-
போட்டியிடு! தோற்கலாம்!!
--------------------------------------------
எம்.ஜி.ஆர் கொடையாளி!! என்று ஆரம்பித்தால்--யாருய்யா இல்லேன்னது என்று நீங்கள் சீறும் அபாயம் ஒரு புறம் இருந்தாலும்--
இன்றைய நமது பதிவின் சாராம்சமே--
அவர் கொடைத்தன்மை அன்றைய எதிர்க்கட்சியாளர்கள் மத்தியில் எப்படி பேசப்பட்டது என்பதே!!
அது அவ்வை இல்லம் கட்டிடம் கட்டும் விழா!!
சென்னையில் இன்று செம்மையான முறையில் இயங்கி வரும் அவ்வை இல்லத்துக்கு முதன் முதலில் கட்டிடம் கட்ட பெருத்ததொரு தொகையை தனி ஒரு நபராக அளித்தவர் எம்.ஜி.ஆர்!!
1960ஆம் ஆண்டிலேயே,,அப்போதிருந்த பண மதிப்பில் எம்.ஜி.ஆர் அன்று கொடுத்த நன்கொடை-- நாற்பதாயிரம் ரூபாய்! கணக்குப் போட்டுக்குங்க--
பலரின் நன் கொடை வேண்டியும்,,எம்.ஜி.ஆர் கொடுத்த நன்கொடையில் கட்டடம் கட்ட ஒரு விழா நடக்கிறது!
அண்ணா,,அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம்,,அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ் உள்ளிட்ட சான்றோர்கள் கலந்து கொள்வதால் வேறு வழியின்றி எம்.ஜி.ஆரும் கலந்து கொள்கிறார்!
அன்று சி.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு சி.எஸ் சுப்பிரமணி அவர்கள் பலத்தக் கரவொலியின் பின்னணியில் இப்படிப் பேசுகிறார்--
எம்.ஜி.ஆர் ஒரு விஷயத்துக்கு நன்கொடை தரார்னு சொன்னாலே அது கற்பனைக்கும் மிஞ்சியதாகத் தான் இருக்கும். அதுவும் பசிக்கு,,கல்விக்கு என்றால் பெரிய அளவிலே இருக்கும்! அதனால இந்தக் கட்டடத்துக்கு நன்கொடை தர விரும்பறவங்க எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு அவர ஜெயிக்கணும்ன்னு நான் எதிர்பார்க்கறேன்??
அடுத்தது பேச எழுகிறார் யு.கிருஷ்ணா ராவ்!
காங்கிரஸ்கட்சியாளரும்,,அப்போதைய சட்டப்பேரவை தலைவருமான அவர் பேசியது--
எம்.ஜி.ஆரோடு நன்கொடை விஷயத்தில் போட்டியிடுமாறு சி.எஸ் சொன்னார். ஆனால்-?
எம்.ஜி.ஆரோடு இந்த விஷயத்துல யாரும் போட்டி போட முடியாதுங்கறது தான் உண்மை!
நாலுபேர் ஒண்ணா சேர்ந்து கொடுக்கற தொகையை அவர் ஒருத்தரே கொடுத்துடுவார்.
யாரேனும் அதிகமாக் கொடுக்கக் கூடியவங்க இருந்தாலும்,,அவுங்க கொடுக்கற தொகைக்கு மேல தான் எம்.ஜி.ஆர் பங்கு இருக்கும்??
அதனால வெற்றிகள வரிசையா அடைஞ்சிட்டு வரும் எம்.ஜி.ஆருக்கே இந்த விஷயத்திலும் வெற்றி தான் கிடைக்கும்???
நன்றாக கவனிக்கவும்!
நடந்தது அன்றைய தி.மு.க விழா அல்ல!
சொல்லப் போனால் தி.மு.கவின் நேர் விரோதியான காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் விழா!
கிருஷ்ணா ராவ்,,சி.எஸ்-இருவருமே காங்கிரஸை சேர்ந்த பெரிய பதவியில் இருப்பவர்கள்!!
அவர்கள் இருவருமே,,பல நூறு பேர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரை இப்படிப் புகழ்கிறார்கள் என்றால்??
புகழ்ந்தது அவர்களல்ல??
எம்.ஜி.ஆரின் கொடை!!
மகிழ்ந்தது எம்.ஜி.ஆர் அல்ல??
தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தர்மதேவதை!!
உண்மைதானே உறவுகளே???......... Thanks.........
-
மக்கள் திலகத்தின் ''நல்ல நேரம் 10.03.1972 - முதல் நாள் முதல் காட்சியிலே படத்தின் மாபெரும் வெற்றி செய்திகள் தமிழகமெங்கும் திரை இட்ட அரங்கில் இருந்து ரசிகர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தார்கள் .மக்கள் திலகத்தின் ''சங்கே முழங்கு '' 5 வது வாரமாக தமிழகமெங்கும் ஓடிகொண்டிருந்தது .நல்ல நேரம் திரையிட்ட தினமே 13.4.1972 முதல் ''ராமன் தேடிய சீதை '' விளம்பரம் வந்து விட்டது .
சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேடிய சீதை மூன்று மக்கள் திலகத்தின் வண்ணப்படங்கள் ஒரே நேரத்தில் [ பிப் - ஏப்ரல் ] ரசிகர்களுக்கு விருந்தாக வந்தது .நல்ல நேரம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது . ராமன் தேடிய சீதை மதுரையில் 12 வாரங்கள் ஓடியது . சங்கே முழங்கு சென்னை கிருஷ்ணாவில் 67 நாட்கள் ஓடியது .
திரை உலகம் - திரைசெய்தி -காந்தம் போன்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற பத்திரிகைகளில் மக்கள் திலகம் நடித்து கொண்டிருக்கும் படங்கள பற்றியும் , புதியதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்கள் பற்றியும் , மக்கள் திலகத்தின் படங்கள் ஓடும் தகவல்களையும் விரிவாக எழுதி வந்தார்கள் .
பொம்மை - பேசும் படம் - பிலிமாலயா மற்றும் முரசொலி - தினத்தந்தி - தென்னகம் - தினமணி - சுதேச மித்திரன் - நவமணி போன்ற தினசரி ஏடுகளிலும் மக்கள் திலகத்தின் திரை உலக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது .
பொம்மையில் - திரை கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம்
அனந்த விகடனில் - நான் ஏன் பிறந்தேன்
மக்கள் திலகம் எம்ஜிஆர் தொடர் கட்டுரை எழதி வந்தார் . மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் - அன்னமிட்ட கை - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - பட்டிக்காட்டு பொன்னையா - நேற்று இன்று நாளை - நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் மக்கள் திலகம் நடித்து கொண்டு வந்தார் . மாநிலம் முழுவதும் திமுக கூட்டங்களில் சிறப்புரை ஆற்றி வந்தார் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றமும் சிறப்பாக செயல் பட்டு வந்தது............ Thanks.........
