-
தனியார் தொலைக்காட்சிகளில் நிருத்திய*சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். படங்கள்*ஒளிபரப்பான*விவரங்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
29/04/20-* ஜெயா மூவிஸ் -காலை 7 மணி* - தாய்க்கு பின் தாரம்*
* * * * * * * * *சன் லைப்* *- காலை 11 மணி* * - அரச கட்டளை*
* * * * * * * * புதுயுகம்* * -இரவு 7 மணி* *- நீதிக்கு பின் பாசம்*
30/04/20 - சன் லைப்- காலை 11 மணி - திருடாதே*
* * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி* - ஆனந்த ஜோதி*
01/05/20* முரசு டிவி* - காலை 11மணி /இரவு 7 மணி* -நல்ல நேரம்*
* * * * * * * * புதுயுகம்* *-இரவு 7 மணி -பெற்றால்தான் பிள்ளையா*
03/05/20 -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - குலேபகாவலி*
* * * * * * * ராஜ் டிவி* *- காலை 10.30மணி -உலகம் சுற்றும் வாலிபன்*
* * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி -திருடாதே*
04/05/20* -சன் லைப்* - காலை 11 மணி - நாளை நமதே*
05/05/20 -ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி -ரகசிய போலீஸ் 115
* * * * * * * *புதுயுகம்* - இரவு 7 மணி* - நீதிக்கு தலை வணங்கு*
06/05/20 -சன் லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்** * * * * * * * **
-
நாளை 6-05-2020 புரட்சி நடிகர் செல்வாக்கு உயரும் கதாப்பாத்திரம் அபு "பாக்தாத் திருடன்" 60 ஆண்டுகள் நிறைவு செய்து, 61ம் வருடம் தொடக்கம்... இந்த காவியத்தில் ஒரு காட்சி... நடிகை mn. ராஜம் தலைவரை பார்த்து சொல்லும் வசனம்... " பொது மக்களின் பேராதரவு தான் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு இருக்கிறதே"... இத்தகைய காட்சி திரையில் வரும்போது அரங்கமே அல்லோகலப்படும்...ஆம்... நிழலில் இருந்ததை நிஜமாக்கியவர் மக்கள் திலகம் மட்டுமே அல்லவா?!.........சுஹாராம்...
-
மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட ஏராளமான நூல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன... அவற்றின் பதிப்பாசிரியர்கள், நூல்களின் தன்மை, விலை பட்டியல்... இதர விபரங்களை அறிந்த தோழர்கள் தெரிய படுத்தலாம்... சுஹாராம்......
-
பொதிகை*டிவியில்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் புகழ் மாலை*
--------------------------------------------------------------------------------------------------------------------
பொதிகை டிவியில்(05/05/20) இன்று ஒளிபரப்பான மலரும் நினைவுகள் (பயாஸ் கோப்)நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மகாலட்சுமி பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களை பேட்டி கண்டார் .*
நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து ,இரு வேடங்களில் நடித்து ,இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் . நடிகை எம்.என்.ராஜம் கூறியதாவது :
நாடோடி மன்னன் திரைப்படம் பல சிறப்புகளை கொண்டது .* பெரும் பொருட்செலவில் எம்.ஜி.ஆர். அவர்கள் சொந்தமாக எம்.ஜி.ஆர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தை ஏற்படுத்தி தயாரித்தார் . படத்தில் மூன்று கதாநாயகிகள் , நான், பானுமதியம்மா, பி.சரோஜாதேவி (புதுமுகம் -அறிமுகம் ). எம்.ஜி.ஆர். நாடோடியாகவும், மன்னனாகவும் நடித்திருந்தார். படத்தில் மிகவும் அழகாக இருப்பார் .படத்திற்கு தயாரிப்பு செலவு அதிகம் ஆகி கொண்டே இருந்ததால் , பலபேர் விமர்சனம் செய்தார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன் , இல்லையென்றால் நான் நாடோடி என்று எம்.ஜி.ஆர். சொல்லுவார் .
வில்லன் பி.எஸ். வீரப்பா,எம்.என்.நம்பியார்* பெரியவர் எம்.ஜி.சக்ரபாணி, சந்திரபாபு, ஜி.சகுந்தலா,அங்கமுத்து, முத்துலட்சுமி ,திருப்பதிசாமி, ராம்சிங் ,ஜெமினி சந்திரா மற்றும் பலர் நடித்தனர் . இடைவேளைக்கு பிறகு பகுதி கலரில் எம்.ஜி.ஆர். எடுத்தார் .*
கதை வசனம் கவிஞர் கண்ணதாசன், படத்தில் எம்.ஜி.ஆர். மன்னன் ஆன பிறகு*நாட்டு மக்களுக்கு செய்யும் திட்டங்களை ,கொள்கைகளை அறிவிப்பார் .*1958ல் படம் வெளியானது . எம்.ஜி.ஆர். முதல்வராகியதும் அவரை பேட்டி எடுத்தார்கள் அப்போது அவர் என் திட்டங்கள் சிலவற்றை நாடோடி மன்னன் படத்திலே அறிவித்துவிட்டேன்* மீதியை பொறுத்திருந்து பாருங்கள் என்றார் .உண்மையிலேயே அவர் ஒரு தீர்க்கதரிசி .* இந்த படம் எடுக்கும்போது அவர் நினைத்திருக்க மாட்டார் தான் ஒருநாள் முதல்வராகி இந்த திட்டங்களை செயல்படுத்துவேன் என்று . படத்தில் அந்த காலத்திலேயே பஞ்ச் வசனங்கள் நிறைய இடம் பெற்றிருக்கும் .* எம்.ஜி.ஆர். சொல்லுவார். அமைச்சரே, நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன் . நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள்.* அரண்மனையில் நுழைந்ததும் என் உலகம் மாறியிருக்கிறது என். உள்ளம் மாறவில்லை.* கொஞ்ச நாட்களே பதவியில் இருந்தாலும் மக்களின் குறை தீர்ப்பவனே மன்னன் .* என் இஷ்டத்திற்கு இணங்குவதாக இருந்தால் நான் மன்னனாக இருப்பேன் .. என்னை நம்பாமல் கெட்டவர் பலர். என்னை நம்பி கெட்டவர் இன்றுவரை இல்லை .* இன்னும் எவ்வளவோ வசனங்கள். அருமையாக இருக்கும். ரவீந்தர் உதவி வசனகர்த்தா .*
ஒரு கட்டத்தில் , நான் அவரை மன்னனாக கருதி உறவாடுவேன். எனக்கு தெரியாது அவர் நாடோடி என்று . அவர் உன்னை மணந்தவன் நானில்லை. மாலையிட்டவன் நானில்லை. நான் உன் கணவனே இல்லை. என்று கூறியதும் நான் தற்கொலை செய்ய முயலும்போது , காப்பாற்றி தனது நிலையை விளக்குவார் .இறுதியில் உண்மையிலேயே என்னை நம்புகிறாயா சகோதரி என்பார் .நான் சொல்லுவேன். நான் மட்டுமில்லை அண்ணா. இந்த நாடே உங்களை நம்பித்தான் இருக்கிறது என்பேன் .* அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். தி.மு.க. வில் இருந்தார் . இந்த காட்சிக்கும், வசனத்திற்கும் சுமார் 5 நிமிடங்கள்*கைத்தட்டல்களும், விசில் சத்தமும் ஓயாது ..* இப்படி பல காட்சிகள்* *கைத்தட்டல்களால் அரங்குகளே அதிர்ந்தன .* வெள்ளிவிழா ஓடிய படம் .**
மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழாவில் 110 சவரன் தங்க *வாள்*எம்.ஜி.ஆருக்கு பரிசளிக்கப்பட்டது . எம்.ஜி.ஆர். சிறந்த இயக்குனராக தேர்வு*செய்யப்பட்டார் .**
1977ல் எம்.ஜி.ஆர். முதலைவரான பின்பு, ஒரு நாள் , நானும் என். கணவருடன் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் கூறுவதற்கு ராமாவரம் தோட்டம் சென்றிருந்தோம் . அன்று அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம் எல்.ஏ.க்கள் , தொழில் அதிபர்கள், நடிகர் நடிகைகள் , வி.ஐ.பி.க்கள் , பல்வேறு கட்சி தலைவர்கள்*பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள் ,கட்சி தொண்டர்கள் பலரும் திரண்டு இருந்தனர் . சிறிது நேரத்திற்கு பிறகு , கூட்டத்தின் நடுவே சென்று கையை உயர்த்தி, அண்ணே என்று குரல் கொடுத்தேன். பலபேர் அவரை* , ஐயா, சார் என்று தான் அழைத்திருந்தார்கள். என் குரல் கேட்டதும். சட்டென்று திரும்பி பார்த்து , மேடைக்கு வர சொன்னார்.* நான் சென்றதும் , நாடோடி மன்னன் படத்தில் நான் நடித்த காட்சியை குறிப்பிட்டு அந்த வசனத்தின்படியும், காட்சியின்படியும், இன்று நான் முதல்வராகிவிட்டேன். உன் வாய் முகூர்த்தம் பலித்துவிட்டது என்று என்னை பெருமை படுத்தி பேசினார் அனைவரும் பலத்த கைதட்டல்கள் மூலம் பாராட்டினார் கள்*. எனக்கு அந்த சில நிமிடங்கள் அந்த கூட்டத்தின் இடையே எல்லையில்லாத சந்தோசம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் . பிறகு அவருக்கு நான் நன்றி , மற்றும்*முதல்வரானதற்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றேன்**
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக* மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பான*விவரங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------------
06/05/20 - சன்* லைப்* -காலை* 11 மணி* -வேட்டைக்காரன்*
* * * * * * * * *ராஜ் டிவி* - பிற்பகல் 1.30மணி -குடியிருந்த கோயில்*
* * * * * * * எம்.எம்.டிவி* -இரவு 10 மணி* - படகோட்டி*
07/05/20- ஜெயா மூவிஸ்* - காலை 7 மணி -விக்கிரமாதித்தன்*
* * * * * * * *ராஜ்* டிவி* -பிற்பகல் 1.30 மணி* -தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * * *எம்.எம்.டிவி* - இரவு* 7 மணி -காவல் காரன்*
* * * * * * * *வசந்த் டிவி* -இரவு 7.30 மணி -நல்ல நேரம்*
* * * * * * * *பாலிமர் - இரவு 11 மணி* - தனிப்பிறவி*
08/05/20 - வசந்த் டிவி -காலை 9.30 மணி -ராமன் தேடிய சீதை*
* * * * * * * *சன் லைப் - காலை* 11 மணி -ஆனந்த ஜோதி*
* * * * * * * *ராஜ் டிவி* -பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *ஷாலினி டிவி - இரவு 8 மணி -மாட்டுக்கார வேலன்*
* * * * * * * *பாலிமர் டிவி* -இரவு 11 மணி* - திருடாதே .**
-
ஜெயா மூவிஸ்*சானலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்*(தினசரி இரவு 10* மணிக்கு*)
-------------------------------------------------------------------------------------------------
09/05/20 -* *சங்கே முழங்கு*
10/05/20 - ராஜராஜன்*
11/05/20- தாயின் மடியில்*
12/05/20 - விக்கிரமாதித்தன்*
13/05/20-வேட்டைக்காரன்*
14/05/20 - கொடுத்து வைத்தவள்*
15/05/20- தாய்க்கு பின் தாரம்*
-
உ.சு.வா பட வரலாறு
47 ஆண்டுகளுக்குமுன்பு இதே மே 11-ந்தேதி...
ஒரு படம் 200 கோடி 400 கோடின்றாங்க. அதுல சில மாஸ் ஹீரோங்க வேற சீனுக்கு சீனுக்கு பன்ச் டயலாக் பேசறாங்க. அந்த கால ஹீரோவுக்கு முகத்துக்கு மேக்அப் போடுவாங்க. இப்போவெல்லாம் நோ மேக்கப், முகத்தையே கிராபிக்ஸ்ல செமையா மாத்தி அறிவாளி ரசிகர்கள் காதுல பூ சுத்தல. பூமாலையே சுத்தறாங்க.
ஒரு படம் ஓடறத்துக்காக திடீர் திடீர்னு அரசியல் பேச ஆரம்பச்சிடறாங்க. ஏதாவது டயலாக்கால கவர்மெண்ட்டு பாதிச்சு ரியாக்சன் காட்டினா, உடனே கால்ல பொத்துன்னு விழுந்துடறாங்க. ஒரு சிங்கிள் ஜெயில் ஷாப்பிங் டயலாக்க காப்பாத்தக்கூட தைரியமில்லா படத்தல இருந்தே தூக்கிட சொல்லிட்டு துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடிப்போயிட்டாருன்னு பேசிக்கிற அளவுக்கு நிலைமை..
இதுல காமடி என்னன்னா இவங்களையெல்லாம், அரசியல், அவரைக்காய் பொறியல்னு எம்ஜிஆர்கூட கம்பேர் பண்ணி பக்கம் பக்கமா ரைட்டப் குடுக்கறதுதான்.. மீடியாவுங்களும் சேர்த்துதான்..
ஒரேயொரு படம், உலகம் சுற்றும் வாலிபன்.. அதன் ரிலீஸ் வரலாறு தெரிஞ்சா இவங்கள்லாம் இப்படி எழுதுவாங்களான்னு தெரியலை..
20 வருஷம் கட்சிக்காக உழைச்சி கட்சியால் தானும் வளர்ந்து பெரிய ஆளானவரு எம்ஜிஆர். எம்எல்சி, எம்எல்ஏ கட்சி பொருளாளர்ன்னு அரசியல் வாதியாகவும் முன்னேறியவரு..
திமுக 1972ல் வெளியேற்றியது, எம்ஜிஆர் என்ற நடிகரை அல்ல. அதைவிட முக்கிய பலம் வாய்ந்த எம்ஜிஆர் என்ற பழுத்த அரசியல்வாதியை.. கட்சியில் மூன்றாவது இடத்தில் உள்ள பொருளாளரை..
ஒரு கம்பெனியில் சாதாரண ஊழியராக சேர்ந்து பல ஆண்டுகள் பாடுபட்டு ‘ஜெனரல் மேனேஜரான ஒருத்தர், திடீரென டிஸ்மிஸ் செய்யப்பட்டு அலுவலகத்தை விட்டு நடுத்தெருவில் நின்றால் எப்படியோ, அப்படி.த்தான் எம்ஜிஆர் நின்றார், 1972 அக்டோபரில்.
நேற்றுவரை ஒட்டிஉறவாடிய திமுகவின் மூத்த தலைவர்களும் அவர்களின் வசம் உள்ள தமிழக அரசு நிர்வாகமும் அடியோடு பகையாளிகளாக மாறிவிட்ட பயங்கரம்.
உண்மையிலேயே மிரண்டுதான் போனார், ஆனானப்பட்ட எம்ஜிஆரே.
திமுகவையும் ஆட்சியையும் எதிர்த்து போராடி சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அந்தக்கணத்தில் அவருக்கு இல்லை. சினிமாவும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு. அனுபவசாலியான அவருக்கு நன்றாகவே தெரியும். அதன்பின் நடந்ததை பல்வேறு நேரடி அனுபவஸ்தர்கள் சொல்லி பலமுறை கேட்டிருக்கிறோம். வியந்தும் இருக்கிறோம். அவற்றின் சாராம்சத்தை இங்கே சொல்கிறோம்
திமுகவில் இருந்து நீக்கப்படடதால் மனக்கலக்கத்தில் இருந்த எம்ஜிஆருக்கு மெல்ல மெல்ல தைரியம் கொடுத்தது, எரிமலையாக வெடித்துப்பொங்கிய அவருடைய ரசிகர்கள்தான். படிப்படியாக தமிழகத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் சட்டம் ஒழுங்கே ஸ்தம்பிக்கும் நிலைமை.
தனிக்கட்சி தொடங்க எம்ஜிஆர் தயங்கிநின்றபோது ராமாவரம் தோட்டத்திற்கு அலை அலையாக படையெடுத்துச்சென்றனர் அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள். அவர்களுக்கு அன்பான மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள் ஏராளம். தனிக்கட்சி தொடங்காவிட்டால் திமுகவினர் தங்களை அந்தந்த ஊர்களில் படாதபாடு படுத்துவர்கள் என்றெல்லாம் எம்ஜிஆரிட சொல்லி வாய்விட்டு கதறினார்கள் ஆதரவாளர்களும் ரசிகர்களும்..
தன்னை விட தன்னை நம்பியிருப்பவர்களை காப்பாற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்தை அப்போதுதான் உணர்ந்தார் எம்ஜிஆர. உடனே ஒருமுடிவுக்கு வந்து துணிச்சலுடன் களமிறங்கியதில் அடுத்த சில தினங்களில் உதயமானதுதான் அதிமுக.
அதன்பிறகு எம்ஜிஆரின் தைரியத்தையும் உழைப்பையும் போராட்டக்குணத்தையும் பார்த்து உலகமே வியந்தது தனிக்கதை
இங்கே ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எம்ஜிஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சில தினங்களில் அவரின் இதயவீணை படம் ரிலீசானது. எந்த சர்ச்சையும் இல்லாமல் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என கலர்புல்லாய் பாடிக்கொண்டே, 100 நாட்களுக்குமேல் ஓடி வெற்றிகண்டது.
ஆனால் அவர் சொந்தமாக தயாரித்து இயக்கி இரட்டை வேடங்களில் நடித்த பிரமாண்டமான படைப்பான
உலகம் சுற்றும் வாலிபன் ஏனோ ஆட்சியாளர்கள் கண்ணில் உறுத்த ஆரம்பித்தது..எங்கே யார் வெறியை ஏற்றிக்கொண்டு திரியை பத்தவைத்தார்களோ தெரியவில்லை.
உசுவா படம் வெளியாவது ஆளுங்கட்சிக்கு கௌரவம் மற்றும் மானப்பிரச்சினையாகியது.அந்த படம் வெளியானால் புடவை கட்டிக்கொள்கிறேன் என பகிரங்கமாய் சூளுரைத்தார் ஒரு திமுக தலைவர். அந்த அளவுக்கு படம் கடும் எதிர்ப்பான சூழலை சந்தித்தது..
