உலகம் மாறிவிட்டதா
ஆமாம் ரொம்ப
உலகம் மாறவில்லையா
இல்லை கொஞ்சம் கூட
தேர்ந்த வக்கீலிடம்
என் மனக் குரங்கிடம்
ஒரு கேள்வியை கேட்கணுமா
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா
Printable View
உலகம் மாறிவிட்டதா
ஆமாம் ரொம்ப
உலகம் மாறவில்லையா
இல்லை கொஞ்சம் கூட
தேர்ந்த வக்கீலிடம்
என் மனக் குரங்கிடம்
ஒரு கேள்வியை கேட்கணுமா
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா
மாட்டிக்கிட்டு முழிக்கணுமா
என யோசித்து
விவாதத்தில் கலந்துகொள்ளாமல்
இருப்பதை விட
கலந்து தீர்வு காண்பதே மேல்
பேசிக்கொண்டிருந்த தலைவரின்
செல்பேசி மெள்னமாயொலி எழுப்ப
பார்த்தால் மனைவியின் எண்..
பிற்கென்ன பேருரை சுருங்கியது..
சுருங்கியது தேகம் சூடான வார்த்தைகளால்
அமைதியான அரங்கத்தில் அழைக்கும் தூரத்தில்
அமர்ந்திருந்த நெருங்கியத் தோழன் தோழியை
சத்தம் போட்டழைக்க சங்கோஜப்பட்டு
செல்பேசி மூலம் திடுக்கிடச் செய்தேன்
அழைத்த ஓசையை அணைத்துவிட்டு
ஆருயிர்த் தோழன் உதிர்த்தான் தோழியிடம்
எழவெடுத்தவன் இவனுக்கு நேரங்காலமே தெரியாது
தெரியாது
நேரம் போவது
எவ்வெப்போது
கையில் ஒரு புத்தகம்
அருகில் காதல் துணை
திரையில் நல்ல படம்
கடற்கரைப் பொழுது
இணையத்தின் இணைப்பு
இனிப்பான தருணங்கள்
இதுபோல் எத்தனையோ
எத்தனையோ இடப்பாடுகள் தடுத்தாலும்
என் ஏற்றத்தின் படிக்கட்டு நீயே
எத்தனையோ இருப்பிடங்கள் தெரிந்தாலும்
என் அன்பின் அடைக்கலம் நீயே
எத்தனையோ பாதைகள் கடந்தாலும்
என் தேடலின் தடம் நீயே
எத்தனையோ கானங்கள் கரைந்தாலும்
என் ஆடலின் பாடல் நீயே
எத்தனையோ வெளிச்சங்கள் விழுந்தாலும்
என் கண்ணின் நிறப்பிரிகை நீயே
எத்தனையோ பருவங்கள் தொடர்ந்தாலும்
என் மண்ணின் மழை நீயே
எத்தனையோ வார்த்தைகள் உதிர்த்தாலும்
என் உயிரின் உள்ளர்த்தம் நீயே
எத்தனையோ தத்துவங்கள் உணர்ந்தாலும்
என் வாழ்நாளின் படிப்பினை நீயே
நீயே எந்தன் உயிர் என்கிறாய்
நூதனமாய் என்னை கொல்கிறாய்
அன்புச் சிறையில் மூச்சு முட்டுதே
காற்று புகா இடைவெளி காதலா
அது என் சுதந்திரத்தின் சாதலா
எங்கு சென்றாலும் பின் தொடர்கிறாய்
என்னிடம் உனக்கு மோகமா சந்தேகமா
எனக்கே எனக்கு கொஞ்சம் இடம் கொடு
இடம் கொடு என
எப்போது கேட்டாலும்
அழிச்சாட்டியம் ப்ண்ணுவான் கதிரேசன்..
அவனுக்கு கணேஷீடன் தான் இருக்கவேண்டும்..