-
நல்ல நேரம் -10.3.1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக வெற்றிகளிலும் , அரசியல் ஆளுமைகளிலும் கிடைத்த மாபெரும் வெற்றியின் அடையாளம் 1972.
புரட்சி நடிகர் - புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற பெருமை கிடைத்தது -1972
பாரத் பட்டம் கிடைத்து விழா நடந்த ஆண்டு - 1972
எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மன்றங்கள் விஸ்வரூபம் எடுத்த ஆண்டு - 1972
எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் சக்தி - உலகம் அறிந்த ஆண்டு -1972
சினிமாவிலும் - அரசியலிலும் எம்ஜிஆர் ஹீரோ என்பதை நிரூபித்த ஆண்டு - 1972
வெற்றி என்ற தாரக மந்திரத்தோடு சங்கே முழங்கு
எங்கும் எதிலும் என்றும் எம்ஜிஆர் நல்ல நேரம்
ரசிகர்களை திருப்தி செய்த ராமன் தேடிய சீதை.
வாழ்வியல் தத்துவம் உணர்த்திய நான் ஏன் பிறந்தேன்
மக்களுக்காக வாழ்ந்த அன்னமிட்டகை
கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழும் இதய வீணை.
மக்கள் திலகத்தின் மகத்தான பெருமைகள் உணர்த்திய ஆண்டு -1972
மக்கள் திலகம் எம்ஜிஆர் வரலாற்றில் என்றுமே ''நல்ல நேரம் ''... Thanks.........
-
மக்களின் நல்ல நேரம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகரானார் .
மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் ,
மக்கள் விரும்பிய நடிப்பை அள்ளி வழங்கினார்
மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒளிவிளக்கை ஏற்றினர்
மக்களின் துயர் துடைக்கும் வழிகளை கண்டறிந்தார் .
நாடோடி மன்னனில் தனது திட்டங்களை அறிவித்தார்
நாடே போற்றும் மன்னனாக 1977ல் பதவி ஏற்றார்
திரை வானில் நட்சத்திரமாக மின்னினார் . இன்றும் மின்னுகிறார் .
அரசியல் வானில் நம்பிக்கை நட்சத்திரம் . ஜொலித்தார் ...ஜொலிக்கிறார் .ஜொலிப்பார்.
ரசிகர்கள் - தொண்டர்கள் - மக்கள் என்று மூன்று தரப்பினரை தன்னகத்தே ஆட்கொண்ட ஒரே தலைவன் - நடிகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் - உலக எட்டாவது அதிசயம் எம்ஜிஆர் .
மக்கள் நேசித்த மாபெரும் நடிகரின் -தலைவரின் உன்னத வாழ்வு ஒரு நல்ல நேரம் .
43 ஆண்டுகள் எம்ஜிஆர் இல்லாத சினிமா - அவர் பாடல்கள் - அவரது திருமுகம் இல்லாத படங்களே இல்லை .
இதுவே எம்ஜிஆர் ரசிகர்களின் வெற்றி .
அரசியலில் எம்ஜிஆர் - இரட்டை இலை தொடரும் வெற்றிகள் - வெற்றி மேல் வெற்றி
கனவிலும் நினைத்து பார்க்க முடியுமா - மற்றவர்கள் ?
கனவு கண்டோம் - ஜெயித்தோம் .நாளை நமதே .......... Thanks.........
-
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்* திரைக்காவியங்கள்*
ஒளிபரப்பான*/ஒளிபரப்பாகும் விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------------------
07/03/20 -* சன்லைப்* -* காலை 11 மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
08/03/20* - சன்லைப்* *- காலை* 11 மணி* - தேர்த்திருவிழா*
09/03/20* = கே டிவி* * *- பிற்பகல் 1மணி* - அரச கட்டளை*
10/03/20* - ஜெயா மூவிஸ்* - காலை* 7 மணி* - ஊருக்கு உழைப்பவன்*
11/03/20* - ஜெயா மூவிஸ் - காலை 7 மணி* - ஒரு தாய் மக்கள்*
12/03/20 - கே டிவி* * - பிற்பகல் 1 மணி* - கண்ணன் என் காதலன்*
14/03/20 - கே டிவி* *- பிற்பகல்* 1 மணி* - நீரும் நெருப்பும்*
-
தென்னக*ஜேம்ஸபாண்டாக நடித்து புரட்சி செய்த*புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆரின்*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில், புதிய தொழில்நுட்பத்தில் சென்னை*பெருநகரில்*கீழ்கண்ட அரங்குகளில் 13/03/20 முதல் வெளியீடு .
சத்யம்*/எஸ்கேப் / உட்லண்ட்ஸ்/பெரம்பூர்* எஸ்*2/பலாஸோ*/தி.நகர் ஏ.ஜி.எஸ்./கே.கே.நகர் -காசி, /வேளச்சேரி*லக்ஸ்*/பி.வி.ஆர்.-எஸ்.கே.எல்.எஸ்./அண்ணா*நகர் -பி.வி.ஆர்.- வி..ஆர். மால்*/ ஈ .சி.ஆர். -பி.வி.ஆர்./* *ஓ.எம்.ஆர்.-ஏ.ஜி.எஸ்./ஐனாக்ஸ்* நேஷனல் /ஓ.எம்.ஆர். ஐனாக்ஸ் மெரினா* ஆல்பட்*/ அகஸ்தியா (தினசரி 3 காட்சிகள் )/ கோபிகிருஷ்ணா / அனகாபுத்தூர் அருண்மதி*
தினத்தந்தி*-11/03/2020
-
13.03.2020 முதல்
கோவை
சண்முகா
பெரிய இடத்துப்பெண்
இரண்டு வருட
இடைவெளிக்குப்பின்
-
திருப்பூர்
அனுப்பர்பாளையம்
கணேஷ்
திரையரங்கில்
14.3.2020
15.3.2020
16.3.2020
மூன்று நாட்கள்
தாய்க்கு தலைமகன்
-
திருப்பூர்
அனுப்பர்பாளையம்
கணேஷ்
திரையரங்கில்
21.3.2020
22.3.2020
23.3.2020
மூன்று நாட்கள்
நீதிக்கு தலைவணங்கு
-
-
தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில்* நாளை முதல்*(13/03/2020) சென்னை*பெருநகரில்* கீழ்கண்ட அரங்குகளில் வெள்ளி*த்திரைகளுக்கு வெற்றி விஜயம் .
பேபி* ஆல்பட்* - தினசரி* மாலை மற்றும் இரவு காட்சிகள் .
அகஸ்தியா* - தினசரி* நண்பகல் / மேட்னி*/ மாலை காட்சிகள்*
எம்.எம். தியேட்டர்* -* தினசரி**இரவு காட்சி*மட்டும்*
கோபிகிருஷ்ணா காம்ப்ளக்ஸ் - தினசரி 4 காட்சிகள்*
காசி*,கே.கே. நகர் - தினசரி* மேட்னி*/ இரவு காட்சிகள்*
பலாஸோ*, வடபழனி*- தினசரி பிற்பகல் 1.15 மணி* காட்சி*.
