-
ஏழைகளின் இதயம் எம்.ஜி.ஆர்.*
----------------------------------------------------
ஈழத்தில் மற்றுமொரு எம்.ஜி.ஆர். சிலை.
----------------------------------------------------------------
யாழ்ப்பாணம் அருகே, பாசையூர் கடற்கரை பகுதியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முழு உருவசிலை நிறுவப்பட்டுள்ளது .
வாட்ஸ் அப் செய்தி*
-
துக்ளக் வார இதழ் -01/01/1988
-----------------------------------------------
திரு.எம்.ஜி.ஆர்.
--------------------------
அசாத்தியமான மனோதிடம், பரிபூரணமான தன்னம்பிக்கை, தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவும் தாராள குணம் , - இவை எம்.ஜி.ஆரின் குணாதிசயங்களாக திகழ்ந்தன .**
என்னை போல் அவருடைய அரசியலை ஏற்காத வர்கள் கூட, அவருடைய இந்த குணங்களை* கண்டு வியக்காமல் இருந்ததில்லை .
தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சரி, சினிமாத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி, சோதனைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்தபோது , சோர்ந்துபோய்விடாமல், அவற்றைக் கடந்து வரக்கூடிய தன்மை - இந்த குணாதிசயங்களால்தான் அவருக்கு கிட்டியதுஎன்று நினைக்கிறேன் .* அவர் மறைந்துவிட்ட இன்றைய நிலையில்* சில ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரை பற்றி துக்ளக் இதழில் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில பகுதிகளை நினைத்துப் பார்க்கிறேன் .*
எம்.ஜி.ஆர். செய்துள்ள தான தருமங்கள் ஏராளம் என்பது எல்லோருக்கும் தெரியும் .வருமான வரியை குறைப்பதற்காக செய்கிறார் , விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சிலர் கூறுவதுண்டு .* அப்படியே வைத்துக் கொள்வோம் .* இந்த காரணங்களுக்காக தான தருமங்கள் செய்ய முன்வருபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.* தவிர, எந்தவித விளம்பரமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். செய்துள்ள தான தருமங்கள் உதவிகள் அநேகம் உண்டு .* அவ்வாறு உதவி பெற்றவர்களே என்னிடம் பலர் கூறியிருக்கிறார்கள் .* மிகவும் தேவையான சமயத்தில் செய்யும் உதவி போன்ற நல்லகாரியம் வேறு எதுவுமில்லை .* அவ்வாறு பல நல்ல காரியங்களை எம்.ஜி.ஆர். செய்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை .* ஒரு நடிகர் ஒருமுறை என்னிடம் கூறினார் , வீட்டிலே உலை வைத்துவிட்டு , சோறு பொங்குவோம் என்கிற நம்பிக்கையோடு, அரிசிக்காக ஒருத்தர் வீட்டிலே போய் நிற்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆர். வீட்டு வாசலிலேதான்.* வேறு யாரும் கிடையாது* *இந்த மாதிரி மனப்பூர்வமான சர்டிபிகேட்* எத்தனை பேருக்கு கிட்டும் என்று நினைத்து பார்க்க வேண்டும் .
துக்ளக் --13/12/1974.
ஒருவருடைய அரசியலை விமர்சிக்கிறோம் என்பதற்காக அவரிடம் இருக்கக் கூடிய பல நல்ல விஷயங்கள்* நமக்குத் தெரிந்திருந்தால் , அவற்றை மறுத்துதான் தீரவேண்டும் என்று நினைப்பவர்களில் நான் ஒருவன் அல்ல.*அரசியல் பற்றிய என்னுடைய அபிப்பிராயங்கள் எடுபடவேண்டும் என்பதற்காக*என் கருத்துக்களுக்கு விரோதமாக போகக்கூடிய எனக்கு தெரிந்த உண்மைகளை நான் மறைக்க முற்பட்டதில்லை* *எம்.ஜி.ஆரின் அரசியலைப் பற்றிய என்னுடைய* கடுமையான விமர்சனம்* தொடர்வது வேறு விஷயம் .* ஆனால் தனிப்பட்ட முறையில் அவரிடம் உள்ள பல நல்ல குணாதிசயங்களை எடுத்து சொல்ல நான்* தயங்கவில்லை .**
துக்ளக் = 01/07/1974
பலருக்கு மனமுவந்து வந்து உதவி செய்து, அந்த மனிதர் மீண்டும் முழுமையாக தனது உடல்நலத்தை திரும்ப பெற்று* நன்றாக வாழ வேண்டும் என்று ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்ந்து நானும் இறைவனை வேண்டுகிறேன் .
எம்.ஜி.யாருக்கோ, தான் செயல்பட்டு காட்ட வேண்டும் என்கிற துடிப்பு எப்போதுமே அதிகம் . துப்பாக்கி சூட்டுக்கு பிறகு அவரது குரல், பேச்சு மிகவும் பாதிக்கப்பட்டது . இனி அவர் சினிமாவில் நடிக்க முடியாது என்று தான் பலரும் நினைத்தார்கள் .* ஆனால் செயல்பட்டே தீர வேண்டும் என்ற தன்னுடைய உத்வேகத்தின் காரணமாக , எம்.ஜி.ஆர். மிக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் .* தொடர்ந்து பேசிப் பேசி, தனது பயிற்சியின் மூலமாக இழந்த தனது குரலை பெருமளவு திரும்ப பெற்றார் .சினிமாத்துறையில் தொடர்ந்து நடித்து பல அபார வெற்றிகளை கண்டு சாதித்தார் .* இந்த மாதிரி செய்வதற்கு மிகவும் மனோதிடம் வேண்டும். எம்.ஜி.ஆரிடம் அந்த மனோதிடம் இருந்ததனால்தான் அப்போது அவரால் அவ்வாறு செய்யவும், சாதிக்கவும் முடிந்தது .
வாழ்க்கையில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால் இடிந்து போகிறவர்கள் உண்டு .எப்படியாவது போராடி, அபாயத்தைக் கடந்து, ஜெயித்து காட்ட வேண்டும் என்று முனைபவர்களும் உண்டு . எம்.ஜி.ஆர். அதில் இரண்டாவது ரகம்*
குண்டடிபட்டபோது எமன் வாயில் இ*ருந்து மீண்டார் .அதுமட்டுமல்ல.
குரலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பை* விடா முயற்சியின் பலனாக பெருமளவு வென்று, சினிமாவில் பல வெற்றிகளை , சாதனைகளை தனதாக்கிக் கொண்டார் .* இப்படி தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சோதனைகளையும், தோல்விகளையும், அவர் கடந்து உறுதியுடன் நின்றிருக்கிறார் .*
ஆனால் அரசியலை ஒதுக்கிவிட்டு பார்க்கும்போது, அவர் பலருக்கு செய்துள்ள உதவிகளும் , சொந்த வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்து நிமிர்ந்து நிற்க காரணமாக இருக்கும் அவருடைய மன உறுதியும் , என் கண்முன்னே தோன்றுகின்றன .* இவை இப்போதும் அவருக்கு கைகொடுக்கும் என்று நம்புவோமாக
.
துக்ளக்* -01/11/1984.
