சின்னா!
நற நற நறன்னு அழணும். சிரிக்கிறீக. அப்பா ஓகேவா?:)
Printable View
சின்னா!
நற நற நறன்னு அழணும். சிரிக்கிறீக. அப்பா ஓகேவா?:)
சி.க:பாட்டி வரும் பாட்டி வரும்..
வாசு: ஓஹோ
சி.க..இழை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டி வரும்..
அதை சி.செயும் கட்டம் போட்டுக் கூட்டி வரும்..! :) (வருவார் எனக் கொள்க..)
எனக்கு இந்த ப் பாட்டி பிடிக்கும்..
//காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலே
பாக்கு வச்சி நேரம் பாத்து வச்ச ஆசை மச்சான்
சந்தைக்கு போறேன் நீங்க சாப்பிட்டு வாங்க
சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க
அட இந்த பக்கம் பாருங்களே
என் கன்னி மனம் கேளுங்களே
அட ஏண்டி என்ன மஞ்சளுக்கு கேக்குறீயா
பழைய நெனப்புதான் பேராண்டி பழைய நெனப்புதான் ம்ம்//
படம் பார்த்த போது அது யாரு இன்னொரு ஹீரோயின் இவ்ளோ லேட்டா என நினைத்த்துண்டு..ம்ம்..
போட்டு வாங்கலாம்னு பீலா விட்டா கழுவற தண்ணிலே நழுவற மீனா இருக்கிறீங்களே வாசு/சின்னா சார்ஸ்!!
ஆஹா சி க !
ஏகப்பட்ட பாட்டிப் போட்டி வரும்போல இருக்கே !
வின்னரில் வரும் ராஜம் பாட்டியும் வாழ்க்கைப்படகு ராஜம்மா பாட்டியும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் !
குடியிருந்த கோயிலில் வரும் நாகேஷிப் பாட்டியும் வளர இஷ்டமானு !
வாசு , சி.க. சார்ஸ்
உஷார்... சி.செ. ஏதோ தீர்மானம் பண்ணிட்டார் போல. கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியான்னு எல்லாரையும் அழைக்கப் போகிறார்...
வாங்க வாங்க குருஜி !
ஒருகாலத்துக் கனவுக்கன்னிகள் இன்னொரு காலத்தில் அக்காக்களாக அம்மாக்களாக உருமாறி பிற்காலத்தில் பாட்டிகளாக முடிந்தாலும் நமது கதாநாயகர்கள் அவர்களுக்கே பேரன்களாக நடிக்காமல் விட்டது நாம் செய்த புண்ணியமே!ஜோதிப் பாட்டி எப்படி உங்களை ஈர்த்திருக்கிறார்?!
நீங்கள் அனைவரும் யூகிப்பது சரியே !
அடுத்த கான்செப்ட் இதுதான் !! பாட்டி மஞ்சக் குளிச்ச கதை பேராண்டிகளே!!
அப்போதுதான் பறித்துப் போட்ட பன்னீர் புஷ்பங்களாக அறிமுகமான நமது இதய நாயகியரின் இளமை டு இலையுதிர் காலமான முதுமை பரிணாம மாற்றங்கள் ! அத்தோடு இணைந்த மதுர கானங்கள்.....
பாட்டி சொன்ன கதை எக்காலத்திலும் நமக்குப் பிரியமானதே!
ஆட்சேபணைகள் வரவே(ற்/ர்)க்கப் படுகின்றன !!
//கழுவற தண்ணிலே நழுவற மீனா இருக்கிறீங்களே வாசு/சின்னா// ஓய்.. நான் ஆரம்பத்தில இருந்தே பாண்டிய நாட்டான்.. வாசு அவரோட முன்னோர்கள் எங்கேயோ மதுரைக்குப் பக்கத்துல பெண் எடுத்ததாகக் கேள்வி..ஸோ அவரும் பாண்டியரே!
*
ராகவேந்திரா சார் கவலையே படாதீங்க.. எங்க பாட்டி ஏற்கெனவே ஊட்டி வளர்த்திருக்காங்க..
பாட்டி பலவிதமாய்ப் பாட்டினிலே சொல்லித்தான்
ஊட்டி விடுவார் உணர்வினில் – தீட்டிய
கத்தியாய்க் கூர்மையாய் காண்பவர் போற்றவும்
புத்தி மிளிர்ந்ததே பார் (ரும்)
இருந்தாலும் கொஞ்சம் அன்றும் இன்றுமா வெச்சுக்கலாம்..ஓகேங்களா!
*
*
சரி சி.செ. அன்றைய பார்ட்டி லஷ்மியின் பாடல்
https://youtu.be/pp7ZvB0Uy1A
Bhool Gaya Sab Kuch கொஞ்சூண்டு தமிழ்ப் படுத் படுத்தினேன் :)
*
எல்லாம் எனக்கு மறந்துவிட்டது.. இப்போது எதுவும் நினைவிலில்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் என்றும் மறக்கமாட்டேன்..அது..ஜூலீ…ஐ..லவ் யூ..
சரிதாண்டா..ம்ம்ம்.. எல்லாம் எனக்கும் மறந்துவிட்டது.. இப்போது எதுவும் நினைவிலில்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் என்றும் மறக்கமாட்டேன்..அது..ஜூலீ…ஜூலி லவ்ஸ் யூ..
