சந்திரசேகர் சார்,
நீங்கள் அவல் கொண்டு வாருங்கள்.நாங்கள் உமி கொண்டு வருவோம். ரெண்டு பேரும் ,ரெண்டையும் கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் ஜாலியா.
அன்பர்களே
திறமையான பலரின் உழைப்பின் மூலம் நடிகர் திலகம் திரி பல பாகங்களை கடந்து சிறப்புடன் சென்று வரும் வேளையில் சில தவிர்க்க முடியாத சிலரின் பதிவுகள் மூலம் திரியின் வேகம் தடை பட்டுள்ளது .
திருவாளர்கள் ராகவேந்திரன் - பம்மலார் - நெய்வேலி வாசுதேவன் -முரளி -கோபால் -பார்த்தசாரதி மற்றும்
சாரதா மேடம் - கார்த்திக் -போன்றவர்களின் பிரமிக்கவைக்கும் பதிவுகள் மூலம் கட்டுரைகள் - ஆய்வுகள் - விளம்பரங்கள் -வீடியோ என்றெல்லாம் புதுமையுடன் வந்தது ஒரு சாதனையாகும் .
என்ன காரணமோ மிகவும் சிறப்புடன் பதிவிட்டு வந்த திரு நெய்வேலி வாசு அவர்களின் பதிவுகளை குறை கூறியதாலும் , ராகவேந்திரன் சார் பதிவுகளை விமர்சனம் செய்ததாலும் , பம்மலாரின் பதிவுகள் இல்லாததாலும் ஒரு தொய்வு தற்போது தொடர்கிறது .
இதற்கெல்லாம் காரணம் தனி மனிதனின் ஈகோ தான் .
கடந்த சில நாட்களாக யார் அவர் ? -அதாவது ஒரே நண்பர் பல புனை பெயரில் நடிகர் திலகம் திரியில் பதிவிட்டு சாதனை புரிந்தது .
இப்போது உண்மை உலகுக்கு தெரிந்து விட்டது .
இத்தனை திறமைகள் தன்னிடம் வைத்துள்ள அவரது சாதனை - பாராட்டுக்குரியவர் .
அவர் இனி யார் மேலும் வருத்த படவேண்டாம் .
என்னை போல் அவரை நேரில் சந்திக்க பலர் காத்திருக்கின்றனர் .
இனி தொய்வின்றி தேர் -திருவிழாவை நோக்கி நடை போடட்டும் நண்பர்களே .
here comes the stirrer
முத்து நீர் கொஞ்சம் இருமே ஐயா! அதுதான் சகோதரர் கோபால் மனதார statement கொடுத்துவிட்டாரே தான் சிவாஜியை தெய்வம் போல ஆராதித்து இங்கே எழுதுவதாக. சகோதரர் முரளி இதில் தலையிட்டு மிகவும் சரியாக கருத்தை சொல்லியுள்ளார். சகோதரர்கள் ராகவேந்தரும் கோபாலும் விரைவில் சமாதானமாகி விடுவார்கள். ஆனால் சிவாஜியின் நடிப்பு பிடிக்கும், ஜெமினியின் மென்மை பிடிக்கும், MGR இன் இளமை பிடிக்கும் என்றெல்லாம் உமது பன்முக ரசனையை வெளிப்படுத்தி வரும் நீர் உண்மையில் யார்? நீர் நல்லவரா கெட்டவரா?
நல்லவர்கெல்லாம் நல்லவன் .
நல்லவராக இருக்கும் நீங்கள் என்னை பற்றி கவலை பட வேண்டாம் .
என்னுடைய ரசனை பற்றிதான் கூறினேன் .
யாரையும் தரக்குறைவாக நான் விமர்சனம் செய்ய மாட்டேன் .
உங்களது பன்முக பதிவுகளுக்கு ரசிகன் நான் .
உங்களின் பன்முகத்தை உலகுக்கு காட்டிய பெருமை
இந்த திரிக்கு உண்டு .
திறமைகளை போற்றுவோம்
பதிலுக்கு பதில் - ஆக்க பூர்வமாக தொடரவும்
36 வயது முத்துராமன்
Junior Vikatan - 13-01-13
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
நண்பர்களே,
சிலவீடுகளில் இம்மாதிரியான நிகழ்வுகள் சகஜம்..
