Sivaa sir,
Excellent, wonderful evidences. many many thanks.
This is the first time I see 'Thiyagam' silver jubilee advertisement at Madurai Chintamani.
More and more please.
Printable View
Sivaa sir,
Excellent, wonderful evidences. many many thanks.
This is the first time I see 'Thiyagam' silver jubilee advertisement at Madurai Chintamani.
More and more please.
16/05/2014 அன்று 55 வயது பூர்த்தி செய்யும் தமிழர்களின் பெருமை .உலக அளவில் தமிழர்களை கொண்டு சேர்த்த பெரும் பெருமை. மிக அதிக திரையரங்களில் 100 நாட்கள் (13 இல் 97 நாட்கள் மரகதம் பட வெளியீட்டால்)கண்டது.(30 க்கும் அதிகமான )
வீர பாண்டிய கட்ட பொம்மன் -1959
என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
வீரபாண்டிய கட்டபொம்மனில் இன்னொரு அம்சத்தை நீங்கள் கவனித்தே ஆக வேண்டும். நான் குறிப்பிட்ட ten commandments ,Benhur ,Lawrence of Arabia போன்று multi -agenda கொண்ட வலுவான கதையம்சம்,உணர்ச்சி குவியல்கள்,பல்வேறு வலுவான பாத்திரங்கள் கொண்டதல்ல கட்டபொம்மன். 1791-1799 வரையான வெள்ளையர்களுடன் கருத்து வேறுபாடு,மோதல்,சக சிற்றரசர்களின் துரோகம் ,ஒன்றிரண்டு confrontation ,சமமற்ற போர் ,பிடிபட்ட பிறகு தூக்கு என்று ஒரே பாத்திரத்தை மட்டுமே நம்பிய ஒற்றை agenda கொண்ட படம். நான்கே முக்கிய காட்சிகள். ஜாக்சன் துரை யுடன் வாக்குவாதம்,தானாபதி பிள்ளை சம்பத்த பட்ட காட்சி,தப்பி சென்ற கால காட்சிகள், இறுதி தூக்கு மேடை காட்சி இவ்வளவுதான் முக்கியம். மற்றதெல்லாம் நிரவல். Hyper Rhetoric என்று ஒற்றை அம்ச படம்.
ஒரு Artist Portfolio Repertoire என்ற ஒரே விஷயத்துக்கு மட்டுமே இவ்வகை படங்கள் தகுதி கொண்டது.
மேற்கூறிய அம்சத்தை கட்டபொம்மனில் நீங்கள் கவனிக்க கூட முடியாமல் ஒரு cult படமாக,தமிழின் பிரம்மாண்ட படமாக உங்களை இன்று வரை அசை போட வைத்தது இரண்டே அம்சங்கள். நடிகர்திலகம், மற்றும் தயாரிப்பில் பிரம்மாண்டம்.
இப்படத்தின் வெற்றி ஏற்கெனவே தீர்மானிக்க பட்டது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நடிகர்திலகம் இந்த பாத்திரத்தில் நடிக்க படம் தயாரிக்க படுகிறது என்றதுமே ,எல்லாமே முன்முடிவு செய்ய பட்ட ஒன்றாகி விட்டது.
வீர பாண்டிய கட்ட பொம்மன் -1959
நடிப்பு மற்றும் complexity in character என்று பார்த்தால் ,மிக ஆராய்ந்தால் VPKB நிச்சயமாக அவருடைய Top 10 இல் வர முடியாது. ஆனால் நீங்கள் என்னிடமோ ,அல்லது யாரிடம் கேட்டாலும் இந்த படம் ஒரு பரவச அனுபவம், mesmerism முறையில் கட்டுண்டது போல ஒரு மயக்க ட்ரான்ஸ் நிலை. மற்ற படங்களை பற்றி வேறாக சொல்வோர் சிலர் இருக்க முடியும். ஆனால் VPKB பற்றி கேட்டால் ,அது எந்த தமிழனாக இருந்தாலும் சொல்லுவது ஒரே பதில். நான் சொன்ன மாதிரி single agenda நேர்கோட்டில், hyper ஒரு முகப்பட்ட உணர்ச்சி நிலை, ஒரே நோக்கம், ஒரே மையம் என்று போகும் இந்த படம் எப்படி இதனை சாதிக்க இயலும்?நான் பார்க்கும் போது என் முன்னோர்களுக்கு இருந்த folklore epic image கிடையாதே?அடுத்த தலைமுறையும் இந்த படத்தை சிலாகிக்கிறதே ,எப்படி சாத்தியமானது?எந்த மந்திரம் அதனை சாதித்தது?
நடிகர்திலகம் Focusreach முறையில் நம் ஆத்மாவுக்குள் நுழைந்து சாதித்த அதிசயம்.
தன் ஆத்மாவுக்குள் அந்த வீரனை நுழைத்து அவர் சாமியாடியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.Hysteric delirium which mesmerises the audience with psychedelic trip .
இந்த படம் நடிகர்திலகத்தின் focusreach கொண்டே cult status அடைந்து ,எந்த கலைஞனை கேட்டாலும் இந்த பட காட்சியை நடித்ததே தன் முதல் audition என்று சொல்ல வைத்த அதிசயம்.இதை விரிவாக பார்ப்போம்.
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
5)வித விதமான வேறு பட்ட முயற்சி,சிந்தனை அதன் வழி செயல் பாடுகள்.
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
எனக்கு தெரிந்த அளவில் இந்த focusreach அதிசயம் ,இந்த படத்தில் நடிப்பினால் அமைந்த அதிசயம் எந்த இந்திய படத்துக்கும் அதற்கு முன்போ பின்போ நடந்ததே இல்லை.
வீரபாண்டிய கட்டபொம்மனில் என்னை மிக மிக கவர்ந்தது அவர் வீரத்தை மட்டுமே காட்டாமல் எதிரி தன்னை மீறியவன் என்றுணர்ந்து விவேகம் காட்டுவார். மானத்தை துறக்காமல் சமாதான வாசல்களை திறந்தே வைப்பார். ஜாக்சன் துரை தன்னை அவமதித்து அலைக்கழித்த போதும் ,பொங்கி வரும் கோபம் அடக்கி முடிந்த அளவு பொறுமை காப்பார் .நட்பு நாடி வந்ததை குறிப்பார். பிறகு தானாபதி பிள்ளை தப்பி வந்து இன்னொரு சமாதான முயற்சி குறித்து பேச,பொங்கியெழும் ஆலோசனை குழுவை அணைத்து பேசி, சமாதானத்தை யோசிப்பதில் தவறில்லை என்று மெல்லிய தொனியில் வலிக்காமல் சொல்லுவார். தானாபதி பிள்ளை நெற்களஞ்சியத்தை கொள்ளையிட்டு பாண்டி தேவரையும் கொலை செய்து விட்டது சமாதான கதவுகளை நிரந்தரமாக மூடி விட்டதறிந்து கொதிப்பார். பிறகு வேறு வழியின்றி வருவது வரட்டும் என்று தன் மந்திரியை காத்து ,போருக்கு மனதளவில் தயாராவார். இதில் அவர் மேலுக்கு இலகுவாக இருப்பதாய் வரும் சில காட்சிகளில் கூட சிங்கார கண்ணே, மனைவி, வெள்ளையத்தேவன் கல்யாணம்,குழந்தையுடன் பேசுவது எல்லா சந்தர்ப்பங்களிலும் ,ஒரு கவலை கலந்த சிந்தனை ரேகை (stress )அவர் முக குறிப்பில் தோன்றிய படியே இருக்கும்.போருக்கு தயாராகும் காட்சியில் கூட ஒரு வீரனாக தயாரானால் கூட எதிரி தன்னை மீறிய சக்தி படைத்தவன் , வாய்ப்பு குறைவுதான் என்ற அவநம்பிக்கை கலப்பு நன்றாக அவர் குறிப்பில் தொனிக்கும்.
மிக சிறந்த காட்சிகள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஜாக்சன் சந்திப்பு, தானாபதி பிள்ளை தவறிழைக்கும் காட்சி,பிடி படும் காட்சி,இறுதி பானர்மென் விசாரணை தூக்கு காட்சி ஆகியவை .
ஜாக்சன் பேட்டிக்கு உள்ளே வரும் போதே எச்சரிக்கையுடன் அக்கம் பக்கம் பார்த்து நுழைவது, நாற்காலி இல்லாததால் சுற்று முற்றும் பார்த்து பேட்டியில்லை, அவமதிப்பே என்றுணர்ந்தாலும், நாற்காலி பறிப்பதுடன் தன் தாழா நிலையை குறிப்புணர்த்தி , பிறகு சற்றே ஆசுவாசம் கொள்வார் ,கை கால்களில் படபடப்பு கோபம் தெரிய ,சிறிதே தணிவார் .ஆனால் பேச்சு குற்றம் சாட்டும் தொனியில் ஆரம்பிக்க பொறுமை மீறி ,படபடப்புடன் எதிர்ப்பை அதிக படுத்தி கொண்டே போவார்.
