நமைக்கடித்தால் தான்சாகும் என்ப எனைக்கடித்து
யாதொன்றும் செத்ததோ இல்!
முன்னிலும் தெம்பாய்ப் பறக்கிறதே அக்கொசுவை
எங்ஙனம் செத்ததென் பேன்.
அறிவியலார் சொற்கு மறுப்பிலேன் ஆயின்
புரியாப் புதிரிதுவே தான்.
Printable View
கொசு முடிஞ்சுது..சரி..பறக்குது..
அப்புறம் அடுத்தது என்ன.. எருமைக்கும் ஒரு சிந்து எதிர்பார்க்கலாமா..
பொறுமைக் கெருமை! பொய்யாமோ என்சொல்?
அருமையில் அஃதொப்ப தில்.
கண்டாலும் தன்வழியே போமெருமை தன்னாலே
உண்டாமோ யாதும் இடர்?
பாரூட்டும் பால்தந்து நல்லெருமை! அவ்விலங்கால்
சீர்பெற்றார் செந்தமிழர் காண்!
கடித்த கொசுவையும் கண்டுகொள்ளா உள்ளத்து
எடுத்த தெருமை விருது.
செயற்பால தவ்வெருமை போற்றல் ஒருவற்
குயற்பால தோரும் கொசு.
Your expectations come true....! Enjoy it...
எருமைக் கருமையாய் ஈந்தவும் பாக்கள்
தருமே மகிழ்ச்சியைத் தான்..
பொறுமையாய்க் காத்திருக்கப் பால்போல வந்த
எருமைக் கவிதை இனிது..
அசைபோடும் அங்கிங்கே நின்றிருக்கும் ஆனால்
வசைபாட்த் தெரியாத வாயில்லா ஜீவனது
கண்ணுக்குள் கொஞ்சம் கனமாய் அமைதியையும்
திண்ணமாய்க் காட்டிடு தே
கொடுத்தீர் கொசுபற்றிக் கொள்ளாமல் இங்கே
தொடுத்தீர் எருமைக்கும் தான்..
பாருங்க நான் தான் என் க்தையை எழுதாம அல்வா கொடுத்துக்கிட்டுருக்கேன்.. நீங்க் சர்க்கரையா எழுதறீங்க..
எனவே..அடுத்து சர்க்கரைப் பொங்கல் பற்றி எழுதுக..!
நீங்கள் சர்க்கரைப் பொங்கல் கேட்ட நாள்முதலாக, சரியான வேலையாய்ப் போய்விட்டது....பொங்கல்
பா ( எதுவும் தயார்செய்ய முடியவில்லை. அலுவலகக் கணிணியும் "படுத்துக்கொண்டது". (Said to be VGA card problem....monitor goes blank after a while..)
என்றபோதிலும், இதோ சில குறட்பாக்கள். இன்னும் சிலவற்றைப் பின்பு இடுகை செய்வேன்....கைவசம் இல்லை.
=============================================
நாடோறும் சர்க்கரைப் பொங்கலை நாடுவது
நம்கோயிற் சாமிகளே ஆம். (1)
ஆண்டொருநாள் பொங்கல் நமக்கு; ஆண்டவர்க்கு
ஈண்டுதினம் வேண்டும் அது. (2)
பேருக்குச் சாமிக்குப் பொங்கலாம்; ஊருக்குள்
உண்பவர் நாமெல்லாம் தாம். (3)
சார்த்திய ஆவின்பால் சர்க்கரை பச்சரிசி
யார்க்கவை பொங்காப் பொருள் ?(4)
வெண்பருப்பு முந்திரி உள்பொதிந்து தன்சுவையை
முன்னிறுத்தும் இன்பொங்கல் சோறு. (5)
சிறுதுண்டு வாழைஇலை போதும்; பழுதின்றிச்
சர்க்கரைப் பொங்கல் உண. (6)
இனிப்புணவு நீங்குபவர் ஆயினும் நீங்கார்
தனிச்சுவைச் சர்க்கரைச் சோறு. (7)
பால்நெய் சர்க்கரை பல்சுவைச் சேர்க்கையால்
பானையள வுண்டல் அவா. (8)
எனைத்தினி தாயினும் எள்ளுக இன்னீர்
நனைத்தியலாப் பொங்கல் உணா. (9)
பசிக்குணவு வேண்டுவார் வேண்டல் புசிக்கவே
சர்க்கரைப் பொங்கல் தர. (10)
ஆவிற்கு நீரெனினும் சர்க்கரைப் பொங்கல்
நாவிற்கு இரத்தலே நேர். (11)
நிறப்பொடி தூவினும் சர்க்கரைப் பொங்கல்
மறப்பதாற் றாமை தலை. (12)
சர்க்கரைப் பொங்கல் அலாதன சார்வார்
எக்கரை சேர்ந்துதேர் வார்? (13)
பொங்கலை உண்பார் `சுவையறிவார் மற்றெல்லாம்
உண்கலை உய்விலா தார். (14)
You may scan the above and find which of them do(es) not fall into venpaa category.