லக்ஸ்*, வேளச்சேரி* *- தினசரி இரவு 7.30 மணி காட்சி*
பி.வி.ஆர். , ஈ .சி.ஆர்., சோழிங்கநல்லூர் - தினசரி பிற்பகல் 12.50 மணி*
கோயம்பேடு ரோகினி* - தினசரி இரவு காட்சி*மட்டும் .
எனக்கு*விவரங்கள்* இணையதளத்தில்**கிடைத்த*வகையில்*பதிவிட்டுள்ளேன் . நாளிதழில் வெளியாகும்*அரங்குகள் விபரங்களை நம்பி நண்பர்கள் ஏமாற*வேண்டாம்* என்பது வேண்டுகோள். ஒரு வேளை நாளை ஏதாவது கூடுதல்* அரங்குகளில் வெளியான*விவரம் அறிந்தால்*பிறகு பதிவிடுகிறேன் .......... Thanks mr.Loganathan Sir...
-
கொத்தவால்சாவடி -
பாட்சா A/C DTS., தியேட்டர்
தினசரி 4காட்சிகள் ,திரையுலக வசூல் சக்கரவர்த்தி
புரட்சி தலைவர் எம் .ஜி .ஆர்., அவர்கள்,புரட்சி தலைவி
அம்மா இருவரும்இணைந்துநடித்த
"ரகசியபோலிஸ்115" S.M Batsha 9965646505......... Thanks.........
-
: நேற்று12-03-2020அன்று திரு ரஜினி அவர்கள் அரசியல் பற்றி கொடுத்த பேட்டியில்,சொல்லியது அனைத்தும் புதிதல்ல,புரட்சித்தலைவரை மனதில் கொண்டுதான் சொல்லியுள்ளார்.
தலைவர் கட்சியின் தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடுத்தவரிடம் ஒப்படைத்தார்,ஆட்சித்தலைமை வேறு கட்சித்தலைமை வேறு என்று நடைமுறைப் படுத்தினார்,அதுமட்டுமல்ல ரஜினி சொல்லுவது போல 1972அக்டோபரில் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்து புரட்சித்தலைவரை கட்சி ஆரம்பிக்ச் செய்தனர்,அனைத்துக்கும் முன்னோடி நம் தலைவர்தான் என்பதில் பெருமிதம் கொள்வோம்.........
ஓய்வு பெற்ற நீதிபதி நாராயணசாமி முதலியாரை கட்சிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும்,சட்ட அமைச்சராக்கினார் புரட்சித்தலைவர்......... Thanks
-
திரு.ப.உ.சண்முகம் திரு.ராகவானந்தம் திரு நாவலர் நெடுஞ்செழியன் ஆ*கியோரைபுரட்சி தலைவர் முதல்வரானபோது கட்சியின் முக்கியபதவியான பொதுச்செயலாளராக செயல்படவைத்தார் நன்றி திரு ஈரோடு ராஜா அவர்கள் மதுரை எஸ் குமார் எம்ஜிஆர் மன்றம்... Thanks.........
-
.தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த*"ரகசிய*போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுட்ப்பத்தில் இன்று** முதல்*(13/03/2020) சென்னை*பெருநகரில்* கீழ்கண்ட அரங்குகளில் வெள்ளி*த்திரைகளுக்கு வெற்றி விஜயம் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ,நிர்மலா*, நம்பியார்*(இரட்டை வேடம் ) , அசோகன், நாகேஷ்*,மாதவி*,ஜஸ்டின்*,திருப்பதிசாமி மற்றும் பலர் நடித்தது .இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இயக்கம் : பி.ஆர். பந்துலு*11/01/1968ல் வெளியான*படம் டிஜிட்டல் வடிவில்*, முற்றிலும் புதிய தொழில்நுடபத்தில் வெளியாகிறது .* புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்*பாண்ட்*பாணியில்*நடித்து தென்னகத்தில்*வெளியாகி 100 நாட்கள் ஓடிய*வெற்றிப்படம்* இந்த படம் அவரது*ரசிகர்களிடையே தனியிடம்*பிடித்தது*என்பது குறிப்பிடத்தக்கது _ தினமலர் செய்தி .-13/03/20
பேபி* ஆல்பட்* - தினசரி* மாலை மற்றும் இரவு காட்சிகள் .
அகஸ்தியா* - தினசரி* நண்பகல் / மேட்னி*/ மாலை காட்சிகள்*
எம்.எம். தியேட்டர்* -* தினசரி**இரவு காட்சி*மட்டும்*
பாட்சா*(மினர்வா*) தினசரி* 4* காட்சிகள்*
கோபிகிருஷ்ணா காம்ப்ளக்ஸ் -ராதா - தினசரி 4 காட்சிகள்*
காசி*,கே.கே. நகர் - தினசரி* மேட்னி*/ இரவு காட்சிகள்*
பலாஸோ*, வடபழனி*- தினசரி பிற்பகல் 1.15 மணி* காட்சி*.
லக்ஸ்*, வேளச்சேரி* *- தினசரி இரவு 7.30 மணி காட்சி*
பி.வி.ஆர். , ஈ .சி.ஆர்., சோழிங்கநல்லூர் - தினசரி பிற்பகல் 12.50 மணி*
கோயம்பேடு ரோகினி* - தினசரி இரவு காட்சி*மட்டும் .
திருவள்ளூர் - மீரா* - தினசரி 3 காட்சிகள்*
திருக்கழுக்குன்றம் - புவனேஸ்வரி - தினசரி 4 காட்சிகள்*
வேலூர்*- சிலம்பு*- தினசரி 4 காட்சிகள்*
எனக்கு*விவரங்கள்* இணையதளத்தில்**கிடைத்த*வகையில்*பதிவிட்டுள்ளேன் . நாளிதழில் வெளியாகும்*அரங்குகள் (அதிகம் ) விபரங்களை நம்பி நண்பர்கள் ஏமாற*வேண்டாம்* என்பது*எனது* வேண்டுகோள். நன்றி.
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் இந்த வாரம் (13/03/20)தமிழகத்தில் வெளியான*(இதர படங்கள்*- ரகசிய*போலீஸ் 115 தவிர )பட்டியல் விவரம் .
--------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை - மூலக்கடை ஐயப்பா - விக்கிரமாதித்தன் -தினசரி 3 காட்சிகள்*
கோவை* - சண்முகா - பெரிய இடத்து பெண் - தினசரி* 4 காட்சிகள்*
திருப்பூர் -அனுப்பர்பாளையம் -கணேஷ் - தாய்க்கு*தலை மகன்--*தினசரி இரவு காட்சி*மட்டும் -சனி/ஞாயிறு /திங்கள் -14-15-16/3 /20
-
எம்.ஜி.ஆர். 48 ஆண்டுகளுக்கு முன்பே முன்னோடியாக செயல் படுத்திய அரசியல், ஆட்சி பண்பு !
