நின்றாள்
மலைமேலே
மலைத்தாள்
மேலேயென்ன
கண்கட்டுது
கனவாயிது
இல்லையில்லை
ஏறியதுண்மை
இளைப்பாறு
காத்திரு
Printable View
நின்றாள்
மலைமேலே
மலைத்தாள்
மேலேயென்ன
கண்கட்டுது
கனவாயிது
இல்லையில்லை
ஏறியதுண்மை
இளைப்பாறு
காத்திரு
காத்திருக்கத் தான் வேண்டும்..
இன்னும் கொஞ்ச நேரம்…
ஒரே கூட்டம்..கசகச..
நல்ல வேளை..
அவள் குழ ந்தையைச் சுமந்து
வெகு முன்னால்...
இடிக்காதீங்கப்பா.. நான் ஆம்பளை தான்..
என்ன வேண்டலாம்..
ஃப்ளாட் நல்ல விலையில்
நல்ல இட்த்தில் அமைய வேண்டும்...
பெண்ணுக்கு எட்டாம் வகுப்பில்
நல்ல மார்க் வரவேண்டும்..
வரமாட்டேன்னு மாமியார்கிட்டயே இருந்துடுத்து..
சின்னதுக்கு ரொம்ப் உடம்பு படுத்தறது..
தேவலையாகணும்..
மாமியார் பாவம்...
கை மூட்டில் வலியாம்..
சீக்கிரம் குணமாகி
எனக்குப் பருப்பு உருண்டைக் குழம்பு
செய்து தரணும்..
சரியான சாப்பாட்டு கண்ணன் டா நீ...
முன்னால் சற்றுத் தள்ளி
நிற்கும் பெண்ணின் வெளிர் நிற முதுகில்..
அது என்ன தேமலா..
அதுவும் குணமாகணும்..
சே..
இன்னும் கொஞ்சம் மின் விசிறிகள்
போட்டிருக்கலாம்...
முன்னால் இருப்பவர் என்ன சொல்கிறார்..
மாசில் வீணையும் மாலை மதியமும்...
சரி தான்...
இது என்னவாக இருக்கும்..
தேவாரமா...திருவாசகமா..
எப்போ நான் கத்துக்கப் போறேன்..
பழங்காலக் கோயில் தான்..
அதற்காக இவ்வளவு கூட்டமா..
திரை விலக கும்பல் முன்னேறி
அருள் தெரிய
‘ஹரஹர மகாதேவா’ என்ற ஒலியில்
எல்லாம் போனது மறந்து..
மறந்து போகவில்லை
கும்மென்று வீசும்
ஆளை அசத்தும்
மயக்கும் மணம்
மதுரைக்கு வந்த
சோகமான சோதனை
பனிக்கட்டியில் வைத்த
பழைய மல்லிகை
பார்க்க மட்டும் அழகு
பறந்ததுவே வாசனை
”வாசனை தெரியாமல் இருப்பதற்காக
முதலில் கடலை மிட்டாய்
பின்னர் ரோஜா பாக்கு போட்டு விட்டு
பின்
பெட்டிக் கடைக்காரனிட்மேயே
தண்ணீர் வாங்கி வாய் கொப்பளித்து,
சைக்கிள் ஏறி கொஞ்சம் சுற்றிவிட்டு
வக்கீல் மாமா வீட்டிற்கருகில் இருக்கும்
வேப்ப மரத்தில் இரண்டு இலை ப்றித்து
சிகரெட் பிடித்த விரலில் கொஞ்சம் கசக்கிவிட்டு
பின் தான் வீட்டிற்கு வ்ருவேன்...
இப்படிச் சின்னச் சின்னதாய்
உன்னை ஏமாற்றியிருக்கிறேன் அம்மா...நிறைய..
என்னை ம்ன்னிப்பாயா.”
மருத்துவ மனையில்
மரணப்படுக்கையில் இருந்த அம்மாவிடம்
மகன் சொல்ல அவள் சிரித்தாள்..
“போடா..மன்னிப்பு அது இதுன்னுட்டு
கிட்ட வா”
மகனின் த.லையைக் கோதிவிட்டாள்..
“நீ சிகரட் பிடிச்சேன்னு எனக்கு
அப்பவே தெரியுமே..”
“எப்படிம்மா.. வாசனை வந்துச்சா”
“இல்லை..
நீ என்ன செஞ்சாலும்
காட்டிக் கொடுத்து விடும்
உன் கண்”
கண் மங்கிவிட்டது
காது மந்தமானது
கோலோடுதான் நடை
மெல்வதற்கு பல்லில்லை
கஞ்சிதான் வயிற்றுக்கு
எல்லாம் தளர்ந்த பின்னும்
கெட்ட புத்தி மாறாமல்
படுத்துகிறாள் கிழவி
கிழவியின் தலை
முழுதும் நரைத்திருக்க
நெற்றியில் அகலப் பொட்டு;
சாதாரண சேலை..
கோவிலை விட்டுவநதால்
எதிரிலிருந்த அனுமன் சன்னிதியில்
கண்மூடி நின்றிருந்த்து..
கேட்டேன்..
‘நாகப் பட்டினம் போற வழி’
‘அத இந்த
திருக்கண்ணபுரத்திலிருந்தே கேக்கீகளா..
இப்படியே போய் கொளத்த தாண்டி...”