Happy sarkaraip ponggal reading..
படபடவெனப் பொங்கல் படங்காட்டி நெஞ்சை
தட்தடக்கச் செய்தாரே தான்..
பொங்கிய பொங்கற் சுவையறிந்து நெஞ்சில்
தங்குமே அந்தச் சுவை..
தூக்கம் வரவழைக்கும் தேன்பொங்கல் ஆனாலும்
ஊக்கமாய் ஆன உளம்..
பாட்டொன்று கேட்டால் படபட த்தே வாழையில்
போட்டீரே பொங்கலைத் தான்..
பெய்யெனப் பெய்த மழையாக இவ்விடத்தில்
நெய்ப்பொங்கல் தந்தநீர் வாழ்..
சர்க்கரைப் பொங்கலைச் சார்ந்த சுவையெனச்
சொற்களும் பேசிய தே..
வர்றேன் வெண்பாப் பக்கம்..இன்னும் கணினி சரியாகவில்லை..அலுவலகத்தில் பகலுணவு.. வீட்டுக்காரி எனக்குப் பிடிக்காத காய்கறிப் புலவு கொடுத்து அனுப்பியிருக்கிறாள்..தயிர்சாதமாவது கொடுத்திருக்கலாம்..ம்ம் என்ன செய்ய..
புலமிக் கவர்க்குப் பசிக்கும் பொழுதில்
புலவுச் சோறதும் பொன்னாம் – நலமிக்க
நங்கையே கேளாய் தயிர்சாதம் நண்பகலில்
தங்குமே ஜாண்வயிற்றில் தான்....
என்று சொல்ல்லாமென்றிருக்கிறேன்
எனில் வெஜிடபிள் புலவ் அல்லது பிரியாணி பற்றி பாக்கள் சமயம் கிடைக்கும்பொழுதில் எழுதுவீர்களாக..
அருமையாய் போகுது இந்த திரி ... வாழ்த்துக்கள் ....
நேயர் விருப்பங்களும் பலே...
உங்கள் பாக்கள் தான் எனக்கு அளவுகோல் நான் எவ்வளவு கேவலமாக கிறுக்குகிறேன் என்பதற்கு.....
1. பொய்ப்புலால் உண்ணல் எதனால்? உடல்நல
வைப்புக்கோர் வித்தாம் நினைப்பு.
2.சோயாவில் சாறுபிற ஊற்றிப் புலால்போலும்
வாயாரத் தந்தார் வகை.
(Ar = to obtain.
ஆர் > ஆர (வாயார): பெற. சாறுபிற ஊற்றி : a reference to chemicals added.)
3. சாறுகளால் சாய்தலும் உண்டோ துயர்? மூளை
வீறுடையார் வேண்டும் வினா.
4. சாறூற்றிச் சட்டென்று செய்தவை உம்முடற்கு
ஊறேற்றும் என்பரே காண்..
(ஊறு ஏற்றும் = கெடுதல் செய்யும்.)
5.பேச்சாறு எனவே விலக்குக; தீச்சாறு
தூச்சாவு உறுத்தாத் துயர்.
(பே = அச்சம்; சாறு= ரசாயனப்பொருள்; தீச்சாறு = தீமை செய்யும் ரசாயனம்; தூச்சாவு , நல்ல சாவு. புற்றுநோய் முதலியவற்றால் இறவாமை.
பேச்சாறு என்பதைப் பேச்சு + ஆறு என்று எடுத்துக்கொண்டால், வேறு பொருள்படும்.)
6.மீனும் புலவும் விடுதல் ஆற்றார்பொய்
யூனை எடுத்துக் கொளல்.
7. பொய்யூன் உணவை விரும்பின் ஒருசிகையே
மெய்யள வென்று கொளல்.
8. கடிக்க, கொறிக்க, மெதுவசைப்பு தேன்குழைப்பு
பல்சுவையிற் சீனர்பொய் யூன்.
9. மரக்கறி உண்சீனர் பொய்யூன் உணவால்
சிறப்புடற் சீர்பலவும் சேர்.
10, பொரித்தும் குழம்பிட்டும் பொய்யூன் சுவைகாண்பார்
செரித்தது போற்றுதல் சீர்.