என்னுடைய ஆதர்ஷ காட்சி ,தானாபதி பிள்ளை நெல்லை கொள்ளையிட்டதால் ,அவரை ஒப்படைக்க சொல்லி தூதன் ஓலையுடன் வரும் காட்சி. முகபாவம்,உடல் மொழி, அசைவுகள்,வசன முறை எல்லாவற்றிலும் உச்சம் தொடும் அதிசய காட்சி.குற்றச்சாட்டின் வலிமை அறிந்து ,அதன் தன்மையை மந்திரி உணர்கிறாரா என்று ஆழம் பார்ப்பதும், தன் பதவிக்குரிய விவேகமில்லாமல் பேசும் மந்திரியின் பேச்சினால் நிலை குலைந்து, தன் சுற்றி இருப்பவரிடம் தான்தான் அரசன் என்று குறிக்கும் ஒரு அர்த்த புஷ்டியான ஒரு எச்சரிக்கை குறிப்பை காட்டி ,மந்திரியிடம் நீறு பூத்த நெருப்பாக வஞ்ச புகழ்ச்சியில் ஆரம்பித்து ,படி படியாய் நிலைமையின் தீவிரத்தை குற்றச்சாட்டை உணர்த்தும் பாங்கு இந்த காட்சியை உயரத்தில் வைக்கும்.பிறகு குழுவின் நலன் கருதி மந்திரியை காத்து விட்டாலும் வருவதை தடுக்க இயலாது என்ற விரக்தி கலந்த இயலாமையுடன் தூதரின் மேல் தேவை இல்லாமல் பாய்வார்.
தன்னை பிடிக்க ஆள் அனுப்பிய புது கோட்டை மன்னருக்கு இவர் சொல்லும் ராஜாதி ராஜ கட்டியம் ஒவ்வொரு செருப்படி போல தொனிக்கும். தன்னை காண விரும்பவில்லை என்றதும் கேலி,ஏமாற்றம் கலந்த எள்ளலுடன் சொல்லும் வாழ்க ,தூக்கு தண்டனைக்கு ஈடானது.
கடைசி காட்சி "Back to the wall resolution " என்ற catharsis ,venting out anger ரக காட்சி.இதிலே நான் கண்ட சக்தி எந்த படத்திலும் ,எந்த நடிகனிடமும் கண்டதில்லை. இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில் , நிலையற்ற அந்நியனிடம் பணிந்த தன் சகாக்களிடம் ஈனமாக வெடிக்கும் கோபம் ,அந்நியனிடம் மூர்க்கம் கலந்த வன்மையான இயலாமை கலந்த வருவது வரட்டும் என்ற கோபம் என்று இவர் வெடிக்கும் காட்சி ஒரு dynamite நம் நாற்காலிக்கு கீழேயே வெடித்த உணர்வில் நாம் பிரமையுடன் வெளியேறுவோம்.
திரு. ஆரூர் தாஸ் அவர்கள் மிகவும் சிறந்த வசனகர்த்தா என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால தினத்தந்தியில் வரும் இந்தத் தொடரில் பல இடங்களில் தன்னுடைய பெருமையை நிலைநாட்டும் வகையிலேயே எழுதியிருக்கிறார். தினத்தந்தியின் இன்றைய பகுதியில் கூட, தெய்வமகனைப்பற்றிக் குறிப்பிடும்போது, ஒரு வசனக் காட்சியை நீளமாக இருக்கிறது என்று கூறி நடிகர்திலகம் பேச மறுத்ததாகவும், தான்தான் வற்புறுத்தி பேசவைத்ததாகவும் கூறியிருக்கிறார். 40 பக்க வசனமானாலும் நச்சென்று பேசும் நம் நடிகர்திலகம், நான்கு அடி வசனத்தைப் பேச மறுத்தார் என்பது நம்பக்கூடியதாக இல்லை. இதுபோல, பல தடவை அவர் சொல்லியிருப்பதால்தான் இதனைக் குறிப்பிடுகிறேன். பல கதாநாயகர்களுக்கு அவர் வசனம் எழுதியிருந்தாலும், குறிப்பாக, நடிகர்திலகம் அவர்களுடைய திரைப்படங்களால்தான் ஆரூர் தாஸ் என்பவரே வெளியுலகுக்குத் தெரியும் என்பதை அவரே மறுக்கமுடியாது. நடிகர்திலகம் வந்து மறுக்கப்போவதில்லை என்பதற்காக அவரைவிட தான் பெரியவன் என்ற போக்கில் ஆரூர் தாஸ் எழுதி வருவதை சுட்டிக்காட்டவேண்டும் என்று தோன்றியதால் இதனைப் பதிவிடுகிறேன்.
http://i1234.photobucket.com/albums/...ps27906980.jpg
கட்டபொம்மன் - சிறப்பான பதிவு.
டியர் கோபால் சார்,
கட்டபொம்மன் - ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வெற்றி என்று 1959 வெற்றியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவ்வப்போது மறுவெளிவீடு செய்தபோதெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறது. இப்போது 2014 அல்லது 2015-ல் டிஜிட்டலில் மறு வெளியீடு செய்தாலும் அப்போதும் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அவருடைய ஆற்றலுக்கு ஈடு கொடுக்கும் இயக்குனர்களோ,கதாசிரியர்களோ நம்மிடையே இல்லை.(தில்லானா தவிர) அவருடைய மிக சிறந்தவை பெங்காலி,கேரளா ,hollywood இலிருந்து வந்தவையே.
தெய்வ மகனை எடுத்தால் அவர் அந்த(kannan) பாத்திரத்தை execute செய்ததற்கும்,ஆரூர்தாஸ் வசனம் எழுதிய விதத்துக்கும் mis match இருக்கும். அதனாலேயே பாகம் இரண்டில் ,எல்லாவற்றையும் ஒதுக்கி அவர் நடிப்பு மட்டுமே ஆராய படும் என்று என்று மற்றவற்றை உறைநிலையில் வைத்தேன்.
தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு ......
Gopal Sir. The greatest contributor to modulated tamizh pronunciation, is our NT. Paechchuth thamizh enbathu uchcham adaindhathu NT varugaikkup pinnare enbathai ullankai nellikkaniyaga eduththuraiththadharkku nandri. Enthralled with your schematic presentation on VPKB. Hats off sir.
என்னை கவர்ந்த நடிகர்திலகத்தின் நடன காட்சிகள்-
1952- 1960
தேசம் ஞானம் கல்வி(பராசக்தி), ஆணும் பெண்ணும்,சுந்தரி சௌந்தரி,குரங்கிலிருந்து,அபாய அறிவிப்பு,ஏறாத மலைதனிலே,(தூக்கு தூக்கி), விண்ணோடும் முகிலோடும்(புதையல்), சிவதாண்டவம்(ராணி லலிதாங்கி),யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), கனவின் மாயா லோகத்திலே(அன்னையின் ஆணை),காணா இன்பம்(சபாஷ் மீனா), கண்டேனே உன்னை கண்ணாலே(நான் சொல்லும் ரகசியம்),தேரோடும் எங்க சீரான மதுரையிலே(பாக பிரிவினை), கொடுத்து பார் பார் பார்(விடிவெள்ளி).
1961-1970
பறவைகள் பலவிதம்(இருவர் உள்ளம்),வந்தேனே (நவராத்திரி), பார்த்தா பசு மரம்(திருவிளையாடல்),ஓஹோஹோ little flower (நீலவானம்)டே க்கா கொடுக்கதப்பா,பத்து மாதம்(பேசும் தெய்வம்),அய்யய்யா, நான் பொறந்தது தஞ்சாவூரு(என் தம்பி), ஹாப்பி இன்று முதல் (ஊட்டி வரை உறவு),தங்க தேரோடும், போட்டாளே (லட்சுமி கல்யாணம்),ஏழு கடல்(எங்க ஊர் ராஜா), டான்ஸ் நிர்மலாவுடன் (தங்க சுரங்கம்),கோயில் டான்ஸ்(குரு தக்ஷிணை),அன்புள்ள நண்பரே,காதலிக்க கற்று கொள்ளுங்கள்(தெய்வ மகன்),ஆடல் காணலாம்(நிறை குடம்),என்னங்க (எங்க மாமா),சிரிப்பில்(எங்கிருந்தோ வந்தாள் ),பொன்மகள்(சொர்க்கம்).
