எங்க வீட்டு பிள்ளை - இந்து இதழில் வெளி வந்த வந்த கட்டுரை மிகவும் அருமை .பதிவிட்ட இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு நன்றி .
Printable View
எங்க வீட்டு பிள்ளை - இந்து இதழில் வெளி வந்த வந்த கட்டுரை மிகவும் அருமை .பதிவிட்ட இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் தீவிர ஆதரவாளரும், மூத்த ரசிகரும், அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நல சங்கத்தின் துணைத்தலைவரும், ஒய்வு பெற்ற முன்னாள் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளருமான திரு. எஸ். எம். மனோகரன் அவர்களின் மகன் திரு. செந்தில்குமார் திருமணம் நாளை 07-06-2015 அன்று சென்னையில் நாளை (07-06-15) நடைபெறுவதையொட்டி அச்சடித்து விநியோகிக்கப்பட்ட பத்திரிகை :
முன் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/vdjsq8.jpg
உள் அட்டையில் பிரசுரிக்கப்பட்ட புகைப்படமும், அழைப்பிதழும்
http://i58.tinypic.com/2n64s3q.jpg
பின் அட்டை தோற்றம் :
http://i57.tinypic.com/33tjaxi.jpg
இன்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பக்தர்களும், ரசிகர்களும், அரசு அதிகாரிகளும் ஏராளமான அளவில் திரண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், மணமக்களை வாழ்த்தும் தோற்றத்துடன், மிகப்பெரிய பதாகை கல்யாண மண்டபத்தின் முகப்பில் வைக்கப்படிருந்தது. காண்போர் அனைவரையும் இந்த பதாகை கவர்ந்தது. திருமணத்துக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி இந்த பதாகையையும் அதிலுள்ள வாசகங்களையும் நின்று படித்து விட்டு, நம் மக்கள் திலகத்தை வணங்கி விட்டு, புகழ்ந்து சென்றனர். இது கண் கூடாக கண்ட காட்சி !
குறிப்பு :
பதாகை நிழற்படமும், வாசகங்களும், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியின் சில முக்கிய படங்களும் பின்னர் பதிவிடப்படும்.
http://i62.tinypic.com/k3t2zn.jpg
குடிசை மாற்று வாரியத்தலைவராக நியமிக்கப்பட்ட LATE சுலோச்சனா சம்பத் அவர்களுடன் நம் புரட்சித்தலைவர்.
Courtesy : Facebook
உலகில் பலர் தோன்றி உள்ளார்
புகழும் அடைந்துள்ளார்
ஆனால் வறுமை யின் உச்சத்தில்
பிறந்து தன் உழைப்பு ஒன்றே மூலதனமாகஂகொண்டு உழைத்து
இந்த உலகில் எவராலும் அடையமுடியாதஂபுகழ் வெற்றி சாதனை மக்களின் அன்பு பெற்று
தன் சம்பாத்தியம் திறமை அறிவு
மூலம் தனிமனிதனாகவும் அதிகாரஂ
மனிதனாகவும் தமிழகத்திற்க்கு நன்மைகள் பலசெய்து தன்னையே
தந்தவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர்
கடற்கரையில் எம் ஜி ஆர் நினைவிடத்தில் ஒருநாள் முழுவதும் நின்று பாருங்கள் ஒருமனிதன் இத்தனை கோடி மக்களின் மனதில்
கடவுளாய் வாழ்கிறாரே எனஂவியக்கத்தான் முடியும்
ஒருமனிதன் இதை விடஂபுகழ் அடையமுடியாது
தமிழகத்தில் கடவுளுக்கு அடுத்து
மக்கள் பெரும்பபெரும்யோர் மதிக்கும் ஒரே சக்தி எம் ஜி ஆர்
courtesy net
yesterday onwards (05.06.15) aayirathil oruvan screened in thangamani theater at pallikonda
msg conveyed by ramamurthy
சுதந்திரம் கிடைத்தஂஉடன் இயக்கத்தை கலைத்து விடுங்கள்
எனஂகூறினார் காந்திஜீ
அந்த இயக்கத்தின் பெயரில் தமிழகத்தில் ஆட்சி அமைத்து சிலர் வாழஂபலர் வாடஂபஞ்சத்தில் பாமரர்கள் வாடஂ