நேற்று (12-3-2020) திரு ரஜினிகாந்த் அரசியல் பற்றி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,சொல்லியது அனைத்தும் புதிதல்ல. இதற்கெல்லாம் முன்னோடி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர் கட்சியின் தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பொறுப்பை அடுத்தவரிடம் ஒப்படைத்தார். ஆட்சித்தலைமை வேறு கட்சித்தலைமை வேறு என்று நடைமுறைப் படுத்தினார். அதுமட்டுமல்ல ரஜினி சொல்வது போல 1972 அக்டோபரில் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்து புரட்சித்தலைவரை கட்சி ஆரம்பிக்கச் செய்தனர். இன்று அதற்கான சூழல் இருக்கிறதா என்ன ?
என்றாலும் சினிமா, அரசியல் அனைத்திற்கும் முன்னோடி புரட்சிதலைவர் தான் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர். முதல் முறை 1977 ல் ஆட்சி பொறுப்பேற்றபோது ஓய்வு பெற்ற நீதிபதி நாராயணசாமி முதலியாரை, அவர் கட்சிக்கு சம்பந்தமில்லாவிட்டாலும், சட்ட அமைச்சராக்கினார்.
கருத்து உதவி : எம்.கே. ராஜா, ஈரோடு.......... Thanks.........
-
அறிவிப்பு*
------------------
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு மற்றும் ஆதரவின்*காரணமாக*சென்னை*பேபி*ஆல்பட்*அரங்கில்* தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) நடைபெற்று வரும் வசூல் சக்கரவர்த்தி , எம்.ஜி.ஆர்**தென்னக*ஜேம்ஸ்*பாண்டாக*நடித்த*டிஜி ட்டல் "ரகசிய*போலீஸ் 115"வரும் ஞாயிறு (15/03/20) மாலை 6.30 மணி காட்சி*மட்டும் சென்னை*ஆல்பட்டில் ரசிகர்களின் சிறப்பு*காட்சியாக*நடைபெறும்*என்று விநியோகஸ்தர் தகவல் அளித்துள்ளார்
-
அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!
M.G.R. முதல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.
படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்
‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’
பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்
‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’
பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும்.
இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.
பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.
பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’
பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் எம்.ஜி.ஆர்.......... Thanks.........
-
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)
குறிப்பு :
இந்த பாடலைப் பற்றி சுவையான தகவல் ஒன்று உண்டு .
முதலில் பாடலை இயற்றிய மருதகாசி 'பொன் பொருளைக் கண்டவுடன் ...'என்று வரும் இடத்தில 'தன் வழியே போகிறவர் போகட்டுமே' என்று முதலில் எழுதினாராம் .மக்கள் திலகம் தன் வழி சரியாக இருந்தால் அதில் போவதில் என்ன தவறு என்று கேட்டவுடன் அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து 'கண் மூடி போகிறவர் போகட்டுமே ......'என்று மாற்றி எழுதினாராம் .......... Thanks.........
-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை தமிழர் இல்லை என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தபோது கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதை.
நல்லோர்களெல்லாம்
நாடும் அறிவுடைமை
உள்ளோரே என்றும்
உயிர் தமிழோடிருப்பவர்கள்
கல்லூரி படியேறி
பயிலாதபோதினிலும்
சொல்லும் மொழியெல்லாம்
சுவையான செந்தமிழாய்
வெல்லும் படிசொல்லும்
வீரனை நாம் பெற்றுள்ளோம்
மன்னர் இவரொருநாள்
மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான்
அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில் பேசு என
கேட்டார்கள் தோழரெல்லாம்
ஓரளவும் பேசேன் நான்
உயிர் படைத்த நாள் முதலாய்
உண்ணும் உணவும்
உலவுகின்ற வீதிகளும்
எண்ணும் பொருளும்
ஏற்றதோர் தொழில்களும்
செந்தமிழால் வந்த
திருவென்றோ பெற்றவன் நான்
அந்த மொழியின்றி
அடுத்த மொழி பேசுவதோ
என்று பதிலுரைத்தார் இவர்
பெருமை யாருக்கு வரும்
பொன்மனத்துச் செம்மலிவர்
புரட்சித் தலைவரிவர்
தமிழரிலை என்றால்
தமிழுக்கே களங்கம் வரும்.
கவிஞர் கண்ணதாசன..
கவிதை உதவி திரு காந்தி கண்ணதாசன் அவர்கள்............. Thanks.........
-
-
-
-
-
-
#மக்களின் #முதல்வர்
தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல், ஒரு பொதுக்கூட்டத்திற்காக மதுரை சென்று திரும்பும் வழியில் அருகே உள்ள சோழவந்தான் கிராமத்திற்கு வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்...
அப்போது, சற்று தொலைவில் வயலில் நாற்று நட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து அதிர்ச்சியற்ற மக்கள்திலகம், கடகடவென்று வரப்பில் நடந்து அப்பெண்மணிக்கு அருகே செல்கிறார்...
எம்ஜிஆரைப் பார்த்து பிரமித்த அப்பெண்மணி அதிர்ச்சியுற்று நிற்க...!!!
எம்ஜிஆர் கண்களில் நீருடன் கேட்கிறார்... "என்னம்மா இது? உங்களுக்கா இந்த நிலை ? இந்த வயசான காலத்துல ஏன் இப்படி கூலி வேலை செஞ்சு கஷ்டப்படறீங்க.??? ...
அந்த வயதான தாய் பொங்கிவரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தன் குடும்ப நிலையைக் கூறியதும் அப்பெண்மணியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார்..."அம்மா! உங்க மகன் நானிருக்கும் போது, இப்படி நீங்க கஷ்டப்படலாமா!!! இதுக்கு சீக்கிரமே ஒரு வழி செய்யறேன்..." ன்னு கிளம்பிட்டார்.
அப்பெண்மணி வேறு யாருமல்ல...
நான்கு முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்னம்மாள் தான் அவர்...
அடுத்த சிறிது நாட்களிலேயே
"#எம்எல்ஏக்களுக்கு #ஓய்வூதிய #திட்டம்" வழங்க அரசாணை பிறப்பித்தார்.
கட்சிப் பாகுபாடின்றி
மக்களின் குறைகளை தான் நேரடியாகவே சென்றறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் #மக்கள்திலகம் #ஒருவரே.............. Thanks.........
-
"ஆயிரத்தில் ஒருவன் ","கோடியில் ஒருவன்", தான் தலைவர் தான் (மக்கள் திலகம்) என்று அறிவுஜிவிகளுக்கு சுட்டிக்காட்டிய நடிகர் திரு விஜயசேதுபதி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !
ஹயாத் !......... Thanks.........