என ஆரம்பித்து விவரமாகச் சொல்ல
காரிலமர்ந்து கிளப்பியபடி
மனைவியிடம் சொன்னேன்..
இந்தக் கிராமத்து ஜன்ங்கள்ளாம்
வெள்ளந்தி தான்.. நம்ம சென்னை மாதிரி கிடையாது’
சொல்லி முடிக்குமுன்
கார்க்கண்ணாடியில் நிழலாட..
கண்ணாடியை இறக்கினால் அவள்..
அந்தப் பேரிளம் பெண்...
‘சாரே.. ரூட் சொன்னதுக்கு
துட்டு தராம போறீகளே..
ஒரு பத்து ரூபா கொடும்..”
என் மனைவி சிரிப்பை அடக்கிக் கொள்ள
நான் கொடுத்த பத்து ரூபாயை
கிடுகிடுவென்று ஓடிப்போய்
அங்கிருந்த உண்டியலில் போட்டாள் அவள்..
திகைத்துப் போய்
‘ஏய் என்ன பண்ற’
‘என் பேரனுக்கு ஜீரம் போகணும்
அதுக்கு ஒரு ரூபா..
நாஞ்சொன்ன வழில்ல நீங்க
பத்திரமாப் போகணும்..
அதுக்கு மிச்சம் ஒன்பது...”
**
ஒன்பது உச்சியில் எண் வரிசையில்
ஆளுமை மாண்பு குறையாதது
குறையான பிறவிக்கும் ஏன் அது
குறியீடானது கிரகந்தானா அறிவீரா
”அறிவீரா மன்னா..
ஜாதி, மதம் ஏழை பணக்காரன்
என்றெல்லாம் பார்ப்பதில்லை காதல்..
எனவே இளவரசி விருப்பத்தை
அங்கீகரியுங்கள்...”
‘பாட்டி ஒரு சந்தேகம்”
“என்ன அந்தக்கால பட்த்தோட
வசனம் புரியலையா..’
’எனக்கு வீர்பாண்டி கட்பொம்மனே புரியும்..’
‘பின்ன’
‘காதல்னா என்ன?”
‘அதாவது..
இப்போ
ஒங்க அம்மா அப்பாவோட
அன்பா இருக்காளோல்லியோ...
அதான் காதல்..”
“அப்ப
தாத்தாக்கு ஒன்கிட்ட அது இல்லையா..
ஏன் ஒன்ன பாதில்ல விட்டுப் போனார்..”
மளுக்கென மனதில் ஏதோ உடைய
பாட்டியின் கண்களில்
கட்டியது குளம்..
குளம் வற்றும் கோடை காலம்
குத்தகைக்காரனுக்கு அது லாபம்
கொத்து கொத்தாய் மீன் பிடிபடும்
கடையில் காத்திருக்கும் கூட்டம்
கூட்டமாய்த் தான்
பெரியவர்கள்:எல்லாம் ஒன்றுகூடி
அட்சதை போட்டு
நம்மை இணைத்து வைத்தார்கள்..
அதற்கப்புறம்
திருமணச் சடங்குகள்..
ஊஞ்சல்
ஏண்டா என் கையை நெறிக்கிறாய்..
அப்பளாம் உடைத்தல்
தேங்காய் உருட்டுதல் இன்ன பிற..
பின் மாலை வரவேற்பு
திருமணத்திற்கு முன் தினம்
கூடாதென்று நீ சொல்லிவிட்டாயாம்..
எனில்
மூன்று மணி நேரம் கால்கடுக்க
நின்று
தெரியாதவர்களிடம்
முகம் சிரித்து
புகைப்படம் எடுத்தாயிற்று..
அதன் பிறகு
மூத்த அண்ணன்
ஏற்பாடு செய்திருந்த
ஐ ந்து நட்சத்திர விடுதியில்
நம்மைத் தள்ளி
தாளிட்ட்து உறவுமுறை..
முறையே
மாலையில் காய்ச்சிய
நிஜமாகவே பழ்ம் பாலை
பழ்த்துடன் குடித்துப் பின்
திருமண விதிகளில் பாவம் நீ
குறைந்த பட்சம் நூறு தடவை
பெரியவர்களிடம்
சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணியிருப்பாய்
எனச் சொல்லி
என்னை தூங்கப் பணித்து
நீயும் தூங்கினாய்.. நானும் தான்..
பின்
அதிகாலை நடந்த்து
தணிக்கைக்கு உட்பட்ட்து படவா..
*
காலையில் எழுந்தால்
மணியடித்த்து உன் அம்மா..
ஹி.ஹி என என்னை விடக்
கூச்சப்பட்டு
ஏதேதோ சொல்லி
உங்களிருப்பிடம் கூட்டிச் சென்றார்கள்..
அங்கு போனால்
கட்டுச்சாதம்,, இன்னும் வந்த
உறவினர் கூட்டம்
எல்லார் முன் அடக்க ஒடுக்கமாக இருந்து
பின் இரவு வர..
கடங்காரன்..
யாரோ உன் அத்யந்த நண்பன் வர
“மன்னிப்பாய் மலர்
என் நண்பன் கனடாவிலிருக்கிறான்
எனக்காக வந்திருக்கிறான் எனச் சொல்லி..
(எந்த மடையனும் சொல்ல மாட்டான்..
ஆனால் நீ சொன்னாய்)
அவனுடன் இரு ந்தாய்..