Thanks. Hope the above, you will find interesting.
கிறுக்கரே..வாங்க வாங்க..ஏதோ நானும் தான்கிறுக்கறேனாக்கும்.. பாருங்க பொய்யூன் கொடுத்திருக்காங்க..(புலவின் தமிழ்வார்த்தையா?)
*
பொய்யூன் கொடுத்த புலவியே நாங்களதை
மெய்யுள் செலுத்துவோ மே..
ஒருகவளம் தாவென்றால் ஒன்பதைத் தந்தே
சிறுவயிற்றை சோபித்தீர் தான்..
மாறும் சுவைக்கு மணமுடன் சேர்த்திட்ட
சாறுதான் சோயாவா சொல்..
(சோயா சாஸ் லாம் இல்லாமத் தான் என் மனைவி செய்திருந்தார்!)
மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
ஊன்இல்லாச் சோற்றை உணர்வுடன் கொடுத்தவும்
தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
பூந்தென்றல் தீண்டிய பூ
பானை வயிற்றுடனே பாந்தநடை கொண்டுவரும்
யானைக்கும் பாக்களைத் தா(ரும்)
வெண்பா வேண்டாம்..விருத்தமாய்த் தருக..
**
ரொம்ப நாளைக்கு முன்னால் எழுதிப் பார்த்தது..
*
மழைமுன்வரும் சிறுகாற்றென மகிழ்விக்குமுன் வதனம்
அலையால்வரும் சலனங்களில் அசைந்தாடிடும் கடலில்
வலைவீசிடும் வலைஞர்வலை விழும்மீனென திகைத்தென்
நிலைமாறிடச் செயினும்பல நெடுநாளுளம் இருக்கும்..
கனவில்நிதம் கனிவாய்முகம் களிகாட்டியே சிரித்தே
நனவில்பல தினமும்விதம் விதமாய்க்கதை படிக்கும்
ரணமானசொல் ரதியானவுன் ஒருபார்வையில் கரைந்தே
கணமும்மறைந் திடவேமனம் எளிதாகியே விடுமே
தனியாயெனைத் தயங்காமலே தளர்வாக்குதல் முறையோ
பணிவாயெனைப் பருவத்திலே அணைபோட்டிட வருவாய்
இனிமையினி யெனவேநினைத் திதயம்மகிழ்ந் திடவும்
பனிபோலவே மனமாறிட எனைச்சேர்ந்திடு அழகே..
உணர்வுடன் - தளை தட்டி விட்டது..உணர்ந்து என மாற்றி..
மீன்விழியைக் கண்டு மிகமகிழ்வு கொண்டதுபோல்
ஊன்இல்லாச் சோற்றை உணர்ந்து கொடுத்தவும்
தீந்தமிழைக் கண்டுமனம் தீர்க்கமாய்க் கொண்டகளி
பூந்தென்றல் தீண்டிய பூ
முன்பு எழுதிய ஒரு விருத்தக்கதை..பலவருடங்க்ளுக்கு முன்னால்.. எழுதிப்பார்த்தது..
திண்ணையிலும் பிரசுரமானது..
**
’வெளி’யில் இருக்கும் கடவுளர்க்கு
...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு
வெளியில் வந்து நின்றாலே
...வருவோர் போவோர் தெரிவதுண்டு
உளியால் வரைந்த ஓவியங்கள்
...ஒன்றா இரண்டா பலவுண்டு
நளினங் கொண்ட நல்லவர்கள்
...நன்றாய் அதனை நடத்திவந்தார்
இடையில் இருக்கும் குழவிமுதல்
...இனிதாய்ச் சிரிக்கும் நங்கையரும்
கடைசிக் காலம் தனையெண்ணி
...கசிந்தே உருகும் கிழவியரும்
விடையைக் கேட்கும் சிறுவனென
...விடையைத் தேடும் கிழவ்ருமாய்
நடையைத் திறந்தால் தெரிந்திடுமே
...நன்றாய் ஏதோ புரிந்திடுமே..