-
அல்பட் திரையரங்கம் சார்பாக எடுக்கப்பட்ட அந்த ஒரு பேனரை தவிர வேறு எந்த ஒரு போஸ்டர்( ரகசிய போலீஸ் 115) கூட ஒட்டவில்லை. இருந்தாலும் எம்ஜிஆர் பக்தர்கள் திரையரங்கத்தில் நிரம்பி விட்டார்கள். இதுதான் எம்ஜிஆரின் மக்கள் சக்தி. இது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர ஒருபோதும் தொய்வு ஏற்படாது. தங்க தலைவரின் ஆசை முகத்தை காண எப்போதும் கூட்டம் கூடிக் கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் அவர் என்றென்றும் ஜீவித்து இருக்கிறார். 'நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம்' இது உலகத்தில் எம்ஜிஆருக்கு மட்டுமே உரித்தான வரிகள். பழுதுபடாத வீரத்திற்கு சொந்தக்காரரான வாத்தியார் எம்ஜிஆரின் கொள்கைப்படி உலகெங்கும் வாழும் எம்ஜிஆர் பக்தர்கள் மக்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் வாழ்க எம்ஜிஆர் புகழ்! வாழ்க எம்ஜிஆர் பக்தர்கள்.... Thanks.........
-
இந்த கரோனா அவசர கால நேரத்திலும், திரையரங்கம் இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்தது என்றால், அது திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்கள் காவியங்கள் மட்டுமே எனில் மிகையாகாது...
-
கடந்த ஞாயிறு முதல்
திருப்பூர் k s திரையரங்கில்
ரிக்*ஷாக்காரன்
நேற்று முதல்
தாராபுரம்
சத்யாவில்
நினைத்ததை முடிப்பவன்
-
ஒரு முறை காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின்
இல்லத்தில் ஒரு விசேஷம்.
எம்.ஜி.ஆர்..சிவாஜி உள்ளிட்ட அனைவரும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார்கள்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன்.அவரது மனைவி நடிகை விஜயகுமாரியும் சென்று இருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது மக்கள் வெள்ளம் கார் நின்ற இடத்திற்க்கு யாரும் திரும்பி வர முடியவில்லை.
எம்.ஜி.ஆர் மட்டும் தனது கார் அருகே வந்துவிட்டார் .விஜயகுமாரி கூட்ட நெரிசலில் சிக்கி விட்டார் உடனடியாக தனது பாதுகாவலர்கள் மூலம் அவரை மீட்டு தனது காரில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்க்கு வந்து விட்டார்.
அது எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும்...விஜயகுமாரிக்கும் திருமணம் நடந்து முடிந்த சமயம்..
புரட்சி தலைவர் ...ஜானகி அம்மாவிடம் சொல்கிறார்..
" நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் ஆகி முதன் முதலாக நம்ம வீட்டுக்கு வந்திருக்கு.." என்று.
உடனே ஜானகி அம்மா விஜயகுமாரியின் நெற்றியில் குங்குமம் வைத்து ஒரு தாம்பளத்தில் பட்டு புடவை ஒன்றையும்...பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் தாய் வீட்டு சீதனமாக வைத்து தருகிறார்.
ஒரு தடவை விஜயகுமாரியை எம்.ஜி.ஆருக்கு கதாநாயகியாக ஒரு தயாரிப்பாளர் நடிக்க வைக்க நினைக்கிறார்...எம்.ஜி.ஆர் மறுத்து விடுகிறார்..
" விஜயகுமாரி எனக்கு தங்கை போன்றவர் அவருடன் நான் ஜோடியாக நடிக்க முடியாது' என்று சொல்லி விட்டார்.
எம்.ஜி.ஆர் தலைவரல்ல
ஒரு மகாமனிதர்
-
இன்றைய 18.03.2020 "தினமலர் " வாசகர்கள் கடிதம் மூலம்
தமிழர்கள் கட்டுரையில் சில துளிகள் ..
1. இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் தமிழனாக பிறக்காமல் ..தமிழனுக்காக ..தமிழுக்காக வாழ்ந்த இந்த மனிதர் M .G .R பற்றி தமிழர்கள் பேசுவார்கள்
..எழுதுவார்கள் .
.கட்டுமரம் இன்னும் சில ஆண்டுகளில் மறக்க படுவார்
2. MGR. ன் முடி தொப்பியில் ஒரு முடி தூசியின் அளவுக்கு கூட ரஜினியை ஒப்பிட முடியாது .. அப்படி ஒப்பீடு செய்பவர் MGR.ஐ பற்றி அறியாதவராகவே இருக்கமுடியும் ..MGR.தன்வாழ்வைவையும் ..சொத்துக்களையும் ,ஏன் அணைத்து வருவாய்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தவர் .. அவரைப் மற்றவர்களுடன் ஒப்பிடுவது அறிவீனம் ...
3.எம் ஜி ஆருடன் யாரையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. பொது மக்கள் ஆதரவு அவருக்கு இருந்த மாதிரி யாருக்கும் அமையாது. முயலை விட்டு காக்கை பிடிப்பது போன்று தான்......... Thanks.........
-
-
-
-
``எம்.ஜி.ஆர் கொடுத்த வீடு... யாருக்கும் கொடுக்க மாட்டேன்!" திருவல்லிக்கேணி குள்ளம்மாள் பாட்டியின் கதை - https://www.vikatan.com/news/miscell...mal-paati.html......... Thanks...
-
இனிய காலை வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !
இது தான் திமுகவை மக்களிடம் முழுவதுமாக கொண்டு சென்றது என்று அண்ணா அடிக்கடி சொல்லுவார்..!!!... Thanks......
-
சென்னையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 வது*மனித நேய*விழா,1970ம் ஆண்டில்*வெளியான*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.*திரைக்காவியங்களின்* பொன்விழா*
----------------------------------------------------------------------------------------------------------------
, சென்னை*தி.நகர்* சர்* பி.டி.தியாகராயர் அரங்கில்*கடந்த*ஞாயிறு ( 15/03/20)* அன்று*காலை*11 மணி முதல் இரவு 9 மணி வரை* உரிமைக்குரல் மாத*இதழ் சார்பில்*திரு.பி.எஸ். ராஜு*தலைமையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*103 வது*மனிதநேய*விழா மற்றும் மாட்டுக்கார வேலன், என் அண்ணன் ,தலைவன் ,தேடிவந்த*மாப்பிள்ளை, எங்கள் தங்கம் திரைக்காவியங்களின் பொன்விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்டது .* நிகழ்ச்சியில் , கவியரங்கம் , பொன்விழா மலர் வெளியீடு , பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி, சிறப்பு*விருந்தினர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி புகழுரை*ஆகியவற்றுடன்*இனிதே*நிறைவுற்றது.*
காலை*11 மணி அளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*திருஉருவ*படம் மேடையில்*திறந்து வைக்கப்பட்டது .* குத்துவிளக்கேற்றி*, பூஜைகள், ஆராதனைகள் செய்து* கவிஞர் திரு.முத்துலிங்கம்*, திரு.எம்.ஏ.முத்து (மக்கள் திலகத்தின் உடை அலங்கார நிபுணர் ) ஆகியோர் வழிபட , உள்ளூர், மற்றும் வெளியூர் பக்தர்கள்*தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டனர் .