கணவனும் மனைவியும் சேர்ந்து, மகிழ்வுடன்,கிருஷ்ண விக்ரகம் போல இருக்கும் தங்கள் முதல் குழந்தையின்(வயது ஆறு மாதம்) அழகை வர்ணித்து உரையாடிக்கொண்டிருப்பர்கள்.
மனைவி "என்னங்க இவனை நாம் டாக்டருக்குத்தான் படிக்க வைக்கணும்"என்று சொல்ல ,
அதை கணவனும் மகிழ்ந்து ஆமோதிக்க ,குழந்தை கன்னங்குழிய சிரித்துக்கொண்டிருக்கும்.
திடீரென்று திருஷ்டி பட்டால் போல கணவன் சொல்லுவான்
"இவன் அப்படியே என் தாயை உரித்து வைத்து இருக்கிறான்!"
உடனே மனைவி சொல்லுவாள்
"என்ன சொல்றீங்க?இவன் அப்படியே என் அண்ணன் ஜாடை தான்!"
அவ்வளவுதான் விவாதம் சூடு பிடிக்கும்.வார்த்தைகள் தடிக்கும்.
அந்த குழந்தையோ நடப்பது ஏதும் அறியாமல் தன் பெற்றோர்களைப் பார்த்து சிரித்த வண்ணமே இருக்கும்.
போதும் நண்பர்களே,அந்த மஹா கலைஞன் சொர்க்கத்திலிருந்து நம்மை பார்த்து அன்பாக சிரித்துக்கொண்டிருக்கிறான்.அவனை கேலியாக சிரிக்கும் வண்ணம் செய்து விடாதீர்கள்.
மேலும் பொன்னியின் செல்வனையும் ,யவன ராணியையும் படித்து, ரசித்து, உரையாடி மகிழ்வோம்..
கல்கியும், சாண்டிலயனும் ஒரே நபர்தான்(னா)என்ற ஆராய்ச்சி(யும்) தேவையில்லை.
நன்றி
Ganpat
(பெயர்காரணம்:என் பாஸ்போர்ட் பெயரில் பாதியும்,என் பாட்டி பெயரில் பாதியும் சேர்த்து)
Statutory disclosure: நான் நான்தான்! அவன்/அவள்/அது எதுவுமில்லை)
Atleast after reading the Views of Mr Ganpat the concerned persons
must remove their ego and anger. All must run this Goldern Chariot with
the support of all our NT's Devotees.
நடிகர்திலகம் நடித்த படங்களில் குறிப்பாக குங்குமம் படம் எனக்கு மிகவும் பிடிக்கும் .
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு .
நடிகை சாரதா அறிமுக படம் என நினைக்கிறேன் .
சென்னை - மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டரில்
முதன் முறையாக 2003ல் படம் பார்த்தேன் .
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .
நடிகர் திலகமும் சராதாவும் இணைந்து பாடும் சின்னஞ்சிறிய வண்ண பறவை எண்ணத்தை பாடுதம்மா
நடிகர் திலகத்தின் முக பாவங்கள் அருமை .
அதற்கு ஈடு கொடுத்து சாரதாவின் நடிப்பு அபாரம் .
அடுத்து
http://i1273.photobucket.com/albums/...ps86822e10.png
http://i1273.photobucket.com/albums/...ps31880bdf.jpg
ஞானஒளி - சாரதா - ஸ்ரீகாந்த்
[QUOTE=Ganpat;997870]
போதும் நண்பர்களே,அந்த மஹா கலைஞன் சொர்க்கத்திலிருந்து நம்மை பார்த்து அன்பாக சிரித்துக்கொண்டிருக்கிறான்.அவனை கேலியாக சிரிக்கும் வண்ணம் செய்து விடாதீர்கள்.
மேலும் பொன்னியின் செல்வனையும் ,யவன ராணியையும் படித்து, ரசித்து, உரையாடி மகிழ்வோம்..
கல்கியும், சாண்டிலயனும் ஒரே நபர்தான்(னா)என்ற ஆராய்ச்சி(யும்) தேவையில்லை.