வாசலதைத் திறந்துவிட்டால் வழியி லெல்லாம்
... வாசமலர் நறுமணங்கள் மனதை யள்ளும்
காசதனைக் காண்பதற்கு இரண்டு பூக்கள்
...கரங்களிலே தொடுத்திடுமே உயிராய்ப் பூக்கள்
பாசமுடன் மக்களும்தான் வாங்கிச் செல்வர்
...பக்தியுடன் கோவிலினுள் வேண்டுதற்கு
நாசமென வருகின்ற தீமை எல்லாம்
...நலமுடனே விலகுதற்குப் பூவால் சொல்வர்
வளைந்த முதுகைக் கண்டுவிட்ட
…வயதின் மூப்பூ ஒன்றதனின்
இளைய பருவம் இழைத்துவிட்ட
…இளம்பூ ஒன்று அதுவோதான்
மழைபோல் சிரிக்கும் பேசாது
…மனதுள் பேசும் கேட்காது
களையாய்ப் பூவைத் தொடுத்தேதான்
…கட்டும் பூவால் பேசிவிடும்..
ஊமையாய் இருந்த பூவின் உணர்வதைத் தூண்டச்செய்ய
…ஆமையாய்ச் சொந்தமொன்றை அன்னையும் கட்டிவிட்டாள்
ஊமையை மண்ந்த மாறன் ஊரிலே உள்ள எல்லாத்
…தீமையைத் தன்னுள் கொண்டு குடியிலே மூழ்குந்தீரன்..
சக்கரம் மூன்று கொண்ட சாலையில் அழகாய் ஓடும்
…வக்கணை யான வண்டி வசத்தினில் வைத்தி ருந்தான்
திக்கெலாம் சென்றால் தானே திரவியம் கிடைக்குமன்றோ
…மக்கெனச் சோம்பி நின்று மங்கையை வாட்டி வந்தான்.
ஒரு நாள் கோவிலினுள்
கலையாமல் மேகங்கள் ஒன்று கூடி
…கண்களையும் கருத்தினையும் குளிர வைத்தே
நிலையாக நீர் நிலைகள் நிரம்பும் வண்ணம்
…நல்ல மழை வரவேண்டித் தேவர் மீது
வளையாத எண்ணத்தில் வேதியர்கள்
…வளமான யாகத்தைச் செய்யுங்காலம்
சிலைபோன்ற கல்மனதும் உருகும் வண்ணம்
…சிறப்பாக மந்திரங்கள் சொல்லி வந்தார்..
கோவிலின் வெளியே ஊமைப் பெண்ணின் கணவனோ..
இலவு காத்த கிளிபோல
…இருக்கின்றாயோ நீயடியே
செலவுக்கெனக்கோ பணம்வேண்டும்
…சொர்க்கம் தன்னைப் பார்ப்பதற்கு
களவு ஏதும் செய்தாயோ
…காசோ எங்கே எனக்கேட்டு
நிலவைத் தரையில் போட்ட்டித்தான்
…நுதலில் வண்ணம் வரவழைத்தான்
பூவதனை நசுக்கிவிட்டே திரும்பியவன் மீது
…புலம்வந்த வாகன்ந்தான் மோதிவிட்டுச் சற்றும்
பாவமென எண்ணாமல் பார்க்காமல் மேலும்
…வேகத்தைக் கூட்டிவிட்டு விரைந்தோடிச் செல்ல
ஆவென்றே அலறியந்த அணங்கவளும் ஓடி
…காலதனில் அடிபட்ட கணவனையும் நாடி
தாவித்தான் தன்சேலைத் துணிகிழித்துக் கட்டி
…தக்கபடி மருத்துவரைப் பார்ப்பதற்குச் சென்றாள்
சற்றுமுன்னே அடித்தவந்தான் என்று சற்றும்
…சங்கடமாய்ச் சிந்தனைகள் கொள்ளா மென்மை
பற்றுடனே அவனருகில் பதறிச்சென்று
…பரிவுடனே கட்டிவிட்டபாசத்தன்மை
கற்றவர்க்குக் கிடைத்திடுமோ இந்த ஞானம்
…கன்னியவள் வாய்மொழியாய்ச் சொல்லா உண்மை..
நற்றமிழில் பெண்மையதன் சிறப்பைச் சொல்ல
…நாலுபக்கம் போதாதே என்ன செய்ய..
கண்பலவாயிரம் கொண்டசெவ் வானமக் காட்சியினை
மண்ணிலே கண்டுவிட்டு நெஞ்சில் மயங்கிட மேகத்தை
விண்ணிலே கூட்டியே வேகமாய் நல்ல இடிமுழக்கப்
பண்ணை இசைத்தே மழையினைப் பாரில் பொழிவித்த்தே..
வீட்டிற் கெதிரே கோயிலுண்டு வேண்டும் தெய்வம் வெளியிலுண்டு
…நீட்டும் கரத்தை அழகாக நேசங்கொண்டே அணைப்பவளைத்
தீட்ட நினைத்தே கேட்டேன்நான் தங்கப் பெயரை மனைவியிடம்
…பாட்டில் வல்ல பாரதியால் பாவை அவளை அழைப்பாராம்..