இவ்வளவு தூரம் செல்லாதே நெருங்குவதற்கு எனக்குக் கஷ்டம்
இவ்வளவு தூரம்குறைவதும் கஷ்டம் தான்..விலகுவதற்கு
நான் சொல்வதைக் கேட்கிறாயா..
ஷ்.. நான் ஒரு மின்சாரப் பொறியைத் தொட்டுக்கொண்டிருக்கிறேன்
எவ்வளவு ஷோகமாகும் தெரியுமா.. என் தாகம் அடங்காமல் என் காதல் இறந்தால்..
ம்ம் போய்யா.. இந்த மாலை நேரம் நம்மிருவருக்கும் அவமரியாதையைத் தந்தால் அது எவ்வளவு சோகம் தெரியுமா..
இப்போ நானும் சரின்னு உன்னை வற்புறுத்தாமல் இருந்தால்….
ம்ம் நானும் பேச்சு மாற்றுவேன் தெரியுமில்லையா..ஒண்ணு தெரியுமா உனக்கு..
என்னாது..
இதெல்லாம் விஷயமே இல்லை.. ஒன்றே ஒன்று தான் விஷயம்..நிஜமும் கூட…அது….ஜூலி… ஜூலி லவ்ஸ் யூ..புரிஞ்சுதாடா செல்லக் கடங்காரா!
இன்றைய பாட்டி லஷ்மியின் பாட்டு.. பாட்டிலேயே பாட்டி வருமே..
*
வாராயோ தோழி வளமான தோழி வாய்விட்டுலூட்டி அடி – ஜீன்ஸ் பாடல்..யூ ட்யூபில் பார்த்துக்கொள்க…!
*
..
ஹச்சோ.. நான் முந்திக்கிட்டேனா.. நீங்க ஆரம்பிங்க சி.செ..யார் ஆட்சேபிக்கறாங்கன்னு நான், ராகவேந்தர், வாசு, மதுண்ணா பார்க்கறோம்..:)
சி க
பாட்டிகளின் ப்யூட்டிகளை கலைவாணக் கவித்துவமாக சிலை வடித்து விட்டீர்கள் !
வாசு சாரும் மது சாரும் ராகவேந்தர் சாரும் ரவி சாரும் என்ன சாறு பிழியப் போகிறார்களோ ?
பாட்டிகளின் பாட்டுப் போட்டி பட்டி தொட்டியெங்கும் வெற்றிக்கொடி நாட்டி விடும்போல இருக்கிறதே !
Gap filler / Monotony breaker!
Naagesh Granny Get up in Kudiyirundha Koil! No song...but enjoyable!! for a change before we resume our business...!
Must watch from 5:43 for Nakesh's versatility! You Tube link
https://www.youtube.com/watch?v=cbqMfEVIfp4
வாசு /CK / செந்தில் - என்ன நடக்குது இங்கே ? ஒரே குழப்பமாக இருக்கிறது - கொஞ்சம் நேரம் நாரதரை அழைத்து வந்தீர்கள் , பிறகு பாட்டிகள் - இவர்கள் சராளாவையும் , குசல குமாரியையும் வெளிநடப்பு செய்ய வைத்தார்கள் ... நான் மட்டும் வேறு தேசத்தில் வசிப்பதைப்போன்ற ஒரு பிரமை - என் வழி தனி வழியாக இருந்தாலும் இங்கு சமீபத்தில் போடும் பதிவுகள் அதுவும் தடம் பதித்தவர்களிடம் வரும் பொழுது சற்றே என்னை சிந்திக்க வைக்கின்றது நானும் தடம் புரண்டால் என்னவென்று !! :):smokesmile:
http://www.noolulagam.com/book_images/17233.jpg
...
இவர்களுக்கு என்ன பாட்(டி)டு போடுவது...
ரவி சார்
ஒரு பார்முலாவிலேயே போய்க்கொண்டிருந்தால் மன சோர்வு ஏற்பட்டு விடும் !
இது ஒரு சின்ன சேஞ்சுக்காக !
மதுர கானங்கள் பியூட்டிகளுக்காக மட்டுமல்லவே !! ஒருகாலத்துப் பியூட்டிகள் பாட்டிகளானாலும் மதுர கானங்களைத் தருவதில் சளைக்கவில்லை என்பதை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு நாலைந்து பகுதிகள் மட்டுமே ! பிறகு நமது பாதைக்கு புத்துணர்ச்சியுடன் வந்து விடுவோம்!!
வாங்க ரவி...ரிலாக்ஸ்...பாட்டிகளின் மலரும் நினைவுகளில் கொஞ்சம் நீந்துவோமே!
குருஜி !
ஏதோவொரு படத்தில் பாக்கியம் ராமசாமியின் அமரத்துவம் வாய்ந்த அப்புசாமி சீதாப்பாட்டி கிளிப்பிங் வந்த ஞாபகம் !
வாசு வாசு பண்ணிப் பார்த்தால் கிடைத்து விடுமே!
சூப்பர் பாட்டீஸ் டூப்பர் பாட்டூஸ்
அழகிய பாட்டிகளின் அமுதப் பாட்டுக்கள்!! / Graceful Grannies'Grand Gala Gems!
