டியர் வாசு சார்,
மழைமேகம் படத்தின் பாடல் இதுவரை பார்த்திராதது. நன்றாக இருந்தது. காணக்கிடைக்காத அபூர்வம்.
'மாமா' இசைபற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே. சாரதா இந்த மாதிரி பாடல்களிலும் நடித்திருக்கிறாரா என்பதும் ஆச்சரியமே.
அடுத்த அபூர்வம் என்னவோ...
Printable View
டியர் வாசு சார்,
மழைமேகம் படத்தின் பாடல் இதுவரை பார்த்திராதது. நன்றாக இருந்தது. காணக்கிடைக்காத அபூர்வம்.
'மாமா' இசைபற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் சரியே. சாரதா இந்த மாதிரி பாடல்களிலும் நடித்திருக்கிறாரா என்பதும் ஆச்சரியமே.
அடுத்த அபூர்வம் என்னவோ...
அன்பு கார்த்திக் சார்,
பாலச்சந்தரின் 'மன்மத லீலை' நகாசு வேலைகள் அத்தனையையும் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள். கிரீடம் வைத்தாற்போன்று நம் முரளி சாரும் அமர்க்களப்படுத்தி விட்டார்.
ரிலாக்ஸ் என்பதன் அர்த்தம் நன்றாகவே புரிகிறது.
தங்களின்
('ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா' - நன்றி வாலி, டி.எம்.எஸ்., எம்.ஜி.ஆர்).
வரிகள் தங்களது உயரிய பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகின்றன.
தங்களின் 'நாதமென்னும் கோயிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன்' மிக மிக ரசித்துப் படித்தேன். அடிக்கடி என் வாயில் வந்து மாட்டி அவஸ்தைப்படும் பாடல். வாணியின் இன்னொரு மாஸ்டர் பீஸ். இது போல அதிகம் கண்டு கொள்ளப் படாதவற்றை நாம் அனைவரும் வெளிக்கொணர்வோம். நீங்கள் அடிக்கடி கூறுவது போல் வாணி கூட தான் அளிக்கும் பேட்டிகளில் இத்தகைய தான் பாடிய அபூர்வ பாடல்களை நினைவு கூர்வதில்லை. மல்லிகை மணம் ஒன்றிலேயே திருப்தி அடைந்து கொள்வார். (ஆனால் நாம் நினைவில் கொண்டு பகிர்ந்துண்டு சந்தோஷப்படுகிறோம்.)
வாணியின் ஏராளமான பாடல்களை தங்களுக்காகவே தேடித் பிடிக்கிறேன். வாணி சந்தோஷப்படுவாரோ என்னவோ தெரியாது நீங்கள் மகிழ்ச்சி கொள்வீர்கள் என்பது திண்ணம்.
தங்களது 'மன்மதலீலை' முடிவுறாமல் தொடரட்டும். லீலைகளில் மூழ்க 24 மணி நேரமும் நான் (நாங்கள்) ரெடி.
நன்றி!
கார்த்திக் சார்,
ஒன்றிரண்டு வார்த்தைகளைத் தவிர நாதமென்னும் கோவிலிலே பாடலைச் சரியாகத்தான் எழுதி உள்ளீர்கள். இப்போது முழுப்பாடல் வரிகள் நம் எல்லோருக்காகவும். நான் என்னென்ன வார்த்தைகளை விட்டிருக்கிறேனோ! கிருஷ்ணாவே துணை
http://s2.dmcdn.net/E61if/526x297-5nv.jpg
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணெய் விட நீ கிடைத்தாய்..
நாதமென்னும் கோவிலிலே ..
இசையும் எனக்கிசையும் - தினம்
என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் - நீ
அசைத்தாய் நான் இசைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே ..
விலையே எனக்கிலையே - தினம்
வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே - நான்
அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே ..
இறைவன் என ஒருவன்
எனதிசையில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் - இன்று
அவன் தான் உன்னைக் கொடுத்தான்
நாதமென்னும் கோவிலிலே ..
கார்த்திக் சார்
'மழை மேகத்' தை ரசித்ததற்கு நன்றி!
பக்கங்கள் பறந்தாலும் பதிவர்கள் முன்னால் போட்ட பதிவுகளை மறக்காமல் படித்து நினைவு வைத்துக் கொண்டு அவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதில் தங்களுக்கு இணை யாரும் இல்லை. (நான் கூட சில சமயங்களில் மறந்து விடுவதுண்டு அல்லது சோம்பலில் மூழ்கி விடுவதுண்டு)
நன்றி! அபூர்வங்கள் தொடரும் தங்களைப் போன்ற அன்பு ரசிக நெஞ்சங்களுக்காகவே!
முரளி சார்,
தங்களின் இன்னொரு ரசனை பரிணாமத்தைப் பார்த்து மறுபடியும் வியந்து போய் நிற்கிறேன்.
'மன்மத லீலை' பற்றிய சுவையான தகவல்களை அம்சமாகத் தந்துள்ளீர்கள். 'மன்மத லீலை' பதிவுகள் முழுமையடைந்தது தங்களால். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
(வி!)ரசமான படம். ஷார்ப்பான வசனங்கள். இனிமையான இசை. இளமையான கமல். ஏராளமான கிளுகிளு நாயகிகள். பஞ்ச் காமெடி.
ரசனை மிக்க பதிவர்கள். பிரமாத பதிவுகள். கலகலப்பை கூட்டிவிட்டது லீலை.