கிறுக்கரே.. கலக்கியது சிவமாலா.. நான் சும்மா நன்றி தானே சொன்னேன்..
நீங்கள்தான் செந்தூள் கிளப்பிவிட்டீர்கள்,.உங்கள் கவிதை மிக நன்றாகவே உள்ளது.
இப்போது மலேசிய யானைகள் பற்றி.......
யானை
கோலலம் பூர்நகரின் கொஞ்சமப் பால்செல்ல
கோல இயற்கையே கொஞ்சுசர --- ணாலயத்துள்
யானைகள் பற்பல யாரும் மகிழ்வெய்தக்
காணலாம் காண்பீரே சென்று.
அண்மையில் இம்மலை நாட்டில் அமைத்ததுவாம்;
உண்மை! உயிர்களைக் காத்திடும் --- தண்மையினால்
ஆனைக் கரண்செய்தார் அம்முயற்சி நாம்புகழ்வோம்
கூன்படாக் கொள்கை இது.
ஆனைகளை நாம்காக்க ஆனைமுகன் காக்கநமை!
வான்கதிரைப் போல வளர்ந்திடுக --- மேனிலைக்கு!
பானை வயிறன் பரந்த அருட்கொடையால்
யானும்நம் பாவலரோ டிங்கு.
தனியருளைப் பொழிவாய்...
அட்டகாசம் செய்தனவாம் ஆனைக் கூட்டம்,
அதுபற்றித் தொலைக்காட்சிச் செய்தி கேட்டேன்!
ஒட்டிவனம் உள்ளசில சிற்றூர் மக்கள்
உள்ளபடி பலதுன்பம் உழன்ற காட்சி!
முட்டிபொரு பையனையும் கொன்ற தாக,
மூதாட்டி அழுவதையும் கண்டேன் அந்தோ!
தட்டிநமைக் கழிக்காமல் தண்மை பெய்து
தனியருளைப் பொழிவாய்நீ பிள்ளை யாரே!
அசைந்தாடும் யானை அழகைப்போல் இங்கே
இசைந்தாடும் பாக்கள் எழில்
கொசுத்தொல்லை பற்றியிரு வரிகளிலே
கொஞ்சுதமிழ் வரைகோலால் எழுத எண்ணி,
அசைத்திட்டேன் அதனியக்கம் துவங்கியநாள்
ஆட்சிசெய்த உடுக்களெவை பலன்கள் யாவை?
இசைத்தபொருள் யானைவரை சென்றதுவே!
இனியுங்கள் பாக்களையான் கேட்கும் நேரம்
திசைத்தரவாய் வசப்படுதல் விழைகின்றேன்
தீட்டுங்கள் குதிரைகளைப் பற்றிப் பாக்கள்.
பிடரிகளைச் சிலிர்த்திருக்கும் கால்கள்மாற்றி
...பரப்ப்பாய் நின்றிருக்கும் வேகம் கொண்டே
மிடறுகளாய் முழுங்கியுள்ள உணவும் நன்றாய்
...மிச்சமெதும் இல்லாமல் செரிக்க எண்ணி
திடமான சிந்தனைகள் கொண்டு இங்கே
...திண்ணமாக நின்றிருக்கும் மிருக மன்றோ
இடங்கொடுத்தால் இப்புவியின் திசைக ளெல்லாம்
...இச்சையுடன் சுற்றிவரும் குதிரை யன்றோ..
உளமுழுதும் போகின்ற் பாதை நோக்கி
..உணர்வுகளை ஒருங்கிணைத்து நிற்கும்போது
குளம்புகளை நன்றாகத் தரையில் தேய்த்து
..கண்க்ளிலே கொண்டுவிடும் ஊக்கம் தன்னை
புல்ம்சென்று ஏறியதும் தட்டி விட்டால்
..புரவியதும் பறந்திடுமே வழியைப் பார்த்து
களம்பலவும் கண்டமன்னர் வெற்றி எல்லாம்
..கொண்ட்துவும் குதிரைகளின் திறமை யாலே..
கற்பனைக் குதிரை என்போம் காரிய மாற்று தற்கு
விற்பனை செய்வ தற்கும் வேகமாய்க் குதிரை போல
நிற்காமல் ஓடு என்போம் நேரிழை கன்வில் வந்தால்
சிற்றிடை பற்றி ஏற்றிச் செல்வதும் புரவி யில்தான்
*
மேலமாசி வீதியில் ஒரு மிதி மிதித்து
ஆரியபவன வ்ந்த்தும் இடம்திரும்பி
நேரே சென்றால்
மேங்காட்டுப் பொட்டல்..