பகுதி 2 : பானுமதி
Quote:
நடிப்புக்கு இலக்கணம் வடித்த நடிகை என்று அறிஞர் அண்ணாவால் சிலாகிக்கப் பட்டாலும் நடிகர்திலகத்துடன் அவர் ஜோடியாக நடித்த படங்களில்'மருந்தைக் குடிக்கும் போது குரங்கு ஞாபகம்' வருவது போல மனக்குரங்கு பானுமதியம்மாவை இளமையான சிவாஜியுடன் ஏற்க மறுக்கிறது! அறிவாளி, ரங்கோன் ராதா அம்பிகாபதி படங்களில் நடிப்பால் சிறப்பித்தாலும் .....
ஆனால் பானுமதியம்மா மிக இளமையாக என் கண்களுக்கு தோன்றியது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்திலேயே...அட்டகாசமான ஆரம்ப அறிமுகப் பாடலில் ஆடலரசி மார்சியானாவாக!
https://www.youtube.com/watch?v=nrdxKy2J0Zw
மதிப்பான வளர்ப்பு அம்மாவாக அன்னையில் மனதைப் பிழிந்தார் ஒரு மறக்க முடியாத சோக மதுர கானத்துடன்!!
https://www.youtube.com/watch?v=xA7wR5z2OEo
தலைமுறைகள் தாண்டி செம்பருத்தியில் பிரசாந்தின் பாட்டியாக முதிர்ந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார் !!!
([url]https://www.youtube.com/watch?v=MkmOkJOG9lI)
நடிகர்திலகம் இளையதிலகம்
இருவரின் "பூ"பாடல்கள்.
நடிகர்திலகம்
1.பூ மாலையில் ஓர் மல்லிகை
2.பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
3.பூங்காற்று திரும்புமா?
4.பூப்போலே உன் புன்னகையில்
இளையதிலகம்
1.பூவே இனிய பூவே
2.பூ பூத்த செடியக் காணோம்
3.பூத்து பூத்து குலுங்குதடி பூவு
4.பூம்பாறையில் பொட்டு வச்ச
5.பூவில் ஒரு வண்டு
படங்கள்:
பூ பூவா பூத்திருக்கு.இளையதிலகம்
பூப்பறிக்க வருகிறோம்.நடிகர்திலகம்
செந்தில்வேல்.. பூ வை விட மலர் ந.தி பாட் இருக்கே
மலரே குறிஞ்சி மலரே
மலர்களிலே பல நிறம் கண்டேன்
இளைய திலகத்தின்..பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோஜாப்பூ..
போன பாக்த்தில் ஒரு அழகிய நண்பர் என்னோடு சேர்ந்து பாட் பாடிக்கொண்டிருந்தார் (கல் நாயக் என்பது அவர் பெயர்..கல் நெஞ்சக்காரர்..இப்போல்லாம் வரலை..என்னகாரணமோ..) அவர் அழகாக நிறைய பூப் பாடல்களாக ப் போட்டு த் தொடுத்திருந்தார்... :sad:
அப்புறம் தமிழக ஷர்மிளா தாகூர் வாணிஸ்ரீ யோட என்ன்ன் ராஜாவின் ரோஜா முகம்..(ஹச்சோ சி.செ பாட்டி சீரீஸ்ல குறுக்கிட்டு விட்டேனோ..! (சி.செ..ஒய் நோ கட்டம் நெளவ டேஸ்.,..? எ.மே. கோபமா?)
//பானுமதியம்மாவை இளமையான சிவாஜியுடன் ஏற்க மறுக்கிறது! அறிவாளி, ரங்கோன் ராதா அம்பிகாபதி படங்களில் நடிப்பால் சிறப்பித்தாலும் .....// என் கருத்தும் அதுவே..அட்லீஸ்ட் சாரங்கதாராவில் கொஞ்சம் ஒல்லியாக இருந்தார் என நினைவு (இஸிட் ஸோ வாசு?) ஆனால் ஜோடியில்லையே..
கொஞ்சம் சகலகலா வல்லி தான்..கணீர்க் குரலில் பாடும்பாடல்கள் ராமனுக்கு மன்னன் முடி சரிதானே இன்னும் சில பாடல்கள் பிடிக்கும்..
You listened to paatti songs. Here are two paappaa songs:
From Samsaaram
ammaa pasikkudhe thaaye pasikkudhe.....
http://www.youtube.com/watch?v=EbYEdoN9PNo
From the Hindi version Sansaar
ammaa roti de baabaa roti de.....
http://www.youtube.com/watch?v=cijAc1zW3w8
Rajraj sir
we can add Kuzhandhaiyum dheivamum song with the excellent twin performance by Kutti Padmini !! For your jugal bandhi collection...!
https://www.youtube.com/watch?v=S_k8vho6wAg
In Do Kalyan...Neethu Singh's entry as child artiste?..
https://www.youtube.com/watch?v=XniLkfq533Y
Thanks Senthil. Some songs you never forget. Samsaram was a popular movie in the 50s. The songs were popular too.
'ammaa pasikkudhe' was used by children to tease their mothers if their food was late ! :) Thanks for the kuzhandhaiyum dheivamum song. I like children. Now I have two grandchildren in California. We are visiting them in September. It is fun to be with them ! :)
As the proud father of two daughters, I would like to post this song... :)
This song refers to both my daughters!
