Quote:
சுஜாதா பதில்கள்
கவிஞர் கண்ணதாசனை நீங்கள் சந்தித்ததுண்டா ?
உண்டு. நினைத்தாலே இனிக்கும் கம்போசிங்கின்போது. சில பொதுக்கூட்ட மேடைகளில்.
எங்கேயும் எப்போதும் சங்கீதம்
சந்தோஷம்! (கற்றதும் பெற்றதும்
.)
...
எம்.எஸ்.வீயும், கவிஞரும் அன்யோன்யமாகப் பழகிக்கொண்டார்கள்.
விசு, என்ன ட்யூன் ?
அண்ணே! சங்கீதத்தைப் பற்றிய உற்சாகமான ட்யூன்!
வாசி!
விஸ்வநாதனின் விரல்கள் ஆர்மோனியத்தில் உலவ, அவருக்கே உரிய வசீகரமான குரலில், தன் னானே தன்னானே தன்னானே தன்னானே என்று பாடினார். உடனேயே கவிஞர், எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம் என்றார். பாடிப் பாரு !
கச்சிதமாக இருக்கு, கவிஞரே !"அடுத்த அடி. ?"தானனன்னே தானனன்னே தானனன்னே தானனன்னே
!"தன்னானேக்கு பதில் தான னன்னேயா ? சரி கொஞ்சம் தத்துவம் பேசலாமா ? என்று டைரக்டரைப் பார்த்தார், கவிஞர்.
பாலசந்தர், தாராளமா! உங்களுக்குச் சொல்லணுமா கவிஞரே !
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
! சரியா ?
Perfect !
விஸ்வநாதன் பாடப் பாட, கண்ணதாசன் அத்தனை சரணங்களையும் (காலை ஜப்பானில் காபி
. மாலை நியூயார்க்கில் காபரே
அவங்க ஊரூரா போறாங்கல்ல ? ) உடனுக்குடன் உதிர்த்ததை பஞ்சு அருணாசலம் அழகான கையெழுத்தில் எழுதித்தர, சில மணி நேரங்களில் முழுப் பாட்டும் எழுதப்பட்டது.
இடையிடையே, கண்ணதாசனுடன் பேச்சுக் கொடுத்தேன். எப்படி இவ்வளவு சரளமா வார்த்தைகள் வருது ?
தமிழ்ல ஆதார சந்தத்தைப் பிடிச்சுட்டாப் போதும்! பாருங்க, சீதைக்கு எத்தனை பெயர்கள் ? சீதா நேர் நேர்; ஜானகி நேர்நிரை; ஜனகா நிரைநேர்; வைதேகி நேர் நேர் நேர்
. இப்படி எந்தச் சந்தம் வேணுமோ அந்தச் சந்தத்துக்கு வார்த்தைகள் போட்டுக்கலாம். என்ன, எல்லா வார்த்தையும் தெரியணும்
அவ்வளவு தான். கம்ப இராமாயணத்தில் ஒவ்வொரு படலத்திலும், பாடலிலும் ஒரு புது வார்த்தை கிடைக்கும் !
...
ஏறத்தாழ 30 ஆண்டுகளாகியும் அந்தப் பாடல் இன்றும்கூட எல்லா மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் கட்டியம் கூறும் பாடலாகப் பாடப்படுகிறது. கண்ணதாசன் அதைத்தான் செய்தார்
எங்கேயும் எப்போதும் சங்கீதத்தையும், சந்தோஷத்தையும் பரப்பினார். உலகில் தமிழர்கள் வாழும் ஏதாவது ஒரு மூலையில் பயணிக்கும் கார்களிலும், இல்லங்களிலும் அவரது ஏதாவது ஒரு வரி ஒலிக்காத நேரமே இல்லை.