rhymes, alliterations and blank verses --- principles
Quote:
Originally Posted by P_R
Quote:
Originally Posted by bis_mala
எதுகை இல்லாமல் எழுதலாகாது என்று எந்த விதியும் இல்லையே!
Quote:
Oh !! வெண்பா இலக்கணப்படி எதுகை வரவேண்டும் என்றும் எவ்வாறு வருகிறது என்பதைப் பொருத்து இன்னிசை/நேரிசை வகைகள் அறியப்படும் என்று நினைத்தேன். எதுகையும், மோனையைப் போல, நயம் கருதி சேர்த்துக்கொள்ளப்படுவது மட்டும் தானா?
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல். இலக்கியமே
முன்பிறந்தது; இலக்கணம் பின் ஆய்ந்து நெறிமுறைகளைக் கண்டறிந்து வகைப்படுத்தி, பெயர்களிடப்பட்டு உரைக்கப்பட்டது. இலக்கணமில்லாத காலத்தில், ஒருவன் தானே நெறிமுறைகளைக் கண்டுகொண்டு பாட வேண்டியிருந்தது.
இப்படி இருந்தால் இது இன்னிசை, இப்படியானாலதிது நேரிசை
என்று அடையாளத்திற்கு இடப்பட்ட நிலை பின் வந்த
ஆசிரியர்களால் "இப்படி வரவேண்டும்" "அப்படி வரவேண்டும்"
என்று கட்டாய விதிபோல போதிக்கப்பட்டது.பலர் போற்றிய (கடைப்பிடித்த) ஒரு நெறி, போதிப்பவரால் வலியுறுத்தப்பட்டு "விதி"யாக அல்லது "விதி"போல மறுதரவு
செய்யப்பெறும்.
இன்னிசை நேரிசை என்று குறியீடுகள் இருப்பதால், எதுகை ( etc) கட்டாயம் ஆகிவிடாது.
எதுகை மோனை இன்ன பிற இல்லாத கவி தொடுப்பது,
"செந்தொடை" என்று இலக்கணியர் ஒருபுறம் வைத்துக்கொள்ள
வேண்டியதாயிற்று. காரணம் செந்தொடை கொள் புலவ
மலைகளுக்கு இவ் இலக்கணியர் காலத்திலிருந்த செல்வாக்கு தவிர வேறென்ன?
திருவள்ளுவனார் காலத்திலேயே செந்தொடை முறை சற்று
அருகிவிட்டது. மறைந்துவிடவில்லை. செம்மையான தொடை
அதுதான். அதனாலேயே அதற்கப்பெயர்.
அக அழகு குறையும்போது, புற அழகில் ஈடுபடுகிறோம் என்பர்
மேலை நாட்டறிஞர். எதுகை மோனை முதலியவை புற அழகு.
எதுகை மோனைகளின் தாக்கம், சங்க இலக்கியத்தில் சற்று
கீழ்மட்ட நிலையில்தானிருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
இப்படிக்கூறுவதனால், எல்லோரும் எதுகை மோனை இல்லாமல் கவிபாடவேண்டும் என்ற கருத்தை நான் முன்வைக்கவில்லை.
என்னைப்பொறுத்தவரை எதுகை மோனைகள் பெய்தே
எழுதுவேன். ஆனால், கருத்துக்கு முதலிடம் கொடுத்து, ஒரோவழி செந்தொடையையும் கையாளுவேன்.
[quote]
Quote:
மிகச் சிறந்த கவிதை என்பது பொருளை வைத்தே முடிவு செய்யப்படும்.
......கவிதை என்பது எதுகை மோனைகளை மட்டும் வரிகளில் அமைத்துக் காட்டும் பயிற்சி அன்று. அதனினும் மேலான உயர்ந்த கருத்துக்களின் பெட்டகம் அதுவாம்.
கவித்துவம் வாய்ந்த ஒன்றைத் தெளிவாகவும் நேரடியாகவும் சொல்வதற்கு எதுகை முதலியவை தடையாய் இருப்பின், அவற்றைத் தொலைவில் எறிந்துவிட்டுத் தொடரலாம் என்பது நல்லிசைப் புலவர்களுக்குத் தெரியுமே!
Quote:
அதில் மாற்றுக்கருத்து இல்லை. இலக்கணத்தைத் தெரிந்து கொள்ளவேண்டியே என் கேள்வி.
திறம்பட செய்யப்பட்ட மீறலும் அழகே.
கம்பராமாயணத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு வரி
Quote:
விதியினை நகுவன அயல்விழி - பிடியின்
கதியினை நகுவன தளர்நடை - கமலப்
பொதியினை நகுவன புணர்முலை - கலைவாள்
மதியினை நகுவன வனிதையர் வதனம்
Structure:உம். பெண்யானையின் அழகிய நடையை நகுவதாக இருக்குமாம் அப்பெண்களின் அழகு நடை. அதாவது சுமாரான, நகைப்புக்குறிய உவமைகள் தான் கிட்டும் என்ற structure.
எல்லாவற்றுக்கும் உவமை சொல்கிறார். ஆனால் இந்த பாவின் structure படி வேல்விழிகளுக்கும் உவமை சொல்லவேண்டும். ஆனால் அது கூட இயலவில்லையாம். உவமை சொல்ல வேண்டும் என்ற விதியைக் கூட நகைக்கின்றனவாம் அவ்விழிகள்.
Afflatus cannot
be contained.
Thanks. well expounded.
விசா இல்லாமல்............
Quote:
Originally Posted by
chinnakkannan
vவணக்கம் பிஐஎஸ் மாலா..
என் வீட்டில் கடந்த இரு நாட்களாக ஒரு எலி விசா இல்லாமல் வந்து படுத்துகிறது.. கொஞ்சம் எழுதிப் பார்த்தேன்..
குறுகுறுத்துப் பார்க்கும் குதித்தேதான் ஓடும்
உருவத்தில்x சிறிதாய் ஒடுங்கி இருந்தே
பழியாய்ப் பதுங்கியே படசணம் தானுண்டேx
எளிதாய்ப் படுத்தும் எலி
x change
குறுகுறுத்துப் பார்க்கும் குதித்தேதான் ஓடும்
உருவத்தில் சின்ன(து) ஒடுங்கி -- இருந்தே
பழியாய்ப் பதுங்கியே பட்சணம் தானுண்(டு)
எளிதாய்ப் படுத்தும் எலி
என்று சிறிது மாற்ற, வெண்பா சரியாகிவிடும்.
Good attempt.
Show your immigration authority card to the எலி.