-
என்னை கவர்ந்த இன்னும் கொஞ்சம் கானங்கள்.(அவ்வளவாக அறிய படாத(or)படங்களில் உபயோக படுத்தாத சில நல்ல பாடல்கள்)தொடர்ச்சி.
நாணமா மை விழியில் நாணமா-உயிர்.
வெட்கமா வா பக்கமா- உயிர்.
தண்ணீரில் ஏனடி நெருப்பு- உயிர்.
ஒரு ரோசாப்பு சிரிக்கிறது- யாகசாலை.
பேசு மனமே பேசு - புதிய வாழ்க்கை.
ஏழு தினங்கள் ஒரு வாரம்-மன சாட்சி.
வெள்ளி முத்துக்கள் நடனமாடும்-மீண்டும் வாழ்வேன்.
காதலன் வந்தான்- மூன்றெழுத்து.
கள்ள பார்வை கண்ணுக்கு-எங்களுக்கும் காலம் வரும்.
நாள் நல்ல நாள்-பணக்கார பெண்.
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு-அன்று கண்ட முகம்.
இதயம் பொல்லாதது-அன்று கண்ட முகம்.
பட்டிலும் மெல்லிய பெண் இது- ஞாயிறும் திங்களும்.
அடியம்மா ராசாத்தி சங்கதிஎன்ன-வசந்த மாளிகை.
புத்தம் புது பூ பூத்ததோ-தளபதி.
தென்றல் வரும் தேதி வரும்-பாலும் பழமும்.
திருநாள் வந்தது தேர் வந்தது-காக்கும் கரங்கள்.
சின்ன பெண் ஒருத்தி சிரிக்கிறாள்-அதே கண்கள்.
மும் மும் மும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா.
என்னை தொட்டு சென்றன கண்கள்- பார் மகளே பார்.
குருவி கார மச்சானே- நவரத்தினம்.
மல்லிகை பூ வாங்கி வந்தேன்-பால் குடம்.
டட டாட்டா டு டு டூட்டு -எதிரொலி.
முந்துங்கள் இடத்துக்கு முந்துங்கள்-இரு கோடுகள்.
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே-விடி வெள்ளி.
காவேரி ஓரம்-ஆடி பெருக்கு.
ஒரு நாள் இரவில் கண் உறக்கம்-பண தோட்டம்.
மலை சாய்ந்து போனால்- கார்த்திகை தீபம்.
எண்ண பறவை சிறகடித்து- கார்த்திகை தீபம்.
இறைவன் இருக்கின்றானா - அவன் பித்தனா.
அவன் காதலித்தான் -வாலிப விருந்து.
எங்கே எங்கே என் மனது- வாலிப விருந்து.
தேடி வரும் தெய்வ சுகம்- நிமிர்ந்து நில்.
ஒத்தையடி பாதையிலே- நிமிர்ந்து நில்.
எண்ணம் போல கண்ணன் வந்தான்-பூவும் போட்டும்.
(தொடரும்)
-
கோபால் சார்
உங்களுடைய லிஸ்ட் பிரமாதம் என்று நான் சர்டிபிகேட் தரப் போவதில்லை. அது வேஸ்ட். தெரிந்த கதை.
ஆனால் அந்த லிஸ்ட்டில் 'நாணமா? மைவிழியில் நாணமா?'வைக் கொடுத்து
என்
'உயிர்'
எடுத்து
'ஒரு ரோசாப்பு சிரிக்கிறது' தந்து
மன
'யாகசாலை'யில்
தீ மூட்டி ராசாவை நினைக்க வைத்து
'முந்துங்கள் இடத்துக்கு முந்துங்கள்'
என்று திரியில் முந்தப் பார்த்து
ஒன்றே ஒன்றைத் தவற விட்டுவிட்டீர்கள்.