சதாரணமக்கள் வாழ்வு செழிக்கஂ
அறிஞர் அண்ணா .தி மு கஂதொடங்கி
போராடினார் இந்தஂபோரில் ஜெய்க்கஂ பிரம்மா அஸ்திரம் தான்
வேண்டும் எனஂநினைத்தார்
அண்ணா கூறுகிறார் ஊரில் ஒரு
பழம் ?பிரம்மா அஸ்திரம். . கனிந்து
இருக்கு அது யார் மடியில் விழும்
எனஂகவலையுடன் பார்த்தேன் நல்லவேளை அது என் மடியிலேவிழுந்தது ஆதை எடுத்து
என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் அவர்தான் எம் ஜி ஆர்
அந்த சக்தியை கொண்டு ஆட்சியில்
அமர்ந்த அண்ணா வை காலம் கவர்ந்தது
எம் ஜி ஆர் இல்லை எனஂகூறும் குணம் நட்பு நம்பிக்கையை துணைகொண்டு எம் ஜி ஆர் ஆதரவால் ஆட்சியில் அமர்ந்தஂ
தலைமை நாட்டை மறந்து வீட்டை
பார்க்கஂதொடங்கஂபொங்கி எழுந்தஂ
எம் ஜி ஆர் தலைமையை எதிராக
கேள்வி எழுப்பினார்
கேள்வி கேட்டதால் இந்தஂபழம்
வண்டு துழைத்து விட்டது தூரஂஎறிகிறேன் என்றது தலமை
வண்டு துழைத்தஂபழம் இனிக்கும்
எனஂமக்கள் தங்கள் மனதில் தாங்கி
னார் அண்ணா விற்க்கு மட்டுமே
இதயகனியாகஂஇருந்தஂஎம்ஜிஆர்
கோடி கணக்கான மக்களின் இதயக்கனி ஆனார் மக்கள் அவரை
எவராலும் அசைக்கமுடியாத
முதல்வர் ஆக்கினார்
சாதாரண மக்கள் மேற்கல்வி பயில
ப்ளஸஂடூ அமைத்து உலகதரம் வாய்ந்தஂஅண்ணா பொறியில் கல்லூரி போல் பலபடைத்து கல்வி
மேன்பட்டு தொழில் சிறந்து வளம் பெருகி ஒரு பொற்க்காலஂஆட்சியை
தந்தார் எம் ஜி ஆர்
இன்றும் எம் ஜி ஆர் வழி நடந்தால்
ஆட்சி அமைக்கலாம்
நேற்றும் இன்றும் நாளையும்
எம் ஜி ஆர் தமிழகத்தின் வெற்றியை
நிர்ணயிக்கும் சக்தி
courtesy net
செல்வி ஜெயலலிதா அவசரப் பட்டு முதல்வர் பொறுபேற்றார் என்பது பற்றி கருணநிதி அறிக்கையை படித்தவுடன் எனக்கு ஒரு நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது .. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இதை மெல்லிசை மன்னர் நினைவு கூர்ந்தார் ... அப்படியே வைக்கின்றேன் உங்கள் பார்வைக்காக ...
1960 கள் மெல்லிசை மன்னர் திரைத் துறையில் உச்ச நிலையில் கோலோச்சிய காலக் கட்டம் .... மக்கள் திலகத்திற்கும் நடிகர் திலகத்திற்கும் மாறி மாறி படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த காலக் கட்டம் , எப்பொழுதும் பிசி ... அந்த சமயத்தில் தான் கருணாநிதி கொடுத்தனுப்பியதாக ஒரு காகிதத்தை கொண்டு வந்து எம் எஸ் விஸ்வநாதனிடம் கருணாநிதியின் அடிபொடியான அமிர்தம் நீட்டினார் ....
வழக்கம் போல அது கருணாநிதியின் கிறுக்கல் , அதற்கு இசையமைக்க வேண்டும் என்று நெருக்கடி , மெல்லிசை மன்னர் அப்பொழுது ஏகமாக வேலை பளுவில் இருந்த காரணத்தால் , இது போன்ற வரிகளுக்கு எல்லாம் தன்னால் உடனே பாட்டிசைக்க முடியாது என்று மறுத்துவிட்டார் ... வரிகள் பாடல் அமைக்கும் விதமாக இல்லை என்பதையும் தெளிவிபடுத்தினார் .... அத்துடன் அந்த சம்பவம் நிறைவு பெற்றதாகவே மெல்லிசை மன்னரும் நினைத்தார்
நாட்கள் உருண்டோடியது .... பேரறிஞர் அண்ணா அவர்கள் பிப்ரவரி 3 1969 ம் ஆண்டு மறைந்தார் , அடுத்து முதல்வர் பதவிக்கு கருணாநிதி தேர்வு செய்யப் பட்டு முதல்வராக பொறுப்பேற்றது எல்லாம் நமக்குத் தெரியும் , அண்ணாவின் மறைவை ஒட்டி கருணாநிதி பதவியேற்றதால் , அந்த நிகழ்ச்சி பெரிய அளவில் கொண்டாட்டத்துடன் அண்டக்கவில்லை என்பதால் . மார்ச் மாதம் கருணாநிதியை பாராட்டி ஒரு விழா எடுக்க முடிவு செய்தனர் .