போஸ்டர்கள் அடித்து ஒட்ட முடியாத அளவுக்கு இன்னொரு கில்லாடித்தனத்தையும் ஆட்சியாளர்கள் செய்தார்கள். எம்ஜிஆர் அதற்கும் அசரவில்லை. சிங்கப்பூரில் இருந்து ஸ்டிக்கர் விளம்பரங்களை அடித்து இறக்குமதி செய்தி ஓட்டச்செய்தார். ஸ்டிக்கர் தமிழ்நாட்டில் முதன் முதலாய் சினிமா உலகம் வழியாக இப்படித்தான் புகுந்தது.
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட, உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசுக்கு தியேட்டர்கள் கொடுக்க உரிமையாளர்கள் தமிழகத்தில் பலரும் முன்வரவில்லை.
ஆனால் எம்ஜிஆர் அத்தனை எதிர்ப்புகளையும் தன்னுடைய சொந்த முயற்சியால்தான் சமாளித்தார். தொடைநடுங்கிப்போய் ஆட்சியாளர்களிடம் சமரசம் செய்ய முயற்சி கூட எடுக்கவில்லை.
படப்பெட்டிகளை பிடுங்கிக்கொண்டு ஓட காத்திருந்தவர்களை சமாளிக்க ஒவ்வொரு தியேட்டருக்கும் ஐந்தாறு ரூட்டுகளில் உ.சு.வா ''ரீல் பெட்டிகள்'' அனுப்பட்டது..அதில் எது ஒரிஜினல் என்பதை கண்டுபிடிக்கமுடியாமல் எதிரிகள் குழம்பிப்போனது தனிக்கதை..பலர் படப்பெட்டி என செங்கற்கள், கருங்கற்களை பெட்டிகளை கைப்பற்றி பல்பு வாங்கினார்கள்
1973 மே மாதம் 11-ந்தேதி போஸ்டர்களே ஒட்டப்படாமல் உலகம்சுற்றும் வாலிபன் ரிலீசாகி தமிழகத்தை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் அலறவைத்தது. தியேட்டர்களுக்கு என்ன சேதம் ஏற்பட்டாலும் தன் சொத்துக்களை விற்றாவது ஈடுசெய்கிறேன் என்று எம்ஜிஆர் எடுத்த அந்த வாழ்வா, சாவா முடிவுக்கு கிடைத்த பலன் அது.
படத்தின் டைட்டில் சாங்கான, ‘’நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’’ ரசிகர்களை முறுக்கேற்றியது.. பாடலில் வரும்,,,
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம் ,
இருந்திடும் என்னும் கதை மாறும்,
என்று வரிகள் ஒலித்தபோது. தியேட்டர்களில் எழுந்த ஆவேசம் ஆட்சியாளர்களை வீழ்த்தும் பலத்திற்கு மேலும் வலு சேர்த்தது..
மூன்று வாரங்களுக்கு போஸ்டரே ஒட்டப்படாத நிலையிலும் தமிழ்நாட்டில் அதுவரை சினிமா உலகில் இருந்த வசூல் சாதனைகளை முறியடித்தது உ.சு.வா பல ஊர்களில் 100 நாட்களை சர்வசாதாரணமாக கடந்தது. மாநகரங்களில் வெள்ளி விழா. சென்னையில் முன்பதிவிலேயே புதிய சாதனைகளை படைத்தது.
உலகம் சுற்றும் வாலிபனுக்கு காட்டிய அந்த நிஜமான வீரம்தான் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக எம்ஜிஆர் அனல்பறக்க அரசியல் நடத்த கைகொடுத்தது. எல்லா இடைத்தேர்தலிலும் அவர் வெற்றிவாகை சூட பாதை அமைந்து தந்தது. கிளைமாக்சாக, தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலிலும் அமர்த்தி முதலமைச்சராக்கவும் வைத்தது. அதுவும் மூன்று முறை.. முதலமைச்சராக காலமாகும் வரத்தையும் கொடுத்தது.
தியேட்டரில் விழும் கைத்தட்டலையெல்லாம் தனக்கு விழப்போகும் ஓட்டுக்கள் என நினைத்தபடி, அரசியலுக்கே வராமல் முதலமைச்சர் கனவில் மிதக்கும் கோடம்பாக்கத்து கோமாளிகளுக்கு உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு ஏற்பட்ட எதிப்பபுபோல் இன்று ஏற்பட்டால்
Ezhumalai Venkatesan
முகநூலில் (கவிபாலா) இருந்து
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் மதிவாணர்*எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
-----------------------------------------------------------------------------------------------------------------------------
09/05/20* *ராஜ் டிவி* - பிற்பகல் 1.30 மணி* -அலிபாபாவும் 40 திருடர்களும்*
* * * * * * *வசந்த் டிவி* - இரவு 7.30 மணி* - நீதிக்கு தலை வணங்கு*
* * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி* - வேட்டைக்காரன்*
10/05/20 - மெகா டிவி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * *வேந்தர் டிவி - பிற்பகல் 1.30 மணி -வேட்டைக்காரன்*
* * * * * * *பாலிமர் டிவி* -இரவு* 11 மணி* - விவசாயி*
11/05/20 - சன் லைப்* -காலை* 11 மணி -இதயக்கனி*
* * * * * * * *வானவில் டிவி - பிற்பகல் 2 மணி* - என் கடமை*
* * * * * * * *மூன் டிவி* *- இரவு* 7.30 மணி* - ஆனந்த ஜோதி*
12/05/20 - வசந்த் டிவி - காலை 9.30 மணி -ஆனந்த ஜோதி*
* * * * * * * வேந்தர் டிவி* - காலை 10 மணி* - விவசாயி*
* * * * * * * முரசு டிவி* - காலை* 11 மணி* -தாயின் மடியில்*
* * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * *முரசு டிவி* -இரவு 7 மணி - தாயின் மடியில்*
-
இன்று (13/05/20) மாலை ராஜ் டிவியில்*கவியரசு கண்ணதாசன் நினைவலைகள்* என்ற தொடர் நிகழ்ச்சியில் வெளியான*தகவல்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் கவிஞர் கண்ணதாசன் மதுரை வீரன், மகாதேவி, நாடோடி மன்னன்,ராஜா தேசிங்கு* போன்ற படங்களுக்கு மிக சிறப்பாக வசனம் எழுதியிருந்தார் .* *அதன் பின்னர் கவியரசு கண்ணதாசன் சினிமாவில் பாடல்கள் அதிகம் எழுதும் சூழ்நிலை உருவானது . குறிப்பாக எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு அவரது இமேஜை உயர்த்தும் பொருட்டு பல தரமான பாடல்கள் எழுதி அவருக்கு புகழ் சேர்த்தார் .**
எம்.ஜி.ஆருக்கும் , கண்ணதாசனுக்கும் சில காலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு*பிரிவினை ஏற்பட்டது . எம்.ஜி.ஆர். 1972ல் தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டார்*இருப்பினும் கவியரசு கண்ணதாசன் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தன்*வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார் .* தி.மு.க. எடுத்த முடிவு தவறு என்றும் சுட்டிக் காட்டினார் .**
1963ல் பெரிய இடத்து பெண் படத்திற்கு பாடல் பதிவின்போது , மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் ஒரு நாள்* *ரிக்கார்டிங் அரங்கிற்கு வரவில்லை. காரணம் அந்த காலத்தில் இவர்கள் பல படங்களுக்கு இசை அமைத்து கொண்டிருந்ததனால் மிகவும் பிசியாக இருந்த சமயம் .* முந்தைய நாள் இரவு வெகு நேரம் பாடல் பதிவில் இருந்துவிட்டு நள்ளிரவுக்கு பின் வீடு திரும்பியவர்கள் மறுநாள் காலை பாடல் பதிவிற்கு நேரத்திற்கு வர இயலவில்லை .* எனவே, வெகு நேரம் காத்திருந்த கவியரசு கண்ணதாசன் விஷயம் கேட்டறிந்து , அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா* என்று எம்.ஜி.ஆருக்கு எழுதும் சோக பாடலுக்கு வரிகள் எழுத ஆரம்பித்தார் .* பின்னர் தாமதமாக வந்த விஸ்வநாதன் ராரமூர்த்தி இரட்டையர்கள் பாடல் வரிகளை ரசித்தனர் . எம்.ஜி.ஆர். , இயக்குனர் ராமண்ணா ஆகியோரின் சம்மதத்தோடு அன்று பாடல் பதிவு முடிவுற்றது . பெரிய இடத்து பெண் படத்தின் பாடல்கள் அனைத்தும் கவியரசு கண்ணதாசன் எழுதி இருந்தார்*1963;ல் வெளிவந்த பெரிய இடத்து பெண் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதோடு அந்த ஆண்டின் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது .
1974ல் வெளியான உரிமைக்குரல் படத்திற்கு , ஒரு கனவு காட்சிக்காக பல கவிஞர்கள் எழுதிய பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை.*இறுதியில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசனை அணுகி, சூழ்நிலைக்கு தக்கபடி* டூயட் பாடல் எழுதி தரும்படி சொன்னார் .அப்போது எம்.ஜி.ஆருக்கும் , கவிஞருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்த சமயம் .* முதலில் மறுத்த கவிஞர் , பின்னர் பாடல் எழுதி தருகிறேன் . ஒப்புதல் வாங்கி கொள்வது உங்கள் விருப்பம். என்று சொல்லி அருமையாக எழுதி இருந்தார். அந்த பாடலை மெல்லிசை மன்னர் , இயக்குனர் ஸ்ரீதரிடம் காண்பித்து*அதை கம்போஸ் செய்து* எம்.ஜி.ஆரின் சம்மதத்தை பெற சற்று தயக்கத்துடன் இருவரும் சென்றனர் . பாடல் வரிகளை படித்து பார்த்த எம்.ஜி.ஆர். கவிஞர் கண்ணதாசன் ஒருவரால்தான் இந்த பாடல் எழுதி இருக்க முடியும் . உண்மையை சொல்லுங்கள் என்று* கேட்டார் .* அவரது இசை ஞானத்தையும் , திரைப்பட பாடல் நுணுக்கத்தையும், கவிஞர்களிடையே எத்தகைய அனுபவத்தை அவர் பெற்றிருந்தார் என்று வியந்தவர்கள் உண்மையை கூறி விட்டார்கள்.* கவிஞர் கண்ணாதாசனுடன் எம்.ஜி.ஆர். பேசி கொள்ளாத சமயம் என்றிருந்தாலும், கவிஞரின் திறமையை பாராட்டி ,பாடலை இடம் பெற செய்தார் எம்.ஜி.ஆர். அந்த பாடல்தா ன் விழியே கதை* எழுது. கண்ணீரில் எழுதாதே. மஞ்சள் வானம் . தென்றல் சாட்சி.,உனக்காகவே நான் வாழ்கிறேன் .* இந்த பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் அந்த காலத்தில் பிரபலமாகி , படம் வெள்ளிவிழாவை தாண்டி ஓடி, வசூலில் அந்த ஆண்டில் சாதனை புரிந்தது .
எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு , கவிஞர் கண்ணதாசனுடன் கருத்து வேறுபாடு*ஏற்பட்டு பிரிந்திருந்தாலும், அவரது புலமை, திறமைகளை பாராட்டி அவரை அரசவை கவிஞர் ஆக்கி அழகு பார்த்தார் .**
நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசனின் பாடல்களாக நாடோடி படத்தில் அன்றொரு*நாள் இதே*நிலவில்*, உரிமைக்குரல் படத்தில்*விழியே கதை எழுது*பெரிய இடத்து பெண் படத்தில்*அவனுக்கென்ன தூங்கிவிட்டான்*பாடல்கள்*ஒளிபரப்பப்பட்டன .
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்*டிவி. தகவல்கள்*தொகுப்பாளர் திரு.துரை பாரதி*
-----------------------------------------------------------------------------------------------------------------
இன்று (10/05/20) வின் டிவியில் பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் என்ற நிகழ்ச்சியை திரு.துரை பாரதி அவர்கள் தொகுத்து வழங்கினார் .
இன்று அன்னையர் தினம் . உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள் . நேயர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் .உலக சினிமா சரித்திரத்தில் தன் பெற்ற தாய்க்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தவிர* வேறு எந்த நடிகராவது எம்.ஜி.ஆர். அளவிற்கு* தாயின் சிறப்புகளை வெளிப்படுத்தி நடித்திருப்பாரா என்பது மிக பெரிய கேள்விக்குறி .ஏனென்றால் எம்.ஜி.ஆர். தன் தாயை தான் தெய்வமாக வணங்கி வந்தார் .* வீட்டை விட்டு புறப்படும்போது வெளியே உள்ள தாயின் சிறிய சமாதியில் சில நிமிடங்கள் நின்று வணங்கிவிட்டு செல்வது வழக்கம் .* தாயின் பெருமைகளை , சிறப்புகளை உலகிற்கு உணர்த்தும் வகையில், தனது திரைப்படங்களில் தாய்க்கு பின் தாரம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தாய் சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன் , தெய்வத்தாய் , தாயின் மடியில் , தாய்க்கு தலை மகன் ,குடியிருந்த கோயில், ஒரு தாய் மக்கள் என்கிற தலைப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து பெரும் புகழ் பெற்றார் .ஒவ்வொரு கால கட்டத்திலும் , சில முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு, தன் தாயின் படத்தின் முன்னால் நின்று தியானம் செய்து தான்* முடிவெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார் .* பொதுவாக* இந்துக்கள் அனைவரும் ராமர் துணை, பெருமாள் துணை, முருகன் துணை என்று தான்*செயல்களை ஆரம்பிப்பார்கள் எம்.ஜி.ஆர். எப்போதும் தாயே துணை என்று எழுதித்தான் ஆரம்பிப்பார் . *
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு வீட்டை எம்.ஜி.ஆர். வாங்கி தாய் வீடு என பெயரிட்டார் . 1962 வரை அந்த வீட்டில் தங்கி*இருந்தார் என்று சொல்லப்படுகிறது* இந்த வீட்டில்*தன் தாயாரை*கொண்டு வந்து ஒரு நாளாவது*அமர்த்தி அழகு பார்க்கும்* முன்பு அவரது தாயார் இறந்துவிட்டார் என்பது சோக செய்தி ..அதன்பின் ராமாவரம் தோட்டத்திற்கு குடிபுகுந்தார் .தாய் வீட்டில் அவரது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குடும்பம் வசித்து வந்தது .* எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என்.ஜானகி பெயரில் அவ்வை சண்முகம் சாலையில் வாங்கிய வீடுதான் அண்ணா தி.மு.க. வின் தலைமை நிலையமாக திகழ்கிறது . எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிக்கு ஜானகி அம்மையார் தானமாக அளித்துவிட்டார் .**
1972ல் எம்.ஜி.ஆர். தி. மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவுடன் தமிழகமே கொந்தளிக்கிறது .* *தொண்டர்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு படையெடுத்து எம்.ஜி.ஆரை கட்சியை துவக்குவதற்கு*நிர்பந்தப்படுத்துகிறார்கள். சிலர் எம்.ஜி.ஆர். பெயரில் கட்சியை துவக்குவதாக அறிவிக்கிறார்கள் . சிலர் தாமரை சின்னத்தில் கொடி ஏற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர். பொறுமை காத்து , அனைவரையும் கலந்து ஆலோசிக்கிறார் . பின்னர் தன் தாயின் படத்தின் முன்னால் வணங்கி , தன்னுடன் கலந்து ஆலோசித்த தலைவர்களின் யோசனைப்படியும், தொண்டர்கள் பேராதரவையும் மனதில் வைத்து ,கட்சியை தொடங்குவதற்கு அக்டோபர்** *17 , என்ற நாளை குறித்து அறிவித்தார் .
எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும் முன்பு , ஒரிசாவில் இருந்து பிஜு பட்நாயக்*சமரச பேச்சு வார்த்தைக்கு எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் அழைத்து பேசினார் .* மாநில விருந்தினர் விடுதியில்தான் பேச்சு வார்த்தை நடந்தது .கட்சிகள் இணைவதற்கு இருவரும் இறுதியில் சம்மதம் தெரிவித்தனர் .அப்போதைய தலைவர்கள் திரு.ராசாராம், மாதவன்*போன்றவர்கள் உடனிருந்தனர் .கட்சி தலைவராக கருணாநிதியும், முதல்வராக எம்.ஜி.ஆரும் செயல்படுவதாக உடன்பாடு ஏற்பட்டது .* இருவர் தரப்பிலும் சில நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது .செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு எடுக்க வேண்டும் என்று சில காரணங்கள் கூறபட்டது .பத்திரிகையாளர்கள் சந்திப்பும் ஏற்பாடானது . ஆனால் என்ன காரணமோ*இறுதி சுற்றில்*உடன்பாடு எட்டப்படவில்லை ஏனென்றால் இறுதி நாளன்று*அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த போது எம்.ஜி.ஆர். சந்திப்பிற்கு வரவில்லை .* பின்னர் அன்றைய டி.ஜி.பி.மோகன்தாஸ் மூலம் , எம்.ஜி.ஆர். இரு கட்சிகளும் இணைவதற்கு என் தாயின்*சம்மதம் கிடைக்கவில்லை. ஆகவே இணைவதற்கு வாய்ப்பில்லை என்று அறிவித்ததாக செய்திகள் வெளியாகின .* சில*நாட்கள்*கழித்து , தலைவர்களின் ஆலோசனைப்படியும், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்கவும் தனி கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.* இதில் இருந்து தன் தாயை எந்தளவு** மதித்து, அவரை*தெய்வமாக* கருதி,அவருடைய முடிவுகளை செயல்படுத்தி வந்தார்*எம்.ஜி.ஆர்.*என்பதற்கு இது ஒரு**சான்று*. என்று டி.ஜி.பி. மோகன்தாஸ் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார் .