பின்னர், பிரபல*பத்திரிகையாளர் திரு.துரை கருணா*அவர்கள் அனைவரையும்*வரவேற்று , நிகழ்ச்சி நிரலை*அறிவித்தார் .அதன் பின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை*புகழ்ந்து கவியரங்கம் நடைபெற்றது .* நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டம், கூத்தா*நல்லூர்*திரு.முகமது*அஷ்ரப்*, திருமதி சாந்தி, சேலம், திரு.பாரதி சொல்லரசன் ,சேலம், விழுப்புரம்*வளவனூர் திரு.இரா.முருகன், திரு.விஸ்வநாதன், திண்டுக்கல், திரு.அருகன் அடியார், ஆரணி, திரு.கவிதை மைந்தன், மதுரை, திரு.கவிராயர் கேசவன், திரு.கவிக்குமரன் , சென்னை*ஆகியோர்*பங்கேற்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*புகழ்மாலை*சூட்டினர்*
கவியரங்கத்தை தொடர்ந்து, மாட்டுக்கார வேலன், என் அண்ணன் , தலைவன், தேடிவந்த*மாப்பிள்ளை, எங்கள் தங்கம் ஆகிய படங்களின் பொன்விழா மலரை*கவிஞர் திரு.முத்துலிங்கம்*வெளியிட திரு.எம்.ஏ.முத்து அவர்கள் பெற்றுக் கொண்டார் . கவியரங்கத்தில் பங்கு பெற்றவர்களுக்கும், கவிஞர் திரு, முத்துலிங்கம், திரு.எம்.ஏ . முத்து* ஆகியோருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசுகள்*வழங்கப்பட்டன .
பிற்பகல் 1 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது . விழாவிற்கு*வந்திருந்த அனைவருக்கும் , தி.நகர் , பாண்டி பஜார், பாலாஜி*பவனில்*மதிய*உணவு அளிக்கப்பட்டது .**
பிற்பகல் 2 மணியளவில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து முக்கிய*காட்சிகள், வசனங்கள், பாடல்கள்*பக்தர்களுக்காக மேடையில்*சிறிய*திரையில்*ஒளிபரப்பு செய்யப்பட்டது* பிற்பகல் 3 மணியளவில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நீடித்த*புகழுக்கு*காரணம்*கொடை*உள்ளமா* அல்லது* தமிழ் பற்று உள்ளமா* என்கிற தலைப்பில்*பட்டி மன்றம் நடைபெற்றது . நிகழ்ச்சியில் , பேராசிரியர் திருமதி மல்லிகா, திரு.சிந்தை வாசன் ஆகியோர்* கொடை*உள்ளம் என்ற தலைப்பிலும், திரு.இரா. முருகன், விழுப்புரம், திருமதி* சந்தியா* தமிழ்செல்வம்**ஆகியோர்*தமிழ் பற்று உள்ளம்தான்*என்ற தலைப்பிலும் வாதிட்டு பேசினார்கள் .*நடுவராக*திரு.தாமரைப்பூவண்ணன்* அவர்கள் பொறுப்பேற்று இடையிலே*சில*பாடல்கள்*பாடி , கொள்கை வேந்தன்*எம்.ஜி.ஆர். அவர்கள் திரையுலகிலும், தன் ஆட்சி காலத்திலும்* தமிழுக்கு*சிறந்த*தொண்டாற்றினார்*என்று பல உதாரணங்களை சுட்டிக்காட்டினார் ,* தஞ்சையில் தமிழ் பல்கலை*கழகம்*(ஆயிரம் ஏக்கரில்*), பெரியாரின்*எழுத்து சீர்திருத்தம், கொடைக்கானலில் அன்னை தெரசா*பெண்கள்*பல்கலை*கழகம், மதுரையில்*ஐந்தாவது உலக தமிழ் மாநாடு, போன்ற பல திட்டங்கள்*.செயல்படுத்தினார் ., தன்* வாழ்நாளில்* இளமை பருவத்தில் இருந்து , இறுதிவரையில்*கொடை உள்ளம் கொண்டு* பலபேர்*வாழ்க்கையில்*ஒளியேற்றினார் . விளம்பரங்கள் இல்லாமல் அவர் செய்த உதவிகள் எண்ணற்றவை. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, நடிகர்*சோ*போன்றவர்கள்* .இதை*சுட்டிக்காட்டி*பேசியுள்ளனர் . நடிகர்*சோ ஒருமுறை* பேசும்போது,* வீட்டில்*உலை வைத்துவிட்டு, அரிசிக்காக ஒருவர் வீட்டு*வாசலில்*காத்திருப்பது என்றால் அது எம்.ஜி.ஆர். வீடாகத்தான்*இருக்கும்.* எம்.ஜி.ஆர். விளம்பரத்திற்காகத்தான் உதவிகள், நன்கொடைகள்*செய்கிறார் என்று பலர் விமர்சனம் செய்வதை நான் கேட்டதுண்டு. அதில்*எள்ளளவும் உண்மை இல்லை. வசதி படைத்தவர்கள் ,நிறைய பேர்கள் இருந்தாலும், எவ்வளவு பேர்களுக்கு*அந்த கொடை*உள்ளம் , மற்றும் உதவிகள்*செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றும் . நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் . ஆகவே, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். செய்த தான*தருமங்கள்*தான் அவர்* உயிரை* குண்டு*சுட்டபோதும், எமன் நெருங்கியபோதும், காப்பற்றியது என்பது*அனைவரும் அறிந்த வரலாறு .என்று*நடுவர் தீர்ப்பு கூறினார் .
மாலை 4 மணியளவில் தேநீர் இடைவேளைக்கு பிறகு ,ஸ்ரீதேவி பைன் ஆர்ட்ஸின் ஸ்ரீதர்* நவராக்ஸ் குழுவினரின்*இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது . எழில் வேந்தன் எம்.ஜி.ஆர். அவர்களின்*திரைப்பட பாடல்கள் கீழ்கண்டவாறு இசைக்கப்பட்டன ;
1. ஒன்றே குலம் என்று பாடுவோம்* - பல்லாண்டு வாழ்க*
2.உலகம் பிறந்தது எனக்காக* - பாசம்*
3.ஆஹா நம் ஆசை நிறைவேறுமா* - தாய்க்கு பின் தாரம்*
4.தங்க பதக்கத்தின் மேலே - எங்கள் தங்கம்*
5.பன்சாயி , காதல் பறவைகள்* - உலகம் சுற்றும் வாலிபன்*
6.காவேரி கரையிருக்கு* - தாயை காத்த தனயன்*
7.போய் வா நதி அலையே* - பல்லாண்டு வாழ்க*
8.நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு* - என் அண்ணன்*
9.நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை*
10.நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் - என் அண்ணன்*
11.இந்த பச்சைக்கிளிக்கு - நீதிக்கு தலைவணங்கு*
12.ஒரே முறைதான் உன்னோடு - தனிப்பிறவி*
13.காலத்தை வென்றவன்* நீ* - அடிமைப்பெண்*
14.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் -* நம் நாடு*
15.புதிய வானம் புதிய பூமி* -அன்பே வா*
16.கல்யாண வளையோசை* - உரிமைக்குரல்*
17.நீங்க நல்லா இருக்கோனும்* *- இதயக்கனி*
18. கண்ணை நம்பாதே* - நினைத்ததை முடிப்பவன்*
19.உன்னை நான் சந்தித்தேன்* - ஆயிரத்தில் ஒருவன்*
20.வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் -தேடிவந்த மாப்பிள்ளை*
21.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*
22.மாணிக்க தேரில் மரகத கலசம்* - தேடிவந்த மாப்பிள்ளை*
23.இறைவா உன் மாளிகையில்* - ஒளி விளக்கு*
24.நான் உங்கள் வீட்டு பிள்ளை* - புதிய பூமி*
25.கண் போன போக்கிலே* - பணம் படைத்தவன்*
26.யாரது யாரது தங்கமா* - என் கடமை*
27.உனது விழியில் எனது பார்வை* -நான் ஏன் பிறந்தேன்*
இரவு 7 மணியளவில் சென்னை பெருநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி அரங்கத்திற்கு வந்து , மேடையில் அவருக்கு அளித்த மரியாதைகளை ஏற்றபின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழ் பாடி பேசினார் .