நன்றி
Ganpat
(பெயர்காரணம்:என் பாஸ்போர்ட் பெயரில் பாதியும்,என் பாட்டி பெயரில் பாதியும் சேர்த்து)
Statutory disclosure: நான் நான்தான்! அவன்/அவள்/அது எதுவுமில்லை)[/QUOTE
here, here! Looks like someone requires authenticity of every members' identity.
ONE OF MY FAVOURITE STILL FROM NADIGAR THILAGAM VANISHREE
NIRAIKUDAM
http://i1273.photobucket.com/albums/...ps33ccef05.jpg
ஆஹாஹா, மன்மதன்-ரதி தேவியை பார்த்து சினம் தணிந்து மனம் குளிர்ந்தோம். வேண்டும் வரத்தை கேட்டு பெருக முத்துராமரே.
பல திரைப்பட வசனங்கள் பச்சென்று நம் மனதில் பதிந்து விடும்.அவற்றில் ஒன்றுதான் "திருவிளையாடல்" படத்தில் வரும் நக்கீரன் vs தருமி யின் இந்த உரையாடல்..
================================================== ====================================
நக்கீரன்: தருமியே!சரியான பாட்டிற்கு எமது மன்னர் பரிசளிக்கிறார் என்றால் அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் மனிதன் நான்தான்! ஆனால் அதே சமயத்தில் இறைவனாரும், எம்பெருமான் முருகவேளும், அகத்தியரும், கட்டிக்காத்த தமிழ் சங்கத்திலே பிழையான ஒரு பாட்டிற்கு பாண்டியன் பரிசளிக்கிறார் என்றால்,அதைக்கண்டு வருத்தப்படுபவனும் அடியேன்தான்!
தருமி:ஓஹோ!இங்கே எல்லாமே நீர்தானா?
================================================== =====================================
ஒருவர் என்ன சொல்ல வருகிறார் என சரியாக புரிந்து கொள்ளாமல்,அவர் சொன்ன கருத்தினை குதர்க்கமாக மாற்றும் இம்மாதிரியான நிகழ்வுகள் நாம் நம் வாழ்விலும் அடிக்கடி பார்க்கலாம்.(குறிப்பாக மாமியார் -மருமகள் உரையாடல்களில்)
பி.கு:ஆஹா!!இந்த இடத்தில்,தருமி clean bowled ஆகி வெளியேற,விக்கெட் எடுத்த பெருமிதத்தில் bowler நக்கீரன் அடுத்த batsman வரவிற்காக காத்திருக்க, சிம்மம் போல நுழைவாரே அந்த மஹா கலைஞன்!சத்தியமாக சொல்கிறேன்.. இந்த ஒரு சீன் பார்ப்பதற்கே நாம் பல ஜன்மங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
Niraikudam - one of the finest movie in NT's acting career and
especially in the claimax scene his simply superb.
Last few pages was going with lot of discussions, without any disturbances of stills, posters and banners. But now again started for still photos.
This is also good to know everyone, who is this ‘Muthuraman’.
Before I was suspecting many other hubbers, who was he. But now it is very very clear by the stills he posted.
Nobody is going to question him if he publish these stills in his PREVIOUS NAME. (adhu DEVANUKKE velicham).
Indha latchanaththil ivar aduththavargalaip paarththu ‘panmugam’ ‘shanmugam’ endru purattiyeduththaar. And also ‘original’ endra andappulugu veru.
Now everyone knew him. Thanks for the stills, which tear his mugamoodi.
Raghavendar sir-kku support pannuvadharkkaaga indha nabar, Gopal sir-ai thittiyapothe ivar yaar endru doubt patten.
ippo vetta velichamaagi vittathu.
paavam puthithaaga vandha Vanaja madaththaiyum, than paattukku poikkondirundha Kalnayak sir-aiyum idhula join panni vittuttaar. Threadukkee varaadha irandu senior hubbersaiyum vidavillai.
No problem, ippothaan ivar yaarunnu therinju pochu illaiyya?. inime paarunga namma vilaiyaattai.