எனக்கு ஒரு திருக்குறள்*நினைவுக்கு வருகிறது . அதன்படி, எம்.ஜி.ஆர். தன்*வாழ்நாளில்*குடிப்பதையோ, அல்லது குடிகாரர்களை சந்திப்பதையோ*அடியோடு வெறுத்தார் .எம்.ஜி.ஆர். நாடங்களில் நடித்து வந்த*போது மாணவ*பருவத்தை கடந்தபோது, அவர் குரலில்*சில மாற்றங்கள் தென்பட்டன .அப்போது நாடகங்களில் நடிக்கும்போது பாடவும் தெரிந்திருக்க வேண்டும் .ஆகவே தன் தாயாரிடம் குரல் உடைந்து விட்டால்*பாடவே*முடியாதா, நான் வாழவே முடியாதா* என்றெல்லாம் கேட்டுள்ளார் .அப்போது அவரது*மாமா ஒருவரின் ஆலோசனைப்படி, கள்* வாங்கி குடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பின்பு ஒரு நாள் அண்ணன் சக்கரபாணியின்*மனைவி கர்ப்பிணியாக வீட்டில் இருந்தபோது மது பாட்டில் ஒன்றை எம்.ஜி.ஆர். கண்டார் . அது பற்றி தன் தாயாரிடம் கேட்ட போது* பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்கு இதை*கொஞ்சம்*பயன்படுத்துவார்கள் என்று எவ்வளவோ சமாதானம்*சொல்லியும்*அந்த மதுவை*அங்கிருந்து விலக்கினால் தான் , நான் வீட்டுக்குள் வருவேன்*என்று பிடிவாதம் பிடித்தாராம் .*
எம்.ஜி.ஆரின் தாயார் பற்றி சிவாஜி கணேசன் கூறியபோது , நானும்*, அண்ணன் எம்.ஜி.ஆரும் பலமுறை*அவர் வீட்டில்*அவரின் தாயார் பரிமாற உணவு உண்டிருக்கிறோம் . வால் டாக்ஸ் சாலை அருகில் அப்போது அண்ணன் எம்.ஜி.ஆரின் குடும்பம் தங்கியிருந்தது . சில சமயம்*நாடக*கம்பெனியில் இருந்து எம்.ஜி.ஆர். அண்ணன் முன்னதாகவே*வீடு திரும்பி இருந்தாலும், அவர் தன் தாயாரிடம் பசிக்குது, உணவு பரிமாறுங்கள் என்று கூறினாலும், கொஞ்சம் பொறு, தம்பி கணேசன் வரட்டும். என்று கூறி இருவருக்கும் சேர்ந்தாற்போல்* உணவு பரிமாறுவது வழக்கம் .* எம்.ஜி.ஆரும் தன்* தாயார் சொல்லைக் கேட்டு பொறுத்திருப்பார் .எம்.ஜி.ஆரும் தம்பி கணேசன் வீட்டிற்கு சென்று*திருமதி கமலா*அவர்கள் பரிமாற இருவரும் சேர்ந்து*பலமுறை* உணவு உண்டிருக்கிறார்கள்* இது பற்றிய புகைப்படங்களும் அதிக அளவில் வெளியாகி உள்ளன . அப்போது பல சம்பவங்கள் குறித்து இருவரும் வாதித்திருக்கிறார்கள் .அது பற்றியும்*புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .எம்.ஜி.ஆர். அவர்கள் தம்பி கணேசனின் தாயார் திருமதி ராஜாமணி அம்மாள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் .திருமதி ராஜாமணி அம்மையார் மறைந்த பிறகு , அவரின் சிலையை*திறந்து வைத்தது*எம்.ஜி.ஆர்.தான் .
சந்தான பாரதி*என்பவரின் தந்தையார் ராஜாமணி*பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் பாசமலர் மற்றும் சில படங்களை தயாரித்திருந்தார் . பாசமலர்*வெற்றிகரமாக ஓடிய படம். அதற்கு பின் வெளியான ஒரு படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல்*நஷ்டம் அடைந்ததால்*எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தார் . எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, அவரை உபசரித்து என்ன விஷயம் வெகு தூரம் வந்திருக்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது , நீங்கள் எங்கள் பேனருக்கு*ஒரு படம் நடித்து தரவேண்டும்*என்ற போது, தம்பி சிவாஜி கணேசன் மீதும், அவரின் தாயார் மீதும் எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு .எங்கள் இருவருடனான நட்பு பலகாலம்*நீடிக்க வேண்டும்,மேலும் ,எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே,,அதனால் என்ன நடித்து விடலாம். ஆனால் உங்கள் கம்பெனி பெயர் மாற்ற வேண்டி இருக்குமே என்றாராம். பதிலுக்கு*அவர் பேனர் பெயர் மாற்ற முடியாது என்றார் .எவ்வளவு மரியாதை, மதிப்பு இருந்தால் நீங்கள் தம்பி கணேசனின் தாயார் திருமதி ராஜாமணி அம்மாள் பெயரில் கம்பெனி ஆரம்பித்து படம் தயாரித்து இருப்பீர்கள் . ஒரு படம் லாபம் ஈட்டியது . ஒரு படம் நஷ்டம் என்றதும்தம்பி கணேசனை விட்டுவிட்டு* என்னிடம் வருகிறீர்கள் .**அவரது அனுமதி இல்லாமல் அவரது தாயார் பேனரில்*நான் படம் நடிப்பது இயலாத காரியம்*ஒரு* வேளை நான் நடிப்பதாக முடிவு எடுத்தாலும்,அவர் எவ்வளவு கஷ்டப்படுவார் என்று எனக்குதான் தெரியும் . அவர் உள்ளம் என்ன பாடுபடும்*என்னால் முடியாது*.அந்த தவறை நான் செய்ய மாட்டேன் . .* மீண்டும் சந்தானபாரதியின் தந்தையார் வற்புறுத்திய*போது நீங்கள் என்னை கட்டாயப்படுத்துவதாக இருந்தால், என் தம்பி சிவாஜி கணேசனிடம் ஒரு சிபாரிசு* அல்லது பரிந்துரை கடிதம் வாங்கி வாருங்கள். அதாவது தகுந்த காரணம் குறிப்பிட்டு, என்னால் நடிக்க இயலவில்லை . அதனால்*அண்ணன் நடித்து கொடுப்பதற்கு எனக்கு*ஆட்*சேபனை* இல்லை என்று எழுதி கொடுத்தால்தான் நடிக்க முடியும் என்று உறுதியாக சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு அவர்கள் எம்.ஜி.ஆரை* தொந்தரவு செய்யவில்லை . இதில் இருந்து எம்.ஜி.ஆர். தம்பி கணேசனிடமும், அவரின் தாயார் ராஜாமணி அம்மையார் மீதும் எவ்வளவு மரியாதை, மதிப்பு வைத்திருந்தார் என்பதை*நாம் அறிந்து கொள்ளலாம் .*
நிகழ்ச்சியில் கீழ்கண்ட படத்தின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன :
1. தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*
2.இந்த பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்தி பூவில் -நீதிக்கு தலை வணங்கு*
3.வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேரும் -தேடி வந்த மாப்பிள்ளை*
4.தாயின் மடியில் தலை வைத்திருந்தால் -தாயின் மடியில்*
5.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
6.நான் யார் ? நான் யார் ?நீ யார் ?- குடியிருந்த கோயில்*
7.அம்மா என்றால் அன்பு - அடிமைப்பெண்*
-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பற்றியத் தமிழ் நூல்கள்...!!!
முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))
அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))
சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னி பதிப்பகம், சென்னை (1985))
சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை)
வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))
எம். ஜி. ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்- ஷோபாசக்தி - 2016
எம். ஜி. ஆர். ஓரு சகாப்தம் கே. பி ராமகிருஷ்ணன் - 2007
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கீர்த்தி - 2007
நான் கண்ட எம். ஜி. ஆர் நவீனன் - 2009
எம். ஜி. ஆர். ஒரு சகாப்தம் நியூஸ் ஆனந்தன் - 1987
எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர் S. தேவாதிராஜன் - 2011
விழா நாயகன் எம். ஜி. ஆர் கலைமாமணி கே ரவீந்தர் - 2009
காலத்தை வென்ற புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு – 2004
எம். ஜி. ஆர்: அதிகம் வெளிவராத தகவல்கள். ஆனால், அத்தனையும் பா தீனதயாளன் - 2015
பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் கே ரவீந்தர் - 2009 -
செந்தமிழ் வேளிர் எம். ஜி. ஆர்: ஒரு வரலாற்று ஆய்வு செ இராசு - 1985
8-வது வள்ளல் எம்.ஜி.ஆர் முரு. சொ. நாச்சியப்பன் - 1969 -
எம். ஜி. ஆர். திரைப்படங்களில் காணப்படும் திராவிடர் இயக்கச் ...கோகிலவாணி கோவிந்தராஜன் - 2010
எம். ஜி. ஆர் ஒரு சகாப்தம் Rajasekaran - 2007 -
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என் ரமேஷ் - 2011
மக்கள் ஆசான் எம். ஜி. ஆர் ரங்கவாசன் - 2011 –
எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி வாலி - 2013
எம். ஜி. ஆர் கதை, திருத்தப்பட்ட பதிப்பு எஸ் விஜயன் - 2016
எல்லாம் அறிந்த எம். ஜி. ஆர் எஸ் விஜயன், விகடன் பிரசுரம் – 2008
எம்.ஜி.ஆர். பேட்டிகள்: மக்கள் திலகத்தின் அரிய பேட்டிகள் மற்றும் ...2013
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எம். ஆர் ரகுநாதன் – 2015
பாரத ரத்னா: எம். ஜி. ஆர் சௌந்தர் - 2016
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர்
நம்மோடு வாழும் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் டி. எம் சண்முகவடிவேல் - 2010 -
வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர் சாரதி - 2011
எட்டாவது வள்ளல் எம். ஜி. ஆர் மணவை பொன்மாணிக்கம் - 2000
வாத்யார்: எம். ஜி. ஆரின் வாழ்க்கை ஆர் முத்துக்குமார் - 2009
எம். ஜி. ஆர். ஓர் சகாப்தம் Kē. Pi Rāmakiruṣṇan̲, Es Rajat - 2007
வாழ்க புரட்சித் தலைவர் நாமம்
வளர்க அவர் புகழ்......
-
விவரம் தெரியாத குழந்தை முன்னால் பல தலைவர்களின் படங்களை போட்டு பாருங்கள்....
அந்த குழந்தை சிரித்து கொண்டே இருக்கும் எம்ஜிஆர் புகைப்படத்தை மட்டுமே தன் கையில் எடுக்கும்.
அத்துணை வசீகர சக்தி உலக தலைவர்களில் எம்ஜிஆர் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றார் மறைந்த பிரபல உளவியல் பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன்...
சத்தியமான உண்மை...
வாழ்க எம்ஜியார் புகழ். நன்றி.........
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*திரு.துரை பாரதி* 12/05/20* *அன்று*அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் நடிப்பதற்கு , ராமாவரம் தோட்டத்தில் , தன்*வீட்டு மொட்டை மாடியில் கால்களில் ஸ்கெட்டிங்* சக்கரங்களை கட்டிக் கொண்டு பயிற்சி எடுத்துள்ளார் . தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதன் விளைவாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரால் திறமையாக ஸ்டண்ட் நடிகர்களுடன் சண்டை போடுவதற்கு ஏதுவாக இருந்தது .* மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் பின்னணி இசையில் அந்த சண்டை காட்சி மிக பிரமாண்டமாக அமைந்தது*
பொதுவாக எம்.ஜி.ஆர். தன் எதிரிகளுடன் மோதும் சண்டை காட்சிகளில் மிகுந்த*ஆர்வத்துடன் நடிப்பது வழக்கம் . நீரும் நெருப்பும் படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தன் உடைகளை தன் வாளால் சண்டையிட்டு கிழித்து எறியும் போது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர் .* காவல்காரன் படத்தின் ஆரம்பத்தில் பிரபல வில்லன் நடிகர் மனோகருடன் மோதும் குத்து சண்டை காட்சியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு , உயிர் பிழைத்தபின் இந்த காட்சிகளில் அசல் குத்து சண்டை வீரர் சண்டையிடுவது போல் நடித்து பாராட்டை பெற்றார் .* காவல்காரன் படத்தின் இடையில் வரும் மற்றொரு சண்டை காட்சியின்போது வில்லன் நடிகர் கே. கண்ணனை தாக்கும்போது குறி தவறி, கை மர பீரோவை உடைத்துக் கொண்டு உள்ளே போகும் . உடனே அந்த வலது* கையை மீட்டெடுத்து* கையில் உள்ள கடிகாரம் ஓடுகிறதா என்று காதருகில் வைத்து பார்ப்பார் சில வினாடிகள் .* அந்த காட்சியை பலத்த ஆரவாரத்துடன் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர் , இப்படி சண்டை காட்சிகளில் கூட* தன் ரசிகர்கள் பாராட்டும் வகையில் கலை நுணுக்கம், புதிய அணுகுமுறையோடு அமைத்திருப்பார் .தான் மட்டுமில்லாமல், தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிரிகளை சந்திக்கும் வகையில் சண்டை காட்சிகளில்* நடிப்பதற்கு பயிற்சி அளித்திருப்பார் .* நடிகைகளும் சண்டை காட்சிகளில் நடிப்பதற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது பல படங்களில் நிரூபிக்கும் வகையில் எம்.ஜி.ஆர். காட்சிகளை அமைத்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார் .
மருத நாட்டு இளவரசி படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என்.ஜானகி*எம்.ஜி.ஆருக்கு வாள் சண்டை கற்று கொடுக்கும் காட்சி உண்டு. அடிமை பெண் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ,தண்ணீரில் எல்லாவித சண்டை கலைகளை கற்றுக் கொடுத்து எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்கிற நுணுக்கங்களை ஜெயலலிதா*சொல்லி கொடுக்கும் காட்சி ரசிக்க தகுந்த வகையில் அமைந்தது .முகராசி படத்தில் ஜெயலலிதாவிற்கு எம்.ஜி.ஆர். கம்பு சண்டை, சிலம்பம் ஆகியன கற்று கொடுக்கும் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
பறக்கும் பாவை படத்தில் புலியை விரட்டி சென்று கூண்டில் அடைக்கும் காட்சி*அந்த காலத்தில் பரபரப்பான காட்சியாக பேசப்பட்டது . பொதுவாக இந்த மாதிரி காட்சிகள் தன்னுடைய நேரடி பார்வையில் இயக்குனர் அனுமதியோடு படம் ஆக்கப்படுவதைத்தான் பெரிதும் விரும்புவார் .* யாருக்கும் எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் .* படகோட்டி படத்தில்*படகு போட்டி நடைபெறும் சமயம் , தான் ஒரு படகிலும் , நடிகர் அசோகன் ஒரு படகிலும்* நின்றவாறு சண்டையிடும் காட்சிகள்* சுவாரசியமாக இருக்கும் .மீனவ நண்பன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆரும் , நம்பியாரும்*மோட்டார் படகுகளில் செல்லும்போது , புயல், காற்று, மழை சூழ்ந்த நிலையில்*சண்டையிடும் காட்சிகள்,யதார்த்தமாக** நன்றாக அமைந்தன . இந்த காட்சி எம்.ஜி.ஆர். தேர்தலில் வெற்றி பெற்று* முதல்வராகும் முன்பு எடுக்கப்பட்டது .
பொதுவாக சண்டை காட்சிகளில் நடிக்கும்போது அதிகம் வன்முறை மிகுந்த காட்சிகள் அமைவதை தவிர்ப்பார். சண்டையிடும்,போது , ஆயுதங்களால் எதிரிகளுக்கு பலத்த காயம் ஏற்படக் கூடாது, ஊனம் அடைந்து விடக் கூடாது .அடிபட்டு அடுத்த காட்சிகளிலோ , அடுத்த படத்திலோ நடிக்க முடியாமல் போய் வீடாக கூடாது ,அது மட்டுமின்றி , அவர்களின் குடும்பம் இதனால் பாதிப்பு அடையக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் . ஒருவேளை ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் , தனது சொந்த செலவில் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து , படப்பிடிப்பின் செட் கலையாமல் இருக்க வைத்து*அவர்கள் குணமான பின்பு மீண்டும் அதே காட்சியில் நடிக்க வைப்பார் .*இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம் .
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள்/காட்சிகள்* விவரம் :
1.ஸ்கேட்டிங் சண்டை காட்சி - உலகம் சுற்றும் வாலிபன்*
2.நடிகர் ஆனந்தனுடன் மோதும் காட்சி - நீரும் நெருப்பும்*
3.ஜெயலலிதாவுடன் சண்டை காட்சி* - முகராசி*
4.வீரப்பாவுடன் மோதும் காட்சி* - மகாதேவி*
5.ஜெயலலிதாவுடன் சண்டை காட்சி - அடிமைப்பெண்*
6.புலியுடன் மோதும் காட்சி* - பறக்கும் பாவை*
7.சர்க்கஸ் கூடாரத்தில் சண்டை காட்சி - பறக்கும் பாவை*
8.அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - பல்லாண்டு வாழ்க .
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பான*விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------
13/05/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -பட்டிக்காட்டு பொன்னையா*
* * * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி* -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * * எம்.எம்.டிவி -பிற்பகல் 2 மணி* *- பறக்கும் பாவை*
* * * * * * * *கிங்* டிவி* *- இரவு* 9 மணி* -* *நீரும் நெருப்பும்*
* * * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி -சங்கே முழங்கு*
14/05/20* -மெகா டிவி* - மதியம் 12 மணி* - சந்திரோதயம்*
* * * * * * * *மீனாட்சி டிவி -பிற்பகல் 1.30 மணி* - வேட்டைக்காரன்*
15/05/20-சன் லைப்* - காலை* 11 மணி* - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * *புது யுகம் டிவி - இரவு 7 மணி* -தேர் திருவிழா*
* * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி -நீரும் நெருப்பும்*
16/05/20 -வசந்த் டிவி* - காலை 9.30 மணி - அன்னமிட்ட கை*
* * * * * * * மீனாட்சி* டிவி* - பிற்பகல் 1.30 மணி* - நல்ல நேரம்*
* * * * * * * பூட்டோ டிவி* -* பிற்பகல் 2 மணி* - எங்க வீட்டு பிள்ளை*
* * * * * * *பாலிமர் டிவி* - இரவு* 11 மணி* * - புதிய பூமி*
-
வரும் வாரம் சன் லைப் சேனலில் பகல் 11 மணிக்கு மக்கள் திலகத்தின் ஒளிபரப்பாக உள்ள காவியங்கள் :
18 -05- 2020 திங்கட்கிழமை: "கண்ணன் என் காதலன்"
21-05-2020 புதன்கிழமை "புதிய பூமி"
23-05-2020 வெள்ளிக்கிழமை - "அரசிளங் குமரி" ஆகிய திரைப்படங்களை கண்டு மகிழுங்கள்.........
