ஜி
ஆம் ஆம் தேருக்கு சேலை பாட்டு
நிர்மலா கொள்ளை அழகு
ஜோதிக்கு இடை உண்டோ ...
ஆம் சொர் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுவும் தூள்
சொல்லத்துடிப்பது என்ன பாடலும் சூப்பர்.
Printable View
ஜி
ஆம் ஆம் தேருக்கு சேலை பாட்டு
நிர்மலா கொள்ளை அழகு
ஜோதிக்கு இடை உண்டோ ...
ஆம் சொர் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுவும் தூள்
சொல்லத்துடிப்பது என்ன பாடலும் சூப்பர்.
எனக்கு மிகவும் பிடித்த வானமும் பூமியும் ஆலிங்கனம்
https://www.youtube.com/watch?v=-mW5rQJQyME
சினிமாவில் டிராமா
சீதையை சிறையெடுத்த ராவண காஞ்சனா:) (அடையாளமே தெரியாது) அவளைத் தனக்கு இணங்குமாறு வற்புறுத்த, சீதை மறுக்க, ராவணனோ 'தொடாமல் வைத்து தூக்கி வந்தால் மிஞ்சுகிறாய்' என்று மிரட்டி 'இனி பலத்தால் உன்னை அடைவேன்' என்று சபதமிடுகிறா(ள்)ன்.:) நாடகம் பார்க்கும் நம்பியாரிடம் உண்மையில் சீதையின் நிலைதான் படத்தில் காஞ்சுவிற்கும். டைரெக்ஷன் யுத்தியாம். கற்பு பத்தி சீதை உரைக்கையில் நம்பியார் முகம் எப்படி எரிச்சல் அடைகிறது!:)
உடனே ஹனுமான் விஜயம். ஹனுமான் குரங்கு யார் தெரியுமா? 'நடிப்புச் சுடர்'தான்.
அப்புறம் ராவணனை ராஜன் மீட் செய்வது....காஞ்சனா ராவணன் 'யாரடா குரங்கே?' என்று ராட்சஸி குரலில் ராவுவது...
'அடா புடா' என்று ராவணன் தன்னை மரியாதை இல்லாமல் பேசியதால் ஹனுமான்,
'ராமதூதன் என்று அறியாமல் என்னை 'அடா' வென்று அழைக்கத் தொடக்கி'நாய'டா.:)
இந்தா நான் சொல்லும் 'அடா'க்களை எண்ணிக் கொள்.
அடா அடா அடா
அடடா அடடா அடடா
அடடடடா அடடடடா அடடடடா
அடடா! ராஜன் குரங்கு:) அதாவது ஹனுமான் என்னா குத்து குத்துகிறது!:)
'நூறாண்டு காலம் வாழ்க' படத்தில் வரும் ஜோர் ராமாயணம் இது.
ஒரு சமயம் இப்படத்தைப் பற்றி நானும், ராகவேந்திரன் சாரும் அகம் குளிர பேசி மகிழ்ந்திருக்கிறோம். படமும் என்கிட்டே முழுசா இருக்கே.:)
https://youtu.be/fM_rPQug3YY
ஜி!
நீங்க வேற ராட்சஸி பத்தி சொல்லி வெறி கிளப்பிட்டீங்க. கூடவே அடிஷனலா நிர்மலாவையும் சேர்த்து விட்டுட்டீங்க. நியாமா? தர்மமா?:) மனசு அங்கேயே நின்னு நகர மாட்டேங்குது.
இந்தப் பாட்டப் பாருங்க. ரெண்டு பேரும் சம்பந்தப்பட்டது. கூட 'மக்கள் கலைஞர்' வேறு.
'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்'
'உங்களுக்காச்சு எங்களுக்காச்சு பாப்பமா
இந்த பொம்பளை என்ன ஆம்பளைகிட்ட தோப்பமா'
'சோ' வேற 'ஜெய்சங்கர்... ஜெய்சங்கர்' என்று 'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்' பாட்டை சாக்கா வச்சுகிட்டு நிஜமாகவே மக்கள் கலைஞரை புகழ்வது போல இருக்கும்.
சும்மா 'பாடகர் திலகம்' ஆம்பளையா வரிஞ்சி கட்டிக்கிட்டு வருவாரே பார்க்கலாம்.
'உங்களுக்காச்சு எங்களுக்காச்சு பாப்பமா
இந்த ஆம்பளையெல்லாம் பொம்பளகிட்ட தோப்பமா'
கூட ஆடும் எக்ஸ்ட்ராக்கள் டான்ஸ் சூப்பரோ சூப்பர். இந்தக் கால ஆட்டம் போல இருக்கு.
'ஜுகுஜுகுஜுகுஜூ' என்று ராட்சஸி படா ஜோர்.
நடுவில நடிகர் திலகம், மக்கள் திலகம் வேற மாட்டுவார்கள் மறைமுகமாக.
'குதிர ஏறினா மதுர வீரனா
மீச வச்சவன் கட்டபொம்மனா'
நிர்மலா டிரெஸ் 'சிக்'கோ 'சிக்'. 'பூவா தலையா'வில ரெண்டும் தனியா சண்டை போட்டுக்கும். இதுல குரூப்போட வந்து சண்டை போடுதுங்க. அட சர்தான்...