தும்பிவாடி துரைசாமி என்கிற பெயரை சைதை துரைசாமி என்று பெயர் மாற்றம் செய்தவர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி அழகு பார்த்தார் .* சில காலம் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டியது ,அதற்கு நன்றி கடனாகவும், கடமையாகவும், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அவரது பெயர், அவர் வாழ்ந்த ராமாவரம் இல்லம் அமைந்துள்ள* மவுண்ட் பூந்தமல்லி சாலைக்கு , எம்.ஜி. ஆர். சாலை என்ற பெயர் , சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவர் பெயர்* போன்றவற்றை மத்திய , மாநில அரசுகளுக்கு முறைப்படி பரிந்துரை செய்து , அவற்றில் வெற்றியும் அடைந்தேன் .என் வாழ்வில் நான் அடைந்த பாக்கியம் ஆக இவற்றை கருதுகிறேன் .**1970ம் ஆண்டில் வெளியான நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்களின்*பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவது பெருமையாக கருதுகிறேன் 1970ல் வெளியான படங்கள் ஒவ்வொன்றிலும் மக்கள் சிந்திக்க கூடிய , பயன்படக்கூடிய கருத்துக்கள், சமூக சீர்திருத்த வசனங்கள், வாழ்க்கை நெறிக்கு*உபயோகமான கருத்தான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன .* மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா படம் . என் அண்ணன், எங்கள் தங்கம் போன்ற படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை .* மேகலா பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சம்பளம் வாங்காமல் இலவசமாக நடித்து கொடுத்து*முரசொலி பத்திரிகை அலுவலகம் சிக்கலில் இருந்து விடுபட உதவிக்கரம் நீட்டி*எங்கள் தங்கம் பெரும் வெற்றி பெற்று , வசூல் ஈட்ட காரணமாக திகழ்ந்தார்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.* திரைப்படங்களில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் வழிகாட்டுதலின்படி, அவருடைய சிந்தனைகள், கருத்துக்கள் வசனங்கள், பாடல்கள், வருங்கால இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமை , அந்த வகையில் , இந்த பொன்விழா நடத்தும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களை*நான் மனதார பாராட்டுகிறேன் என்று பேசினார் .
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆகிய*திரு.ஜெ.சி.டி.பிரபாகரன்* பின்வருமாறு பேசினார் .நான் லயோலா கல்லூரியில் . மாணவர் தலைவர்* தேர்தலில்*.போட்டியிட்டு சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் , அப்போது சில மாணவர்கள் மதிய உணவு வசதி தேவை பற்றி முறையிட்டார்கள். நான் கல்லூரி முதல்வரிடம் பேசியபோது அப்படி ஒரு திட்டமில்லை என்றார். உடனே, நான்*மாணவர் நல சங்கம் ஒன்று உருவாக்கி அதன்மூலம் சில மாணவர்களுக்கு*மதிய உணவு வசதி ஏற்பாடு செய்ய முற்பட்டேன். உடனே 15 மாணவர்கள் சேர்ந்தார்கள் . பண தேவைக்கு , சில மாணவர்களுடன், ஆற்காடு இல்லத்தில் அப்போது அ. தி.மு.க. தலைவரான எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து திட்டத்தை எடுத்துரைத்தபோது , உடன் பத்தாயிரம் ருபாய் நன்கொடை அளித்தார்* அது போதாது ,எனவே* நடிக -நடிகைகள் மூலமாக கலை நிகழ்ச்சி நடத்தி* பணம் வசூல் செய்து, வங்கியில் டெபாசிட் செய்து அதில் வரும் வட்டியில் நிரந்தரமாக மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பது பயனுள்ளதாகும் என்கிற யோசனையை ஏற்றுக்கொண்டு ,உடனே, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்று பேசுமாறு ஆலோசனை கூறினார்.* அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் சிவாஜி கணேசன், மற்றும் நிர்வாகிகளாக, நடிகர் வி.கே. ராமசாமி, மேஜர் சுந்தரராஜன் போன்றவர்கள் இருந்தனர் .* நிர்வாகிகளை சந்தித்தபோது லயோலா கல்லூரி மாணவர் சங்கத்தில் இருந்து ரூ.1,000/-கட்டணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.* கலைநிகழ்ச்சிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமை தாங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன் . அவரும் சம்மதித்தார் .* நிகழ்ச்சியின் நெருக்கத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஷிமோகாவிற்கு படப்பிடிப்பு விஷயமாக சென்றுவிட்டார் . ஒருநாள் தென்னகம் பத்திரிகையில் எம்.ஜி.ஆர். கலைநிகழ்ச்சி விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்ற செய்தி அறிந்து* பதட்டத்துடன், தொலை பேசியில் இதுபற்றி விசாரித்தேன்.* பத்திரிகை செய்தி தவறு, நான் நேரடியாக வரமாட்டேன் என்று கூறினேனா, நிச்சயம் வருவேன் . நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி போனை வைத்துவிட்டார்.* இருந்தாலும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வரையில் எங்களுக்கு பயம் இருந்தது.* அவர்மட்டும் வராமல் போயிருந்தால்*எங்களை ரசிகர்களும், பொதுமக்களும் பின்னி எடுத்திருப்பார்கள் .* நல்லவேளையாக சரியான நேரத்தில்* பல்கலை கழக நூற்றாண்டு மண்டபத்தில் அரங்கம் அதிரும் வகையில் நுழைந்து எங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் .நடிகர் சங்கத்தில் , மாணவர் நல சங்கத்திடம் இருந்து ரூ.1,000/- பெற்றது குறித்து அவர் அறிந்து வைத்திருந்தார் போலும் . அவர் பேசும்போது நடிகர் சங்கத்தின் செயல்பாடு தவறு என்று கூறி, அந்த பணத்தை நான் தருகிறேன் என்று கூறி*அரங்கம் அதிர* ரூ.1,000/- என்னிடம் அளித்தார் .* எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி .
இப்போது உள்ள தலைமை கழகம் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர்*சூட்டி அழகு பார்க்க கட்சி தலைமை முடிவு செய்யும் பட்சத்தில், முன்னாள் முதல்வரும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அன்பு மனைவி ஜானகி அம்மையார்*தனது பெயரில் உள்ள சொந்த கட்டிடத்தை எம்.ஜி.ஆர். அவர்களின் வேண்டுகோளின்படி கட்சிக்கு இலவசமாக நன்கொடை அளித்தார் .* எனவே அவர் பெயரை சூட்டுவதுதான் பெருமையாக இருக்கும்,* புரட்சி தலைவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் சமாதி உள்ளது . அவர் வாழ்ந்த போயஸ் தோட்டம் நினைவு இல்லமாக செய்வதற்கு அரசின் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று பேசினேன் . இறுதியில் அமைச்சரவை இதற்கு சம்மதித்தது .
தமிழ்நாட்டில் மட்டுமல்ல , வெளிநாட்டில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் நான் செல்லும்போது, கூட்டங்களில் பேசும்போது எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தை உச்சரிக்கும்போது எழும் கைதட்டல்கள் இன்றுவரையில் வேறு எந்த தலைவர்களுக்கும் இல்லை என்பதை இதயசுத்தியோடு தெரிவித்துக் கொள்கிறேன் . ஆகவே மறைந்தும் மறையாமல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.*மக்களின் இதய சிம்மாசனங்களில் வாழ்ந்து வருகிறார் .மக்களை அவர் நேசித்தார் .இன்றும் மக்கள் அவரை நினைக்க தயங்குவதில்லை , அவர் என்றும்*மக்கள் மனங்களில் வாழ்வார். அப்படிப்பட்ட தலைவரின் படங்களுக்கு பொன்விழா எடுக்கும் உரிமைக்குரல் ஆசிரியர்* திரு.பி.எஸ்.ராஜு அவர்கள்*பாராட்டத்தக்கவர் .
இறுதியாக முன்னாள் அமைச்சர் திரு.எஸ். ஆர். ராதா பேசினார் .நான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் பணியாற்றியது பொற்காலம் .* *சட்டமன்றத்தில்* கருணாநிதி அவர்கள் ஒருசமயம் பேசும்போது தனக்கு ஆபத்து இருக்கிறது . இந்த ஆட்சியில் எனக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார் . வசந்த மண்டபத்தில் இருந்து இதைக் கேட்டு கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ,விரைந்து வந்து சட்டமன்றத்தில்* இந்த அரசு அண்ணாவின் அரசு , எனவே கலைஞருக்கு உகந்த பாதுகாப்பை அரசு அளிக்கும், என்றார்.* *நான் பிறகு எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொன்னேன் . நல்லவேளையாக நீங்கள் பதில் அளித்தீர்கள்.இல்லையானால் , நாளைய பத்திரிகையில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் கருணாநிதிக்கு ஆபத்து என்கிற செய்தி வந்திருக்கும் என்றேன்.* ஒருமுறை மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு*நீதி கேட்டு நெடிய பயணம் செய்த கருணாநிதி அவர்கள் , பாத யாத்திரையின்போது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு அவதிப்பட்டார்.விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் சில மருத்துவர்களுடன் உதவி குழு ஒன்றை அனுப்பி , பகைவன் என்று பாராமல் உதவினார் .* மேலும் எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார்கள். கலைஞர் அவர்கள் என்றும் உயிருடன் இருக்க வேண்டும் . அப்போதுதான் அவரை எதிர்த்து நான் முதல்வராக நீடிக்க முடியும். ஏனென்றால் கலைஞரின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் . ஒருவேளை எனக்கு முன்பாக அவர் மறைந்து புதிய எதிரியை எதிர்நோக்கி காய்களை நகர்த்தி ஆட்சி பிடிக்க சிரமங்கள் ஏற்படலாம் . ஆகவே*இந்த சூழ்நிலைதான் எனக்கு எப்போதும் சாதகமாக அமையும் என்றார். அதற்கு தகுந்தாற்போல கடைசிவரை கருணாநிதி , எம்.ஜி.ஆர். அவர்கள் இருக்கும்வரையில் கோட்டைவாசலில் முதல்வராக வரமுடியவில்லை .இப்போதைய ஆட்சியாளர்கள் அ. தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர்.*அவர்களின் இமேஜை பலப்படுத்தி செயல்பட்டால் அவர்களுக்கு எதிர்காலம் உண்டு. அல்லது இருண்ட காலமாகிவிடும் .இறுதியாக இந்த பொன்விழா நிகழ்ச்சியை* நடத்திய உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு*மேன்மேலும்* புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பல விழாக்கள் நடத்தி வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் என்று பேசினார் .
நிகழ்ச்சியின் இறுதியில் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு*விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவரையும், நன்றி பாராட்டி பேசினார்
பிற்பகலுக்கு பின்னர் நடந்த நிகழ்ச்சிகளின் போது , அரங்கம் நிரம்பி வழிந்தது . கொரானா வைரஸ் நோய் அச்சுறுத்தலை மீறி, பக்தர்கள் , ரசிகர்கள் திரண்டு வந்து பேராதரவு தந்தது* மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம் அளித்தது*
. விழாவில்*பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம், சைதை கலையுலக பேரொளி எம்.ஜி.ஆர். மன்றம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், எழும்பூர், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை, போன்ற அமைப்புகளின் பக்தர்கள், மற்றும் சென்னைவாழ் பக்தர்கள் ஏராளமானோர்,*திரு.ஆனந்த், திரு.மூர்த்தி, பெங்களூரு,திரு.ரோசய்யா, அரக்கோணம் திரு.கிருஷ்ணன் மற்றும் குழுவினர், திருச்சி, திரு.சத்யமூர்த்தி மற்றும் குழுவினர் சேலம், திரு.ஆறுமுகம், திரு.ஜாலி, திரு.வி.ராஜா, மற்றும் குழுவினர், திருநெல்வேலி, திரு.மலரவன், திரு.பாலமுருகன் மற்றும் குழுவினர், திண்டுக்கல், மதுரை எம்.ஜி.ஆர். பக்தர்கள், திருமதி பெரிய நாயகி*.திரு.மோகன்தாஸ், திரு.புரட்சிமலர் சிவா, கோவை,திரு.வாசுதேவன்,சூலூர், கோவை, திரு.ரவி, ஆரணி* மற்றும் பலர் (வெளியூர் நண்பர்கள் சிலர் பெயர் தெரியவில்லை , மன்னிக்கவும் ) கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
நிகழ்ச்சி முடிவில் வெளியூர் பக்தர்கள் பலருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது .
*
-
M.G.R. அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.
1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் தென்பாண்டி மண்டலமே குலுங்கியது........... Thanks...........