-
ரசிகர் மன்றம்
முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.
தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.
-
மூத்த சகோதரர் திரு. செல்வகுமார் அவர்களின் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி... எவராலும் நெருங்க முடியாத இறைவன் கொடுத்த பேரற்புதம் கொண்ட மக்கள் திலகம் பல்வேறு வகையான புகழ் பக்கங்களை தொடர்ந்து பதிவிட்டு புரட்சி நடிகர், புரட்சி தலைவர் அவர்களுக்கு நம்மால் இயன்ற சேவையாற்றுவோம்...........
-
தினமலர் -18/05/20
----------------------------------
மறக்க முடியுமா*-மதுரையை மீட்ட சுந்தர*பாண்டியன்*
-----------------------------------------------------------------------------------
வெளியான நாள் :14/01/1978
நடிப்பு : எம்.ஜி.ஆர். லதா, பத்மப்ரியா, பி.எஸ். வீரப்பா, எம்.என்.நம்பியார், வி.எஸ். ராகவன், சகஸ்ரநாமம், தேங்காய் ஸ்ரீநிவாசன், இசரிவேலன், மற்றும் பலர்*
இசை:எம்.எஸ். விஸ்வநாதன்* * இயக்கம் : எம்.ஜி.ஆர்.*
தயாரிப்பு : சோளீஸ்வர* கம்பைன்ஸ்*
தமிழ் சினிமாவில் கமல், ரஜினி, சிவகுமார் என இளம் குதிரைகள் பாய்ந்தோடிய காலத்தில் தமிழக அரசியலில் அ .தி.மு.க. புயல் மையம் கொண்டிருந்த சூழலில், எம்.ஜி.ஆர். மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தை உருவாக்கினார் .
மூன்றாம் ராஜராஜ* சோழனிடம் இருந்து , மதுரையை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மீட்ட வரலாற்றை மையப்படுத்தி* எழுத்தாளர் அகிலன் எழுதிய கயல்விழி என்ற புதினத்தின் அடிப்படையில் உருவானது , மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .*
இப்படத்தை பி.ஆர். பந்துலு இயக்கி முடிப்பதற்கு முன், மரணமடைந்தார் .அதனால் இயக்குனர் பணியையும் எம்.ஜி.ஆர். ஏற்றார் .
படத்தில் இடம் பெற்ற* பிரமாண்ட போர்க்காட்சி, ஜெய்ப்பூரில் படம்மாக்கப்பட்டது அதற்காக, ஒரே நேரத்தில் , வெவ்வேறு கோணங்களில் , ஒன்பது கேமிராக்கள்*பயன்படுத்தப்பட்டன .* எம்.ஜி.ஆர். தொழில்நுட்பத்திலும் , தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது, இந்த படப்பிடிப்பு ஒரு சான்று .
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும்போதே , அப்போது நடந்த சட்டசபை தேர்தலில் வென்று* அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்றது ..* முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்க வேண்டிய நிலை. இக்கட்டான சூழ்நிலையில் முதல்வர் பதவி ஏற்பு விழாவை 10* நாட்கள் தள்ளி வைத்து இரவு பகலாக நடித்து படத்தை முடித்தார் .**
எம்.ஜி.ஆர். முதல்வராகி, ஆறு மாதங்களுக்கு பின்னர் இந்த படம் வெளியானது .மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடல்கள் இனிமையாக இருந்தன .* சண்டை காட்சிகள் குறிப்பாக வீரப்பா, நம்பியார் ,ஜஸ்டின் ஆகியோருடன் மோதும் காட்சிகள் பரபரப்பாக , சுறுசுறுப்பாக இருந்தன . மைசூர் அரண்மனை காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் .* எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் .**
எம்.ஜி.ஆர். முதல்வரான பின் , வெளியான படம் என்பதோடு, அவர் கடைசியாக நடித்து இயக்கிய படம் என்பதாலும், மறக்க முடியாத படமாக திகழ்கிறது*மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*14/05/20 அன்று*வெளியான*தகவல்கள்*- தொகுப்பாளர் திரு.துரை பாரதி .
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பே வா* காதல் காவியத்தில் , கனவு பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பட்டி தொட்டியெல்லாம் அந்த காலத்தில் பிரபலமான பாடல். இசை மேடைகளில், இன்னிசை கச்சேரிகளில் அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் இடம் பெறாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு உணர்ச்சி பெருக்கோடு, உற்சாக வெள்ளத்தோடு டி.எம்.எஸ்./பி.சுசீலா இருவரும் பாடியிருப்பார்கள் .எம்.ஜி.ஆர். சரோஜாதேவி இருவரின் அழகு, கவர்ச்சி, வசீகரம் , அபிநயம் எல்லாம் ஒருங்கிணைந்து அந்த பாடல் காட்சிக்கு மெருகேற்றியது .காலத்தால் அழியாத காவிய காதல் பாடல் .* இந்த காட்சி படமாக்கப்படும்போது சாரட் வண்டியில் எம்.ஜி.ஆரும் , சரோஜாதேவியும் அமர்ந்து நடித்திருப்பார்கள்.* முதல் நாள் குதிரை வரவில்லை. இரண்டாம்நாள் தான் வந்தது. எனவே முதல் நாள் காட்சியில் இருவரும் சாரட் வண்டியில் வருவது போலும், பின்னர் குதிரையை தனியாக காண்பித்து பாடலை எடிட் செய்தார்கள்.* பாடல் நன்றாக அமைந்தது குறித்தும், பாடலின் பிரம்மாண்டம் , காட்சியில் உள்ள ரொமான்ஸ் , அபிநயம் ஆகியவற்றால்** ஏவி.எம்.நிறுவனத்தார்* பெரு*மகிழ்ச்சி அடைந்தனர்*
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை முதன் முதலாக எம்.ஜி.ஆரை வைத்து இயக்குனர் பி.ஆர். பந்துலு தயாரிக்க, முதன் முதலாக எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக ஜெயலலிதா நடித்தார் . இந்த படத்தில் வரும் பாடல்கள்,*நம்பியாருடன் எம்.ஜி.ஆர். மோதும் வாள் சண்டை காட்சிகள், குறிப்பாக வசன ஆசிரியர் ஆர்.கே.சண்முகம் அவர்களின் வசனம் மிக சிறப்பாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டது . தமிழ் திரையுலகின் முதல் கடற் கொள்ளையர் பற்றிய பிரம்மாண்ட* திரைப்படம் .அரபிக் கடலோரம் உள்ள கார்வார் தீவு அருகில் சுமார் 2 மாதங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது .இதில் வரும் கவிஞர் வாலியின் நாணமோ இன்னும் நாணமோஎன்கிற முதலிரவு காட்சியின்* காதல் பாடல், காதல் கனிரசம் சொட்டும் வகையில் தத்துவங்களுடன்* கூடிய ரசனைமிக்க ரொமான்ஸ் பாடலாக*வடிவமைக்கப்பட்டது .இந்த பாடலும் இன்னிசை நிகழ்ச்சிகளில் இந்த காலத்திலும் தவறாமல் இடம் பெறும் பாடலாக திகழ்கிறது .
நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்கள் விவரம் :
1.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் - அன்பே*வா*
2.ஒரு பெண்ணை பார்த்து - தெய்வத்தாய்*
3.நாணமோ*இன்னும் நாணமோ*- ஆயிரத்தில் ஒருவன்*
4.நினைத்தேன் வந்தாய்*நூறு வயது* - காவல்காரன்*
5.ஒரே முறைதான்*உன்னோடு* பேசி பார்ப்பேன்*-தனிப்பிறவி*
6.நல்லது கண்ணே*கனவு*கனிந்தது*-ராமன் தேடிய சீதை*.**
-
சிவகுமார் நல்ல மனிதர் என்று ஏன் சொல்கிறேன்?
- எம்.ஜி.ஆர் சொன்ன விளக்கம்
https://www.thaaii.com/?p=37617
“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று சொல்வார்கள். தாய் பக்கத்தில் இருக்கும்போது, மகன் இந்தப் பேறு பெறுவது மிகமிக அரிது. அந்தப் புண்ணித்தைச் செய்திருக்கிற சிவகுமார் பாராட்டுக்குரியவர்”
- நடிகர் சிவகுமார் நடித்த ‘ரோஜாப்பூ ரவிக்கைக்காரி’ பட வெளியீட்டு விழாவில் பேசியபோது, இப்படிச் சொன்னவர் தமிழக முதல்வரான ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்.
அதே விழாவில் இன்னொன்றையும் சொன்னார் எம்.ஜி.ஆர்.
“சிவகுமாரை நல்ல மனிதர் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. எல்லோரும் மனிதர்கள் தான். ஆனால் நல்லதைச் செய்து, மக்கள் அதைப் புரிந்து கொள்ளுமாறு, அது தெளிவாக விளக்கப்படும்போது தான் அந்த மனிதரை ‘நல்ல மனிதர்’ என்று நாம் குறிப்பிடுகின்றோம்.
தான் சம்பாதித்த பொருளை வேண்டாத விஷயத்துக்குச் செலவழித்து விரயமாக்காமல், அதைச் சேர்த்து வைப்பதில் ஓரளவுக்கு அக்கறை காட்டி, உதவி செய்வதிலும் நல்ல தன்மையைக் காட்டி இங்கே 25,000 ரூபாயைப் படிக்கின்ற குழந்தைகளுக்கு அதன் வட்டியிலிருந்து உதவி செய்ய, உருவாக்கித் தந்திருக்கின்ற அந்த நல்ல உள்ளத்தை அவர் பெற்றிருக்கும்போது, நல்ல மனிதர் என்று சொல்லாமலே அந்த அடைமொழி அவருக்குச் சொந்தமாகி விடுகிறது.”
எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்த பாராட்டைப் பெற்ற நடிகர் சிவகுமார் விழா நடந்த (1979 மே 26 ஆம் தேதி) அன்று – வழக்கமாக எழுதும் டைரிக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.
“ 25,000 ரூபாயில் ஒரு டிரஸ்ட் அமைத்து பட்டப் படிப்புக்குச் செல்லும் மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கும் திட்டத்தை எனது தாயார் முன்னிலையில் திரு.எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார்.
சிறுவயதில் திரைப்படங்களும், நாடகமும் பார்க்க வாய்ப்பின்றி வளர்ந்த நான், 14 வருடங்களில் 100 படங்களில் நடித்துள்ளேன்.
பள்ளிக்கூட வசதி, குடி தண்ணீர் வசதி எதுவுமே இல்லாத சிறு கிராமத்தில் பிறந்து எஸ்.எஸ்.எல்.சி படித்துத் தேறிய முதல் மாணவன் நான். ஏதோ ஒரு வெறியில் சென்னைக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஓவியக்கலை பயின்று முதல் மாணவனாகத் தேறினேன்.
கத்துக்குட்டியாக நடிப்புலகில் நுழைந்த எனக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் விளங்கியவர்கள் திரு.எம்.ஜி.ஆரும், திரு.சிவாஜியும்.
அவர்களின் வாழ்க்கைப் பாதையும், கலையுலகச் சாதனைகளுமே எனக்குப் பாடப் புத்தகங்கள்” என்று விழாவில் நன்றி தெரிவித்துப் பேசினேன்.”
கிட்டத்தட்ட 190 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிற நடிகர் சிவகுமார் தன்னுடைய பெயரில் அறக்கட்டளையைத் துவக்கியது 1979 ஆம் ஆண்டில்.
அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இதுவரை அந்த அறக்கட்டளையால் நிதியுதவி கிடைக்கப் பெற்றவர்களில் பலர் கிராமப்புறம் சார்ந்தவர்கள்.
ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். ஆரம்பத்தில் கொடுத்த தொகையைத் தற்போது விரிவுபடுத்தியிருக்கிறார் சிவகுமார்.
முதலில் +2 தேர்வில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடம் வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தவர், தற்போது ஐயாயிரம் ருபாய் வரை முதலில் வந்து பத்து மாணவ, மாணவியிருக்குப் பகிர்ந்து அளிக்கிறார்.
அவருடைய வழியில் மகன் சூர்யா “அகரம் ஃபவுண்டேஷன்” தொண்டு நிறுவனத்தைத் துவக்கியவர், தான் சம்பாதிப்பதில் கணிசமான தொகையை திறமையும், கல்வி கற்கும் வேட்கையும் இருந்தும், ஏழ்மையினால் தவிக்கும் மாணவ, மாணவியரைக் கண்டறிந்து உதவி வருகிறார்.
இதுவரை பல்லாயிரக்கணக்கானவர்கள் உயர்கல்வியும், தொழில்நுட்பக் கல்வியும் கற்க வழிகாட்டி வருகிறார். அவருடன் தன்னார்வலர்களைக் கொண்ட குழுவும் சேவையுள்ளத்துடன் உதவி வருகிறது.
அகரம் துவக்கப்பட்ட பதினான்கு ஆண்டுகளில் அந்த அமைப்பினால் பலன் அடைந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம். இலங்கை அகதிகள் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி உதவி செய்கிறார்கள்.
‘நமது பள்ளி’ சிறப்புத் திட்டம் மூலம் தமிழகம் முழுக்க இருக்கும் சுமார் நானூறு அரசுப் பள்ளிகளைச் சீரமைத்து, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் செய்து கொண்டிருக்கிறது அகரம் அமைப்பு.
இன்னொரு மகனான கார்த்தி ‘விதை’, ‘வழிகாட்டிகள்’ என்ற அமைப்புகளை உருவாக்கி விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் உதவுகிறார்.
தமிழ் வழியில் படித்த மூவாயிரம் மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க இவர்கள் உதவுகிறார்கள். கல்வியை முடித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்கிறார்கள்.
இப்படி 1300 மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ‘சிகரம்’ என்ற திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சியையும் அளித்து மாணவர்களை எந்தப் பணிக்கும் ஏற்றவர்களாக உயர்த்தியிருக்கிறார்கள்.
அரசுப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று 50 பேர் வரை அரசுப் பணிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.
‘இணை’ என்ற திட்டத்தின் மூலம் கல்விக்கான மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களில் ‘நமது கிராமம்’ என்ற திட்டத்தைத் துவக்கி வாழ்வியல் மேம்பாட்டுப் பணிகளைச் செய்கிறார்கள்.
அரசின் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என்று சமூக அக்கறை கொண்டவர்களின் ஒருங்கிணைப்பினால் தான் இந்தத் திட்டங்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்றாலும், இதற்கான துவக்க ‘விதை’ நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட பண்பும், சமூக அக்கறையும் தான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி தொடர்பான விழாவில் பேசும்போது இப்படிக் குறிப்பிட்டார் சிவகுமார்.
“ஒழுக்கம் மற்றும் கல்வி இரண்டும் இருந்தால், எங்கிருந்தாலும் ஜெயித்து விடலாம்.
தமிழக மக்கள் கடவுள். அந்த மக்களுக்கு நாம் ஏதாவது பண்ணனும் இல்லையா? ஒரு குழந்தையின் கல்விக்கு உதவி செய்யும்போது, அது பலருக்கும் உதவியாக இருக்கும். அதனால் தான் கல்வி அறக்கட்டளையைத் துவக்கினேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் போல் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.”
அவருடைய கனவு மெய்ப்பட்டிருக்கிறது. மேலும் அவருடைய குடும்பத்தினர் மூலம் மேலும் விரிந்து வேர் விட்டுக் கிளை பரப்பியிருக்கிறது. திறமையும், படிக்கும் வேகமுள்ளவர்களுக்குக் கனிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று கல்வியை ஏழ்மையானவர்களுக்கு அளிப்பதைப் பற்றிச் சொல்லியிருப்பார் பாரதி.
அந்த மகாகவியின் வரிகளை விட, மூத்த நடிகரும், பேச்சாளருமான சிவகுமாரின் செயல்பாட்டை உணர்ந்து, வேறென்ன மேன்மையான சொல் சொல்லிவிட முடியும்?
“பத்து மாதம் என்னைத் தாங்கிப் பெற்று வளர்த்து ஆளாக்கி வளர்த்த தெய்வம் என்னோடு இருப்பதைத் தவிரப் பெரிது வேறொன்றுமில்லை என்று கருதும் சிவகுமார் என்றுமே மகிழ்வோடு இருப்பார். என்றுமே மன நிறைவோடு வாழ்வார்.
என்றுமே புகழுக்குச் சொந்தக்காரராக இருப்பார்” என்று அன்று சிவகுமாருக்கு முன்னால், மக்கள் திலகம் வாழ்த்தியதை விட, வேறு எந்த விதத்தில் உயர்வாக வாழ்த்திவிட முடியும்?...
-
தற்போது புதுயுகம் தொலைக்காட்சியில் "அரசகட்டளை" ஒளிபரப்பாகிறது.....இன்று இரவு 7.30 மணி முதல் மூன் டிவியில்
"தாய்க்கு தலை மகன்" திரைப்படம் ஒளிபரப்பாகி றது....
இன்று இரவு 11 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில்
"நல்ல நேரம்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது...
நாளை(20/05/2020) காலை 11 மணிக்கு சன் லைஃப் சானலில் "கண்ணன் என் காதலன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது...
நாளை பிற்பகல் (20/05/2020) 2.30 மணிக்கு
மெகா 24 டிவியில் "தாய்க்கு தலை மகன்" திரைப்படம் ஒளிபரப்பாகிறது.......