இன்னா படம்னு சொல்லலியே...'முத்துக்கு முத்தாக' ன்னு கண்டசாலா பாடுவாரே அந்தப் படம்தான்.:)
https://youtu.be/_lOpyPns18s
ஹலோ! மன தைரியம் உள்ளவங்க இந்த பார்ட்னர்களைப் பாருங்க. அப்பால நம்மள கொற சொல்லக் கூடாது.
லீலா வினோதம் புரியும் தேங்காய். அந்தபந்தமில்லாமல் தொப்பையும் தொந்தியுமாக. அவர் ஸ்டைலில் கழுத்தொடித்து.
கன்னங்கள் சிவப்பது எதனாலே
கண்களும் துடிப்பது எதனாலே
என்னென்ன நினைப்போ
ஏனிந்த நடிப்போ
உள்ளமே புரியாத பிள்ளைத்தனமோ
மகாபலிபுர கடற்கரையோர சவுக்குத் தோப்பில் சல்லாபக் காதல்.
தேங்காய் பண்ணுவதை காமெடி என்பதா...ஹீரோத்தனம் என்பதா...ஸ்டைல் என்று பொருள் கொள்வதா...கொடுமைடா சாமி.
உடை விஷயத்தில் 'கெட்டிக்காரி' லீலா.:)
மட்டை உரித்த தேங்காயாக 'தேங்காய்' :)
சுசீலா குரலில் பாடல் மட்டும் சுகமே. Hello Partners.... நிறுத்திக்கவா?:)
https://youtu.be/6jCaniwepqM
நன்றிகள் ஆயிரம் ஆதிராம் சார். உங்கள் சந்தோஷமே எனக்கு மகிழ்வு. இப்போது போல எப்போதும் 'நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து' தலைவர் சொன்னது போல.
'பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா' பாடலில் குரல்கள் மாறி நடிகைகள் வாயசைப்பதை கண்டுபிடித்து அநியாயத்துக்கு ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள். உண்மைதான். கில்லாடி சார் நீங்கள்.
பாடலின் துவக்கத்தில் பல்லவியில் மேடம் அவர்கள் ஈஸ்வரி குரலுக்கு வாயசைப்பார். அதே பல்லவி திரும்ப லஷ்மிக்கு வரும்போது அவருக்கு சுசீலா அம்மாவின் குரல்.
முதல் சரணத்தில் 'கண்பட்டு...உங்கள் கைபட்டு' லஷ்மிக்கு ஈஸ்வரி குரலில் மாறும். பின் அப்படியே தொடரும்
அடுத்த சரணத்தில் மேடத்துக்கு சுசீலா அம்மாவின் குரல். ('சொன்னால் தெரிவதில்லை எதுவும்... அதை உன்னால் தெரிந்து கொள்ள உதவும்')
பின் வரும் சரணத்தில் 'போடுங்கள்...கூண்டில் ஏற்றுங்கள்' லஷ்மிக்கு ஈஸ்வரி.
அப்புறம் மேடத்துக்கு சுசீலா குரல்தான்.
'நன்றாயிருக்குதிந்த உவமை
இந்த பெண்ணே உந்தன் சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை'
நடுவில், முடிவில் எல்லாம் கரெக்ட் தான். மேடத்துக்கு சுசீலா. லஷ்மிக்கு ஈஸ்வரி. இதுதான் கணக்கு. ஆரம்பம் மட்டும் மாறி விட்டது.
ஆனால் பாட்டு...அமர்க்களம். நிஜமாகவே கந்தர்வ கானம்தான். சலிக்கவே சலிக்காது.
https://youtu.be/DDAtnADiyGo
//ஜி!
இந்தாங்க. 'ராணி லலிதாங்கி' படத்தில் பானுமதியின் தோழி தேவிகா. முகம் ரொம்ப அகலமாகத் தெரியும். // நற நற ம்ம் வீக் எண்ட்ல ராணிலலிதாங்கீ பார்த்தே தீரணும் போல இருக்கே :) யூ ட்யூப்ல ஃபுல் மூவி இருக்கா என்ன
//டைட்டிலில் பிரமிளா என்று இடம் பெற்றிருக்கும்// அதானே .. தேவிக்யூட்டி தேவிகா பத்தி ப் பேச்சு வந்ததேன்னுபார்த்தேன்..
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால்..
ஒரு பெரிய கவிஞர் எல்.வைத்தீஸ்வரன் ( கிணற்றில் விழுந்த நிலவைத் தூக்கிவ்டு என்ற கவிதை ரொம்பவே ஃபேமஸ்) சென்னையில் சந்தித்துப் பேசியது நினைவில்..அப்போதே அவருக்கு 60 வயதுக்கு மேல் என நினைக்கிறேன்.. அவர் அவரது இளமைக் காலத்தில் எஸ்.வி.சகஸ்ர நாமம் ட்ரூப்பில் நடித்திருந்தார்.. அவருடன் நடித்த பிரமீளா பற்றி நிறையச் சொன்னார்..அவர் தான் தேவிகாஎனப் பிற்காலத்தில் அறியப்பட்டவர் எனச் சொன்னதும் அனிச்சையாய்க் கைகள் பற்றிக் குலுக்கினேனாக்கும்.. :) எஸ்.வி. சகஸ்ர நாமமும் அவரது நாடக வாழ்க்கை பற்றியபுத்தகத்தில் பிரமீளா என்றே குறிப்பிட்டிருக்கிறார்..ம்ம்
ஒரு பாலாஜி படத்தில் கூட அவர் ஜோடியாக ப்ரமீளாவை (பழைய) பார்த்த நினைவு..