சின்னக் கண்ணன் சார்,
கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள். எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தெரிந்தோ தெரியாமலோ ஸாரி. உங்கள் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன். என்னை பாதித்த பதிவு.
Printable View
சின்னக் கண்ணன் சார்,
கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டீர்கள். எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தெரிந்தோ தெரியாமலோ ஸாரி. உங்கள் சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன். என்னை பாதித்த பதிவு.
//பவானி யார்.. ஒருவேளை ராணிசந்திராவைத் தான் பவானி என்கிறீர்களா..//
பவானியைத்தான் பவானி என்கிறேன்.:) நம்ம 'கந்தனுக்கு மாலையிட்டாள்' பவானிதான். தெரியலையா? 'புண்ணிய பூமி'யில் நடிகர் திலகத்துடன் நடித்த பவானி. 'அல்லி தர்பார்' பவானி. 'உழைக்கும் கரங்கள்' படத்தில் எம்.ஜி.ஆர் அவர்களைக் காதலித்து தோற்கும் ரோல். (கொஞ்ச நாளைக்கு முன் கூட இவரைப் பற்றி அலசு அலசு என்று அலசினோமே)
'ஆடிய பாதங்கள்
அம்பலத்தில்'
பரதம் ஆடுவரே அதே பவானிதான். ம்க்கும்... இது கூடத் தெரியாதாக்கும். நாகக்கன்னி சுகுமாரியைக் கண்டுபிடிக்கத் தெரிகிறது:)......
http://www.youtube.com/watch?feature...&v=Y6uIcNXmb-0
வாசு,
இந்தப் புகைப்படத்தில் நடிகர் திலகத்தோடு இருப்பவரை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவர் கடலூர் வாழ் பல் மருத்துவர் Dr. முத்துகுமரன் என்பவர். [Dentist] நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகர் என்று சொன்னார்கள். படத்தில் அன்று சிறுவனாக காட்சியளிப்பவர் Dr-ன் மகன். அவரும் இன்று டாக்டர் என்று சொன்னார்கள். அது மட்டுமல்ல அவரும் நடிகர் திலகத்தின் மிகப் பெரிய ரசிகர் என்பது உபரி தகவல். எனக்கு மின்னஞ்சலில் இந்தப் புகைப்படத்தை நண்பர் கவிஞர் தென்காசி கணேசன் அனுப்பி வைத்திருந்தார். இதோ அது உங்களுக்காக
https://mail.google.com/mail/u/0/?ui...w&sz=w996-h544
அன்புடன்
மற்ற நண்பர்கள் இடையூறுக்கு மன்னிக்கவும்
முரளி சார் புகைபடத்ததை பார்க்கமுடியவில்லை
Quote:
ரஜனிகாந்தின் வாழ்வில் நடந்தவை?
ரஜனி ஒரு முன்நாள் பைத்தியக்காரன்.எம் ஜீஆரிடம் சவுக்கடிபட்டதில் இருந்து பைத்தியமானவர்.ஒரு பார்ட்டி ஒன்றில் குடிபோதையிநடிகை லதாவின் கையைப்பிடித்து இழுத்தார் தடுக்கப்போன கமலகாசனை கன்னத்தில் அறைந்தார்.எம் ஜியாரின் ஒப்பந்தத்தில் இருந்தவர் லதா பாதுகாவலருடன் விழாவுக்குச்சென்ற லதாவின் பாதுகாவர் செய்தி சொன்னார் தலைவர் கொண்டுவாடா அவனை என்றார்.காரின் டிக்குக்குள் குண்டுக்கட்டாகத்தூக்கி செல்லப்பட்டார்.தோட்டத்தில் கட்டிவைத்து சவுக்கால் அடிபட்டார்.அன்றே செத்...திருப்பார் நடிகர் சங்க தலைவர் சிவாஜிக்கு செய்தி போனது.அவர் தலைப்போட்டு ரஜனியைக் காப்பாத்தினாரரிந்தச்செய்தியைப்பிரசுரித்த ஜேபியாரை கத்தியால் குத்த்ப்போனார்..போதையில் இரவு நேரத்தில் அண்ணாசாலையில் முன்னுக்கு ஓடும் அதேவேகத்தில் றிவேர்சிலும் ஒடுவார் காரணம்கேட்கப்போன பொலீசாரை தாக்கினார் இப்படிப்பல குற்றசாட்டுகழுடன் பாரிசுகோணர் சென்னை நீதிமன்றில் நிறுத்தப்பட்டார் தண்டிக்கப்பட்டார்.