தேன்கிண்ணம் தேன்கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம் ...
https://www.youtube.com/watch?v=9yun_LFvuD4
Printable View
தேன்கிண்ணம் தேன்கிண்ணம் பருவத்தில் பெண்ணொரு தேன் கிண்ணம் ...
https://www.youtube.com/watch?v=9yun_LFvuD4
மது சார் - இது ஒரு பெரிய பிரச்சனையே இல்லை . வாசு- வாசு செய்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை . உங்களுக்கு ஏதாவது திரைப்பட பாடல் மட்டும் வேண்டுமென்றால் , youtube இல் அந்த பாடல்கள் இருக்க கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது . நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான் .
1. Download freemake video converter ( free of cost)
2. Paste URL of the song copied from youtube
3. press the buttom Mp3 ( audio version) or MP4 ( video verson)
Work is done .
Alt 2 :
ஒரு வேளை உங்கள் பாடல்கள் youtube இல் கிடைக்க வில்லை என்றால் - அந்த படம் மட்டும் கிடைத்தால் , படத்தை download செய்து விட்டு வீடியோ கட்டர் ( free ) என்னும் சாப்ட்வேர் மூலம் எந்த பகுதி மட்டும் வேண்டுமோ அதை கட் செய்துகொள்ளலாம் - மற்றவர்களுக்கும் , உபயோகமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் youtube இல் அந்த கட் பண்ணிய பகுதியை பதிவேற்றம் செய்து கொள்ளளலாம் .
பின் குறிப்பு : நினைத்து பாருங்கள் - இந்த யோசனைக்கு வாசு அல்லது CK அல்லது செந்தில் குறைந்தது Rs 50000/- மாவது இந்த நேரம் உங்களுக்கு பில் அனுப்பி இருப்பார்கள் . நான் முதலில் உங்கள் பதிவை படித்து விட்டதால் உங்களுக்கு இந்த Rs 50000/- மிச்சம் .:-D
தேனே உன்னைத் தேடித் தேடி நான் அலைந்தேனே
https://www.youtube.com/watch?v=6ZPpeNHaFnM
சூப்பர் பாட்டீஸ் டூப்பர் பாட்டூஸ்
அழகிய பாட்டிகளின் அமுதப் பாட்டுக்கள்!! / Graceful Grannies'Grand Gala Gems!
பகுதி 3 : MN ராஜம்
பாசமலரில் எழில்ராணியாக .....Quote:
எம் என் ராஜம் அவர்கள் ஹாலிவுட் ஹிட்ச்காக் படங்களில் வரும் ஹீரோயின் போல வாளிப்பான உடல்கட்டும் வாகான முகவெட்டும் கொண்டவர் அவரது இளமைக் கால பட்டையைக் கிளப்பிய பாடல் காட்சிகளில் பாசமலர் திரைப்படத்தில் நடிகர்திலகம் பியானோ வாசித்திட ஜமுனாராணி குரல்குழைவில் அவர் பாடும் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் பாடல் காட்சியமைப்பு என் மனம் கவர்ந்த மதுர கான மெல்லிசைப் பாடலாகும் !
அதேபோல பதிபக்தியில் நடிகர்திலகத்தைக் கலாய்க்கும் கொக்கர கொக்கரக்கோ சேவலே பாடல் காட்சியமைப்பும், இரத்தக்கண்ணீரில் சந்திரபாபுவுடன் போடும் ஆளை ஆளை பார்க்கிறார் ஆட்ட பாட்டமும் !!
https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E
பதிபக்தியில் ....கோழியாட்டம்!
[url]https://www.youtube.com/watch?v=E18POUkDaIE
இரத்தக்கண்ணீரில் கெட்ட ஆட்டம் ...ஆனால் கௌரவமான இழுத்துப் போர்த்திய கெட்டப்பில்!!
[url]https://www.youtube.com/watch?v=67zlw6YpKtM
வின்னர் திரைப்படத்தில் பிரசாந்தின் அழகுப் பாட்டியாக தனது பொருத்தமான திரை நாயகர் எம் என் நம்பியாருடன் !! same initials!!
https://www.youtube.com/watch?v=0h-OFA3S8ko
Another paappaa song from KaLathur kaNNammaa
ammaavum neeye appaavum neeye........
http://www.youtube.com/watch?v=Axcrmw8OD4A
From the Hindi version "main chup rahungi"
Tum hi ho maathaa pithaa tum hi ho...
http://www.youtube.com/watch?v=jUmYNTvZ0h8
I am sure you recognize the boy singing 'ammaavum neeye".
senthil: You are right. Grand daughters are a lot of fun. Unfortunately we live about 1000 miles away from her. Air travel is not fun anymore with all the security checks and lack of food in the flight ! :( We limit our visits to two a year.
My granddaughter likes two songs, one carnatic and another from a movie. I will post the movie song later. :)
ரவி சார்... real video set மொத்தமும் இற்ற்ற்றக்கி வச்சிருக்கேன். video cutter வேலை செய்ய மாட்டேங்குது. மற்றபடி ஏற்கனவே youtube-ல் என் கணக்கிலேயே நிறைய பாட்டெல்லாம் பங்களிச்சு வச்சிருக்கேன்.
ஆன்லைனில் வீடியோ streamஆகி வரப்போ அதிலேயே கட் செய்ய முடியுமா என்று கேட்கிறேன். அதாவது திரி கருகி எரியும்போது விளக்கை அணைக்காமல் கத்திரிக்கோல் வைத்து அப்படியே நுனியை கட் செஞ்சு எடுப்பது போல...
என்னது ? Rs.50000/- ? ஹலோ.. ஹலோ... தலை வலிக்குதே ! ரவி சாரா ? நீங்க யாருங்க ? :rotfl:
தமிழகம் தந்திட்ட தரணியின் விண்ணளாவிய பிரபஞ்சத்தின் வாழ்நாள் பெருமை நடிகர்திலகத்தின் தனி உடைமை வீர பாண்டிய கட்டபொம்மன் வந்துவிட்டார் பராக் பராக் !
Quote:
வரும் வாரங்கள் பரபரப்பானவை! பலருக்கு மலரும் மனோகர நினைவுகள்!! தீப்பொறி கிளப்பும் தேசபக்தி தோய்ந்த கூர் வசனங்கள் நடிப்பின் பிரம்மனால் உயிரூட்டப்பட்டு மீண்டும் ஓர் ஆழிப் பேரலையை ஊழித்தீயை ஆர்ப்பரித்து எழ வைக்கும் தருணங்கள் !!நமது மனதையும் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி பரவச மயக்கநிலைக்கு நாம் தள்ளப்படும் அதிசயம் நிகழப் போகிறதே! இந்தத் தலைமுறை சிறார்களும் இனி கட்டபொம்மன் வேடம் தரித்து அவர் பெருமைப் படுத்திய வசனங்களை மழலையால் மிழற்றப் போகும் பொற்காலம் திரும்புகிறது!!!