தன்னை மட்டுமே நம்பி , எம்.ஜி.ஆர். சாதித்த வெற்றிகளை, சாதனைகளை வேறு எந்த தனி மனிதனும், சமீப கால தமிழக சரித்திரத்தில் சாதிக்கவில்லை .
அவரை இழந்து நிற்கும் அவருடைய மனைவி திருமதி ஜானகி ராமச்சந்திரனுக்கும், அவருடைய மற்ற உறவினர்களுக்கும் , அவரது கட்சியினருக்கும், துக்ளக் பத்திரிகையின் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
-
அப்படியா??
-----------------------
ரிக்ஷாக்காரன் படம்!
சத்யா மூவிஸ் படங்களிலேயே அசுர சாதனை புரிந்த படம்!
அந்தப் படம் இந்திய அளவில் பாரத் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது சற்று சலசலப்பு எழுந்தது.
சிவாஜி ரசிகர்கள் ,,தங்கள் நாயகனுக்கு விருது கிடைக்காத வருத்தத்தில் சலசலத்துக் கொண்டிருந்தார்கள்--அப்போது--
ஒருவரின் தீர்க்கமான கருத்து அமளியை அமைதிக்கு மாற்றியது!
அவர் அப்படி என்னக் கூறியிருந்தார் என்றால்--
இந்த விருது,,ரிக்ஷாக்காரன் படத்துக்குக் கிடைக்கலேன்னா தான் நான் வருத்தப் பட்டிருப்பேன். உண்மையிலேயே எம்.ஜி.ஆருக்குக் கிடைக்க வேண்டிய விருது தான் இது.
எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்பதை வலுவாக எடுத்து சொல்லியிருக்கும் படம் இது. இந்தக் கருத்து,,தம் ரசிகர்கள் மனசுல ஆழப் பதியணும்ன்னு எம்.ஜி.ஆர் இந்தப் படத்துலே ரொம்பவும் மெனக்கெட்டிருக்கார்.
இந்திய விருதுன்னாலே ஹிந்திப் படங்களுக்கும்,,அந்த நடிகர்களுக்கும் தான் என்று எழுதியா வச்சிருக்கு?
சிவாஜி ரசிகர்களுக்கும் ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன்--
உங்க சிவாஜிக்கு ஏன் கொடுக்கலேன்னு கேளுங்க,,நியாயம்!! எம்.ஜி.ஆருக்கு ஏன் கொடுத்தாங்கன்னு கேக்கறது சரியில்லே.
ஒரு தமிழனா,,தமிழ் படத்துக்குக் கிடைச்சதுக்காக நீங்க எம்.ஜி.ஆரைப் பாராட்டணும். அவரை வாழ்த்தணும்!!!
இப்படி ஒரே போடாகப் போட்டு அன்றைய விவாதத்தை அடக்கியவர்--
கவிஞர் கண்ணதாசன்!!
இதில் என்ன செய்தி இருக்கிறது எனக் கேட்கிறீர்களா??
அந்த சமயம்,,,இதே கண்ணதாசன்,,அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்த நேரம்? இன்னொரு சுவாரஸ்யம்??
இதே கண்ணதாசன் சிவாஜியுடன் இணைந்திருந்து,,அவரது படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த பீரியட்??
வேண்டப்பட்டவர் என்பதால் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்ததாக--
தூண்டப்பட்டவர்கள் சிலரால் மும்முரமாக--
தோண்டப்பட்டுக் கொண்டிருந்த பள்ளத்துக்கு கவிஞரின் விளக்கமே சரியான தீர்ப்பு என்பதில் ஐயம் இல்லை தானே அருமைகளே???!!! ......... Thanks.........
-
திரு லோகநாதன் அவர்கள், இன்றைய தினமலர் செய்தியில் சில வரிகளை விட்டு விட்டு பதிவு செய்து இருக்கிறீர்... ( கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற தரமான படங்களுக்கு அப்போதைய மக்கள்
போதிய ஆதரவு தரவில்லை, அதனால் பந்துலு பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டார். அதிலிருந்து விடுபட புரட்சி நடிகர் அவர்களை நாடி"ஆயிரத்தில் ஒருவன்" எடுத்து வெளியிட்டு பிரச்சினையிலிருந்து விடுப்பட்டார்) என்ற செய்திகளை எடிட் செய்து உள்ளீரே...
-
இன்று முதல் (29/02/20) அருப்புக்கோட்டை மகாராணியில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
-
நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.*
தினமலர் செய்தியை இணைய தளத்தில் வேண்டுமென்றே தான் எடிட் செய்து பதிவிட்டேன் . ஏனெனில் இது சம்பந்தமாக பல விவாதங்கள், கருத்து பேதங்கள், சர்ச்சைகள் நடந்து முடிந்துவிட்டன . ஆகவே மீண்டும் புதியதாக பிரச்சனையை*உருவாக்கி வளர்த்துவிட வேண்டாம் என்பதற்காக தான். மற்றபடி, தினமலரில் பிரசுரம் ஆன செய்திகள், கருத்துக்களை பொதுமக்கள் படித்தபின்னர் யார்தான்*எடிட் செய்யமுடியும் . ஆயிரத்தில் ஒருவன் ஓய்வில்லாமல் தமிழகத்தில் ஏதாவது ஒரு அரங்கில் அயராமல் காட்சியளித்து கொண்டுதான் உள்ளார் .* மறைந்த இயக்குனர் /தயாரிப்பாளர் தயாரித்த படங்களிலேயே அதிக நாட்கள் அரங்கினில் ஓடி கொண்டிருக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன் என்பது அவரது குடும்பத்தினருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தெரியும்.என்று சொன்னால் மிகையாகாது .* எனவே , இணைய தளத்தில் பதிவிட்டு, மீண்டும் நாமே விவாதத்தை தொடங்குவதற்கோ, அல்லது யாருக்கும் பயந்தோ அல்ல. அப்படி ஒருவேளை* செய்திகளை படித்துவிட்டு கே*ள்வி கணை தொடுப்பவர்கள் தினமலர் நாளிதழ் ஆசிரியரை கேட்கட்டும் ,நாம் என்ன செய்ய முடியும் .
-

வாழ்ந்த காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த புகழ் போல் எவருக்கும் கிடைத்ததில்லை
மறைந்த 32ஆண்டுகள் ஆன பிறகும் தினமும் அவருடைய புகழ் வெளிவந்த வண்ணம் இருப்பதை போல் உலகில் எந்த ஒரு நடிகருக்கோ , அரசியல் தலைவருக்கோ கிடைத்ததில்லை .

70 ஆண்டுகளாக ஒரு நடிகரின் படம் திரை அரங்கில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சாதனையை படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவரே.

அரசியலிலும் தான் தொடங்கிய கட்சி 47 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பது மூலம் உலக அரசியல் வரலாற்றில் தனி முத்திரையை பதித்து விட்டார் நம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் .
ஏறத்தாழ 70 ஆன்டுகளாக ரசிகர்களை 
இன்னமும் தன் வசம் ஈர்த்து ரசிகர்கள் கட்டி காத்து வரும் எம்ஜிஆர் மன்றங்கள் 7 தலை முறைகளாக நிலைக்க செய்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . இந்திய மண்ணிலும் அந்நிய நாட்டு மண்ணிலும் கோடிக்கணக்கான எல்லா மதத்தினரும் எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு வருவது உலக சாதனை.