விழாவிற்கு எம் எஸ் விஸ்வநாதன் கச்சேரியும் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதாக சொன்னதால் , அதற்கு ஒப்புக் கொண்டு , கச்சேரிக்கான ஒத்திகையில் எம் எஸ் விஸ்வநாதன் ஈடுபட்டிருந்த பொழுது , ஒரு அதிகாரி அவரிடம் வந்து ஒரு காகிதத்தை நீட்டுகிறார் . என்ன என்று அதைப் பார்த்த பொழுது , பல வருடங்களுக்கு முன்னர் அமிர்தம் தன்னிடம் நீட்டிய அதே காகிதம் தான் என்பது புரிந்தது எம் எஸ் விஸ்வநாதனுக்கு ... முதல்வர் விரும்புகிறார் , இதற்கு நீங்கள் இசையமைத்து கச்சேரியில் பாடவேண்டும் என்று அதிகாரி சொல்லிவிட ... வேறு வழியில்லாமல் அந்த வரிகளுக்கு இசையும் அமைத்து கச்சேரியும் நடக்கிறது ...
கருணாநிதி அந்த நிகழ்ச்சியில் பேசுகிறார் , மேடையில் மக்கள் திலகம் உட்பட அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் , கீழே முன் வரிசையில் எம் எஸ் விஸ்வநாதன் ... காலமெல்லாம் பழிவாங்கும் புத்தியை பிறவிக் குணமாக சுமக்கும் கருணாநிதி , அப்பொழுது சொல்கிறார் " எம் எஸ் விஸ்வநாதன் பெரிய இசையமைப்பாளர் , எனது எழுத்துக்கு பாட்டிசைக்க அவருக்கு நேரமிருக்காது , ஆனால் அவரையே இங்கே வரவழைத்து விடும் அளவிற்கு நான் உயர்ந்திருக்கிறேன் " என்று ....
எம் எஸ் விஸ்வநாதன் கூனிக் குறுகிப் போகிறார் .... மேடையில் இருந்த மக்கள் திலகம் இதை கவனித்து விட ... இறுதியாக மைக்கை பிடிக்கிறார் ... மக்கள் திலகம் பேசியது .... " மெல்லிசை மன்னர் அருமையாக கச்சேரி அரங்கேற்றினார் ... அவர் மாமேதை , எப்படிப் பட்டவர் என்றால் , யாருடைய கிறுக்கலாக இருந்தாலும் எந்தக் குப்பையாக இருந்தாலும் அதற்கு அவர் இசையமைத்து விடுவார் " என்று சொல்ல , அரங்கமே அதிர்ந்தது கை தட்டலில் .... கருணாநிதி முகத்தில் ஈ ஆடவில்லை ...
இப்படிச் சொன்ன மக்கள் திலகம் எப்படிப் பட்டவர் தெரியுமா ? முதல் முறை அவர் முதல்வராக தேர்வு செய்யப் படவிருந்த தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது ... எல்லோரும் அவரை வாழ்த்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றால் , அவரோ , அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களின் படபிடிப்புகளை முடித்துக் கொடுக்க வாஹினி ஸ்டுடியோவில் இருந்தார் .... அவருக்காக 25 நாட்கள் நாடே காத்திருந்தது ... ஜூன் 30 பதவியேற்பு ... ஜூன் 29 ம் தேதி வாஹினி ஸ்டுடியோ வில் டப்பிங் இரவு 11.30 மணி வாக்கில் முடிகிறது ... வெளியே வருகிறார் , ஸ்டுடியோ மண்ணை முத்தமிட்டு வணங்குகிறார் ... அங்கே கூடியிருந்தவர்களிடம் அவர் சொன்னது ...
" திரைத் துறையில் நான் மன்னனாக இருந்து விட்டேன் , நாளை எடுத்துக் கொள்ளப் போகும் பதவி வெறும் மந்திரிப் பதவி தான் , மந்திரியா மன்னனா என்றால் மன்னன் தான் பெரியது என்பேன் .. நான் என்றும் உங்கள் ராமச்சந்திரன் தான் " என்றார் ...
courtesy net
Information about 1959 June 16th incident from srimgr.com
http://www.mgrroop.blogspot.in/2009/...i-1661959.html
அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நல சங்கத்தின் துணைத்தலைவரும், ஒய்வு பெற்ற முன்னாள் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளருமான திரு. எஸ். எம். மனோகரன் அவர்களின் மகன் திரு. செந்தில்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியினையொட்டி
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், மணமக்களை வாழ்த்தும் தோற்றத்துடன் வைக்கப்பட்டிப்ருந்த மிகப்பெரிய பதாகை.
http://i57.tinypic.com/s2zbcm.jpg
மணமக்களை வாழ்த்த வந்திருந்த, பொன்மனசெம்மல் எம். ஜி. ஆர். பக்தர்களும், ரசிகர்களும்.
http://i61.tinypic.com/333xqgn.jpg
http://i57.tinypic.com/21n1fk6.jpg
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டான் தங்கமணி அரங்கில், மறு வெளியீட்டில் வெள்ளிவிழா கண்டு உலக சாதனை படைத்த நம் பொன்மனச்செம்மலின் வெற்றிக்காவியம் "ஆயிரத்தில் ஒருவன்", ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. அது குறித்த விளம்பரங்கள் :
http://i61.tinypic.com/wi23r9.jpg
http://i59.tinypic.com/35buqer.jpg
http://i59.tinypic.com/inbymh.jpg
புகைப்படம் எடுத்து அனுப்பியவர் : சகோதரர் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்கள்.