என்றென்றும் நமது நினைவில் வாழும் நடிகர்திலகம் கர்ஜிக்கும் வண்ணத்திரைகள் / கண்ணுறும் விழித்திரைகள் புண்ணியம் செய்தவையே !
காலத்தால் நிலைத்திட்ட கவின்மிகு காவியம் நிகரற்ற வெற்றியை எட்டிட நடிகர்திலகம் / காதல் மன்னர் / மதுரகானங்கள் திரிகள் சார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும் !!
Generations' Celebrity Warrior General VPKB's Grand Gala Brand Power epitomized in epic proportions by the 'One and the Only One' Thesaurus of Acting Nadigar Thilagam Sivaji Ganesan!
Exploding on the screens from tomorrow!
[url]https://www.youtube.com/watch?v=fXL2WsxKvw4
மது சார் - உதவி செய்யவேண்டும் என்ற அவசரத்தில் உங்கள் பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் . நான் ஒரு முதல் உதவி செய்யும் மருத்துவர் மட்டுமே . நீங்கள் சொல்லும் பிரச்சனைக்கு தேவை சர்ஜெரி - இதற்கு கை தேர்ந்த மருத்துவர்கள் நெய்வேலியிலும் , கோயம்பத்தூரில் , மஸ்கட் லிம் தான் இருக்கிறார்கள் . உங்களுக்கு பீஸ் Rs 50000/- மிச்சப்படுத்தல்லாம் என்று நினைத்தேன் - முடியவில்லை . இருப்பினும் ஒரு தடவைக்கு , இரண்டு தடவை யோசித்து உங்களுக்கு ஒரு நல்ல solution தருகிறேன் :-D
ரவி சார்..
நீங்க கொடுக்கும் சொல்யூஷனை சொட்டு சொட்டா கண்ணில் விட்டுக் கொண்டு வேலை செய்வேன் என்று உறுதி கூறுகிறேன். எனக்கு ஊசி கூட வேண்டாம். மாத்திரை போதும்.. சர்ஜரி எல்லாம் சரிப்பட்டு வராது.. அதை விட இப்படியே விட்ருவேன்.
Rajraj Sir,
For your Jugalbandhi collection : Do you already have Enga Mama Vs Brahmachari?
Enga Mama NT with children!
https://www.youtube.com/watch?v=yglkhIIxBf8
நான் தன்னந்தனிக் காட்டுராஜா ...
[url]https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0
But..derived from the original Brahmachaari starring Shammi Kapoor, the Indian Gene Kelly!
https://www.youtube.com/watch?v=no6psn4h0wo
சக்கே பே சக்கே
[url]https://www.youtube.com/watch?v=1pMrwHB2kpc
வார்த்தை தவறி விட்டார் செந்தில் சார்
மதுரகானம் துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம்
வீடியோ பார்வை தெரியுதடி
நாளைமுதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம் :)
பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா :)
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே :)
அவரா சொன்னார் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை :)
வாசு ஜி... அவர் ஒரு ரிவர்ஸ் ரஜினி..
நாலு பாட்டு போட்டா ஒண்ணு போட்ட மாதிரி...
செந்தில்ஜி... நான் வாசுவைப் பிடிச்சுக்குறேன். இப்போதைக்கு தப்பிச்சுக்குங்க :)
வார்த்தை தவறவில்லை வாசு சார்
சும்மா ஒரு ஷோ காட்டிட்டு சுட்டியாக்கி விடுவேனே !
இப்பப் பாருங்களேன் ரவி வந்து வெளுப்பதற்குள் மாற்றி விட்டேன்!!
கதம்ப மதுர மாலை!!/ Old Songs remix!!
நமது திரைப் படங்களில் கற்பனைப் பஞ்சம் ஏற்படும் போது புகழ் பெற்ற பழைய / சம காலத்திய பாடல் பிட்டுக்களை சாமர்த்தியமாகக் கோர்த்துக் கதம்ப மாலையாக்கி நமது காதோடு நிற்காமல் உடல் முழுக்க சுற்றி விடுவார்கள் !
கதம்பமாலை 1 : தேன் கிண்ணம் / நாகேஷ்-விஜயலலிதா
[url]https://www.youtube.com/watch?v=CaznqYwdGMg
ஜெர்ரி லூயியை அடியொற்றும் நாகேஷின் மானரிசம்ஸ் !
கதம்பமாலை 2 : நான் / நாகேஷ்-மனோரமா
https://www.youtube.com/watch?v=MFLczvaSFoE
கதம்பமாலை 3 : நவராத்திரியில் பைத்தியக்கார் ஆஸ்பத்திரியில் மனோரமா கோஷ்டி ..
[url]https://www.youtube.com/watch?v=8HlY66SogrY
ரவி சார்!
தேனின் இனிமையை உங்கள் பதிவில் மீண்டும் கண்டேன். உவகை கொண்டேன்.
தேனின் குணங்களும், அதன் மருத்துவப் பயன்களும் அனைவருக்கும் உபயோகமானவை. நல்ல உபயோகமான பதிவு. மனமுவந்த நன்றிகள். இமேஜ்களும் அட்டகாசம். தேன் கண்ணெதிரே தெறிக்கிறது.
எனக்கே முன்னால் இப்படி ஒரு யோசனை இருந்தது. ஆனால் நீங்கள் எதுவாய் இருந்தாலும் முந்தி(ரி)க் கொண்டு விடுகிறீர்கள்.:) பாருங்கள்... அருமையாக மது அண்ணாவுக்கு மென்பொருள் பற்றிய விவரங்கள் அளித்து உதவி செய்து விட்டீர்கள். அவர்தான் விட்டால் போதும் சாமி என்று உங்கள் ஆபரேஷனைக் கண்டு அலறி ஓடுகிறார்.:)
அதே போல தாங்கள் அளித்து, மற்றவர்களும் அளித்த தேன் பாடல்கள் தேனோ தேன். அருமையாக இருந்தது. பாட்டியம்மா பதிவுகளை தேனாக திசை திருப்பி விட்டு உங்கள் அருமை நண்பர் சின்னக் கண்ணனைக் காப்பாற்றி விட்டீர்கள்.:) உங்கள் குறள் பாணியில் உதாரணமிட்டால் 'உடுக்கை இழந்தவன் கை' போல.
'ராஜா', 'வெள்ளி முத்துக்கள்' பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கும் நன்றி!
தேன் என்றாலே என் நினைவுக்கு வரும் பிற பாடல்கள்
தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
தேனில் ஆடும் ரோஜா
தேனாற்றங்கரையினிலே
தேன் பூவே பூவே வா
தேன் மல்லிப் பூவே
தேனே தென்பாண்டி மீனே
தேனில் வடித்த சிலையே
தேன் குளத்திலே நான் குளிக்கிறேன்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
செந்தமிழ் தேன் மொழியாள்
கல்யாணத் தேன் நிலா
அமுதும் தேனும் எதற்கு
என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
தேன் அமுதம அல்லவோ நான் அள்ளி உண்டது
தேனடி மீனடி
தேனோடும் தண்ணீரின் மீது
தேன் சிந்துதே வானம்
இன்னும் நிறைய.