.
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தி [1977] அரசியலில் அதிமுக ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடித்து திரை உலகிலும் , ஆட்சியிலும் , அரசியலிலும் உலக அரங்கில் புகழ் பெற்ற மனித நேய தலைவராக எம்ஜிஆர் அவர்கள் புகழுடன் வாழ்ந்தது இன்னமும் மக்கள் இதயங்களில் நிலையாக இருப்பது கண்டு வியந்து நிற்கிறேன்
என்ன ஒரு அதிசய மனிதர் எம்.ஜி.ஆர்.,
நிச்சயம் அவர் ஒரு தனிப்பிறவி......... Thanks.........
-
இன்று முதல் (01/03/20) சத்தியமங்கலம் வீராஸ் அரங்கில் கலைச்சுடர் /கலைவேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி பொற்கால ஆட்சியை தந்த பொன்மனசெம்மலின் அரசியல் சாதனைகளை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.
2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை 01-07-1982 முதல் அறிமுகபடுத்தினார்.
3. அழகுத் தமிழில் சீர் திருத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.
4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின்
அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.
5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.
6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்தது மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்..
7. புதிய போக்கு வரத்து கழfங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம், போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார்.
குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.
8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.
9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known
as DE- CENTRALIZATION)
10. வீட்டுக்கொரு விளக்கு என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.
11. நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிfSக்கு, வானம் பொய்த்த போது, வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில்
(ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு
செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.
12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.
13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.
14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.
15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.
16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார்.
17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி, நியாய விலைக் கடைகளில் வழங்கிட உத்தரவிட்டார்.
18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.
19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை
ஏற்படுத்தினார்.
20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில், பல்கலைகழகம் உருவாக்கினார்.
21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.
22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை
மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம், வேலை வாய்ப்பினை பெற்றனர்.
23. ஏழை மாணவ - மாணவியர் பயன்பெறத்தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு
முறையை அறிமுகப் படுத்தினார்.
24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர்
நகரத்தில் ஏற்படுத்தினார்.
25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.
26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும்,
என்று உத்தரவிட்டார்.
27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் எழுத பணித்தார்.
28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.
29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட
அரசு உதவியினை பெருமளவில் வழங்கினார்.
30. முதன் முதலில் மாநில கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.
31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார். (உதாரணமாக -
இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும் அருப்புக்கோட்டையில், தானே நின்று
மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை
நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல், பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச்
செய்தார். கவுண்டர் இனம் பெரும்பான்மையாக கொண்ட திருப்பூர் தொகுதியில் மணிமாறன் என்பவரை வேட்பாளராக
அறிவித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்தார்.. தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு
புதியவர்களையும், மிக மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும், அடிமட்ட
தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை
ஏற்படுத்தியவர் நமது புரட்சித் தலைவர் மட்டுமே) சாதிக்கலவரம் நேரா வண்ணம் அமைதியுடன் மக்கள் வாழ முடிந்தது.)
32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை
ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.
33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும், உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983
அன்று உண்ணா விரதம் மேற்கொண்டார்.
34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.
35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே
போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத்தொழிலை மேம்படச் செய்தார்.
36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக, மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல
திட்டங்கள் பல கொண்டு வந்தார்.
37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.
39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.
40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று
உணர்த்தினார்.
41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.
42. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.
43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு
வரத்துக்கு வழி வகுத்தார்.
44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.
45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.
46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம்
அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு (PUC) படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம்
அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் இன்றும் பயன் பெற்றுறுக்
கொண்டிருக்கின்றனர்.
47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.
48. கிராமக் கைவினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.
49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே
இதுதான் - இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில்
கொள்ளத்தக்கது).
50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY-CUM-SUPERANNUATION SCHEME)
அறிமுகப்படுத்தினார்.
51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல்
படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.
52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.
53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு
ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்ட வழி செய்யும் திட்டம் துவக்கினார்.
54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும்
திட்டத்தையும் அமல் படுத்தினார்.
55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.
56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை
தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.
56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300/- வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.
57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.
58. பத்தாயிரம் ஏழைத் தாய்மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.
59. ஏழை விதவை தாய்மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி
சிறப்பித்தார்.
60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல்
படுத்தினார்.
61. உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வம் என போற்றப்படும் நமது உன்னத தலைவர் சங்கம் வளர்த்த கூடல் மாநகராம் மதுரை
மண்ணில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்ததும் அல்லாமல் தமிழறிஞர்களை மிகவும்
கவுரவப்படுத்தினார்.
62. தமிழறிஞர்கள், திரைப்பட வல்லுனர்கள் மற்றும் நாடக கலைஞர்களை கவுரவிக்கும் விதத்தில், தமிழக அரசு
சார்பில் "கலைமாமணி" விருது வழங்கிட்டார். அத்திட்டம், இன்றும் தொடர்கிறது.
63. நக்சலைட்டுகளை அறவே ஒழித்து, தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்து, " தமிழகம் அமைதிப்பூங்கா " என்ற
நற்பெயரை தொடர்ந்திடச் செய்தார்.
64. ENCOUNTERS இல்லாமல் தமிழகத்தில் ரௌடிசம் (ROWDISM) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டினார்.
65. புதிய தொழிற் கொள்கையை ஏற்படுத்தி அதன் மூலம் அந்நிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.
66. போக்குவரத்து நெரிசலை தவிர்த்து -
a). ஆசியாவிலே பெரிய அங்காடி (மலர் அங்காடி, காய்கறி மற்றும் பழ வகை அங்காடிகள் உள்ளடக்கியது) சென்னை
கோயம்பேட்டில் நிறுவ திட்டம் தீட்டி, அதனை செயல் படுத்த அடிக்கல் நாட்டினார். 120 ஹெக்டேர் நிலபரப்பில், சுமார்
3000 கடைகளை கொண்டது இந்த கோயம்பேடு வணிக வளாகம்.
b) சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளையும் கோயம்பேட்டிளிருந்து இயக்கிட அடிக்கல் நாட்டினார்.
c) சென்னை பெரு நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், WHOLESALE STEEL MARKET மிகப் பெரிய அளவில், சென்னை
திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தாங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
d) உள்வட்ட சாலையை (INNER RING ROAD) ஏற்படுத்தினார்.
67. சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினெரல்ஸ் (TAMIL NADU MINERALS) தொழிற்சாலையை நிறுவினார்.
68. சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் போதிய வசதிகளுடன், புதிய கட்டிடமாக
உருப்பெறச் செய்தார்.
69. தமிழகமெங்கும், கிராம மக்களின் வசதிக்காக, அதிக எண்ணிக்கையில், சுகாதார மையங்களை அமைத்தார். முக்கிய நகர
மருத்துவமனைகள விரிவாக்கம் செய்தார்.