1971-1980
தேரு பார்க்க(இரு துருவம்),பொட்டு வைத்த, ஒரு தரம் (சுமதி என் சுந்தரி),வரதப்பா(பாபு),கல்யாண பொண்ணு(ராஜா),அம்பிகையே,அடி என்னடி,கேட்டுகோடி (பட்டிக்காடா பட்டணமா), love is fine (தவ புதல்வன்), ஏன் ஏன் ஏன் ,குடிமகனே, ஆதி வாசி மழை டான்ஸ்(வசந்த மாளிகை),மாப்பிள்ளையே(நீதி), சிவதாண்டவம்(பொன் ஊஞ்சல்),மும் மும் மும் முத்தங்கள் (எங்கள் தங்க ராஜா), I will sing for you (மனிதரில் மாணிக்கம்), இனியவளே ,ஆடிக்கு பின்னே (சிவகாமியின் செல்வன்), நான் பார்த்தாலும் பார்த்தேனடி(தாய்),நல்லதொரு குடும்பம்(தங்க பதக்கம்),சோன் பப்பிடி(என் மகன்)கன்னங்கருத்த(Dr .சிவா),சிவகாமி ஆட,உலகம் நாம் ஆடும்,my song is for you (பாட்டும் பரதமும்),ராஜா யுவ ராஜா(தீபம்),கோவில் டான்ஸ்(தியாகம்), வேலாலே, ஆணாட்டம்,மௌனம் கலைகிறது(என்னை போல் ஒருவன்),என் ராஜாத்தி,காதல் ராணி(திரிசூலம்),பூ மொட்டு(யமனுக்கு யமன்),ஆடல் பாடலில்(வெற்றிக்கு ஒருவன்).
1981-1990
குற்றால அருவி(லாரி டிரைவர் ராஜா கண்ணு),ராத்திரி நிலாவில்(சந்திப்பு)
1991-2000
சின்ன சின்ன காதல் (once more ), தேவராட்டம்(என் ஆசை ராசாவே)
சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
அத்தியாயம் ஏழு
*
“சரி.. ஹீரோயினுக்கு டயலாக்ஸ் இருக்கு..இதான் காட்சி..இப்படிப் பேசுவாங்கன்னு சொல்றீங்க.எல்லாம் ஓகே.. அப்ப நான் இந்தக் காட்சியில என்ன பண்ணனும்”
*
கேட்டவர் நடிகர் திலகம்..
*
“நீங்க ஒண்ணுமே பண்ணக்கூடாது அடக்கி வாசிக்கணும்..அப்பத் தான் அந்தம்மாவோட பாத்திரம், அப்புறம் இந்தக் காட்சி எடுபடும்..” சொன்னவர் டைரக்டர்..
*
ந.தி. மறுத்து எதுவும் பேசவில்லை.. நீங்கள் சொன்னால் சரி..அப்படியே செய்கிறேன்..
*
அப்படியே நடித்ததில் அந்தக் காட்சியும் பேசப்பட்டது.. வித்யாசமாய் ந.தியும் நடித்திருந்தார் எனவும் சொல்லப் பட்டது..(ஒய்.ஜி மகேந்திரனின் நான் சுவாசிக்கும் சிவாஜி கட்டுரையிலிருந்து)
*
அந்த டைரக்டர்.. எல்.வி பிரசாத்.. ராஜபார்வையில் தாத்தாவாக நடித்தவர்.. முன் சில படங்களில் நடித்திருந்தாலும் ரா.பா வில் தான் எனக்கு இவரைத்தெரியும்..
*
படம்.. இருவர் உள்ளம்..
*
சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் என்னிடம் தொலைபேசிய போது- இருவர் உள்ளம் பற்றி எழுதலாம் என ஆசை என்ற போது –அவர் உணர்ச்சி வசப்பட்டார்..ஓ.. அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்குமே..என.அப்படிப் பலரைக் கவர்ந்த படம் அது
*
படத்தின் மற்ற டீடெய்ல்ஸ் பற்றி வேண்டுமென்றால் பக்கத்து வீட்டிற்குச் சென்று ராகவேந்திரா சாரின் கட்டுரை படிக்கலாம் ( நற நற..) ( நான் எழுதறதுக்கு முந்தி எழுதிட்டார்..)
*
ஹாஸ்யம், நடிப்பு, இனிமை நிறைந்த பாடல்கள், பரபரப்பான வசனம்(.கலைஞர் மு.க) , தொய்வில்லாத திரைக்கதை என்று இருக்கும் படத்தில் ந.தியின் சகோதரராக எம்.ஆர்.ராதா… கடைசியில் அவரது பழைய தோழியைக் கொல்பவராக டி.ஆர். ராமச்சந்திரன்..
*
அழகு சிரிக்கின்றது, நதி எங்கே போகிறது, பறவைகள் பலவிதம் என என்றும் பசுமையான கானங்களின் மத்தியில் ஒரு அழுகை பாடல் – அதுவும் ஸோ ஸ்வீட் தான்..
*
ஆசைப்பட்டுக் காதலித்து சந்தர்ப்ப சூழ் நிலையால் திருமணமும் புரிந்த அழகிய நங்கை வெறு வெறு என வெறுக்க என்ன செய்வது என்ற இயலாமைத்தவிப்பைத் தன்னுள் அடக்கி, அவளுக்குப் பிரியமானவனாக மாறுவதற்காகப்பாடு பட்டுக்கொண்டிருந்தால்…
*
என்ன ஆகிறது..ஒவ்வொரு முறையும் ஒரு தடங்கல்.. ந.தியால் என்ன செய்வது என்று புரியவில்லை..அப்படியும் ஒரு சந்தர்ப்பத்தில் தான் விரும்பிய மங்கை (சர்ரோஜாதேவி) தன்னைப் புரிந்து கொண்டு விட்டாள் என்பது தெரியாமல் மனம் நொந்து பாடும் பாடல் தான் அது..
*
கண்களில் உறைந்த கண்ணீர், உணர்வுகளில் துடிக்கும் சோகம், நன்றாகப் பாடிய பின்னணி டி.எம்.எஸ்ஸிற்கு ஏற்ப வாயசைப்பு என அசத்தியிருப்பார் ந.தி.. பாடல் ஏன் அழுதாய் ஏன் அழுதாய் என்னுயிரே ஏன் அழுதாய் நான் அழுதுஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ..
*
அந்தப் பாடலில் உடல் நிலை சரியில்லாமல் அவரன்பை உணர்ந்துவிட்டதைச் சொல்லத் துடிக்கும் கன்னடத்துப் பைங்கிளியாக சரோஜாதேவியும் நன்கு செய்திருப்பார்..
*
எல்லாப் பாடல்களுமே அருமை.எம்.ஆர்.ராதா வித்யாசமான நகைச்சுவை.. ஆறு பிறந்தது போதுமென்று நான் ஆறு குளமெல்லாம்மூழ்கி வந்தேன் காசி ராமேஸ்வரம் சென்று வந்தேன் என அவர் பாட டி.பி. முத்து லட்சுமி – போதாது அய்யா போதாது உயிர்போனாலும் ஆசை போகாது எனப் பாட – பக்கென சிரிப்பு வரும்..
*
படம் பார்த்தது ரீ.ரன்னின் போது தான்.. பரமேஸ்வரி தியேட்டர்..
*
லஷ்மி என்ற பெயரில் டாக்டர் திரிபுர சுந்தரி என்பவர் எழுதிய பெண் மனம் நாவல் தான்.. படித்ததில்லை.. ஆனால் அவர் எழுதிய வேறு சில நாவல்கள் படித்திருக்கிறேன். மிதிலா விலாஸ், அத்தை, நல்லதோர் வீணை…கதவு திறந்தால்…. பெண்களைக் கவரும் வண்ணம் எழுதுவதில் வல்ல எழுத்தாளர் அவர்..அதில் இந்த அத்தை என்ற நாவல் –எழுதுவதற்கு முன்னால் 22 வருடங்கள் தென்னாப்பிரிக்காவில் வேலை பார்த்தார்..பின்பு தான் அவ்வளவு இடைவெளி எழுத்தில் விட்டதற்கப்புறம் எழுத வந்து வெற்றி கரமாய்த் தொடர்ந்தவர் அவர்..
*
இருவர் உள்ளம் – ந.தியைப் பற்றிச் சொல்லவேண்டுமானால் – தோற்றம், கண்கள், நடை, நடிப்பு (எந்தவித) – என எல்லாவிதத்திலும் துள்ளிடும் இளமை ஒவ்வொரு ஃப்ரேமிலும்..
*
இன்னும் எழுதலாம்..ஆனால் கோபால் ராகவேந்திரர் முரளி போன்றோரை விட நான் என்ன எழுதிவிட முடியும் எனில் விட்டு விடுகிறேன்..
*
அடுத்த சிரிப்புக்கான இந்தப் படம் பார்த்தால் படத்தினுள் சோகம் பொதிந்து இருக்கும்.. இருப்பினும் ந.தியின் சிரிப்பு ஒரு இடத்தில் ரொம்பப் பிடிக்கும்..