மறு நாள் எல்லாருக்கும் பை பை சொல்லி
மூணாறுக்கு ரயில் ஏறினால்..
போச்சு..
அங்கும்
மடிக்கணினியைத் திற்ந்து
யோசிக்க ஆரம்பித்து விட்டாய்..
குட்டிப் பூனை போல் சற்றே உரசி
என்னய்யா என்றால்
யாரோ வலை அக்காவாம்
பாட்டுக்குப் பாட்டாம்
கூட்ட்ம் என்று எழுதணுமாம்..
ரயில்விளக்கைப் பார்த்தாய்..
ம்ம் நற நற
என்னைப் பொறுத்த வரை
அவள் அக்கா இல்லை பாட்டி..!
ஒருவழியாய் மூணார் வந்து
விடுதியில் உடைமாற்றி
வெளியில் வந்தால்...
வாவ்..
என்ன ஒரு இயற்கை
தேயிலைச் செடிகளின் மேல்
காதலுடன் உரசும் தென்றல்..
அதை மீறி
வானிலிருந்து
பொழியும் சாரல்...
ஜாலியாக்க் கைகோர்த்து
வலம் வருகையில்
ஓரிட்த்தில் நின்று
உன்னைக் கண்சிமிட்டி அழைத்து
சின்னதாய் ஒரு முத்தா கொடுக்கலாமென்றால்
யாரோ ஒரு சின்னப் பெண்..
குறுக்கே ஓடிச் செல்ல..
சே..
பின் எடுத்த ஆட்டோவில்
சிற்சில இடங்கள் சென்றுவிட்டு
வந்தால்
உணவு விடுதியில்
கண்டும் காணாத்து போல சாப்பிட்டு விட்டு
அறை வந்த்தும்...
கால் வலிக்கிற்து அன்பே எனச் சொன்னாய்..
பிடித்தால்..
அம்புட்டுத் தான்
கடங்காரா..குறட்டை விட்டுத் தூங்குகிறாய்..
இதை ஞான் யாரிடம் பறயு...
இருக்கவே இருக்கிறது
என் நாட்குறிப்பு....!
***
நாட்குறிப்பு எழுத புது ஆசை வருது
நாட்டு நடப்பை பதித்து வைக்கணும்
நாளுக்கொரு சேதி புழுதி கிளப்புது
நாகரிகமானது பக்தியும் ஆன்மீகமும்
சாமியும் சாமியாரும் காத்து வந்ததனரே
கருவூலங்களில் கொழிக்கும் கோடி செல்வம்
கொட்டுது கொட்டுது மழை சண்டமாருதமாய்
புதையலென்றால் புதையல் பாரறியாதது
புட்டபர்த்தி நேற்று பத்மனாபர் கோயிலின்று
அரங்கநாதனின் கருடன் பின் பொற்குவியல்
பத்திரிக்கையில் படித்தேன் செய்தி இன்று
என்றும் வளங்கள் நிறைந்தது எங்கள் நாடு
நாடு போற்றிட நல்லவை கொண்டுதான் வந்த
கூடு போன்றதாய் உருவிலே புன்னகை சி ந்தி
ஊடி ம்க்களின் உணர்விலே எழுச்சியும் ஊட்டி
தேடிச் சுதந்திரம் கண்டவர் தாமவர் காந்தி...
காந்திக்குப் பிடித்த மூன்று குரங்கு பொம்மை
என் வீட்டு கூடத்தை அலங்கரிப்பதுண்மை
காண்போர்க்கெல்லாம் நினைவூட்ட வேண்டுமது
கண்ணியமான கருத்துள்ள கட்டுப்பாடென்று
ஆயின் ஐயமொன்று எழுகின்றது மனதிலே
கண்ணில் விழுந்த சிறு தூசென உறுத்துது
கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும்
குரங்கு மூன்றும் கலங்குமோ குழம்புமோ
எப்போதும் ஊமையாய் செவிடாய் குருடாய்
இருந்திடத்தான் வேண்டுமோ கலியுகத்தில்
தீயவை என்பதன் புதுப் புது அர்த்தங்கள்
அனர்த்தங்கள் அரிதாரங்கள் புரியாமலே
புரியாமலேயே
நடக்கின்றன
சில மாற்றங்கள்..
சில நிகழ்வுகள்..
**
சின்ன வயதில்
விழுந்து விழுந்து படித்து
பத்தாம் வகுப்பு வரை
முதலில் வந்த
பக்கத்து வீட்டு செல்வக்குமார்
பதினொன்றில் தடம் மாறி
கல்லூரிப் பக்கம் போகாமல்
ஊர்சுற்றும் ரவுடியாக மாறியது ஒன்று..
அடக்க ஒடுக்கமாக
பிறரைப் பார்க்கவே கூச்சப் படும்
குணம் கொண்ட
ரெட்டைத் தெரு சுகன்யா
காலப் போக்கில்
டெல்லிக்கு வேலைக்குச் சென்று
அங்குள்ள பஞ்சாபிப் பையனை
மணமுடித்து
பின் சொந்த ஊர் வந்த போது
எந்த வித தயக்கமுமில்லாமல்
என்னைப் பார்த்த போது
ஹாய் அங்கிள் எனப் புன்சிரித்த து..
