-
மக்கள் திலகம் !
புரட்சித் தலைவர் !!
மக்கள் முதல்வர் !!!
MGR சிலை திறப்பு ...
புரட்சித்தலைவி அம்மா
தலைமையில் ,
கம்யூட்டர் நாயகன் பிரதமர் ராஜிவ் காந்தி சிலை திறந்தார் ...
அன்று பத்திரிகையில் ஒரு செய்தி ,
சிலை திறப்பு விழாவில் மக்கள் கடல் ,
75 வயது பெரியவர் மக்கள் கூட்டத்தை பார்த்து பேட்டி கொடுக்கின்றார் !
Had seen nothing like it ,
My Fifty Five years Long Political Innings ,
என்னுடைய 55 ஆண்டு கால அரசியல் வரலாற்றில்
இப்படிபட்ட மக்கள் கூட்டத்தை நான் என் வாழ்நாளில் பார்க்கவில்லை !
அப்பொழுது சிறியவனாக மக்கள் கூட்டத்தோடு நானும் வருகின்றேன் ,
நடந்து வருகின்றோம் மறைமலை அடிகளார் பாலம் வந்து சேர்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது ,
சிலை திறப்பு இடம் ,
ஸ்பென்சர் கார்னர் பக்கம் வருவதற்கு எவ்வளவு நேரம் கடந்து இருக்கும் ,
அந்த கூட்டத்தில் நான் (24-11-1990 ) பார்த்த காட்சி ,
தலைவரிடம் பேசுகிறேன் !
மன்னாதி மன்னனே !
மவுண்ட் ரோடா அது
இல்லை ! மக்கள் கடல் !
மன்னாதி மன்னனே !
உன் திருவருவ சிலை திறப்பு விழாவின் போது ,
மவுண்ட் ரோடா அது ,
இல்லை மக்கள் கடலா !
என்று வியக்கும் அளவில் இருந்தது ,
நீ என்ன அதிசய தலைவனோ !
எங்கள் தலைவியை இயக்குகின்ற இந்திர தலைவனோ !!
வாழையடி வாழையாய்
புகழினை பெற்றவரே !
நீ தானே அண்ணாவுக்கு உண்மையான உலகறிந்த பாரத் ரத்னா தம்பி !
கழகத்தை ஒப்படைத்து விட்டார்கள் உன் இதயக்கனி " யை நம்பி !!
அதனால் வாழ்கின்றனர் தமிழ் நாட்டில் சிலர் மனம் வெம்பி !!!
அவர் பெற்ற வெற்றி மக்கள் பெற்றது அன்றோ !
கொதிக்கின்றது கொடியவர்கள் நெஞ்சம் !
ஏற்றுகின்றார்கள் மனதிலே வஞ்சம் !
அதற்கா எங்கள் தலைவி மனம் அஞ்சும் !!
படைக்கின்ற , இனிமேல் படைக்க போகின்ற வெற்றிகள் தானே மிஞ்சும் !
புரட்சிதலைவா உங்கள் புகழ் இருக்கிற வரையில் , இனிமேலும் வெற்றிக்கு ஏது பஞ்சம் !!
என்று கூறி எங்கள் கண்களில் உதிர்ந்த நீரால் வங்க கடல் தாலாட்ட தூங்குவாய் பல்லாண்டு !
உங்கள் இதயக்கனி யின் கீழ் உங்கள் புகழ்பாடுவதே எங்கள் எஞ்சிய ஆண்டு !!
உறங்கும் திசையை நோக்கி வணங்குகிறேன்,
எங்கள் தலைவியை ஆசிர்வதியுங்கள் ,
அன்று எழுதிய
11 கட்டுரை தொடரும்,
மலரும் நினைவுகள்.........
-
எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின.
வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ, வாலியையோ உணர்வோம்.
எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். “குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம்” என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.
தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர். அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். இன்றும் எம்.ஜி.ஆர். பாணியை பின்பற்றும் ரஜினி, விஜய் போன்ற ஆக் ஷன் ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும் சிவாஜியின் பாதையில் செல்லும் கமல் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்.
ரசிகர் மன்றம்
முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.
தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன், அண்ணா நம்பி, திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள். எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்
Courtesy
DINAMANI... Newspaper......
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/08/20 அன்று அளித்த தகவல்கள்*
------------------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இதுவரை எட்டு* திக்கிலும் இருந்து பாராட்டுக்களை கொண்டுவந்து குவித்து கொண்டிருக்கிறது .ஒவ்வொரு நாளும் ரசிக பெருமக்கள் தொலைபேசி ,குறுஞ்செய்திகள் மூலமாகவும், இவ்வளவு காலத்திற்கு பின்னால் கடிதங்கள் மூலமாகவும் தங்களுக்கு தெரிந்த பல்வேறு* தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகிறார்கள் .*
ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது அவனுடைய மன்றங்கள் மூலம் எப்படி, எவ்வளவு பாராட்டுக்கள் கிடைக்கும் என்பது பெரியதல்ல .ஒரு மனிதன் மறைந்த பிறகு* என்னையே நான் எடுத்துக் கொள்கிறேன் , நான் மறைந்த பிறகு ,எத்தனை அமைப்புகள், மன்றங்கள்,பொதுமக்கள்* என்னை பற்றி நினைக்கின்றன ,நற்பணிகள் செய்து கொண்டிருக்கின்றன* என்பதை பொறுத்து* தான் நான் வாழ்ந்ததற்கு ஏதாவது நியாயமான காரணம் இருந்திருக்கிறது என்று நினைப்பதற்கு அது உதவியாக இருக்கும் . -தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பேசிய கருத்துக்கள் .