மனமில்லாமல்
முன் பெஞ்ச்சில் அமர்ந்து கொள்வேன் பள்ளிக்காலங்களில்..
வருஷங்கள் பல செல்ல
ஒரு நன்னாளில்
பள்ளி சென்ற போது
நாங்க்ள் இருந்த வகுப்பு
பெஞ்சுகள் மாறாமல்..
என் முடியில் நரை, உடலில் மாற்றங்கள்..
கதிரேசனும் நினைவில் வந்தான்..
எங்கு இருக்கிறானோ..
போன வருடம் விபத்தில் மரித்த கணேஷும் நினைவில்..
நினைவு மயக்கத்தில்
பள்ளியின்வாசலுக்கு வந்தால்
ஒரு பெரியவர்..
இவர்..இல்லை இவன்..
கதிரேசன் வழுக்கை விழுந்து
முகச் சுருக்கம்..
அறிமுகப் படுத்திக் கொண்டு
மகிழ்ச்சி எண்ணங்க்ளில் நீந்தினால்..
கணேஷைப் பற்றிக் கேள்விப்பட்டதும்..
அவன் முகத்தில் வருத்தம்..
உனக்கு இடம் கொடுத்திருக்கலாம்டா..
அன்னிக்கு..ஏதோ..
வேறேன்ன சொல்ல முடியும்
சோகப் புன்முறவல் பரிமாறுவதைத் தவிர..
பரிமாறுவதைத் தவிர வேறு வேலைகளை
வேற்று ஆட்களிடம் கொடுக்கலாம் ஏனெனில்
சாப்பிடுபவன் பரிமாறும் கரங்களிடம் மட்டும்
சொக்கித்தான் போகிறான் பார்த்துப் பார்த்து
ருசியறிந்து பசியறிந்து பாவை பரிமாறினால்
பாங்காய் சமைத்திறக்கக் கற்காதவளும்
வயிற்று வழி சுருக்கப் பாதையில் சென்று
கொண்டவன் மனதிலே இடம் பிடிக்கலாம்
இடம் பிடிக்கலாம் முன்னாலேயே
என
சீக்கிரமாகவே
மீனாட்சி கோவிலுக்கு
கூட்டிச் சென்று விடுவாள் அம்மா..
உள்ளே சென்று
வேகமாய் தரிசித்துவிட்டு
ஆடிவீதி வந்தால்
கூட்டம் சேர ஆரம்பித்திருக்கும்..
அதிலும்
கொஞ்சம்முன்சென்று
அரைடிராய்ர் அணிந்த என்னுடன்
அமர்ந்து கொள்வாள்..
காலட்சேபம்
ராஜம் சீனிவாசனோ, வாரியாரோ..
யாராயிருந்தாலும்..
அவ்வ்ப்போது
காற்று சுகம் விசாரிக்கும்...
ஒருமணி நேரத்தில்
லேசாகப் பசியெடுக்குதோ என நினைத்தால்
குட்டிப் பையிலிருந்து
வேகவைத்த கடலை,
அல்லது வேறு ஏதாவது எட்டிப் பார்க்கும்..
சுவாரஸ்யமாயிருக்கும்
காலட்சேபமும் கடலையும்..
வீடு திரும்பினால்
லேட்டாய் வந்ததற்காக
அம்மாவிடம்
அப்பா நடத்தும் காலட்சேபம்
இன்னும் சுவாரஸ்யம்..
இந்தக் கால
காலட்சேப டிவிடிக்களில்
இல்லை அந்தச் சுவை..
சுவை அதிகம் கூட்டாஞ்சோற்றிலே
பாட்டி வீட்டு மொட்டை மாடியிலே
கட்டுச்சோற்றின் சுவை அலாதி இடம்
அழகர் மலை தேக்கடி வைகையணையெனின்
குழம்பு கூட்டு துவையல் சுவையோ சுவை
அம்மா தன் கையால் செய்து தரும் போது