ஆனால் இதையெல்லாம் தாண்டி அப்போது பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த திரைப்பாடல் அல்லாத கிறித்துவப் பாடல் ஒன்று ரொம்ப ரொம்பப் பிடிக்கும். சென்னை, புதுச்சேரி, திருச்சி வானொலி நிலையங்களில் காலை ஆறு மணிக்கு அப்போது போடப்படும் பக்திப் பாடல்களில் இப்பாடல் இடம் பெறாமல் போனதே இல்லை. இனிமையென்றால் அப்படி ஒரு இனிமை அப்பாடலின் முதல் வரியைப் போல. இப்பாடலைக் கேட்கும் போது உடலும், உள்ளமும் புல்லரித்துப் போவது நிஜம். இன்றும் கூட அதே போன்றே மனதை மயக்கிக் கொண்டேதான் இருக்கிறது.
அப்படியே சுசீலாம்மாவின் குரலுக்கு அடிமையாகிக் கிடக்க வேண்டியதுதான்.
தேன் இனிமையிலும்
யேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே
அதைத் தேடியே நாடி
ஓடியே வருவேன் திருச்சபை
ஆனோரே
காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே
பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே
சுசீலாம்மா பாடும் அந்த கடைசி சரணம். அதைப் பூப் போல உச்சரிக்கும் பாங்கு. சரண்டர் ஆகாமல் எவரும் தப்ப முடியாது.
'பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்'
அவரின் 'க' உச்சரிப்பைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நிஜமாகவே திவ்ய மதுரம்தான்.
https://youtu.be/x9hzx6q29to
ஹய்! ரிவர்ஸ் ரஜினி! மது அண்ணா! ரொம்ப நல்லா இருக்கே!
ஆனா சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுத்து. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பீங்களோ!:)
வாசு சார்
பாட்டியம்மா பாடல்கள் சி கவுக்கு அலர்ஜியா ? ஏதாவது கொசுவர்த்திச் சுருள் பிளாஷ் பேக்?
இருந்தால் எல்லோரும் தெரிந்து கொள்கிறோமே !
வாசு - மோதிர கையினால் "முந்திரி " என்று சொல்லி குட்டினதர்க்கு நன்றி - நீங்கள் குட்டினதாலோ என்னவோ வலிக்கவில்லை . தேனைப்பற்றி இவ்வளவு பாடல்களா ???? - மலைத்தேன் வாசு ! மானசிகமாக உங்களை அணைத்தேன் - பிழைத்தேன் இனி தொடராமல் ! களைத்தேன் என்று சொல்ல முடியாத பதிவுகள் உங்களுடையது
வெற்றி வேல் வீர வேல் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
http://i818.photobucket.com/albums/z...pslnw9o14p.jpg
விட்டுப்போன தேன் துளிகள்....
தேன் பாயும் வேளை - பௌர்ணமி அலைகள்
தேன் கூடு நல்ல தேன் கூடு - ஆட்டுக்கார அலமேலு
தென்றல் பாடவும் தேன் மலர் ஆடவும் - மனிதன் மாறவில்லை
தேன் அருவி அதில் ஒரு குருவி - கராத்தே கமலா
ஹனி ஹனி தித்திப்பது - நீச்சல் குளம்
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா - செந்தூரப்பூவே
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான் - இதயத்தை திருடாதே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே - மணிப்பூர் மாமியார்
சேலாடும் நீரோடை மீது தேன் சிந்தப் பண் பாடுவோமே - அலாவுதீனும் அற்புத விளக்கும்
தேன் கூட்டில் இன்னும் எத்தனையோ தித்திக்கும் துளிகள் இருக்கு....
மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து இனிக்க வைத்த செந்தில் ஜி, வாசு ஜி... ரொம்ப நன்றி ஜி..
Take it ECg! Honey filled songs are endless!
பூமாலையில் ஓர் மல்லிகை ..இங்கு நான்தான் தேன் என்றது...
இந்த வரிசையில் சேருமா !?
Vanakkam Ji
after a looooooooooooooooong time
eppadi irukkeenga
ஹாய் ஆல்..
வழக்கம் போல ரெண்டு நாள் கொஞ்சம் டஃப் ஆக ப் போய் விட்டபடியால் வந்து பழக இயலவில்லை.. மன்னிக்க..
எனில் ஹோம் ஒர்க்..
ராஜ்ராஜ் சார்..அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே- அம்மா ரொட்டி தே பாபா ரொட்டி தேக்கும் நன்றி..பாப்பாக்களின் சார்பாகவும் நன்றிகள்!
சி.செ.. சமர்த்து..சுத்திப் போட வேண்டும்.. கோழி ஒரு கூட்டிலே பாட்டுக்கு (இந்தி)க்காக ச் சொன்னேன்.. நீதுசிங்கா அது..ம்ம் எவ்ளோ வளர்ந்துட்டாங்க பிற்காலத்துல (யாரதுபக்கெட் எடுக்க போகிறது?!)
ராக தேவன்.. வாங்க வாங்க இந்த அபியும் நானும் பாட் போட்டதற்கு தாங்க்ஸ்..அந்தப் பிச்சைக்காரராய் நடித்த நடிகர் (கவில் ஆரம்,பிக்கும் பெயர் நினைவில் வர மறுக்கிறது) யெஸ் குமரவேல்.. நல்ல நடிகர்..மேஜிக் லேண்ட்டர்ன்ஸ் வழங்கிய பொன்னியின் செல்வன் நாடகத்திற்கு அவர் தான் நாடக வசனங்கள் எழுதியவர்..
வாசு.. எங்கிட்டோ போய்ட்டீங்க.. இப்படி ஒரு பாட்டை நான் நான்குவருடங்களுக்கு முன்னால் வெறும் கேட்டு மட்டும் இருந்தேன் என்றால் நம்ப வேண்டும்..மீண்டும் வாழ்வேன்பார்க்க நினைத்து இன்றுவரை பார்க்காத ஒரு படம்.. நா.வ.மு துபாய்போயிருந்த போது- அங்கிருந்து ஷார்ஜா நண்பரில்லத்தில் முரசு டிவி (மஸ்கட்டில் அப்போது எடுக்காமல் இருந்தது..இப்போது வருகிறது) சோம்பலாய்ப்பார்த்த ஒரு மாலை நேரம்.. டபக்கென இந்தப் பாட்டு வர சுறுசுறுப்பும் தானாய் வந்தது...
