தீபாவளி சாயங்காலம் தான் கொண்டாட வேண்டும்.
ஆம் இசையரசிக்கு வாழ்த்து சொல்லியாச்சு ... ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
Printable View
மாலை மதுரம்
'பாட்டாளியின் சபதம்' படத்திலிருந்து அதிகம் பார்த்திராத ஒரு பாடல் ராஜேஸ்வரராவ் அவர்களின் இசையமைப்பில். ஒரு நாடகக் காட்சியில் வரும் பாடல்.
பெண்டாட்டி புருஷனுக்கு பலமான சொந்தமே
பிள்ள குட்டி ஆன பின்னே பிரியாத பந்தமே
பாம்பு நிலாவை விழுங்குவது போன்ற காட்சியமைப்பு புதுமைதான். இந்தப் பாடலில் நாயகனை பாம்பு கொத்திவிடுகிறது. பேதை அவனுக்காக அழுகிறாள் நாயகி. பிழைக்க மாட்டான் என்கிறாள் நாகக்கன்னி.
அவன் பிழைக்க வேண்டுமென 'உனக்கு என்னென்ன வேண்டுமோ நான் தருகிறேன்' என்கிறாள் நாயகி ஆனால் நாகக் கன்னி மசியவில்லை. அவன் விதி அவ்வளவுதான் என்று கடுப்பேற்றுகிறாள். இறுதியில் பத்தினியான நாயகி தன் கற்பு நெறியால் அக்கினித் தேவதையாய் மாறி நாகக் கன்னிகையைச் சுட்டெரிக்க வெப்பம் தாளாது நாகக் கன்னி தான் தீண்டிய நாயகனின் உடம்பிலிருந்து விஷத்தை உறிஞ்சி அவனை உயிர் பிழைக்க வைக்கிறாள்.
தன் பதிவிரதத் தன்மையால் தன் பதியை மீட்கிறாள் நாயகி
இறுதியில் பாம்பு சரோஜாவுக்கு பொட்டு வைப்பது ஜோராக இருக்கிறது.
ஈ.வி.சரோஜாதான் நாயகி. நாட்டியம் அருமை. நாக நாட்டியமும் நன்றாக இருக்கிறது.
இசையரசி, டி.வி.ரத்தினம், சொர்ணலதா (அப்போதே ஒரு சொர்ணலதா) மூவர் இணைந்து பாடியது இப்பாடல். இயற்றியவர் உடுமலை நாராயண கவி.
இந்தப் பாடலில் நாகக் கன்னிகையாக வரும் நடிகை யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா? ராஜேஷ் சார் கூற வேண்டாம்.
http://www.youtube.com/watch?v=gytKr...yer_detailpage
முன்பு எழுதிப்பார்த்த நாட்டுப்பாடல் ஒன்று..
**
பாட்டெழுத வேணு மின்னு
…பலவாறா நெனச்சு புட்டு
நோட்டெடுத்து தெறந்து வச்சா
..நோகாம ஒங்க படம்
கோட்டுசூட்டு போட்டு கிட்டு
..கொடையைத்தான் வச்சுக் கிட்டு
நோட்டவிட்டு என்னப் பாக்க
.. நொடியிலெல்லாம் மறந்து போச்சு..
ராப்பொழுது போன மச்சான்
… ரயிலேறிப் போன மச்சான்
மேப்பார்வை பாப்ப தற்கு
…மதராஸூ போன மச்சான்
சாப்பாடு செஞ்சு புட்டேன்
..சாமியின்னும் காண லையே
கூப்பாடு போடும் நெஞ்ச
..\..குறைக்கயெப்போ வருவாக..
**
கஷ்டம் தானில்லை.காத்திருத்தல் என்பது..இந்தம்மாவிற்காவது படம் இருக்கிறது..வீட்டுக்காரரின் படம்..ம்ம்
மனதுக்குள் இருந்து துளிர்த்துப்பொங்கி வெகு அழகான மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது..
எப்பொழுது நினைத்தாலும் கேட்டாலும் இனிக்கும்பாடல்..
(இந்தப்பாடலுக்கு விளக்கமெல்லாம் கொடுக்கமாட்டேன்..அப்படியே அனுபவிக்கணும்..
*
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி
கண்ணன் முகம் மறந்துபோனால் – இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி
வீடியோ தேடினால் – சர்ப்ரைஸ்.. கார்த்திக் பாடியிருக்கிறார்.. நல்ல உருக்கம்.. நல்ல புல்லாங்குழல் இசை.. மயக்கமா இருக்குங்க.. உங்களுக்கும் வரும்..!
http://www.youtube.com/watch?feature...&v=oSnGtyaLh0E
வாசு சார். அந்த நாக் கன்னியை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். பார்ப்போம்..
நாட்டியம் தெரிந்த சின்னப் பெண் அந்த நடிகை பெயர் வித்யா என நினைவு..இந்தப் படத்தின் அறிமுகத்திற்குப் பிறகு கோடை மழை வித்யா என்றாகி விட்டது..ஆனாலும் நிறையத் தமிழில் நடிக்கவில்லை.. பின் சில மலையாளப்படங்களில் நடித்திருப்பார்..( ராஜேஷ்..கஜ கேசரியோகத்தில் வருவார்.. பார்த்திருக்கீங்களா)
படம் சித்திக் கொடுமை பற்றி என நினைக்கிறேன்.. இங்கு யாரும் இதைப்பற்றிப் பேசவில்லை என நினைக்கிறேன்.. பேசியிருந்தால் மறுபடி ஒரு முறை பார்க்கலாம்.
.பாடியவர் சித்ரா..இசை இளையராஜா படம் கோடை மழை…
காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து
தவிக்கும் மனத்தை இளக்க வருவது
வண்டாடும் அரவிந்த மலருந்தன் கண்கள்
கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்
அழகிய வரிகள் பட் கொஞ்சம் படக் படக்கென ஓடுவதால் இப்போ டைப்படிக்க முடியலை..பாட்டுப் பார்க்கலாமே..
http://www.youtube.com/watch?v=B1cRM...yer_detailpage
இது ஒரு புதிராக்கும்.. ம்க்கும்..:) துக்ளக் என்ன குலமோ என்ன கோத்திரமோ..ம்ம் அவன் வந்தான்னா அவனுக்கு என்ன சமைக்கணும் சிக்கன் மட்டன்மீனு எறா சுறா (பேஷ் பேஷ் கடவுளுக்கு நல்ல அர்ச்சனை) – என முகமது பின் துக்ளக்கில் இருந்து யாரடி நீ மோகினியில் பாட்டி வரை பல்வேறு பாத்திரங்களில் ஜொலித்த சுகுமாரி தானே..(வாராயோ தோழா வாராயோ :)
FRom Vaazhkkai (1950)
eNNi eNNi paarkka manam inbam koNdaadudhe.....
http://www.youtube.com/watch?v=VfUNJKD1lf0
Tune from Badi Bahen (1949)
Chup Chup Khade Ho Jaroor Koi Bath Hai......
http://www.youtube.com/watch?v=-btaTuMDqbE
These were popular songs in the 50s! :)
Have fun and enjoy whatever is left of DeepavaLi sweets ! :)