மகன்களின் மீது மட்டும்
அன்பையும் பணத்தையும்கொட்டும்
எனது பாசக்கார மாமியார்
துரத்தித் துரத்தி
என் மனைவியுடன் தான் இருப்பேன் என
வெளி நாட்டில் இருந்த என்னை
குடியுரிமை விசா வாங்க வைத்து
வந்து
இருந்த இரண்டு மாதங்களில்
ஒரு இரவில்
மாரடைப்பில் மரித்த து....
முன்னர் இருந்த ஆட்சி
மோசமானது என
விழுந்து விழுந்து
சுட்டிக்காட்டிய பத்திரிகைகள்
மற்றும் தொலைக்காட்சிகள்
எல்லாம்
புதிய ஆட்சியின் செயல்பாடுகளைப்
பற்றி
முழுமையாக அலசாமல்
சிலவருடங்களுக்கு முன் தான்
வந்த
திரைப்பட நடிகரின் திருமணத்தை
வெகு வெகு முக்கியமாக
மக்களிடம் கொண்டு செல்வது....
**
இன்னும் இன்னும்...
புரியாமல் நடக்கும்
மாற்றங்களும்,
புரியாமல் நடக்கும்
நிகழ்வுகளும்...
தொடர்கதை தான்...
புரியவும் முயற்சிக்க் கூடாது..
ஏனெனில்
இது தான்
உலகம்...
உலகம் சுற்றி வந்த
வாலிபன் முன்
உமையாளையும் உமாபதியையும்
சுற்றி வந்து
உலகத்திற்கு virtualisationai
உணர்த்திய விநாயகனே போற்றி போற்றி!!!
-
கிறுக்கன்.
போற்றி வளர்ப்பான் நல்ல தோட்டக்காரன்
செடிகளின் தனித்தன்மை தேவை அறிந்து
நிழலா வெயிலா நீர் விட்டிடும் அளவென்ன
கவாத்து செய்யும் காலமறிந்து ஒடித்து
சீராக நேராக எழிலாக மரம் திருத்தி
தக்க பருவத்தே தீதில்லா உரமிட்டு
அயராத உழைப்பும் கவனமும் குவித்து -
குடும்பமெனும் தோட்டத்து உறவுகளை
அங்ஙனமே பராமரிக்கும் இல்லாளின்
ஞானத்திலே ஞாலம் தழைத்திருக்குமே
தழைத்திருக்குமே
செல்வம், பசுமை, மகிழ்ச்சி எல்லாம் நிறைந்து...
இப் புவி..
எப்பொழுது என்றால்...
**
பருவத்தே தவறாமல்
நல்லமழை பொழிந்து
பயிர்கள் செழித்து வளர்ந்தால்..
*
விவசாயியிடம்
நியாய விலைக்கே காய்கறி மற்ற உணவுப் பொருட்களை
வியாபாரி வாங்கி
மக்களிடமும்
நியாய விலைக்கே விற்றால்...
*
அரசியல்வாதிகள்
இன்முகத்துடன்
மனதார மக்களுக்காகவே உழைத்தால்..
*
காதலியின் நிஜ அழகை
தைரியமாக் க் காதலன் சொன்னால்...!
*
தமிழ்த் திரைப்பட்த் தயாரிப்பாளர்கள்
கதானாயகனிடம் வன்முறையையும்
கதானாயகியின் இடைப்பிரதேசத்தையும்
காட்டுவதை விட்டு
தரமான அதே சமயத்தில்
மற்றவர்களுக்கு நஷ்டமடைய வைக்காமல்
பொழுதையும் போக்கும்
நல்ல திரைப்படங்கள் கொடுத்தால்..
*
தொலைக்காட்சித் தொடர்கள்
அழுகை,பழிவாங்குதல்,
இரண்டு மூன்று பெண்டாட்டிகள்
போன்ற கருக்களை விட்டு
இயல்பாய்ப் படம் எடுத்தால்...
**
கல்லூரி மாணவ மாணவிகள்
தமிழில் ஷாப்பிங்க் மால் எனச் சொல்லப் படுகிற
விற்பனை வளாகங்களில்
அளவில்லாமல். அழகிய சிறிய உடையோடு
போய்வந்து கொண்டிராமல்
சமர்த்தாய் படிக்கும் நேரத்தில் படித்து
சுற்றும் நேரத்தில்
கட்டுப்பாட்டுடன் சுற்றி
பெற்றோரின் பணத்தை செலவழிக்காமல்
இருந்தால்...
**
பத்திரிக்கைகள்
புரியும்படியான
சிறுகதைகளையும்
அழகிய நற்கவிதைகளையும்(இதைப்போன்ற)
சிறந்த நகைச்சுவையையும்,
இளம் கதானாயகிகளின்
முழு ஆடை அணிந்த புகைப்படங்களையும்
வெளியிட்டிருந்தால்..
*
இளம்பெண்கள்
அழகிய ஆடை ஆபரணங்களை அணிந்து
திருட்டுபயமில்லாமல்
இரவில் நடக்க முடிந்தால்...
*
தங்கம் வெள்ளி போன்றவை
பாம ர ர்களும் வாங்கும் படி
விலை குறைவாயிருந்தால்..
**
ம்ம்..
பெருமூச்சு தான் வருகிறது..
இந்த பகற்கனவில்...
இவை எப்போ நடக்கும் சொக்கா...!
சொக்கா என
உதவிக்கு அழைத்தவனுக்கு
பக்கா பாட்டு
கொடுக்காமல்
பொருள் புதைந்த
பாட்டெழுதி
encoding எடுத்துரைத்த
சிவாய நாம:
சிவாய நாமஹ..