திருச்சி மிளகு பாறையில் உள்ள திரு.மஜீத் அவர்கள் அதாவது* மலைக்கள்ளன் படத்தில் எம்.ஜி.ஆர். அரே மஜீத் சாய் லாவோ என்று கூறுகிறாரே அந்த பெயரை கொண்ட மஜீத் அவர்கள் சகாப்தம் நிகழ்ச்சியின் 100 வது தொடர் அன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவச்சிலைக்கு* மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார் .
கள்ளக்குறிச்சியில் இருந்து ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.சங்கரன் ,எம்.ஏ.,பி.இ டி ., மற்றொரு ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்* திரு.சேரன் , எம்.ஏ. பி.இ டி ,**திரு.டி.கோபால் ,எம்.ஏ. ,திரு.ராமலிங்கம் எம்.ஏ. பி.இ டி.திரு.கோ.விஸ்வநாதன் மற்றும் எம்.ஜி.ஆர். பக்தர்கள் ,இந்த தபால் அட்டையை அனுப்பி உள்ளார்கள் .* நீண்ட காலத்திற்கு பிறகு இந்த தபால் அட்டையை காண்பது என்பது இந்த டிஜிட்டல் யுகத்தில் சந்தோசமான விஷயம் . அந்த அளவிற்கு எம்.ஜி ஆர் மீது அளவற்ற அன்பும், பாசமும், மதிப்பும், மரியாதையும் அவர்கள் வைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது .* *எம்.ஜி.ஆர். பாமரர்களின் கடவுள் என்றெல்லாம் பல வகைகளில்* விமர்சனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .. இவர்களெல்லாம் சாதாரண மக்கள் அல்ல. ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் .* இவர்கள் எத்தனை மாணவர்களை உருவாக்கி இருப்பார்கள் .அதில் எத்தனை மாணவர்கள் இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதற்கு இந்த கள்ளக்குறிச்சியில் உள்ள ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களே உதாரணம் .
பொதுவாக மேடைகளில் பேசுபவர்கள் எதுகை, மோனையிலும் ,அடுக்கு மொழியிலும் பேசுவார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர். அப்படி எந்த திட்டமுமில்லாமல்*தனக்கு அந்த நேரத்தில் தோன்றியதை பேசுவார் .* அப்படியான உண்மை என்பது மக்களை சென்றடைந்தது என்பது 1973ல் திண்டுக்கல் தேர்தலில் அவர் மேற்கொண்ட பிரச்சாரமே சாட்சி .அந்த ஒளிப்பதிவு இன்றைக்கு கூட சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது .* இன்றைக்கும் எம்.ஜி.ஆர். பேசப்பட்டு வருகிறார் என்பது அந்த சாதனை வாழ்க்கைக்கு சாட்சியாக உள்ளது .**
பேரறிஞர் அண்ணா அவர்கள் தம்பி வா, தலைமை ஏற்க வா என்று நாவலரை அழைத்தது போல அழைக்க* முடியாவிட்டாலும் , நண்பரே வா, என் உறவே வா, என் ரத்தத்தின் ரத்தமே வா என்று நான் அழைக்க தயங்க மாட்டேன் . நான் நிச்சயமாக சொல்லுவேன் . நாங்கள் தனித்தன்மையாக தேர்தலில் போட்டியிட்டு* மக்களின் பேராதரவை பெற்று நாங்கள் சுயமாக அமைச்சரவை அமைக்க கூடிய அளவிற்கு நாங்கள் பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு யார் ஒத்துழைப்பு தருகின்றார்களோ .அந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொள்வேனே தவிர, நிச்சயமாக எங்கள் உரிமையை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் பிறர்க்கு சந்தேகம் வருகிறது . பேசிக் கொள்கிறார்கள் எம்.ஜி.ஆர். ஒருவேளை வீட்டுக் கொடுத்திருப்பார் . அதனால் கூட்டு சேருகிறார்கள் என்று. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன் .பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாகிய நான்*விவரம் அறியாதவன் அல்ல. அண்ணா தி.மு.க.வை அரியணை ஏற்றியபிறகு தான் நான் ஒய்வு பெறுவேனே* தவிர, அதுவரையில் எனக்கு ஒய்வு என்பது இல்லை .அண்ணா தி.மு.க ஆட்சியின் மூலம் அண்ணாவின், லட்சியங்களை, கொள்கைகளை நிறைவேற்றுவதில்தான் நான் சந்தோசம் அடைவேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் . சிலர் நினைக்கின்றார்கள் எம்.ஜி.ஆரை ஒழித்துவிட்டால் அண்ணா தி.மு.க. இருக்காது .அவர்கள் பைத்தியக்காரர்கள். இந்த ராமச்சந்திரன் இறந்த பிறகும் ஆயிரம் ஆண்டு காலம்*அண்ணா தி.மு.க. உயிர்ப்புடன் இருக்கும் அண்ணாவின் உருவம் ,அந்த கருப்பு சிவப்பு கலந்த கொடியின் மத்தியில் வெள்ளை நிறத்தில் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கும் . எங்களுக்கு வாய்த்த தொண்டர்கள் அப்படிப்பட்டவர்கள்*--எம்.ஜி.ஆர். பொது கூட்டத்தில் பேசிய கருத்துக்கள் ..
எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் மிக பிரபலமாக இருந்த நேரம் . மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி வரும்போது செங்கல்பட்டில்** ஒரு பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு காவலர் நின்று கொண்டிருக்கிறார் .எம்.ஜி.ஆர் காரை நிறுத்த சொல்லி , அந்த காவலரை காரில்* ஏறிக் கொள்ளுங்கள் .உங்கள் இருப்பிடம் அருகில் இறக்கிவிடுகிறேன் என்றார் . வேண்டாம் ஐயா ,நான் பேருந்தில் சொல்கிறேன் என்று காவலர் கூற, பரவாயில்லை .நீங்கள் வாருங்கள் என்று சொல்லி காரில் ஏற்றிக்* கொள்கிறார் . சிறிது தூரம் சென்றதும்,*எம்.ஜி.ஆர். கேட்கிறார் காவலரிடம் ,நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா என்று . தெரியவில்லை என்கிறார் காவலர் . நீங்கள் எங்கு வேலை பார்க்கிறீர்கள் என்று எம்.ஜி.ஆர். கேட்க, செங்கல்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிகிறேன் என்றார் .அப்படி என்றால் ஏன் நீங்கள் சொந்தமாக வாகனம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை .என்று கேட்க ,நான் ஒரு சைக்கிள் வைத்துள்ளேன் .இன்று அது பஞ்சர் ஆகிவிட்டது .வேறு வழியில்லாமல் வேறு வாகனத்தை பிடித்து பணிக்கு சென்று திரும்புகிறேன் .என்றார் காவலர் .அதற்குள் அவரது இருப்பிடம் வந்துவிடுகிறது . நான் இறங்கி கொள்கிறேன் என்கிறார் காவலர் . ஆனால் எம்.ஜி.ஆர். பொறுங்கள் ,உங்கள் வீட்டுக்கு அருகில் விட்டுவிடுகிறேன் என்கிறார் . ஆனால் காவலர் அதை மறுத்து, வேண்டாம் ஐயா ,இந்த ஊரில் உள்ளவர்கள் பார்த்தால் என்னை தவறாக நினைப்பார்கள் நான் யாருடைய காரிலும், யார் வாகனத்திலும் பயணிப்பதில்லை .காவல்துறையில் உள்ள என்னை பற்றி தவறான அபிப்பிராயம் வந்து விட கூடாது .நான் இங்கேயே இறங்கி கொள்கிறேன் . நன்றி ஐயா என்று சொல்லி இறங்கிவிடுகிறார் .இந்த காலத்திலும் இப்படி ஒரு காவலரா என்று ஒரு கணம் யோசித்து எம்.ஜி.ஆர். புறப்பட்டு சென்னை வந்து சேருகிறார் . இந்த சம்பவத்தால் எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சியும் இல்லை மகிழ்ச்சியும் ஏற்படவில்லை . மறுநாள் செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த காவலர் பற்றி* பெயரை சொல்லி*விசாரிக்கிறார் .அவர் இங்குதான் பணிபுரிகிறார் என்றவுடன் .நான் ராமாவரம் தோட்டத்தில் இருந்து எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன் .அவரை என் வீட்டில் வந்து சந்திக்க சொல்லுங்கள் என்கிறார் .* காவல் நிலையத்தில் உள்ளவர்கள் பரவசம் அடைந்து , அந்த காவலரிடம் விஷயத்தை சொல்லி ,அவசியம் ராமாவரம் தோட்டம் சென்று முதலில் எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்துவிட்டு வா என்று சொல்லி அனுப்புகிறார்கள் .காவலரும் வந்து சந்திக்கிறார் .இந்த காலத்தில் இப்படியும் ஒரு காவலரா எனக்கு ஆச்சர்யமாக* உள்ளது .உங்களுக்கு என்ன உதவி தேவை,சொல்லுங்கள் செய்கிறேன் என்றார் எம்.ஜி.ஆர். ஆனால் காவலர் எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் அழைத்தீர்கள் என்பதற்காகத்தான் வந்தேன் .அது மட்டுமல்ல , நீங்கள் ஒரு நடிகர் ,சட்டமன்ற உறுப்பினர் , ஆளும் கட்சியின் மிக முக்கிய பிரமுகர் என்று .சொன்னார்கள் அதனால் மரியாதை நிமித்தம் வந்து சந்தித்தேன் .நன்றி என்று சொல்லி புறப்பட்டு சென்றார் . இந்த சம்பவத்தை மனதில் வைத்து தான் எம்.ஜி.ஆர். முதல்வராகியதும் காவலர் வீட்டு வசதி வாரியத்தை உருவாக்கினார் .