Vanaja sister,
In his previous name, another hubber also posted in the same page.
whatever it is, the recent discussions has lead this thread to a sombre mood and I lost interest in posting any. will peep in from time to time though. :roll:
Vanaja sister,
in the same name, another new hubber is here.
ippavum puriyavillai endraal, 'nilakkari'yaik kondu 'anal minsaaram' undaakki, andha 'Gnana oli'yil paarungal.
Don's lose heart. Pls continue your posting as usual Madam.
paavam, pudhusaa vandha oru lady memberai indha mirattu mirattinaal virakthi adaiyaamal enna seyvaar?.
nijamaagave 'panmugam' konda oruvar matravargalaip paarththu sammandhamillaamal 'panmugam', panmugam endru mirattinaar.
ippo mirattiyavarin saayam veluththu pochu.
naan, MURALI sir-aiyum, Pammalaraiyum, Chandra Sekaraiyum mattum admire panninenaam. adhanaal vandha poraamaidhaan idhu. enakku pidiththa padhivai tharubavargalaiththaan naan paaraatta mudiyum. adhukku ennai thaakkattum. sammandhamillaadha matravargalai yen?.
ராகவேந்தர் சார்,
மனபூர்வமான மன்னிப்பை கோருகிறேன்.அளவுக்கு அதிகமாகவே வார்த்தை பிரயோகம் செய்து விட்டதை உணர்கிறேன்.என்னை விட மூத்தவர் என்ற முறையில் மன்னியுங்கள். இது தங்களின் வயது, அனுபவம், நடிகர்திலகத்துக்கு தாங்கள் செய்து வரும் தொண்டு(nadigarthilagam .com ) ஆகியவை கருதி நான் செய்த தவறை திருத்தி கொள்கிறேன். ஆனாலும் சிறிய வேண்டுகோள். தாங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கூறலாமே தவிர, கூறாத ஒன்றை திரித்தல், அடிப்படை நேர்மையை சந்தேகித்தல்(இந்த திரியை பொறுத்த வரை அடிப்படை நேர்மை நடிகர்திலம் ரசிகராய் இருத்தல்),இவைகளால்தான் நான் ஆவேச பட்டேனே தவிர, எதிர்ப்பை எண்ணி அல்ல. அத்துடன், நீங்கள் நம் நண்பர்கள் பலருடன்,நான்தான் ஆதிராம் என்ற பெயரில் எழுதுவதாக நான் அறியாமல் வதந்தி பேசியுள்ளீர்கள். நான் மாற்று பெயரில் ,ஒரே திரியில் வருவதை விரும்ப மாட்டேன். அப்படி,சுவாரஸ்யம் கருதி யாராவது நண்பர் வந்தாலும் குறை கூற ஒன்றுமில்லை. ரசித்து விட்டே போகலாம்.
எல்லா நண்பர்களுக்கும் மிக நன்றி. எனக்கு ,வியாபார அழுத்தம் அதிகமாக உள்ளது. இந்த திரியில் வினையாற்றுவதை ,ஒரு சந்தோசம் கருதி செய்து வந்தேன். ஆனால், என் மூத்த சகோதரர் வயது கொண்ட நான் மதிக்கும் ஒரு மனிதர், என் சந்தோஷத்தை குலைத்து,என்னை இந்த திரிக்கு வில்லனாய் சித்திரி ப்பதை தொழிலாய் கொண்டு அலையும் போது ,தன்னை மாற்றி கொள்ள மாட்டேன் என்று சொல்லி வலம் வரும் போது ,நானும் எளிதில் கோபபடும் இயல்பு கொண்டவன் என்பதால், சற்று தள்ளி நிற்கிறேன். (விலகவில்லை)
திரியின் நண்பர்களுக்கு, சிறிய வேண்டுகோள். நதி மூலம்,ரிஷி மூலம் பார்க்காமல் எழுத தூண்டுங்கள். அழகாக கருத்துகளை முன்னெடுத்து, வினை-எதிர்வினை ஆற்றுங்கள்.தனி மனித துதி-நிந்தனை தவிருங்கள். இங்கு நமது ஒரே மூல கடவுள் நடிகர் திலகம் மட்டுமே.அதை மனதிலேடுத்து செயல் படவும்.யாரையும் எழுத விடாமல் செய்ய வேண்டாம்.திரி நன்றாக பயணிக்க வேண்டும். எப்போதுமே தீய சக்திகள் ஒன்று படுவதும்,நல்ல சக்திகள் பிரிந்து கிடப்பதும் நாட்டின் தலைவிதி போலும் !!?? நல்ல சக்தியான நாம் ஒருங்கிணைவோமாக.