1954ல் மலைக்கள்ளன் படம் பிரமாதமாக ஓடி, எம்ஜிஆருக்கு வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயரும் ஒட்டிகொண்டது .
1977 ல் அவர் திரை உலகை விட்டு விலகும் வரை வசூல் மன்னனாகவே விளங்கினார் .அதற்கு பின்னரும் அவருடைய
பழைய படங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டு வருகிறது . அநேகமாக 38 வருடங்களாக தொடர்ந்து எம்ஜிஆர் படங்கள்
தமிழகத்தில் ஓடிக்கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும் .
நன்றி - ஹரீஷ் - முகநூல்
கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' !
இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை
மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தில் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்படத்தில்" தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை.." என்று பிரகடனப்படுத்தியபடி ஒரு பாடல்.
அதில்:
" ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்.
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
வீரமுண்டு வெற்றி உண்டு ; விளையாடும் களமும் உண்டு
வா.. வா.. என் தோழா ! "
- தலைவன் சொன்னதெல்லாம் வேத வாக்காக போற்றிக் கொண்டிருந்த அதிமுக கட்சி தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு இது போதாதா ! இதை விட வேறென்ன அழைப்பு வேண்டியிருக்கப் போகிறது ?
1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, 200 இடங்களில் நின்று 130 தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டியுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. திமுகவோ வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 27 இடங்களுடனும், ஜனதா 10 இடங்களுடனும் திருப்திபட்டு கொள்ள வேண்டியதாயிற்று. அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்ஜிஆர், சுமார் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.
அரசியல் சட்டம் இடம் கொடுக்காது என்பதால், தனது கடைசிப் படமாக 'மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தை முடித்து கொடுத்து விட்டு 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
உலக வரலாற்றிலேயே, ஒரு சாதாரண சினிமா நடிகர் சொந்தமாக அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த முதலாமவர் என்ற சாதனையோடு கோட்டைக்குள் நுழைந்தார் எம்ஜிஆர்.
எந்த சினிமாவில் துக்கடா வேடத்திற்கு கூட வாய்ப்புக் கிடைக்காமல் ஸ்டுடியோ
வாசல்களில் தவம் கிடந்தாரோ, அதே சினிமாவை தனது சாதுர்யத்தால் தன்வசமாக்கி அதன் மூலமாக புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே புகுந்தார் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.
ஆம். ஒரு நாடோடி, மன்னன் ஆனார் !
'வேஷதாரி' என்று மட்டம் தட்டியவர்களையும், 'அரிதாரம் பூசிகிறவனெல்லாம் அரசாள முடியுமா' என்று நக்கலாக கேட்டவர்களையும் ' கோட்டையிலே இனிமேல் கூத்தாட்டம் தான் நடக்கும்' என்று கிண்டலடித்தவர்களையெல்லாம் வாயடைக்க செய்யும் விதத்தில் மக்கள் ஆதரவுடன் 1977ல் ஆரம்பித்து 87ல் மரணமடையும் வரை மொத்தம் 10 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 25 நாட்கள் தமிழகத்தின் முதலமைச்சராக முத்திரைப் பதித்தார்.
பாலிடிக்ஸில் பயாஸ்கோப்புக்கு தனிப் பெரும் அந்தஸ்தையும் மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்த மக்கள் திலகம் 24-12-1987ல் மண்ணுலகை விட்டு மறைந்தார், தமிழக அரசியலிலும், சினிமாவிலும் மட்டுமின்றி ஏழை எளிய மக்களின் மனதிலும் நிரந்திரமாகத் தங்கி விட்டு.
courtesy - net
தமிழ் டாக்கியில் முதன்முதலாக திமுக கொடியை பகிரங்கமாக 'நாடோடி மன்னன்' படம் வாயிலாக காண்பித்தார் எம்.ஜி.ஆர். படத்தின் டைட்டிலில் கறுப்பு- சிவப்பு கொடியுடன் ' எம்ஜியார் பிக்சர்ஸ்' என்ற பேனரை திரையில் கண்ட திமுக கட்சியினருக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு பீறிட்டுப் பொங்கிய உணர்வை- உற்சாகத்தை இங்கு எழுத்தில் கொண்டு வர முயல்வது அத்தனை சுலபமில்லை.
வீராங்கன் என்ற பெயரில் நாடோடியாக அதாவது புரட்சி வீரனாக வரும் எம்.ஜி.ஆரின் கொள்கைச் சிறப்பை அறிந்த பிறகு , மன்னன் எம்.ஜி.ஆரின் மனைவி சொல்வாள்:
"அண்ணா.. நீங்கள் தான் அரசாள வர வேண்டும்"
"எனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நிலமற்றோருக்கு நிலமளிக்கப்பட்டு உழவுக்கு ஊக்கமளித்து உணவு உற்பத்தி பெருக்கப்படும். தொழிலுக்கும் ஊக்கமும் மானியமும் தரப்படும். பெண்கள் முன்னேற அவர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்யும். அநியாய வரிகள் இருக்காது..."