70. கடும் மழை காரணமாக, சென்னையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுக்கும் விதத்தில், பெயர்பெற்ற "கூவம்"
நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப்படுத்தி, தூர் வார ஏற்பாடு செய்தார். சென்னை கோட்டுர்புரத்தில், அடுக்கு
மாடி குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த போது, முழங்கால் அளவு நீரில், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, மக்களின்
குறைகளை கேட்டறிந்து, அவர்களை தேற்றினார். பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என்று இப்போதும்
போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
71. சென்னை திருவல்லிக்கேணி யில் அமைந்துள்ள "அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின்" குளத்தை, பக்தர்களின்
கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து, நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த தேரோட்டத்தை தொடக்க ஆவன செய்தார்.
72. முறையான நிர்வாகமில்லாமல், நன்கு பராமரிக்கப்படாமல், பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்
கீழ் கொண்டுவந்து, அவைகளை சீரமைத்தார்.
73. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாவிக்காமல், அவர்களின் யோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து, மாற்றுக்
கட்சியினரையும் மதிக்கும் நற்பண்பாளராக திகழ்ந்து நல்லாட்சி நடத்தினார்.
74. நாட்டின் முன்னேற்றத்துக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நடைமுறைப்படுத்திய இருபது அம்ச திட்டத்தின்
ஒரு அம்சமான "கொத்தடிமைத்தனம் ஒழித்தல் " திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.
75. பேரறிஞர் அண்ணா அவர்களின் பவள விழா, மூதறிஞர் இராஜாஜி மற்றும் எழுச்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின்
நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி, அவர்களின் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார்.
76. அரசு விழாக்களில் " ஆடம்பரத்தை " தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தார்.
77. தமிழக அரசின் சார்பில் முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து, சொந்தக் காரிலேயே பயணித்து, அமைச்சர்கள்
அனைவருக்கும் எளிமையின் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து, அவர்களுக்கும் முன்னோடியாக விளங்கினார்.
78. தன்னை அதிகமாக எதிர்மறை விமர்சனம் செய்த கண்ணதாசன் அவர்களை, அரசவைக் கவிஞராக 28-03-1978 அன்று நியமனம்
செய்து, பகைவனுக்கும் அருளும் பண்பாளர் என பெயர் பெற்று, அதிகாரிகளும், அமைச்சர்களும், விருப்பு வெறுப்பு இன்றி செயல்
பட வேண்டும் என்று அதன் மூலம் உணர்த்தினார்.
79. குடிசை வாழ் மக்களுக்கு "இலவச தொலைக்காட்சி" வழங்கும் திட்டத்தினை தொடங்கி, அதன் ஒரு பகுதியாக 02-07-1985
அன்று சென்னை துறைமுகம் பகுதியில், குடிசைவாசிகளுக்கு வழங்கிட்டார்.
80. தொழிலார் நல அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியம் மூலம், தொழிலாளர்கள் குறைகள் அவ்வப்போது
களையப்பட்டு, தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து, கிளர்ச்சி, போராட்டங்கள், வேலை
நிறுத்தமின்றி, உற்பத்தி திறன் பாதிக்கப்படா வண்ணம், கவனமுடன் செயலாற்றினார்.
81. 1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---
தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த
மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு
பெற்றனர்.
82. 1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம்
தலைவரின் மகத்தான சாதனை.
83. இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது
இடத்தை பெற்றது.
84. 1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம்
வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.
85. 20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.
86. கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி
விலையை கிலோ ஒன்றுக்கு ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப
அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்.
இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.
87. அரசு ;அலுவலர்கள் வருகைப் பதிவேட்டிலும், தமிழில் தான் கையொப்பமிட வேண்டுமென்று ஆணையிட்டார்.
88. பெயர்ப்பலகை, ,விளம்பரப்பலகை, ஆகியவற்றில் முதல் பெயர் தமிழாகத்தான் இருக்க வேண்டும், அதன் கீழ் வேறு
மொழிகளில் இடம் பெறலாம் என்று ஆணை பிறப்பித்தார்.
89. தமிழ் சான்றோர்களின் பிறந்த நாள் விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றை அரசே சிறப்பாக கொண்டாட வழி
வகுத்தார்.
90. வறுமையில் வாடும் தமிழ் புலவர்கள் வாட்டமுறக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழறிஞர் உதவித் தொகை என்ற பெயரில்
அவர்களுக்கு மாதந்தோறும் உதவிப்பணம் வழங்க ஏற்பாடு .செய்தார்.
91. திருக்குறள் நெறி பரப்பப்பாடல் வேண்டும் என்ற வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். திருக்குறள் பரப்பும்
தொண்டில் ஈடுபட்ட பெருமக்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாளன்று "திருக்குறள் விருது" வழங்க ஏற்பாடு செய்தார்.
20,000/- ரூபாய் ரொக்கத் தொகை கொண்டது இவ்விருது.
92. தமிழகத்தின் பழங்கலைகளைக் காப்பதற்காக பழங்கலை இயக்ககம் (DIRECTORATE) ஒன்றை உருவாக்கினார்.
93. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறந்த கவிஞருக்கு தங்கச் சங்கிலியும், 10,000 ரூபாய் தொகையும்
கொண்ட பாவேந்தர் விருது வழங்கும் வழக்கத்தை உருவாக்கினார்.
94. சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் திரு.வி.க. விருது வழங்க ஏற்பாடு செய்தார்.
95. மதுரையில் வாழ்ந்த சங்க காலப் புலவர்களை கவுரவிக்கும் பொருட்டு, அவர்களை நினைவு கூறும் வண்ணம், அவர்களது
பெயர்கள் பொறித்த நினைவுத்தூணையும் மதுரையில் நிறுவினார்.
96. மேலும், அதே மதுரை மாநகரில் தமிழன்னை சிலையையும், நிறுவினார்.
97. தமிழகத்தின் இசை, நடனம் ஆகிய கலைகளுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இசைக் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள்
சிலரை அரசவைக்கலைஞர்களாக நியமித்தார்.
98. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூக சீர்திருத்த பணியினை நினைவு கூர்ந்து அவர் பிறந்த
ஈரோடு மாநகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நவீன வடிவத்தில் நிறுவி அதை மற்ற மாவட்ட தலைநகர ஆட்சியர்
அலுவலகங்களுக்கு முன்மாதிரியாக திகழ வைத்தார்.
99. காவலர்கள் சீருடையில் மாற்றங்கள் கொண்டு வந்தார் .
100. சென்னை மாதவரத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவ அடித்தளமிட்டதுடன் சென்னை மாநகர மக்களுக்கு பால்,
பாக்கெட்டுகளில் கிடைக்க வழி செய்தார்.......... Thanks.........
-
இன்று முதல் (01/03/20) மேட்டுப்பாளையம் அபிராமியில் நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை ' தினசரி 4காட்சிகள் நடைபெறுகிறது .