*
ஹீரோயின் சப்ஜெக்ட் தான்.. ந.தியின் அற்புத நடிப்பு உண்டு படத்தில்.. துணைக்கு வேறு நடிக நடிகையரும் உண்டு.. ந.தி, ஹீரோயின், மற்ற ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் நன்கு நடித்திருப்பார்கள்.. குறை எதுவும் வைக்கக் கூடாதென்று டைரக்டர் படத்தில் ஜடப்பொருளான ஒரு டார்ச்சையும் நன்கு வேலை வாங்கியிருப்பார்..அதுவும் நன்கு நடித்திருக்கும்..!
*
இனி அடுத்த போஸ்டில் சந்திக்கிறேனே என்று சொல்வதற்குமுன்..
*
முரளி ராகவேந்திரர் ரவி, ராகுல் கோபால் எல்லாருக்கும் என் மேல் ஒரு வருத்தம் உண்டு..அதுவும் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கவே கேட்காதவன் நான் என்று.. எனில் அவர்களின் வருத்தத்தைப் போக்க நானும் கேட்டு
விடுகிறேன்..
*
(கல்நாயக்- யார் சார் நீங்க?! ( எஸ்ஸ்ஸ்கேப்..)
*
தொடரும்..
இந்த சார் போடும் வழக்கத்தை விட்டொழித்து தொலைக்கவும் .கருமம் .outdated . அல்லது எல்லோருக்கும் சேர்த்து தொலைக்கவும்.முரளி ,ராகவேந்தர் கிழட்டு --------- என்று அர்த்தம் தொனிக்கவில்லையா ?
அதுசரி நான் எப்போது கல்நாயக் பற்றி விசாரிக்க சொன்னேன்? யார் என்ன பெயரில் வந்தாலென்ன ?பதிவுகள் சுவாரஸ்யமா என்று பார்க்கும் ரகம் நான் . (கவுண்டமணி பாணியில் கோழி குருடா இருந்தா என்னடா ,குழம்பு ருசியா இருந்தா சரிதான் )
கோ..பா...ல்..(சரோஜாதேவி குரலில் படிக்கவும்) நீங்கள் மற்றும் நான் சொல்லிய எந்த நண்பர்களுமே எதுவும் சொல்லவில்லை..அது ஒரு நகைச்சுவைக்காக சும்மா நான் எழுதியது.. அம்புட்டு தேன்.. :) வழக்கமா எழுதற முத்தாய்ப்பு இதில் எழுதவில்லை..அதான் காரணமோ..
*
ஏதேனும் தவறிருப்பின் மன்னிக்க :)
சின்னக்கண்ணன், உங்களுடைய இருவர் உள்ளம் ஆய்வுக்கட்டுரை வழக்கமான துள்ளலுடன், நகைச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கிறது.
நான் டீன்-ஏஜில் நுழைகின்ற சிறுவனாய் முதன்முதலாக சென்னை வந்தபோது 1982-ல் ஜெயராஜ் என்ற திரையரங்கில் அதன் ரீ-ரிலீஸில் பார்த்தேன். பின்னர் எனது ஊரிலும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன். எனக்கும் படமும் பாடல்களும் மிகப்பிடித்திருந்தன.
நடிகர் திலகம் சற்றே பெரிய உடல் வாகுடன், நடிப்பில் எப்போதும் போல் பின்னி பெடல் எடுத்திருப்பார்.
கதாசிரியைப் பற்றி எழுதியவர், திரைக்கதை, வசனம் எழுதியவர் யாரோ மு. க. வாம், அவரைப் பற்றியும் எழுதியிருக்கலாம். பரவாயில்லை.
அடுத்த படம் என்ன 'துணை'யா?
அப்புறம் கேட்டீங்களே ஒரு கேள்வி. நிச்சயமாக எல்லோருக்கும் வருத்தம் போயிருக்கும். எனக்கும் இப்பதான் நிம்மதியா இருக்கு.
அடடே கோபால் கோச்சுண்டாரே!!!
//இந்த சார் போடும் வழக்கத்தை விட்டொழித்து தொலைக்கவும் .கருமம் .outdated . அல்லது எல்லோருக்கும் சேர்த்து தொலைக்கவும்.முரளி ,ராகவேந்தர் கிழட்டு --------- என்று அர்த்தம் தொனிக்கவில்லையா ?// இல்லை அது டைப்படிக்கும் போது விட்டது..கோபால் சார் என்றும் எழுதியிருக்க வேண்டும்.. ராகுல் ரவி இளைஞர்கள்.. மற்றவர்கள் என் வயது/ என்னைவிடப் பெரியவர்கள் என்பது தான்..(அறிவில் எழுத்தில்,அனுபவத்தில் ) சரி இனிமேல் நான் யாருக்குமே சார் போடுவதில்லை..சரியா சார்..:) (ஆமா ஆண்களுக்கு சார் போடாமல் மேடமா சொல்ல முடியும் என்னமோ போங்க கோபாலா.:).)
கல் நாயக் தோழா..
திரைக்கதை எழுதிய மு.க பற்றி எழுத நினைத்திருந்தேன்..அது விடுபட்டு ப் போயிற்று.. அப்புறம் போஸ்ட் பண்ணிவிட்டேன்..என்னவென்று தெரியவில்லை. இண்ட்..எக்ஸ்ப்ளோரரில் எடிட்டிங் ஆப்ஷன் வொர்க் ஆகவில்லை..அதான் இட முடியவில்லை..
*
இல்லை துணை இல்லை :)
கோபால், கல் நாயக் - எடிட் செய்து விட்டேன்..படம் வெகு நாட்களுக்கு முன் பார்த்ததாகையால் வசனங்கள் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை..
ஆய்வு கட்டுரை என்ற வார்த்தையை எல்லாவற்றுக்கும் போட்டு ஏன் அதன் அர்த்தத்தையே சிதைக்கிறீர்கள்?
நான்,பிரபு,முரளி,சாரதா,கார்த்திக்,சாரதி எழுதுவது மட்டுமே இந்த ரகம்.
வாசு சாருடையது விவரண ஆவணங்கள் வகை சுவாரஸ்யம்.
மற்றதை விமரிசனம்,நீண்ட பதிவு,துணுக்கு என்று வகை படுத்தலாம்.
சிலவற்றை ஆர்வ கோளாறு வகையில் சேர்க்கலாம்.
ராகவேந்தர் எல்லா ரகத்திலும் கொஞ்சம் தொடுவார்.
கணேஷ்,சி.க அங்கத பதிவுகள்.நகை பதிவுகள்.
பம்மல்(இலங்கை பம்மல் சேர்த்து ) முழுக்க உண்மை ஆவண பதிவுகள்.
என்னுடைய சில ஆணவ பதிவுகள்.நாட்டாமை முரளி அதிகார ஆணவ பதிவுகள்.
ஆயிர கணக்கில் குறுகிய காலத்தில் ஒரே பெயரில் கொடகொடவென்று கொட்டுவதை சீத (பே )ப(தி)வுகள் என்று வகை படுத்தலாம்.
மேலும் சில பதிவுகள்.
சந்திரசேகர்- என்ன புரிகிறதோ ,எல்லாத்துக்கும் தலையாட்டு பதிவுகள்.
எஸ்.வாசுதேவன்- ஹையா ,கம்ப்யூட்டர் கிடைச்சாச்சு ஒரு வினாடி பதிவுகள்.
கல்நாயக்- குசும்பு உள்குத்து சுவை பதிவுகள்.
ஆதிராம்- உள்ளேன் ஐயா பதிவுகள்.
சிவாஜி செந்தில்- achchachcho ennaachcho padhivugal .
ராகுல்ராம் -அபூர்வ மறந்த பட எழுத்து சித்தர்.(ஊருக்கு ஒரு பிள்ளை.வாழ்க சிரஞ்சீவியாய்)இக்கால முனுசாமி.
ரவி- மாணிக்க இரட்டை நாயன பதிவுகள்.
ரவிகிரன்-ராமன் எத்தனை ராமனடி பதிவுகள்.
பம்மலார் ,
அவர் வராவிட்டாலும் அவர் நினைவு நம்மை விட்டு விலக மாட்டேன் என்கிறது. தனக்கு பிடித்த பாடலாக அவர் குறிப்பிட்டது.....(பேசும் போது )
மயக்கம் எனது தாயகம்.
மவுனம் எனது தாய்மொழி.
தயக்கம் எனது காரியம்.
நான் தண்ணீர் வரைந்த ஓவியம்.
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் சிறையானேன்
(நடிப்பு )தெய்வம் வந்தாலும் விளங்காது!!!!
நல்ல கருத்துள்ள அற்புத பாடல்.பலர் உள்ள நிலையை விளக்குவது.
(அவர் புத்தகத்துக்கு முன்பணம் அனுப்பி விட்டீர்களா நண்பர்களே?)