எம்.ஜி.ஆர். தனது கட்சி வேட்பாளர் ஒருவரின் வேட்பு மனுவை வாபஸ் பெற செய்வித்தவர் எதற்காக, யாருக்காக என்றால் .1967ல்* பேரறிஞர்*அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சிபீடத்தில் அமர்ந்தபோது அண்ணாவுக்கு முதல்வராக பதவி ஏற்க பதவிப்பிரமாணம் செய்து வைத்தவர் பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் மூக்கையா தேவர் . 1957 முதல் 1977 வரை தொடர்ந்து உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர் மூக்கையா தேவர் .1977ல் உசிலம்பட்டி தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் . அந்த தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்தவர் மூக்கையா தேவர் என்பது மட்டுமின்றி, நான் யார் பெயரில் கட்சி நடத்துகிறேனோ, கட்சி கொடியில் அவரது உருவத்தை* வைத்துள்ளேனோ, அந்த அண்ணாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தவர் மூக்கையாத்தேவர் .எனவே இந்த தொகுதியில் அவருக்கு எதிராக* அ.தி.மு.க போட்டியிடுவது சரியல்ல என்று அரசியலில் ஒரு நிலைஎடுத்து* ஆரம்பித்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.*
பாண்டிச்சேரி அஜந்தா அரங்கு அருகில் உள்ள பஜார் தெருவில் கடைகளுக்கு அருகே கூட்டி பெருக்கி சுத்தம் செய்து கோலமிடும் பணியை செய்து வந்தார் ஒரு வயதான மூதாட்டி .நான் வறுமையில் உள்ளேன் . வாழ்க்கையை நடத்துவது கஷ்டமாக உள்ளது . எனக்கு குழந்தைகள் கிடையாது என்று ஒரு கடிதம் எழுதுகிறார் எம்.ஜி.ஆருக்கு .இதை அறிந்த எம்.ஜி.ஆர். தன் உதவியாளர் மூலம்*மாதாமாதம் ரூ.100/- உதவித்தொகை அனுப்பி வந்தார் . இதை அந்த மூதாட்டி*தான் பணிபுரியும் கடைகளில் சொல்லி மகிழ்ந்தார் .* அது முதல் அந்த பகுதியில் அந்த மூதாட்டி எம்.ஜி.ஆர். அம்மா என்று அழைக்கப்பட்டு பிரபலமானார் .பாண்டி அஜந்தா அரங்கில் எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் 100 வது நாள் விழா நடக்கிறது .இதை அறிந்த அந்த மூதாட்டி தனக்கு எம்.ஜி.ஆர். அனுப்பும் மணி ஆர்டர் ரசீதை காட்டி ,என்னை எப்படியாவது எம்.ஜி.ஆர். வரும்போது தயவுசெய்து அறிமுகம் செய்து வைய்யுங்கள் . நான் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அரங்கு மேலாளரை கேட்டு கொள்கிறார் .விழா நாளன்று*அரங்கு மேலாளர் எம்.ஜி.ஆரிடம் நீங்கள் மாதாமாதம் அனுப்பும் பணம் பெறும் மூதாட்டி ஒருவர் உங்களை காண விருப்பப்படுகிறார் என்று சொன்னதும் எம்.ஜி.ஆர். வர சொல்கிறார் . அந்த மூதாட்டி தான் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தில் இருந்து ஒரு பெரிய மாலை வாங்கி வந்து எம்.ஜி.ஆர். கழுத்தில் அணிவித்து மகனே என்று உருகி போனார் .* பாண்டிச்சேரியில் மட்டுமல்ல .தமிழ்நாட்டில் பல நகரங்களில், கிராமங்களில் பல எம்.ஜி.ஆர். அம்மாக்கள் அந்த காலத்தில் உருவாகி*இருந்ததாக தகவல்கள் சொல்லப்படுகிறது .மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஒன்றும் அறியாத பெண்ணோ* - இதயக்கனி*
2.எம்.ஜி.ஆர்.-சிறுவன் கமல்ஹாசன் உரையாடல் - ஆனந்த ஜோதி*
3.போலீஸ் அதிகாரியாக* எம்.ஜி.ஆர். -என்கடமை*
4.சிறை* துறை அதிகாரியாக எம்.ஜி.ஆர்.- பல்லாண்டு வாழ்க*
5.எம்.ஜி.ஆர். - தங்கவேலு உரையாடல்* - நம் நாடு*
6.நான் உங்கள் வீட்டு பிள்ளை - புதிய பூமி*
7.தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்*
-
இலங்கை நாட்டில் மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் அதிக அளவில் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது ஆனால் மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் அப்படி ஓடிய வரலாறுகள் கிடையாது. 1950 முதல் 1977 வரை மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் தான் அதிகமாக கிட்டத்தட்ட 35 திரைப் படங்கள் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் பெரும்பாலும்*
1967 வரை எந்தப் படம் எப்படி ஓடியது என்பது எந்த ஒரு விபரமும் விளம்பரமும் சாதனையும் இல்லை என்பது முக்கியமானதாகும்.