//பல இளைஞர்களின் தூக்கம் கலைந்திருக்கலாம் அந்த நாட்களில். இளமை பூத்துக் குலுங்குகிறது. 'ம்....கொடுத்து வைத்த விஷ்ணுவர்த்தன்' என்று மஸ்கட்டில் ஒருவர் புலம்புவதும் காதில் விழுகிறது.// அப்படில்லாம் இல்லீங்காணும் ( நெசம்மா)
பாரதி மட்டும் தான் அழகு..சூழ்ந்து ஆடிய கோடம்பாக்கங்கள் அவ்வளவாய் கவரவில்லை என ஆன்றோர்கள் சொல்வார்கள்..ம்ம் நல்ல பாட் நல்ல ரைட் அப்.. அதை மேலே வச்சுடுங்க..
*
*
சி.செ.. ரேமாமா ரேமாமா ரே, பாப்பா போலோபோலோ மம்மி போலோ போலோ ரெண்டுபாட்டுமே பிடிக்கும்.. அது என்ன சித்தி சொல்லு சொல்லு டாடி சொல்லு சொல்லு பாட் கேட்டிருக்கிறேன்படம் பார்த்ததில்லை..கனிமுத்துப் பாப்பாவா..
ரவி.. தேன் பற்றிய பதிவு நைஸ்..பதிந்த பாடல்களில்..
பார்த்தேன் ரசித்தேன் பக்கம்வரத் துடித்தேன்..அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் என ஆண்பாடுவது..ம்ஹூம் என்ன ஆணாதிக்க உலகமடா என எண்ணவைக்கும்..அழகியபாடல்..
தேன் சிந்துதே வானம் பாட்டு ஒவ்வொரு தரம் பார்க்கும் போதும் மனசுக்குள் மழையடிக்கும்..உடலுக்குள் குளிரடிக்கும் என ஆன்றோர்கள் சொல்வார்கள்..
தேன் நிலாவரும் ரொம்பப் பிடிச்ச பாட்டு..ஆடியோவில் சிலோனில் வந்த பாட்டு என நினைக்கிறேன்..
இந்த சலங்கை ஒலியில்- பூஞ்சோலைவண்ணம் கொண்டு வந்தான் கோபாலனே..பாடல் ஆரம்பிக்கும் முன் தயாரிப்பாளர் இசையமைப்பாளரிடம் சொல்வார்.. படமோ நாட்டியம் அப்படி இப்படின்னு போகுது இந்தப் பாட்டையாவது பாக்ஸ் ஆஃபீஸ்க்காக கொஞ்சம் நல்லா வைக்கலாம்னு பார்த்தா… இசையமைப்பாளர்..: நீங்க கவலைப்படாதீங்க.. நான் கொடுத்த ஸ்டெப்ஸையே மாத்திட்டான்.. இதான் நாட்டியம் தெரிஞ்சவங்களையெல்லாம் ஸ்டெப்ஸ் போடக் கூடாதுங்கறது..எனச் சொல்லி பாடல் தொடரும்..
அது போலவே.. போட்டுருக்கறது மூணு சிறந்த நடிகர்கள்..அவங்களும் சீரியஸ்.. கதையில் நகைச்சுவை வந்தாலும் அவங்களுக்கு பாட்டெல்லாம் கிடையாது..கதையில் இளமையா இருக்கற்து இந்தப் பொண்ணு தான்..இதவச்சுத்தான் பாக்ஸ் ஆஃபீஸ்க்கு ஒரு பாட் போடணும்..னு ப்ரொட்யூஸர் சொல்லியிருப்பாரோ என்னவோ சந்த்ரகலாவைக் குளிக்க விட்டிருப்பார்கள்.. (தேன் மழையிலே மாங்கனி நனையுது) சிந்தால் சோப்பாயிருக்குமோ..
*
செந்தமிழ் த் தேன் மொழியாள், தேன் உண்ணும் வண்டு.. நல்ல இனிமையான பாடல்கள் சி.செ..
/தேன் மதுவை வண்டினம் தேடி வராதா ?// தேடி வரும்னு தானே ஆ பெண்குட்டி சொல்லுது மதுண்ணாவ்..
பாடு நிலாவே, தேன் தேன் தேன் இவற்றை விட தேனருவியில் நனைந்திடும் மலரோ எனக்குப் பிடிக்கும் ரவி.. காரணம்..மு.மேத்தா..
குமுதத்தில் தொடராக வந்தபோது படித்த நாவல் கையில்லாத பொம்மை..அதையே கைராசிக்காரன் என்று எடுத்துக் கெடுத்திருந்தார்கள்.. படம் எதுவும் நினைவிலில்லை..இந்தப் பாட்டும் தான்.. நன்றாக இருக்கிறது தேன் சுமந்த முல்லை தானா..
ஹை.. எனக்காகப் பாட்டுக்களா..தாங்க்ஸ் ரவி..
. அதுவும் தேன் குடித்த நிலவு இன்னும் ஒரு ஓ. ஜீவன் ஒரு நல்ல நடிகர்..சம்விருதாவும் தான்.. கொஞ்சம் வித்தியாசமான அழகி..ஷார்ப் ஃப்யூச்சர்ஸ் என்று ஆன்றோர்கள்..சரி நானே சொல்றேன்! ஏனோதமிழில் ஒதுக்கி விட்டு விட்டார்கள்..
. கிண்ணத்தில் தேன் வடித்து பாடலுக்கும் நன்றி பிடித் பாட்டில் ஒன்று..இதுபற்றி நான் எழுதியிருக்கும் ரைட் அப் தேடி அடுத்த பதிவில் இடுகிறேன்..முடிந்தால்.. அகெய்ன் தாங்க்ஸ்
*..
தேன் பாட்டு என்றவுடன் நினைவுக்கு வந்தது தேன் கிண்ணம்.. அப்புறம் தேனாற்றங்கரையினிலே.. (வாசு போட்டுவிட்டார்) தேனே தேடி அலைந்தேன்.. மதுண்ணாவிற்கு தாங்க்ஸ்..
//தேன் இனிமையிலும்
யேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே// wow வாசு ..வித்யாசமான பாட்டு.. சூப்பர்.. நான் எட்டு-10 படித்தது செய்ண்ட் மேரீஸ் எனப்படும் தூயமரியன்னைப் பள்ளி தான்.. எனில் கிறிஸ்தவப் பாடல்கள் நிறையக் கேட்டிருக்கிறேன்..இது கேட்டதாக நினைவில்லை.. நைஸ்..
மதுண்ணா சி.செ வாசு.. தேன் பாடல் லிஸ்ட்க்கு ஒரு ஓ…ம்ம் யாரோ ஒரு பொண்ணு பாவாடை சட்டை தாவணி போட்டுக்கிட்டு
கருகரு விழிகள் சுழல
…காண்பவர் கருத்தும் மயங்க
துறுதுறு வெனவே நடையும்
..துடிப்புடன் ஒசியும் இடையும்
முறுவலை முகத்தில் கொண்டு
..மோகனம் பொங்கிப் பொங்கி
குறும்புடன் பாடிய பாடல்
..கூவியே அழைத்த தென்னை..
*
..யா.. மானாட்டம் தங்க மயிலாட்டம்
பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்..ஓஒ ஓஹோய் ஹோய்..ஹோய்..