கோபால் - தெரியாத்தனமாக சந்திரபாபு , sorry Yukesh Babu உங்களை அதிமேதாவி என்று குறுப்பிட்டார் - கொஞ்சம் கூட யோசிக்காமல் கல்நாயக் அது உண்மைதான் என்று certificate வேறு கொடுத்து விட்டார் - நாங்கள் எல்லோரும் யோசித்து எங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்குள் கல்நாயக் அவர்களுக்கு என்ன அவசரம் என்று புரியவில்லை தன் தனிப்பட்ட கருத்தை தெரிவிப்பதில் --- நீங்கள் அதிமேதவியாகவே இருங்கள் - ஆனால் அதற்காக அதிகமாக மே மாதத்தில் தாவி தாவி எல்லோரோரையும் இப்படி கலாய்க்கக வேண்டுமா நண்பரே ? ஏதோ எங்களுக்கு தெரிந்ததை எழுதுகிறோம் , தவறிருக்கலாம் - method of writing எங்களுக்கு தெரியாத ஒன்று - CK மாதிரி பாதி சிரித்துக்கொண்டும் பாதி அழுது கொண்டும் எழுதுகிறோம் , முரளியைபோல் புத்தரின் கோட்பாடுகளை கடைப்பிடித்து வார்த்தைகளில் உஷ்ணம் வராமல் பார்த்துகொள்கிறோம் - CS மாதிரி பதிவிடும் எல்லோரையும் மனம் உவந்து பாராட்ட கற்று கொண்டுருக்கிறோம் - கல் நாயக் மாதிரி நகைச்சுவைகளை அடுத்த திரியிலிருந்து வாங்கியாவது இங்கே தெளிக்க முயற்சி செய்கின்றோம் - ராகுலை போல எங்களுக்கு பிடித்தவைகளை சுனாமி யின் வேகத்தில் போட்டு கொண்டுருக்கிறோம் - சிவாஜி செந்தில் போல உணர்சிகளை கொட்டுகிறோம் -ஆதிராம் போல இந்த திரியை காவல் காக்கிறோம் - வாசு அவர்களைப்போல புதிய செய்திகளையும் , உடனே பாராட்டுக்களையும் கொடுப்பதில் தவறுவதில்லை - RKS மாதிரி நல்லவர் வணங்கும் எங்கள் ராமனைத்தான் இந்த திரியில் புகழ்ந்து பாராட்டுகிறோம் - யாருடைய நடையையும் பின் பற்றுவதில்லை - யாரையும் போல எழுதுவதும் இல்லை - இதில் எங்கள் நடை தனி நடை - சிங்கமாக single ஆகத்தான் முன்னேறுகிறோம் -
சேர்ந்தே முன்னேறுவோமே ! ( எங்களுக்கும் கலாய்க்க தெரியும் ):smokesmile::-D
dear Gopal Sir. You may be the Vashistar of this channel but who will be the Brahma Rishi? We take your one liners optimistically inasmuch as your contributions to this thread remain indelible and incomparable. Everyone has his individuality and originality in expressing their views in this thread. But all of us are propagating the name and fame of NT under one umbrella. As far as I am concerned, I become emotional when my icon NT is mud slung or his movies and his acting are criticized unscrupulously by filthy persons. I rise up to the occasion to retaliate even as I receive abusive slang from immature literates. Your way of writings I always take as an inspiration and I continue to contribute in my way without any illusions or castles in air within my mind-set. I fall in line with g94..ravi sir. Person like KCS ought to be bit diplomatic because of his position in NT peravai.
தலைவரே,
சும்மா ஜாலி பதிவு. யாரையும் குறைத்து மதிப்பிடவோ,தரம் தாழ்த்தவோ அல்ல. ஒரு நகைச்சுவை முன்னிட்டு,நண்பர்களுக்குள் சின்ன கலாய்ப்பு .
நட்பு குறையாமல்.
என்னை பொறுத்த வரை தில்லை வாழ் அன்பர்தம் அடியார்க்கும் அடியேன் என்பது போல் நடிகர்திலகம் ரசிகர்களின் அடியவர்க்கும் அடியேனுக்கும் அடியேனாகவே என்னை எண்ணி கொள்கிறேன்.எண்ணி கொள்வேன்.என்னை தெரிந்தவர்களுக்கு இது புரியும்.
விலை போகாத நடிகர்திலகம் ரசிகர்களுக்கு மட்டுமே இந்த உரிமை,சலுகை.பந்துலுக்களுக்கு அல்ல.
Dear Gopal Sir. It is just reply that's all. I know the depth and extent of your writing skill that is the backbone to support our NT threads. At times I use to envy upon you and many of our fellow hubbers of NT thread that my contributions by way of data and information is nothing. But, due to my real time commitments. However, I enjoy the dash and verve exhibited by our NT hard core fans like you in presenting NTs accomplishments in a meticulous way. Kindly ignore any hurting piece of my writings.
கோபால் - உங்கள் விளக்கத்திற்கு நன்றி - இந்த திரி எல்லோருக்கும் ஒரு பொதுவான ஒன்று - நிறைய புது முகங்கள் வரும் திரி இது - இந்த திரியிலே உங்களை நன்றாக புரிந்துகொண்டவர்கள் நிறைய பேர் இருக்கலாம் , புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்களும் இருக்கலாம் - முயற்சி செய்து என்னை போல தோல்வி அடைந்தவர்களும் இருக்கலாம் - முயற்சி செய்வது வீண் வேலை என்று நினைப்பவர்களும் இருக்கலாம் - நகைச்சுவை என்பது தானாக வர வேண்டும் - அதற்க்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் அந்த நகைச்சுவைக்கு அர்த்தமே இல்லை - அந்த திரியின் விளக்கம் போல ஆகிவிடும் - நீங்கள் செய்தது நகைச்சுவை என்று நீங்கள் விளக்கம் சொன்ன பிறகுதான் மற்றவர்களுக்கு புரிகின்றது -- அருமையாக எழுதுகிண்டீர்கள் , நடுவில் ஏன் இந்த விஷமத்தனம் ?? யாரயாவது தாக்கியே ஆக வேண்டும் என்று தோன்றினால் அவர்களுக்கு PM அனுப்புங்கள் - ஏன் சுற்றி வளைத்து method of confusion இல் இங்கு எழுத வேண்டும் ?? 2065க்குள் உங்களை சரியாக புரிந்து கொண்டு விடுவேன் என்று நம்புகிறேன் . நான் ஏற்கனவே பதிவிட்டது போல் , நகைச்சுவைக்கும் நம் திரிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை - அவர்கள் திரியில் intensive training எடுத்துகொள்ள வேண்டும் நாம் எல்லோரும் நகைச்சுவையுடன் எழுத - அதுவரை நீங்கள் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தில்லை வாழ் அன்பர்தம் அடியார்க்கும் அடியேன் என்று சொல்லிகொண்டிருக்க வேண்டியதுதான்
அன்புடன்
ரவி
பார்த்ததில் பிடித்தது - 33
1969 ல் வந்த சுஜாதா சினி ஆர்ட்ஸ் வழங்கிய திருடன் படத்தை பற்றி தான் இந்த பதிவு
முதலில் கதை :
திருடன் ராஜு (சிவாஜி ) ஜெயிலில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்தாலும் கைது செய்த இன்ஸ்பெக்டர் (மேஜர் ) பார்வையில் இருந்து தப்பப்வில்லை , காரணம் எந்த குற்றவாளியும் திருந்த மாட்டான் என்பது இன்ஸ்பெக்டரின் எண்ணம் .வெளியே வரும் ராஜுவை , அந்த கூடத்தின் தலைவர் ஜகன்னாத் (பாலாஜி ) மீண்டும் ராஜுவை போன்ற திறமையுள்ள திருடனை தன் கூடத்தில் சேர்க்க துடிக்கிறார் ,
ராஜு எப்படி சிறைக்கு சென்றார் , எப்படி திருடனானர்
சின்ன வயதில் பசியால் துடிக்கும் ராஜுவை விரட்ட படும் பொது ஒரு கோர உருவம் அவன் பசியை தீர்த்து , அவனுக்கு திருட கற்று கொடுகிறது . பிறகு வளர்ந்து ஜகன்னாத் கூடத்தில் சேர்ந்து விடுகிறார் ராஜு , ஒரு நாள் ராஜுவை குழந்தையை கடத்தி வர ஜகன்னாத் சொல்ல , விருப்பம் இல்லாமல் செல்லுகிறார் ராஜு குழந்தையை கடத்தும் போது தாய் பார்த்து விட்டு சத்தம் போட ராஜு குழந்தையை மீண்டும் தாயிடம் கொண்டு சேர்க்கும் போது அந்த தாய் இறந்து போகிறாள். அதற்குள் வேலைக்காரர்கள் போன் செய்ய போலீஸ் வந்து விடுகிறது. ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.
ராஜு மறுத்து , லாரி டிரைவராக வேலைக்கு செல்லுகிறார் .