குறைந்த வசூலை காண்பித்து அதன் மூலம் ஓடிய திரைப்படங்களை 100 நாள், 200 நாள் என மார்தட்டி தம்பட்டம் அடிக்கிறார்கள்.
*உலகம் சுற்றும் வாலிபன் ஏற்படுத்திய வசூலை எந்த சிவாஜி கணேசனின் திரைப்படமும் வென்றதாக சரித்திரமில்லை.*
தில்லானா, சிவந்தமண், சவாலே சமாளி, வசந்த மாளிகை, பட்டணமா, ராஜா, எ.தங்க ராஜா,* தங்கப்பதக்கம், அவன் தான் மனிதன், உத்தமன், தீபம்,*
அ.ஒரு கோயில்* உட்பட
12 படங்கள் தான்*
1977 வரை ஒடியுள்ளது.
ஆனால் மக்கள் திலகத்தின் திரைப்பட வரிசையில்*
1965 முதல் 1977 வரை கிட்டத்தட்ட*
16 திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து சாதனையை பெற்றுள்ளது.*
எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், காவல்காரன், ஒளிவிளக்கு, அடிமைப்பெண், நம்நாடு, மாட்டுக்கார வேலன்,*
நல்ல நேரம், இதயவீணை, ராமன் தேடிய சீதை, உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, நாளை நமதே, நீதிக்கு தலைவணங்கு, ஊருக்கு உழைப்பவன், மீனவ நண்பன் ஆகிய* படங்கள் 100 நாட்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பல படங்கள் ஓடியதாக அவர்களே விளம்பரத்தை தயார் செய்து போலியாக வெளியிடுகிறார்கள் திரிசூலம் படம் இலங்கையில் திரையிடவே இல்லை. அந்தப் படம் வெள்ளிவிழா கூறியதாக தகவல் கொடுக்கிறார்கள். இப்படி பல படங்களை கோல்மால் வித்தை காண்பித்து பொய் சொல்லி பதிவிடுகிறார்கள்....
இலங்கையில் திரையிடாத திரிசூலம் இரண்டு தியேட்டரில் வெள்ளிவிழா ஒடியதாக தகவல் போட்ட கணேசன் ரசிகனின் ஜகதால வித்தைகள்.....
இப்படியெல்லாம் பொய்யை போட்டு. ... மாற்று நடிகர் ... ...ன் க்கு என்ன மோசடியான புகழ் சேர்க்க போகிறார்கள்?!..
இலங்கை திரைப்பட மோசடி மகா ஊழல்கள்* ஆகும்.............
-
இலங்கை புரட்சித்தலைவரின்
உலகம் சுற்றும் வாலிபன் படைத்த வசூல்கள்..... வெல்ல முடியாத ஒரே காவியமாக திகழ்ந்தது......
கொழும்பு - கெப்பிட்டல்
203 நாள் : 9,84,588.75
கிங்ஸிலி 40 நாள்
வசூல் : 2,03,545.50
ட்ரியோ 35 நாள்
வசூல் : 1,69,185.75
கொழும்பில் மட்டும் முதல் ரவுண்டில் பெற்ற
278 நாள் ஒடி முடிய வசூல் :13,57,289.75
அடுத்து.....
யாழ் நகரில்
மனோகரா 80 நாள்
வசூல் : 3,01,351.75
ஸ்ரீதர் 48 நாள்
வசூல் : 1,56,281.70
யாழ் நகரில் பெற்ற
128 நாள் : 4,57,633.45
அடுத்து...
மட்டுநகர் விஜயா
116 நாள் ஒடி சாதனை.
திருமலை - சரஸ்வதி
72 நாட்கள் ஒடியது.
கட்டுகஸ்தோட்டா
நியூசிகீரி - 63 நாள்
வவுனியா
ராயல் - 57 நாள்
அக்கரைபற்று
சாரதா - 50 நாள்
கல்முனை
தாஜ்மகால் 43 நாள்
தெகிவளை
ரீயோ ...36 நாள்
மாணிப்பாய்
வெஸ்லி ....31
சங்காளை
சாந்தி....40 நாள்
சாவகச்சேரி
வேல்......23 நாள்
உலகம் சுற்றும் வாலிபன் இலங்கையில் முதல் ரவுண்டில் மட்டும்
25 லட்சத்தை கடந்து வசூலில் ...... சாதனை
நன்றி : திரு டேவிட்
யாழ் - பிரான்ஸ்
உரிமைக்குரல் மலர்
(1976 - 1977)
தகவல் பதிவு
UR.
உங்கள் பார்வைக்கு..
வ.மாளிகை
கொழும்பு - 250 நாள்
கெப்பிட்டல் : 6,56,858.00
பிளாசா 75 நாள்
வசூல் : 2,89,058.00
யாழ்நகர்
வெலிங்டன் 78 நாள்
லிடோ 28 நாள்
மொத்தம் 116 நாள்
இதை தான் அந்த ரசிகனுங்க பொய்யாக
பிளாசா 175
வெலிங்டன் 200
லிடோ 100 என போடுகிறாங்க....