இப்படித்தான் அந்தக்காலத்தில
என்னோடவீட்டுக்காரர்..ஒன்னோட தாத்தா
கடுதாசில்ல ஆரம்பிப்பாக..
நல்லா இருக்கியாப்பா..
நா ஒன் பாட்டி எழுதறேண்..
என்னது..ரெண்டு சுழி ன தான் போடோணும்..
நா செளக்கியம் நீ செளக்கியமாப்பா..
நீ எனக்கு அனுப்பிச்ச
ஐ நூறு டாலர் வந்துச்சுன்னு
ஒன் மதனி சொன்னா..
ஐயாயிரம் ரூபாயாமே..
அவ்வளவு எதுக்குப்பா
இந்த குருட்டுக் கிழவிக்கு...
ஏற்கெனவே
ஒம் மதனி
காலேல கேப்பக் கஞ்சி,
மத்தியானம் நீர்சோறு
ராத்திரில்ல ரெண்டு பூவ்ன் ப்ழம் கொடுக்கா..
ராசா சாப்பாடு தாம்ப்பா..
சீரணம் ஆவணும்ல..
நல்லாத்தான் இருக்கேன்
கொல்லப்பக்கத்தில
மாட்டுக்கொட்டாய் கிட்ட இருக்கற ரூம்புல தான்..
என்ன ஒடம்புல சுகராம்..
கம்பவுண்டர் நெதக்கும் ஊசி போடறார்..
என்ன ராத்திரில்ல் தட்வித் தடவி
பாத்ரூம் போறது தான் கஷ்டம்...
அதான் விழாம வந்துடுவம்ல..
நீ அமெரிக்கா போயும் நாளாச்சு பாரு..
எப்போ என்ன்பாக்க இந்த கள்ளந்திரிக்கு வருவ..
ம்ம்
என்னால தான் ஒன்ன பாக்க முடியாது..
கொஞ்சம் ஒன்னோட கை பிடிச்சுக்கலாமேப்பா..
அண்ணன்கிட்டயும் சொல்லி அலுத்துப்புட்டேன்
ஒங்கிட்ட சொன்னானா
முடிஞ்சா நா இருக்கறச்சயே வா..
இல்ல என்னப்பத்தி தகவல் கெடச்சா
கண்டிப்பா வந்து என்னப் பாக்கோணும்..செரியா..
ஏய் என்ன புள்ள நீ அழுவுற்..
இந்த லெட்டர ஏதோ ஈமெயிலாமே
அதுல
பக்கத்து வீட்டு படிக்கற் புள்ள மூலமா
அனுப்பறேன்...
ம்ற்க்காம பாக்க வா ராசா..
உசிரோட பாத்தா இன்னும் சந்தோஷம்..
***
சந்தோஷம் மல்லி முல்லை போல
மறைக்க முடியாது மணப்பதை
சுற்றிலும் பரப்பும் ரம்மியத்தை
தனக்கு மட்டுமது சொந்தமில்லை
தழுவ வரும் நிலாக்கால கடலலை
நினைவு வங்கியின் நிரந்தர இருப்பு
இருப்பு இருப்பதால் இறுமாப்பு சுரக்கின்
இருப்பே நெருப்பாகி சுடும்.
’சுடும் இப்படித்தான்..
கொஞ்ச நேரமும் சும்மா இருக்காமல்
மழைல்ல அலைஞ்சா...
இப்ப்ப் பாரு யாரு கஷ்டப் படறா
வாயத் தெற’
அம்மா விட்ட கஷாயம்
தொண்டையில் கசப்பாய் இறங்க
‘பகவானே சீக்கிரமா குணமாகணும்..”
கண்மூடி பிரார்த்தனை செய்தவளின்
விழியோரம் ஈரத்தைக் கண்ட தும்..
மழையில் நனைந்த தன் உற்சாகம் வடிந்து போனது....
போனது போகட்டும்
அது முடிந்த கதை
வருவது வரட்டும்
அது வெறும் கனவு
இப்போது வாழ்ந்திடு
இது மட்டும் நிரந்தரம்
நிரந்தரப் புகழ் என்பது
அடுத்தடுத்த தொடர் வெற்றிகளினால் மட்டுமல்ல..
மனப்பூர்வமாய்
தவறுகளை தைரியமாக
ஒப்புக்கொண்டு
பின் தங்குவதாலும் கிடைக்கும்..
கிடைக்கும் நிம்மதி
மகேசன் தரிசனத்தில்
இமயத்தின் மடியில்
கங்கையின் கரையில்
பாவத்தைக் கரைக்க
யாத்திரை செல்கிறேன்
என்றாள் இளையவள்
இன்னும் கொஞ்சம்
பாவம் செய்துவிட்டு
வருகிறேன் என்றாள்
முன்னால் பிறந்தவள்
எத்தனை கோணங்கள்
எண்ணத்தில் கோணல்கள்?
குழந்தை குணங்கள்!
குணங்கள்...எழுது
குணங்கல்..
இந்த பார்..பள்ளம் வர்ற் ள் போடணும்..
சரி டீச்சர்..
என்னடா..
மறுபடி தப்பா..
வா..ஒருபக்கம் முழுக்க
எழுதச் சொல்லியிருக்காளோல்லியோ..எழுது..
போம்மா..