டியர் கோபால் சார்,
முதலில் தங்களுடைய பதிவுக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன். தங்களுடைய பதிவில் தனிப்பட்ட முறையில் கோபம் ஏதுமில்லை. நான் ஏற்கெனவே நண்பர்களிடம் கூறியது போல் நடிகர் திலகத்தைப் பற்றிக் குறை கூறும் போது மட்டும் தான் என் வாழ்க்கையில் இது வரை கோபம் என்பதையே அடைந்திருக்கிறேன். என்னுடைய பதிவினை நன்கு கவனித்தீர்களானால் தெரியும். தங்களுடைய நேர்மையை நான் சந்தேகிக்கவில்லை அப்படி யாருடைய நேர்மையினையும் சந்தேகிக்கும் தகுதியும் எனக்கில்லை. நான் நேர்மையாக இருக்கிறேனா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லாமல் இருக்க வேண்டும் அதைத் தான் செய்கிறேன். என்னுடைய கவலையெல்லாம் நாமே விமர்சிக்கும் போது நாம் ஏன் எழுதக் கூடாது என்கிற அடிப்படையில் மேலும் நடிகர் திலகத்தை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று மேலும் கடுமையாகவோ அல்லது நம் மனம் புண்படும் வகையிலோ எதிர்காலத்தில் பதிவுகள் இடம் பெற காரணமாக நம்முடைய பதிவுகள் முன் மாதிரியாக அமைந்து விடக் கூடது என்பது தான். அந்த அடிப்படையில் தான் தங்கள் பதிவினையும் அணுகினேன். விமர்சனம் என்பது இரு பக்க நாணயம் போன்றது என்பதை அறியாதவனல்ல நான். அதில் தனிப்பட்ட முறையில் நடிகர் திலகத்தின் தொழிலைப் பற்றிக் குறிப்புகள் வந்தால் மட்டுமே நான் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். தாங்கள் வேண்டுமென்று எழுத வில்லை என்றாலும் தங்களையும் அறியாமல் வந்து விடக் கூடாதே என்கிற எண்ணத்தில் சுட்டிக் காட்டினேனே தவிர மனம் புண்படும் வகையில் நான் யாரையும் எழுத மாட்டேன். இங்கு அனைவருமே தங்களுடைய பல்வேறு சிரமங்கள், அலுவல்கள், கவலைகள் இவற்றுக்கிடையில் தங்களுடைய வாழ்க்கையினை ஓட்டிக் கொண்டு கிடைக்கும் நேரத்தில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் வித்த்தில் தங்களுடைய நேரத்தையும் எண்ணங்களையும் உழைப்பினையும் செலவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஒவ்வொருவரையும் நாம் பாராட்ட வேண்டும்.
அதே சமயம் தனிப்பட்ட முறையில் என் எண்ணத்தையும் கூற விரும்புகிறேன். தான் இறக்கும் கடைசி நேரம் வரையில் தன் தொழிலில் முழு மனதுடன் போற்றி வந்தவர் நடிகர் திலகம். தன்னுடைய ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியவர் அவர். அவருடைய நடிப்பு எந்த குறிப்பிட்ட ஸ்டைலிலும் அடங்காத்தாகும். அவர் தனக்கென எந்த பாணியினையும் வைத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மையையும் உள்வாங்கி அதற்கேற்றவாரு அதனை தன் நடிப்பினால் வெளிப்படுத்தியவர். உலகில் யாரை வேண்டுமானாலும் மிமிக்ரி பண்ண முடியும் நடிகர் திலகத்தைத் தவிர. இப்போது செய்கிறவர்கள் ஒரு சில குறிப்பிட்ட படங்களில் அவர் நடிப்பை வைத்துத் தான் செய்ய முடிகிறதே தவிர பொதுவாக செய்ய முடியாது.