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐயா
ஒரே ஒரு அய்யாவுக்கு ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்த ஒரே ஒரு பொண்ணு
அவள் பொண்ணு இல்லை பொண்ணு இல்லை
கடவுளோட கண்ணு...
https://www.youtube.com/watch?v=AlwB7poNlok
வாசு - நடிகர் திலகம் திரை உலக "ராஜா " என்றால் நீங்களும் எங்களுக்கு முடிசூடா மன்னர்தான் - அருமையாக பதிவுகள் போடுவதிலும் , ஆழமாக போடும் கருத்துக்களில் ஒரு இனிமையை கொண்டுவருவதிலும் . பல பிரச்சனைகள் உங்களை வேதனைப்படுத்தும் இந்த நேரத்திலும் , அதை சற்றும் பொருட்படுத்தாமல் , அந்த சோகம் பதிவிகளில் வரவிடாமல் மிகவும் தெளிவாக அலசி உள்ளீர்கள் . பதிவுகள் போட்டு அதில் அடையும் சுகத்தை விட , தூர நின்று உங்கள் பதிவுகளைபிடிக்கும் போது வரும் சுகம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை . உங்கள் பிரச்சைனகள் எல்லாவற்றிற்கும் சீக்கிரமே ஒரு நல்ல , எதிர்ப்பார்க்கும் தீர்வு கிடைக்க எங்களுடைய வேண்டுதல்களை பலப்படுதிக்கொள்கிறோம் .
:clap::clap::clap:
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
28
'வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்'
'மீண்டும் வாழ்வேன்'
http://www.5eli.com/Lyrics/wp-conten...en-300x240.png
இன்று தொடரில் எழுதப் போகும் பாலா பாடலை நினைத்தாலே கடல் அலைகளில் மிதப்பது போல உள்ளம் குளிருகிறது. 'மீண்டும் மீண்டும்' பாலா பாடல்களுக்காவே 'வாழ்வேன்' என்று கூட கத்தத் தோணுகிறது.
http://padamhosting.me/out.php/i1054...snap131217.png
'ராணி புரடக்ஷன்ஸ்' அளிக்கும் 'மீண்டும் வாழ்வேன்' என்ற படத்தில் வரும் இந்த பாலாவின் பாடல் என் நெஞ்சில் நிலையாக நின்றுவிட்ட பாடல்.
'மீண்டும் வாழ்வேன்' படத்தின் நாயகன் ரவிச்சந்திரன். இதிலும் கலர்ப்பட நாயகன். வழக்கமான காதல், அடிதடி, மோதல், மாறுவேஷம், ('பலே பாண்டியா" நடிகர் திலகத்தின் விஞ்ஞானி பாத்திரத்தை இதில் ரவி டாக்டராக செய்ய முயன்றிருப்பார்) சென்டிமெண்ட் என்று எல்லாமே இதிலும் உண்டு.
http://padamhosting.me/out.php/i1054...snap127562.pnghttp://padamhosting.me/out.php/i1054...snap136428.png
பாரதி நாயகி. எல்லோருக்கும் பிடித்தமானவர்.
மனோகர் , நாகேஷ், மேஜர், தேங்காய், 'அஞ்சல் பெட்டி' முத்தையா, ஜெயகுமாரி, விஜயலலிதா, எஸ்.வரலஷ்மி என்று நிறைய நடிக நடிகையர்.
பாடல்கள் கண்ணதாசன். ஒளிப்பதிவு எம்.ஏ.தாரா. ஒளிப்பதிவு டைரெக்டர் கே.எஸ்.பிரசாத். இசை 'மெல்லிசை மன்னர்'. ஆனால் ஆர்ப்பாட்டம். உதவி கோவர்தனம், ஜோசப் கிருஷ்ணா. தயாரிப்பு வி.சி. ஜெயின், ஜி.சி.லால்வாணி. கதை, வசனம், இயக்கம் டி.என்.பாலு. ராமண்ணா பட்டறையிலிருந்து வந்ததால் ஃபிரேம் டு ஃபிரேம் ராமண்ணாவின் படம் பார்ப்பது போன்றே இருக்கும். ஆனாலும் இன்ட்ரெஸ்டிங்.
நாயகி பாரதியை மயக்கமாக்கித் தன் இடத்திற்குக் கொண்டு வர பிளான் போடுகிறார் மனோகர். கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் பாரதியை எப்படியாவது மயக்கிக் கொண்டு வருமாறு மனோகர் தன்னுடைய பெண் அடியாட்களிடம் ஆணையிட, ஹலம் உள்ளிட்ட பெண் ரவுடிகள் பாரதியை கடற்கரயில் டிஸ்டர்ப் செய்கிறார்கள். விஷயம் தெரியாமல் அடியாட்களை அங்கே கொண்டு வரும் டாக்ஸி டிரைவர் நாயகன் ரவி இந்த சதித் திட்டத்தைக் கேட்டு விடுகிறார். அப்புறமென்ன? கடற்கரையில் பாடி, ஆடிக் கொண்டிருக்கும் பாரதியை நாயகன் ரவி அந்த பெண் ரவுடிகளுடனேயே சேர்ந்து ஆடிப் பாடி, அவர்களை விரட்டி காப்பாற்றி விடுகிறார்.
இதுதான் பாடலின் சிச்சுவேஷன்.