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
17/05/20* -ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -* இதய வீணை*
* * * * * * * * booto* tv* - காலை 9 மணி* *-அன்பே வா*
* * * * * * * * ஜெயா டிவி* - மாலை 6 மணி -ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * * பாலிமர் -* *இரவு 11 மணி* - ராமன் தேடிய சீதை*
18/05/20* *ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* - குமரிக்கோட்டம்*
* * * * * * * *சன் லைப்* -காலை* 11 மணி* - ரிக்ஷாக்காரன்*
* * * * * * * *வானவில் டிவி* - பிற்பகல் 2 மணி - குமரிக்கோட்டம்*
* * * * * * * முரசு டிவி* - பிற்பகல் 2 மணி* - மருத நாட்டு இளவரசி*
* * * * * * * *மெகா டிவி* - இரவு 8 மாய்* *- படகோட்டி*
19/05/20* ஜீ தமிழ்* * - மதியம் 12 மணி* - பறக்கும் பாவை*
* * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - அரச கட்டளை*
* * * * * * * * *மூன் டிவி* * *-இரவு 7.30 மணி -தாய்க்கு தலைமகன்*
* * * * * * * * பாலிமர் டிவி* -இரவு 11 மணி - நல்ல நேரம்*
20/05/20 -* சன் லைப்* - காலை 11 மணி* - கண்ணன் என் காதலன்*
* * * * * * * * முரசு* டிவி* - காலை 11 மணி -தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி -தாய்க்கு தலை மகன்**
* * * * * * * *முரசு டிவி* - இரவு 7 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * வசந்த் டிவி* -இரவு 7.30மணி* -நான் ஏன் பிறந்தேன்*
ஷாலினி டிவி* - இரவு* 10.30 மணி - பறக்கும் பாவை*
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் குழுவின் பெயரில் கோவை நகரம் இடம் பெற்றுள்ளதால் எம்ஜிஆரின் திரை உலகம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .
1. மக்கள் திலகத்தின் ஆரம்ப கால திரைப்படங்கள் மற்றும் ராஜகுமாரி , மலைக்கள்ளன் போன்ற படங்கள் கோவை நகரில் படப்பிடிப்புகள் நடந்தது
2. 1950 துவக்கத்தில் இருந்தே எம்ஜிஆருக்கு கோவை மாவட்டத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள் .
3. எம்ஜிஆர் திமுகவில் இணைந்த பின்னர் கோவை மாவட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டார்கள் .
4, 1958ல் கோவை ராஜா அரங்கில் நாடோடிமன்னன் 20 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை படைத்தது .
5. 1958ல் நாடோடிமன்னன் வெற்றி விழா கோவை நகரில் பிரமாண்டமாக நடந்தது .
6. கோவை நகரில் முதல் முறையாக ராயல் அரங்கில் எம்ஜிஆரின் எங்கவீட்டுப்பிள்ளை - 1965ல் வெள்ளிவிழா கொண்டாடியது
7. 1967ல் நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளை இம் மாவட்டத்தில் கைப்பற்றியது
8. 1971ல் .நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக பெரும்பாலான தொகுதிகளை இம் மாவட்டத்தில் மீண்டும் கைப்பற்றியது
9 1972ல் எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது .
10. 1972 முதல் கோவை மாநகரமும் மாவட்டமும் எம்ஜிஆர் ரசிகர்களின் கோட்டையானது ,
11. 1974ல் அதிமுக விற்கு முதல் சட்ட மன்ற உறுப்பினராக அரங்கநாயகம் கோவை மேற்கில் வெற்றி கண்டார் .
12. 1973ல் உலகம் சுற்றும் வாலிபனும் , 1974ல் உரிமைக்குரலும் ,1975ல் இதயக்கனியும் வசூலில் சாதனை .
13. 1977 பாராளுமன்றத்தேர்தலில் கோவை மாவட்டம் எம்ஜிஆர் கோட்டையானது .
14. 1977 / 1980 1984ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் ஹாட்ரிக் கோட்டையானது .
15. 1991/ 2001/ 2011/ 2016 நடந்த சட்ட மன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் மீண்டும் அதிமுக கோட்டை யானது .
16. எம்ஜிஆரின் படங்கள் 73 வருடங்கள் தொடர்ந்து இன்னமும் கோவை மற்றும் கோவை மாவட்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது .
மறக்க முடியாத கோவை மாவட்ட எம்ஜிஆர் ரசிகர்கள் ............
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலை வேந்தன்*எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*விவரம்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
21/05/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி -பட்டிக்காட்டு பொன்னையா*
* * * * * * * * *மெகா டிவி* *- இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*
* * * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி* - வேட்டைக்காரன்*
22/05/20* -சன் லைப் - காலை* 11 மணி* - புதிய பூமி*
* * * * * * * *புது யுகம் டிவி -பிற்பகல் 1.30 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * * * *வசந்த் டிவி* - இரவு 7.30 மணி -ராமன் தேடிய சீதை*
23/05/20* வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * * * மெகா 24* = பிற்பகல் 2.30 மணி -தனிப்பிறவி*
* * * * * * * *பாலிமர் டிவி -இரவு* 11 மணி - அரச கட்டளை*
24/05/20 சன் லைப்* -காலை 11 மணி - அரசிளங்குமரி*
* * * * * * * மீனாட்சி* டிவி -இரவு 9 மணி - நல்லநேரம்*
25/05/20-சன் லைப் - காலை 11 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - கன்னித்தாய்*
* * * * * * * புதுயுகம் டிவி - இரவு 7 மணி* -தனிப்பிறவி*
26/05/20* வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி -குடும்ப தலைவன்*
27/05/20 - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - குலேபகாவலி*
* * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* * - நம் நாடு*
* * * * * * * *மெகா டிவி* -மதியம் 12 மணி - பணத்தோட்டம்*
* * * * * * * *வானவில் டிவி - பிற்பகல் 2 மணி - மாடப்புறா*
* * * * * * * மெகா 24 டிவி -பிற்பகல் 2.30 மணி - தேர் திருவிழா*
-
.தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான விவரம்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
28/05/20 -* வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாயின் மடியில்*
* * * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி -ராமன் தேடிய சீதை*
29/05/20 சன் லைப் - காலை 11 மணி - நல்ல நேரம்*
30/05/20* மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - விவசாயி*
31/05/20* *முரசு டிவி - மதியம் 12 மணி & இரவு 7 மணி* - பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * * * * ** * * * * * **வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - கணவன்*
01/06/20 -* மெகா 24 டிவி - காலை 8.30 மணி -* * காலத்தை வென்றவன்*
* * * * * * *** * * * * * * *வேந்தர்*டிவி* - காலை*10 மணி* - நல்ல நேரம்*
* * * * * * * * * பாலிமர்*டிவி*-பிற்பகல் 2 மணி -சக்கரவர்த்தி திருமகள்*
* * * * * * * புது யுகம் டிவி*- இரவு 7 மணி* - வேட்டைக்காரன்*
02/06/20* *- ஜெயா*டிவி* - காலை*10 மணி - சிரித்து வாழ வேண்டும்*
* * * * * * * * *சன்*லைப்*- காலை*11 மணி - சந்திரோதயம்*
* * * * * * * * *முரசு டிவி*- காலை*11 மணி* _& இரவு 7 மணி* * - ஆனந்த*ஜோதி*
* * * * * * * * * மீனாட்சி*டிவி* - பிற்பகல் 1 மணி - வேட்டைக்காரன்*
03/06/20* * ஜீ* திரை* - காலை*6 மணி* - பறக்கும் பாவை*
* * * * * * * * *ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி - விக்கிரமாதித்தன்*
* * * * ** * * * * * * * *சன்*லைப்* *- காலை*11 மணி* - என் அண்ணன்*
* * * * * * * * * ** * * * * **மூன்*டிவி* *- பிற்பகல் 12.30 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * * *மெகா*டிவி* - இரவு 8 மணி* - படகோட்டி*
04/06/20* வசந்த்*டிவி* - காலை*10 மணி - சங்கே*முழங்கு*
* * * * * * * * * * * * * * * * * * * *பிற்பகல் 1.30மணி* - என் கடமை*
* * * * * * * * *சன்*லைப்* -காலை*11 மணி - காவல் காரன்*
* * * * * * * *புது யுகம் டிவி* - இரவு 7 மணி* - நவரத்தினம்*
05/06/20* * சன்*லைப்* - காலை* 11 மணி - எங்கள் தங்கம்*
* * * * * * * * வசந்த்*டிவி* - பிற்பகல் 1.30 மணி - புதிய பூமி*
06/06/20* ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி - குமரிக்கோட்டம்*
* * * * * * * * வசந்த் டிவி* *- காலை*10 மணி - நவரத்தினம்*
* * * * * * * *சன்*லைப்* - காலை*11 மணி - மந்திரி குமாரி*
* * * * * * * *மெகா*டிவி*- மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * *ராஜ்*டிஜிட்டல் ப்ளஸ்*-இரவு 7.30 மணி -ரகசிய*போலீஸ் 115
7/6/20* * * முரசு டிவி*- மதியம் 12 மணி & இரவு* 7 மணி** தொழிலாளி*
* * * * * * * * வசந்த்*டிவி*- பிற்பகல் 1.30 மணி -தாயை காத்த*தனயன்*
* * * * * * * * சன் லைப்* - மாலை 4 மணி* - நல்லவன் வாழ்வான்*
8/6/20* * *ஜெயா மூவிஸ்*- காலை*7 மணி -*பட்டிக்காட்டு*பொன்னையா*
* * * * * * *சன்*லைப்*- காலை*11 மணி - உரிமைக்குரல்*
* * * * * * *king* டிவி* - பிற்பகல் 1.30 மணி* - வேட்டைக்காரன்*
* * * * * * * வானவில் டிவி*- பிற்பகல் 3.30 மணி -வேட்டைக்காரன்*
* * * * * * *புதுயுகம் டிவி* - இரவு 7 மணி* - தர்மம் தலை காக்கும்*
* * * * * * மெகா*24 டிவி* - இரவு 9 மணி* - காலத்தை வென்றவன்* **
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின்* டிவியில் 18/05/20அன்று திரு.துரை பாரதி சொன்ன தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
1963ல் வெளியான* காஞ்சி தலைவன் படத்தில் தயாரிப்பாளர் நடிகை விஜயகுமாரியை நன்றாக தமிழில் வசனம் பேசக்கூடிய நடிகை என்றுஎம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிக்க* ஒப்பந்தம் செய்தார் . விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். நடிகை விஜயகுமாரியை அழைத்து ,**நீங்கள் எனது தம்பி எஸ்.எஸ்.ஆரின் மனைவி . ஆகவே உங்களோடு ஜோடியாக நடிப்பதற்கு மனம் இடம் தரவில்லை .* தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் .எனது தங்கையாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தரப்படும்* என்று சமாதானம் சொல்லி நடிக்க வைத்தார் . பின்னர் வெளிவந்த*தேர் திருவிழா, கணவன்*ஆகிய படங்களிலும் நடிகை விஜயகுமாரி தங்கையாக*நடித்துள்ளார் . காஞ்சி தலைவனில்*எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக*பானுமதி*நடித்தார் .
நடிகை லட்சுமி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன், மாட்டுக்கார வேலன், குமரிக்கோட்டம் ,சங்கே முழங்கு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மாட்டுக்கார வேலன்*படத்தில்*எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது முதன் முதலில் அறிமுகம் ஆகும்போது குட்*மார்னிங்*அங்குள்*என்று சொன்னாராம். எம்.ஜி.ஆர். பொதுவாக படப்பிடிப்பு தளத்தில்*யாராவது*தவறு செய்தால்*அனைவர்*மத்தியில் கண்டிக்காமல்* தன*ஒப்பனை அறைக்கு*அழைத்து அறிவுரை சொல்வது வழக்கம். அந்த வகையில்*நடிகை லட்சுமியை அழைத்து*, நீ ஆங்கிலம் நன்றாக படித்து இருக்கலாம்*கான்வென்ட் மாணவியாக*கூட இருந்திருக்கலாம். உன்னை*வாழ வைப்பது*தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் ரசிகர்கள்தான் . எனவே* தமிழ்நாட்டில் யாரை*பார்த்தாலும்*வணக்கம் சொல்ல*பழகிக் கொள் .அதுதான் உனக்கு நல்லது .தமிழ் திரையுலகில் உனக்கு*நல்ல எதிர்காலம் அமையட்டும் என்று வாத்தியார் போல அறிவுரை சொல்லி*வாழ்த்தினார் .**
மாட்டுக்கார வேலன்*படப்பிடிப்பு பாடல் காட்சிக்காக மதுரை அடுத்த ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணையில்*தொடங்குகிறது. விவரம் அறிந்து*சுற்றுவட்டார மக்கள் ஆயிரக்கணக்கில் எம்.ஜி.ஆரை*பார்ப்பதற்கு*திரண்டு வருகின்றனர் .* கடும் வெயில் சமயம் ஆதலால், தன்னை*பார்க்க வந்திருந்த மக்களுக்கு*இரண்டு லாரி*தண்ணீரும், அனைவரும் பருகும் வகையில்*மோரும்*ஏற்பாடு செய்து தந்தார் எம்.ஜி.ஆர். ஒரு வயதான*மூதாட்டியை*அழைத்து*, நீங்கள் ஏன் இந்த கடும் வெயிலில்*படப்பிடிப்பை*பார்க்க வந்தீர்கள். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் .என்று கேட்கிறார்.* பதிலுக்கு அந்த மூதாட்டி, எனக்கு*இரண்டு மகன்கள்*. என்கிறார். அப்படியா .அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்க , இளைய மகன் ராணுவத்தில் பணிபுரிகிறார் , மூத்த மகன் சினிமாவில் நடிக்கிறார் . அது யார் என்று எம்.ஜி.ஆர்.கேட்க . அந்த மூதாட்டி ராமச்சந்திரன்*என்கிறார். எம்.ஜி.ஆர். உடனே நெகிழ்ந்து போகிறார் . தன் உதவியாளரை அழைத்து*அந்த மூதாட்டியின் முகவரியை*குறிப்பு*எடுக்க சொல்கிறார் .**படப்பிடிப்புக்கு அழைப்பு வரவே*எம்.ஜி.ஆர். மூதாட்டியிடம் விடை பெறுகிறார் .**பின்னர் தன் உதவியாளரிடம் , என் மீது எந்தவித*பிரதிபலனும் இல்லாமல்* இவ்வளவு அன்பு , பாசம் வைத்திருக்கிறார்களே . இவர்களுக்கு நான் என்ன கைம்மாறு எப்படி* செய்ய போகிறேன்*என்று தெரியவில்லை* என்று கூறி*அந்த மூதாட்டியிடம்* படப்பிடிப்பு முடிந்ததும்*நான் அளிக்கும்*பணத்தை உங்கள் மூத்தமகன்*கொடுத்தது* என்று* சொல்லி*கொடுத்துவிட்டு வாருங்கள் என்றார் .ஆகவே, தமிழ்நாட்டு மக்கள் எம்.ஜி.ஆரை எங்க வீட்டு பிள்ளை என்று சொந்தம்*கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம்*ஒரு உதாரணம் .மாட்டுக்கார வேலன்*1970 பொங்கல் திருநாளில் வெளியாகி 12 அரங்குகளில் 100 நாட்களும், சென்னை*,மதுரை*நகரங்களில் வெள்ளிவிழா வும் கொண்டாடியது .
எம்.ஜி.ஆர். 1975ல் இந்தி திரையுலகில் நடித்து வந்த*நடிகை ராதா சலூஜாவை தன் இதயக்கனி திரைப்படத்தில் அறிமுகம் செய்தார் .* அதில் வரும் காதல்*பாடலான*இன்பமே உந்தன் பேர் வள்ளலோ*என்கிற பாடல் பட்டி, தொட்டியெல்லாம் ஒலித்தது .* அன்று முதல் இன்று வரையில் திருமணம், மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளில் நிச்சயமாக இடம் பெறும்*ஒரு துள்ளலான,*வசீகரமான பாடல்.* திரைப்படத்தில் இந்த பாடலுக்கு*, இன்றைய இளைய ஹீரோக்களுக்கு சவாலாக*ராதா சலூஜாவுக்கு ஈடு கொடுத்து*ஓடியாடி*, காதல்*களியாட்டத்துடன் நடித்து தன் ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டல்கள்களால் அரங்குகள் அதிர்ந்தன* என்று பேசப்பட்டது .இதயக்கனி திரைப்படம் 10 அரங்குகளில் 100 நாட்கள்*கடந்தது*. இதயக்கனியின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, ராதா சலூஜா*, எம்.ஜி.ஆருடன்*இன்று போல் என்றும் வாழ்க என்ற மற்றும் ஒரு வெற்றிப்படத்தில் நடித்திருந்தார் .* 1977ல் எம்.ஜி.ஆர். சட்டசபை தேர்தல் சந்திக்கும் சமயத்தில் வெளிவந்த படம் . இந்த படத்தில் வரும் பாடல்களான இது நாட்டை காக்கும் கை, அன்புக்கு நான் அடிமை ஆகிய கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல்கள்*அ. தி.மு.க. கட்சி*யின்*கொள்கை பாடல்களாக*தேர்தல் பிரச்சாரத்தில் பட்டி தொட்டியெங்கும் முழங்கி எம்.ஜி.ஆர். 1977 சட்ட மன்ற தேர்தலில்*தனி பெரும்பான்மையுடன்*முதல்வராக ஆட்சி பீடத்தில் அமர வித்திட்டது .* அனைத்து பாடல்களும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில்*ரசிகர்கள் காதில்*ரீங்காரமிட்டன . குறிப்பாக*கடைசி பாடலான*என் யோக ஜாதகம் நான் உன்னை சேர்ந்தது என்ற பாடலுக்கு*நல்ல வரவேற்பு ரசிகர்களால் கிடைத்தது .எம்.ஜி.ஆர். முதல்வரானபின் 100 நாள் கொண்டாடிய முதல் படம் .* எம்.ஜி.ஆர். முதல்வரான பிறகு*வாஷிங்டன் போஸ்ட்*என்கிற நாளிதழ் அமெரிக்காவில் இது நாட்டை காக்கும் கை, அன்புக்கு நான் அடிமை ஆகிய இரு பாடல்கள்*எம்.ஜி.ஆரின்*தேர்தல் வெற்றிக்கு*அடித்தளம் அமைக்க* பல* காரணங்களில் ஒன்று* என்று செய்தி வெளியிட்டு இருந்தது .