-
*வேலூர் மாவட்டம்*
*வேலூர் கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற பெண் போலீசார் சந்திப்பு*
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *எம்ஜிஆர் தான் எங்கள் தெய்வம் என உருக்கம்*
*வேலூர் தமிழகத்தில் 1981 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்அமைச்சராக இருந்த பொழுது 650க்கும் மேற்பட்ட பெண்கள் 2-ம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.வேலூர் கோட்டையில் அமைந்துள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் ஏராளமானோர் பயிற்சி பெற்றனர். *அவர்கள் கோட்டையிலுள்ள திப்பு மஹாலில் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர்.இவர்களுடைய பயிற்சி நிறைவு விழாவில் அப்போதைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார்.அப்போது பெண் போலீசாரின் பயிற்சியைக் கண்டு அவர்களை முதல் நிலை காவலராக அறிவித்தார்.அப்போது பயிற்சி பெற்ற போலீசார் பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்தனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது இவர்கள் வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைந்துள்ளனர்.திருநெல்வேலியை சேர்ந்த போலீஸ் ஒருவர் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளார். இதனையடுத்து 40 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி பெற்ற அவர்கள் வேலூர் கோட்டையில் அவர்கள் பயிற்சியில் சேர்ந்த நாளான பிப்ரவரி மாதம் 23 ம் தேதி சந்திக்க முடிவு செய்தனர்.அதன்படி ஞாயிற்றுக்கிழமை 1981ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற பெண் போலீசார் 160 பேர் கோட்டையில் உள்ள திப்பு மஹாலில் சந்தித்து பேசினர் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய குடும்பம் பயிற்சியின்போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசிக் கொண்டனர். அப்போது *எம்.ஜி.ஆர் தான் எங்களுக்கு தெய்வம் அவர் அளித்த வாய்ப்பால் தான் நாங்கள் மற்றும் எங்கள் குடும்பத்தினர் நல்ல நிலையில் இருக்கிறோம் என உருக்கமாக தெரிவித்தனர். மேலும் பயிற்சிக்கு வந்த முதல் நாளில் திப்பு மஹாலில் நுழைந்தபோது மின்தடை ஏற்பட்டிருந்தது அதே போல இன்றும் அவர்கள் வந்தபோது மின்தடை ஏற்பட்டது இதனையடுத்து அவர்கள் பழைய நினைவுகளை கூறி ஒருவருக்கொருவர் ஆரவாரமாக பேசிக்கொண்டனர். கோட்டையில் உள்ள அனைத்து கட்டிடங்கள் அப்படியே உள்ளன நாங்கள்தான் வயது முடிவடைந்து விட்டோம் என்றனர்.நிகழ்ச்சியில் வேலூர் சரக டி.ஐ.ஜி காமினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பேசிய பெண் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.*......... Thanks.........
-
-
-
-
-
-
-
-
அதெல்லாம் சரி...
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் ஏன் மதிக்கணும் ?
ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க..
ஆனால் எம்ஜிஆர் வித்தியாசம்
யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான,லட்சோப லட்சம், கோடான கோடிக்கணக்கான மக்கள் மனதாரத் திருந்த வழிவகுக்கிறதோ...
பூத உடலை நீத்த போதும்,
இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ...
எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ.
அவர் தான் மக்களின் மனதில் நிலைத்து நிலைக்கமுடியும்...
இந்த வீடியோவைப் பாருங்க...
இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, நேரிலாவது பார்த்திருப்பவர்களா..? சிலர் பார்த்திருக்கவும் கூடும்
இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...
#வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்......... Thanks.........
-
மக்கள் திலகம்" பிறந்த நாள்", நிகழ்ச்சி 4 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றபோது திரைப்பட இயக்குனர் திரு சுந்தர்ராஜன் நிகழ்த்திய உரை, கருத்துகள் அருமை... ஆனால் திரு ரஜினிகாந்த் பேசிய ஒரு பேச்சு தவறானது, நாகரிகம் காத்து பேசியிருக்கலாம் என்பது நம் கருத்து...
-
கோவை
சண்முகாவில்
வருகின்ற வெள்ளி முதல்
ரிக்*ஷாக்காரன்
புதிய பொலிவுடன்
-
வருகின்ற
சனி - ஞாயிறு - திங்கள் 7th To 9th march
இரவு 8 மணி காட்சி மட்டும்
நவரத்தினம்
திருப்பூர்
அனுப்பர்பாளையம்
கணேஷ் திரையரங்கில்
-
1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!
உடனே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’
ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.
‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!
நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’
சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.
எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.......... Thanks.........
-
நாளை ,வெள்ளி முதல் (06/03/20) மதுரை*சக்தியில் வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*"ரகசிய*போலீஸ் 115" தினசரி 4 காட்சிகள் திரைக்கு*வருகிறது. வெற்றிகரமான 2 வது* இணைந்த*வாரம் .
வெள்ளி முதல் (06/03/20) திண்டுக்கல்*விஜய்*அரங்கில்*நிருத்திய*சக்கரவர் த்தி எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*"ரகசிய*போலீஸ் 115" தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம் .
தகவல்கள்*உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் இந்த வாரம் (06/03/20)*தமிழகத்தில் வெளியான*விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை -மூலக்கடை ஐயப்பாவில் - பல்லாண்டு வாழ்க -தினசரி 3 காட்சிகள்*
மதுரை* - சக்தி* * *- ரகசிய போலீஸ் 115 - தினசரி 4 காட்சிகள்*-*இணைந்த 2 வது* வாரம் .
திண்டுக்கல் - விஜய்* - ரகசிய போலீஸ் 115 - தினசரி 4 காட்சிகள்*
கோவை* - சண்முகா* - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்** 9 மாதத்தில் 3 வது* முறையாக கோவையில் வெளியீடு*
திருப்பூர் - அனுப்பர்பாளையம் கணேஷ் - நவரத்தினம் -தினசரி* இரவு காட்சி** மட்டும் -வெள்ளி /சனி /ஞாயிறு -06/07/08-03-20
-
-
-
-
-
கடந்த*வியாழனன்று*(05/03/20)* சென்னை*வேளச்சேரி*, அம்மா திருமண*மண்டபத்தில் , தர்மம் தலைகாக்கும் இதழ் ஆசிரியர் திரு.மின்னல் பிரியன் அவர்களின்*மகள் திருமண*நிகழ்ச்சி காலை*10.30 மணியளவில் சென்னை*பெருநகர*முன்னாள் மேயர் திரு.சைதை*துரைசாமி*அவர்கள் தலைமையில் இனிதே*நடைபெற்றது . நிகழ்ச்சியில் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எம்.ஜி.ஆர். பக்தர்கள், முக்கிய*பிரமுகர்கள்*கலந்து கொண்டு*சிறப்பித்தனர் .* மலேசிய*நடன*கலைஞர்*திரு.எம்.ஜி.ஆர். ஹரி, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனமாடி*அனைவரையும்*மகிழ்வித்தார் .சொற்பொழிவாளர் திரு.திருஞானசம்பந்தம், கல்கண்டு*ஆசிரியர் திரு.லேனா*தமிழ் வாணன்*போன்ற முக்கிய*பிரமுகர்கள்* நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை*வாழ்த்தினர் .