அழகான குளுமையான படப்பிடிப்பு. எலியட்ஸ் பீச்சில் படம் பிடித்திருப்பார்கள். படம் வண்ணம் வேறா! அள்ளுகிறது. நமக்கும் கடற்கரையில் இருப்பது போன்றே 'சில்'அனுபவமும் கிடைக்கிறது.
http://i58.tinypic.com/2ugkuxl.jpg
துள்ளித் துள்ளி வரும் அலைகளுக்கு மத்தியில் பந்து விளையாடும் கருப்பு சிவப்புக் கலரில் (டி.என்.பாலு 'அறிஞர்' அண்ணாவின் தீவிரத் தொண்டர். திமுக அபிமானி. அதனால்தான் இந்த கலரில் உடையோ? கலர் கலராய் ரிப்பன்களை இணைத்து ஒரு குட்டை கவுன் தயாரித்திருப்பார்கள் போல) குட்டை கவுன் அணிந்த குதூகல புள்ளிமானாய் பாரதி. எழில் கொஞ்சுகிறது. ஸ்லிம்மான உடல் ஆதலால் அந்த கவுன் 'நச்'சென்று பொருந்துகிறது. பல இளைஞர்களின் தூக்கம் கலைந்திருக்கலாம் அந்த நாட்களில். இளமை பூத்துக் குலுங்குகிறது. 'ம்....கொடுத்து வைத்த விஷ்ணுவர்த்தன்' என்று மஸ்கட்டில் ஒருவர் புலம்புவதும் காதில் விழுகிறது. பாரதி கடலில் குளிக்க குளிக்க பார்ப்பவருக்கு உஷ்ணம் ஏறாமல் என்ன பண்ணுமாம்?
4 ரவுடிப் பெண்களும் (இவர்களுக்கும் அரைகுறை நீச்சல் உடை ஆடைகள்) பாரதியை எப்படியாவது மயக்கிவிட பார்க்க, இது புரியாமல் பாரதி திண்டாட, தூர இருந்து கவனிக்கும் ரவி நடுவில் புகுந்து 4 வில்லிகளையும் வலைப் போட்டு மாட்டி, பாரதியிடமும் உண்மையை சொல்லி அவரைக் காப்பாற்றுவார். இதில் ஒரு ஆள் நமக்குத் தெரிந்த முகம். ஹலம். ஒல்லியாக இருப்பார். பிளாக் கலர் உடை அணிந்திருப்பார்.
பாரதி வேறு பாடலில்,
'நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள் நீரோடு ஓடட்டுமே!'
என்று இன்னும் நம் ஹார்ட்டைத் துடிக்க வைப்பார்.:) இந்த வரிகளில் மிக அழகான மூவ்மெண்ட்ஸ் கொடுப்பார் பாரதி. இடையோ அது இல்லையோ என்னும் அளவிற்கு கொடி இடை அழகியாய் அப்போதைய அபூர்வ ஒரே ஒரு அழகி இவர். மத்ததெல்லாம் பேரல்தான். ஜோதியை வேணுமினா சேர்த்துக்கலாம்.
முதல் சரணம் பாரதி ஈஸ்வரி குரலில் பாடி முடித்ததும் 4 வில்லிகளும் பாரதியை ஒன்றாக இழுத்து தண்ணீரில் மூழ்க வைக்க முயற்சி செய்ய, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரவி ஷர்ட்டைக் கழற்றிப் போட்டுவிட்டு நெக் பனியன், பேண்டோடு ஓடிவந்து (ஹோம் கார்ட் தொப்பி வேறு)
'லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா'
என்று பாலாவின் குரலில் பாடியபடி ஓடிவந்து, பாரதியை அவர்களிடமிருந்து காப்பாற்றி, பின் அவர்களை இம்சை செய்து, பாடலைத் தொடருவார். ரவி நன்றாக சதை போட்டிருப்பார். ஆனால் சுறுசுறுப்பு அப்படியேதான். ஆட்டமும் ரகளைதான். அப்புறம் மீன் வலை போட்டு வில்லிகளைப் பிடித்து ஒருவழி பண்ணுவார். ரவிக்கே உரித்தான கலாய்ப்புகள் வழக்கமாக உண்டு. ஆனால் மூச்சைப் பிடித்து தண்ணீரில் மூழ்கி கரையிலேயே, கால் அளவு தண்ணியிலேயே, தரையிலேயே எழுந்திருப்பது செம காமெடி.
காட்சிக்குத் தகுந்த அருமையான பாடல். 'மெல்லிசை மன்னர்' மிரட்டியிருப்பார்.
பாலா பிஞ்சுக் குரலில் நெஞ்சை அள்ளுவார். வாழைத்தண்டு போல குரல் 'வழுவழு'வென்று அவ்வளவு அழகாக இருக்கும். அதுவும்,
'லா... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா'
எடுத்து அவர் போர்ஷனைத் தொடங்கும் போது நம்மையே ஒரு கணம் மறக்கச் செய்து விடுவார்.
ஈஸ்வரி ராட்சஸி ஜாடிக்குத் தகுந்த மூடியாக பாலாவுக்கு செம பொருத்தம். ரெண்டுமே ரகளை பண்ணி ரெண்டு படுத்தக்கூடிய ஜென்மங்கள். கேட்கவா வேண்டும்?
பாடலின் நடுவில்,
'ஆஷாஷாஷாஷா' 'ஹாஹஹாங்', 'ஹே ஹே ஹே' ' என்றெல்லாம் ரகளை சப்தங்கள் கொடுக்க ராட்சஸி தவிர வேறு யார்? இந்தியில் ஓரளவிற்கு ஆஷா.
பாடலின் துவக்க இசை 'அவளுக்கென்று ஒர் மனம்' படத்தின் 'மலர் எது' பாடலின் துவக்க இசையை ஞாபகப்படுத்தும். உச்சி வெயிலில் நிழல் மிகக் குறுகித் தெரிய, பாரதி ஜாலியாகக் குளிப்பார். பல்லவி முடிந்ததும் வரும் அந்த உற்சாக
'டன் டன் டான் டன் டட ...