எனவே அவருடைய நடிப்பை குறிப்பிட்ட படத்தில் குறிப்பிட்ட பாத்திரத்தில் அவர் எப்படி செய்துள்ளார் என்ற அடிப்படையில் அணுகுவதே சரியாக இருக்கும் என்பது தான் என் கருத்து. இந்த அடிப்படையில் பார்த்தால் அவருடைய நடிப்பில் தனியாக அவர் வகுத்த இலக்கணம் இருக்கலாமே தவிர, உலக நடிப்பின் இலக்கணத்தை அவருடைய நடிப்பில் புகுத்துவது சரியாக இருக்க முடியாது.
Character oriented Acting – இது தான் என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் அணுகுமுறை, அவர் நடிப்பின் பாணி என்று சொல்ல்லாம்.
இது என் தனிப்பட்ட கருத்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.
இன்னொன்று ஒருவரே எத்தனை பெயரில் எழுதினாலும் அதனைப் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும். சொல்லப் படும் கருத்து தான் முக்கியமே தவிர சொல்லும் நபரல்ல. எனவே யார் பெயரில் யார் எழுதினாலும் அதனை நாம் பொருட் படுத்த வேண்டாமே. இதனைத் தான் என் நண்பர்களிடமும் சொன்னேன். சொல்லுகிறேன்.
யாரும் விலகி நிற்க வேண்டும் என நான் எண்ணவதும் இல்லை சொல்லுவதும் இல்லை. எனவே தாங்கள் தொடர்ந்து தங்களுடைய கவலை தீர்க்கும் மருத்துவ மனையாக நம் திரியினை எண்ணிக் கொள்ளுங்கள்.
தங்களுடைய பணியிலும் உடல் நலத்திலும் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு வாழ என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
Dear Gopal and Raghavendra Sir,
Both of you made my day.Thank you so much.
இவ்வளவு,விவேகம்,அறிவு,முதிர்ச்சி உடைய நீங்கள் இருவரும்
பிணக்கு கொள்வதை "துரதிருஷ்டம்" என்பதை விட வேறு எப்படி வர்ணிக்க முடியும்?
ராவணனும்,துரியோதனனும் சண்டையிடலாம்.உலகம் நலம் பெறும்;
ஆனால் ராமரும்,தர்மரும் சண்டையிட்டால் உலகம் தாங்குமா?
நீங்கள் இருவரும் இரு கைதேர்ந்த ஓவியர்கள். ஒரு கட்டிடத்தை முன்னிருந்து பார்த்து நீங்களும்,
மேலிருந்து பார்த்து கோபாலும் வரைகிறீர்கள்.இரு ஓவியங்களிலும் சிறிது வேறுபாடு இருக்கத்தான் செய்யும்.
ஆனால வரையப்படும் கட்டிடம் "தாஜ் மஹால்" அல்லவா?அதை மறக்கலாமா?
போகட்டும் விடுங்கள்,,நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்;
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
"வருவதை எண்ணி சிரிக்கின்றேன்;வந்ததை நினைத்து அழுகின்றேன்"
என்ற கவியரசரின் அமர வரிகளை உயிர்ப்பித்த,
அந்த மஹா கலைஞனின் பொற்பாதம் பணிந்து,
நாம் புதிய பயணத்தை துவங்குவோம்.
நன்றி.
அன்பு சகோதரி வனஜா,
இங்கு எல்லோரும் தங்களுடைய வருகையைக் கண்டு மனம் மகிழ்ந்து வரவேற்கும் சூழ்நிலையில் சில தேவையற்ற விவாதங்களால் தாங்கள் மனம் வருந்தும் படி ஆகிவிட்டது. அதற்கு நான் காரணமென தாங்கள் கருதினால் அதற்கு என் வருத்தத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இங்கு ஒருவர் கூட மனம் வருந்தக் கூடாது என்பதே என் ஆசை, எண்ணம். தாங்கள் தொடர்ந்து தங்கள் பதிவினைத் தாருங்கள்.