-
கடந்த*வெள்ளியன்று*(06/03/20) சென்னை சாலிகிராமம்*, ஸ்டேட்*பேங்க்*காலனியில்* திரைப்பட*பாடலாசிரியர் , கவிஞர் முத்துலிங்கம்*அவர்களின்*மகள் இல்லத்தின் புதுமனை புகுவிழா சிறப்பாக நடைபெற்றது . சென்னை*பெருநகர*முன்னாள் மேயர்*திரு.சைதை*துரைசாமி, தென்சென்னை மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் விருகை*என்.ரவி, திரையுலகை*சார்ந்தவர்கள், பத்திரிகை நிருபர்கள், கவிஞர்கள்* மற்றும் முக்கிய*பிரமுகர்கள்*கலந்து*கொண்டு*சிறப்பித்தன ர்.* உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு, திரு.பாண்டியராஜு, திரு.ஆர். லோகநாதன் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்*குழு ) ஆகியோர்*நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர் .
-
தென்னக*ஜேம்ஸபாண்டாக நடித்து புரட்சி செய்த*புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆரின்*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில், புதிய தொழில்நுட்பத்தில் சென்னை*பெருநகரில்*கீழ்கண்ட அரங்குகளில் 13/03/20 முதல் வெளியீடு .
சத்யம்*/எஸ்கேப் / உட்லண்ட்ஸ்/பெரம்பூர்* எஸ்*2/பலாஸோ*/தி.நகர் ஏ.ஜி.எஸ்./கே.கே.நகர் -காசி, /வேளச்சேரி*லக்ஸ்*/பி.வி.ஆர்.-எஸ்.கே.எல்.எஸ்./அண்ணா*நகர் -பி.வி.ஆர்.- வி..ஆர். மால்*/ ஈ .சி.ஆர். -பி.வி.ஆர்./* *ஓ.எம்.ஆர்.-ஏ.ஜி.எஸ்./ஐனாக்ஸ்* நேஷனல் /ஓ.எம்.ஆர். ஐனாக்ஸ் மெரினா*
தினத்தந்தி*-08/03/20
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அன்புடன் ரசிகர்களை "அன்பே*வா " என*அழைக்கிறார் .
டிஜிட்டல் வடிவில்*முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில்* மார்ச்*27 முதல்*
புலியை*பார் நடையிலே*என*முழக்கத்துடன்* ஜே.பி. தமிழகத்திற்கு வருகை .
தினத்தந்தி*-08/03/20
-
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
----------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - வீழ்ச்சியும் , எழுச்சியும் .- கோட்டாறு*ஆ. கோலப்பன்*
------------------------------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். 19 வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டாலும், அவர் ஹீரோவாக நிலைபெற மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆகின.* இடைப்பட்ட காலத்தில் கிடைத்த வேடங்களை எல்லாம் ஏற்று நடித்தார்.* சினிமாவில் கதாநாயகனாக அவர்* உயர்ந்துக் கொண்டிருந்தபோது, தொடர்ந்து நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார் .* இன்பக்கனவு* என்கிற நாடகத்தில் ஸ்டண்ட் காட்சியில் நடிகர் குண்டுமணியை தூக்கி எறிவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது .* குண்டுமணியின் பாரம் தாளாமல் எம்.ஜி.ஆரின் கால் எலும்பு முறிந்தது* *
அவ்வளவுதான் எம்.ஜி.ஆரின் கதை என்று எதிரிகள் குதூகலித்தனர் .* கால் முறிவு, எம்.ஜி.ஆரை , மூன்று மாதங்கள் மட்டுமே முடக்கியது . அதன் பின்னர் முன்னிலும் வேகமாக திரைப்படங் களில் நடித்து வெற்றிகளைக் குவித்தார் .* குதூகலித்தவர்கள்* காணாமல் போனார்கள் .**
பத்து ஆண்டுகள் கழித்து எம்.ஆர். ராதாவால்* எம்.ஜி.ஆர். சுடப்பட்டபோதும் இதே போன்ற நிலை.* *அதே போன்று எம் .ஜி.ஆர். மீண்டெழுந்து* வந்து தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நாயகனாக நிமிர்ந்து நின்றார் .**
எப்போதெல்லாம் வீழ்கிறாரோ, அப்போதெல்லாம் முன்னிலும் பலமடங்கு விஸ்வரூபம்* எடுத்து எழுவார் என்பது எம்.ஜி.ஆரின். ஜாதகம்
-
.தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
----------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - கோட்டாறு* ஆ. கோலப்பன்*
------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆருக்கு இல்லாத உரிமையா ?
------------------------------------------------------------
இந்தியில் பிரபல இயக்குனரும், நடிகருமான சாந்தாராம் தன்னுடைய படங்களின் ரீமேக் உரிமையை யாருக்கும் வழங்க மாட்டார். 1957ம் ஆண்டு அவர் இயக்கி நடித்து வெளிவந்த " தோ ஆங்கேன் பாரா ஹாத் " இன்று வரையிலும் இந்தியாவின் டாப் 10 இந்தி படங்களின் பட்டியலில் இடம் பெறுகிறது .
எம்.ஜி.ஆரு க்கும் மிகவும் பிடித்த படம்* இது. சாந்தாராம், ரைட்ஸ் கொடுக்க மாட்டார் என்பதால்தான் நடிக்க விரும்பியும்* முடியாமல் இழுத்துக் கொண்டே போனது .* படம் வெளியாகி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகி கொண்டிருக்கும் நிலையில் , இனியும் பொறுக்க முடியாது என்று சாந்தாராமிடம் ரைட்ஸ் கேட்டார் .**
அட என்னங்க நீங்க .... நீங்களே நடிக்கப் போறீங்கன்னு கேட்டா நான் உரிமை* தர மறுப்பேனா ?* என்னிடம் உங்களுக்கு இல்லாத உரிமையா ? என்று* செல்லமாக கோபித்துக் கொண்டு, தமிழில் அப்படத்தை எடுக்கும்* உரிமையை கொடுத்தாராம் சாந்தாராம் .
எம்.ஜி.ஆர். நடிப்பில் புதிய பரிமாணம்* காட்டி, பெரும் வெற்றியை எட்டிய "பல்லாண்டு வாழ்க" தான் அந்த திரைப்படம்.* "பல்லாண்டு வாழ்க" திரைப்படத்தின் தெலுங்கு வடிவத்தில்தான் நடிக்க விரும்பினார் என்.டி.ஆர்.தன் உடன்பிறவா சகோதரனுக்காக சாந்தாராமிடம்* பேசி தெலுங்கு ரீமேக் உரிமையையும் எம்.ஜி.ஆர். வாங்கிக் கொடுத்தார் .
-
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
----------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் - கோட்டாறு* ஆ. கோலப்பன்*
------------------------------------------------------------------------------------
old is gold -ரசிகர் மன்றத்தை திறந்து வைத்த இந்திய பிரதமர்*
----------------------------------------------------------------------------------------------------
ஹீரோக்களுக்கு ரசிகர் மன்றங்கள் என்கிற கலாச்சாரத்தை உலகத்திற்கே அறிமுகப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான் . எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் உச்சமடைந்த காலத்தில்தான் , தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் அவருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன .**
கடல்கடந்தும் ரசிகர் மன்றங்களை வென்றவர் எம்.ஜி.ஆர். ஒருவரே .