ஜான்சி ராணிபூங்கா எதிரில் ஒய் எம் சி ஏ..
நடுவில் குதிரைவண்டிகளின் வரிசை..
சில வண்டிகளில் குதிரைகள்
பூட்ட்ப் பட்டு
சாதுவாய்
புதிதாய் வீட்டிற்கு வந்திருக்கும்
நாட்டுப் பெண்போல தலை குனிந்து
கொஞ்சம் ஆடிய படி நின்றிருக்கும்
சில வண்டியிலிருந்து
அவிழ்த்து விடப்பட்டு
குனிந்து இரும்பு வாளியில்
வைக்கப்பட்டிருக்கும்
புல், கொள் எதையாவது
உண்டு கொண்டிருக்கும்
அருகில் சென்று தொட்டாலோ
முனிவர் போல அருட்பார்வை பார்த்து
மறுபடி குனியும்..
சிகப்பு.
மங்கிய வெள்ளை,
கறுப்பு வெள்ளை என
கலந்து கட்டிய நிறங்களில்
அழுக்காகவும்
அதைவிட அழுக்காக
வண்டிக்காரன்..
உலகத்தில் மற்ற்விஷயங்களை விட
குதிரைவண்டிக்காரனிடம் தான்
மக்கள் பேரம்செய்வர்..
எட்டணா அவனிடம் குறைத்தால்
ஏதோ இமயத்தைத் தொட்டாற்போல்
பெருமிதம் கொள்வோரும் உண்டு..
காலப் போக்கில்
கொஞ்ச்ம் கொஞ்சமாய்
அந்த குதிரை வண்டி நிலையம் மாறி
குதிரைகளும்
காணாமற் போயின..
இப்போது
அந்த இடம் கடந்தால்
கண்டிப்பாய் வரும்
குதிரை வாசனை..
**
**
ப்ஹா ப்ஹா..ப்ஹா..
மரக்கலரில் ஜீன்ஸ்
வெள்ளையாய் மேலுடை
அதே நிறத்தில் காலணிகள்
பஃபென்று கூந்தல் அலைபாய
ஓடிவ்ந்து நின்றவளைப் பார்க்கையில்
சிரிப்பு வர.,..
‘ஏய்.. உனக்காக
காலங்காத்தாலே பாக்க ஓடி வந்தா
என்ன சிரிப்பு’
‘கிட்ட்த் தட்ட குதிரை மாதிரி இருக்கே..
பிடரில அழகாய் முடி அலை மோதுது..
நெற்றிநுனியில் சின்னதாய்
ஒற்றை வரியாய் இறங்கும் வியர்வை..
என்னை இலக்கு வைத்து ஓடி வரும்
உன் எண்ணம்..’
‘யோவ் குதிரை முட்டினால்
எப்படி இருக்கும் தெரியுமா..’
சற்றே பின்சென்று
முட்டுதற்போல் வந்தவளை
இடைபற்றி அணைத்து...
‘அடியே நீ என் காதல்குதிரை’ என்றால்
முறைத்துப் பின் சிரித்தாள்.
மேலும்
‘குதிரைகளை அடக்குவது சுலபம்..
உன்னை..மிக்க் கஷ்டம் ஆ ஆ..’
குதிரை கிள்ளினால் இப்படித் தான் இருக்கும்..
திரும்பி அவள் ஓட ஆரம்பிக்க
நானும் ஆண்குதிரையாய் மாறித் தொடர்ந்தேன்...
V.G.
Please continue...
You have the requisite knowledge too, to write on horses. (I did not expect....)
சுப்புலட்சுமிக்கு எப்போதும்
சிறுவயது முதல்
குதிரைக் கனவுகள் வரும்..
எப்பொழுதும் வரும் குதிரைகள்
இவள் கண்ணசைவில் மெல்ல நிற்கும் நகரும் பறக்கும்
திரும்பிய பின் ஒவ்வொன்றாய் அருகில் வந்து
உரசும்..
இவளும் பிடரியைச் செல்லமாய் தடவ
விழித்துக் கொள்வாள்..
வயது வந்தபின் கனவில்
சிலசமயம்
சின்னதாய்த் தலைப்பாகையுடன்
முகமறியா ஆடவன்
இவளை அள்ளித் தூக்குவான்
பின் சுழன்று பறந்து மறைவான்..
அம்மாவிடம் சொல்ல சிரிப்பாள்..
ஆமாண்டி நீயும் ராஜகுமாரி மாதிரிதான் இருக்கே
ஒரு ராசாமகன் தான் வருவான்..