நம்பர் ஒன் பிராட் (fraud) க......ரசிகன்
கனடா ..என்ற சி....ன் ஆகும்.....
-
புரட்சித் தலைவர் நடித்து முதலில் ‘லலிதாங்கி’ என்ற படத்தை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் தயாரித்தார். ஆனால், பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்று கதாநாயகன் சொல்வது போல கதை அமைப்பு இருந்ததால் அதில் நடிக்க புரட்சித் தலைவர் மறுத்துவிட்டார். இதை புரட்சித் தலைவர் பேட்டியில் தெரிவித்துள்ளார். உடனே, அந்தப் படத்தை ராணி லலிதாங்கி என்று பெயரை மாற்றி சிவாஜி கணேசனை நடிக்க வைத்து வெளியிட்டனர். சிவாஜி கணேசனுக்கு பணம்தான் முக்கியம், வேறு எந்தக் கொள்கையும் கிடையாது என்பது தெரிந்ததே. புரட்சித் தலைவர் நடித்த படத்தில் தான் நடிக்கிறோமே? நீங்கள் நடித்து பாதியில் நிற்கும் படத்தில் நான் நடிக்கலாமா? என்று மரியாதைக்குக் கூட தலைவரிடம் அவர் அனுமதி கேட்கவில்லை. படம் வந்தால் போதும், பணம் வந்தால் போதும் என்ற கொள்கையின்படி ராணி லலிதாங்கி படத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். பெண்களை விபச்சாரிகள் என்றும் வசனம் பேசுவார். கடைசியில் அந்தப் படமும் ஊத்திக் கொண்டது.
சிவாஜி கணேசன் மாதிரி கொள்கைகளை விட்டுக் கொடுத்து பணத்துக்காக புரட்சித் தலைவர் நடித்திருந்தால் பன்றி குட்டி போடுவது போல 300 படங்கள், 400 படங்களில் நடித்திருப்பார். ஆனால், கொண்ட கொள்கைக்காக படம் போனாலும் பரவாயில்லை வருமானம் வராவிட்டாலும் பரவாயில்லை என்று இதுபோன்ற படங்களை தவிர்த்தார். நடிப்பது தொழிலாக இருந்தாலும் பணத்துக்காக கண்டபடி நடிக்காமல், தன் படங்களில் நல்ல கொள்கைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று செயல்பட்ட கொள்கைக் குன்று புரட்சித் தலைவர்..........
-
#இவர்கள் #எதிர்காலத்தூண்கள்
தமிழக முதல்வர் மக்கள்திலகம் கோட்டைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்...
போகும் வழியில் ராணி மேரிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவியர் கூட்டம்...
டிரைவரிடம் சொல்லி தனது காரை அவர்களருகே நிறுத்துகிறார்... மாணவிகளும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் இன்பஅதிர்ச்சியில் உறையும் போதே...!
'என்ன கூட்டம் இங்கே? 'என முதல்வர் கேட்க...அங்கிருந்த மாணவிகள்...
'ரொம்ப நேரமா பஸ்ஸே வரலை சார்' எனச்சொல்ல...
உடனே முதல்வர், தனது உதவியாளரை அழைத்து, 'இப்ப உடனே இங்க வந்தாகணும்' னு சொல்ல, உதவியாளர் பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரை வாக்கிடாக்கியில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறுகிறார்.
பேருந்து வரும் வரை மாணவிகளுடன் ரோட்டிலேயே நின்று கொண்டு உரையாற்றிக்கொண்டிருந்தார் நம்ம வாத்தியார்...
அடுத்த பத்து நிமிடங்களிலேயே மூன்று பஸ்கள் ஒன்றாக வந்ததும்... மாணவரியரும், பொதுமக்களும் வாத்தியாருக்கு நன்றி சொல்லியும் விசிலடித்தும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்தனர்...
முதல்வரின் கார் கிளம்பியது...உதவியாளர் தயங்கித் தயங்கி எம்ஜிஆரிடம் கேட்டார்...'ஐயா! நீங்க காரிலேயே உட்கார்ந்திருக்கலாமே! வெயிலில் நின்று அம்மாணவியருடன் பேசிக்கொண்டிருந்தீர்களே...ஏன் ? ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா ???
அதற்கு புரட்சித்தலைவர், ' இவர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தூண்கள்... நாளை இவர்களில் பலர் உயரதிகாரிகளாக ஆகலாம்...ஒரு பிரச்சனை வரும்போது தானே அதை முன்னின்று அதை சமாளிக்கணும்...அதற்கு நாம் தான் உதாரணமாக இருக்கவேண்டும்...
மேலும் நான் அவர்களில் ஒருவராக நின்று பேசும்போது மக்களுக்கும், முதல்வருக்குமுள்ள இடைவெளி அகலும்...பிரச்சனகளை நேரடியாக அறிந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்...என்றார்...
வாத்தியாரின் பதிலில் உறைந்தது அந்த உதவியாளர் மட்டுமல்ல...நாமும் தான்............
-
1963 மே 10 ந்தேதி வெளியான வெற்றிப் படம்தான் r r பிக்சர்ஸ் தயாரிப்பான "பெரிய இடத்துப் பெண்'. அந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகமான வசூலை குவித்த படம் இதுதான். . அருமையான கிராமிய கதையும் மேல் நாட்டுப் பாணியையும் சரியான அளவில் கலந்து அதற்கு அருமையான வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத ராமண்ணாவின் சிறப்பான நேர்த்தியான இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம்.
கோயிலில் சம உரிமையை நிலை நாட்ட தலைவர் பேசும் வசனம் ஏழை மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.
சரோஜாதேவியின் கோபமான வசனங்கள் கோபத்தை உண்டு பண்ணினாலும் பின்னர் அவரை அடக்கும் விதம் மக்களை வெகுவாக கவர்ந்தது. M.r.ராதா திமிர், ஜாதி வெறி பிடித்த பணக்காரனாக வருவார். அவர் வசனத்தை
டெலிவரி செய்யும் விதம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
பாடல்களை பொறுத்தவரை ராமண்ணா படங்களுக்கு மெல்லிசை இரட்டையர்கள் போடும் மெட்டு காலத்தை கடந்தும் கதை பேசுகிறது.
நாகேஷின், படத்தை ஒட்டிய காமெடி
ரசிக்கும்படி அமைவதுடன் படத்தின் முக்கியமான திருப்பத்திற்கும் காரணமாக இருப்பது சிறப்பானது.
'அன்று வந்ததும் அதே நிலா' பாடலுக்கு எம்ஜிஆர் ஆடும் நடனம் மேல் நாட்டு கலைஞர்களையும் மிரள வைக்கும். தியேட்டரில் கரகோஷம் அடங்க நெடுநேரம் ஆகும். 'பாரப்பா பழனியப்பா' பாடலுக்கு எம்ஜிஆர் மாட்டுவண்டி ஓட்டும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கட்டோட குழலாட' பாடலுக்கு கிராமத்து பெண்களின் கனவுகளையும் அவர்கள் அத்தை மகன் மீது வைத்திருக்கும் அன்பையும் அத்தான் அவர்களிடம் உரிமையோடு சொல்லாடும் விதமும் அருமையிலும் அருமை. 'அவனுக்கென்ன தூங்கி விட்டான்' போன்ற தத்துவப் பாடல்கள் புண்பட்ட மனதிற்கு இதமாக ஒத்தடம் கொடுப்பது போல இருக்கும்.
வண்டி மாடுகளை தலைவர் குளிப்பாட்டும் விதம் ஆகா என்ன அருமையான காட்சி அதை காண இரண்டு கண்கள் போதாது. எடுத்த
சபதத்தை முடிக்கும் பாங்கு வெகு நேர்த்தியானது. T r. ராஜகுமாரி
தலைவருக்கு அக்காவாக தலைவருடன் நடித்த கடைசி படம்.
சிலம்பு சண்டை காட்சிகள் நேரிலே நடப்பதை போல பார்த்து நாமே உணர்ச்சி வசப்பட்டு விடுவோம். அசோகனுக்கு அருமையான வேடம். வெளுத்து வாங்குவார். பிற்காலத்தில் இதே கதையை உல்ட்டா பண்ணி அளவுக்கு அதிகமான மசாலாவை ஆபாசத்தோடு தூவி எடுக்கப்பட்ட 'சகல கலா வல்லவன்' வெள்ளி விழா ஓடியது குறிப்பிட தக்கது.
சென்னையில் சித்ரா கிரவுன் மகாலட்சுமியில் வெளியாகி சித்ரா கிரவுனில் 102 நாட்களும் மகாலட்சுமியில் 71 நாட்களும் ஓடி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
8 வாரங்களில் அடுத்து வந்த 'ஆனந்த ஜோதி'யை தாண்டி வெற்றியை பதிவு செய்தது குறிப்பிட தக்கது. மதுரை திருச்சி கோவை சேலம் ஆகிய ஊர்களில் 92 நாட்கள் ஓடியது.
தமிழகத்தில் சுமார் 33 சென்ட்டரில் 50 நாட்களை கடந்து ஓடி வெற்றியை பதிவு செய்தது. தூத்துக்குடி சார்லஸில் வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றி பெற்ற படம். மறுவெளியீட்டில்
நெருங்க முடியாத அளவு வெற்றியை பதிவு செய்தது என்பது குறிப்பிட தக்கது..........
-
தமிழ் திரைப்பட உலகில் மக்கள் திலகத்தின் காவியங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சாதனைகளை பலவிதமான அரங்குகளில் படைத்துள்ளது. அதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மிகப் பெரிய வெற்றிப்படங்கள் ஆனாலும் சரி.... சாதாரண கருப்பு-வெள்ளை படங்கள் ஆனாலும் சரி மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் மிகுந்த வசூலையும் மிகுந்த சாதனையையும் படைத்துள்ளது என்பது முக்கியமான ஒன்றாகும்.
1965 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட உலகை மகிழ்வித்த... தென்னிந்திய திரை உலகை சிறப்பித்த... தமிழ் பட உலகை வாழவைத்த....*
எங்க வீட்டுப் பிள்ளை*
இமாலய சாதனையை படைத்தது.
அதே ஆண்டில் மற்றொரு சரித்திரப் படமான ....
ஆயிரத்தில் ஒருவன் அதுவும் ஒரு மிகப்பெரிய மகுடத்தை சூட்டியது தமிழ் படவுலகில்......
இன்று... "கன்னிதாய்" 10-09-1965 ---10-09-2020 வெளியான திருநாள்... குறைந்த நாட்களிலேயே அதிகளவில் வசூல் வேட்டை புரிந்த காவியம்...
இந்த இரண்டு மிகப்பெரிய காவியங்களுக்கு மத்தியில் கருப்பு வெள்ளை திரைப்படமான "கன்னித்தாய் "திரைப்படம் 18 நாட்களில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தில் ஏற்படுத்தியது.*
கன்னித்தாய் திரைப்படம் வெளியான நாள் தான் இன்று*
(10.09.1965. - 10.09.2020 ) அதே நாளில் அந்தக் காவியத்தை நினைவு கூறும் சில நிகழ்ச்சிகள் மட்டும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கன்னித்தாய் திரைக்காவியம் சென்னை மாநகரில் 4 காட்சிகள் திரையிடப்பட்டு சரித்திரத்தை உருவாகிய முதல் காவியம்.*
முதல் வார வசூல் எந்தப் படமும் நெருங்க முடியாத சாதனையில் சபையர் திரையரங்கில்*
4 காட்சியில் அத்தனை காட்சியும் அரங்கு நிறைந்து வசூல் கொடுத்த தொகை மிகப்பெரிய வசூல் ஆகும். வெற்றியாகும்.
7 நாள் : 49 ஆயிரத்தை கடந்தது.
சென்னை நகரில் சபையர்*
அசோக் பிரைட்டன் சயானி திரையரங்குகளில் திரையிடப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிக் குவித்தது. திருச்சி மாநகரில் 11 வாரங்கள் ஓடி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அதேபோல பெரிய ஊர்களிலும் 50 நாட்கள்.........
-
எம்.ஜி.ஆரை தொட முயன்று அடித்து வீசப்பட்டேன் - ஜேப்பியார்.
" 1954 ஆம் ஆண்டில் நான் S S L C படித்து முடித்திருந்தேன்.பெண்களை தொட்டுப் பார்க்க துடிக்கும் வயது அது. ஆனால் நான் தொட்டுப் பார்க்க விரும்பியதோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை. அப்படி ஒரு அழகு, தேஜஸ் அவரிடம். 'இன்பக்கனவு' நாடகம் நடந்தபோது மேடைக்கே போய் விட்டேன். நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அருகில் போய்விடலாம் என்று முயன்றால் அடித்து தொலைதூரம் வீசப்பட்டேன்.அப்படி யொரு அடியை அதற்கு முன் நான் வாழ்வில் பெற்றதில்லை. அடிக்கு பயந்து எம்.ஜி.ஆரைத் தொடும் ஆசையை விட்டுவிடவில்லை.'நாடோடி மன்னன்' வெற்றி விழாவிலும் எம்.ஜி.ஆரைத் தொட முயன்று முன்பைவிட வலுவான அடி, உதை கிடைத்தது.
1962ல் எனக்குத் திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எம். ஜி.ஆரைக் காண பாலர் அரங்கம் (கலைவாணர் அரங்கம்) சென்றேன். குழந்தையோடிருந்தால் எப்படியும் அங்கு நடைபெறும் விழாவுக்கு வரும் அவரை நெருங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு. அது வீண் போகவில்லை. என்னைப் பார்த்ததும் அருகில் வரச் சொன்ன எம்.ஜி.ஆர். 'உன் குழந்தைக்கு பெயர் சூட்டத்தானே கொண்டு வந்திருக்கிறாய் ? ' என்று கேட்டார். நானும் ஆமாம் என்று தலையாட்டினேன். "என்ன பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறாய் ? " என்று கேட்டார். "நீங்களே ஒரு பெயர் சூட்டிவிடுங்கள் " என்றேன். "இல்லை பெற்றோர் கருத்து தெரிந்து தான் சொல்வேன்" என்றார். விடாமல் நானும் "ராஜேஸ்வரி" என்ற பெயரைச் சொன்னேன். "விஜய ராஜேஸ்வரி" என்று பெயர் சூட்டினார். அதற்கு பின் எம்.ஜி.ஆரிடம் வந்துவிட்டேன். எனது வாழ்க்கையே அவரோடுதான் என்றானது" - AVM நினைவு அறக்கட்டளை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி சொற்பொழிவில் 'சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார் பேசியதிலிருந்து - "
'#இதயக்கனி' ஆகஸ்ட் 2008 இதழிலிருந்து .
18 -06 -2020 திரு ஜேப்பியாரின்
4 ம் ஆண்டு நினைவு நாள்.
Ithayakkani S Vijayan.........