டன் டன் டான் டன் டட ...
டன் டன் டான் டன் டட'...
ஃபாஸ்ட் பீட்டை மறக்கவே முடியாது. ஆர்கனும், புல்லாங்குழலும், கிளாரினெட்டும், தபேலாவும் சும்மா இணைந்து அமர்க்களம். அது முடிந்து அப்படியே சற்று வேகம் குறைந்து வயலின் ஓசை இனிமையாக பேசும். ஈஸ்வரி பாடப் பாட தொடரும் கோரஸ் குரல்களில் ஒலிக்கும் அந்த 'ஹாஹா' செமையாக மேட்ச் ஆகும்.
இந்தப் பாடலை முழுமையாகக் கூர்ந்து கவனித்து நோக்கினால் மதியம் தொடங்கி ஈவ்னிங்கிற்குள் ஷூட்டிங் முடித்திருப்பார்கள் என்று தெரிகிறது. பாடல் முடியும்போது பாரதி, ரவி இவர்களின் நிழல் நீண்டிருக்கும். பாடலின் துவக்கத்திலிருந்து இறுதிவரை நடிகர்களின் நிழல்கள் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக நீளும்.
ஸ்டுடியோ வாசனையே இல்லாமல் இப்பாடல் முழுதுமே எலியட்ஸ் பீச்சில் வெளிப்புறப் படப்பிடிப்பாக கடலில் படமாக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பான விசேஷம். அதனாலேயே பாடல் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
'பாடட்டுமே... ஆடட்டுமே... மோதட்டுமே... நீந்தட்டுமே...பேசட்டுமே... ஆகட்டுமே... கூடட்டுமே... காணட்டுமே'...
என்று பாடலில் நிறைய 'மே'க்கள். ஒவ்வொரு முறையும் பாலாவும், ஈஸ்வரியும் இந்த 'மே' விற்குக் கொடுக்கும் அதிர்வலைகளை எளிதில் மறந்து விட முடியாது நம்மால்.
நடிகர்கள், அம்சமான இசை, ஒளிப்பதிவு, சிறப்பான பாடகர்கள், ஜாலியான நடனம், அளவான கிளாமர், கடல் குளுமை, ஸ்லிம் கதாநாயகி, கவர்ச்சிக் கன்னியர், கவரும் வண்ணம் என்று அத்தனை அம்சங்களும் நிறைந்து என்றும் நம் மனதில் இளமையாய் வாழும் பாடல். பாலா என்ற கடலில் கிடைத்த இன்னொரு கோமேதகம் என் ராட்சஸியின் துணையோடு.
என் வரையில் மிக மிக கவர்ந்த பாலாவின் பாடல். உற்சாக டானிக் பாடல்.
http://i.ytimg.com/vi/YvigJkZCdIk/hqdefault.jpg
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று
ம்ம்ம்ம்......ம்
தாலாட்ட
ம்ம்ம்ம்......ம்
பொன்மேனி
ம்ம்ம்ம்......ம்
நீராட
ம்ம்ம்ம்......ம்
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று
ஆஷாஷாஷாஷா
தாலாட்ட
ஹா ஹா ஹா
பொன்மேனி
ஹாங் ஹாங்
நீராட
செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே
ஹாஹா
செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே
சிந்தாத தேன்கிண்ணம் சிங்கார பூ வண்ணம்
பந்தாட்டம் ஆடட்டுமே
ஹா ஹா
நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள்
நீரோடு ஓடட்டுமே.... ஹேஹேஹேஹே
('ஹேஹேஹேஹே' முடிந்தவுடன் ஒரு கிடார் பிட் 'டங்டங் டங் டங்டங்' என்று கொஞ்சம் கொஞ்சமாக ரெயிஸ் ஆகும் பாருங்கள். அடடா! நிச்சயம் இதை அனுபவித்துக் கேட்டுப் பாருங்கள். அவ்வளவு இனிமை)
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்று
ம்ம்ம்ம்......ம்
தாலாட்ட
ம்ம்ம்ம்......ம்
பொன்மேனி
ம்ம்ம்ம்......ம்
நீராட
ம்ம்ம்ம்
லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா
ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்......ம் ம்ம்ம்ம்.
லா.... லல்ல லல்ல லல்ல லல்ல லல்ல லல்லா
எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் மோதட்டுமே
எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் மோதட்டுமே
எட்டாத கொம்பல்ல ஒட்டாத உறவல்ல
எண்ணங்கள் நீந்தட்டுமே
ஹா ஹா
கோபாலன் நானுண்டு
கோபியர்கள் தானுண்டு
லீலைகள் ஆகட்டுமே.... ஹேஹே
(கிடார் பிட்)
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
ஹா ஹா ஹாங்
இளம் காற்று
ஆஷாஷாஷாஷா
தாலாட்ட
ஹா.. ம்
பொன்மேனி
ஹா ஹா ஹா
நீராட
பெண் பார்க்கப் பெண் வந்தால்
கண் பார்க்கக் கண் உண்டு
பேசாமல் பேசட்டுமே
ஆஹா
தூதொன்றும் இல்லாமல்
ஏதொன்றும் சொல்லாமல்
உள்ளங்கள் கூடட்டுமே
ஆஹா
நேராக நீ உண்டு
நெஞ்சத்தில் நானுண்டு
லாபங்கள் காணட்டுமே... ஹேஹேஹேஹே
(கிடார் பிட்)
https://youtu.be/YvigJkZCdIk
Dear Rajraj Sir and Ragadevan Sir.