அந்தமான் - நிக்கோபார் தீவுகளிலும் கூட "பணத்தோட்டம் " எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் செயல்பட்டது .* இந்த மன்றத்திற்கு என்ன சிறப்பென்றால்*, அதை திறந்து வைத்தவர் இந்திய பிரதமராக இருந்த திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் .
இன்றளவிலும் கூட , வேறெந்த நடிகருக்கும் ,இந்திய பிரதமர் ரசிகர் மன்றம் திறந்து வைத்த வரலாறு இல்லை .
-
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
-----------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆரை வியந்த தர்மேந்திரா*
--------------------------------------------------------
இந்தி படங்களின் சூப்பர் ஸ்டாரான தர்மேந்திரா எம்.ஜி.ஆரின் பரம ரசிகராக விளங்கியவர் .* ஒருமுறை கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தவர் மும்பை திருப்புவதற்காக சென்னை வந்தார் .* *எம்.ஜி.ஆரின் " நீரும் நெருப்பும் " படத்திற்காக சண்டைக் காட்சி படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்தார் .* அதை நேரில் பார்க்க விரும்பி, எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுத்தார் .**
எம்.ஜி.ஆரின் அழைப்பின் பேரில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து அன்று முழுக்க படப்பிடிப்பை* விரும்பி பார்த்தார்.* எம்.ஜி.ஆர். வாள் சுழற்றும் வேகத்தை கண்டு அசந்து போனார் .* படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆர். கையில் இருந்த வாளை* தொட்டு பார்த்தவருக்கு அதிர்ச்சி.* என்ன சார், உண்மையான* வாள் கொண்டு சண்டை* போடறீங்க ? என்று தன்* வியப்பை வெளிப்படுத்தினார் .
தான் முறையாக சண்டைக்கு கலைகளை கற்றுத் தேர்ந்தது குறித்து தர்மேந்திராவுக்கு விளக்கினார் எம்.ஜி.ஆர். அவரிடம் மேலும் சில ஸ்டண்ட் நுணுக்கங்களை கேட்டறிந்த மகிழ்ச்சியுடனேயே ஊருக்கு விமானம் ஏறினார் தர்மேந்திரா
-
.
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
-----------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆரை பின் தொடர்ந்த ஏழு*
----------------------------------------------------------
எம்.ஜி.ஆரின் பிறந்த தேதி* ஜனவரி 17, 1917
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தபோது எம்.ஜி.ஆரின் வயது 7
எம்.ஜி.ஆர். முதன்முதலாக கதாநாயகனாக "ராஜகுமாரியில் " நடித்த ஆண்டு 1947
சொந்த நாடக கம்பெனியான எம்.ஜி.ஆர். நாடக மன்றம் அமைத்தபோது அவரது வயது 37.
காங்கிரஸ் கட்சியில் எம்.ஜி.ஆர். சேர்ந்த ஆண்டு 1947.
காங்கிரசில் இருந்து விலகி, தன்னை தி.மு.க. வில் இணைத்துக் கொண்ட ஆண்டு 1953.
எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் , தானே நடித்து , இயக்கிய நாடோடி மன்னன்*ஆரம்பிக்கப்பட்டது* 1957ல்*
முதன் முதலாக எம்.ஜி.ஆர். சட்டமன்ற உறுப்பினர் ஆன ஆண்டு* 1967.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டு 1977.
எம்.ஜி.ஆர். இப்பூவுலகை விட்டு மறைந்த ஆண்டு* 1987.
-
.
தினகரன் - வெள்ளி மலர் -06/03/20
------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஸ்பெஷல்* - கோட்டாறு ஆ. கோலப்பன்*
-----------------------------------------------------------------------------------
ஈஸ்ட் மென் கலரில்* எம்.ஜி.ஆர்.*
-------------------------------------------------
எம்.ஜி.ஆரா , அவர் ரோஸ் கலரா இருப்பாரே ? என்று இன்றும் கூட நம்ம ஊர்க்கிழவிகள் நாணப்படுகிறார்கள் .**
ரோஸ் கலர் எம்.ஜி.ஆர். வண்ணப் படங்களில் நடித்ததே குறைவு என்பதுதான் ஆச்சரியம் .* மொத்தமாக எம்.ஜி.ஆர்.136 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார் .அவற்றில் கிட்டத்தட்ட 100 படங்கள் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டவையே .
அலிபாபாவும்* 40 திருடர்களும்* படம்தான் தமிழில் முதல் வண்ணப்படம்*என்பார்கள் .* எனினும்* அது கேவா கலர் என்கிற தொழில் நுட்ப்பத்தில் எடுக்கப்பட்டது.* திரையில் பார்த்தா ல் கலர் மாதிரி* தெரியும் .* ஆனால்,கலரல்ல..பிக்ச்சர் டியூப் போய்விட்ட பழைய டி.வி.யில் படம் பார்ப்பது போல இருக்கும் .**எம்.ஜி.ஆரின் கனவு படமான நாடோடி மன்னன் இடைவேளை வரைக்கும் கருப்பு வெள்ளைதான் . சரோஜாதேவி* அறிமுகமாகும் காட்சியில் இருந்து கலராகும்.
படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்* அன்பே வா , பறக்கும் பாவை , ரகசிய போலீஸ் 115 ,குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, அடிமைப்பெண் , நம்நாடு , மாட்டுக்கார வேலன் , என் அண்ணன் ,தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ,குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், சங்கே முழங்கு, நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன், இதய வீணை, உலகம் சுற்றும் வாலிபன் , பட்டிக்காட்டு பொன்னையா , நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும், நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே , இதயக்கனி,* பல்லாண்டு வாழ்க , நீதிக்கு தலை வணங்கு, உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் , நவரத்தினம் , இன்று போல் என்றும் வாழ்க, மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* ஆகிய படங்கள் ஈஸ்ட்மென் கலரில் வெளியான படங்கள் .