-என்ற ரீதியில் எதிர்கால செயற் திட்டங்களை அடுக்குவார் 'நாடோடி' எம்.ஜி.ஆர்.
இன்னொரு காட்சியில் மார்த்தாண்டன் என்ற பெயரில் வரும் 'மன்னன்' எம்.ஜி.ஆருக்கும் 'நாடோடி' எம்.ஜி.ஆருக்கும் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல்:
மன்னன்: "எதற்காகப் புரட்சி ? யாரை எதிர்த்து?"
நாடோடி: " உங்கள் ஆட்சியை எதிர்த்து. சர்வாதிகார முறையை ஒழிக்க.
எங்கள் லட்சியம் ஆளை ஒழிப்பதல்ல. மக்களாட்சியை
ஏற்படுத்துவது."
மன்னன்: " ஏன் நானும் மக்களில் ஒருவன் தானே. நானே ஆண்டாலென்ன?
நாடோடி : " நீங்கள் மக்களில் ஒருவர் தான். ஆனால் மக்களின் நிலையை
அறியாதவர். அவர்களின் நிலை உணர்ந்த ஒரு ஏழை தான்
நாட்டை ஆளவேண்டும்."
மன்னன்: " ஆட்சி பற்றி உனக்கென்ன தெரியும்? "
நாடோடி : " நீங்கள் மாளிகையில் இருந்து கீழே மக்களை பார்க்கிறீர்கள்.
ஆனால் நான் மக்களில் ஒருவனாக இருந்து மாளிகையை
பார்க்கிறவன். மக்களின் துயரமும் தேவைகளும் எனக்கு
நன்றாக தெரியும்"
- இந்த காட்சியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மன்னன் மார்த்தாண்டனாகவும்,
நாடோடி வீராங்கன் திமுகவின் பிரதிநிதியாகவும் உணரப்பட்டது கழகக் கண்மணிகளால்.
அதே படத்தில் மற்றொரு கட்டத்தில் , தனக்கு பதிலாக அரசை சில நாட்கள் ஆள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் மன்னனிடம் நாடோடி சொல்வார்:
" பதவியில் அமருவது எனக்கு நோக்கமில்லை என்றாலும் மக்களுக்கு நன்மை கிடைக்குமென்பதால் ஒப்புக் கொள்கிறேன். நான் மக்களுக்காக செய்ய விரும்பும் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட வேண்டும். அதிகாரமில்லாத அரசாட்சியை நான் விரும்ப மாட்டேன் "
அதே படத்தில் வரும் ''காடு வெளஞ்சென்ன மச்சான் ..." எனத் தொடங்கும் பாடலில்,
" இப்போ- காடு வெளயட்டும் பொண்ணே
நமக்கு காலமிருக்குது பின்னே.
நாளை போடப் போறேன் சட்டம் - பொதுவில்
நன்மைப் புரிந்திடும் திட்டம்.
நாடு நலம் பெறும் திட்டம். "
இவ்வாறாக , எம்.ஜி.ஆர். தனது வருங்கால இலக்கை கோடிட்டு காண்பிக்கிறாரா அல்லது தான் சார்ந்திருந்த திமுகவையும் அதன் தலைவரையும் உயர்த்திப் பிடிக்கிறாரா என்று கணிக்க முடியாதபடிக்கு ஒருவித கெட்டிக்காரத்தனம், இப்படம் முழுவதும்வியாபித்திருந்தது.
Thaaru Maaru Song from the upcoming STR movie "Vaalu" features the Super Stars of Tamil Cinema.. Starting from Honorable makkal Thilagam MGR (our Vaathiyaar), Rajnikanth, Ajith and STR...Watch between 0.17 to 1.11
https://www.youtube.com/watch?v=ExVNebc5MAc
http://s1.postimg.org/9h67448fz/IMG_20150607_WA0002.jpg
Fwd by Mr.R.Saravanan, Madurai
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நம்நாடு காவியத்தை காண இன்று மாலைக்காட்சிக்கு வருகை புரிந்தோர் 600 பேர்கள்.
தகவல் - திரு.ஆர்.சரவணன் - மதுரை
கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு
கடந்த வெள்ளி அன்று திரையிடப்பட்டு வெற்றி நடைபோடுகிறது.
"நான் ஏன் பிறந்தேன்' (1972)
"நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.
அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.
மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.
படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.
கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'
"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'
"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'
"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'
"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'
"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'
இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,
"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.
courtesy - malai sudar
நெஞ்சில் நிற்கும் வரிகள்
சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி என்று மக்கள் மேன்மைக்கு பயன் செய்யும் சாதனம், அதனை சரியாக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே, அவர் திரை வாயிலாக இரண்டடியில் கூறிய பெரிய சிந்தனைகள் பாடங்கள் காண்க .
இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் அட்வகேட்டுக்கும் ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடுபவன் யாரு ? விவசாயி விவசாயி - (விவசாயி )
அழுபவர்கள் சிரிக்க வேண்டும், சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் - (நான் ஏன் பிறந்தேன் )
நாய்க்கு வீசியெறியும் எச்சில் இலையின் மிச்ச சோறுகூட என் உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வாழ்வது மனிதர்கள் மத்தியில் அல்ல அரக்கர்கள் நடுவில் - (மீனவ நண்பன் )
நாம் நாக்குக்கு அடிமையாக இருக்கக் கூடாது நாக்குத்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )
தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்தால் நம்மால் பிறருக்கு எதுவுமே
செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)
பத்துக்கோடி டாலர் உங்களுக்கு பெரிசு அதைவிட இந்த உலகில் உள்ள தனி ஜீவன் எனக்குப் பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)
பலம் உள்ளவனால்த்தான் சமாதானத்தைப்பற்றிப் பேச முடியும் - (படகோட்டி)
வலிமை உள்ளவன் வைத்ததெல்லாம் சட்டமாகாது பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாக்க வேண்டும். - (நல்ல நேரம்)
உதவி என்று வருபவர்களை பணம் பதவி என்ற பெயரால் உயிருடன் விழுங்கும்
திமிங்கிலம் நீ ( படகோட்டி)
கோடி செல்வம் இருந்தும், தாயன்பில்லாத மாளிகை வாசியை விட, குடிசையில் இருந்தாலும்
தாயின் கையால் உண்ணும் நான் பாக்கியசாலி - (தொழிலாளி )
இப்படி அவரின் பல படங்களில் சிந்தையை தொடும் வரிகள் வசனங்களாக பாடல்களாக நிறையவுண்டு, 5 எம் ஜி ஆர் படங்கள் பார்த்தால் ஒரு குட்டிப் பல்கலைக்கழகம் சென்று படித்த அறிவைப் பெறலாம் .
courtesy -ramesh
o யோகி – அர்ச்சனா வாசுதேவன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்?’ புத்தக வெளியீட்டில், தலைமையேற்று புத்தகத்தை வெளியீடு செய்து பேசிய டத்தோ எம். சரவணன், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூல்களை கண்ணதாசன் அறவாரியம் வெளியிடுவதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதன் முக்கிய நோக்கமே, அவரின் புத்தகங்கள் மலேசியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
எம்ஜிஆரின், ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற புத்தகத்தைப் படித்து, நம்மவர்களும் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆரிடம் இரண்டு விஷயங்கள் தனித்துவம் வாய்ந்தவை.
ஒன்று எந்தக் காரியமாக இருந்தாலும் அதனைக் குறித்த நேரத்தில் எம்ஜிஆர் செய்து விடுவார். மற்றொன்று அவருடைய ஈகைக் குணமாகும். இந்த இரண்டையும் அவர் நடிகராக இருந்தபோதும், அரசியல்வாதியாக இருந்தபோதும் பின்பற்றியே வந்துள்ளார்.
எம்ஜிஆரைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், சிலர் சரித்திரத்தில் வாழ்வார்கள். இன்னும் சிலர் சரித்திரத்துக்காக வாழ்வார்கள். ஆனால், நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சரித்திரமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
நான் ஏன் பிறந்தேன்!!!
naan en piranthen
பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக* த*னி இட*மும் த*ர* வேண்டும்
உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல*க*ம் அழ* வேண்டும்
கவிஞர் வாலி அவர்கள் இயற்றி மக்கள் திலகம் நடித்து வெளியான பாடல்கள் என்பதா? மக்கள் திலகத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல்கள் என்பதா? இந்தக் கலவை தந்திருக்கும் முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன தமிழ்த்திரைசையில்! நான் ஏன் பிறந்தேன்… என்கிற திரைப்படத்தில் இடம் பெரும் இனிய பாடலிது! கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் இசையமைப்பில் உருவான பாடல்கள் என்றும் நம் இதயம் தொடுகின்றன!
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
முன்னோர் சொன்ன சொல்லே ஆனாலும் எளிய தமிழில் வினாக்களாய் நம் நெஞ்சில் பதிக்கிறார். மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி தான் பதவி ஏற்றக் கூட்டத்தில் “Ask not what your country had done for you; Ask what you have doe for the country” என்ற பொன்மொழியின் பிரதிபலிப்பாக இப்பாடல் திகழ்கிறது!
பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக* த*னி இட*மும் த*ர* வேண்டும்
உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல*க*ம் அழ* வேண்டும்
mgrvaali
இந்த வைர வரிகள் என்னையும் கூட வாழ்க்கைப் போராட்டத்தில் நீந்தி வெற்றி பெற வைத்திருக்கின்றன என்றால் அது மிகையில்லை! அந்த நன்றிக் கடனாக “வாழும் தமிழே வாலி” என்கிற நூலை கவிஞர் வாலிக்கு நன்றி காணிக்கையாக எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிட்டேன்.. பாடலாசிரியன் என்கிற தகுதியோடு திரையுலகில் பாட்டு எழுதிச் சென்றவர் பலர் இருக்கலாம்! அதே பாடல்கள் மக்கள் நெஞ்சில் குடியிருக்கச் செய்தவரைத்தான் ‘கவிஞர்’ என்கிற வரிசையில் கொள்கிறோம். மேலும் அதிலும் மானுட வாழ்விற்கான தேவைகளைக் கருத்துக்களை வழங்கிய கவிஞர்களையே காலம் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.
கவிஞர் காவிரிமைந்தன்.
ஆனந்தவிகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய தொடரை நூலாக்கி, அரிய படங்களையும் சேர்த்து இரு தொகுதிகளாக வெளியிட்டிருப்பது சிறப்பு. இத்தொடர் எழுதுவது ஏன் என்பதை எம்.ஜி.ஆர். விளக்குவதிலிருந்தே விறுவிறுப்பு தொடங்குகிறது.
தனக்கு உதவிய குடியிருந்த வீட்டின் உரிமையாளர் ஏ.வி.ராமன் போன்றோரை அவர் விவரிப்பதைப் படிக்கும்போது அட... இப்படியும் நல்ல மனிதர்கள் இருந்துள்ளார்களே என்ற வியப்பே ஏற்படுகிறது. இதைப்போல மனிதர்கள் பலரை நூலெங்கும் காண முடிகிறது.
"திருடாதே' படத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி திட்டமிடப்பட்ட விஷயங்கள் அனைத்துமே தனக்கு எதிராக மாறியதையும், அச் சூழலில் தான் நடந்துகொண்ட விதத்தையும் எம்.ஜி.ஆர். விவரித்திருப்பது வாழ்க்கைப் பாதையில் போராடும் அனைவருக்கும் பாடம்.
திரைப்படம், அரசியல் என அவர் எதிர்கொண்ட மனிதர்கள், அவர்களால் ஏற்பட்ட பாதிப்பு, உதவி, அவமானம், புகழ், பொருள், தன்னிடமிருந்த செருக்கு, விரக்தி, எதிர்ப்பு, அன்பு, பாசம், மோசம், சோதனை, அதை முறியடித்து பெற்ற சாதனை என வாழ்வின் அத்தனை கோணங்களையும் மிக எளிய முறையில் யாருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
மொத்தத்தில் 134 தலைப்புகளில் எம்.ஜி.ஆர். விவரித்திருக்கும் சம்பவங்கள், கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது என்பதை மிகச்சிறப்பாக விளக்கியிருக்கும் அற்புதமான நூல்.
எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார்.
’உங்களுக்கெல்லாம் தெரியும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்கொண்ட எதிர் பாராத தோல்வியைத்தொடர்ந்து என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாகிரெட்டியாரின் மூத்த புதல்வர் பிரசாத் அகால மரணமடைந்து விட்டார். நான் துக்கம் விசாரிக்க நாகிரெட்டி அவர்களின் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை கண்டதும் அவர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து “உங்கள் ஆட்சியை கலைத்து விட்டார்களே” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார். ( இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சற்று நிறுத்தி விட்டார்.) எவ்வளவு உயர்ந்த உள்ளம் பாருங்கள். அவர் பெற்ற பிள்ளை இறந்து விட்டார்.ஆனால் அவர் என்னுடைய ஆட்சியை கலைத்துவிட்டார்களே என்று அழுகிறார். என் மீது அவர் எப்படிப் பட்ட அன்பைக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.
நான் இப்போது அவரிடம் மேடையில் ஏதோ கேட்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நான் கேட்டேன். ‘ இன்று எனக்கு ஆட்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் உங்களுக்கு உங்கள் மகன்? உங்கள் மகனை என்றென்றைக்குமாக நீங்கள் இழந்தே விட்டீர்கள்.’
( எம்.ஜி.ஆர் குரல் மிகவும் நெகிழ்ந்து தழுதழுத்தது)
1980களில் வந்த படங்கள் குறித்த தன் அதிருப்தியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய விதம் கீழ் வருமாறு:
”’இதயக்கனி’ படம் வெளிவந்திருந்தபோது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை.” உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று மீண்டும் கேட்டேன். அவர் சற்று தயங்கினார். “ தயவு செய்து அவர் சொன்னதை அப்படியே சொல்” என்றேன். என் ரசிகர் மெதுவாக சொன்னார். ”வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார்.” இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன். அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிய வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா? இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள்.உங்களை கை கூப்பி வேண்டிக்கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள்.வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம்.”