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான*பாடல்கள் விவரம்*
--------------------------------------------------------------------------
1.ஒரு* கொடியில்**இரு மலர்கள்* - காஞ்சி தலைவன்*
2.பட்டிக்காடா*பட்டணமா* - மாட்டுக்கார வேலன்*
3. பூ வைத்த பூவைக்கு*பூக்கள் சொந்தமா*- மாட்டுக்கார வேலன்*
4.இன்பமே*உந்தன்*பேர் பெண்மையோ* - இதயக்கனி*
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*20/05/20அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்துவிட்டது .அவரை பற்றி புதிய தகவல்களும், புதிய பரிமாணங்களும் நமக்கு கிடைத்த வண்ணம் இருக்கின்றன .* அப்படியானவற்றை இந்த சகாப்தம் நிகழ்ச்சியில்*தெரிந்து கொள்வோமாக .எம்.ஜி.ஆருக்கு ஜாதகம், ஜோதிடம், நியூமராலஜி போன்றவற்றில் நம்பிக்கை* உண்டா* இல்லையா என்று பலர் கேட்பார்கள்*ஆனால் எம்.ஜி.ஆர். நமக்கு மேல் சக்தி ஒன்று இருக்கிறது. அதுதான் நம்மை வழி நடத்துகிறது . என்னை வழி நடத்துவது என் தாய்தான் என்று ஆழமாக நம்பினார்*
..நாடோடி மன்னன் படத்தில் கதை ஆசிரியராக திரு.ரவீந்திரன் என்பவரை எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்தார். திரு.ரவீந்திரன் என்பவர் உண்மையில் ஒரு இஸ்லாமியர் .* நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் சிபாரிசின் பேரில் எம்.ஜி.ஆரிடம் அறிமுகம் ஆகிறார் . ரவீந்திரன் என்று பெயர் வைத்ததே எம்.ஜி.ஆர். தான் . எம்.ஜி.ஆர். அவரிடம் கேட்கிறார் உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார் என்று .அவர் கவிஞர்* ரவீந்திர நாத் தாகூர் எனக்கு பிடித்தமானவர் என்கிறார் .*அந்த கவிஞரின் பெயரை புனைபெயராக வைத்து ரவீந்திரன் என்று பெயரிடுகிறார்*.**
எம்.ஜி.ஆர். ஒரு முறை ரவீந்திரனுடன் சக்கரவர்த்தி திருமகள் படத்திற்காக மைசூருக்கு செல்கிறார் . அங்கு ஒரு ஓட்டலில் ரவீந்திரனுடன் எம்.ஜி.ஆர். தங்குகிறார் . ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து எம்.ஜி.ஆர். ஓட்டலுக்கு திரும்பியதும் ஓட்டலில் அதிபர் உறவுக்கார* இளம் பெண்கள் இருவர் அவரை பார்க்க வருகின்றனர் .ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க மறுக்கிறார். இரவு 7 மணிக்கு மேல் ஆகிவிட்டது .* யாராவது பார்த்தால்* அவர்கள் மீது சந்தேகப்படுவார்கள்.ஏனென்றால் அவர்கள் திருமணம் ஆகாதவர்கள்* அவர்கள் பெயர், இமேஜ் கெட்டுவிடும் என்று திருப்பி அனுப்பி விடுகிறார் .
எம்.ஜி.ஆர். தன் நடிப்பிற்கு, வாள் வீச்சிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஏரா ல்* பிளைன் என்பவரை தான் முன்னோடியாக கருதினார் .ஏனென்றால் எம்.ஜி.ஆரைப் போலவே* ஏரா ல் பிளைன் என்ற நடிகருக்கும்* ரசிகர்கள் பட்டாளம் மிக பெரிய அளவில் இருந்தது .பிரபல இந்தி பட இயக்குனர் சாந்தாராம் இயக்கிய*இந்தி படங்களை எம்.ஜி.ஆர். விரும்பி பார்ப்பார் . சாந்தாராம் படங்களின் தாக்கம் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் காணலாம் .* அது மட்டுமல்ல .**இயக்குனர் சாந்தாராம்* தோ ஆங்கே பாரா ஹாத் என்ற இந்தி* படத்தில் தானே நடித்து இயக்கி இருப்பார் . 1975ல் எம்.ஜி.ஆர். அந்த கதையை தழுவி தமிழில் பல்லாண்டு வாழ்க என்ற படத்தில் கொடூரமான 6 வகையான சிறை கைதிகளை தனியொரு கிராமத்தில் மேலதிகாரியின் அனுமதி பெற்று அவர்களை திருந்திய மனிதர்களாக மாற்றும் ஜெயிலராக மிக சிறப்பாக நடித்திருப்பார் .* இந்த படம். சென்னை மட்டுமின்றி, மதுரை,திருச்சி, சேலம் ,திருநெல்வேலி ஆகிய ஊர்களில் 100 நாட்கள் கடந்து ஓடியது*
ஒருமுறை எம்.ஜி.ஆர். காரில் பயணம் செய்யும்போது குழந்தைகள் பயணம் செய்யும் பள்ளி வேன்* ஒன்று எம்.ஜி.ஆர். காரை முந்தி வேகமாக செல்கிறது .எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம். குழந்தைகளுக்கு வைத்துக் கொண்டு ஓவர் டேக்*செய்து ஓட்டுகிறான் என்று . சிறிது நேரம் கழித்து அந்த வேன் எம்.ஜி.ஆர். காரை மறித்து நின்று விடுகிறது .* வேனில் இருந்து இறங்கி குழந்தைகள் எம்.ஜி.ஆர். காரை நோக்கி ஓடி வருகிறார்கள் . உடனே எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி உதவியாளரிடம் காரில் உள்ள டின்னில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டுகளை கொண்டுவர செய்கிறார் .வேன் டிரைவரை எம்.ஜி.ஆர். கண்டிக்கிறார். பிறகு** எம்.ஜி.ஆர். எல்லா குழந்தைகளுக்கும் திண் பண்டங்கள் வழங்குகிறார் . அதில் ஒரு இளம்பெண் எம்.ஜி.ஆரை இனம் கண்டு நான் உங்களோடு சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார் . எம்.ஜி.ஆர். அந்த பெண்ணுக்கு ,உன் பெற்றோர்கள் விருப்பப்படி முதலில்* நன்றாக படித்து ஒரு நிலையை அடைந்த பின்னர் , பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் சினிமாவில் நடிக்கலாம் என்று அறிவுரை கூறுகிறார் .* எம்.ஜி.ஆரிடம் பேசிய அந்த பெண்தான் பின்னாளில் எம்.ஜி.ஆருடன், நாடோடி, சந்திரோதயம், அன்னமிட்டகை ஆகிய படங்களில் நடித்தார் . கன்னட நடிகர் விஷ்ணு வர்த்தனை பின்னாளில் மணந்தார் ..
எம்.ஜி.ஆர். ஆரம்ப காலங்களில் இருந்தே, சர்வாதிகாரி, மர்மயோகி, மந்திரிகுமாரி,மலைக்கள்ளன் போன்ற அனைத்து* படங்களில் பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக, உழைக்கும் வர்க்கத்திற்காக, சமுதாய சீரழிவை எதிர்த்து,பாடுபடும் மக்களுக்காக , அரசை எதிர்த்து, அரசை விமர்சித்து , குரல் கொடுக்கும் புரட்சிக்காரராக* நடித்ததால் என்னவோ, புரட்சி நடிகர் என்ற பட்டம் பெற்று, அரசியலில் புரட்சி தலைவர் ஆனார் . வாழ்க்கையின் அடித்தளத்தில் உள்ளவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், அன்றாட வேலைக்கு சென்ற அடியாட்கள் போன்றவர்களின் துன்பங்கள், பிரச்னைகள்* அடக்கு முறை, ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாயகனாக திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் அவரது படங்கள் மற்ற நடிகர்கள் படங்கள் போல் இல்லாமல் நகரங்கள் மட்டுமின்றி, புற நகரங்கள், கிராமங்கள், பட்டி , தொட்டியெல்லாம் ஓடி வசூலை வாரி குவித்தன .* நாடோடி மன்னனில் ஒரு வசனம் . மன்னராவதற்கு முன்பு அமைச்சர்களிடம் பேசும்போது* நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன் . நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள் ..ஆயிரம் ஆடைகளில் எதை அணிவது என்பது*உங்கள் பிரச்னை. இருந்த , கிழிந்த ஆடையை வைத்து மானத்தை மறைக்கலாமே என்பது மக்கள் பிரச்னை . இங்கே தாதிகள் பட்டு விரிக்கிறார்கள்*நீங்கள் நடந்து செல்கிறீர்கள். அங்கே மக்கள் காலில் குத்திய முள்ளை பாதி உடைத்து எறிந்து விட்டு மீதியுடன் செருப்பில்லாமல் நடக்கிறார்கள். உங்களை அவர்களோடு ஒப்பிட முடியுமா என்று கேட்பார் .* இப்படி சினிமாவில் பேசியதோடு எம்.ஜி.ஆர். இருந்து விடவில்லை. ஏழை எளியோருக்கு, பாதுகாவலனாக தான் சம்பாதித்த பணத்தில் இருந்து எண்ணற்ற அளவில் வாரி வழங்கி உள்ளார் .* விளம்பரமின்றி பலருக்கு தான தருமங்கள், உதவிகள்*செய்துள்ளார் .* இந்திய சீன* போரின் போதும், தேசிய பேரிடர் காலங்களிலும்,*ஈழ தமிழர்களுக்காகவும் வாரி வழங்கியவர் எம்.ஜி.ஆர். முதல்வராகிய பின்பு*பல நல திட்டங்கள், ஏழைகள் , பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில்*பல மாற்றங்கள், சட்டங்கள் கொண்டு வந்தார் .வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் என்றும் எம்.ஜி.ஆர். என்பது இந்த மாதிரி செயல்களால்தான் என்றால் மிகையாகாது .* *
.
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம்*
------------------------------------------------------------------------
1.நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் - அன்பே வா*
2.யானையை பிடித்து (டேப் பாடல் ) -சக்கரவர்த்தி திருமகள்*
3.என்ன சுகம், என்ன சுகம், - பல்லாண்டு வாழ்க .
4.அன்றொரு நாள் இதே நிலவில் - நாடோடி*
5.புத்தன் இயேசு காந்தி பிறந்தது -சந்திரோதயம்*
*
-
தனியார் டிவிக்களில் கலை*மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பாகிய* விவரம்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
*09/06/20 - முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * ஷாலினி டிவி - பிற்பகல் 3 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
10/06/20 -சன் லைப் - காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
11/06/20 -பாலிமர் - பிற்பகல் 2 மணி* - இன்றுபோல் என்றும் வாழ்க*
* * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - மாட்டுக்கார வேலன்*
12/06/20- சன் லைப் - காலை 11 மணி* - நான் ஏன் பிறந்தேன்*
13/06/20 - மெகா 24 டிவி - காலை 8.30 மணி - காதல் வாகனம்*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் - இரவு 7 மணி - மாட்டுக்கார வேலன்*
14/06/20-முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - கலையரசி*
15/06/20- சன் லைப் - காலை 11 மணி - நாளை நமதே*
* * * * * * * வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * புதுயுகம் டிவி* - இரவு 7 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * *மூன் டிவி* - இரவு 7.30 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - அரச கட்டளை*
16/06/20 - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - பாசம்*
* * * * * * *சன் லைப் - காலை 11* மணி - திருடாதே*
* * * * * * முரசு - மதியம் 12 மணி / இரவு 7 மணி -நான் ஏன் பிறந்தேன்*
17/06/20-ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - தாய்க்கு பின் தாரம்*
* * * * * * *சன் லைப்* - காலை 11 மணி* - நீரும் நெருப்பும்*
* * * * * * *வசந்த் டிவி -பிற்பகல் 1.30 மணி -பெற்றால்தான் பிள்ளையா*
18/06/20-சன் லைப்* -காலை 11 மணி - ஒரு தாய் மக்கள்*
* * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - சங்கே முழங்கு*
19/06/20-சன் லைப் - காலை 11 மணி -நீதிக்கு தலைவணங்கு*
20/06/20 - மெகா 24 டிவி -காலை 8.30 மணி -நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * *ராஜ் டிஜிட்டல் -காலை 9.30 மணி - மதுரை வீரன்*
* * * * * * * சன் லைப் - காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*
* * * * * * * மெகா டிவி* -மதியம் 12 மணி -கலங்கரை விளக்கம்*
* * * * * * *முரசு டிவி - மதியம் 12 மணி / இரவு 7 மணி -நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * *ராஜ் டிஜிட்டல் - இரவு 7.30 மணி - உலகம் சுற்றும் வாலிபன்*
* * * * * * மெகா 24 டிவி - இரவு 9 மணி* - காதல் வாகனம்*
21/06/20 -சன் லைப் - காலை**11 மணி - நவரத்தினம்*
* * * * * * * * மெகா 24 டிவி - பிற்பகல் 2.30 மணி - தாயின் மடியில்*
-
( நாடோடி மன்னன் )
நடிப்பு –
எம். ஜி. ராமச்சந்திரன்,எம். என். நம்பியார், சக்கரபாணி, சந்திரபாபு, வீரப்பா, பானுமதி, ஜி. சகுந்தலா, பி. சரோஜாதேவி, எம். என். ராஜம்.
தயாரிப்பாளர் –
எம். ஜி. ராமச்சந்திரன் – எம். ஜி. ஆர். பிக்சர்ஸ்.
இயக்குனர் –
எம். ஜி. ராமச்சந்திரன்
இசையமைப்பு –
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு, என். எஸ். பாலகிருஷ்ணன், ஆத்மானந்தன்
வெளியீடு நாட்கள் –
ஆகஸ்ட் 22, 1958.
புரட்சி நடிகர் முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று நடித்து வெளிவந்த படைப்பு வெள்ளி விழா காவியம்.
1958-ம் ஆண்டு தீபாவளி அன்று சிங்கப்பூர் நகரங்களில் திரையிடப்பட்டு மாபெரும் சாதனை படைத்த படம் நாடோடி மன்னன். தமிழ் படங்களில் அன்றைய சிங்கப்பூர் மிகப்பெரிய திரையரங்கில் அதிக வசூல் சாதனை செய்த காவியம்.
1958 – ல் 50 திரையரங்கில் 50 நாள் ஓடி அதிக வசூல் பெற்று(1 கோடியே 10 லட்சம் ) சாதனைபுரிந்த காவியம் (50 திரையரங்கு என்பது இரண்டாம் வெளியீட்டும் சேர்த்து).
“முதன் முதலில் தலைநகர் சென்னையில் மூன்று அரங்கில் 100′ காட்சி மேல் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆன காவியம்.
சேலம் சித்தேஸ்வரா அரங்கில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் இது. புரட்சி நடிகர் கலையுலகில் நடிக்கும் வரை சேலம் நகரில் வெள்ளி விழா கண்ட ஒரே காவியமும் நாடோடி மன்னன் ஒன்றே !
“திருவண்ணமலையில் 100 நாள் கண்ட படமும் ! (இரண்டாம் வெளியீட்டில் முதல் முதலில் 100நாள் கண்ட முதல் காவியமும் இதுவே ! அரங்கு கிருஷ்ணா 113நாள்.
சென்னை கிருஷ்ணா அரங்கில் அதிக நாள் ஓடிய ஒரே காவியம் ( 3காட்சியில்) 161 நாள்.
இலங்கை மாநகரில் 6 அரங்குகளில் 100 நாள் கண்ட ஒரே காவியம் இது ஒன்றே !
“சிறந்த இயக்குநர் விருது “சினிமாகதிர் ” புரட்சி நடிகருக்கு வழங்கியது.
“லண்டன் ‘ தமிழ் சங்கத்தில் கலந்து கொண்ட முதல் தமிழ் காவியம்.
“சிறந்த இயக்குநர் விருது சிங்கப்பூர் பத்திரிக்கையும் மக்கள் திலகத்திற்கு வழங்கியது.
மும்பை, கல்கத்தா ஆகிய வட இந்தியாவிலும் முதன் முதலில் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த காவியம் நாடோடி மன்னன்.
1958-ல் சிறந்த படமாக தேர்ந்து எடுக்கப்பட்ட காவியம்.
“லண்டன்” மாநகர் திரையரங்கு ஒன்றில் சுமார் 8 வாரம் ஒடிய ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !
ஆந்திர மாநிலமான “சித்தூரில் ” 100 நாள் கண்ட ஒரே தமிழ் காவியம் இது ஒன்றே !
முதன் முதலில் ஒரு படத்தின் வெற்றி விழாவை பொது மக்கள் பார்வையில் ( தமிழகம் முழுவதும்) கொண்டாடிய முதல் காவியம் ! நாடோடி மன்னனே !
“இவர் காவியத்திற்காக புரட்சி நடிகருக்கு 110 “சவரன்” தங்க வாள் பேரறிஞர் அண்ணா அவர்களால் வழங்கப்பட்டு, பின் புரட்சி நடிகர் அந்த தங்க வாளை…. சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு இலவசமாக வழங்கினார்.
சீர்காழியில் “இன்பக்கனவு “நாடகத்தில் புரட்சி நடிகர் நடித்த போது, கால் உடைந்து பல மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் சொன்னதால் 31.12.1959 அன்று தான் புரட்சி நடிகர் நடித்த ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ படம் வெளிவந்தது. ஆகையால் 1959-ம் ஆண்டும் ‘நாடோடி மன்னன்’ தமிழகம் முழுவதும் வசூலை வாரி தந்தது.
“ஒரு முன்னணி (கதாநாயகன்) நடிகராக யிருந்து முதன் முதலில் தயாரித்து இயக்கிய வெற்றி படமாகக் தந்தவர் புரட்சி நடிகரே.