இவருக்கு இரண்டு மகள்கள் ஒன்றுக்கு மண்டோதரி என்றும் மற்றதற்கு குண்டோதரி என்றும் பெயரிட்டார்.மனைவியை மொட்டையடித்து அவமானப்படுத்தினார்.இல்லையென்று சொல்லச்சொல்லுங்க?ராகவேந்திரா படம் வெளியானபோது தமிழ்நாடு புராகவும் நூறு கல்யாண மண்டபங்கள் கட்டுவேன் அத்தனையிலும் ஏழைமக்களின் திருமணத்துக்கு இலவசமாக வழங்குவேன் என்று படவெற்றிவிழாவில் கூறி வந்தார் ஆனால் கட்டியது ஒன்றுதான் அதிலும் இன்றுவரை எந்த ஏழைக்கும் இலவசமாக மண்டபம் வழங்கப்படவில்லை.விசர் கொண்டு திரிந்தபொழுது திருச்சி விமான நிலயமுன்பாக இருந்த பெட்டிக்கடையை உடைத்து நொருக்கினார்.விமானத்தில் சென்றபொழுது செய்த கலாட்டாவில் விமானியே கலங்கிப்போனார்.இதுவெல்லாம் நடைபெறவில்லையென்று சொல்லச்சொல்லுங்க?1978 முதல்1979வரை உள்ள பத்திரிகைச்செய்திகள் இவை இவர் மறுத்தால் அத்தனையையும் வெளியிடுவோம்.லதாவுடன் திருமணம் நடந்தது எப்படியென்று சொல்லச்சொல்லுங்க.இவரைமாதிரி விசர்க்குற்றவாளிகளா? தமிழகமுதல்வர்கள்????இன்னும் இருக்கு பிரியா சூட்டிங்க் சிங்கப்பூரில் நடந்தபொழுது செய்த றவுடித்தனங்கள்.தொடரும்
இது முகநூல் ஒன்றிலிருந்து
இதன் உண்மை விபரம் யாராவது தெரிவிக்கமுடியுமா?
சிவா சார்
இது மாதிரி நிறைய நடத்திருக்கிறது.. பலரும் பலவிதமாக கூறுவர்.. ...
இந்த திரியில் இது போன்ற விஷயங்கள் வேண்டாமே.. இதற்கென்றே திரிகள் உள்ளன(ஆம் கிசு கிசு திரி)
என்ன சிக?? வாசு ஜி சொன்னது போல் பவானியை அலசோ அலசோ என்று பாகம் 2’ல் அலசினோமே மறந்து போச்சா?
காலை வணக்கம் ராஜேஷ்ஜி!
உங்களுக்கெல்லாம் தராமல் நான் இங்கு தீபாவளி பலகாரங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறேன் ஜி. அதுவும் அந்த அதிரசம் சூப்பர் ஜி. அவ்விடம் எப்படி? (அப்படியே கொஞ்சம் தனி மடலையும் பார்த்துடுங்க)
ராஜேஷ்ஜி!
அங்கு ஞாபக சக்திக்கு ஏதாவது நல்ல மருந்து கிடைக்குமா? கொஞ்சம் எனக்கு அனுப்பி வையுங்களேன். நான் ஒருத்தருக்கு அனுப்பணும்.:)
தேனிசை தென்றலின் முத்துக்கள்-11
1992 தேவா தன்னை நன்றாக நிலை நிறுத்திக்கொண்டிருந்த காலம்..
அதே போல் இணைந்த கைகள், ஊமை விழிகள் மூலம் பிரபலமாயிருந்த அருண் பாண்டியனை முழு நாயகனாக போட்டு ”கோட்டை வாசல் “ என்ற படமெடுத்தார் இயக்குனர் செல்வ விநாயகம்
அருண் பாண்டியனுக்கு இரண்டு வேடம், ஒருவருக்கு ஜோடி சரண்யா, மற்றொருவருக்கு சுகன்யா .
சரண்யா அன்று ஒரு வாயில்லா பூச்சி .. இன்று அம்மா வேடங்களில் ஜொலிக்கும் அளவிற்கு அன்று ஜொலிக்கவில்லை
சுகன்யா . நல்ல கதாப்பாத்திரங்ள் உள்ள படங்களே நடித்திருந்த சுகன்யா இதில் எப்படி நடிக்க ஒத்துக்கொண்டார் என்பது தெரியவில்லை.
படம் சுமார் ரகம் .. இசை தேவா . இரண்டு பாடல்கள் நல்ல இனிமை
அதிலும் நான் இன்று பதியவிருக்கும் பாடல் மிகவும் பிரபலமான ஒன்று.. பாவம் தேவா .. இந்த பாடல் அவ்வளவு பிரபலமாகாததால் அதை அப்படியே கொஞ்சம் மாற்றி சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலையின் அண்ணாமலை அண்ணாமலை பாடல் அமைத்து வெற்றியும் கண்டார்.
சரி சரி இதோ பாடல்
மன்னவனே மன்னவனே மாலையிட்ட சின்னவனே ... பாலு சித்ராவின் குரலில் நல்ல அழகு பாடல்
http://www.youtube.com/watch?v=H4V6LLNw2TE
தொடரும்