ஆனா குதிரைக் கனவா சொல்றதப் பாத்தா
குதிரைக்காரன் தான் வருவான் போல..
கடைசியில் சிக்கியது
குதிரைக் காரன் தான்..
துபாயில் வேலையாம்
ஷேக்கின் குதிரைகளைப்
பராமரிப்பவனாம்..
கை நிறைய சம்பளமாம்..
மனம் போல மாங்கல்யமடி உனக்கு
அம்மா சொன்னாலும்
உள்ளுக்குள் நினைத்தாள்
இன்னும் வேறு வரனா பார்த்திருக்கலாமோ
சுப்புவிற்குக் குஷி..
கையில் மெஹந்தி கழுத்தில் தொங்கத் தொங்கத் தாலி
துபாய் சென்றால்
கணவனுக்குப் பேச்செல்லாம் குதிரைபற்றித்தான்..
அதுக ஒரு நாளைக்கு
மூணு மணி நேரம் தான் தூங்கும் தெரியுமா..
அதுவும் நின்னுக்கிட்டு தான்
விட்டு விட்டு தூங்கும்..
ரொம்ப களைப்புன்னா தான்
படுக்கும்..
எரிச்சல்னா வால் சுழற்றும்..
நல்ல ஜீவன்கள்..
வேலைக்குச் சென்றால்
தினமும் நள்ளிரவு தான் வருகை..
கொஞ்சம் மெலிதான மோசமான் வாசனை வரும்..
பின் தூங்க சில நேரம்..
சுப்புவிற்கு முதலில் அதிர்ச்சி
பின் கொஞ்சம் பழக
குதிரைகளைக் காட்டுவீங்களா..
கல்யாணமாய் இரண்டுமாதங்கள் கழித்து
தயங்கிக் கேட்க
சரி நாளை எனவும்
காலையிலேயே விழித்து
அழகாய் உடையுடுத்தி
கோவில் கடையில் சொல்லி வாங்கிய
மல்லிகை கூந்தலில் இருத்தி
அவனிடம் ’நல்லா இருக்கா’
பதில் சொல்லாமல்’சீக்கிரம் வா..
அதுகளுக்கு உணவு வைக்கணும்”
சென்றால்..
லாயத்தில் ஏக்க் குதிரைகள்..
கணவன் அவளை விட்டுவிட்டு
எதற்கோ உள் செல்ல
ஒவ்வொன்றாய் தொட்டு தொட்டு
பரவசப் பட்ட்வள்..
கன்வில் வருவதைப் போல
ஒரு கரிய நிறக் குதிரையைப் பார்த்துத்
தடவி..
மெல்லச் சொன்னாள் அதனிடம்..
உனக்கும் அவருக்கும் ஒரே ஒரு வித்யாசம்
தெரியுமா..
நீ நிறக்குருடு..
அவர் மனக் குருடு..
சின்னதாய் கண்ணோரம் நீர் உதிர
அமைதியாய் அவளை
அசைபோட்டபடி பார்த்த்து குதிரை...
Your punchline is very powerful. Well done.Quote:
நீ நிறக்குருடு..
அவர் மனக் குருடு.
நன்றி சிவமாலா..புதுக் க(வி)தை இட்டு விட்டு சற்றே பயந்திருந்தேன்.. என்ன்வோ தெரியவில்லை..கற்பனைக் குதிரை கொஞ்சம் நொண்டியடிக்கிறது..ம்ம் மரபில் எழுதணும் இன்னும்..
*
கல்லிலே குதிரை செய்து கலையுடன் மன்னர் வீரம்
சொல்லிலே எழுத ஒண்ணா சித்திரம் படைத்த நாளும்
தள்ளியே சென்றிடாமல் தரமுடன் இருந்தே அவையும்
துல்லிய உணர்வாய் நெஞ்சில் தங்கியே நிற்குமன்றோ
குதிரைகள் பாட்டைக் கேட்டீர் கொஞ்சமாய் நெஞ்சில் வந்தே
ப்திந்தநல் கற்பனைகள் பாங்குடன் இட்டு விட்டேன்
புதியதாய் எழுதச் சொல்ல பூவையே உமையே கேட்பேன்
சதிருடன் மரபில் தோய்த்து சுகமுடன் படைக்க லாமே..
இது நான் வானொலியில் கேட்ட ஒரு பாட்டு. குறித்து வைத்துக்கொண்டேன்.