எனப் படத்தில் தாவியாடிய சர்ரூ…:)
பின்ன வாரேன் :)
**
சிறார் முதல் சூப்பர்ஸ்டார்கள் வரை மயக்கிய கதாபாத்திரம் நடிகர்திலகம் உயிரூட்டிய கட்டபொம்மனே !!
இதுவரை திரையுலகம் கண்ட கதாபாத்திரங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனே ரசிக நெஞ்சங்களில் ஆழமான பாதிப்புக்களை ஏற்படுத்தி ஒவ்வொருவரும் தானும் கட்டபொம்மனாக தம்மை உருவகப்படுத்திக் கொண்டு அந்தப் புகழ்பெற்ற வசனங்களை நடிகர்திலகத்தை ரோல்மாடலாக மனதில் இருத்தி பேச முயற்சி செய்ய வழி வகுத்தது !
எத்தனை சிறுவர் சிறுமியர் பேஷன் ஷோக்களில் கட்டபொம்மனாரின் கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்கள் என்பதற்கு கூகுள் வலைத்தளத்தில் யூ டியூபில்
உலவும் காணோளிகளே சாட்சி !
[url]https://www.youtube.com/watch?v=Y_sNMbOklE0
இந்தக் குழந்தைகளையும் கவர்ந்திட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியுமே இதற்கு விதி விலக்கல்ல !
ஒரிஜினல் கட்டபொம்மன் முன்னாலேயே சோதனை மேல் சோதனை பாடும் ரஜினி கட்டபொம்மன் ..விடுதலை திரைப்படத்தில்
https://www.youtube.com/watch?v=8FRCYAOcoYc
தம்பிகளே தங்கங்களே கட்டபொம்மன் சொல்லுவதை கேளுங்க! ரஜினியின் சூப்பரான கட்டபொம்மன் கெட்டப்!!
[url]https://www.youtube.com/watch?v=nOlDjoOcFLI
இன்னும் சில தேன் பாடல்கள்.
முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ----புத்திசாலிகள்
பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து
பாலாற்றில் சேலாடுது ....
தேனாற்றில் நீராடுது
ஜெர்மனியின் செந்தேன் மலரே
செந்தாமரையே செந்தேன் இதழே
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி-----வில்லுப் பாட்டுக்காரன்
மலைத்தேனுங்க நான் மலைத்தேனுங்க
மச்சானைத்தான் விருந்துக்கு அழைத்தேனுங்க
வணக்கம் ராஜேஷ்ஜி!
ஈவ்னிங் கூட உங்களைப் பத்தித்தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஒரு பி.எம்.போடலாம்னு கூட யோசிச்சேன். அப்பாடி! வந்துட்டீங்க. எப்படி இருக்கீங்க? நலம்தானே! எவ்வளவு நாளாச்சு!
அட.. அட.. அட... அந்தத் தேன் கூட திகட்டிப் போகும். நம்ம லிஸ்ட் திகட்டவே திகட்டாதோ !
அடுத்தது பார்த்தேன்.. பார்த்தேன்.. பார்த்தேன்.. சுடச்சுட ரசித்தேன்...அட.. அதுவுந்தேன்...
சிக்கா.... அதென்ன ஆன்றோர்கள் சொன்னது ? நம்ம திரிக்குப் பெரியவர் வாத்தியாரையா ( rajraj sir )... அவர் என்ன சொல்றார்னு கேட்டு ஒரு முடிவுக்கு வாங்க..
நேத்திலிருந்து கேரளத்தில் ஓணம் கொண்டாட்டங்கள் ஆரம்பிச்சாச்சு. வெளி நாட்டு கேரளமான மத்திய கிழக்கு ஏரியாவில் அத்தப் பூக்களம் வந்தாச்சா... ? தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?
Here are two of the MalayaLam songs I like:
omana thinkal kidavo........
http://www.youtube.com/watch?v=yrYdIJj-q9I
karuna cheivan endhu thaamasam......
http://www.youtube.com/watch?v=4CqnK36B2zU
I don't know whether these became popular in Tamil ! :)
//தமிழில் பிரபலமான கேரளப் பாடல்கள் என்னவாக்கும் ?//
வழக்கம் போல
பாரத விலாஸ்
மைக்கேல் மதன காமராஜன்
அப்புறம் சப்தஸ்வரதேவி உணரு---அந்த 7 நாட்கள்
தசரதனும், உஷாவும் பங்கு கொள்ளும் 'கண்ணுகள் பூட்டி ஞான் ஒரு நிமிஷம்'----திருமலை தென்குமரி
ஐ வில் சிங் பார் யூ----- எடா மிடுக்கா
https://youtu.be/1suNIBbS3M4
https://youtu.be/oZ63_o3vZUA
vaNakkam and nanri Raj for "karuNa cheyvaan enthu thaamasam krishNaa..."; a composition by
Irayimman Thampi, sung by Chithra for a devotional album. The original was composed in Shree raagam,
but Chembai Vaidyanadha Bhagavathar later made it very popular in his several renditions in
Yadukula Kamboji raagam. I am going to make a "daring" statement here, knowing fully well that you
are going to correct me if I am wrong! :) The version that you posted (sung by Chithra) is in
Yadukula Kamboji.
If you don't mind, I would like to add two more versions of the song from Malayalam movies; both
sung in Shree raagam (again, please correct me if I'm wrong)
The first one is from the movie GAANAM...
https://www.youtube.com/watch?v=RokOv7HBzfo
...and the second one from AANANDHA BHAIRAVIi:
https://www.youtube.com/watch?v=BQWZXm7qWm4
அடி பொலியாயி...
மூக்கணாங்கயிறு படம் என்று நினைக்கிறேன்.. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் பாடியிருப்பாங்க
மெய் சிலிர்க்குது மனம் துடிக்குது நெய் விளக்கென கண் சிவக்குது கண்மணி நீ தொடும் நேரம்
ஒரு செந்தாழம்பூவை அவன் படைத்தான் முன்னம் சொல்லாமலே இங்கு எனக்காக
என்று ஜெய் ஆரம்பித்து
பூ விரிஞ்ஞது தேன் நிறச்சது கையணைச்சது மெய் துடிச்சது
துள்ளும் எண்டே யவ்வனத்தின் மேளம்
என்று வாணி தொடருவார்...
அந்த 7 நாட்களில் கூட படத்தில் இடம் பெறாத "சுவர ராக சுத" என்று ஒரு பாட்டு உண்டு இல்லையோ ?
சிக்காவுக்காக.. ஓணம் ஸ்பெஷல் பாட்டு
ஏ.. ஜிங்கா ஜினுக்குதா இந்தா உனக்குத்தான் சிட்டுக்குருவி...