டியர் ஆதிராம் சார்,
வெவ்வேறு பெயர்களில் ஒருவர் எழுதுவதைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டாம். சொல்ல வரும் கருத்தினை முக்கியமாய்க் கொள்வோம். முடிந்த வரையில் தங்களுக்குப் பிடித்த வகையில் என்னுடைய பதிவினை அளிக்க முயற்சிக்கிறேன். தங்களுக்குப் பிடித்த பம்மலார், முரளி சார், கோபால் சார் வரிசையில் என் பெயரும் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக முடிந்த வரையில் முயற்சிக்கிறேன். யதேச்சையாக அவராக இருக்கமோ இவராக இருக்குமோ என்ற உரையாடலில் கோபால் சார் ஆதிராம் என்ற பெயரில் எழுதுகிறாரோ என்று கேட்டேனே தவிர வேறு ஏதும் எண்ணமில்லை. அதற்காக தாங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.
டியர் முத்ராம் சார்,
இங்கு நடிகர் திலகத்தின் புகழ் பாடி வரும் பதிவுகளில் உள்ள கருத்தைப் பார்ப்போம். யார் என்பதை நாம் தவிர்ப்போம். ஒருவரே பல பெயரில் எழுதினாலும் அதனைப் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. தாங்கள் கூறியது போல் இனிமேல் இந்த விவாதம் வேண்டாம்.
அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனக்காக தங்கள் அக்கறையினை பதிவின் மூலம் தெரிவித்துக் கொண்ட திரு ராதாகிருஷ்ணன், திரு முத்ராம், திரு பார்த்த சாரதி, திரு முரளி சார், மற்றும் அனைவருக்கும் மீண்டும் என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
Congratulations to both of you, brothers Raghavendra and Gopal! Thank you very much for coming to your senses and refreshing this thread again. I knew this will happen sooner rather than later, after all we all are Nadigar Thilagam fans. He forgot & forgave so many people during his lifetime and made friends with everybody. I want brother Raghavendra give us more and more information about NT, without them we will be talking about the same thing again and again. Don't forget, you said you were going to continue about Ashok!! I'm waiting for your article. As for brother Gopal, I want you to post more articles with your special touches. Both of you, please continue for all of us sake.
P.S: To whom it may concerned: I'm always and will ever be Vanaja..Vanaja....Vanaja...(echoing...:-D)
Dear Gopal Sir & Ragavendra Sir,
This is what we NT fans were looking for. Now both of you shared your feelings and resolved peacefully. Now I thank Murali Sir also for putting the facts in proper way and requesting both of you to resolve this way. Hoping for both of your contribution as usual. Thank you all.
The recent developments in this thread give me some hope in writing some more. Now... what shall I write about NT next?mmmmmm:think:
Thanks for both the Seniors. Thai Pirandhal Vazhi Pirakkum.
For us it happens before that. Welcome development.
Thamizhaga Arasiyal Magazine
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
meendum amaidhi yerpattiruppadhu arindhu makizhchchi.
Raghavendar sir avargalin indha murai 'sattasabai velinadappu' mudivukku vandhullathu arindhu sandhosham. Everytime avar 'pogiren', 'pogiren' endru alambal pannuvathum, udane naalu per vandhu 'pogaadheenga', 'pogaadheenga' endru kaiyai pidithu izuppadhum vazakkamaagi vittadhaal, immurai avvalavu suvaarasyam illai.
muthram enbavar yaar endru naan kandupidiththu sollath thuvangiyathum, 'yaar post pannukiraargal endru paarkka vendaam. karuththai mattum gavanippom' endru ippodhu solbavargal, adhe muthram endra nabar thevaiyillaamal ennai sagodhari Vanajavaagavum, Kalnayak sir-aagavum, Saradha madam endrum, Karthik endrum sammandhappaduththi more than 15 posts ezuthiyapodhu, vaayai moodik kondirundhadhu yen?.
ippodhu thanakku vendiyavarin mugamoodi kiziyumpothu mattum manam thudikkiratho?.
அன்பு சகோதரர்கள் மற்றும் சீனியர்கள் திரு. ராகவேந்திரன் மற்றும் திரு. கோபால் அவர்களே,
வேற்றுமைகளைக் களைந்து திரிக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்ததற்கு மிக்க நன்றி. சர்க்கரைப் பொங்கலைப் பரிமாற்ற வேண்டியது தான் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவர்தம் பெருமைகளையும் பதிவிட்டு.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி