்த பெண் பெங்களூரை சேர்ந்தவள்.* தாய்மொழி கன்னடம் .* தமிழ் படத்தில் நடிக்க ஒரு சிறு சான்ஸ் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .
தங்கமலை ரகசியம் படத்தில் நடனமணிகளில் ஒருத்தியாக நடிக்க வைத்தோம் . சிறு வேடம்தான் . சம்பளம் இருநூற்று ஐம்பது .* அந்த பெண்தான் பின்னாளில் பெரிய கதாநாயகியாக விளங்கிய சரோஜாதேவி .**
எம்.ஜி.ஆரிடம் , புதுமுகம் சரோஜாதேவி பற்றி சொன்னேன் .* ஒரு டெஸ்ட் எடுங்கள்* பார்க்கலாம் என்றார் .* டெஸ்ட் எடுப்பது என்பது பலவிதமாக நடிக்க சொல்லி படமாக எடுப்பது .**
டெஸ்டை எம்.ஜி.ஆர். பார்த்தார் .* கூட நாங்கள் சிலரும் பார்த்தோம் .* சரோஜாதேவி நடந்து போகும்போது ஒரு காலை தாங்கி தாங்கி* நடந்து சென்றதை சிலர் எம்.ஜி.ஆரிடம் சுட்டி காட்டினார்கள் .* அதற்கு எம்.ஜி.ஆர்.*அதுவும் ஒரு செக்ஸியாகத்தானே இருக்கிறது .* இந்த பெண்ணையே* கதாநாயகியாக போட்டு விடுங்கள் என்றார் .* திருடாதே திரைப்படமாக்க மிக பெரிய வெற்றி கண்டது .* எம்.ஜி.ஆறுக்கும் வெற்றிகரமான முதல் சமூக படமாக அமைந்து , அவரது வளர்ச்சிக்கு திருப்பு முனை ஆனது .
--சின்ன அண்ணாமலை .
-
நேற்று கேரளா வடவனூர் உள்ள புரட்சித்தலை வரின் இல்லமான பலயை வீட்டை புதுப்பித்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா விழா நடந்தது ,அதில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ,நடிகர் இயங்குனர் மான பாண்டியன்ராஜன் ,புரட்சித்தலைவரின் வளர்ப்பு மகள் ராமவரம் தோட்டத்தில் வசிக்கும் லதா மேடம் தலைவர் உறவினர்கள் பல ஊர்கலிருந்து தலைவர் பக்தர்கள் கலந்து கொண்டனர் ,சென்னை முன்னாள் மேயர் அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் இந்த வீட்டை புதுப்பித்து கொடுத்து எங்களுக்கு காணும் பாக்கியம் ஏற்படுத்தி கொடுத்த அண்ணன் அவர்களுக்கு கோவை பக்தர்கள் சார்பில் நன்றி நன்றி,......... Thanks.........
-
-
-
-
ஸ்ரீ MGR வாழ்க
நடித்தால் துள்ளல்
கொடுத்தால் வள்ளல்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் நம் உயிரினும் மேலான தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர்
பாண்டிச்சேரி மாநில அண்ணா திமுக முதலமைச்சர் ராமசாமி அவர்கள்
///////////////////////////////////////////////////////
முகநூல் எம்ஜிஆர் பக்தர்களே
1972 ஆண்டு மதுரையிலே ஒரு பிரம்மாண்டமான திமுக மகாநாடு நடைபெற்றது
கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தார்
எம்ஜிஆர் திமுகழகத்தின் பொருளாளராக பதவி வகித்தார்
///;///////////////////?//////////////////////////////
இந்த மகாநாட்டில் ஒரு மிகப்பெரிய சிறப்பான புதுமையான அம்சம் ஒன்று நடைபெற்றது
இப்பொழுது கட்டவுட் பிளக்ஸ் போர்டு வைப்பது போன்று அந்த காலகட்டத்தில்
பிரம்மாண்டமாக கடை வீதிகளிலும் முக்கியமான இடங்களிலும் ஆர்ச் அமைப்பார்கள்
மூங்கில் தென்னங்கீற்று இவைகளை பயன்படுத்தி ஆர்ச் அமைப்பார்கள்
மதுரையில் அமைக்கப்பட்ட ஆர்ச்களைப் பற்றி இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியது
இந்த ஆர்ச்களை பார்ப்பதற்காகவே அனைத்து கட்சியை சேர்ந்த அரசியல் கட்சி தொண்டர்கள் எல்லாம் மதுரையில் வந்து குவிந்தார்கள்
மதுரை மாவட்டச் செயலாளர் முத்து அவர்கள் இந்த மாநாட்டை நடத்தினார்
சனி ஞாயிறு இரண்டு நாட்கள் அந்த மகாநாடு நடைபெற்றது
அந்த மகாநாட்டின் ஊர்வலத்திற்கு தலைமை மு க முத்து
மு க முத்து அவர்களுக்கு மதுரை முழுவதும் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் வண்ண வண்ணமாக ஒட்டப்பட்டிருந்தன
////////////////////////?/////////?//?///////////////
எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாங்கள் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை காலை மதுரை சென்றடைந்தோம்
ஊர்வலம் புறப்படுகிற / வண்டியூர் தெப்ப குளம் மைதானத்திலிருந்து
நாங்கள் நடந்தே வழியில் உள்ள அனைத்து ஆர்ச்களையும் பார்த்துக்கொண்டே வந்தோம்
ஒவ்வொரு ஆர்ச்களையும் பார்த்துக் கொண்டு வரும் பொழுது எங்களுக்கு மிகவும் பயங்கரமான கோபம் வந்தது
அனைத்திலும் கருணாநிதி அவர்களுடைய படங்கள்தான் இருந்தன
அடுத்து மதுரை முத்து அவர்களுடைய படங்களும் இருந்தன
ஆனால் அந்த மகா நாட்டிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆர்ச் இருந்தது
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த. எஸ் எஸ் தென்னரசு அவர்களுக்கு ஒரு ஆர்ச்
வைத்திருந்தார்கள்
ஆனால் 1967 இல் இருந்து திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த எம்ஜிஆர் அவர்களுடைய படம் எங்குமே கிடையாது
ஒவ்வொரு தேர்தலிலும் எம்ஜிஆர் ரசிகர்கள்திமுகவுக்காக ஓடிஓடி நாங்கள் உழைத்தோம்
எம்ஜிஆருக்காக தான் திமுகவிற்கு உழைத்தோம்
1967 ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில்
பழனி தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு நான் தேர்தல் வேலை செய்தேன்
1971 ஆண்டு நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது
பழனி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட புலவர் பழனிச்சாமி அவர்களுக்காகவும் நான் தேர்தல் வேலை செய்தேன்
எம்ஜிஆர் ரசிகன் ஆகிய நாம் எம்ஜிஆருக்காக நான் இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டேன்
என்னைப்போல் தமிழ் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான , கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் காகத்தான் திமுகவுக்கு ஓட்டு கேட்டார்கள்
அப்படிப்பட்ட எம்ஜிஆர் அவர்களுக்கு எந்த இடத்திலும் ஆர்ச் கிடையாது
மகாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று நாங்கள் முடிவு எடுத்தோம்
மறுநாள் எம்ஜிஆர் மகாநாட்டில் பேசுகிறார் அந்த நேரத்தில் மகாநாட்டிற்கு சென்று எம்ஜிஆரின் பேச்சைக் கேட்டுவிட்டு வந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்
ஆகவே நாங்கள் மகாநாட்டிற்கு செல்லாமல்
தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ள. நான் ஏன் பிறந்தேன் என்ற சினிமாவை பார்க்கலாம் என்று நாங்கள் சென்றோம்
செல்லும் வழியில் ஒரு மாடியின் மீது மதுரை நகர எம்ஜிஆர் மன்றம் என்று ஒரு போர்டு மாட்டி இருந்தது
நாங்கள் அந்த மாடிக்கு சென்றோம்
மாடியில் ஒரு சிறிய அறை
அது இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள்
அவர்கள் யார் என்று நான் கேட்டேன்
மதுரை நகர தலைமை எம்ஜிஆர் மன்ற தலைவர் / தங்கம்
எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த. இளவரசன்
அவர்களைசுற்றி பயங்கரமான எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டம்
கூட்டத்தில் வந்திருந்த அந்த எம்ஜிஆர் ரசிகர்கள்
உட்கார்ந்திருந்த அந்த இரண்டு பேர்களிடமும்
திட்டம் போட்டு இந்த மகாநாட்டில் எம்ஜிஆரை இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்
என்று ஆக்ரோசமாக கூறினார்கள்
அதற்குத் தங்கம் அவர்கள்
நாளை காலை விமானத்தில் எம்ஜிஆர் அவர்கள் மதுரை வருகிறார்
பாண்டியன் ஓட்டலில் தங்குகிறார்
அவரை சந்தித்துஅனைத்து விவரங்களையும் கூறலாம் என்று கூறினார்
மறுநாள் காலை 11 மணிக்கெல்லாம் நாங்கள் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு சென்று விட்டோம்
எம்ஜிஆர் அவர்கள் விமானநிலையத்தை விட்டு புறப்பட்டடு விட்டார்
இன்னும் சிறிது நேரத்தில் பாண்டியன் ஹோட்டல் வந்துவிடுவார் என்று கூறினார்கள்
நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது கூட்டம் பயங்கரமாக கூடிவிட்டது
போலீஸார் எங்களை எல்லாம் பாண்டியன் ஓட்டல் முன் நிற்க விடாமல் அப்புறப் படுத்துகிறார்கள்
ஏன் எம்ஜிஆர் வருவதற்கு இவ்வளவு காலதாமதம்
அதற்கு என்ன காரணம் என்று பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது
மூன்று நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு சர்க்கஸ் கம்பெனி
,தீ விபத்தில் கருகி விட்டது
அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு சென்று
அங்குள்ள சர்க்கஸ் கம்பெனி தொழிலாளர்களைஎல்லாம் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு
அவர்களுக்கு10 பத்தாயிரம் ரூபாய் நிதி கொடுத்து விட்டு பிறகு பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தார்
பிறகு எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த
தங்கம்/ இளவரசன் / ஸ்ரீவில்லிப்புத்தூர் தாமரைக்கனி
இவர்களை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்தார்கள்
மாலையில் எம்ஜிஆர் பேசுகிறார் என்ற காரணத்திற்காக நாங்கள் 2மணிக்கு
டிக்கெட் வாங்கிக்கொண்டு மகா நாட்டிற்குள் சென்றோம்
நாங்கள் சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எம்ஜிஆர் அவர்கள் பேச ஆரம்பித்தார்
எம்ஜிஆர் அவர்கள் பேசி முடிந்ததும் நாங்கள் எல்லாம் மகாநாட்டு கொட்டகை விட்டு வெளியேறினோம்
மகாநாட்டில் இருந்த பெரும்பாலான மக்கள் வெளியேறினார்கள்
உடனே மதுரை நகர கவுன்சிலர /
M.R. கனேசன் என்பவர்
எல்லோரும் அமைதியாக அமருங்கள் கட்சித் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பேசுவார்கள் உட்காருங்கள் உட்காருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார்
மகா நாட்டிலிருந்த முக்கால்வாசி மக்கள் வெளியேறி விட்டார்கள்
நாங்கள் மகாநாட்டு கொட்டகைக்கு வெளியே நின்று கொண்டிருக்கும்போது மைக்கில் ஒரே சலசலப்பு
பேசுவதற்கு எழுந்த முதலமைச்சர்கருணாநிதி அவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார்
இப்படி எம்ஜிஆருக்காக எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லாம் திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டோம்
அடுத்து சில மாதங்களில் எம்ஜிஆர் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்
/////////////////////////////////////////////////////
எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தார்
நாங்களெல்லாம் எம்ஜிஆருக்கு பின்னால் வந்து அண்ணா திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டோம்
அண்ணா திமுக மேடையில் நாங்களெல்லாம் கருணாநிதி அவர்களைப் பற்றி கூறிய குற்றச்சாட்டு என்ன தெரியுமா
கருணாநிதியை முதலமைச்சராக்கிய எம்ஜிஆர் அவர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று கூறினோம்
எம்ஜிஆர் உடைய படத்தை இருட்டடிப்பு செய்தார் கருணாநிதி என்று கூறினோம்
அண்ணா திமுக தொண்டர்கள் அடிபட்டு உதைபட்டு உயிரைக்கொடுத்து இந்த கட்சியைவளர்த்தார்கள்
1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்
1980 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்
1983ஆம் ஆண்டு அண்ணா திமுகவுக்கு ஜெயலலிதா வந்தார்
ஜெயலலிதா சினிமாமார்க்கெட் இழந்து ஏழு ஆண்டுகள் வீட்டில் குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்
1984 ஆண்டு எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு
எம் ஜிஆர் மரணம் அடையும் வரை
கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருந்தார்
தனியாக டெல்லி சென்று ராஜீவ் காந்தியை சந்தித்து எம்ஜிஆருக்கு உடல் நலம் சரியில்லை
இந்திய அரசியல் சட்டப்படி உடல்நலம் இல்லாதவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்க முடியாது
ஆகவே நீங்கள் எம்ஜிஆரை ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லுங்கள்
என்று ராஜீவ் காந்தியிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே வந்தார்
எம்ஜிஆர் மரணமடைந்த பிறகு
கட்சியை இரண்டாக உடைத்தார் ஜெயலலிதா
ஜானகி ஆட்சியைக் கவிழ்த்தார்
ஜானகி அணியும் ஜே அணியும் போட்டியிட்டார்கள்
கருணாநிதி முதலமைச்சர் ஆனார்
எம்ஜிஆர் உயிரோடு இருந்தவரை கருணாநிதி முதலமைச்சராக வர முடியவில்லை
ஜானகி அம்மையார் கட்சியை ஒன்றுபடுத்தி ஜெயலலிதாவிடம் கட்சியின் இரட்டை இலையை ஒப்படைத்தார்
1981 ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகாலத்திலிருந்து ஜெயலலிதா மரணம் அடையும் வரை எம்ஜிஆர் பெயரை சொல்ல விடாமல் எம்ஜிஆர் படங்களை
இருட்டடிப்பு செய்து ஆட்சி நடத்தினார்
கருணாநிதி அவர்கள் எம்ஜிஆர் படத்தை இருட்டடிப்பு செய்து ஆட்சி நடத்துகிறார் என்ற காரணத்திற்காக கருணாநிதி மேல் பயங்கர கோபம் எங்களுக்கு வந்தது
அதே காரியத்தை தான் ஜெய லலிதாவும் செய்தார் கருணாநிதி என்ன எம்ஜிஆருக்கு கெடுதல் செய்தாரோ
அதை விட லட்சம் மடங்கு ஜெயலலிதா எம்ஜிஆருக்கு துரோகம் செய்தார்
கருணாநிதியின் ஊழலை எதிர்த்து தான் அண்ணா திமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டது
1972 ஆண்டு
மு க முத்து உங்கப்பனுக்கு ஏது சொத்து என்று நாங்கள் கோஷம் போட்டோம்
இப்பொழுது திமுகவினர்
அண்ணா திமுக தொண்டர்களை பார்த்து
ஒங்கஅம்மாவுக்கு ஏதுடா ஒன்றரை லட்சம் கோடி சொத்து என்று
கேலி செய்கிறார்கள் கிண்டல் செய்கிறார்கள் நக்கல் செய்கிறார்கள் நையாண்டி செய்கிறார்கள்
எங்கள் கலைஞர் அவர்களைப் பார்த்து சர்க்காரியா கமிஷன் குற்றவாளி என்று கூறினீர்கள்
உங்க அம்மா பெங்களூர் கமிஷன்கோர்ட் குற்றவாளி என்று கிண்டல் செய்கிறார்கள்
எங்களைப் போன்ற பழைய அண்ணா திமுகவினர் தலைகுனிந்து செல்கிறோம்
ஜெயலலிதா ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து அண்ணா திமுக வைஊழல் கட்சி என்ற பெயரை உருவாக்கி விட்டார்
கருணாநிதி எம்ஜிஆர் க்குதுரோகம் செய்தால் எம்ஜிஆர் ரசிகர்கள்
கருணாநிதியை
தீயசக்தி கருணாநிதி என்கிறார்கள்
கருணாநிதியை விட. லட்சம் மடங்கு எம்ஜிஆருக்கு கெடுதல் செய்த
ஜெயலலிதாவை நல்ல சக்தி என் கிறார்கள்
பழைய எம்ஜிஆர் ரசிகர்கள்
இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன
இந்தப் பதிவைடைப்செய்து என் விரல்கள் எல்லாம் வலி எடுத்து விட்டன
அடுத்து நான் இன்னும் பல பழைய விஷயங்களை உங்களிடம் பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம்......... (இது ஒரு ரசிக சகோதரரின் சொந்த கருத்து)... Thanks.........
-
தனியார் தொலைக்காட்சிகளில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு*
---------------------------------------------------------------------------------------------------------------------------
27/02/20* * *- கே டிவி* *- பிற்பகல் 1* மணி - நான் ஆணையிட்டால்*
29/02/20* * * * கே. டிவி. - பிற்பகல்* 1 மணி* - விவசாயி*
02/03/20* * * * *கே. டிவி -பிற்பகல் 1 மணி* - மகாதேவி*
05/03/20* * * * *கே. டிவி -பிற்பகல் 1 மணி - ராமன் தேடிய சீதை*
07/03/20* * * * *கே டிவி. -பிற்பகல் 1 மணி -தாய் சொல்லை தட்டாதே
-
தென்னக ஜேம்ஸ் பாண்ட்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மதுரை ,தேனீ, பழனி நகரங்களுக்கு வெற்றி விஜயம் .
----------------------------------------------------------------------------------------------------------------------
நாளை முதல் (28/02/20)* மதுரை வெற்றி, தேனீ -வெற்றி, பழனி சந்தானகிருஷ்ணா*அரங்குகளில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். தென்னக ஜேம்ஸ் பாண்டாக நடித்த*ரகசிய போலீஸ் 115 டிஜிட்டல் வடிவில் வசூல் வேட்டை .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ் குமார் , நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .
-
நாளை முதல் (28/02/20, 29/02/20,01/03/20) வெள்ளி /சனி /ஞாயிறு இரவு 8 மணி காட்சியில் மட்டும் திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "முகராசி " திரையிடப்படுகிறது . குறுகிய இடைவெளியில் 6 வது*திரைக்காவியம் .
தகவல் உதவி ;திருப்பூர் நண்பர் திரு.நடராசன் .
-
உலக எம் ஜி ஆர் பேரவை ! உலக பக்தர்களை ஓரணியில் ஒருங்கிணைப்பது - தலைவர் புகழ் காக்க உலக மாநாடுகள் நடத்துவது - தலைவர் புகழ் போற்ற விழாக்கல் நடத்துவது என்பதோடு நிற்க்காமல் அடுத்த தலைமுறைக்கு மக்கள் திலகம் புகழ் பரவ வேண்டும் என்பதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயலாற்றுகிறது ! அவ்வகையில் உலக எம் ஜி ஆர் பேரவையின் அங்கமாக திகழும் அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் தலைவரின் மிகப் பெரும் பக்தர் சைலீஸ்பாசு தலமையில் இயங்கும் "அபுதாபி எம் ஜி ஆர் பேரவை " அனுசரணையுடன் நடக்கும் கால் பந்து போட்டி வரும் 28/2/2020 அன்று அபுதாபியில் நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம் ! மக்கள் திலகத்தின் உலக பக்தர்கள் பெருமையுடன் வாழ்த்தி வரவேற்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ! ( நான்கு ஆண்டுகளாக் போட்டிகள் நடந்தாலும் , இவ்வாண்டுதான் உலக எம் ஜி ஆர் பேரவையில் பதிவு பெற்று நடத்தப்படுகிறது )
-
தினமணி -கொண்டாட்டம் -23/02/20
---------------------------------------------------------
ரோஜா மலரே - சச்சு*
------------------------------------
அந்த காலத்தில் எங்களுக்கு வேலையே சினிமாவில் நடிப்பது மட்டுமல்ல .* சினிமா பார்ப்பதுதான் .* ஜனக் ஜனக் பாயல் பாஜே என்று ஒரு இந்தி படம் வந்தது .* அந்த படத்தை இயக்கியவர் வி.சாந்தாராம் .* அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் .ஒரு செய்தியை இங்கு முக்கியமாக சொல்ல விரும்புகிறேன் .**
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம் ஒரு நாள் இயக்குனர் வி.சாந்தாராம் சென்னைக்கு வருகை புரிந்தார் .* அப்போது நவரங் படம் எடுத்ததற்காக அவருக்கு பரிசு ஒன்றை அளிக்க விரும்பினார் எம்.ஜி.ஆர். நவ என்றால் 9 என்று அர்த்தம் .* அதனால் அவருக்கு 9 ச்வரனில் தங்க செயினை செய்து பரிசளிக்க விரும்பினார் .*
அந்த நாளும் வந்தது .மேடையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் ,முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கூட அமர்ந்திருந்தனர் .* இந்த சந்தர்ப்பத்தில் தான் கொண்டு வந்த செயினை இயக்குனர் சாந்தாராமிடம் கொடுக்க, அவர் எம்.ஜி.ஆரை பார்த்து, நீங்களே எனக்கு போட்டு விடுங்கள் என்று கூற , எம்.ஜி.ஆர். அவர் கழுத்தில் போட முயற்சிக்க , அது கை தவறி கீழே விழ, உடனே எம்.ஜி.ஆர். குனிந்து அதை எடுக்க முயற்சிக்க , புகைப்படக்காரர்கள் படமெடுக்க, அது சாந்தாராம் காலில் எம்.ஜி.ஆர். விழுந்தது போல் இருந்தது .* அடுத்த நாள் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர். என்ன சொன்னார் தெரியுமா ?* நான் அவர் காலில் விழுந்தாலும் தவறொன்றுமில்லை . மிக பெரிய இயக்குனர் மட்டும் இல்லை. என்னை விட எல்லாவிதத்திலும் அவர் பெரியவர் என்று கூறினாராம் .**
1975ல்* எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான படம் இயக்குனர் சாந்தாராம் எடுத்த ஒரு படத்தின் தமிழாக்கம்தான் .* ஆமாம் , சிறை தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே* அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கும் ஒரு சிறந்த படத்தை எடுத்துள்ளார் . வி.சாந்தாராம் .* அதுதான் தோ* ஆங்கேன்* பாரா ஹாத் என்ற படம். இந்த படம் இந்திய திரையுலகில் ஒரு மைல் கல் என்று கூறலாம் .* பெர்லின் நகரில் நடந்த ஒரு திரைப்படவிழாவில்* வெள்ளி கரடி விருதையும், அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது .* இந்த திரைப்படத்தை தான் எம்.ஜி.ஆர். தனது நடிப்பில் " பல்லாண்டு வாழ்க " என்று தமிழில் நடித்து வெற்றி படமாக்கினார் என்பது வரலாறு .**
-
சென்னை மூலக்கடை- ஐயப்பா DTS., இன்று 28-02-2020 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான தொடக்கம்... என்றும் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "நேற்று இன்று நாளை" காவியம் தினசரி 3 காட்சிகள் வெற்றி பவனி உலா......... Thanks.........
-
இன்று முதல் (28/02/20)* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் திரைக்காவியங்கள்*தமிழகத்தில் வெளியான பட்டியல்*
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரகசிய போலீஸ் 115 - மதுரை வெற்றி , தேனீ வெற்றி , பழனி - சந்தான கிருஷ்ணா**-* *இணைந்த 2 வது* வாரம்.* - தினசரி 4 காட்சிகள்*
நேற்று இன்று நாளை - சென்னை மூலக்கடை ஐயப்பா - தினசரி 3 காட்சிகள்*
நம் நாடு* * * * * * * * * * - நகரி (ஆந்திர பிரதேசம் ) ஸ்ரீநிவாஸா* அரங்கில்* * தினசரி 2 காட்சிகள் -இணைந்த 6 வது* வாரம் .
விவசாயி* * * * * * * - கோவை சண்முகா - தினசரி 4 காட்சிகள் .கடந்த டிசம்பர் மாதம்***கோவை டிலைட்டில் தினசரி 2 காட்சிகள் நடைபெற்றது .
ஆயிரத்தில் ஒருவன் - கீரனூர் லட்சுமி யில்* (திருச்சி மாவட்டம் ) - தினசரி 4 காட்சிகள்*
முகராசி* * * * * * * * * - திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் -வெள்ளி /சனி /ஞாயிறு***தினசரி* இரவு காட்சி மட்டும் .
ரிக் ஷாக் காரன்* - தஞ்சை விஜயா* ( 21/02/20முதல் ) தினசரி 4 காட்சிகள்* *நடைபெற்றது .
-
வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் அவர்களின் வசூல் வேட்டை தொடர்கிறது*
---------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை சென்ட்ரலில் கடந்த வாரம் வெளியான நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின்*தேடி வந்த மாப்பிள்ளை* ஒரு வார வசூலாக ரூ.1,05,000/- ஈட்டி அபார சாதனை.சிவராத்திரி திருவிழா சமயத்தில் இந்த வசூல் பிரமிக்கத்தக்கது என்று விநியோகஸ்தர் தகவல் அளித்ததாக மதுரை நண்பர் திரு.எஸ். குமார் செய்தி அளித்துள்ளார் .
திருச்சி பேலஸில் கடந்த வாரம் வெளியான தென்னக ஜேம்ஸ் பாண்டாக நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த ரகசிய போலீஸ் 115 -டிஜிட்டல்* ஒரு வார வசூலாக*ரூ.98,000-/-* வசூலாகி சாதனை புரிந்ததாக திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார் . விரைவில் திருச்சி முருகனில் சாதனை தொடரும் .............
-
தமிழ் இந்து - 28/02/20
திரை நூலகம் - ஓர் உதவியாளரின் அனுபவங்கள் - ரசிகா*
---------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். எனும் உச்ச நட்சத்திரத்தின் திரையுலக வாழ்க்கை குறித்து நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வந்திருக்கின்றன.* ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய பொது வாழ்க்கையின் ஆளுமையை அருகிலிருந்து கவனித்து எழுதப்பட்ட புத்தகங்கள் அரிது எனலாம் .* "சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் " எனும் இந்த நூல் தனது சின்ன சின்ன கட்டுரைகளால் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது .* 1972 தொடங்கி , அதன்பின்* எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடைய நம்பிக்கைக்கு உரிய உதவியாளராக இருந்தவர் கே. மகாலிங்கம் .* அனுபவ சாட்சியம் போல் அமைந்திருக்கும் புத்தகம் இது .* மிக முக்கியமாக எம்.ஜி.ஆர். சந்தித்த கடினமான தருணங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்* மகாலிங்கம் என புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஐந்து முன்னுரைகளிலும் சுட்டி காட்டபட்டிருக்கிறார்* அதை 456 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் 110 குறுங்கட்டுரைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .*
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய கார்களின் பதிவெண்ணாக*4777 எப்படி தேர்வானது என்பதில் தொடங்கி, அவர் முன்னின்று நடத்திவைக்கும் திருமணங்களில் அவர் தாலியை எடுத்து கொடுக்கும் பங்கு, அவருடைய கண்டிப்பு, அன்பு, அரவணைப்பு , வள்ளல் தன்மை மணிதநேயம், வறிய மக்கள் மீதான கரிசனம் , அரசியல் சாணக்கியம் என அவருடைய பன்முக ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார் .* எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகளைத் தாண்டி, அவருடைய அரசியல் வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அறிந்து கொள்ள நினைக்கும் யாருக்கும் இந்த புத்தகம் மற்றுமொரு புதையல் .
சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் - கே.மகாலிங்கம் , மூன்றெழுத்து பதிப்பகம், ஆர். ஏ. புரம் , 54/29 , மூன்றாவது பிரதான சாலை, சென்னை -28.தொடர்புக்கு : 9444019079
-
தினமலர் -29/02/20
---------------------------------
காலத்தை வென்றவன் -2
------------------------------------------
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 103ம் பிறந்த நாள் விழா , சிங்கப்பூரில் சமீபத்தில் நடந்தது .**
காலத்தை வென்றவன் நீ - பாகம் 2 என்ற அந்த நிகழ்வில், சிங்கப்பூர் , மலேசியா*மற்றும் தமிழக கலைஞர்கள் பலர், ஆடல், பாடல் என்று அசத்தினர் .
விழாவில், 50* பேருக்கு , பாராட்டு பட்டயங்கள் வழங்கப்பட்டு , கௌரவிக்கப்பட்டனர் .* ஏழு பேருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது .**
எம்.ஜி.ஆர். , ஈவண்ட் புரோமோட்டர்ஸ்* மற்றும் அன்னை சாரதா மூவிஸ் இணைந்து,இதை நடத்தினர் .* இந்நிகழ்ச்சி, மூன் டிவி.யில் மார்ச் 1 ம்* தேதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது .**
-
தினமலர் -29/02/20
--------------------------------
மறக்க முடியுமா ?* -- ஆயிரத்தில் ஒருவன்*
----------------------------------------------------------------------
மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ? "சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் "* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இந்த வசனத்தை கேட்கும் போது , ரசிகர்கள் சிலிர்த்துக் கொள்வர். ஆம். ஒரு படத்தின் வெற்றிக்கு , வசனங்களும் முக்கியம்*
பொருளாதார சிக்கலில் சிக்கிய பி.ஆர். பந்துலுவிற்கு உதவிக்கரம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.* ஹாலிவுட் படத்திலிருந்து தழுவிய கதை, ஆயிரத்தில் ஒருவன் .**அது எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாக பொருந்தியது.**
இப்படத்தில் நடிப்பதற்காக, 1 ரூபாய் மட்டுமே, எம்.ஜி.ஆர். முன்பணமாக பெற்றுக் கொண்டார் .* படம் வெளியாகி வெற்றி பெற்றபின் , பி.ஆர். பந்துலு, தானே சென்று,*எம்.ஜி.ஆருக்கு சம்பளம் கொடுத்தார் .* *அதுவரையில் அவர் சம்பளம் கேட்கவில்லை .
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா முதன் முதலில் இணைந்து நடித்த படம் என்ற பெருமையும், விஸ்வநாதன் -ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி படம் என்கிற சோகமும் உண்டு .* *
தீவு ஒன்றில், அடிமைகளின் தலைவனாக இருக்கும் எம்.ஜி.ஆர். அங்கிருந்து மீண்டு, கொள்ளையர் கூட்டத்தில் சிக்கி, இறுதியில் அனைவரிடமும் வெற்றி பெற்று , தாய்நாட்டிற்கு எப்படி செல்கிறார் என்பதே கதையின் சுருக்கம் .**
கண்ணதாசன், வாலி, ஆகியோர் வரிகளில், பருவம் எனது பாடல், ஏன் என்ற கேள்வி, ஓடும் மேகங்களே, உன்னை நான் சந்தித்தேன், நாணமோ* இன்னும் நாணமோ, ஆடாமல் ஆடுகிறேன், அதோ அந்த பறவை போல , என அத்தனை பாடல்களும் தேன்.**
நம்பியாரும், எம்.ஜி.ஆரும், போடும் கத்தி சண்டையில், அனல்பறக்கும், ஆர்.கே.* சண்முகம் வசனத்தில் பொறி கிளம்பும் .* மொத்தத்தில், வசூலில் சூறாவளியை நிகழ்த்தியது, ஆயிரத்தில் ஒருவன் .
-
தினமலர் - வார மலர் - 23/02/20
-------------------------------------------------
சிவகங்கை மாவட்டம் ஜோ. ஜெயக்குமார் என்பவர் சொல்ல கேட்டது*
--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முறை படப்பிடிப்பிற்கு , தன காரில் சென்று கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.*அப்போது , ஒரு பள்ளி சிறுவன், செருப்பில்லாமல் வெயிலில் நடந்து போவதை*பார்த்தார் .* கார் டிரைவரின் தோளில் தட்டி, உடனே நிறுத்த சொன்னார் .
அந்த சிறுவனின் வீட்டு முகவரியையும், கால் அளவையும் குறித்து வர சொன்னார் டிரைவரும் வாங்கி வர, தயாரிப்பாளர் ஒருவரிடம், முகவரியை கொடுத்து, உடனே, புதிய தோல் செருப்பை தைத்து கொடுத்து வாருங்கள் .* அதன்பின் தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.*
தயாரிப்பாளரும், சிரமேற்கொண்டு, அதை செய்து, சிறுவனின், தந்தையிடம் இருந்து சாட்சிக்கு கையெழுத்தும் வாங்கி வந்தார் .* அதற்குள் மதியம் ஆகிவிட்டது .மதிய உணவு சாப்பிடாமலேயே*.படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் எம்.ஜி.ஆர். அந்த சிறுவன்தான் பின்னாளில், பேட்டா என்கிற மிக பெரிய நிறுவனத்தின் தென் மாநில டீலர் ஆனார் . எம்.ஜி.ஆர்.இறக்கும் வரையில், அவருக்கு செருப்பு விநியோகம்* செய்து, அவர் வற்புறுத்தி கொடுத்த தொகையை வாங்கி கொண்டார் .**
பின்னாளில் அவர், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினார் .எம்.ஜி.ஆரை அணுகியபோது,ஒரு ஜோடி செருப்பை கொடுத்து, பட வாய்ப்பை பெற்றவன் என்ற இழுக்கு எனக்கு வேண்டாம் என்று சொல்லி அன்பாக மறுத்துவிட்டார் .**
இன்று அந்த பையன் குடும்பத்தினர் தான், உலக அளவில் "ஷை பப்பீஸ் " என்ற ஷூ கம்பெனி யை நடத்தி வருகின்றனர் .**