நா மாடிக்குப் போய்
வெளயாடப் போறேன்..
*
ஏண்டி..
ப்ன் மரம் மாதிரி வளர்ந்துருக்க..
இது என்ன டிரஸ்..தக்கணூண்டு..
கத்தரிக்காய்க்கு குட்டப் பாவாடை போட்ட மாதிரி..
போம்மா..டீசண்ட்டா தானே இருக்கு..
ஏங்க் ஒங்க் அம்மாகிட்ட சொல்லுங்களேன்..
புடவைல்ல என்க்கு செளகர்யமா இல்ல..
சுடிதார் தானே போட்டிருக்கேன்...
போடி.. உன் பாடு எங்க அம்மா பாடு..
*
இந்த தடவை நமக்கு சீட் கிடைக்கும்கற..
தலைவர் வரவர மாறிட்டார்..
நம்மள் க்வனிக்கவே மாட்டேங்கறார்..
ம்ம் இவரல்லாம் வளர்த்து விட்ட்தே நாம தானே..
அதோ வர்றாரே..
எங்கள் தானைத் தலைவன்
சொன்னபடி செய்யும் சிங்கம்...
வாழ்க வாழ்க..
*
என்னய்யா இந்த முழி முழிச்சிக்கிட்டுருக்க..
என்ன கவிதை வரமாட்டேங்குதா..
குணம்னு எழுதணுமா..
செல்லம்..
தைரியத்த வுடாதே..
நல்லா சிந்தி..
இன்னிக்குவெள்ளீக்கிழமை..
லீவு தானே..
இந்தா வெண்டைக்காய்..
கட்பண்ணீக்கிட்டே யோசி..
*
குணங்கள்ல மூணு வகை
ரஜோ குணம்
சாத்வம்
தாமச குணம்..
கீதைல்ல பகவான் என்ன சொல்றார்னா..
சார் என்ன இந்தப் பக்கம்..
என்ன ஓய் பண்றது
இந்த நாட்டுப் பொண்
ரொம்ப்ப் படுத்தறா.,,
நல்லவ தான்..
இருந்தாலும்
இந்த எலக்ட்ரிசிடி பில், டெலிபோன்
அப்புறம்
பேரனப் பார்த்துண்டு இருக்கற்து
இதெல்லாம் செஞ்சுண்டு தான் இருக்கேன்..
இன்னிக்கு காலைல்ல பேப்பர் படிக்கலை
சாயந்திரம் ப்டிக்கலாம்னு எடுத்தா
இன்னும் ஏதோ சொல்றா..
சரி தான்போன்னு இங்க வந்துட்டேன்..
புரியலைன்னாலும்
ஏதோ கொஞ்சம் நிம்ம்தியா இருக்கு..
ந்ல்லாத் தான் ப்ண்றார் பாகவதர்
காலட்சேபம்...!
*
கதாகாலட்சேபம் ஒன்று புதுமையாய்
மாதர் சங்க கலை நிகழ்ச்சிக்காக
பல்லாண்டுக்கு முன் தயாரித்தேனே
சிலப்பதிகாரக் கதையை முழுதாய்
திரைப்பட பாடல்களால் கோர்த்தேனே
நேயர் ஒருவர் தங்களுக்கு பள்ளியிலே
இவ்வண்ணம் கற்பிக்கவில்லையே என
அங்கலாய்த்ததை எப்படி மறப்பேன்
//அதை விமரிசன திரியில் படித்து மகிழவும்(!)//
எப்படி மறப்பேன் அன்பே..
கொய்ங்க்.. என்று ரீங்கரித்து
திடீரென அருகில் வந்து
பயமுறுத்தும் கருவண்டு போன்ற
சுற்றிச் சுழலும் உன் விழிகளை..
**
அன்று
கரு நீல சுடிதாரில்
நெற்றியில் இருந்த
குட்டிப் பாம்புப் பொட்டும்
மெலிதாய் நெளிய
வெளிர் நீல தோடுகள் காதுகளில் ஆட ஆட
வெளிர் சிகப்பு உதடுகள் பிரியப் பிரிய
என்னருகில்
சிரித்தபடி பேசினாயே..
எப்படி மறப்பேன்..
**
ஹோ வென்ற கும்பல்
அந்த
அஷ்டலஷ்மி கோவிலை ஒட்டிய
கடற்கரையில்
நம்மைச் சுற்றிப் போய் வந்து கொண்டிருந்தாலும்
நாம் மட்டும் ... இருவர் மட்டும் இருப்பதாய்
நினைத்தபடி
ஒருவரை ஒருவர் பார்த்தபடி
‘ஒன்றுமில்லாத இனியவை’
அதுதான் ஸ்வீட் நத்திங்க்ஸ் என்று தமிழில் சொல்வார்களே
அதைப் பேசியபடி இருந்தோமே..
எப்படி மறப்பேன் அதை..
*
அதன் பிறகு
சூரியன் கோபித்துக் கொண்டு மேற்கில் மறைய
சில்லெனக் காற்றுடன்
நிலாப் பெண் மேலே உயர,
கூட்டம் குறைந்திருந்த அந்தப் பொழுதில்
என் அருகினில் வந்து
மென்மையாக
அழகாக
கொஞ்சம் வெட்கத்துடன்
கேட்டாயே..
நானும் கொடுத்தேனே..
எப்படி மறப்பேன் அதை..
**
ம்ம்..
அடியே..
நான் எதையும் மறக்கவில்லை..
இன்று மாலை
நாம் சந்திக்கும் போது
மறக்காமல் கொண்டு வா
அன்று அந்த நிலாக்கால இரவில்
என்னிடம் கை மாற்று வாங்கிய
ஆயிரம் ரூபாயை..!
ரூபாயை பத்திரமாய் பெட்டிக்குள்
பெண்ணை பத்திரமாய் வீட்டுக்குள்
பாதுகாப்பது அழகிய நல்ல பண்பாடு
சீரும் சிறப்புமாய் நிம்மதியாய் வாழ்
வாழ்வில் எல்லாமே
நகரும் மேகங்கள் தான்..
பிறப்பு, இறப்பு
வேதனை, சாதனை
துன்பம் இன்பம்
எல்லாவற்றையும்
சமமாக எடுத்துக் கொள்ள
வேண்டும் மனப் பக்குவம்
பக்குவம் ஒரு தொழில் ரகசியமோ
அதே அஞ்சரைப் பெட்டி அடுப்பு
அதே அளவில் கொட்டி தாளிப்பு
அப்புறமும் அம்மா சமையலில்
அப்படி ஒரு தனி மணம் ருசி
அது என்ன சூட்சுமமோ மாயமோ
மாயமோ மோகமோ மானிட சாபமோ
சகித்து சுகிக்கும் காதல்.
காதல் கூட்டி வரும்
கள்ளத்தனம் எல்லாம்
காளமேக கவித்திறன்
காணாத கற்பனைகள்
காற்றினும் கடிய வேகம்
கடைசியில் தரை இறங்கும்
இறங்கும் ஞாயிறும் உறங்கும் உள்ளமும்
என்றும் இருளை ஏற்றும்.
ஏற்றும் எஸ்கலேட்டரைக் கண்டு
வியந்து அதன் பின்னர் மிரண்டு
பழகியதும் பயம் சிறிது குறைந்து
நாகரிக ஏணியில் நான் ஏறியது
வளரும் உலகை எட்டிப் பார்த்தது
பெருநகரில் மகன்கள் வாழ நேர்ந்து
வணிக கேளிக்கை வளாகங்களுக்கு
அன்புடன் அழைத்துச் சென்ற போது
எங்கள் சிறிய நகரமிப்போது
ஒரு பெருநகரமாய் வளருது
பளபள துணிக்கடை வரவு
அதை அறிமுகம் செய்தது
அச்சத்தை ஆர்வம் மீறியது
முதன் முதலாய் ஏறியபோது
மக்கள் முகமெல்லாம் பல்லானது
என் கதையும் நினைவில் வந்தது
வந்த்து யாரென்று தெரியுமா
அம்மா சொல்வாள்
உறவினர்கள் வ ந்து சென்றதும்..
தூரத்து உறவுகள் யார் நினைவில் கொள்வார்கள்..
வேண்டா வெறுப்பாய்க் கேட்டு வைப்பேன்..
காலம் செல்ல
வேலை அயல் நாட்டில் தான்
என்றான பின்
தமிழ் பேசுபவர்கள் சிலர்
தூரத்து உறவாக இருக்கலாமோ
எனத் தோன்றுகிறது..
விள்க்கத் தான்
அம்மா இல்லை...
அம்மா இல்லை வீட்டில்
பச்சைக் குழந்தைக்கு
பரிந்து பாலூட்ட
பரிவாய் தலை கோத
பலகாரம் செய்து தர
பாசமாய் கதை சொல்ல
பொலிவாய் இல்லம் மிளிர
பார்த்துப் பேசிடவும்
பல கதை பகிர்ந்திடவும்
பாங்கான தோழியில்லை
புரிதலுக்கு துணையில்லை
பணத்திற்கு முதலிடம்
பெண்ணின் மகுடமெது
பொறுப்பென்பது என்ன
பெற்றவரை பிள்ளைகளை
பார்த்துக்கொள்ள காப்பகம்
பறக்கிறாள் எதைப் பறிக்க
பேரின்பமாம் குடும்பமெனும்
பழத்தை கசக்க வைக்கும்
புது உலக மோகம் தாகம்
புதைத்துவிட்ட இன்பம்
பெயரளவில் இல்லறம்
பார்க்கப் பார்க்க சலிப்பு
சலிப்பு தான் வருகிறது..
ஏன் எனத் தெரியவில்லை...
தொலைக்காட்சியில்
மனதுக்குப் பிடித்த நடிகரின்
நகைச்சுவைப்படம்..
நேற்று கடைத்தெரு சென்று
வாங்கி வந்த
புதிய படம்..
உள்ளே ச்மையலறையில்
என் வீட்டு இளங்கிளி
எனக்குப் பிடிக்குமே
என்று
யாரிடமோ க்ற்றுக்கொண்டு
செய்யும்
பானி பூரியின் சின்னப்பூரிகள்
பொரியும் எண்ணெய் வாசனை..
அவளது மெரூன் கலர் சுடிதார் அழகா
அல்லது
நெற்றியில்
ஒற்றைக் கோட்டில் ஆடும் முடியின்
அ லைக்கற்றையில்
துளிர்த்திருக்கும்
வியர்வைத் துளி அழகா..
வெளியில் பால்கனியில்
எட்டிப் பார்த்தால்
நாற்பத்தேழு டிகிரி
எனில்
உள்ளே குளுமையாய் ஏ.சி..
ஊரிலிருந்து இந்தமுறை வாங்கி வ்ந்த
விஜயமகா தேவி
கண்சிமிட்டிச் சிரிக்க்கிறாள்..
வலையில் உலவலாம் என்றாலும்
ஓஹ்.. ஏனோ வெறுமையாய்..
.
ம்ம்
எல்லாம் இருந்தும்
ஏனோ மனதில் விரக்தி
சலிப்பு..
என்ன செய்யலாம்..
ஹை..
இருக்கவே இருக்கிறது.
கணினியைத் திற்ந்து
எழுதப்பார்க்கலாமா..
வருமா..
சோர்வாய் மனம் இருக்கிறதே..
சரி செய்யலாம்..
திற ந் து
எழுத ஆரம்பித்தால்...
துள்ளிப் பொங்குகிறது..
வெள்ளம்...
வெள்ளம் வருடாந்தர நிகழ்வு சில ஆறுகளுக்கு
அபூர்வம் அதிசயம் ஆனந்தம் எங்கள் வைகைக்கு
கூட்டமாய் ரசிக்கச் செல்வோம் இத்திருவிழாவிற்கு
நுரைத்து இருகரை தொட்டோடும் அழகிய காட்சிக்கு
புகைப்படமெடுத்துப் பாதுகாக்கும் நவீன வசதியிருக்கு
என் வலைமனை படத்தொகுப்பிலது கொலுவிருக்கு
கொலுவிருக்கும் கடைசிப் படிக்க்ட்டுச்
செட்டியார் கேட்டார்
’ஏன் இந்த தடவை அஞ்சு படி தான்
வெச்சுருக்கா மாமி?;
கல்யாண கோஷ்டி நாதஸ்வர வித்வான்
‘தெரியலை ஓய்.. அது சரி
அந்த வைர மூக்குத்தி மாமி பார்த்தீரா’
‘அதுவா இந்த மாமியோட தூரத்து உறவாம்...
போன தடவைக்கு முந்தின தடவை வந்தா..
அவ பட்டுப் புடவை க்ரே வித் ரெட் பார்டர்
சும்மா ஜிலுஜிலுன்னு...
நன்னா இருக்கோன்னோ..’
இரண்டாம்படிக்கட்டில் இருந்த ராதா
‘ஏங்க.. கல்யாணத்துக்கும்
கூட்டிட்டுப் போமாட்டேங்க்றீங்க..
கீழே கிரிக்கெட் மாட்ச் வச்சுருக்கா..
அதுக்கும் மாட்டேங்கறீங்க..
பக்கத்துல மஹாபலிபுரம் பீச் செட்
அங்கயாவது போலாமே..’
கிருஷ்ணன் புன்னகைத்து..
‘நானா மாட்டேங்கறேன்..
கீழே பார்.. மூணாம் படிக்கட்டில
எல்லாஅவதாரமும் நின்னுண்டிருக்கு..!
அது ச்ரி
யாரந்தக் குழந்தை..
சிகப்பு தாவணி பட்டுப் பாவடை
போட்டுண்டு
ஏதோ எட்டு ஸ்வரத்துல பாடுது..
நம்ம ஊர் கோபிகையோட சாயல் தெரியுது..’
ராதா முறைத்துக் கிள்ள
கீழே இருந்த பலராமர்
‘ஏய் எங்களை கிண்டல் ஏதும் பண்ணலையே..’
நாலாம் படிக்கட்டில் இருந்த
க்ன்னுக்குட்டி அம்மாவிடம்
‘இன்னிக்கும் கொண்டக்கட்லை சுண்டல் தானாம்..
அம்மா போரடிக்குது
பேசாம வேற கொலுக்குப் போலாமா.
இந்த பாரேன் அந்தச் சின்னப் பையன்
என்னைத் தொட வர்றான்...’
கவலைப்படாதே யானை மாமாக்கிட்ட
சொல்றேன்..
ஓய் என் புள்ள பயப்படுது..”
“ஒண்ணும் ஆவாது..
பேசாம பசுவா லட்சணமாத்
தலை குனிஞ்சு இரு..
இந்தப் பக்கம்
அஷ்ட் லஷ்மி வேறு இருக்காங்க்..
எதிர்ல பார்த்தியா
சில மாமாக்கள்
சீரியஸா கோல்ட் ரேட்,ஷேர்ஸ்னு
பேசிக்கிட்டிருக்காங்க ..
நல்லா இருக்கு...
கேக்க விடாம இந்தப் பாட்டுதான் தடுக்குது..
அட் ஒருவ்ழியா பாட்டு முடிஞ்சா
ம்ம் இன்னொரு மாமி பாடறாளே..
என்ன தவம் செய்தனை...
புதுசாபாடலாமில்ல.. ஏ ஜே ஏஜே..
அருகிலிருந்த மயில்
ரொம்பத் தான் சினிமா பார்க்கறே..
என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமில்ல..’
ஷ்.. ச்த்தம்போடாமச் சமர்த்தா
வந்தவாளைப் பார்த்துண்டு
சும்மா இருங்கோ..
என்றார் முதற்படிக்கட்டுப் பிள்ளையர்ர்..
‘எனக்குப் பொண் பார்த்திண்டிருக்கேன்..
உங்க பேச்சு எனக்குத்
தொந்தரவா இருக்கு...!”