"குட்டியாய் இருக்கையிலே -- கழுதை
குதிரையைக் காட்டிலும் எட்டுமடங்கு-- ஏழு
எட்டுமாத மானபின்னே -- முழங்கால்
முட்டுவிழுந்து மோச மாகவிளங்கும்!
யார் எழுதியதோ!
கழுதையைப் பற்றி எழுதினால், சுவையாக இருக்குமே!
நெடுஞ்செவி தானுடையோன் --கேட்க
நேரிதல் லாதது நாணுடையோன்.
கொடுமொழி காழென்பதே -- அன்றிக்
கூறப் பிறமொழி யாதுடையான்?
பழுதில் தொழில்புரிவான் ---முதுகு
பளுவில் அழுந்தினும் நோவுரையான்
கழுதை எனப்பழிப்பார் -- தொடர்பு
காணாப் பொழுதிலும் பேரிழுப்பார்.
காலக் கணக்கெடுப்பால் -- ஏதும்
கட்டுகள் இல்லா கடுமுழைப்பால்,
நீலக் கடலலைபோல் -- படும்
நெட்டிடர் சொல்லாlல் தொடுத்திழைப்போம்.
குட்டிச் சுவரருகில் -- அதைக்
கொண்டு நிறுத்தும் அவர்புகல்வில்,
எட்டி உதைப்பதுபோல் -- பல
ஏளனச் சொற்கள் விதைப்பதுண்டே!
அரியது சேவைஎன்றால் -- அதற்
கழகிலை என்பதால் நோவொன்றுசொல்,
உரியது ஒருவிலங்காய் -- அஃது
ஒதுக்கம் அடைதல் வருமொழுங்கோ?
அருஞ்சொற்கள்.
நேரிதல்லாதது - நேரிது அல்லாதது : நேர்மை அல்லாதது.
புகல்வு - புகலுதல். புகல்வில் = சொல்லுதலில். பேச்சில், நோவொன்றுசொல் = துன்பம் வந்து ஒன்றுகின்ற, அல்லது தொடர்புபடுகின்ற சொல். (நோ(வு) ஒன்றும் சொல்.)
வெள்ளி மூக்கு...ன்னு கழுதையைப் பத்தியா எழுதறேப்பா என்று கேட்டாள் குட்டிப் பெண்.. இல்லடீ ஒன்னைத்தான் குட்டிக்கழுதை என்றவுடன் அம்மாவிடம் சொல்வதற்கு ஓடி விட்டாள்
வெள்ளியில் மூக்கிருக்கும் வக்கணையாய்ப் பாரமதைத்
தள்ளாமல் தாங்கிவிடும் அந்தியில் நன்றாய்
விழுந்து புரண்டிடும் வீம்பாகப் பேசுங்
கழுதையும் நீயென்றே கொள்..
*
தொழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் பிறரோ
க்ழுதையாய்த் தேய்பவர் தான்..
(காப்பி ரைட்ஸ் ரிசர்வ்ட் எந்த கட்சிக்கும் தரப்பட் மாட்டாது!)
சிவமாலா..உங்கள் கழுதைப் பாட்டு அழகு..என்ன கொஞ்சம் ஆழத் தமிழ்..
எளிய சிந்தனைதான் -- அதைப்
பதிய முனைந்த பதங்களிலே
வலிய வந்தசில --கடின
வளியின் வீச்சை விளைத்தனவே.
கழறும் குறிப்புகளால் -- அந்தக்
கடினம் சிறிதே குறையுமென்றால்,
குழையும் இளங்காற்றாய் -- அது
குளிர்ந்து விரிந்திட மறுத்ததுவோ?
பாலை வனம்வீசும் -- அந்த
மணற்புயல் தன்னை மையமிட்டு
நாலின் மிகுபாக்களை - நீங்கள்
நன்கு புனைந்திட வேண்டுகிறேன்
அது குப்பை கூளங்களில் விழுந்து புரள்வதாகக் கேட்டிருக்கிறேன். அது ஏன் அப்படிச் செய்கிறது?Quote:
Originally Posted by chinnakkannan
உடல் வலி தான்.. குப்பை கூளங்களில் கழுதை புரண்டுபார்த்ததில்லை..வைகை ஆற்று மணல் வெளியில் புரண்டு பார்த்திருக்கிறேன்.. கூடவே இலவசமாய் இனிய கானமும் இசைக்கும்..!
குட்டி.. பாடம் படிப்பதற்கு விழுந்து அழுது புரளும்.. அல்லது மற்ற பிடிவாதங்களுக்கும்..
வ்ளி என்றால்..
கழறும் குறிப்புகளால்... பின்னால் இடப்படும் குறிப்புகளால் சரியா