வினோத் சார்
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் - இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .உங்கள் பதிவுகள் மூலம் நினைவு படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு மற்றும் இனிய பாடல்கள் மறக்க முடியாதது .மக்கள் திலகம் - மேஜர் சுந்தராஜன் சந்திப்பு காட்சிகள் , மக்கள் திலகத்தின் மாண்புகளை வி .கோபால கிருஷ்ணன் பெருமையுடன் கூறும் காட்சிகள் ,குடும்பத்தில் உருவான குழப்பங்களை மிகவும் சாமார்த்தியமாக மக்கள் திலகம் சமாளிக்கும் காட்சிகள் ,அருமை .
மதுரை - கோவை இரண்டு நகரகங்களிலும் மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' படம் தற்போது ஓடிக்கொண்டு வருவது சாதனை .தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
திருச்சியில் மக்கள் திலகத்தின் ''தாயை காத்த தனயன் ''- தகவல் தந்த திரு rks அவர்களுக்கு நன்றி .
JULY -1972- BOMMAI
http://i57.tinypic.com/lf6h3.jpg
http://i61.tinypic.com/11b4u3m.jpg
நண்பர்களே
நாளை 9.6.1980 நான் இரண்டாவது முறையாக பதவி ஏற்ற தினம் .நீங்கள் எல்லாம் சென்னைக்கு வந்து விழாவில் கலந்து கொண்டது பற்றி அறிவேன். பசுமையான நினைவுகள்.35 ஆண்டுகள் சென்று விட்டதே.நாளை மீண்டும் உங்களது அனுபவங்களை எண்ணி பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன் .
குண்டு காந்தியை கொன்றது
குண்டு இந்திரா காந்தியை கொன்றது
குண்டு கென்னடியை கொன்றது
இன்னும் பலரை கொன்றது
ஆனால் நீலகண்டன் தொண்டையில்
விஷம் நின்று உலகம் கண்டது
அதுபோல் பாய்ந்தஂகுண்டின் கடமை
கொல்வது துளைத்தபின் கண்டது
பொன்மனசெம்மல் எனஂநின்றது
ஸ்தம்பித்தது தொண்டையில் .
குண்டு தோற்றது எம் ஜி ஆர் ரிடம்
courtesy fb
கடந்த வெள்ளிக்கிழமையன்று மேலே உள்ள பதிவை போட்டிருந்தேன். அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஐஐடி நிர்வாகம் நேற்று நீக்கிவிட்டதாக செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.
இதை சொல்லாமல் இருந்தால் விஷயம் முழுமை பெறாதே என்பதற்காக இதைத் தெரிவிக்கிறேன். தடை நீக்கம் பற்றிய செய்திக்கான இணையதள இணைப்பு கீழே கொடுத்திருக்கிறேன்.
மறுவெளியீட்டில் கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளி விழா கொண்டாடி சாதனை படைத்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தலைவர் கூறுவது போல, சிலப்பதிகாரத்தை தவிர எந்த அதிகாரமும் நிலைக்க முடியாதுதான் என்பதற்கு இந்நிகழ்ச்சியும் சாட்சி.
http://www.newindianexpress.com/citi...cle2855208.ece
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
17.2.1980
எம்ஜிஆர் அரசியல் வாழ்வு இத்துடன் முடிந்து விட்டது .
எம்ஜிஆர் செல்வாக்கு சரிந்துவிட்டது .
எம்ஜிஆர் -எதிர் காலமே இல்லை .
இப்படி ஆரூடம் கூறியவர்களின் ஆனந்தம் 100 நாட்கள் கூட நிலைக்க வில்லை . மக்கள் திலகம் மக்களை நம்பினார் .மக்களை சந்தித்தார் .மக்கள் திலகம் எம்ஜிஆரை மீண்டும் ஆட்சியை அமைக்க பல தொகுதிகள் காத்திருந்தாலும் கொடுத்து சிவந்த கரங்களின் திரைப்படங்கள் வெள்ளி விழாக்களையும் , நூறு நாட்களையும் , வசூலில் சாதனைகள் படைத்த மதுரை மேற்கு தொகுதி மக்கள் எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் என்று தங்கள் வாக்குகளை அள்ளி தந்து வெற்றி பெற செய்து சென்னை கோட்டைக்கு ''மீண்டும் முதல்வராக '' அனுப்பி வைத்தார்கள் நம் மதுரை மக்கள் .
மதுரை மக்களுக்கு மக்கள் திலகத்தின்
http://i60.tinypic.com/dcsqds.jpg
Madurai district has never been indecisive in making its choice. In all the elections, it has decisively voted for the party that came to power.
The popularity of the Congress in the 1950s and 1960s could be seen from the way the party swept the polls in Madurai district between 1951 and 1962.
The rise of the Dravida Munnetra Kazhagam in 1967 had a significant impact here in the 1967 and 1971 elections. Then came M. G. Ramachandran's Anna Dravida Munnetra Kazhagam in 1977 (which was later rechristened as All India Anna Dravida Munnetra Kazhagam).
From 1977 to 1984, Madurai has overwhelmingly voted for the AIADMK. It returned MGR, the Chief Minister, from Madurai West in 1980.
courtesy - the hindu