“நடிகை அபிநய சரஸ்வதி B.சரோஜாதேவி அறிமுகமான முதல் படம். B. சரோஜாதேவி பின் நாளில் 26 படங்களில் மக்கள் திலகத்துடன் கதாநாயகியாக நடித்தார்.
“பாதி கறுப்பு வெள்ளை, பாதி கலர் படமாக முதல் முதலில் வெளிவந்த படம்.
“அதிக நேரம் (நான்கு மணி நேரம்) ஓடிய படம் இன்று வரை நாடோடி மன்னன் மட்டுமே.
“தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் டைட்டில் சாங்ஸ், (செந்தமிழே வணக்கம்) உழைப்பை உணர்த்தும் பாடல் (உழைப்பதிலா), சோம்பேறி தனத்தை சாடும் பாடல்(தூங்காதே தம்பி) ஆக மூன்று கருத்துகள் உணர்த்தும் பாடல்கள் அமைந்தஒரே காவியம்.
“அரண்மனை சிறைசாலையில் கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு ஒரு பெரிய குழாயின் மூலமாக இரு புரட்சிகாரர்கள் (புரட்சி நடிகரும் -பானுமதியும்) தொடர்பு கொள்வது எப்படி என்பது பற்றி புதுமையான முறையில் அன்றைக்கு கேமராவில் எடுத்துக் காட்டிய காவியம் நாடோடி மன்னன்.
“ஒரே நடிகர் இரு வேடங்களில் நடித்து படங்களின் இடம் பெறும் ஒரே காட்சியில் இருவரும் கை கொடுப்பது முகத்தை தொட்டு பேசுவதும் போன்ற புதுமையான காட்சிகள் இடம் பெற்ற முதல் தமிழ் காவியம்.
“10- க்கும் மேற்பட்ட பாடல்கள் (ஹிட் சாங்ஸ்) அனைத்தும் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒலித்து கொண்டிருக்கும் சாதனை காவியம் நாடோடி மன்னன்.
“கண்ணாடி மாளிகை சண்டை காட்சியில் கண்ணாடி முழுவதும் தூள் தூள்ளாக உடைந்து சிதறுவது போல் ஆங்கில படத்துக்கு இணையாக (அதிக செலவு) எடுத்த காவியம்.
“அரண்மனையில் மன்னர்கள் ரகசிய வழியில் (சுரங்கப் பாதை) செல்வது எப்படி என்பதை பிரமிக்க கூடிய அளவுக்கு காண்பித்த காவியம்.
“கதாநாயகி (பானுமதி) இறந்துவிட்ட செய்தி படத்தில் காண்பிக்கும் பாணி ; ஒரு பணி பெண் பால் பாத்திரத்தை கொண்டு வரும் போது, கதாநாயகன் எதிரே ஓடி வந்ததால் அந்த பால் கீழே கொட்டிவிடுகிறது. மேலே ஒரு வரைபடத்தில் அம்பு பட்ட மான் இறந்து கிடப்பது போல் காண்பிப்பார்கள். புதுமையான முறையில் காட்சியை உருவாக்கும் முறையில் முழு வெற்றியை தந்த காவியம். இன்றைக்கும் இந்த காட்சி திரையரங்கில் கைதட்டல் பெறும்.
தமிழகத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் வெளிவரும் ‘இந்தியன் மூவி நீயூஸ்’ என்ற இதழ் முதல் முதலில் நாடோடி மன்னனுக்கு சிறப்பு மலர் வெளியிட்டது.
தமிழகத்தில் நாடோடி மன்னன் காவியத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டன.
தமிழகத்தில் வெளிவந்த அனைத்து பத்திரிகைகளில் நாடோடி மன்னன் காவியத்திற்கு அதிக விமர்சனம் (பாராட்டு) கிடைத்தது.
“4 மணி நேரம் ஓடுகின்ற திரைப்படத்தில் சிக்கலே இல்லாத கதை அமைப்பு கொண்டது. ஒரு பாமரனுக்கும் புரிகின்ற அளவுக்கு எளிமையான முறையில் வலுவான கருத்துகளோடு அமைத்து திறமையாக இயற்றி வெற்றி வாகை சூடிய காவியம்.
“வசனத்தில் புதுமை புரட்சி கருத்துகள், சிறை அனுபவங்கள், ராஜ தந்திரங்கள், நகைச்சுவை, காதல்,அன்பு,சகோதரி, சகோதரன் போன்ற பல விதமான பாத்திரங்களுக்கு சிறப்பாக வசனங்கள் அமைந்த காவியம் நாடோடி மன்னன்.
Thanks Google..........
-
இன்று (24/06/20) கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள்*
-----------------------------------------------------------------------------------------
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி முன்பு பத்திரிகைக்கு அளித்த பேட்டி*
-------------------------------------------------------------------------------------------------------------------
கவிஞர் கண்ணதாசன் விருது வாங்குவதற்கு ஒரு முறை சென்னை வந்திருந்த*நடிகை சரோஜாதேவி , வார்த்தைக்கு, வார்த்தை மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை*புகழ்ந்து பேசினார் .
என் அன்பு தெய்வம், என் மானசீக குரு , எம்.ஜி.ஆர். மட்டும் அன்று இல்லாமல் போயிருந்தால் கவிஞர் கண்ணதாசன் முகத்தை , அவர் மறைந்த பிறகு 1981ல்*தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்க முடியாது ., என்று மேடையிலேயே பேசினார் . அமெரிக்காவில் இறந்து போன கவிஞர் கண்ணதாசன் உடலை விமானம் மூலம்*கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்கள்
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*பேரரசர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பாகிய /ஒளிபரப்பாகும் விவரம்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
22/06/20* - புது யுகம் டிவி - இரவு 7 மணி* - குடும்ப தலைவன்*
* * * * * * * * *பாலிமர் டிவி - இரவு* 11 மணி* - நீரும் நெருப்பும்*
23/06/20* *முரசு டிவி - மதியம் 12 மணி /இரவு 7 மணி - விவசாயி*
* * * * * * * * சன் லைப் - மாலை 4 மணி* - நல்ல நேரம்*
24/06/20 - வேந்தர் டிவி - காலை 10 மணி - தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * * சன் லைப் - காலை 11* மணி - இதயக்கனி*
* * * * * * * * மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * மெகா டிவி* - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*
25/06/20 -புது யுகம் டிவி - இரவு 7 மணி - பெற்றால்தான் பிள்ளையா*
* * * * * * * மூன் டிவி* - இரவு* 7.30 மணி* - முகராசி*
* * * * * * *பாலிமர் டிவி* - இரவு 11 மணி - நீதிக்கு பின் பாசம்*
26/06/20- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -குமரிக் கோட்டம்*
* * * * * * * மெகா 24 டிவி* - காலை 8.30 மணி -தாயை காத்த தனயன்*
-
1977 ஜூன் 30 #மக்கள்திலகம் முதன் முதலாக தமிழகத்தின் 6-ஆவது முதல்வராக பதவியேற்ற நாள் இன்று..
பதவியேற்ற பின் முதன் முதலாக அலுவலகம் செல்கிறார். அங்கு அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனை கூட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை பத்து மணி, கோட், சூட் சகிதமாய் அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியாளர்கள் அலோசனை அரங்கத்துக்குள் குழுமியிருந்தனர்.
சிறிது நேரத்தில் tmx 4777 பதிவு எண் கொண்ட அவரின் பச்சை நிற அம்பாசடர் கார் விரென்று அங்கு நுழைகிறது.
காலத்தை வென்ற காவிய நாயகன் கார் கதவை திறந்து முதன் முறையாக அலுவல வாசலில் கால் பதிக்கிறார்.
காத்திருந்த காவல் உயர் அலுவலர்கள் விரைப்புடன் சல்யூட் வைக்க... அரசு உயர் அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்க..
பாதுகாவலர்கள் புடைசூழ விடுவிடு என ஆலோசனை அரங்கத்திற்குள் நுழைகிறார்.
"ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு செய்ய வேண்டிய நல்ல திட்டங்களை சொல்லுங்கள். ஆக வேண்டியதை நான் பார்த்து கொள்கிறேன்"
-என்று மாவட்ட ஆட்சியர்களிடமும், உயர் அலுவலர்களிடமும், ஆலோசனை கேட்கிறார்.
அப்பொழுது அந்த நேரத்தில், அந்த அந்த அரங்கு ஓரத்தில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த ஒரு இளைஞர், எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார்.
காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர், அந்த மனிதரை அருகில் அழைத்து, வந்த நோக்கத்தை சொல்ல சொல்கிறார்..
"எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை. தலைவா! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கி போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.
நெல்லுச்சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள், இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லு சோற்றை பார்க்க முடியுது.
இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பி கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வறுமையை பழகிக்கொண்டு, சகித்துவாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள்.
அதை மட்டும் போக்கி காட்டுங்கள். உங்கள் ஆட்சியை பொற்கால ஆட்சி என்று போற்றப்படும்." என்கிறார்.
'கூறியவன் ஒரு எளியவன்தானே' என்று நினைக்காமல், "அந்த குடிமகனின் கோரிக்கையை குறித்து கொள்ளுங்கள்" என்று அங்கிருந்த அலுவலகளிடம் ஆணையிடுகிறார்.
"கொடுமையிலும் கொடுமையான பசியை போக்க வேண்டும். உங்களுக்கு தெரியமோ? தெரியாதோ? ஆனால், எனக்கு தெரியும் பசியின் கொடுமை.
என் ஆட்சியில் 'பாலாறு தேனாறு ஓடும்' என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன்.
என் மக்கள், தினமும் அரிசி சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தை சொல்லுங்கள். அதற்கு ஆகும் செலவை சொல்லுங்கள். நிதி ஒதுக்கி தருகிறேன்.
என் மக்கள் பசி போக்க அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் எப்பாடு பட்டாவது,வாங்கி வருகிறேன்.
உங்களுக்கு அரைமணி நேரம் அவகாசம் தருகிறேன். திட்டமிட்டு சொல்லுங்கள்"
-என்று மேசை மீது கிடந்த நாளிதழை எடுத்து புரட்ட ஆரம்பிக்கிறார் புரட்சித்தலைவர்.
அரைமணி நேரத்திற்கு பிறகு 'அந்த திட்டத்திற்கு ஆகும் செலவு' என்று ஒரு தொகையை சொல்கின்றார்கள் அலுவலர்கள்.
உடனே புரட்சித்தலைவர் அவர்கள் "இரண்டு மடங்காக்கி தருகிறேன்" என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்..
ஒரு எளிய குடிமகன் வைத்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்!
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் கிராமங்களில் இதுவரை சோளக்கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசி சோறு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது............
-
30.6.1977
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற தினம் ,
************************************************** *****************************************
43 ஆண்டுகள் முன்பு இதே நாளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று சென்னை அண்ணா சாலையில் 20 லட்சம் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய வரலாற்று சிறப்பு மிக்க தினம்
1954ல் மலைக்கள்ளனில் திமுக அரசியல் கொள்கைகளை பாடல்கள் மற்றும் காட்சிகள் மூலம் மக்களுக்கு அறிமுகம் செய்தார் .1956ல் மதுரை வீரனில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய காட்சிகளை மறக்க முடியாது .
1957ல் வெளிவந்த சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எம்ஜிஆர் பெயர் உதய சூரியன் .
1958ல் வெளிவந்த நாடோடிமன்னன் - 100 சதவீத திமுகவின் லட்சிய காவியம்
1959- 1977 வரை வெளிவந்த அவருடைய எல்லா படங்களிலும் கட்சியின் சின்னம் ,கொடி
கொள்கை பாடல்கள் இடம் பெற்று இருந்தது .
1967ல் திமுக கட்சியை ஆட்சியில் அமர்த்தினார் .
1971 ல் மீண்டும் திமுக கட்சியை ஆட்சியில் அமர்த்தினார் .
1977ல் அதிமுகவின் தலைவராக தமிழக முதல்வராக பதவி ஏற்று உலக அரசியல் அரங்கில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்தார் .
கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் கொண்டாடும் இனிய திரு நாள் இன்று ...........
-
#நிழலும் #நிஜமும்
#வாத்தியார்
தனது வெற்றிக்குக் காரணமான பிம்பங்களைத் தானே உருவாக்கினார். பிறகு அவற்றுக்கு இசைவான, அவற்றை நிஜம் என நம்ப வைக்கும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். #சிக்கலான, #சவாலான #காரியம் #இது. #அதை #நிறைவேற்றுவதற்கு #அவர் #படாதபாடுபட #வேண்டியிருந்தது. தனது நாற்தாண்டுகாலப் பொது வாழ்வில் சில அவமானங்களைக்கூடச் சந்திக்க வேண்டியிருந்தது, கேலிக்கிடமான சமரசங்களுக்குட்பட வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பல நம்ப முடியாத வெற்றிகளைக் குவிப்பதற்கு ஈடுஇணையற்ற அந்தத் திரைப்பட நாயகனால் முடிந்தது.
உலகில் எம்ஜிஆரைப் போல ஈடுஇணையற்ற வெற்றிகளையும், மக்களின் இதயசிம்மாசனங்களில் நிரந்தமாக அமர்ந்திருப்பதையும் இதுவரை யாரும் பெற்றதுமில்லை. இனி பெறப்போவதுமில்லை. இது சத்தியம் ...
நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என சவுக்கைச் சுழற்றிக்கொண்டு அவர் பாடி வருவது ஒரு திரைப்படக் காட்சி மட்டுமேதான்.
#ஏழைப்பங்காளனாக #மக்கள் #மனதில் #நிரந்தரமாகப் #பதிந்தேவிட்டார்.
நம்ப முடியாத அளவுக்கு வசீகரமான அந்த பிம்பங்கள் உருவாக்கப்பட்ட விதம் முக்கியமானது. அவரது நடிப்பில் உருவான நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கும், பாடல்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு.
பொதுக்கூட்டங்களில் பங்கேற்க காரிலிருந்து இறங்கித் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் கடந்து அவர் நடந்து வரும்போது
"காலத்தை வென்றவன் நீ,
காவியமானவன் நீ,
வேதனை தீர்ப்பவன்,
விழிகளில் நிறைந்தவன்,
வெற்றித் திருமகன் நீ நீ"
என முழங்கும் இசைத்தட்டுக்கு அவரை, அவரது பிம்பங்களை உருவாக்கியதில் என்ன பங்கு? இசைத்தட்டை ஒலிக்கவிடும் தருணமேகூட மிகத் துல்லியமாய் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது போல் தோன்றும். காரிலிருந்து இறங்கி அவர் தன் பாதங்களைத் தரையில் ஊன்றி நடக்கத் தொடங்கும்போது,
"நடந்தால் அதிரும் ராஜநடை,
நாற்புறம் தொடரும் உனது படை"
என்னும் வரிகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும். பாதுகாவலர்களும் அமைச்சர்களும் தொண்டர்களும் நிஜமாகவே நாற்புறமும் அவரைத் தொடர்வார்கள்.
#தனது #கதாபாத்திரங்களின் #அத்துணை #தன்மைகளையும் #தன் #நிஜவாழ்விலும் #சிறிதும் #பிசகாது #கடைபிடித்ததால் #இன்றும் #இறைவனாக #வணங்கப்படுகிறார்.
-
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
27/06/20 -சன் லைப் - காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * * மெகா டிவி* - மதியம் 12 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * *மீனாட்சி டிவி - மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * * வெளிச்சம் டிவி - பிற்பகல் 2 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * *ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -இரவு 7.30 மணி -அடிமைப்பெண்*
* * * * * * பூட்டோ டிவி - இரவு 7.30 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * *ஷாலினி டிவி - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*
* * * * * மெகா 24 டிவி - இரவு 9 மணி* - நீதிக்கு பின் பாசம்*
28/06/20-பூட்டோ டிவி - பிற்பகல் 2 மணி* - நம் நாடு*
* * * * * * *- மெகா 24* டிவி - பிற்பகல் 2.30 மணி - முகராசி*
* * * * * * * *முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - கொடுத்து வைத்தவள்*
29/06/20 -சன்* லைப் - காலை 11 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * * புது யுகம் டிவி - இரவு 7 மணி - நீதிக்கு தலைவணங்கு*
30/06/20* -ஜெயா மூவிஸ் -காலை 7 மணி - விக்கிரமாதித்தன்*
* * * * * * * *மூன் டிவி* - பிற்பகல் 12.30 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * * சன் லைப்* - மாலை 4 மணி* - எங்கள் தங்கம்*
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரி.,ன் சத்துணவு தொடங்கப்பட்ட பொன்நாள இன்று ...01-07-1982...
ஐக்கிய நாடுகள் சபை பாராட்டிய ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர் .,
சீருடையுடன் ஆண்டான் அடிமை செருப்பை கையில் துக்கி நடத்த வீதிகளில் செருப்பு அணிந்து வீரநடை போட்டு குழந்தைகள் பள்ளி சென்று பசி ஆற உண்டு நல்ல பாடம் படித்து வாழ்வு பெற்ற நாள் இன்று...
எம்ஜிஆர் தமிழகத்திற்க்கு உலகதர அண்ணா பல்கலை கழகம் முதல் எட்டு அரசு பல்கலை கழகம் தந்து தமிழகத்ததை இந்தியாவிலே முதல் மாநிலமாக மாற்றினார்...
தமிழகத்தின் கல்வி ஆண்கடவுள் எம்ஜிஆர்
எம்ஜிஆர் புகழ் வளர்க...வாழ்க ...
-
காட்சிக்கு எளியவனாய் இருந்து இன்சொல்லால் இனிமையாகப் பேசுவது :
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைவிட எளிமையான ஒரு மனிதரைப் பார்க்க இயலுமா ? திரைப்படத்துறையில் முடிசூடா மன்னன். அரசியலில் முடிசூடிய முதல்வர். ஆனாலும் காட்சிக்கு எளியவர். மிகவும் ஆடம்பரமான உடைகளை படப்பிடிப்புகளில் மட்டுமே அணியும் அவர், விரும்புவது வெள்ளை நிற வேட்டிகளும், வெள்ளை நிற முழுக்கை சட்டை களையும் தான் 120ம் எண்ணுள்ள அந்த வேட்டியை மல்லிகை பூ வேட்டி என்பார்கள். இடுப்பில் இருப்பதே தெரியாமல் பூ போன்று இருக்குமாம். இந்த ரக வேட்டிகள் ஸ்பெஷலாக 48 குஞ்சம் வைத்து நெய்திருப்பார்கள்.