கற்பனை வளம் செறிந்த
'பாப்பா பாட்டு பாடிய பாரதி நான்தானே'
(கெடுதலை என்னும் தறுதலைகளுக்கா
விடுதலை வேண்டிப் பாடினேன்
நான் திருடச் சொல்லியா தூண்டினேன்)
('கண்ணன் பாட்டை' காமுகன் பாடி
ஊரைக் கெடுத்தானே
என் பேரைக் கெடுத்தானே)
நிகழ்கால கொடுமைகளைக் கண்ட பாரதியின் புலம்பலில்
தாய் (தை) நாகேஷின் நாசூக்கான நகைச்சுவையில்
கவிஞனின் அபரிமிதமான கற்பனைக் கைவண்ணத்தில்
பாலச்சந்தரின் அசாத்திய அறிவுத் திறமையில்
சௌந்தரனின் சௌந்தர்யக் குரலில்
வி.குமாரின் விவேகமான இசையில்
'இரு கோடுகளி' ல்
இருந்த அபூர்வப் பாடலை
எப்படி மறந்தீர்கள்?
http://www.youtube.com/watch?v=_2rAZ...yer_detailpage
ஆனாலும்
(ரசிகன்யா நீ)
-
கோபால்,
'சின்னப் பெண் ஒருத்தி சிரிக்கிறாள்'
'அதே கண்கள்' பாடல் படத்தில் கிடையாது. என்னைப் போலவே நீங்களும் ஏமாந்திருப்பீர்கள். அதுவும் உங்களுக்குப் பிடித்த ரவி, காஞ்சனா வேறு. பிள்ளை ஏமாந்து போய் இருக்கும்.
கொஞ்சம் உங்கள் ஏக்கத்தைத் தணிக்கிறேன்.
இப்போது அந்தப் பாடலை கிருஷ்ணாவும், காஞ்சனாவும் பாடுவார்கள். உதைக்க வராதீர்கள். தமிழிலேயே பாடி உங்கள் நெஞ்சில் தேன் வார்ப்பார்கள்.
என்னை மன்னித்து விடுங்கள் கோபால் என்னை மன்னித்து விடுங்கள்.:hammer::hammer:
http://www.youtube.com/watch?v=11vlthrRpU4&feature=player_detailpage
-
வாசு சார்
சின்னப் பெண்ணொருத்தி சிரிக்கிறாள் பாடலை டப்பிங் முறையில் கொடுத்து கோபால் சாரின் ஏக்கத்தைப் போக்கியிருப்பீர்கள். பாராட்டுக்கள்.
ஜூலி சட்டக்காரி தூண்டில் மீன் மூன்றும் ஒரே கதை தான். தூண்டில் மீன் படத்தில் மோஹன் சர்மா அல்லது விக்ரம் நினைவில் இல்லை.
இதே கதையை சற்றே மாற்றி 80களின் மத்தியில் வெளிவந்த படம் தான் ஓ மானே மானே..
-
வேதா அவர்களின் இசையமைப்பில் வெளிவந்த ஏராளமான சிறந்த பாடல்களில் மற்றொன்று மனசாட்சி திரைப்படத்தில் இடம் பெற்ற ஏழு ஸ்வரங்கள்.. இப்படத்தில் ஜெய் அவர்களின் ஒப்பனை வித்தியாசமாக இருக்கும். டிவிடியில் படத்தில் நாகேஷ் பாடுவதாக வரும் லவ் பண்ணுங்க சார் பாட்டு கட்.
http://youtu.be/219sKF63hMo
-
ALL TIME LISTENER'S CHOICE & BIRTH DAY SONG.
http://youtu.be/i-jlk4dEFLY
-
JAI & RAVI SONG FROM NANGU SUVARGAL
http://youtu.be/_Eua4rMaghU
-
ரவிக்கு வாய்த்த ஏராளமான இனிய டூயட் பாடல்களில் ஒன்று ரோஷக்காரி படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் நம்மை மயக்கும் ஆனந்த மயக்கம் பாடல். எஸ்.பி.பாலா பி.சுசீலா இணையில் இனிமையான மாலைப் பொழுதில் கேட்க வேண்டிய பாடல்.
http://youtu.be/wOpD_s7vwnk
-
அபூர்வமான மற்றோர் பாடல் நல்ல முடிவு திரைப்படத்திலிருந்து
முல்லைப் பூப்போலே உந்தன் மூக்குத்தி மின்னுதடி
http://youtu.be/NtoRorIwQAU
-
அட பாவி,
குதிரை குப்புற தள்ளி,குழியும் பறித்ததாம். என் ஆசை காஞ்சனா-ரவி ஜோடியில் வர வேண்டிய பாடலை கொல்டி கும்பலுக்கு குடுத்த உன்னை....
திட்ட பயமாக உள்ளது.யூனியன் தலைவர் ராமதாசு என்ற உண்மையான தமிழ் ஆசிரியர் (ஓய்வு பெற்ற) வந்து விடுவாரே....