ஒரு நாள் ட்ரிப் அடிக்கும் பொது , ராஜுவின் லாரியில் ஒளிந்து இருக்கும் ஒரு பையனை பார்க்கிறார் , பார்த்துடன் தெரிந்து விடுகிறது , அது ஆன் அல்ல பெண் என்று அந்த பெண்ணை காணவில்லை என பத்திரிக்கையில் விளம்பரத்தை பார்க்கும் ராஜு அவளை அவள் வீட்டிற்கு கூட்டி செல்ல அங்கே தன் பழைய கூட்டத்தின் ஆள்தான் இந்த பெண்ணின் மாமன் என தெரிந்துக் கொள்ளும் ராஜு அவளை ஒப்படைக்காமல் தன்னுடனே அழைத்து வருகிறான். அந்த பெண் ராதா அவனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க, ராஜு மறுக்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் , அவன் ஒரு திருடன் என்பது . ராதா (kr விஜயா) விடாபிடியாக இருக்கவே கல்யாணம் நடக்கிறது சில வருடங்களில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது . தன் மகளை ஒரு ராணி போல் வளர்கிறார் , அவள் சாப்பிட வெளி தட்டு வாங்கி கொடுக்கிறார் , தன் மகள் பிறந்த உடன் , ஒரு சொந்த லாரி வாங்க வேண்டும் என்று எண்ணம் தோன்ற , அதற்கு கடனாக பணம் வாங்குகிறார் , ஒழுங்காக மாத தவணை காட்டுகிறார் , ஒரு பக்கம் இன்ஸ்பெக்டர் ராஜுவை சந்தேகத்துடன் சுற்றி வர , மறுபக்கம் ஜகன்னாத் ராஜுவை தன்கூட மீண்டும் சேர வேண்டும் என்று திருட்டு பழி போடுகிறார் , அதில் ராஜு தப்பிக , ராஜு கடன் வாங்கிய நபரை தூண்டி பணத்தை ராஜு உடனே தர வேண்டும் என்று நிர்பந்திக்கிறார் .
வாக்குவாதத்தில் ராஜுவின் பழைய வாழ்க்கையைப் பற்றி குத்திக் காட்ட ராஜு அவர் கழுத்தை பிடிக்க அங்கே வரும் இன்ஸ்பெக்டர் பேசி கால அவகாசம் வாங்குகிறார் .இதை மறைந்திருந்துப் பார்க்கும் ஜெகநாத் தன் ஆளை விட்டு லாரியில் மாட்டியிருக்கும் ராஜுவின் கோட்டை எடுத்து வரச் செய்கிறான். அந்த கோட்டை தன் அடியாளுக்கு அணிவித்து முதலாளி வீட்டிற்கு செல்ல சொல்கிறான்.
இந்த சம்பவம் நடக்கும் போது வெளியூர் சென்றிருக்கும் ராஜுவை சந்தேகத்தின் பேரில் போலீஸ் அழைத்து விசாரிக்கிறது. கொலையாளியை நேரில் கண்ட வேலைக்காரனை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அதில் ராஜுவையும் நிறுத்துகிறார். ஆனால் வேலைக்காரன் கொலையாளி ராஜு அல்ல என்று சொல்லிவிட ராஜு விடுவிக்கப்படுகிறான். ஆத்திரம் அடையும் ஜெகநாத், ராஜுவின் லாரியை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் ராஜு வேலை தேடுகிறார் , வேலை கிடைக்காமல் அலாடுகிறார் , திருட போகலாம் என்று நினைக்கும் பொது , ராதா வேலைக்கு செல்லுகிறார் , கிளப்பில் டான்ஸ் ஆடுகிறார் , இது தெரிந்து வெறுப்பின் உச்சிக்கு போகுகிறார் ராஜு , குழந்தை வேறு வறுமையில் வாட , அதை நினைத்து ஒரு வித ஜுரத்தில் படுத்து விடுகிறார் .
வேறு வழி இல்லாமல் உடம்பு குணமானதும் தன் பழைய வாழ்கைக்கே செல்லுகிறார் ராஜு . முதல் assignment வங்கி கொள்ளை. அதை இன்ஸ்பெக்டர்யிடம் சொல்லி விடுகிறார் ராஜு
ராஜு எப்போது இன்ஸ்பெக்டருடன் சேர்ந்தார் ?
தான் எப்படி நல்லவனாக மாறி வாழ நினைத்ததையும் , அதற்கு வந்த சோதனைகளையும் சொல்லுகிறார் , ஜகன்னாத் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவர் தான் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.இன்ஸ்பெக்டர் கடமைக்காக தன் சொந்த மகனை பறிக்கொடுத்த தன்னுடைய பழைய கதையைக் கூறி பழைய கூட்டாளிகளை பிடிப்பதற்கு ராஜு உதவ வேண்டும் என சொல்கிறார்.
ராஜு தொலைபேசியில் பேசியதை கேட்டு திட்டதை மாற்றி ராணுவ ரகசியத்தை திருட ராஜுவை பணிகிறார் ஜகன்னாத் , இந்நிலையில் ராஜுவின் குழந்தையை ஜெகநாத் கடத்தி வைத்துக் கொண்டு ராஜுவின் கையில் இருக்கும் ஆவணத்தை கொண்டு வரச் சொல்கிறான் . ராஜுவின் குழந்தையை கடத்தி விடுகிறார் ஜகன்னாத் . தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து இன்ஸ்பெக்டர் ஒரு புறம் . முடிவில் இந்த பிரச்சனைகளை சமாளித்து காவல் துறையில் informer ஆக சேர்ந்து விடுகிறார் ராஜு
நல்ல எண்ணம் வென்றது
சுபம்
படத்தை பற்றி :
பாலாஜி படம் என்றால் ரீமேக் தான் , இந்த படம் அதிஷ்ட வந்தாலு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் . வருடத்துக்கு ஒரு படம் நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் கொடுத்து அதை ஹிட் , மெகா ஹிட் , இல்லை என்றால் MG என்று இந்த மூன்று category ல் கொண்டு வந்து சேர்த்து விடுவார் பாலாஜி . தங்கை , என் தம்பி படத்தை தொடர்ந்து வந்த 3 வது படம் இது , குறிகிய காலத்தில் நடிகர் திலகத்தை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்து விடுவார் பாலாஜி , இது பிசினஸ் ல் நல்ல விஷயம் , ஒரு பெரிய ஸ்டாரை வைத்து படம் எடுக்கும் பொது ஒரு வித command இருந்தால் தான் இந்த மாதிரி செய்ய முடியும் என்றாலும் , சில சமயம் ஒரு நல்ல படம் , தரமான படம் அதின் நயமாயன வெற்றி அடைய முடியாமல் போவதற்கும் இது காரணமாகி விடும் , அதற்கு சிறந்த உதரணம் இந்த படம் , 1969 வருடம் நடிகர் திலகத்தின் வருடம் , எங்கே திரும்பினாலும் அவர் படம் ஓடி கொண்டு இருந்தது , பின் குறிப்பு : எல்லாம் முதல் வெளியிடு , re ரிலீஸ் கணக்கு இல்லை , அதையும் எடுத்தால் சர்வமும் நடிகர் திலகத்தின் மயம். தெய்வமகன் என்ற ever green classic , நடிப்பில் முத்திரை பதித்த படம் வந்து 50 நாட்கள் ஆகாத நிலையில் , சிவந்த மண் என்ற படம் வரவிருக்கும் நிலையில் இந்த படம் வந்தது .சில நடிகர்கள் தங்கள் படங்கள் வரும் பொது தங்களின் அடுத்த படம் வர நல்ல காலதாமதம் செய்து , தங்களை பார்க்க வேண்டும் என்றால் தங்களின் சமிபத்திய படத்தை தான் மீண்டும் மீண்டும் பார்த்தாக வேண்டும் என்று ஒரு வித artifical demand யை create செய்து விடுவார்கள் .
நம்மவர் பெரும்பாலும் இது போன்ற விஷியத்தில் தலையிடுவது இல்லை , அது அவர் குணம் , நல்ல குணம் , ஆனால் சில சமயங்களில் இது போன்ற சில விஷியங்களில் அவர் கவனம் செலுத்தி இருந்தால் RECORD பல நம்வசம் ஆகி இருக்கும் . இது போன்ற அம்சம்கள் எல்லாம் படம் பார்க்கும் வரை தான் , படம் பார்க்கும் பொது , அவரின் முகம் , நடிப்பில் எல்லாம் மறந்து போய் விடும் .
காலத்தை கடந்து நிற்கும் பொது பெருமை நம்மளுக்கு தான் .
இந்த படத்தில் பிற நடிகர்களின் பங்களிப்பு சற்று குறைவு தான் , அதுவும் KR விஜயா கிளப் டான்ஸ் ஆடுவது ,ஆன் வேடம் போட்டு கொண்டு சிவாஜியை ஏமாற்ற நினைக்கும் காட்சிகள் சிரிப்பு .