ஞான் கேரளத்து குஞ்ஞல்லோ .. நின்னே கொஞ்ச வந்த பிஞ்ஞல்லோ
இது சக்கப் பழ சாறல்லோ பொன்னம்பலத்து தேரல்லோ
திருச்சூரின் பிரேமா... ஞானே... சேட்டா...
https://www.youtube.com/watch?v=Qo9qa431ywE
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
தமிழில் ப்ரபலமான மலையாளம் என்றால் நினைவுக்கு வருவது - லேட்டஸ்டா (?!) உயிரே யில் நெஞ்சினிலே நெஞ்சினிலெ ஊஞ்சலே..எவ்ளோ மலையாள பில்டப் கொடுத்து யானை சேட்டன்கள் எல்லாம் உடன் ஆடினாலும்.. ஷாரூக் கான் வட இந்திய முகத்தோடு ஒல்லியாய் ஆடுவது கொஞ்சம் தமாஷ் தான்..
வறுமையின் நிறம் சிவப்பு இல் ஸ்ரீதேவி - தூமே ராஜா மேது ராணீ என இருவரி பாடுவார் (ஓ..அதுஇந்தியோ :) )
மலையாளக் கரையோரம்கவி பாடும் குருவி...
நான் கேரளத்துப் பெண்ணல்லோ..வளர தாங்க்ஸ் மதுண்ணா
சேரன் கோபிகா பாட்டு ஒண்ணு மறந்து போச்சு..
மனசுல நீகோகம் மனுமள நீ கோகம்... சிந்து நதியின் மிசை..
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திடும் நாள் திரு வோணம்..
குலுவாலிலே முத்து வந்தல்லோ..
ஓளங்கள் நு ஒரு ம்லையாளப்படம் அதுல பூர்ணி அமோல் பலேகர் நு நினைக்கேன்.. ஒரு நல்ல மலையாளப்பாட் வரும்..அது தமிழ்ல்லயும் ஃபேமஸ்..ஆனா நினைவுக்கு வரமாட்டேங்குது.. (பூர்ணி நன்னாயிட்டு ஆக்டிங்க் கொடுத்திருக்கும்)
Courtesy: Tamil Hindu
தெய்வத்தின் குரல்: மனதைப் பண்படுத்தும் மகாபாரதம்
காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் தரிசனம், 1957.
தற்போதுள்ள அத்தனை இந்திய மொழி லிபிகளுக்கும் ஆதாரமாக இருக்கப்பட்ட பிராம்மி என்ற லிபியில்தான், ரொம்பவும் பழைய சாசனங்கள் இருக்கின்றன. இந்த மிகப் பழமையான சாசனங்களின் எழுத்தும் அழகாக, பாஷையும் காவிய அழகோடு (flowery- ஆக) இருக்கின்றன. அப்புறம் பல்லவர் காலக் கல்வெட்டுக்களிலும் எழுத்து அச்சடித்தாற்போல் இருக்கிறது. வாசகமும் இலக்கிய நயத்தோடு இருக்கிறது.
அதன் பின் சோழர் காலத்துச் செப்பேடுகளில், எழுத்தும் வாசகமும் பெருமளவு நன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஆதியில் இருந்ததைவிடக் கொஞ்சம் மட்டம்தான். ரொம்பப் பழையது. அச்சடித்த மாதிரி, கண்ணில் ஒத்திக்கொள்ளலாம்போல் இருக்கிறது. சமீபத்தில் இருநூறு முந்நூறு வருஷங்களுக்கு முந்திய செப்பேடுகளைப் பார்த்தாலோ, ஒரு சீரும் இல்லை, முறையும் இல்லை, தப்பும் அதிகமாக இருக்கிறது. மண்டை மண்டையான எழுத்து. ஏகப்பட்ட இலக்கணப் பிழை.
இப்படியே ஆதிகாலத்திலிருந்து சமீபகாலம் வரையிலான விக்கிரகங்களைப் பார்த்தேன். இவற்றிலும், காலம் சொல்லத் தெரியாதவை ரொம்ப ரொம்ப லட்சணமாயிருக்கின்றன. பல்லவ விக்கிரகங்கள் நிரம்ப நன்றாக இருக்கின்றன. சோழ விக்கிரகங்கள் ஒரு மாதிரி நியதியிலே நன்றாக இருக்கின்றன. அதன் பின் வரவர மேலும் தரக்குறைவுதான். இப்போது யாரிடமாவது புதிதாக ஒரு விக்கிரகம் அடிக்கக் கொடுத்தால் எப்படி இருக்கிறது? அழகோ, சாந்நித்தியமோ, தெய்வக் களையோ பழையவற்றில் இருப்பதுபோல் புதிதில் இருப்பதில்லை.
பழைய காலத்து ஜனங்களுடைய குணம் எப்படி? அதுவும் அதேமாதிரி உயர்ந்துதான் இருந்ததாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டுக்கு வந்த மெகஸ்தனிஸ், 'இந்தியாவில் யாராவது, ஏதாவது கொடுத்தாலும்கூடக் கைநீட்டி வாங்கிக்கொள்பவர் இல்லை. எந்தப் பண்டம் எங்கு கிடைத்தாலும் அந்த நாட்டவருக்குத் திருடவே தெரியாது. பொய் சொல்லவே தெரியாது' என்றெல்லாம் சொல்கிறான்.
சாந்தமும், நல்ல குணமும், தப்பு வழியே இல்லாமல் சரியானபடி போகும் போக்கும் அந்தக் காலத்தில் இருந்தன. இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அந்தக் காலத்தில் ஜனங்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களுடைய மனசு எப்படி இருந்தது? அந்த மாதிரியே இப்போதும் இருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
பொதுவாக வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்பட்டுவிட்டால் அப்புறம் அதன் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது. இதனால்தான் பழங்கால சிற்ப சித்திரங்கள், எழுத்து (calligraphy) உட்பட எல்லாம் ஒழுங்காக, அழகாக இருக்கின்றன.
அந்தக் காலத்தில் நல்ல நிலைமையில் இருந்து, இப்போது அதே வம்சத்தில் தோன்றிய ஜனங்களின் நிலை இப்படி எல்லாவற்றிலும் மிகவும் தாழ்வாகப் போனதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன்.
அந்தக் காலத்தில் கோயில்களிலெல்லாம் பாரதம் வாசிக்க வேண்டுமென்று கட்டளை இருந்திருக்கிறது. பாரதம் வாசிப்பதற்கென்றே மானியம் தருகிற சாசனங்கள் இருக்கின்றன. இப்போது, பெரிய கோயில்களில் எதிலுமே பாரதம் வாசிக்கிறதைக் காணோம்.
கிராமாந்தரங்களில் கிராம தேவதைகளின் கோயில்களில் மட்டும் எங்கோ பாரதம் வாசிக்கிறதைப் பார்க்கிறோம். கிராம ரக்ஷைக்காக உள்ள, அந்த ஒரு சில கோயில்களுக்கு இன்றும் கிராம மக்கள் போகிறார்கள். சினிமா வந்து இவ்வளவு ஜனங்களை ஆகர்ஷிக்கிறபோதுகூட பாரதம் கேட்க ஜனங்கள் இருக்கிறார்கள் என்றால், பழைய காலத்தில் எப்படி இருந்திருக்கும்? அப்போது மக்களுக்கு வேறே பொழுதுபோக்கே இல்லையே.