அவரைப் பார்த்து அந்த நாளில் அரசியல்வாதிகள் பலர் இந்த வேட்டிகளை அணிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த ரக வேட்டிகள் கடைகளில் கிடைப்பதில்லை. 120ம் நம்பர் மல்லிகை பூ வேட்டி புரட்சித் தலைவரோடு மறைந்து போய்விட்டது என்று சொல்கிறார்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானாலும் எளிமையாக சந்தித்துப் பேசலாம். சென்னையில் அவர் இருக்கும்போது காலையில் ராமாவரம் தோட்டத்தில் அடையா நெடுங்கதவு தாண்டி பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் நின்றால் போதும். திருக்கோயிலின் தலை வாசல் தாண்டி வெள்ளை உடையில் ரோஜா வண்ண தேவனாய் எதிரில் காட்சி கொடுப்பார். அவரிடம் குறைகளைச் சொல்லி முறையிடலாம்.
தேவைகளை அழுது கேட்கலாம். வேண்டியவர் - வேண்டாதவர் ஏழை, பணக்காரர், படித்தவர் ,படிக்காதவர் என்னும் பேதம் பார்க்காத மனம் அது . தெய்வம் எப்படி தனக்கு பத்து பைசா கற்பூரம் கொளுத்தும் பக்தனையும் 10 லட்சம் செலவு செய்து தங்க கிரீடமும் கவசமும் அணிவிக்கும் பக்தனை யும் ஒன்றாய் நினைத்து பக்திக்கு ஏற்ப அருளுகிறதோ அதைப்போலவே தன்னை நாடி வருபவர்களின் தேவையறிந்து வாரிக் கொடுக்கும் வள்ளல் அவர். காட்சிக்கு எளியவர் எம்ஜிஆர் என்பதை உலகமே அறியும்.
இன்சொல்லைத் தவிர வேறு பேசி அறியாதவர் புரட்சித் தலைவர். நிஜவாழ்வில் மட்டுமல்ல திரைப்படத்தில் கூட கடுஞ்சொல் சொல்லி யாரும் கேட்டிருக்க முடியாது. கடுஞ்சொல் பேசியிருந்தால் இத்தனை கோடி மக்களை அவர் மீது அன்பாய் இருக்க கட்டிப்போட்டு இருக்க முடியாது. எப்போதும் சிரித்த முகமும் அன்பான இன்சொல்லுமே அவருடைய அடையாளம் என்று சொல்லலாம். அரசியல் ரீதியாக அவரை குற்றம் குறை சொல்லி எதிர்ப்பவர்கள் கூட அவரை அன்பு மனதை மலர்ந்து சிரிக்கும் ரோஜா பூ முகத்தை ... இனிமையே நிறைந்த பேச்சை குற்றம் சொல்லவே மாட்டார்கள்.
மேடையில் அவர் என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே என்று ஒரே ஒரு சொல் சொன்ன மாத்திரத்தில் மக்கள் தரும் கையொலியும் விசில் சத்தமும் நிற்க குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆகும் . துப்பாக்கியால் சுடப்பட்டு பழைய கம்பீரக் குரலை அவர் இழந்த போதும் மக்கள் அவருடைய புது குரலையும் ரசித்தார்கள். ஏனென்றால் சத்தம் மாறினாலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இன்சொல் மாறவில்லையே. அவரது பாசத்தின் வெளிப்பாடு தடங்கலாகவில்லையே... அவருடைய ஆதரவு எப்போதும் தடைபடவில்லையே ... அந்தக் குரல் மாற்றத்திற்குக் பிறகுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தங்கத் தமிழ்நாட்டின் முதல்வரானார். மக்கள் அவரை தெய்வத்துக்கு இணையாக கொண்டாடினார்கள் ஏனென்றால் அவருடைய இன்சொல்லும் காட்சிக்கு எளியவராக இருந்து அவர் செயல்பட்டதும்தான் .
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று அவர் திரும்பியபோது பேசமுடியாத நிலையிலும் பொதுக்கூட்டத்திற்கு சென்றார். மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் பேச முயற்சித்தவரை மக்களே தடுத்த நிகழ்வுகள் உண்டு . #உங்களைப் #பார்த்ததே #போதும் #தலைவா ... நீங்கள் பேசவேண்டாம் என்று மக்கள் கூறியதெல்லாம் வரலாறு.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் மக்களுக்கு எந்தவிதமான பயமோ தள்ளி நிற்க வேண்டும் என்னும் தயக்கமோ கிடையாது. ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய மகன், அவர்களுடன் பிறந்த அண்ணன் , நன்மை மட்டுமே செய்யும் தெய்வம் , அறிவு போதித்த வாத்தியார் , வீரம் தந்த தந்தை , உணவிட்ட அன்னை ...
எப்படி ஒரு நாட்டின் மன்னன் தன் குடிமக்களுக்கு எல்லாமுமாக இருந்தானோ. அதைப்போலவே மக்கள் தலைவர். எம்.ஜி.ஆரும் தமிழக மக்களுக்கு எல்லாமுமாகவே இருந்தார்.
கொடை வள்ளல் எம்ஜி.ஆர் புகழ் வாழ்க...
-
திரைப்பட வரலாற்றில் ஒரு சில நிகழ்வுகள் அதிசயமாக நிகழ்கின்றன. உதாரணம்
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’
சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.
’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’
ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட
‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம்.
ராமண்ணாவின் r.r.பிக்சர்ஸ்நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் பறக்கும் பாவை.
சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக்ஷாக்காரன்’.
தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’.
பெரும் பட நிறுவனமான ஜெமினி தயாரித்த முதல் வண்ணப் படமும்
'ஒளி விளக்கு '
இதில் என்ன ஒரு விசேஷம் எனில், எல்லா படங்களிலும் கதாநாயகன் #மக்கள் #திலகம் #எம்ஜிஆர்.
இதில் எம் ஜி ஆர் அவர்களின் முதல் படத்தின் கதையை எழுதியவர் s. S.வாசன் . வாசன் அவர்களின் படத்தயாரிப்பு நிறுவனமான ஜெமினியின் 100வது படம் ஒளி விளக்கு.
மது, புகைப்பழக்கம் இல்லாத புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் இந்தப் படத்தில் மதுவின் தீமையை உணர்த்த ஒரு பாடலில் மது அருந்தியது போல நடித்திருப்பார்.
இந்த பட குழுவுடன் நடந்த கலந்துரையாடலில் எம்ஜிஆர்
"ஒரு குடிகாரனாக நான் எப்படி நடிப்பது? மக்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் "
என்று மறுத்து விட்டார். ஆனால் கதைப்படி (இது தர்மேந்திரா நடித்த ஒரு ஹிந்தி பட தழுவல், ) மாற்ற முடியாத சூழ்நிலை. அப்போது வாலி சொன்ன யோசனை தான் இந்த பாடலுக்கு திருப்புமுனை.
குடிப்பது போன்ற எம்ஜிஆரை பார்த்து இன்னும் நான்கு எம்ஜிஆர்கள் வந்து புத்திமதி சொல்வது போல படம் எடுத்தால் ஒத்துக்கொள்வார்கள் என்று
" இது சாத்தியமா? "
என்று எம்ஜிஆர் கேட்க அந்த காலத்தில் வந்த ஆர்யமாலா படத்தில் பி.யூ. சின்னப்பா ஐந்து இசை கலைஞர்களாக ஒரே காட்சியில் வருவதை சுட்டி காட்டி அதை எடிட்டிங் செய்த அதே டெக்னீஷியனை வர வழைத்து அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள் என்று வாலி ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி உள்ளார்.
ஐந்து தோற்றங்களில் அவர் தோன்றிய இந்தப் பாடல் டெக்னாலஜி வளராத
1968 களில் மிக நேர்த்தியாக படமாக்கப்பட்டிருந்தது. .இந்த பாடல் காட்சியில் காலை முதல் இரவு வரை சிரமப்பட்டு நடித்த எம் ஜி ஆர் களைப்பாக இருந்ததால்,
"ரஷ் பார்த்து சொல்லுங்கள், குறை இருந்தால் வந்து நடித்து கொடுக்கிறேன்"
என்று சொல்லி வீடு திரும்பி விட்டாராம்.
இரவு ரஷ் பார்ந்த படக்குழுவினர் காட்சி நன்றாக வந்துள்ளதாக எம் ஜி ஆர் வீட்டுக்கு போன் செய்து சொன்ன போது, அங்கேயே வீட்டுக்கு செல்லாமல் பின் வரிசையில் அமர்ந்திருந்தாராம் எம் ஜி ஆர்.
அவ்வளவு ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்திருந்தார் எம் ஜி ஆர். இப்படத்தில் தான் நடிகர் வி.எஸ்.ராகவன் எம் ஜி ஆருடன் முதன் முதல் இணைந்து நடித்திருந்தார்.
ஒளி விளக்கு படத்திலிருந்து டி.எம்.செளந்திரராஜன் குரலில், விஸ்வநாதன் இசை அமைக்க பாடலை எழுதியவர் வாலி.
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா
இல்லை, நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்.
மனமும் நல்ல குணமும் உன் நினைவை விட்டு விலகும்...........
-
#எங்க #வீட்டுப்பிள்ளை...
நாம் போற்றுபவர்களை, வேறு யாராவது புகழ்ந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்...!!!
அந்த மகிழ்ச்சியே மிக அலாதியானது...சரிதானே!
அதிலும் நம்ம வாத்தியாரை மற்றவர்கள் புகழ்ந்தால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையேது!!!
இந்தக் காட்சியைப் பாருங்கள்.
பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் ... பூதமானது நியூஸ்பேப்பரில் நாகேஷ் & ஜெய்சங்கருக்கு திருவிளையாடல் படத்தைக் காண்பிக்கும்.
பிறகு நாகேஷ், 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தைக் காண்பிக்க சொல்வார்.
அதில் 'நான் ஆணையிட்டால்' பாடல் ஓடிக்கொண்டிருக்கும். அதைப் பார்க்கும் போது அந்த மூவரின் 'Expressions' ரொம்ப பிரமாதமாயிருக்கும். அதில் நாகேஷோட ரியாக்ஷன் சூப்பராயிருக்கும்.
அந்த பூதம் கடைசியாகக் கேட்கும்.....
"இவ்வளவு வீரமா நடிக்கிறாரே! யாரிவர்?"
அதற்கு நாகேஷ்,
'இவர் தான் மக்கள்திலகம் எம்ஜிஆர்' னு ரொம்ப சந்தோஷமா சொல்வார்.
இந்த ஒரு சீனுக்காகவே இந்தப் படத்தை மிகவும் பிடிக்கும்....
-
#அறிவுடைமை :
அறிவென்பது ஏட்டுக் கல்விக்கு அப்பாற்பட்டது. உலக வாழ்வியலின் வெளிப்பாடு என்று போற்றப்படுவது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அறிவுடைமை எல்லோராலும் பாராட்டப்பட்ட விஷயம். அறிவுடைமை என்பதே சமயோஜிதம் என்பதுதான். புரட்சித்தலைவரின் சமயோஜிதம் மிகவும் பிரசித்தமானது. இல்லையென்றால் அவரால் கலைத்துறை , அரசியல் , பொது வாழ்வு என்ற மூன்றிலும் சரியான முறையில் "பேலன்ஸ் " செய்திருக்க முடியாது.
கலைத்துறையில் பல இடங்களில் பல நேரங்களில் அவருடைய அறிவுடைமை அதாவது சமயோஜித புத்தி வெளிப்பட்டு எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கியது. எங்க வீட்டு பிள்ளை திரைக்காவியத்தின் வெள்ளி விழா தமிழ் நாடெங்கும் நடைபெற்றது. அப்போது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தன்னோடு நடித்த நடிக நடிகை மற்றும் பலருடன் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். திரைப்படத் திரையரங்குகளில் மக்கள் முன்னால் தோன்றினார். ஊரெல்லாம் திருவிழாக்கோலம் தான் குதூகலம். ரசிகர்களின் கும்மாளம்தான். அப்போது ஒரு மேடையில் நடிகர்கள் பேசி முடித்ததும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் பேசினார். மைக் செட் ஏற்பாடு செய்திருந்தவர் இன்னொரு மைக்கையும் அவரருகில் வைத்தார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேச ஆரம்பித்தபோது நம்பியார் குறிப்பிட்டு, எங்களுக்கெல்லாம் ஒருமைக் உனக்கு மட்டும் ரெண்டா ? என்று கேட்டார் . உடனே ஒரு வினாடி கூட தாமதிக்காமல் எம்ஜிஆர் சொன்னார், படத்தில் நான் ரெட்டை வேடம் போட்டு இருக்கேன் இல்லே ? அதான் ரெண்டு மைக்.
அதைக்கேட்டு நம்பியார் மட்டுமில்லை. அவையோரும் வியந்து போனார்கள். அடுத்த கணம் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் திரை உலக பேரதிசயங்கள் சொல்லிமாளாது.
அவரது அரசியல் சமயோஜிதம் பல பிரச்சனைகளைத் தீர்த்து விண் கலவரங்கள் நடக்காமல் தடுத்திருக்கிறது. துணிவுடன் அவர் எடுத்த முடிவுகள் அவருடைய அறிவுடமையை வெளிக்காட்டும். அவர் முதல்வராக இருந்தபோது ' மதுரை பல்கலைக்கழகம் ' என்ற பெயரை மாற்றிவிட்டு ' காமராஜர் பல்கலைக்கழகம் ' என்று பெயர் வைக்க வேண்டும். தாங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் போராட்டம் நடக்கும் என்று ஒரு கூட்டம் சொன்னது. அவர்களுக்கு எதிராக மற்றொரு கூட்டம் பெயரை ' மதுரை பல்கலைக்கழகம் ' என்றே இருக்கவேண்டும் மாற்றினால் போராட்டம் தான் என்று பயம் காட்டியது.
பெயரை மாற்றினாலும் எதிர்ப்பு அதே பெயரை வைத்தாலும் எதிர்ப்பு. எம்.ஜி.ஆரிடமா அவர்களின் போராட்ட பயம் காட்டல்கள் எடுபடும் ? உடனே " மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் " என்று பெயரை அறிவித்தார் அதன்பிறகு எந்த சத்தமும் அங்கே இல்லை. அவருடைய ராஜதந்திர நடவடிக்கையை நாட்டு மக்களும் நடுநிலையாளர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.
தான் முதல்வராக பதவியேற்றபோது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு அற்புதமான அறிவுடமை காரியத்தை செய்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் பதவியேற்க மாடமாளிகைகளும், பெரிய இடங்களும் தயாராக இருந்தன. ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ தன் பதவியேற்பு வைபவம் மக்கள் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவின் சிலை அருகில் நடைபெற தான் விரும்புவதாகவும் மக்களை அங்கே வரும்படியும் அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதுவரை முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்வுகளை செய்தித்தாள்களில் புகைப்படங்களில் மட்டும் பார்த்திருந்த மக்கள் அதை நேரிலேயே கண்ணெதிரில் கண்டு களித்தார்கள். இந்த சமயோஜிதம் எந்த முதல்வருக்கும் வந்ததில்லை. 1977 - ம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி பதவியேற்பு நடைபெற்றது. புரட்சித் தலைவருக்கு மக்களே குடும்பம் என்பது இதன் மூலம் தெளிவாக புரிந்தது.
பொது வாழ்வில் அவர் சந்தித்த பல இக்கட்டான நேரங்களில் அவருடைய அறிவுடமையால் வென்றிருக்கிறார். தேர்தல் காலங்களில் அவர் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்காக வெகு தூரம் பயணப்பட வேண்டியிருக்கும். பலதரப்பட்ட மக்களை சந்திக்க நேரும். அப்போதெல்லாம் திமுகவில் எம்ஜிஆர் தான் பிரச்சாரத்திற்கு அதிகம் போவார். தன்னுடைய தொழிலையும் மறந்து கட்சிப் பணிக்காக அவர் ஓடோடியும் செல்வார். அந்த நேரங்களில் அவரை கொலை செய்யவும் அயோக்கியர்கள் கூட்டம் ஒன்று சுற்றி வரும். புரட்சித் தலைவரை சுற்றி பாதுகாப்புக்காக உதவியாளர்கள் இருந்தாலும் அவர் மிகவும் கண்காணிப்பாக இருப்பார். அவருக்கு மாலைகள் அணிவிக்க வருபவர்களை அவர் கவனிப்பது வழக்கம். தன்னுடைய ரசிகர்களையும் பொதுமக்களையும் சுலபமாக அடையாளம் கண்டு கொள்வார். தொல்லைத் கொடுக்க வருபவர்களை மாலை போட அவர் அனுமதிக்க மாட்டார். ஏனென்றால் அந்த மாலைகளில் பூக்களுக்கு நடுவே கூரான புதுபிளேடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். அதை கழுத்தில் போட்டால் ஒரே வினாடியில் பிளேடுகள் உடலை காயமாக்கிவிடும். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை இனம் கண்டு தள்ளிவிட்டு விடுவார். அதைப்போலவே நடக்கும் பாதையில் கண்ணாடித் துண்டுகள் முட்கள் என்று போட்டு வைத்திருப்பார்கள். காலில் அவர் போட்டிருக்கும் ' கட் ஷூ ' அவற்றிலிருந்து அவரைக் காக்கும்.
பொது வாழ்வில் அவருடைய மனத்தூய்மையை பலப்பல நல்லவர்களை இழுத்தது. இன்றும்கூட மாற்றுக் கட்சியினர் கூட புரட்சித் தலைவரைப் பற்றி குற்றமாக எதையும் சொல்ல முடிவதில்லை பொது இடங்களில் சுலபமாக மக்கள் கூட்டத்தில் போகும் மன உறுதியும் அதற்கான கண்காணிப்பு கவனிப்பும் நிறைய இருந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான். அதையும் அறிவுடைமையோடு செய்தவரும் அவர்தான்.
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...