-
மக்கள் குரல் - அலிபாபா -08/03/20
------------------------------------------------------
இயக்குனர் நீலகண்டனுக்கு உயிர் கொடுத்த எம்.ஜி.ஆர்.*
------------------------------------------------------------------------------------------
ப. நீலகண்டன் என்கிற இந்த பெயரை* தமிழ் திரையுலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது . இன்றைக்கு அவர் இருந்திருந்தால் 104 வயது உடையவராக இருப்பார்.1916ல் விழுப்புரத்தில்* பிறந்த நீலகண்டன்* அவரது மாவட்டத்தில் அன்றைய சூழலில் பி.ஏ. பட்டம் பெற்ற* பட்டதாரிகளில்* ஒருவர்*
தனது இளம் வயதிலேயே திரைப்பட உலகத்தால் ஈர்க்கப்பட்ட அவர் ஆங்கிலப்படங்களை அதிகம் விரும்பி பார்த்ததால், அவற்றின் திரைக்கதை, வசனங்களை எழுதும் பாணியை ஆர்வத்துடன் கற்று தேர்ந்தார் .* இளைஞர் நீலகண்டனின் திறமையைக் கேள்விப்பட்ட ஏ.வி.எம். அதிபர் மெய்யப்பன் செட்டியார் அவரை அழைத்து, தனது நிறுவனத்தின் சார்பாக " நாம் இருவர் " படத்தை இயக்கம் பொறுப்பை* அளித்தார்.* படம் மாபெரும் வெற்றி .**
அதன் பிறகு இயக்குனர் நீலகண்டனின் வாழ்வில் வசந்தம் தான் .* தமிழ் திரைப்பட உலகின் முடிசூடா மன்னரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பல படங்களை இயக்கினார் .* எம்.ஜி.ஆரை வைத்து அவர் இயக்கிய " மாட்டுக்கார வேளாண் " வசூலில் வெற்றி பெற்று சாதனை* படைத்தது .* இதை தொடர்ந்து ,எம்.ஜி.ஆரின் ஆஸ்தான இயக்குனர் ஆனார் நீலகண்டன் .**
இந்த சூழலில் , ஒரு நாள் எம்.ஜி.ஆரின்* திரைப்படம் ஒன்றை வாகினி ஸ்டுடியோவில் இயக்கி கொண்டிருந்தார் நீலகண்டன் .* காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடந்தது .* கதாநாயகன் எம்.ஜி.ஆரும்* மிகவும் உற்சாகமாக அன்றைய காட்சிகளில் நடித்தார் .**
படப்பிடிப்பு முடிந்ததும் , நேராக ஒப்பனை அறைக்கு சென்று எம்.ஜி.ஆர். சற்று நேரத்தில் மேக்கப் கலைத்துவிட்டு வெளியே வந்தார் . அதே நேரத்தில், இயக்குனர் நீலகண்டனும் தனது பணிகளை முடித்துவிட்டு மறுநாளைய படப்பிடிப்புக்கான காட்சிகளை தனது உதவியாளர்களிடமும் , கேமராமேனிடமும் விவரித்துவிட்டு புறப்பட்டார் .* அப்போது எம்.ஜி.ஆர்.*அவரிடம் கிண்டலாக , என்னய்யா , என்னை நல்லா டிரில் வாங்கறீங்களே , பாத்து பாத்து , என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தபடியே வேகமாக நடந்தார் .
அவருக்கு இணையாக நடக்க முடியாமல் நீலகண்டன் சற்றும் பின்னாடியே நடந்து வந்தார் .* அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. திடீரென்று அடடா, அய்யய்யோ* என்று குரல் எழுந்ததை கேட்ட எம்.ஜி.ஆர். சட்டென்று திரும்பி பார்த்தார் .
அங்கே தரையில் நீலகண்டன் அப்படியே மயங்கி* சரிந்திருந்ததை எம்.ஜி.ஆர். கண்டு பதறினார் .* உடனே, தண்ணீர், தண்ணீர் என்று கூச்சலிட்ட அவர் ,நீலகண்டனின் முகத்தில் சிறிது தண்ணீரை தெளித்தார் .* அப்போது நீலகண்டனின் உடலில் லேசான அசைவு தென்பட்டது .*
உடனடியாக தனது ஜிப்பாவின் பாக்கெட்டில் இருந்து ஒரு மாத்திரைக்குப்பியை எடுத்த எம்.ஜி.ஆர். அதன் மேல் பகுதியில் இருந்த பட்டனை அழுத்தினார் .**அதில் இருந்து ஒரு மாத்திரை எம்.ஜி.ஆரின் உள்ளங்கையில் விழுந்தது .
அப்போது நீலகண்டன், நீலகண்டன், எழுந்திருங்க என்று சத்தமாக சொன்னார் .எம்.ஜி.ஆர். பிறகு நீலகண்டன் வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு அந்த மாத்திரையையும் வாய்க்குள் போட்டார் .
அடுத்த சில*மணித்துளிகளில் அந்த அதிசயம் நடந்தது. எ*துவுமே*நடக்காதது*போல தரையில் இருந்துஎ ழுந்து*உட்கார்ந்த*நீலகண்டன்*தன்* அருகே கவலையுடன் உட்கார்ந்து*கொண்டிருந்த எம்.ஜி.ஆரையும் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களை யும்*பார்த்து என்ன நடந்தது*என்று வியப்புடன்*கேட்டார் .* அப்போது எம்.ஜி.ஆர் தன்*உரித்தான புன்னகையுடன் ஒன்றும் இல்லை நீலகண்டன்*, கொஞ்சம்*சொர்க்கம்*வரைக்கும் சென்று வந்திருக்கீங்க , உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.* நான் ஒரு மாத்திரையை*உங்க*வாயில் போட்டேன்*.* அவ்வளவுதான் என்று கூறியபடியே எழுந்தார் .
அங்கே இருந்த*தயாரிப்பு நிர்வாகியை*பார்த்து இவரை*உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட்*பண்ணுங்க*.* செலவு என்னுடையது .* என்று உத்தரவு பிறப்பித்தார் .* அப்ப்போது இயக்குனர் நீலகண்டன்* கண்களில் கண்ணீர் வழிய சின்னவரே, என்னை*இன்னைக்கு*காப்பாதிட்டீங்க* இன்னும் எத்தனை நாளோ*, என்றார் கலங்கியபடியே .
அவரை*மெல்ல தட்டிக் கொடுத்த*எம்.ஜி. ஆர். அய்யா , அது நம்ம*கையிலே இல்லை .* வரும்போது வரட்டும்*.* இன்னும் பத்து நாள் கழித்து ஷூட்டிங்*வைத்துக் கொள்ளலாம் .* முதல்ல*மருத்துவமனைக்கு போங்க* என்றார்*பரிவுடன்*.
இந்த நிகழ்வைக்*கேள்விப்பட்ட நடிகர்*சோ*, எம்.ஜி.ஆரிடம், அது என்னங்க மாத்திரை* இதெல்லாம் எப்படிங்க என்றார் வியப்புடன்*.
என்னிடம் இதுமாதிரி*மாத்திரைங்க எப்போதும்*கைவசம் இருக்கும் .* சிங்கப்பூரிலிருந்து வரவழைத்து என்னிடம் பத்திரமாக வைத்திருக்கிறேன் .*இன்னைக்கு*அது நீலகண்டனைக் காப்பாற்றிவிட்டது . என்று சிரித்தபடியே சொன்னார்*எம்.ஜி.ஆர் .
உடனே, " யு*ஆறே*ரியலி*கிரேட்*சார்*" என்று எம்.ஜி.ஆரை பாராட்டினார் நடிகர் சோ* ,.மக்கள் திலகத்தின் வாழ்வில்* இது போன்ற நிகழ்வுகள் பல உண்டு.*மக்கள் திலகம் என்கிற*பட்டத்திற்கு இன்று வரை பொருத்தமானவர் அவர் மட்டுமே*.
இந்த நிகழ்விற்கு பிறகு பல ஆண்டுகள் இயக்குனர் நீலகண்டன்*நலமுடன்*வாழ்ந்தார்.* படங்களையும் தொடர்ந்து இயக்கினார்.* தனது இதயத்தில் எம்.ஜி.ஆரை*வணங்கியபடியே*
=-இளமாறன் .