Thank you for the interactions keeping daughters and grand daughters/children as the center of gravity of our situation songs! It is quite natural that they are our binding forces and they remain the catalysts for our continued life activities !When we are with them, listening to their incessant speeches...observing their immaculate innocence ....we forget everything around us!! In line with you two , I too feel proud of my daughter and grand daughter who make the rest of my existence meaningful!!
Children always have flexible moods with false anger!
That is best exemplified by this Shammi Kapoor song in his ace movie Andaaz!
https://www.youtube.com/watch?v=3bliYy8ZfBk
https://www.youtube.com/watch?v=F9yEftUD90Q
வாசு -
"இன்று தொடரில் எழுதப் போகும் பாலா பாடலை நினைத்தாலே கடல் அலைகளில் மிதப்பது போல உள்ளம் குளிருகிறது. 'மீண்டும் மீண்டும்' பாலா பாடல்களுக்காவே 'வாழ்வேன்' என்று கூட கத்தத் தோணுகிறது."
எங்களுக்கும் தான் இன்னும் அதிகமாக கத்தத் தோணுகிறது - இப்படியெல்லாம் எழுதி வெளுத்து வாங்கக்கூடிய ஒருவரின் பதிவுகளை மீண்டும் மீண்டும் படிக்க , சுவைக்க நாங்கள் இன்னும் "வாழ்வோம் " என்று !!- என் வரும் பதிவை உங்களுக்கு ஒரு பரிசாக வழங்குகிறேன்.
இந்த மதுர கானத்தில் , தேனை சம்பந்தப்படுத்தி ஒரு பதிவும் வரவில்லையே என்று எனக்குள் ஓரி சின்ன ஏக்கம் - அனைவர்களுடைய பதிவுகளும் தேனாக இனித்தாலும் , தேனுக்காக , தேனை சம்பந்தப்படுத்தி ஒரு சிறிய தொகுப்பை வழங்கினால் என்ன என்று மனதில் ஒரு ஆசை எழுந்தது - அதன் விளைவுதான் இந்த பதிவு . நாரதர் , பாட்டிகள் இந்த வரிசையில் இந்த தொக்குப்பையும் சேர்த்துக்கொள்ளலாம் .
தேன் இசையை கேட்பதற்கு முன் , தேனைப்பற்றிய தெரிந்த உண்மைகளை சற்றே அசை போடுவோம் .
http://i818.photobucket.com/albums/z...psvvfjp6tq.jpg
பகுதி 1
தேனும் மருந்தும் :
தேனீயின் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)
தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்.
கண் பார்வைக்கு
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
இருமலுக்கு
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
ஆஸ்துமா
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்
இரத்த கொதிப்பு
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
இதயத்திற்கு டானிக்
அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.
தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.
2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.
தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.
http://i818.photobucket.com/albums/z...psus6cbjvx.jpg
பகுதி 2
https://www.youtube.com/watch?v=7EHgb4e_L_w
https://www.youtube.com/watch?v=Cxni3Nk9fUc
https://www.youtube.com/watch?v=tCpQUgKU4YI
தேன் நிலா வரும் சொல்லித்தான் தரும் சுகம்
https://www.youtube.com/watch?v=Y5m0m5zSbEo
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா...
...
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்
அதை சொல்வாய் வெண்ணிலா..
வாசுவின் , சாரி பாலாவின் அருமையான குரலில் காலத்தை வென்று நிற்கும் இந்த பாடல், நம் மொழிவின் பறைசாற்றும் மற்றொரு தலைசிறந்த சான்று.
https://www.youtube.com/watch?v=7V6UEueZdLA
ரவி
உங்கள் தேன் கூடு வளர்ந்து தேன் மதுரம் நிறைந்து நாங்கள் பருகிட தேனீயாக என் பங்குக்கு நான் சேகரித்த தேன் மகரந்தங்கள் ....
செந்தமிழ் தேன் மொழியாள்... ..நிலாவென.....கான மதுர கந்தர்வர் டிஆர் மகாலிங்கம் அவர்களின் தேன்குழைவுக் குரலில்...
மாலையிட்ட மங்கை மைனாவதியின் நடன இழைவில் .....
https://www.youtube.com/watch?v=eO3gRFz11yY
ஜெமினியின் தேன் குழைவுக் குரலான ஏ எம் ராஜா ஸ்ரீதருக்காக தேன் உண்ணும் வண்டாக நடிகர்திலகத்தின் உதட்டசைவுக்குப் பாந்தமாக ...அமரதீபம்...
https://www.youtube.com/watch?v=AhGgNSX545E
வாசு ஜி... அந்தக் காலத்தில் கோடம்பாக்கம் ராம் தியேட்டரில் இந்தப் படம் பார்க்க வெளியூரிலிருந்து வந்திருந்த உறவினர் குடும்பத்துடன் சென்றிருந்தபோது ரிசப்ஷன் ஹாலில் ஒட்டியிருந்த ஸ்டில்லைப் பார்த்து விட்டு நீச்சல் டிரஸ் எல்லாம் போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடும் படத்துக்கு சின்னப் பசங்கள் எல்லாம் போகக்கூடாது என்று சொல்லி எங்க குரூப்பை அப்படியே வடபழனி கோவிலுக்குத் தள்ளிக்கொண்டு போய் விட்டார்கள். மாமாஸ், மாமீஸ், அத்தைஸ், அத்திம்பேர்ஸ் எல்லாரும் படத்துக்குப் போக எங்களை அடுத்த நாள் பீச்சுக்கு போவதாக சொல்லி சினிமாவுக்கு அழைத்துச் சென்ற சின்ன மாமா வால்க.. வால்க... எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது !!
பழைய நினைவுகளை தோண்டி எடுக்க வச்சிட்டீங்க... பாலாவின் லா..லல்லல்லல்லல்லல்லா...என்று பாடியபடி ஓடுவது என் அந்தக் கால சவுண்ட்....
தேன் பாடல்களா.... ? தேன் என்றாலே மது அல்லவா ?
புதுமைப்பித்தனில் சுசீலாவின் தேன் குரலில் ... தேன் மதுவை வண்டினம் தேடி வராதா ?
https://www.youtube.com/watch?v=lqNv_XH90Ng
மது சார் , உங்களை மனதில் நினைத்துக்கொண்டுதான் எழுத ஆரம்பித்தேன் - மது என்ற வார்த்தை வேறு எங்கோ என்னை எடுத்து செல்வதைப்போல உணர்ந்தேன் , அதனால் தேன் என்ற வார்த்தை மனதில் தங்கி விட்டது - உங்கள் தேன் பாடலுக்கு என் நன்றி
செந்தில் சார் - அருமையான, தேனான பாடல்கள் - மிகவும் நன்றி - யோசியுங்கள் , இன்னும் நிறைய கிடைக்கலாம்
பாடு நிலாவே தேன் கவிதை - ஜானகியின் குரலில் ஒரு தேன் மழை
https://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg
========
https://www.youtube.com/watch?v=-3Z57y99u88
தேன் தேன் தேன்...
உன்னைத் தேடி அலைந்தேன்...
உயிர்த் தீயாய் அலைந்தேன்...
சிவந்தேன்...
ஆண்: தேன் தேன் தேன்...
என்னை நானும் மறந்தேன்...
உன்னைக் காண தயந்தேன்...
கரைந்தேன்...
பெண்: என்னவோ சொல்லத் துணிந்தேன்...
ஏதேதோ செய்யத் துணிந்தேன்...
உன்னோட சேரத்தானே நானும் அலைந்தேன்.... (தேன் தேன்...)
(இசை...)
பெண்: அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்
ஆண்: முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்
பெண்: நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் துள்ளாததையும் ரசித்தேன்
ஆண்: நீ செய்யும் யாவும் ரசித்தேன்
எதும் செய்யாததையும் ரசித்தேன்
பெண்: உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன்... (தேன் தேன்...)
(இசை)
ஆண்: சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்
பெண்: திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே ஆசை அறிந்தேன்
ஆண்: என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
பெண்: ஆண் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்
ஆண்: நீ நடமாடும் திராட்சைத் தோட்டம் எதிரில் அறிந்தேன்... (தேன் தேன்...)
ஆகாய கங்கை - தேன் அருவியில் நனைந்திடும் மலரோ -----
https://www.youtube.com/watch?v=lrCmn2WdRSE
தேன் சுமந்த முல்லை தானா --------
https://www.youtube.com/watch?v=P9W6bu9_omk
CK க்காக இந்த பாடல்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும் தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம் கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
ஆணிப்பொன் கட்டில் உண்டு கட்டில்மேல் மெத்தை உண்டு
ஆணிப்பொன் கட்டில் உண்டு கட்டில்மேல் மெத்தை உண்டு
மெத்தைமேல் வித்தை உண்டு வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
விண்ணிடை வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி
பள்ளியில் காலைவரை பேசிடும் காதல் கதை
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
கைகளில் ஏந்துகிறேன்...ஆஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்...ஆஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்.
https://www.youtube.com/watch?v=472O53yVXvw
இதுவும் CK க்காக
https://www.youtube.com/watch?v=F6UMN8dMnQA
எங்க வீட்டு கம்ப்யூட்டர் பழுதாகி பல நாளாச்சு.. ஏதோ browser hijacker அப்படின்னு ஒண்ணு வந்து மொத்தத்தையும் கலக்கிப் போட்டுருச்சு. இப்போதைக்கு நண்பரின் laptop அப்பப்போ உதவுது. நண்பர்களால் ஒரு உதவி தேவைப்படுகிறது. இப்போது எதையும் பெரிய அளவில் டவுன்லோடு செய்து வைக்க முடியாததால் ஆன்லைனில் பார்க்கும் திரைக்காட்சிகளில் ஒரு பாடலை மட்டும் வெட்டி டௌன்லோடு செய்ய வசதி இருக்கிறதா ? ஏதாவது software இருக்கா ?
அல்லது முழுசா டவுன்லோடு செஞ்சு பிறகு வெட்டி எடுக்க வசதி உண்டா ? வெட்டி எடுத்துக்கிட்ட பிறகு மிச்சம் மீதியை கடாசிடலாம் இல்லையா ? ( அந்தக் காலத்தில் எங்கிட்ட ஏதோ ஒரு சாஃப்ட்வேர் இருந்துச்சு. அது பேர் கூட மறந்து போச்சு..) உதவி ப்ளீஸ்..