அந்த பாரதத்தில் என்ன இருக்கிறது? பொறுமை என்பதற்கு வடிவமாக தர்மபுத்திரர் இருக்கிறார். சத்தியமான பிரதிக்ஞை என்பதற்கு பீஷ்மர் இருக்கிறார். தானத்துக்குக் கர்ணன். கண்ணியத்துக்கு அர்ஜுனன். இப்படியே ராமாயணத்தை எடுத்துக்கொண்டால், சகல தர்மங்களின் மூர்த்தியாக ஸ்ரீராமன் இருக்கிறார். பெண்களுடைய உத்தமமான தர்மத்துக்கு சீதை இருக்கிறாள். ஸ்ரீ ராமனுக்கு நேர் விரோதியாக ராவணனுக்கு மனைவியாக இருக்கும் மண்டோதரியும் சீதைக்குக் குறைவில்லாத மகாபதிவிரதையாக இருக்கிறாள்.
ராமாயண, பாரதக் கதைகளைக் கேட்கும்போது இப்படிப்பட்ட உத்தமமான ஆத்மாக்களின் ஞாபகம் வருகிறது. படித்தவர், படிக்காதவர் எல்லோருக்கும் அடிக்கடி அந்தக் கதைகள் காதில் விழுந்துகொண்டிருந்தால், நம்மால் அந்த உத்தம பாத்திரங்களைப் போலவே நடக்க முடியாமல் போனாலும், இதுதான் நாம் இருக்க வேண்டிய உண்மையான முறை என்ற நினைவு அடிக்கடி வரும். இதற்கே பலனுண்டு. இதனால்தான் இந்தக் கதைகளைக் கேட்டு வந்த அந்தக் காலங்களில், உயர்ந்த தர்மமும், நீதியும் நாட்டில் இருந்தன.
தர்மம், நீதி இரண்டும் சேர்ந்துதான் பண்பு உண்டாகிறது. அந்தப் பண்பாட்டை மாற்றுவதற்கும், குலைப்பதற்கும் இப்போது எத்தனையோ ஏற்பாடுகள் வந்திருக்கின்றன. முன்பு இருந்த பழக்கத்தை மறுபடியும் உண்டாக்குவது கஷ்டம்தான். ஆனாலும் சிறிதாவது செய்யத்தான் வேண்டும். நாம் நல்லது பண்ணிக்கொண்டு போனால் ஈசுவரன் நமக்குக் கை கொடுப்பார். அவர்தான் நமக்குக் கை கொடுத்திருக்கிறார். கால் கொடுத்திருக்கிறார். கண் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஆலோசிப்பதற்கு புத்தியும் கொடுத்திருக்கிறார். இந்தச் சக்தியும் புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான சத்காரியம் செய்ய வேண்டும்.
இப்போது என்ன என்னவோ விதமான ஆபத்துக்கள் நமக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஜனங்கள் இன்ன வழியில் போவது என்று தெரியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அநேக கட்சிகள் வந்து அவர்களுடைய புத்தியைப் பல விதமாகக் குழப்பி மாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நம்முடைய சத்தியமும் நீதியும் தர்மமும் ஜனங்களுடைய மனசில் கலையாமல் நின்று காப்பாற்ற வேண்டும்.
அப்படிக் காப்பாற்றுவதற்கு மகாபாரதமே உபகாரமாக இருக்கும் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஜனங்களுடைய அனுபவத்தினாலே தெரிகிறது.
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)
அமோல் பாலேகர் பூர்ணிமாவின் ஓளங்கள் படம் இந்தியில் அவதார் என்ற பெயரில் அவதரித்து தமிழில் பூப்பூவா பூத்திருக்கு என்ற பெயரில் பிரபு, சரிதா, அமலா நடித்து வெளியானது..
தும்பி வா தும்பக்குடத்தினி பாடல் தமிழில் ஆட்டோ ராஜா படத்தில் சங்கத்தில் பாடாத கவிதையாகவும் கண்ணே கலைமானே படத்தில் நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே என்றும் ஹிந்தி சீனி கம் படத்தில் கும்சும் கும் என்றும் மீண்டும் மீண்டும் மீண்டும்...
வீடியோ யூ டியூபில் சுலபமாக கிடைப்பதால் இங்கே ஒட்டவில்லை.
வெள்ளி முத்துக்கள் நடனமாடும்.. பாடல் கேட்டதனாலோ என்னவோ கூகுளில் நேற்று மீண்டும் வாழ்வேன் சர்ச் செய்ததில் படமே கிடைத்தது..என்னடா வாசு சார் கதையெல்லாம் போடாமல் இருக்கிறாரே எனச் சற்றே நான் யோசித்திருக்கலாம்..ம்ம் விதி வலியது
கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக வந்திருக்க வேண்டிய படம்... பாரதிக்கு பொம்மை டான்ஸ் உண்டு..பார்க்கும் நமக்கு அது பொம்மையில்லை எனத் தெரிய எப்படி மனோகர் மட்டும் ஏமாறுகிறார் எனத் தெரியவில்லை..
ஸ்ட்ரெய்ட்டா மனோகர் வீட்டுக்கு வரத்தெரிந்த டாக்ஸி ட்ரைவரான ரவியால் முடிந்தது, ஆரம்பக் காட்சியில் கெடுபிடியுடன் ஒல்லியான உடற்வாகுடன் பேசும் அதிகாரி இளைஞர்... கொஞ்சம் போ.அ.வேடத்திற்குப் பொருத்தமாய் இருந்தார்... - அவருக்குத் தெரியாதது கஷ்டமே.. ரொம்ப சுலபமாய் பாரதியைக் கடத்தி தோளில் தூக்கி வில்லன்கள் டாக்ஸியில் போவதும் அது பற்றி ரவி கொஞ்சம் கூட சந்தேகப் படாததும் மறு நாள் தான் பேப்பர் பார்த்து சந்தேகப் படுவதும்..ம்ம்...
அந்த ஆறு மற்றும் நீர் வீழ்ச்சி லொகேஷன் எங்கே..திடீர் என ஒரு காட்சியில் மொட்டைத் தலை தேங்காய் சீனிவாசன் பாரதியை மானபங்கப் படுத்துவது மாதிரி வந்து நம்மைப் படுத்துகிறார்..விஜயலலிதா, ஜெய்குமாரி என்றெல்லாம் உண்டு..ஏதோ ஒரு ஹோட்டல் அங்கு எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் நங்கைகள் அங்கே போய் சித்த வைத்திய சாலை போல ரவிச்சந்திரன் போர்ட் போடுவாராம்..வில்லன்கள் டுப்பாக்கியால் டுபுக் டுப்க்கென டுடுவார்களாம்.. பின் ரவிச்சந்திரன் வந்து சண்டை போட்டு அவர்களை அடிப்பாராம்..ம்ம் மழலை கூட நம்பாது... ம்ம் எனிவே.. நல்ல படத்தின் கதை கொடுக்காததற்காக வாசுவிற்கு ஒரு தாங்க்ஸ்...( நற நற) :)
அப்புறம் அவளுக்கு நிகர் அவளே, அவளும் பெண் தானே எல்லாம் யூ ட்யூபில் இருக்கிறது .. நான் பார்க்காத படங்கள்..பார்க்கலாமா...