மேஜர் : A CONSTANT FACE IN NADIGAR THILAGAM MOVIES . இந்த படத்தில் அவர் நடிப்பில் முத்திரை பதித்த காட்சிகள் பல . பல காட்சிகளில் இவர் வசனம் பேசி கை தட்டல் வாங்குவதை விட , தன் reactions மூலமே நடிப்பு ராஜாங்கம் நடத்தி உள்ளார் , நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சியில் அவரை முறைத்து பார்ப்பதும் , சிவாஜியை கடன்காரன் பணம் கேட்டு harass செய்யும் பொது சிவாஜிக்கு ஆதரவாக பேசுவதும் , சிவாஜி தான் கொலைகாரன் என்று நினைத்து identification parade நடத்தி தோல்வி அடைவதும் , தன் தரப்பு வாதங்களை சொல்லுவதும் என்று இவருக்கு scope அதிகம் . சிவாஜி , மேஜர் இடையில் நடக்கும் CAT and MOUSE கேம் தான் படத்தின் உயிர் நாடி
பாலாஜி :
கொஞ்சம் cliched வில்லன் தான் , இவர் கூடாரம் அக்மார்க் வில்லன் குகை , இது அத்தனைக்கும் மேல் இவர் நடிப்பு பலே , நீ மீண்டும் இங்கு வருவாய் என்று சவால் விடும் காட்சியில் அவர் அல்டல் இல்லாத அலட்சிய பார்வை உடன் பேசும் வசனமும் , மீண்டும் சிவாஜி கூடத்தில் சேர்ந்த உடன் சந்தேகத்தை உள்ளே வைத்து , அதை கண்டுபிடித்து திட்டதை மாத்தும் காட்சி நல்ல வில்லத்தனம்
சிவாஜி :
படத்தின் ஆணிவேர் . என் தம்பியில் aristocrat ஸ்டைல் என்றால் இதில் வேறு விதமான ஸ்டைல் , ஒரு நடிகர் , அதுவும் மாஸ் நடிகர் அறிமுகம் ஆகும் காட்சி நான் முதலில் கால்களை காட்டும் காட்சி நான் முதலில் பார்த்தது தலைவர் ரஜினி நடித்த மனிதன் படம் , இதுவும் ஜெயில் காட்சி தான் , காமெராவை கிழே இருந்து வெறும் கால்களை மட்டும் காட்டும் பொது ஒரு வித கம்பீரமாக இருக்கும் , அதை அப்படியே திருப்பி காட்டும் பொது மேஜர் தன் தீர்க்க பார்வையை சிவாஜி மேல் பதிப்பார் , நீ எங்கே போனாலும் என் பார்வைளிர்ந்து தப்ப முடியாது என்பது போல் இருக்கும் அவர் பார்வை , அதே சமயம் நடிகர் திலகத்தின் பார்வை , நீங்க நினைக்கும் ஆள் நான் இல்லை என்பது போல் அலட்சியம் காட்டும் திமிரான பார்வை (அறிமுக காட்சியிலே ரணகளம் தான் )
அதே திமிருடன் தன் பழிய கூட்டாளிகளிடம் வர முடியாது என்று சொல்லுவது . லாரி டிரைவராக இருக்கும் பொது KR விஜயா உடன் பல பாஷைகளை பேசுவது (ஜெனரல் சக்ரவர்த்தி படத்திலும் இது போல் ஒரு காட்சி ), பழனியப்பன் பழனியம்மாவா பாடலில் KR விஜயாவை கிண்டல் செய்யும் காட்சியும் இளமை துள்ளல் , தன்னுடைய சிறு வயது அனுபவத்தை நடிகர் திலகம் அவர் குரலில் , அதுவும் ஒரு வித base வாய்ஸ் + கணீர் குரலில் சொல்லும்போதும் , இந்த காட்சிகளில் நடிகர் திலகம் இல்லை என்றாலும் , அவர் இருக்கும் பாதிப்பை கொடுகிறது . அதை தொடர்ந்து வேலை பைஜாமா போன்ற உடை அணிந்து அதில் embroidery வேறு அற்புதமாக இருக்கும் அவர் ஸ்டைல் ஆக சுடும் பொது நம் மனது நம் இடத்தில இல்லை . மவுண்ட் ரோடு ல் டைரக்டர் வேஷம் போட்டு திருடும் காட்சி , (திருடன் என்ற படத்தை இயக்குவதை போல் நடிப்பார் ) சூப்பர் , கடைசியில் சண்டை காட்சியும் அதில் அவர் ஆக்ரோஷமும் டாப்
கல்யாணம் ஆகி முதல் இரவுக்கு முன்பு நாகேஷ் தான் பார்த்த தில்லான மோகனாம்பாள் படத்தை பற்றி பேசும் பொது சிவாஜி முகத்தில் தெரியும் ஒரு uneasiness அபார நடிப்பு
திருட போன இடத்தில குழந்தையை கடத்தி அதன் தாயின் மரணத்திற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வில் தவிப்பை வெளிப்படுத்தும் காட்சியும் , தன் மகள் மேல் பாசத்தை பொழியும் காட்சியும் தான் திருடன் என்பது தன் மகளுக்கு தெரிய கூடாது என்று பயபடுவதும் , தன் குழந்தை பசியால் வாடும் பொது துடிப்பதும் , திருடனும் , போலிசும் இவரை துரத்தும் பொது இவர் சமாளிப்தும் , அதிலும் முதலில் ஈஸியாக tackle செய்வதும் , கொஞ்சம் கொஞ்சமாக அவர் நம்பிக்கை பொய்க்கும் பொது துடிப்பதும் , கடைசியில் தன் நிலைமையை நினைத்து புலம்பும் பொது நம் மனதிலும் கண்ணீர்
போலீஸ் இன்ஸ்பெக்டர்யிடம் சென்று தான் திருடனாக போவதாக சொல்லும் இடம் ரௌத்திரம் .
மொத்தத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு , கதை எல்லாம் சேர்ந்த பொழுது போக்கு படம்
குறை : காமெடி கொஞ்சம் கம்மி , என் தம்பி போல் பாடல் கவரவில்லை
படம் எப்படி
திருடன் தானே , மக்கள் வந்தால் ஓடுவான் , மக்கள் வந்தார்கள் திருடன் ஓடினான்
பட்டையை கிளப்பிய 1972 இன் தொடர்ச்சி 1973 களிலும்
1972, திரை உலகில் இப்படி ஒரு வெற்றி இனி எந்த நடிகனாவது நிகழ்த்த முடியுமா என்று திரை உலகமே எண்ணி வியந்த ஆண்டு நடிகர் திலகத்தின் 7 திரைப்படங்கள் அதில் 6 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடியபடங்கள் ..அந்த 6இல் 2 வெள்ளிவிழா ....
இதன் தொடர்ச்சி 1973இலும் தக்க வைத்துக்கொண்டார் நம் நடிகர் திலகம்
திரைப்படத்தின் முன்பும் பின்பும் பல மாத GAP இல்லாமல் மீண்டும் திரை உலகில் ..இன்னும் சொல்லபோனால் அவரால் மட்டுமே நிகழ்த்தப்பட முடிந்த ஒரு சாதனை.
பாரத விலாஸ் - 24-03-73
ராஜ ராஜ சோழன் 31-03-73
பொன்நூஞ்சல் 15-06-73
எங்கள் தங்கராஜா 15-07-73
கெளரவம் 25-10-73
மனிதரில் மாணிக்கம் 07-12-73
ராஜபார்ட் ரங்கதுரை 22-12-73
7 திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் ஒன்றன் பின் ஒன்றாக . அதில் 5 திரைப்படங்கள் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள். மீதம் இரண்டு 50 நாட்கள் ஓடிய படங்கள்.
வெற்றிப்படங்கள் என்றுபார்த்தால் அனைத்தும் வெற்றிபடங்களே !
மற்ற நடிகர்கள் அவர் காலத்தில் பலத்த GAP உடன் திரையிட GAP என்ற ஒரு விஷயம் பற்றி கவலைபடாமல் தயாரிப்பாளர் எந்த பாதிப்பும் அடையக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் குறித்த நேரத்தில் நடித்து கொடுத்து திரைப்படம் வெளியாக பேரு உதவி எப்போதும் செய்பவர் நம் நடிகர் திலகம்.
GAP இல்லாமல் திரையிட்டாலும் நடிகர் திலகம் படங்கள் மிக பலத்த வசூல் சாதனையை ஒவ்வொரு முறையும் சர்வ சாதாரணமாக நிகழ்த்தியது !
திரு பம்மலர் அவர்கள் பதிவு செய்து அதை பதிவிறக்கம் செய்ததால் அவர் என்ன பதிவு செய்தாரோ அது மட்டுமே இங்கு உள்ளது. மீதம் உள்ள ஆவணங்கள் பம்மலர் பெரிய மனது வைத்தால் இங்கு பதிவாகும் என்று நம்புவோம்.
ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு !
பாரத விலாஸ் - எம்மதமும் சம்மதம் என்பதையும் தேசியத்தையும் வலியுறுத்தும் காவியம்.
203 CONTINOUS HOUSEFULL SHOWS :
http://i501.photobucket.com/albums/e...ps5b0271dd.jpg
http://i501.photobucket.com/albums/e...psbf70261b.jpg
http://i501.photobucket.com/albums/e...ps1264f0ed.jpg
http://i501.photobucket.com/albums/e...ps7d4c8172.jpg
ராஜ ராஜ சோழன் - கோபால் சார் போன்ற அதி தீவிர ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்றாலும் மக்களை நன்றாக திருப்தி செய்த படம், வசூலில் மிகபெரிய பிரளயத்தை ஏற்படுத்திய படம் !
பாரத விலாஸ் வெளிவந்த ஒரு வாரத்தில் வெளிவந்த வரலாற்று காவியம். வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு துணிவு இருக்குமா என்று தெரியவில்லை !
http://i501.photobucket.com/albums/e...psdc71b19a.jpg
http://i501.photobucket.com/albums/e...ps52fc5dc5.jpg
enjoying NTs evergreen ace movie PUDHIYA PARAVAI in Jaya TV now. Frame by Frame ... enjoy the genius!
My posting to-day in my Face Book account which I am copied and re-posting here.
தமிழகத்தின் உண்மையான சூப்பர் ஸ்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே.
தமிழகத்தில் எப்பொழுதும் ஒரு உண்மையற்ற எண்ணம் பல தமிழர்களிடம் உண்டு. அதாவது
நடிகர்களில் யார் வசூல் சக்ரவர்த்தி என்பது பற்றி. பலர் தமிழ் சினிமாவின் சாதனைகள் பற்றி அறியாதவர்கள் பலர் - ஏன் மக்கள் மட்டுமல்ல - பல பத்திரிகைகளும் இன்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் - வசூல் சக்கரவர்த்தி என்று எழுதுகின்றன. இவை நிச்சயமாக உண்மை அல்ல.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் தமிழ் சினிமாவின் அன்றும் இன்றும் என்றுமே வசூல் சக்கரவர்த்தி. அன்றைய கால கட்டங்களில் எம்ஜிஆர் நடித்த படங்கள் பெரும்பாலும் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு மேல் வந்தது கிடையாது. - அதுவும் அவரே அவர்தம் ஒவ்வொரு படத்திற்கும் நீண்ட இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்வார்.
ஆனால் நடிகர் திலகத்தின் படங்களோ ஒரே நாளில் அவரின் இரண்டு படங்கள் -அதுவும் ஒருமுறை, இருமுறையல்ல - பலமுறை வெளியிடப்பட்டிருக்கும். அவ்வாறு ஒரே நாளில் வெளியான அவர் படங்கள் இரண்டுமே நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒடியிருக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக - சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் மற்றும் ஊட்டி வரை உறவு, இரு மலர்கள் படங்களை சொல்லலாம்.
அதுமட்டுமல்லாது அன்றைய பல நடிகர்கள் தங்கள் ஒவ்வொரு பட வெளியீட்டிற்கும் இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சிவாஜியின் படங்கள் ஒரே வருடத்தில் பத்து படங்களுக்கு மேல் பலமுறை வெளியிடப் பட்டிருக்கின்றன. அப்படி அவர் படங்களே அவர் படங்களுக்கு போட்டியாக இருந்தாலும் பல படங்கள் வெள்ளி விழா மற்றும் நூறு நாடகளைக் கடந்து ஓடியிருக்கின்றன.
மேலும் பல நடிகர்கள் பல படங்களில் கதாநாயகனாக அல்லாது சிறுசிறு வேடங்களில் நடித்த படங்களையும் தங்கள் மொத்த பட வரிசையில் சேர்த்து இருப்பார்கள்.
இவர்களின் இப்படங்களையும் சேர்த்தே மொத்தம் 125 படங்களை தாண்டியிருக்காது. ஆனால் நடிகர் திலகம் கதாநாயகனாக நடித்த முதல் படமான " பராசக்தி " தொடங்கி 280 படங்கள் வரை திரைப் படத்தின் நாயகனாகவே நடித்துள்ளார். நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக சுமார் 20 படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.
எம்ஜிஆர் போன்று சில நடிகர்கள் தங்கள் இமேஜ் பாதிக்காத வகையில் - அதாவது நல்லவராகவோ, எழைகளுக்கு உதவுபவர்களாகவோ மட்டுமே நடிப்பார்கள். ஆனால் சிவாஜியவர்கள் சில படங்களில் தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடுமோ என்று கவலைப் படாமல் சினிமாவை சினிவாக மட்டுமே பார்த்து வில்லன் போன்ற கெட்ட பாத்திரங்களிலும் நடித்து அதிலும் பெயர் வாங்கி இருப்பார்.
மேலும் சிவாஜி தான் நிஜமான சுப்பர் ஸ்டார் என்பதற்கு ஒரு அலசல் - நடிகர்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் எப்பொழுதும் இருக்கும். அவர்கள் தங்கள் அபிமான நடிகர் நடிக்கும் படத்தை பல முறை பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள். அப்படி பார்க்கும் பொழுது எம்ஜிஆர் படங்கள் வருடத்திற்கு மூன்று படங்கள் என்று வைத்துக் கொண்டால் அவரின் ரசிகர்கள் அந்த மூன்று படங்களையே திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஒரு ரசிகர் குறைந்த பட்சம் 10 முறை பார்க்கிறார் என்றால் இதன் மூலம் அப்படங்களுக்கு வசூல் கூடும் வாய்ப்பு உள்ளது. நடிகர் திலகம் படங்கள் வருடத்திற்கு குறைந்தது ஏழு படங்கள் என்று வைத்துக் கொண்டால் அவரின் ரசிகர்கள் அந்த ஏழு படங்களை திரும்பத் திரும்ப பார்க்கும் வாய்ப்பு குறைகிறது - அவரின் பல படங்கள் வெளியீடு காரணமாக. மற்ற நடிகரின் ரசிகன் அவன் விரும்பும் நடிகரின் படத்தை 10 முறை பார்க்கும் பொழுது சிவாஜி ரசிகன் சிவாஜியின் படத்தை நான்கு முறை மட்டும் தான் பார்க்கமுடியும். இதனால் அவர் படங்களுக்கு வசூல் குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அப்படி இல்லாமல் பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருப்பதின் காரணம் ரசிகர்கள் அல்லாத பெருவாரியான பொதுமக்கள் பார்த்ததினால் மட்டுமே என்பது இதன் மூலம் வெளிப்படை.
இன்றும் சிவாஜி கணேசன் அவர்களின் பல படங்கள் தமிழ் நாட்டின் பல திரைஅரங்குகளில் வெற்றிகரமாக மறு வெளியீட்டில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இன்றைய நடிகர்களுக்கும் கிலியை ஏற்படுத்தி பெரும் வெற்றி பெற்ற படம் " கர்ணன் ".
அதுமட்டுமல்லாமல் பல தமிழ் தொலைக்காட்சி உடங்களில் தினசரி சிவாஜியின் ஒருபடமாவது ஓடிக் கொண்டிருக்கும்
இப்பொழுது சொல்லுங்கள் உண்மையான ஸ்டார் சிவாஜி தவிர வேறு எவருமில்லை என்பது உண்மைதானே ?
Raghavan,
Comparison konjam avoid pannalaame.
Otherwise, unnecessary arguements may arise.
dear Raghavan. A movie becomes an evergreen classic only when it proves its crowd pulling capacity even during its rerun after years. Karnan belongs to this category due to the charisma and the magnetic appeal of NT's acting.However, it also requires a meticulous planning and execution, due to the lack of which our own NTs old classics also suffered, considering the cases of the classics like Thiruvilayadal and Paasamalar. Presently also we have witnessed the fate of a much tomtommed old movie that was released in more theatres than Karnan with an expectation to surpass the collections of Karnan. But it was lifted from almost all theatres within a week of its release except only in two theaters, that too in Chennai, with single show it has been pushed to cross 50 days! (Karnan ran for more than 50 days in nearly 20 theatres all over Tamil nadu). Is this not a proof of the crowd pulling capacity and box office stand of NT till date?
dear ragul. a neat compendium on Thirudan. It was a remake of a Hindi movie Himmat starring Jeetendra, if my nostalgia is correct. Balaji-NT combo was consistent and together they gave us many more hits after switching over to color films. NT appeared very slim and handsome in his costumes but KRVijaya was bit bulky at that time. Again NT vs NT situations affected the run of Thirudan. Ragul, you have chosen to bring into limelight all the good NT movies that had mediocre runs?