சிக்கா...
வாசு உங்களைப் படம் பார்க்கச் சொன்னாரா ? குற்றம் சுமத்தலாமா ?
பெண்களை மானத்தோடு இந்த சமுதாயம் வாழ விடுவதில்லை என்பதை உணர்த்தும் வெ.ஆ.நிர்மலாவின் அவளுக்கு நிகர் அவளே ( சேலை விற்கும் கடையைக் கண்டேன் தெருத்தெருவாக.. ஆளை விற்கும் கடையைக் கண்டேன் முதல் முதலாக ) மற்றும் பண்டரிபாய் தயாரிப்பில் சுமித்ராவின் முதல் தமிழ்ப் படமான அவளும் பெண்தானே ( உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து பறவை ஒன்று வந்தது.. அதன் உடலைத் தின்று பசியைத் தீர்க்க உலகம் சுற்றி நின்றது ) ஆகிய படங்களைப் பார்த்து நற நற என்று பல்லைக் கடித்து உடைந்து போனால் கம்பெனி ஜவாப்தாரி அல்ல..
தாங்க்ஸ் மதுண்ணா..தட் பாட் சங்கத்தில் காணா கவிதை..மலையாளத்தில் வெகு அழகாயிட்டு இருக்கும்.. பூப்பூவா பூத்திருக்கு பார்த்ததில்லை.. எஸ் எல்லாப் பாட்டுக்களையும் நீரே தான் முன்பு கொடுத்திருக்கிறீர் நினைவுக்கு வருது..
*
கல்லூரி சமயங்களில் அவ்வப்போது சில டுபாக்கூர் படங்களுக்குச் சென்று மாட்டிக் கொண்டு முழித்ததும் உண்டு..இவ்ளோ வருடங்கள் கழித்தும் மறக்க முடியாத ஒரு நண்பன் நடராஜன் என்பவன்.. அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் பெரியார் பஸ்ஸ்டாண்டின் பேரலல் ரோட்டில் பஸ்ஸீக்காகக் காத்து வேகமாய் ஓடி ஏறி விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் கல்லூரி ( 7 அல்லது 10 கிமி) செல்லும் போது லேம்ப்ரட்டாவில் பெட்ரோல் போட்டு (அப்போது ஏழு அறுபது என நினைவு) ட்ட்ரு ட்ட்ரு என வருபவன்.. வந்தவன்.. ஆனால் எளிமையாய்த் தான் பேசுவான்..
படிச்சு முடிச்சுட்டு வேலைல்லாம் பாக்கலாம்னு அவசியமில்லேல.. என்ன எனக்குப் படிக்க இஷ்டமில்லை (அப்பா ஒரு பிரபல மருந்துக் கம்பெனி ஹோல்சேல் கடை சாந்தி தியேட்டருக்கு பக்கத்து த் தெருவில் வைத்திருந்தார்) அப்புச்சி தான் காலேஸூ படிச்சா தொவ (தொகை- கையில் வாங்கும்வரதட்சணை) கூட வரும்னு சொன்னாக.. சரின்னு வண்ட்ட்டேன்.. முதல் செமஸ்டர் கொஞ்ச நாள் தான் வரமுடிஞ்சது..அப்புறம் இப்போ.. எனச் சொல்லி கல்லூரியின் மூன்றாவது வருடத்தில் ஒட்டுக்க பதினெட்டு அர்ரியர்ஸையும் ஒரே சிட்டிங்கில் உட்கார்ந்து க்ளியர் செய்து எக்ஸாம் எழுதி முடித்த கையோடு அப்பா மற்றும் உறவினர்கள் பார்த்து வைத்த பெண்ணை ராங்கியத்தில் கல்யாணமும் செய்து கொண்டான்..( சில வருடங்களுக்கு முன்னால் அவன் மகனுக்கும் திருமணம் முடிந்தது எனக் கேள்விப்பட்டேன்..தொவ எவ்வளவு வாங்கினான் எனத்தெரியவில்லை (யெஸ்.. செட்டி நாட்டவர் தான் அவன்)
அப்படிப்பட்ட நடராஜனுக்கு என்னை ப் பிடித்துப் போனது விதி செய்த சதி என்று தான்கூற வேண்டும்..ஆ.ஊ என்றால்சனி அல்லது ஞாயிறு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வந்துவிடுவான் வீட்டுக்கு..வா. போலாம் கண்ணா
யோவ் படிக்கணுமேய்யா..
ஸ்ஸூ..அத அப்புறம் பார்த்துக்கலாம் வாங்க..
மரியாதை கலந்து கலந்து பேசுவது அவ்ன வழக்கம்..
அதுவும் அவனுக்கு- அவன் அப்புச்சியின் பார்ட்னரின் பார்ட்னரோ இல்லை தெரிந்தவரோ கல்பனா தியேட்டரின் முதலாளிக்கு உற்வோ என்னவோ.. அங்கு தான் கூட்டிக் கூட்டிச் சென்று சில பல படங்கள் பார்க்க வைத்திருக்கிறான்.. உதாரணமான படங்கலின் பெயர்கள் நடமாடும் சிலைகள், வடிவங்கள் கெளதமிக்கு ஆவி பிடிக்கும் ராமராசன் படம் என..
(டுபாக்கூர் படலிஸ்ட்டில் நினைவுக்கு வருவது ஸ்ரீ தேவியில் வந்த ஆடுகள் நனைகின்றன, நீரோட்டம் ( விஜயகாந்த்தின் முதல் படம்) இன்ன பிற.. அதுவும் அவனுடன் தான் பார்த்தேன்..
ம்ம்..வடிவங்கள் என்னும் ஒரு படம்.. அதில் ஒரு பாடல் - இதயவானில் உல்வுகின்ற புதிய மேகமே - ஜெயச்சந்திரன் கொஞ்சம் பரவால்லம இருந்தது.. இன்னொரு பாட் கூட உண்டென நினைவு..தண்ணீரில் மீனழுதால் கண்ணீரை யார் அறிவார்...
https://youtu.be/GgQKKutUUFQ
சம்பந்தமில்லாமல் ஏன் இந்த ரைட்டப்பா..இல்லை..இருக்கு :) மலையாளம்னு வர்ற்ச்சே ஜெயச்சந்திரன் நினைவு..தொடர்ந்து நடராஜன் அப்புறம் இந்தப் பாட்டு.. :)